அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கிறது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக கூறுவது பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது தான். பொதுவாக மனிதனின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை பெண்களுக்கு சொத்துரிமை என்பது முழுமையான அளவில் இல்லை. இன்று பல நாடுகள் சட்டரீதியாக பெண்களுக்கு சொத்துரிமையை ஏற்படுத்தியிருக்கின்றன. என்றாலும், நடைமுறையில் ஆணாதிக்க உலகம் பெண்களுக்கான சொத்துரிமையை அதன் முழுமையான பொருளில் அங்கீகரிக்கவில்லை என்பதே மெய். சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழி நடத்திய போதும் அவளுக்கு தனித்த சொத்துரிமை ஒன்றுமில்லை. ஏனென்றால் அன்று சமூகம் பொதுவுடமை சமூகமாய் இருந்தது. அது மாறி தனியுடமை கொண்டுவரப்பட்ட போதோ ஆணின் தலைமையில் பெண் அடிமையாக்கப்பட்டாள். இந்த நிலை இன்றுவரை பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை. ஆனால் வரலாற்றின் சிற்சில போதுகளில் பெண்களுக்கு ஆதரவாக சில சில்லரை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  அந்த வகையில் இஸ்லாமும் சில சீர்திருத்தங்களை பெண்களுக்காக செய்திருக்கிறது. வரலாற்றின் வழியில் நடைபெற்று வந்த மாற்றங்களூடாகத்தான் இவைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி, ஆண் பெண் சமத்துவம் என்று விதந்தோதுவது வழக்கமாக இஸ்லாமிய மதவாதிகள் செய்யும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சார உத்தி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

பெண்ணின் சொத்துரிமை குறித்து குரான் கூறுவதென்ன?

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் ….. பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் அவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு) இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு) …. குரான் 4:11

…. உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் அவர்களுக்கு பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்கு பாதி பாகம் உண்டு.அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்கு கால் பாகம் தான். ….. உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்கு கால் பாகம் தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் தான்….. குரான் 4:12

….. அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. …. அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால் அவள் சகோதரன் அவள் விட்டு சென்ற சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். குரான் 4:176

மேற்கண்ட குரான் வசனங்கள் கூறுவதை சாராம்சமாக பார்த்தால் ஆணுக்கு வழங்கப்படுவதில் பாதி பெண்களுக்கு. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது? இதற்கு மதவாதிகள் ஒரு ஆயத்தப் பதிலைக் கூறுவார்கள். இஸ்லாம் குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆண்களிடம் வழங்கியிருக்கிறது, அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு குறைவாகவும் வழங்குகிறது என்று.  இன்றைய ஆணாதிக்க உலகம் அப்படித்தான் இருக்கிறது என்பதால், ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால், பெற்றோர்களையும் உற்றோர்களையும் கவனிக்காமல் புறந்தள்ளும் ஆணுக்கு அதிக பாகம் இல்லாமல் பெண்களுடன் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கொள்வதற்கு ஏதுவாக குரானில் வசனம் உண்டா? இன்று பெற்றோரை கவனிப்பதில், பாதுகாப்பளிப்பதில் ஈடுபடும் எத்தனையே பெண்களை, குடும்பங்களைக் காணலாம் இது போன்ற குடும்பங்களில் ஆணைவிட பெண்ணுக்கு இரண்டு மடங்கு சொத்து பகிர்ந்தளிக்க முடியுமா குரான் வசனங்களைக் கொண்டு?

ஆணுக்கே அதிக பொறுப்பு எனவே அவனுக்கே அதிக சொத்து என்பது மதவாதிகளின் சமாளித்தல்களே அன்றி வேறில்லை. இதையும் குரானே தெளிவுபடுத்தி விடுகிறது. மேற்கண்ட குரான் வசனம் 4:11 இதை தனியாக குறிப்பிடுகிறது.

…… இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள். ஆகையினால் அல்லாவிடமிருந்து வந்த கட்டளையாகும். ….

மகனா? மகளா? நன்மை செய்வதில் யார் நெருக்கமாக இருப்பர்கள் என்று உங்களுக்கு தெரியாது என்றாலும் இது அல்லாவிடமிருந்துவந்த கட்டளை. அதாவது ஆணுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது, அவனே பெற்றோரை குடும்பத்தை கவனிப்பவனாக இருக்கிறான் என்பதால் அல்ல, அல்லாவின் கட்டளை என்பதால் ஆணுக்கு இரண்டு மடங்கு. பெண்ணே பொறுப்பேற்பவளாக இருந்தாலும் ஆணுக்கு இரண்டு மடங்கு தான். இதில் மறுப்பதற்கோ, விளக்கம் சொல்வதற்கோ வழியில்லாத அளவுக்கு ஆணும் பெண்ணும் சமமல்ல என்று குரான் தெளிவாகவே கூறிவிடுகிறது. மதவாதிகள் தான் சமாளிப்பு விளக்கங்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

குரான் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.  மஹர் தொகை பெண்களுக்கானது என்பது முகம்மதின் நிலைப்பாடு. அதாவது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு அளிக்கும் மணக்கொடை மணப் பெண்ணுக்கே சொந்தம். முகம்மதுவுக்கு அல்லது இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில் மஹர் பெண்ணுக்கு என்பது பெயரளவில் இருந்தாலும் அதை பெண்ணின் தந்தையே அனுபவித்து வந்தனர் (இதுகுறித்து தனித்தலைப்பில் விரிவாக பின்னர் பார்க்கலாம்)இதை சீர்திருத்தி முகம்மது குரானில் பெண்ணுக்கே உரியது என்கிறார். இந்த கிடக்கையிலிருந்து தான் பெண்ணின் சொத்துரிமைக்கான அங்கீகாரம் கிளைத்து வருகிறது.

மஹரின் நிர்ப்பந்தத்தினால் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கிய முகம்மது மிகக் கவனமாக அது பெண்களிடம் தங்கி விடாமல் ஆண்களிடம் வந்து சேரும்படியான ஏற்பாட்டையும் செய்திருக்கிறார்.  வசனம் 4:12 ஐ கவனித்துப் பார்த்தால் இது விளங்கும். கணவன் இறந்த பின்னர் மனைவிக்கு குழந்தை இருந்தால் எட்டில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் நான்கில் ஒருபங்கும்; மனைவி இறந்த பின்னர் கணவனுக்கு குழந்தை இருந்தால் நான்கில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் இரண்டில் ஒருபங்கும். இதை மேலோட்டமாக பார்த்தால் ஆணுக்கு இரண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்பது போல்தான் தோன்றும் ஆனால் ஆணுக்கு நான்கு திருமணம் வரை அனுமதி என்பதோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக, கணவனுக்கும் அவனது நான்கு மனைவிகளுக்கும் தனித்தனியே 100 ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று கொண்டால், மனைவிகள் இறந்தால் கணவனுக்கு குழந்தைகள் இருந்தால் 100 ரூபாயும், குழந்தைகள் இல்லாவிட்டால் 200 ரூபாயும் மனைவிகளிடமிருந்து கணவனுக்கு சொத்தாக கிடைக்கும். மாறாக கணவன் இறந்தால் மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் 6.25 ரூபாயும், குழந்தைகள் இருந்தால் 3.12 ரூபாயும் கணவனிடமிருந்து மனைவிகளுக்கு தனித்தனியே சொத்தாக கிடைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முகம்மது எவ்வளவு துல்லியமாக சிந்தித்திருக்கிறார் என்பது விளங்குகிறதா?

இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் எழலாம். என்னைருந்தாலும் இஸ்லாம் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரித்திருக்கிறதல்லவா? என்று. முகம்மதுவிற்கு முந்தைய அரேபியாவில் பெண்களுக்கு அறவே சொத்துரிமை இல்லை என்றெல்லாம் கூறமுடியாது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் அடிமைகள் இருந்ததை சில ஹதீஸ்கள் பதிவு செய்திருக்கின்றன. ஷீபா நாட்டு அரசியாக ஒரு பெண் திறம்பட ஆட்சி புரிந்ததாக குரான் குறிப்பிடுகிறது.  முகம்மதின் முதல் மனைவியாகிய கதீஜா சொந்தமாக பன்னாட்டு வர்த்தக நிறுவனமொன்றை நடத்தி வந்தார். எனவே இல்லாத ஒன்றை புதிதாக முகம்மது பெண்களுக்கு வழங்கிவிடவில்லை. நடப்பில் இருந்ததைசில மாற்றங்களுடன் அங்கீகரித்திருக்கிறார், அவ்வளவு தான்.

பல்வேறு வகைகளில் பெண்களை அடக்கி ஒடுக்கி ஆணாதிக்கத்தில் அமர்ந்திருக்கும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய சொத்துரிமையின் பின்னணி இது தான். மேலோட்டமான அனுபவ ரீதியான வசனங்களுக்குள் அறிவியலை அடித்து இறக்கிய அனுபவத்தில், ஆண்குழந்தைக்கு பெண்குழந்தையாய் வேடமிடுவது போல ஆணாதிக்கத்தையே பெண்ணுரிமையாய் உருமாற்றிவிட்டார்கள் மதவாதிகள் என்பதைத்தவிர இதில் வேறொன்றுமில்லை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

36 thoughts on “அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

  1. /இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கிறது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக கூறுவது பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது தான். பொதுவாக மனிதனின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை பெண்களுக்கு சொத்துரிமை என்பது முழுமையான அளவில் இல்லை. இன்று பல நாடுகள் சட்டரீதியாக பெண்களுக்கு சொத்துரிமையை ஏற்படுத்தியிருக்கின்றன. என்றாலும், நடைமுறையில் ஆணாதிக்க உலகம் பெண்களுக்கான சொத்துரிமையை அதன் முழுமையான பொருளில் அங்கீகரிக்கவில்லை என்பதே மெய். சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழி நடத்திய போதும் அவளுக்கு தனித்த சொத்துரிமை ஒன்றுமில்லை. ஏனென்றால் அன்று சமூகம் பொதுவுடமை சமூகமாய் இருந்தது. அது மாறி தனியுடமை கொண்டுவரப்பட்ட போதோ ஆணின் தலைமையில் பெண் அடிமையாக்கப்பட்டாள்./

    மதத்தை பற்றிய விமர்சனங்களை கூறும் போது செங்கொடி மார்க்சிய ஆசான்களின் பார்வையை கொண்டிருக்கிறாரா என்கிறா சந்தேகம் வருகிறது
    தொடர்ச்சியாக ஒரு மதத்தை அதன் நம்பிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் என்ன மாற்றத்தை கொண்டுவரமுடியும் மாறாக அவர்களின் மதநம்பிக்கைதான் அதிகமாகும்

    வர்க்க போராட்டத்தில் இஸ்லாம் மக்களை கொண்டுவருதலே சிறந்த பணியாகும் – மேலும் செங்கொடி எழுதும் தொடர்ச்சியான பதிவுகள் அவர் இந்த பாதையை விட்டு வெகுதூரம் போய்விட்டதாகவே தோன்றுகிறது
    ஒரு வெறுப்பு மனநிலைக்கு போய் மதங்களை விமர்சனம் செய்வதால் எந்த பயனும் இல்லை

  2. நண்பர் தியாகு,

    எந்த அடிப்படையில் இது வெறுப்பில் எழுந்த விமர்சனம் என கருதுகிறீர்கள் என்பது புரியவில்லை. எந்த மதத்தை விமர்சித்தாலும் பரிசீலனையற்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் எவரையும் அது சலனப்படுத்தாது. நீங்கள் கூறியது போல் மத நம்பிக்கையை தீவிரப்படுத்துவதற்குக் கூட உதவலாம். இதைச் சுட்டி விமர்சனம் கூடாதென்றால் அது முடங்கல் தனமல்லவா?

    இதயமற்ற உலகின் இதயமாக மதங்கள் இருக்கின்றன என்பது விமர்சனங்களிலிருந்து மதங்களுக்கு விலக்களிக்கிறதா?

    தமிழ் சூழலில் 80 களில் தொடங்கிய இஸ்லாமிய மீட்டுருவாக்கம் அத்தனை தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அனைத்து ஊடகங்களிலும் வீச்சாக பரப்புரை செய்து கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக அதற்கான எதிர்வினையும் தேவையாகவே இருக்கிறது.

  3. சகோதரர் செங்கோடி அவர்களே இஸ்லாத்தை பலவாறாக விமர்சிக்கக் கூடிய நீங்கள் என்றாவது ஒருநாள்குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லி இஸ்லாம் இந்த விஷயத்தில் கூறிய தீர்வு தவறானது என்று நிரூபித்து விட்டு அதைவிட சிறந்த தீர்வு கம்யூனிஸத்தில் இருக்கிறது என்று எடுத்துக்காட்டி விமர்சித்துள்ளீர்களா உன்மையான விமர்சனம் என்றால் அதுதான் விமர்சனம். மனிதர்கள் பூமியில் தோன்றி பல லட்சம் ஆகிவிட்ட நிலையில் வெறும் நூறாண்டுக்கு முன்பு தோன்றிய கம்யூனிஸ சித்தாந்தத்தில் எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது என்று கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம்
    அப்துல்ஹக்கீம் http://neermarkkam.blogspot.com/

  4. சொல்லி இஸ்லாம் இந்த விஷயத்தில் கூறிய தீர்வு தவறானது என்று நிரூபித்து விட்டு அதைவிட சிறந்த தீர்வு கம்யூனிஸத்தில் இருக்கிறது என்று எடுத்துக்காட்டி விமர்சித்துள்ளீர்களா ////.
    .
    அதை தோழர் வினவு செய்துள்ளார்!!ஆனால் நீங்கள் அதை ஒப்புகொல்லாமல் நேரடி விவாதம்தான் ஒரே பிடி என்றிருக்கிரீர்கள்!இப்படி நீங்கள் கூறியது போல ஒரு தத்துவத்தை மற்றொரு தத்துவத்தை விட சிறந்தது என நிரூபிக்காவிட்டால் முதல் தத்துவம்(இங்கு இஸ்லாம்) சிறந்தது என ஆகிவிடாது!

  5. //நீங்கள் என்றாவது ஒருநாள்குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லி இஸ்லாம் இந்த விஷயத்தில் கூறிய தீர்வு தவறானது என்று நிரூபித்து விட்டு அதைவிட சிறந்த தீர்வு கம்யூனிஸத்தில் இருக்கிறது என்று எடுத்துக்காட்டி விமர்சித்துள்ளீர்களா// நியாயமான கேள்வி. செங்கொடியின் பதிலென்ன?

  6. நண்பர் ராபின்,

    கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாத நிலை வரும்போது இஸ்லாமியர்கள் இது போன்ற ஆயத்த கேள்விகளை முன்னிருத்துவது வழக்கம். இதற்கு மாற்றுத்தீர்வு என்ன என்று வினா எழுப்பும் எவரும் இஸ்லாத்திற்கு வெளியே தத்துவார்த்த ரீதியாக என்னென்ன இருக்கின்றன எனும் தேடல் இருக்குமா? குறைந்தபட்சம் இஸ்லாத்தையேனும் அறிந்திருப்பார்களா? ஒன்றுமில்லாத வெறும் வாய்ச்சவடால்.

    கம்யூனிசமே எங்கள் தீர்வு. போராட்டங்களே அதற்கான வழிமுறை. குறிப்பாக இந்த விசயத்தில் ஆணாதிக்கத்தை ஒழிப்பதும், ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலையை ஏற்படுத்துவதையுமே இதற்கான தீர்வாக முன்மொழிகிறோம். கேள்வி கேட்டவர் இப்போது இஸ்லாத்தின் மீதான விமர்சனம் குறித்தும், கம்யூனிச தீர்வுகுறித்தும் பேச முன்வருவாரா?

    தங்களின் கடவுளே ஒரே உண்மையான கடவுள், தங்கள் மதமே அனைத்திற்குமான தீர்வு என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால், எதையுமே அறிந்து கொள்ள முன்வராமல் தங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மை என வறட்டுத்தனம் காட்டுவது சரியா என்பதை அவர்கள் பரிசீலித்துக் கொள்ளட்டும்.

  7. //கணவனுக்கும் அவனது நான்கு மனைவிகளுக்கும் தனித்தனியே 100 ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று கொண்டால், மனைவிகள் இறந்தால் கணவனுக்கு குழந்தைகள் இருந்தால் 100 ரூபாயும், குழந்தைகள் இல்லாவிட்டால் 200 ரூபாயும் மனைவிகளிடமிருந்து கணவனுக்கு சொத்தாக கிடைக்கும். மாறாக கணவன் இறந்தால் மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் 6.25 ரூபாயும், குழந்தைகள் இருந்தால் 3.12 ரூபாயும் கணவனிடமிருந்து மனைவிகளுக்கு தனித்தனியே சொத்தாக கிடைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முகம்மது எவ்வளவு துல்லியமாக சிந்தித்திருக்கிறார் என்பது விளங்குகிறதா?///
    எந்த ஒரு சொத்துவிலும் பெண்களுக்கு குறைவான அளவே கிடைக்கும் பொழுது நான்கு மனைவிகளுக்கும் தலா எப்படி 100ரூபாய் அளவுக்கு எப்படி சொத்து வரும்? உமது கணக்கை திருப்பி போட்டு பார்த்தால் ஒவ்வரு மனைவிக்கும் 6 25 அளவிலோ அல்லது 3 .15 அளவிலோதான இருக்க வேண்டும் .

  8. இதயமற்ற உலகின் இதயமாக மதங்கள் இருக்கின்றன என்பது விமர்சனங்களிலிருந்து மதங்களுக்கு விலக்களிக்கிறதா?தமிழ் சூழலில் 80 களில் தொடங்கிய இஸ்லாமிய மீட்டுருவாக்கம் அத்தனை தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அனைத்து ஊடகங்களிலும் வீச்சாக பரப்புரை செய்து கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக அதற்கான எதிர்வினையும் தேவையாகவே இருக்கிறது. – செங்கொடி

    மிக சரியான கருத்து.

  9. //சகோதரர் செங்கோடி அவர்களே இஸ்லாத்தை பலவாறாக விமர்சிக்கக் கூடிய நீங்கள் என்றாவது ஒருநாள்குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லி இஸ்லாம் இந்த விஷயத்தில் கூறிய தீர்வு தவறானது என்று நிரூபித்து விட்டு அதைவிட சிறந்த தீர்வு கம்யூனிஸத்தில் இருக்கிறது என்று எடுத்துக்காட்டி விமர்சித்துள்ளீர்களா உன்மையான விமர்சனம் என்றால் அதுதான் விமர்சனம்//
    மனிதனை மனிதன் சுரண்டுவதை நியாயம் என சொல்கிறது எதிர்மறையில் இஸ்லாம் அதுதான் வேர்வை உணரும் முன் கூலி கொடுக்க சொல்கிறது

    அந்த கூலியின் மீதான விமர்சனமே மார்க்சியம்

    ஆகவே இஸ்லாத்தில் இல்லாத போதாமை என்பது மார்க்சியத்தில் இருக்கிறது எனவே இஸ்லாத்தை விஞ்ஞானபூர்வமானதென்பதை விட்டு விட்டு மார்க்சியத்தின் விஞ்ஞான பார்வையை கொள்ளவேண்டுகிறேன்

    i

  10. சகோதரர் செங்கொடி அவர்களே உங்களுக்கெதிரான கொள்கையில் உள்ள ஒரு விஷயத்தை தவறு எனக்கூறி விமர்சிக்கக்கூடிய உங்களிடம் அந்த விஷயத்திற்க்கான இதைவிடச்சரியான தீர்வு உங்கள் கொள்கையில் உள்ளதா? இருந்தால் அதை எடுத்து வையுங்கள் என்று கேட்பது உங்களுக்கு வாய்ச்சவடாலாகத் தெரிகிறதா? இஸ்லாம் தவறு கம்யூனிஸம் தான் எல்லாவற்றிற்க்கும் தீர்வு என்று கூறக்கூடிய உங்களை விவாத்த்திற்க்கு வாருங்கள் எது சரி எது தவறு என்று விவாதிப்போம் என்றால் பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடிஒழிந்து கொண்டு இனையத்தில் எழுதுகிறீர்களே அதுதான் வாய்ச்சவடால் இனையத்திலாவது மாற்று கொள்கைகளை முன்வைத்து இஸ்லாமியக்கொள்கையை விமர்சிக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை .ஆணும் பெண்ணும் சமம் என்று எல்லோரும் பாடும் பல்லவியை விட்டுவிட்டு இஸ்லாத்திற்க்கு வெளியில் உள்ள தத்துவார்த்த கருத்தின்படி கம்யூனிஸத்தில் பெண்களுக்கு சொத்தில் எத்தனை சதவீதம் பங்குள்ளது என்று தெரிவிப்பீர்களா பின்னர் சகோதரர் நரன் அவர்களே வினவு எத்தனை விஷயங்களை இஸ்லாமியக்கொள்கைகளையும் கம்யூனிஸக்கொள்கைகளையும் ஒப்பிட்டு இஸ்லாம் தவறானெதன விமர்சித்துள்ளார்கள் என்ற பட்டியலைத் தந்தால் தெரிந்து கொள்ளலாமே தருவீர்களா
    தேவையென்றால் பின்னர்
    (குறிப்பு) முதலில் நான் இட்ட பின்னூட்டத்தில் மனிதர்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் என்பதுல் ஆண்டுகள் என்பதை விட்டிவிட்டேன் திருத்திக் கொள்ளவும் by abdulhakkim http://neermarkkam.blogspot.com

    தேவையென்றால் பின்னர்
    குறிப்பு முதலில் நான் இட்ட பின்னூட்டத்தில் மனிதர்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் என்பதுல் ஆண்டுகள் என்பதை விட்டிவிட்டேன் திருத்திக் கொள்ளவும் by abdulhakkim http://neermarkkam.blogspot.com

  11. மார்க்க சகோ abdulhakkim

    //குறிப்பு முதலில் நான் இட்ட பின்னூட்டத்தில் மனிதர்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்//

    இதனை படித்து நெஞ்சம் வெடிக்கிறது! ஆதாம் தோன்றி 10 நூற்றாண்டுகளுக்கு பின்னர் நூஹ் நபி தோன்றினார் என்று நமது கண்ணுமணி நபிஹல் நாயஹம் சொல்லியிருக்கும்போது, நூஹ் நபியின் கப்பல் கிடைத்திருக்கும்போது, அந்த கப்பல் 4800 வருடங்கள் பழையது என்று நமது ஹாரூன் யாஹ்யாவே உறுதிபடுத்தியிருக்கும்போது மனிதர் தோன்றி 5800 வருடங்கள்தானே ஆகிறது? எப்படி நீங்கள் கண்ணுமணி நபிஹள் நாயஹம் சொன்னதை மறுத்து , மனிதன் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன என்று ஈமானை இழந்து இப்படி பேசுகிறீர்கள்? இதுதான் ஈமானா?

    இவ்வாறு ஒவ்வொரு ஈமாந்தாரிகளாக இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதையும் நபிஹள் நாயஹம் பொய்யர் என்று சொல்லுவதையும் பார்க்கையில் என் நெஞ்சம் வெடிக்காமல் என்ன செய்யும்?

    ஒருவேளை நபிஹள் நாயஹம் தீர்க்கதரிசனமாக சொன்னதுபோலவே இஸ்லாம் ஒரு பாம்பு போல சுருண்டு மீண்டும் மெக்கா மெதீனாவில் மட்டுமே இருக்கும் மதமல்ல மார்க்கமாக ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

    ஆ அல்லாஹ்

  12. குரான் வசனங்களும் , ஹதீஸும் என்ன சொல்கிறது என்றும் அதில் முகமதுவின் நிலை என்ன என்று பார்க்கலாம்.

    அடிமை முறை என்பது இன்றளவும் முஸ்லிம்களால் பின் பற்றப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களிடம் கேட்டால் , அவர்கள் சொல்லுவது இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழித்தது என்று கூறுவார்கள்.. இதில் எது உண்மை என்று பார்ககலாம்….

    முதலில் அல்லா என்ன சொல்கிறான் என்று பார்ப்போம் ….

    2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்.

    அடிமையை கொல்லலாம்…… அடிமை என்பவர் முஸ்லிம்களுக்கு , அவர்கள் வைத்திருக்கும் ஒரு பொருளே!!!!!!!.

    2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர்அடிமைப் பெண்நிச்சயமாக மேலானவள் ஆவாள்; .

    அல்லா சொல்வது என்னவென்றால் . ஹிந்து, கிறிஸ்தவ,யூத பெண்கள் முஸ்லிம் அடிமைப்பெண்ணைவிட ( அதாவது அடிமையாக இருக்கும் போது முஸ்லிமாக மாறியவள்) மட்டமானவள். .. இது மற்ற பெண்களை மதம் மாற்ற கூறப்பட்டது. அப்படி மாற்ற முடியாத பட்சத்தில் (ஒருவேளை முஸ்லிம் ஆண்கள் பிற பெண்களை மோகத்தால் மணந்து இவன் மதம் மாறி விட்டால் என்ன செய்வது என்று பயந்து அல்லா(முகமது) கூறியது ) போனா போகுது அடிமைப்பெண்ணை மணந்து கொள்… முஸ்லிம்கள் சொல்வார்கள் அடிமைப்பெண்களை மணப்பதின் மூலம் அடிமைத்தனத்தை ஒழிக்க அல்லா கூறியது தான் என்று கூறுவார்கள்……. பொருமையாக இருங்கள்…… கீழே இதை விலாவாரியாக அலசி ஆராய்வோம்…

    4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

    இதில் அல்லா சொல்வது உன்னால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளிம் நியாயமாக( நியாயமாக நடப்பது என்றால் என்ன என்று அல்லா சொல்லவில்லை?) நடக்கமுடியாது என்று நினைத்தால் . ஒரே ஒரு சுதந்திரமான பெண்ணை மணந்துகொள். அல்லது உன்னிடம் இருக்கு அடிமைப்பெண்ணிடம் சுகம் தேடிக்கொள்(கற்பழித்துக்கொள்).

    3. 4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும்,ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

    இது தான் அல்லாவின் மிக உயர்ந்த கருத்து……… இந்த வசனம் நாம் நினைப்பது மாதிரியான திருமணமல்ல … அந்த அடிமைப்பெண்ணுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்,அவளுக்கு கணவன் இருந்தாலும் அவளை அனுபவிக்கலாம்(அடிமைப்பெண்ணின் திருமணத்தைப்பற்றிய வசனம் அடுத்து வருகின்றது). இந்த வசனத்தில் நம்ம தமிழ் முஸ்லிம்களின் ப்ரேக்கெட் உள்ளே இருப்பதை எடுத்துவிட்டு பார்ப்போம்… 🙂 இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து கொடுத்துத் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். [இதற்கு பெயர் முட்டா திருமணம்.. அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்.. உதாரணத்துக்கு .. நீங்கள் ஒரு வேலையாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து அங்கு ஒரு பெண்ணை 3 நாட்களுக்கு மணந்து கொண்டு எல்லா காரியமும் செய்யலாம்… அந்த 3 நாள் முடிந்து ஊர் திரும்பும் போது பேசிய தொகையை ..மன்னிக்கவும் வரதட்சனையை குடுத்தால் போதும்.. அதன் பின் அவளுக்கும் உங்களூக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இந்த வழக்கத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது இல்லையா?] அதுமட்டுமல்ல ( எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது) அதாவது முஸ்லிமுக்கு முழு சந்தோஷம் வரும் அளவில் அந்த பெண் நடக்கவில்லை என்றால் பேசிய தொகையில் இருந்து குறைவாக கொடுக்கலாம். அதே மாதிரி ரொம்ப சந்தோஷம் அடைந்தால் பேசிய தொகையை விட அதிகமாக கொடுக்கலாம்.(அல்லாவின் தீர்க்க தரிசனத்தை இதில் காணமுடிகிறது. பர்தா போட்டு மூடியிருக்கும் போது அந்த பெண் எப்படி இருப்பாள் என்று தெரியாது. நல்ல ஒரு தொகையை பேசி முடித்த பின் , அவள் அட்டு ஃபிகராக இருந்தால் பாவம் அந்த முஸ்லிம் ஏமாற்றம் அடைவான் அதனால் இந்த குறைத்து கூட்டி கொள்ளும் உரிமை, வல்லாஹி , அதனால் இது கட்டாயமாக கடவுளிடம் இருந்துதான் வந்திருக்கவேண்டும்) முஸ்லிம்கள் இது இஸ்லாமில் கிடையது முகமது இதை தடை செய்துவிட்டார் என்று கூறுவார்கள்…
    புஹாரி- 889. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக்
    கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.

    ஆனால் நாம் பார்க்கவேண்டியது இதில் என்னவென்றால்.. அல்லா பெரியவனா முகமது பெரியவனா என்று தான்.. அல்லா கூறியதை முகமதால் மாற்ற முடியுமா.. இதற்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

    4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;)அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினானஅடிமைப்பெண்களைஅவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள்…………உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;

    இந்த வசனத்தை தான் நாம் நன்றாக அலசி ஆராய வேண்டும்……..
    இதில் முதலில் அல்லா கூறுவது சுதந்திரமான முஸ்லிம் பெண்ணை மணக்க முடியாதவர்கள் , வசதியில்லாதவர்கள் , அடிமைப்பெண்ணை மணம் புரியலாம்.. [அவனிடம் இருக்கும் அடிமைப்பெண்ணைப்பற்றி இல்லை இந்த வசனம் , அவனிடம் அடிமைப்பெண் இருந்தால் அவன் அல்லாவை கேட்காமலே அவளை அனுபவிக்கலாம் — அந்த வசனங்கள் கீழே வருகின்றது] இது ஒரு பெண் அடிமையாக மற்றொரு முஸ்லிமிடம் இருக்கும்போது(உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்) அந்த மற்றொரு முஸ்லிம் எஜமானனிடம் அனுமதி பெற்று திருமணம் செய்யலாம். அதிலும் அல்லா கூறுவது என்னவென்றால் .. உன்னால் பொத்திக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை என்றால் , கள்ள … போய்விடுவாய் என்று பயந்தால் ….. இந்த மாதிரி அடிமைப்பெண்ணை மணந்துகொள் . அப்படி உன்னால் உன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருக்க முடியும் என்றால் அடிமையை திருமணம் செய்யாமல் இருந்து கொள் என்கிறான்.(ஏனென்றால் அடிமைப்பெண்ணூக்கு பிறக்கும் குழந்தை அந்த எஜமானனையே சேரும், மேலும் அந்த அடிமைப்பெண் அடிமையாகத்தான் இருப்பாள்). அதாவது அல்லா சொல்வது , நீ பஞ்ச பரதேசியாக காசிலாமல் இருந்து சுயகட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால்முஸ்லிமாக இருக்கும் அடிமையை மணந்து கொள்..(இதில் அல்லாவுக்கு அடிமையை விடுவிக்கும் நல்ல எண்ணம் எல்லாம் இல்லை ,மேலும் திருமணம் செய்தாலும் அடிமையாகத்தான் இருக்கவேண்டும் ) முஸ்லிம்கள் நான் இந்த வசனத்தை தவறாக கூறுகிறேன் என்று சொல்வார்கள் ..அதனால் …(கீழே உள்ள இணைப்பில் போய் படித்துக்கொள்ளவும்)

    http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=681&Itemid=59
    [Allah said, those who do not have, (the means), financial capability,
    (Wherewith to wed free believing women) meaning, free faithful, chaste women.
    (They may wed believing girls from among those whom your right hands possess,) meaning, they are allowed to wed believing slave girls owned by the believers.
    (and Allah has full knowledge about your faith; you are one from another.) Allah knows the true reality and secrets of all things, but you people know only the apparent things. Allah then said,
    (Wed them with the permission of their own folk) indicating that the owner is responsible for the slave girl, and consequently, she cannot marry without his permission. The owner is also responsible for his male slave and they cannot wed without his permission.
    A Hadith states,
    (Any male slave who marries without permission from his master, is a fornicator.) When the owner of the female slave is a female, those who are allowed to give away the free woman in marriage, with her permission, become responsible for giving away her female slave in marriage, as well.
    A Hadith states that
    (The woman does not give away another woman, or herself in marriage, for only the adulteress gives herself away in marriage. [ என்னயா இது தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது .. இந்த ஹதிஸ்ல பெண்ணுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்கிறது])

    4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

    என்னடா அல்லா திடீர் என்றூ பல்டி அடிக்கிறானே என்று பார்க்கிறீர்களா? அல்லாவைப்பொருத்தவரை அவனுக்கு இணைவைப்பது மிகப்பெரிய பாவம். அவர்களை கொன்றாலும் தவறில்லை… இந்த வசனம் அடிமையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு. ( முஸ்லிம் அடிமையைத்தான் விடுவிக்கமுடியும் அதனால் பிடித்து வரப்பட்ட அடிமை முஸ்லிமாக மாறாமலா இருப்பான் ). மேலும் அடிமையாக இருப்பவனுக்கு சோருபோடாமல் அவன் மண்டையைப்போட்டால் யாருக்கு நஷ்டம்.? அதனால் கொஞ்சம் பரிவு அவ்வளவு தான்.

    4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்;………

    இதோ வந்து விட்டதே இந்த வசனத்துக்கு முன்னால் நான் கூறியது சரி என்று நிருபிக்க 🙂 அடிமை முஸ்லிமாக இருந்தால் மட்டுமே விடுதலை ….

    5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்,அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லதுஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்;

    இந்த வசனத்தில் . முதலில் , 10 ஏழைகளுக்கு உணவு அல்லது ஆடை அணிவிக்க வேண்டும் (அம்மனமாக வாக இருப்பார்கள் 🙂 ) , அப்படி இல்லை என்றால் ஒரு அடிமையை (முஸ்லிமை) விடுதலை செய்யவேண்டும். முஸ்லிம்கள் என்ன அந்த அளவுக்கு மடையர்களா , முதல் இரண்டில் ஒன்றை செய்யாமல் அடிமையை விடுவிக்க ….

    16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்:பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும்(அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ,நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான்? . இவ்விருவரும் சமமாவாரா

    இது அல்லாவின் வாக்கு … அல்லா தன்னையும் , சிலையையும் ஒப்பிட்டு அதற்கு கூறும் உதாரணம் .. சுதந்திரமானவன் – முஸ்லிம் (அல்லவை நம்புபவன்) மாதிரியாம் . அடிமை என்பவன் ஒரு அதிகாரமும் (ஒன்றும் செய்ய முடியாத) இல்லாதவன் அதாவது அல்லா மீது நம்பிக்கையில்லாதன் போல்… இந்த இருவரும் ஒன்றாகுமா என்று கேட்கிறான்…. ஒரு கடவுளே இந்த மாதிரி கேட்டா , பாவம் அடிமை என்ன செய்யமுடியும்……

    16:76. மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யானஅடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் – இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?

    மேலே குடுத்த விளக்கமே இதற்கும்.

    23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

    கருணைமிக்க அல்லா கூறுகிறான். முஸ்லிம்கள் அவர்களின் மனைவியிடமும் அவர்கள் வைத்திருக்கும் அடிமைப்பெண்களிடமும் உடலுறவு கொண்டால் தப்பில்லை…….
    ( இது அடிமைப்பெண்ணை கற்பழிப்பது இல்லாமல் வேறு என்ன ?) அவள் என்ன ஆசைப்பட்டா வருவாள். மேலும் இதில் திருமணமாகாத அடிமைப்பெண் என்று சொல்லவில்லை .. அதானால் அவளுக்கு திருமணம் ஆகியிருந்தாலும் அவளை கற்பழிக்கலாம் , அதானால் தான் கருணைமிக்க அல்லா முஸ்லிம்கள் அடிமைப்பெண்ணை திருமணம் செய்யாமல் கட்டுப்பாடுடன் இருக்கும் படி அறிவுருத்துகிறான். மாஷா அல்லா . அல்லாவின் ஞானமே ஞானம். இந்த மாதிரியான கருணையை பெண்களிடத்தில் யார் காட்ட முடியும் அல்லாவைத்தவிர.

    24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

    அல்லா மறந்துவிட்டான் என்று நினைக்கிறேன்… மேலே அடிமையை மணம் செய்யாமல் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும் என்று கூறுகிறான்… அப்படி கூறும் போது எவன் அடிமையை மணக்க முன்வருவான். (ஒரு வேளை அடிமைகளுக்குள்ளேயேவா?) அதுமட்டுமல்ல முஸ்லிம் அந்த அடிமையை நினைத்த போது படுக்க கூப்பிடலாம் என்னும் போது ..எவன் அவளை திருமணம் செய்ய முன்வருவான்? ஒரு முக்கியாமான பாய்ண்ட். திருமணம் ஆனாலும் அவர்கள் அடிமைகளே. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அடிமைகளே.

    24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் – அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை – அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில்(அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் – அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை – அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக – விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

    இதில் அல்லா சொல்வது வழக்கம் போல் அடிமைப்பெண்ணை மணம் புரியவேண்டாம்( அதாவது கொள்ளை அடித்து காசு சம்பாதிக்கும் வரை அவர்கள் ஒழுக்கம் பேணட்டும்). அதன் பின்பு அந்த அடிமையை விடுவிக்க வேண்டுமானால் ,, அந்த அடிமை திரும்பவும் காசை ஒழுங்காக குடுப்பான் என்று முஸ்லிம் நம்பினால் மட்டும், அந்த அடிமையை விடுதலை செய்யலாம். (அந்த மாதிரி அடிமை விடுதலை செய்யப்பட்டு அவன் சம்பாதிக்கும் சொத்துக்கு வாரிசு யார் தெரியுமா? அந்த அடிமையை விடுதலை செய்தவர் – இது சூப்பர் இல்லையா).இதற்கு பின் வருவது தான் அதைவிட சூப்பர் . அடிமைப்பெண்ணை விபச்சாரம் செய்ய நிர்பந்தபடுத்தி காசு சம்பாதிக்காதே(கட்டாயப்படுத்தி மாமா வேலை செய்யாதே). அப்படி நீ செய்தால்…….. அதனால் பரவாயில்லை அல்லா உங்களை மன்னித்துவிடுவான்….. இதில் இன்னும் ஒன்று பார்க்க வேண்டும்.. அந்த பெண்ணே விபச்சாரம்(கற்பை பேணிக்கொள்ள நினைக்காவிடில்) செய்ய நினைத்தால் ….செய்து கொள்ளலாம். நம்ம மாமா முஸ்லிமும் காசு பார்த்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல — அடிமையை விடுதலை செய்தாலும் அந்த முன்னாள் அடிமையின் வாரிசாக ஆவதினால் ஒரு லாபம். மேலும் முகமது அந்த நாட்களில் தொடர்ந்து மற்ற மக்களை தாக்கி, அவர்களை அழித்து பெண்களையும் சிறுவர்/சிறுமிகளையும் அடிமைகளாக பிடித்ததினால்.. முஸ்லிம்களுக்கு ஏராளமான அடிமைகள் எளிதாக கிடைத்தனர்.(அடிமைகிடைக்கும் என்று போருக்கும் வருவார்கள்) மேலும் முஸ்லிமாக மாறியவர்களே விடுவிக்கப்பட்டதினால் இஸ்லாமும் வளரும்.. இதில் அல்லா ஒரே கல்லில் ,இரண்டு மாங்கா, இல்லை மூன்று மங்கா, இல்லை நான்கு மாங்கா அடிக்கிறான்(.மைக்கேல்,மதன காம ராஜனில் வரும் வசனம் போல்)

    அதனால் மாமாவேலை செய்தபின் -வருத்தப்பட்டால் அல்லா மன்னித்துவிடுவான். ( அல்லாஹ் மன்னிப்பவனாகவும்- மன்னிப்பு என்பது எப்போது வரும்? தவறே செய்யவில்லை என்றால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த அடிமைபெண்கள் நிர்பந்திக்கப்பட்டதினால் அவர்கள் மேல் தவறில்லை என்பது நமக்கே தெரியும் போது கடவுளுக்கு தெரியாதா? பின் எதற்காக மன்னிப்பு என்று கூறவேண்டும். இது அந்த பெண்களுக்கு அல்ல , அந்த மாமாவுக்கு அதாவது முஸ்லிமகள் என்ன செய்தாலும் அல்லா மன்னித்துவிடுவான்.)

    33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் – இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் ; அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் ; இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும்,அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்);மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
    இந்த வசனம் முகமது தனக்கு தானே ,மன்னிக்கவும் . அல்லா முகமதுக்கு கூறியது .. அதாவது முகமது யார்கூட எல்லாம் படுக்கலாம் என்பதைப்பற்றி கூறுகிறான். இது திருமணத்தைப்பற்றி அல்ல… ஏனென்றால் மனைவியரையும், அடிமையையும் படுக்கவைப்பது ஹலால். இதில் மனைவியைப்பற்றி சொல்லாமல் இருந்திருந்தால் இது திருமணத்தைப்பற்றி கூறுகிறது என்று சொல்லலாம்.. மனைவியை திரும்ப மணம்புரியவேண்டியது இல்லை.. எந்த முஸ்லிம் பெண் வந்து முகமது கூட படுக்க ஆசைப்பட்டாலும் …. இந்த வசனம் முடிவது , மத்த முஸ்லிம்கள் மனைவி மற்றும் அடிமைப்பெண்ணுடன் படுப்பது பற்றி.. அதானால் இது திருமணம் பற்றி அல்ல…. அதாவது இதிலும் அல்லா கூறுவது அடிமைப்பெண் கற்பழிப்பை பற்றி தான் (போரில் எளிதாக கிடைத்த பெண்கள் -அதாவது கணவனை, தந்தையை,சகோதரர்களை கொன்ற பின் அனாதரவாக இருக்கும் பெண்களை அன்று இரவே படுக்கவைப்பது ). இதிலும் அல்லா கருணை மழை பொழிகிறான்.. முகமதுக்கு எந்த ஒரு சங்கடமும் வந்து விடக்கூடாது என்று அவனுக்கு மட்டும் விதிவிலக்கு — அதாவது யார் கூட வேண்டுமானாலும் படுக்கும் உரிமை.

    33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே – ஹலால் இல்லை – மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.
    இது என்னடா திரும்பவும் அல்லா குழப்புகிறான். மேலே தான் ஊரில் இருக்கும் அனைவருடனும் படுக்கும் உரிமையை வழங்கினான்.. சரி, இதில் அல்லா என்ன சொல்லவருகிறான் என்றால் முகமது அவனின் மனைவிகள் , மற்றும் அடிமைப்பெண்கள் உடன் மட்டும் படுக்கலாம்(அடிமையை கற்பழிக்கலாம்). அதைதவிர வேறுயாராக இருந்தாலும் திருமணம் செய்த பின் தான் படுக்க முடியும்…

    58:3. மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
    58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் – வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
    [ அல்லாவின் இந்த வசனம் தான் சரியான காமெடி…..
    கீழே ஆங்கிலத்தில் உள்ளதை படியுங்கள்…. அல்லாவின் ஞானத்தை பற்றி தெரியவரும்…

    இந்த இரண்டு வசனங்களையும் சேர்த்து பார்கவேண்டும்.. முதலில் அல்லா யோசிக்காமல் உளறிவிட்டான்.. அதன் பின் பார்த்தால் . (இந்த சம்பவம் நடந்தபோது) இது யாருக்காக அருளப்பட்டதோ அவரிடம் அடிமையே இல்லை .. அதானால் இந்த இரண்டாவது வசனம்…
    மேலும் “எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால்,” இந்த மாதிரி யாராவது வந்தால் அடிமை விடுதலை,அப்படி வசதியில்லை என்றால் 2 மாதம் நோம்பு…. இதிலும் அடிமையை விடுவிக்கும் நல்ல எண்ணம் எல்லாம் இல்லை அல்லாவுக்கு… தெரியாமல் உளறியதால் தான் இது…

    70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
    மீண்டும் அதே கற்பழிப்பு (அடிமைப்பெண்களை)…இப்படி செய்ய அல்லாவே கூறும் போது யார் அந்த பெண்களை திருமணம் செய்வார்கள். (அதனால் தான் அல்லா முஸ்லிம்களிடத்தில் கருணை கொண்டு அடிமைப்பெண்களை திருமணம் செய்யவேண்டாம் என்று வலியிருத்துகிறான்.http://periyarnaathigan.blogspot.com.

  13. நண்பர் அப்துல் ஹக்கீம்,

    கம்யூனிசத்தில் எத்தனை விழுக்காடு சொத்து பெண்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்க்கேள்வி கேட்டீர்களென்றால் உங்களுக்கு எங்கிருந்து தொடங்குவது என்பதில் குழப்பம் வருகிறது. யானையைப் பற்றி விளக்க முற்படுகையில், ”நேற்றுக் கூட என் கையில் ஓடியது, பிடித்து நசுக்கினேன்” என்று பதில் கூறினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் கேள்வி. சொத்து என்பது தனியுடமையில் வருவது, நாங்கள் பொதுவுடமை குறித்து பேசுகிறோம். இஸ்லாம் செய்வது அநியாயமான பங்கீடு என்பது நாங்களும் பங்கு பிரிப்பதில் உடன்படுகிறோம் எனும் பொருளில் அல்ல. பங்கு பிரிக்கும் தேவையின்றி உழைப்பும் உற்பத்தியும் பொதுவில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு. தனியுடமையே மக்களின் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.தனியுடமை ஒழிக்கப்படவேண்டும் எனும் நிலையில் இருந்து கொண்டு தான் அநீதியான பங்கீடு குறித்து விமர்சிக்கிறோம்.

    நேரடிவிவாதம் குறித்து பலமுறை எழுதியாகி விட்டது. முடிந்தால் நீங்கள் அறிஞராக கருதுபவர்களை எழுத்து விவாதத்திற்கு அழைத்து வாருங்கள். எது சரி என்பதை விரிவாக அலசி காயப்போடலாம்.

  14. நான் நாத்திகன் என்ற பெயரில் எழுதும் காஃபிரே

    2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்

    என்ற புனித வசனத்தை எழுதியிருக்கிறீர்கள்.

    இந்த அல்குரான் வசனத்துக்கு வீடியோ விளக்கம் அளித்திருக்கிறேன்.

    குரான் வீடியோ விளக்கம்: ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது

    உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

    அல்ஹம்துலில்லாஹ்

  15. நம் நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள்; இவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் பொதுவுடைமையைச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே ஒழிய, பொதுமக்கள் கடைத்தேற ஒன்றும் செய்யவில்லை. எனவே, நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால்தான், மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழிய, பொறுக்கித் தின்னும் இந்த கம்யூனிஸ்ட்களின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது.

    உண்மை'(பிப்ரவரி-மார்ச் 1972)யில் பெரியார்

  16. அது மட்டுமா. ரஷ்யாவில் உள்ள கம்மியுநிச்ட்டுகள் தேவாலயங்களை தீவைத்து கொளுத்துகிறான் , இங்குள்ள கம்மியுநிச்ட்டுகளோ பாப்பானிடம் பொருக்கி தின்கிறான் என்றும் போலி கம்மியுநிச்ட்டுகளை அன்றே தோலுரித்தார் பெரியார்.
    கம்மியுநிச்ட்டு கட்சி அறிக்கையை முதன் முதலில் தமிழில் வெளியிட்டது பெரியார்தான்.

  17. 2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

    நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு)

  18. ஆண் 4 பெண்களை ஒரே நேரத்தில். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இசுலாமியச் சட்டம் உள்ளது. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொள்வதை இன்று ஒருபோதும் விரும்புவது இல்லை. பெண்ணின் விருப்பம் ஒரு பக்கமிருக்க ஒரு தந்தையாக, சகோதரனாக. மகனாக உள்ள ஆண்கூட தன் மகளுடைய, சகோதரிவுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி இருப்பதை இன்று நிச்சயமாக விரும்புவதில்லை. தன் தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்வதை தன் தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்று உணர்கிறான். நடைமுறையில் சமூக இழுக்காகமாறி வழக்கொழிந்து வரும் இச்சட்டத்திற்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அது இன்றைய சமூகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு பக்கபலமிருந்து காப்பாற்றுகிறது. அதனால் இச்சட்டத்தில் மாறுதல் தேவை என்பது மறுக்க முடியாததாக உள்ளது. பின்வரும் நபிமோழியைப்படியுங்கள். (புகாரி 5230)
    மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) அவர்கள் கூறியதாவது.
    அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி, “ஷிஹாம் பின் முஃகிரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹலுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஓரு பாதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்” என்று சொன்னாரக்ள்.
    இந் நபிமொழியை புகாரி அவர்கள் எந்த தலைப்பின் கீழ் பதித்துள்ளார்கள் தெரியுமா? “ஒருவர் தம் புதல்வியின் தன்மான உணர்வைக் காக்கவும் நீதிகோரி வாதிடுவதும்.” என்ற தலைப்பில் கூறுகிறார்.
    இந்த நபிமொழியிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்வது? முகம்மதுநபி தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாம் என்று கூறுகிறார்களா? அல்லது நான்கு மனைவிகள் சட்டத்தை மறந்துவிட்டார்களா? முகம்மதுநபி காலத்திலும்கூட தன் கணவன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள விரும்பியதில்லை என்பதும் தெரிகிறது.
    இச் சட்டத்திற்கான நலம் விரும்பிகளின் வாதங்களும் சில விளக்கங்களும்:
    1. விடியல் வெள்ளி என்ற இஸ்லாமிய மாத இதழின் ஜனவரி 2002ல் வந்துள்ள தலையங்கத்தின் தலைப்பு ˜சரவணபவனுக்கு சரியான பாதை அது கூறும் செய்தி பின்வருமாறு.
    ‘விதிவிலக்காக ஒரு சிலருக்கு ஒரு மனைவியைக் கொண்டு தங்கள் உடல் இச்சையைத் தணித்துக்கொள்ள முடியவில்லை. இது ஓரு சராசரியான உலக நிகழ்வு’என்றும்
    ‘நான்கு மனைவி என்பது சட்டமல்ல ஒரு விதிவிலக்கு பொருளாதார வசதிக்கேற்பவே செய்து கொள்ள வேண்டும் என்பதே குர்இன் காட்டும் பாதை’ என்று ஹோட்டல் தொழிலாளிகளின் மனைவிகளை அனுபவித்துக் கொலையும் செய்த இராஜகோபாலன் என்ற முதலாளியின் செயலை கூறுகிறது
    அதாவது நான்கு மனைவி என்பது பணக்காரனாகவும் காம இச்சைக் கூடுதலாகவும் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என்பது இதன் பொருள்.
    காம இச்சை கூடுதலாக உள்ளதற்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பில்லை. ஒரு மூடை சுமக்கும் தொழிலாளிக்குள்ள உடல் வலிமையைவிட உட்கார்ந்து தின்பவனுக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஏழையாக உள்ளவனுக்கு காம இச்சை கூடிவிட்டால் என்ன செய்வது? பெண்ணுக்கு காம இச்சை கூடிவிட்டாள் என்ன செய்வது? என்றெல்லாம் கேள்வியை நாம் கேட்கக் கூடாது என்று அவர்கள் சொல்கிறார்கள்.
    2. ஆணின் காம உணர்வு பெண்களைவிட அதிகம் என்றும், ஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உறவுகொள்ள சக்திபெற மாட்டாள் என்றும், பெண்ணின் மாதவிடாய் காலங்களில் ஆணுடையக் காமத்தேவை நிறைவேற்ற பிற மனைவிகள் வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
    ஒழுக்கத்தில் சிறந்தவர் ஆணா பெண்ணா எனும்போது பெண்கள்தான் கண்டதையும் பார்த்து காமவெறிபிடித்து சீரழிந்து போகிறார்கள் என்று கூறுகிறார்கள். விபச்சார விடுதிகள் நிரம்பி வழிவதையும், சினிமாத் துறையில் சீரழிவதையும் எடுத்துக்காட்டாக கூறுகின்றனர். பெண்கள்தான் சைத்தான்கள். ஆண்களை மயக்கி இச்சையைத் தூண்டி கெடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
    அதே நேரத்தில் 4 பொட்டாட்டி சரீயத் சட்டம் பேசும்போது பல்டி அடித்து ஆணுக்குத்தான் காம சக்கி கூடுதல் என்கின்றனர். அப்படிச் சொல்லும் போதும் சொற்களிலும் கூட நயவஞ்சகத்தனம். ஆணுக்குத்தான் காம “சக்தி” கூடுதலாம், பெண் “காமவெறி” பிடித்து அலைகிறாளாம். எது உண்மை? 50, 60 வயதானாலும் பிற பெண்களைக்கண்டு பல்லிளிப்பதும், விபச்சார விடுதிகளுக்கு ஓடுவதும் ஆண்களா, பெண்களா?
    டில்லி சத்தர்பஜார், மும்பை கிராண்ட் பஜார், கொல்கத்தா சோனாகாஞ்ச். இந்தியாவின் பிரபலமான விபச்சார பகுதிகள், இங்குள்ள ஒரு பெண் தினந்தோறும் குறைந்தது 6,7 பேர்கள் தம்மை புணர்வதால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்பவர்கள். (ஒரு சில மணிநேரங்களில் கூட 6,7 பேர்கள் இவர்களுடன் உறவுகொள்கின்றனர்) இப்படி ஒரு ஆண் ஒரு சில மணிநேரங்களில் 2, 3 பெண்களிடம்கூட உறவுகொள்ள முடியாது.
    உடல் வலிமை என்பது உண்மையில் பெண்ணுக்குத்தான் அதிகம். ஆணாதிக்கம் தன்னிடமுள்ள இயலாமையை அல்லது காமவெறியை மறைக்க பெண்களால் முடியாது என்று பெண்கள்மீது பழியைப் போடுகிறது. சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் போய் பாருங்கள். இரண்டு பெட்டாட்டிகாரர்கள்தான் நிறையபேர் நிற்பர். பெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனையில் உடலுறவு கொள்ளும்போது உறுப்பில் ஏற்படும் வலி என்பதைத் தவிர சிட்டுக்குருவி லேகியம் என்ற பிரச்சினையே இல்லை இதனை எளிதில் மருத்துவம் செய்துகொண்டு தீர்துதுவிடலாம். எங்கேயாவது சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் பெண்கள் மருத்தவம் செய்து கொள்வதை பார்த்துள்ளீர்களா? அல்லது சிட்டுக்குருவி லேகிய பெண் மருத்துவரைத்தான் பார்த்துள்ளீர்களா? ஆண்மைக் குறைவுக்கான விளம்பரத்தை பார்க்கும் நீங்கள் பெண்மைக்குறைவுக்கான விளம்பரத்தைப் பார்த்ததுண்டா?
    திருமணமான புது இளம் ஜோடிகளிடம் வேண்டுமானால் ஒருசில மாதங்கள் வரை நாளொன்றுக்கு சிலதடவைகள் உடலுறவு கொள்ளும் ஆர்வமும் சக்தியும் இருக்கலாம். இயல்பான குடும்ப வாழ்க்கையில் 30 வயதுக்குமேல் உள்ளவர்கள் தினசரி உடலுறவு கொள்வது என்பதே முடியாத ஒன்றே. காம உணர்வு என்பது அவரவர் உடல் திறன் (ஊட்டச் சத்து) மற்றும் பருவம் சார்ந்தது. இதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது.
    அது சரி. மாதவிலக்கு காலங்களில்கூட தனது மணைவிக்காக உடலுறவுகொள்வதை தவிர்க்க முடியாத விலங்கினமா மனிதன்? 4 மனைவி வைத்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாதவர்கள் தனது மனைவியின் மாதவிலக்கு காலங்களில் விபச்சார விடுதிக்கு போகலாம் என்று சட்டம் போட்டுடலாமா?
    3. மக்கள்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அதனால் மணமகன் கிடைக்காத பிரச்சனையை தீர்க்க 4 மனைவிகள் சட்டமே தீர்த்துவைக்கும் என்று கூறுகின்றனர்.
    இது உண்மையாக வேண்டுமானால் திருமணமாகாத 18 வயதுக்கு மேல் உள்ள பெண்ணும், 24 வயதுக்கு மேல் உள்ள ஆணும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் நின்று திருமணம் செய்ய முயற்சித்தால் இந்த எண்ணிக்கைப் பிரச்சனையாகலாம். இப்படிப்பட்ட நிலை எங்காவது உள்ளதா? உங்கள் ஊரில் உங்களுக்கு அக்கம் பக்கத்தில் பொண்ணு கிடைக்கவில்லை என்றும், மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் மணமக்களைத் தேடும் பெற்றோர்களைப் பார்க்கலாம். கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுவதற்கு காரணம் என்ன? தாம் விரும்பும் தகுதியில் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சனை. வரதட்சினையும் ஒரு பிரச்சனையாக உள்ளது.
    மக்கள்தொகைப் புள்ளிவிபரம் மணமக்களைப் பிரித்து திருமணத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக கூறுகிறதா? இதனடிப்படையில் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறுவது எதையாவதுச் சொல்லி ஏமாற்றுவதாகும். அப்படி அது உண்மையானால் ஆண்கள் அதிகம் என்றும், பெண்கள் குறைவு என்றும் புள்ளுவிபரம் கூறும் நாடுகளில், ஒரு பெண் 4 ஆண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று சரீயத் சட்டத்தை மாற்றிடலாமா?
    4. இதைப்போல சம உரிமை என்று பெண்கள் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று இசுலாமியர்கள் கூறும் சப்பைக்கட்டுகள்.
    “பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்று அடையாளம் காண முடியாது.’
    மரபணு தொழில் நுட்பம் இன்று எளிமையாகிவிட்டதால் இதுவரை ~தகப்பன் யார்~ என்று எப்படிக் கூறுவது என்று அலறிக் கொண்டிருந்தவர்களின் குரல் சுருதி குறைந்து டொய்ங்…. என்று இழுக்க ஆரம்பித்துள்ளது டிஎன்ஏ சோதனை மூலம் அறிந்து கொள்ளவேண்டுமானால் பொருளாதார வசதி வேண்டும். அது எல்லோராலும் முடியாது. முடிவுகள் தவறாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் புலம்புகின்றனர். பொருளாதாரப் பிரச்சனைதான் இனி காரணம் என்றால் பொருளாதார வசதியுள்ளப் பெண் 4 ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முடிவு தவறாகிவிட்டால்…. கற்பழிப்பு வழக்குகளில் எல்லாம் டிஎன்ஏ சோதனையை ஏற்றுக்கொள்வார்களாம். இதற்கு மட்டும் முடியாதாம்
    ஒரு குழந்தைக்கு தந்தை யார் என்று பெரியவேண்டிய அவசியம் என்ன? 1300 ஆண்டுகளுக்கு முன்பு மனித உழைப்பு முதன்மையான உற்பத்தி சக்கதியாக இருந்தது. அதனால் தனக்கு குழந்தை பெற்றுத் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்துகொண்டு தன்னிடம் பரிசுகளையும், உணவு மற்றும் தேவைகளையும் பெற்றுக்கொண்ட பெண் தமக்கு பெற்றுத்தராமல் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக “தந்தை” என்ற அடையாளம் அவசியமாக இருந்தது. ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிள்ளைகளை அவனது சகோதரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இன்றைய நிலை என்ன? ஒருவன் இறந்துவிட்டாலும் அல்லது மனைவியை தலாக் சொல்லிவிட்டாலும் குழந்தைகளின் நிலைமை என்ன? பெண்ணின் தலையிலேயே பெரும்பாலும் பொறுப்பாக்கப்டுகிறது. உறவினர்களோ முகத்தைக்கூட திருப்புவதில்லை.
    அனாதை ஆசிரமத்திற்கு செல்வோம். தாய், தகப்பன் யார் என்று கூடத் தெரியாத இலட்சக்கணக்கான பிள்ளைகள். இவர்கள் வளரவில்லையா, படிக்கவில்லையா, சமூகத்தில் வாழவில்லையா? தகப்பன் பெயர் இவர்களுக்கு எதற்கு?
    குழந்தைகளற்ற பெற்றோர்கள் பிற குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அக்குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கின்றனர். அப்படியிருக்க தன் குழந்தை என்று அடையாளம் தெரியாத குழந்தையின் நலத்தையும் பேண மனப்பக்குவமே தேவை. தந்தையின் பெய்ர் தேவையில்லை. இந்த மனப்பக்குவத்தை வளர்த்தால் குழந்தைகளுடன் மறுமணம் செய்துகொள்ளும் இளம் விதவைகளின் வாழ்வு இனிமையாக இருக்கும்.
    இதன்பொருள் பெண்கள் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நான் வாதிட வரவில்லை. பலதாரமணம் என்ற நாகரீக காலத்திலிருந்து ஒருதார மணம் என்ற புரட்சிகர காலத்திற்குள் அடி எடுத்துவைத்துள்ள நாம் பழையதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கான சப்பைகட்டுகளை கட்டிக்கொண்டிருக்கக் கூடாது.
    கொள்ளகை அளவில் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்களில் எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவன் 4 பெண்களைத் திருமணம் செய்துகொள்ளவதை ஏற்றுக்கொள்வதில்லை. பெண்ணைப்பெற்ற பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை. விவாதத்திற்காக வரட்டுத்தனமாக ஆதரிக்கும் பல ஆண்கள்கூட உண்மையில் 4 திருமணைம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இன்றைய மனமொன்றிய காதல் வாழ்க்கை தன் மனைவியை வெறும் உடலுறவுக்கான தேவை என்று பார்பதில்லை. சவூதிபோன்ற சில நாடுகளைத் தவிர வேறு எங்கும் இனிமேல் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.
    அதனல் இசுலாமியப் பெண்களே! உங்கள் கணவர் பிற ஒரு திருமணம் செய்துகொள்ள அனுமதிக்காதீர்கள். அதற்கு நபிவழி நிகழ்சியே உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. பலதாரமணச் சட்டத்தை எதிர்ப்பீர். புகாரி அவர்கள் சொல்வதுபோல தன்மானத்துடன் வாழ்வீர்!

  19. ஹிஜாப் (கோஷா- ஆண்களுக்கு முன் தோன்றாமல் திரைமறைவில் இருக்கும் நிலை) முறை அமலக்கப்பட்ட நிகழ்சி

    தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவி (மருமகள்) ஜைனப்பை ஒருவழியாக திருமணம் செய்த பிறகு அவருடன் தாம்பத்திய வாழ்கையைத் துவங்குவதன் அடையாளமாக ஒரு விருந்து முஹம்மது நபி அவர்களால், இரவு நேரத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்தில் உணவு தயாராவதற்கு முன்பே வந்து விட்ட சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) விருந்து முடிந்த பிறகும் செல்லாமல் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் போவதும் வருவதுமாக முஹம்மது நபி அவர்களின் “நிலைமை” புரியாமல் நடந்து கொள்கின்றனர். அவர்களை போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர் சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது நபி அவர்கள் மூன்றாம் முறையாக இறுதில் எழுந்து நிற்கிறார் சஹாபாக்களும் (நபித்தோழர்கள்) கலைந்து சென்று விடுகின்றனர்.

    புகாரி ஹதீஸ் : 4791

    அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனைப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை) சாடை காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள்….

    அவர் மணமகள் (மருமகள்?) இருக்கும் அறையை நோக்கிச் செல்கிறார். அனஸ் அவரை பின் தொடர்து செல்கிறார். ஆனால் திரையிட்டு அவரை (அனஸ் வீட்டினுள் செல்வதை) தடை செய்கிறார்.

    புகாரி ஹதீஸ் ஹதீஸ் : 4791

    அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

    …அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப் போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் இந்த (33-53 ஆவது) வசனத்தை அருளினான்.

    இவைகளை கண்ட அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை. உடனே வஹியை இறக்கி விட்டான்.

    முஃமீன்களே உணவுக்காக உங்களுக்கு அறிவிக்கப்படாதவரை-அதன் தயாரிப்பை எதிர்பார்த்தவர்களாக- நபியுடைய வீடுகளில் நீங்கள் பிரவேசிக்க வேண்டாம்; எனினும் நீங்கள் (உண்பதற்கு) அழைக்கப்பட்டால் அப்பொழுது பிரவேசியுங்கள். பிறகு உணவு அருந்தி முடிந்ததும் பேசுவதில் ஈடுபடாதவர்களாக களைந்து சென்றுவிடுங்கள்; நிச்சயமாக அது நபிக்கு நோவினை செய்வதாக இருக்கிறது (எனினும்) உங்களிடம் (அதனைச்) சொல்ல வெட்கப்படுகிறார்; அல்லாஹ்வோ உண்மையைச் சொல்ல வெட்கப்படமாட்டான்.…

    ( குர் ஆன் 33.53)

    அல்லாஹ்வின் வஹி எவ்வளவு விளையாட்டாக இருந்திருக்கிறது. இந்த வசனம் முஹம்மது நபி அவர்களின் வஹீ விளையாடலுக்கு ஒரு உதாரணம். மேலும் இவ்வசனத்தின் இறுதிப் பகுதி முற்றிலும் வேறொரு செய்தியை கூறுகிறது அதாவது அனஸ் வீட்டினுள் செல்வதை திரையிட்டு தடுக்கப்பட்டதன் காரணம்,

    …(நபியின் மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் கேட்பதானால் திரைக்கு பின்னாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். அது உங்களுடைய உள்ளங்களுக்கும் அவர்களுடைய உள்ளங்களுக்கும் பரிசுத்தமானதாகும். அல்லாஹ் உடைய ரசூலை நீங்கள் நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அவருக்குப் பின் எப்பொழுதுமே அவருடைய மனைவியரை நீங்கள் மணம் செய்து கொள்வதும் கூடாது- நிச்சயமாக அது அல்லாஹ் விடத்தில் (பாவத்தால்) மகத்தானது ஆகும்.

    ( குர் ஆன் 33.53)

    புகாரி ஹதீஸ் : பாகம் 7, எண் : 7421

    அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது.

    பர்தா தொடர்பான வசனம் ஜஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. அன்று நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்ததற்காக (வலீமா விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள்…

    மேற்கண்டவசனத்தின் இறுதிப்பகுதி நபியின் மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. அதாவது ஜைதை காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருமகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற நபியின் கவலையை அல்லாஹ் வஹியின் முலம் சரிசெய்தான்.

    சரி…ஜைத் என்ன ஆனார்?

    முஹம்மது – ஜைனப் திருமணம் நிகழ்ந்த அதே ஆண்டு, கிபி 629 ல் சுமார் 3000 பேர் கொண்ட சிறிய படையை முத்தா என்ற (தற்பொழுதைய ஜோர்டான்) பகுதிக்கு, சுமார் 200000 படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரும் ரோமானியப்படையை எதிர்கொள்ள அனுப்பினார். போரில் கொடியை பிடித்து படையை வழி நடத்தும் பொறுப்பை ஜைத்திடம் ஒப்படைத்திருந்தார். முஸ்லீம்கள் தோல்வியடைந்த அப்போரில் முதலில் கொல்லப்பட்டவர்களில் ஜைத்தும் ஒருவர்.

  20. அது மட்டுமா?ரஷ்யாவில் உள்ள அசல் கம்யுனிஸ்ட் பசி பட்டினியால் திண்டாடுகிறான் /இங்குள்ள உண்மை கம்யுனிஸ்ட் களோ ,இந்தியாவின் சுதந்திரத்தையும் சவூதி அரபியாவின் பொருளாதரத்தையும் அனுபவித்துக் கொண்டு பெயர் மாற்றம் செய்யக் கூட உழைக்காமல் கம்ப்யுட்டரில் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறான்.

  21. பாத்திமா[ரலி] அவர்கள் தங்க நகைகள் அணிய அனுமதி கேட்ட பொழுது முகம்மதி நபி[ஸல்] அதை மறுத்துவிட்டார்கள் .பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றை தனது மகளுக்கு அனுமதி மறுத்துவிட்டார்கள்.நகை இல்லாத ஏழைமக்களுக்காக தனது மகளை முன்மாதிரியாக வாழ வைத்தார்கள்.அது போல் தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை இருப்பினும் தனது தந்தையின் சொத்துக்களுக்கு அவர் வாரிசாக்கப் படவில்லைஎன்பதை நான் நாத்திகன் மனதிற் கொள்ளவும்

    ஒரு மனிதனுக்கு நான்கு திருமணம் கட்டாயம் அல்ல.இஸ்லாமிய திருமண சட்டப்படி ,அவள் தனது மகராக அவள் விருப்பம் போல் கேட்க அனுமதிக்கப் பட்டால் ஒரு திருமணம் பண்ணுவதே பெரிய கஷ்டமான காரியமாகிவிடும் .இப்போது தவ்ஹித் ஜமாத்தில் இருக்கும் சில இளைஞர்கள் திருமணம் வரும் பொழுது காணாமற் போகிவிடுகின்ற்றனர்.அவன் மகர் கொடுக்கவேண்டும் ,கல்யாண செலவுகளான சாப்பாட்டு செலவு ,மண்டப செலவு இப்படியான அனைத்து செலவுகளையும் மணமகன் ஏற்றுக் கொண்டால் தான் திருமணத்தில் கலந்து கொள்வோம்,இல்லையெனில் புறக்கணிப்போம் என்பது தவ்ஹித் ஜமாத்தின் உறுதியான் நிலைப்பாடாக உள்ளது.அனைத்து முஸ்லிம்களும் இது போன்ற உறுதியான நிலைபாடுகளின்படி செயல் பட்டால் ஒரு திருமணத்தையே இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பது புரியும்.இந்திய முஸ்லிம்கள் திருமணம் பண்ணும் வேளைகளில் இந்திய ,தமிழக நடைமுறைகளையும் திருமண ரத்து விவகாரத்தில் இஸ்லாமிய சட்டத்தையும் பின்பற்றிக்கொண்டு இஸ்லாத்தையும் ,இந்திய அரசுவையும் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.மேலும் இப்போதைய பொருளாதாரம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இப்போதைய ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க ஏற்றதாக இருக்காது என்பதும் அதற்கு முரணாக வாழ்ந்தால் இஸ்லாம் கொள்கை மீறல் ஏற்பட வழி வகுக்கும் என்பது இஸ்லாமியர்கள் அறியாமல் இல்லை.இஸ்லாம் ஒரு திருமணம் பண்ணக் கூடாது .இரண்டோ,அல்லது மூன்றோ ,அல்லது நான்கு திருமணம் களே செய்தே தீர வேண்டும் என்பது போல் எழுதி வருவது உங்களின் காழ்ப்புணர்வையே காட்டுகிறது.இனி வரும் காலங்களில் ஒருவனுக்கு ஒருத்திக்கு என்பது மாறாமல் இருக்குமஎன்றும் சொல்ல முடியாது. நிர்பந்தங்களில் இருமணம் புரியும் வாய்ப்பு இருப்பதை இஸலாம் விதிவிலக்காக தந்துள்ளது.இந்திய சராசரி மனிதனுக்கு மாற்றமாக முஸ்லிம்கள் இரு திருமணம் செய்ய வில்லை.ஆக இப்படி ஒரு குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து அங்கலாய்க்க வேண்டாம்

  22. பர்தா போடுவதற்கு இஸ்லாமியர் சொல்லும் அடிப்படையே தவறு.
    //33 : 33 வசனத்தில் ‘முகமதுவின் மனைவியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. … எப்போதெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வரலாமென வரையறை கொடுத்துள்ளார்.//

    மேலேயுள்ள மேற்கோள்களை வாசித்தால், பர்தா ஆண்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காக இல்லை; ஆனால் பெண்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்குத்தான் என்பது புரியும். பெண்ணை அப்படித்தான் இஸ்லாமும், குரானும் பார்க்கிறது.

    இன்னொரு கேள்வி: பெண்ணின் முகத்தை மட்டும் பார்த்தாலே காதலோ காமமோ ஆண்களுக்கு வராதா?பர்தாவைப் பற்றிய விவாதங்கள் இன்னும்நடந்து கொண்டே இருக்கின்றன. 1992-ல் ஈரானில் நடந்தவைகள் பற்றி New York Times தினசரியில் குறிப்பிடப்படும் செய்தி: பெண்களின் நிலை பற்றிய விவாதங்களில் அவர்கள் அணியும் துணிமணிகளே அதிக இடம் பெறுகின்றன. ஈரானின் 13 ஆண்டுகால போராட்டத்தில் இதற்கே அதிக இடம் கிடைத்தது. எது சிறந்த பர்தா என்பதே முக்கிய கேள்வி.போராட்டத்தின் ஆரம்பத்தில் தலைமையேற்ற Abod-Hassan Banisadr என்பவர் ஆராய்ச்சியின் முடிவில் பெண்களின் தலைமுடியில் இருக்கும் பிரகாசம் ஆண்களை மயக்கக் கூடியது என்றார். ( பெண்களின் கூந்தலுக்குத் தனி வாசனையிருக்கிறதா என்ற நம் சண்பகமாறன் என்னும் பாண்டிய மன்னனின் கேள்விக்கு இவரிடம் பதில் கேட்டிருக்கலாம்! ) இப்போராட்ட்த்தில் பல பெண்களுக்கு அவர்களின் ‘ஹிஜாபை’ வைத்து பலவித தண்டனைகள் கொடுக்கப்பட்டன.

    33 : 33 வசனத்தில் ‘முகமதுவின் மனைவியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. அடிப்படைவாதிகள் இது எல்லா இஸ்லாமியப் பெண்களுக்கும் சொல்லப்பட்டது என்றும், மித வாதிகள் அந்த வசனம் முகமதுவின் மனைவியருக்கு மட்டும் சொல்லப்பட்டது என்றும் வாதிப்பதுண்டு. இதன் போக்கிலேயே, Ghawji என்ற அடிப்படைவாதி எப்போதெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வரலாமென வரையறை கொடுத்துள்ளார். முகமதுவின் வசனம் ஒன்றில், ‘ஆணும் பெண்ணும் பேசும்போது ஷைத்தான் இருவருக்கும் நடுவில் தீயவற்றை வைத்து விடுவான்’ என்கிறார். (ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் sex தவிர வேறு ஒன்றுமேயில்லை போலும்!)

  23. இஸ்லாம் பெண்களுக்கு எதிரான ஒரு சமயம். பெண்களை எல்லா வகையிலும் – உடல், அறிவு, ஒழுக்கம் எல்லாவற்றிலும் கீழானவர்களாகவே மதிப்பிட்டு வந்துள்ளது. குரானின் வசனங்களும், ஹதீத்துகளிலும் இந்தக் கருத்துக்களே உள்ளன. (293)

    முகமது பெண்களைப் பற்றிச் சொல்லும் வசனம் : ’பெண்களை நல்லுறவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வளைந்த நெஞ்செலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்; ஆனால் அந்த எலும்பு வளைந்த ஒன்று. அதை நேராக்க நினைத்தால் ஒடிந்து விடலாம்’. ஆனால் ஒன்றும் செய்யாமல் வைத்திருந்தால் எப்போதும் வளைந்தே இருக்கும்.’(295)

    பெண்மையை, பெண்களைக் குறை சொல்லும் சில குரான் வசனங்கள் இவை:

    4 : 117; ….ஷைத்தானை அவர்கள் வணக்கத்துக்கு உரியவனாக எடுத்துக் கொள்கிறார்கள்.
    43 : 15 – 19;
    52 : 39;
    37 : 149-150;
    53 : 21 – 22
    53 : 27
    (43: 15-19; 52:39; 37: 149-150 – இந்த வசனங்களில் ‘…பெண்மக்களை அல்லாஹ் தனக்காகக் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? (37 : 153)என்றெல்லாம் கூறுவதற்குப் பொருளென்ன என்று புரியவில்லை …?)

    பெண்களை வெறுக்கும் இன்னும் சில வசனங்கள்:
    2 : 228; ஆண்கள் ஒரு படி பெண்களை விட உயர்ந்தவர்கள்.
    2 : 282: ஒரு ஆண் அல்லது இரு பெண் சாட்சி சொல்ல வேண்டும்.
    4 : 3; ‘…உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள்.’
    4 : 11: இரண்டு பெண்களுக்குச் சமமாக ஒரு ஆண் …
    4 : 34: ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்; ஆண்களை அல்லா உயர்வை அளித்துள்ளான்.
    4 : 43: ’…நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் …உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.’
    5 : 6 ’… பெண்களைத் தீண்டியிருந்தால்..தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்.’ ( ஏன் ஒரே விதமான கட்டளைகள் இரு இடத்தில் ..? ஜிப்ரேல் / அல்லா மறந்து இரு முறை சொல்லியதோ? )
    33 : 32, 33 நபியின் மனைவியருக்குத் தனிக்கட்டளைகள் ..
    35 : 53 ‘… நபியின் மனைவியரிடம் ஏதும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.’ (அடக் கடவுளே … நபியின் மனைவியர், மற்றைய ஆண்கள் – யார் மேலும் அல்லாவுக்கு நம்பிக்கையில்லை போலும்!)
    33 : 59 ‘நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் … தங்கள் துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும்.’ (ஓ! பர்காவின் ஆரம்பம் இங்குதான், இப்படித்தான் போலும்! )

    — ஒரு மனைவி கணவனுக்கு எப்போதும் …. மறுக்கவே கூடாது, அவள் குதிரையில் மேலே இருக்கும்போது கூட!! ( அடப்பாவமே ! இது ’புல்லானாலும் புருஷன்’ என்ற “உயர் தத்துவத்தை’ விடவும் மிகவும் ‘உயரத்தில்’ அல்லவா இருக்கிறது!!)

    — முகமது நரகத்தைக் கனவில் எட்டிப் பார்த்த போது அது முழுவதும் கற்பு தவறிய பெண்களால் நிறைந்திருந்தது. ( அப்போ .. அவர்களோடு தங்கள் கற்பைத் தவற விட்ட ஆண்கள் எங்கே?)

    — வீடு, பெண், குதிரை – இந்த மூன்றும் அபசகுனங்கள்.(நாங்கள் சகுனமே பார்ப்பதில்லை என்றல்லவா அவர்கள் சொல்வார்கள்!!??)

    இஸ்லாமிய மத நூல்கள் மட்டுமல்ல இஸ்லாமிய கலிஃபாக்கள், மதக் குருமார்கள், தத்துவ மேதாவிகள் எல்லோருமே பெண்களுக்கு எதிரானவர்களாகவே உள்ளார்கள். சான்றுகள்:

    ஒமார், இரண்டாம் கலிஃப்:
    — பெண்களை எழுதப் படிக்க அனுமதிக்காதீர்கள். ( கலிப் சொன்னதை இப்போது இவர்கள் ஏன் மீற ஆரம்பித்து விட்டார்கள்.)

    அலி, முகமதுவின் உறவினரும், நண்பரும் :
    — பெண்கள் என்றாலே தீமைதான்; அதனிலும் மோசம் என்னவெனில் அவர்கள் தேவையான தீமை.

    — பெண்களிடம் எந்த அறிவுரையையும் கேட்காதீர்கள்; அவர்களைப் பிற ஆண்களின் கண்களிடமிருந்து ஒளித்து வையுங்கள். (ஓ! பர்கா போடுவது பெண்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என்பதால்தானா??! நல்லது. ) அவர்களோடு அதிக நேரம் செலவிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாழ்த்தி விடுவார்கள். ( no chat ..நோ கடலை …ப்ளீஸ் !)

    — ஆண்களே, பெண்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்.

    — பெண்களுக்குக் கல்வி தருவது தீமையோடு கவலையைச் சேர்ப்பது போன்றது. (299)

    முகமதுவிற்குப் பின் வந்த மிகப் பெரிய இஸ்லாமியர் எனக் கருதப்படும் al-Ghazali (1058 – 1111) என்ற இஸ்லாமியத் தத்துவ அறிஞரின் The Revival Of The Religious Sciences என்ற நூலிலிருந்து இரு மேற்கோள்கள்:

    — பெண்கள் பெரிய ஏமாற்றுக்காரர்கள்; தவறானவர்கள்; கெட்ட குணம் நிறைந்தவர்கள்; தாழ்ந்த மனதுக்காரர்கள்.

    — ஆண்களுக்கு ஏற்படும் தாழ்வுகள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் பெண்களிடமிருந்தே வரும். (300)

    இஸ்லாம் பெண்களை அறிவு, பண்பு, உடல்கூறு இவைகளில் மிகவும் பலவீனமானவர்கள் என்கிறது. ( ஓ! இதனால் தான் அடிக்கடி நம் பதிவர்கள் பெண்கள் உடலளவில் மிகவும் பலவீனமானவர்கள் என்று அடிக்கடி எதிரொலிக்கிறார்களோ! )
    முகமது ‘ பெண்கள், அடிமைகள்’ இருவருமே ‘பாவப்பட்டவர்கள்’ என்கிறார்.

    பெண்களைத் தாழ்த்தும் இன்னும் சில ஹடீத்துகள்:

    — ஒரு பன்றி தன்மேல் உரசிச்செல்வதை அனுமதித்தாலும், ஓர் ஆண் தான் அனுமதிக்காத ஒரு பெண்ணின் முழங்கை கூட தன் மேல் படுவதை அனுமதிக்கக் கூடாது.

    — கறுப்பு நாய், ஒரு பெண், ஒரு கழுதை இதில் எது வந்தாலும் உங்கள் தொழுகையை நிறுத்திக் கொள்ளுங்கள். (301) (நாங்கள் சகுனமே பார்ப்பதில்லை என்றல்லவா அவர்கள் சொல்வார்கள்!!??)

    பாலினத்து வேறுபாடுகள்:

    இஸ்லாம் ஒரு பாலின மையம் கொண்ட மதம். ஆனால் இதில் அவளது பாலினத் தேவைகள் கணக்கில் இல்லை. இஸ்லாமியக் குரு ஒருவர், திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்புக்கள் மேல் முழு ஆதிக்கம் ஒரு ஆண் செலுத்த முடியும் என்கிறார். ஆனால், அவனது உறுப்புகள் அதுபோல் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் உரித்தானதல்ல. சுரா 4:3-ல் ஆணுக்குப் பல பெண்களை குரான் அளிக்கிறது.

    4 : 129 — ”மனைவியருக்கு இடையே முழுக்க முழுக்க நீதியாக நடந்து கொள்ள நீங்கள் விரும்பினாலும், அது உங்களால் முடியாது.” இப்படி உண்மையைச் சொன்னாலும் ஏன் குரான் பலதார மணத்தை ஒத்துக் கொள்கிறது?

  24. //சவூதி அரபியாவின் பொருளாதரத்தையும் அனுபவித்துக் கொண்டு பெயர் மாற்றம் செய்யக் கூட உழைக்காமல் கம்ப்யுட்டரில் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறான்.//

    காபிர்களை திட்டிக்கொண்டே காபிர்களின் அறிவியலைக் கொண்டு குரானுக்கு விளக்கம் கொடுத்து குரானை வியந்தோதிக்கொண்டிருக்கிறார்கள் மூமின்கள். இதுவும் ஒரு பொழப்பா.

  25. //ஆண் 4 பெண்களை ஒரே நேரத்தில். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இசுலாமியச் சட்டம் உள்ளது. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொள்வதை இன்று ஒருபோதும் விரும்புவது இல்லை.//

    நாத்திக அண்ணே!
    உங்கட நீண்ட நெடிய கருத்த படிச்சு பயந்து போயிட்டண்ணே, ஒங்க பில்டப்ப பாத்தா எல்லா முஸ்லிம்களும் கண்டிப்பா 4 திருமணம் செஞ்சே ஆகனும்கற கட்டாயத்துல அலையறது போல பம்மாத்து வேல காட்டிருக்கீங்க… இப்படி நீட்டி முழக்கி மாஞ்சு, மாஞ்சு, எழுதுனதுக்கு பதிலா அந்த குர் ஆன் வசனம் என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் யோசிச்சா, உங்க எனர்ஜியை வீனாக்காம இருந்திருக்கலாம்.

    இஸ்லாத்தில் ஐந்து கடமை இருக்கு, அதை சரிவர நிறைவேற்றாவிட்டால் முஸ்லிமாக இருந்தாலும் நரக தண்டனை உண்டு அது என்ன?

    தொழுகை: ஒரு முஸ்லிம் ஐந்து வேளை கண்டிப்பாக தொழுகனும், இல்லை என்றால் அவனுக்கு நரக தண்டனை உண்டு.

    நோன்பு : ஒரு முஸ்லிம் வருடத்தில் ஒரு மாதம் கண்டிப்பாக நோன்பு வைக்கனும், மீறுபவர்களுக்கு தண்டனை உண்டு.

    ஜகாத் : தனது தேவைக்கு மேல் பணவசதி உள்ளவர்கள் கட்டாயம் இந்த ஏழை வரியை கொடுத்தேயாகனும், இல்லை என்றால் அவனுக்கு தண்டனை உண்டு.

    இப்ப சொல்லுங்கண்ணே, ஒரு முஸ்லிம் நான்கு திருமணம் செய்யாவிட்டால், அவனை நரகத்தில் போடுவேன், தண்டனை கொடுப்பேன்னு குர் ஆனில் எங்காவது வசனம் இருக்கா? அல்லது நபிகள் சொன்னார் என ஹதீஸில் எங்கேயாவது உள்ளதா? அப்படி இருந்தா உடனே எடுத்து விடுங்க…

    4:3. உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ, “ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).”

    4:129. (முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்.

    (குறிப்பு: நாத்திக அண்ணாச்சி புரிந்து கொள்வதற்காக இரண்டு வசனத்திலும் முக்கிய பகுதியை மட்டும் குறிப்பிட்டுள்ளேன், முழு வசனமும் எங்கேன்னு கேக்கப்படாது.)

    இரு வசனங்களும் கூறும் உண்மை என்னன்னு புரியுதா(நாத்திக)ண்ணே, நான்கிற்கு அனுமதி கொடுத்த இறைவன் ஒன்னுதான் பெஸ்டுங்கறான்.

    இவன்
    நான் ஆத்திகன்

  26. {பலதாரமணம் என்ற நாகரீக காலத்திலிருந்து ஒருதார மணம் என்ற புரட்சிகர காலத்திற்குள் அடி எடுத்துவைத்துள்ள நாம் பழையதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கான சப்பைகட்டுகளை கட்டிக்கொண்டிருக்கக் கூடாது.}

    என்னங்கண்ணே, நாகரீக காலம், புரட்சிகர காலம்னு கதை விடறீங்க… அன்றைய புராண காலத்துலருந்து இன்றைய நாகரீக காலம் வரை பலதாரமணம் என்பது சப்ப மேட்டரு, இதுவல்லாம சின்னவீடு, செட்டப்பு, வைப்பாட்டி, கூத்தியான்னு, நம்மாளுங்க வகை வகையா வச்சிருக்காங்க மனைவி என்ற அங்கீகாரமின்றி, இதெல்லாம் உங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்ல, ஆனா இஸ்லாம் (மனைவி என்ற ஸ்தானத்தில் வச்சுக்கோ என)அனுமதிக்கும் பலதாரமணம் தான் உங்களுக்கு பிரச்சினை.

    {கொள்ளகை அளவில் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்களில் எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவன் 4 பெண்களைத் திருமணம் செய்துகொள்ளவதை ஏற்றுக்கொள்வதில்லை. பெண்ணைப்பெற்ற பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை. விவாதத்திற்காக வரட்டுத்தனமாக ஆதரிக்கும் பல ஆண்கள்கூட உண்மையில் 4 திருமணைம் செய்துகொள்ள விரும்புவதில்லை.}

    சூப்பரண்ணே, மேலே உள்ள ஒங்க பதிலில் இருந்து என்ன விளங்குது, எந்த முஸ்லிமும் 4 திருமணம் செய்யவில்லை, ஏன் செய்து கொள்ளவில்லை?
    இன்னுமா ஒங்களுக்கு பிரியல….

    குர் ஆனில் குறிப்பிடும் 4 திருமணம் என்பது ஒரு அனுமதியே அன்றி கட்டாய கடமை அல்ல.

    இத வெளங்கியிருந்தா இம்மாம்ம்ம்ம் பெரிய பில்டப் பின்னுட்டம் தேவையில்ல நாத்திகண்ணே!.

  27. பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லாத‌ கால‌த்தில் இஸ்லாம் பெண்க‌ளுக்கு சொத்துரிமையை குறைவாக‌வேனும் வ‌ழ‌ங்கியிருக்கிற‌தே இது போற்ற‌ப்ப‌ட‌வேண்டிய‌தில்லையா? இஸ்லாத்திற்கு முன்பு பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லை இஸ்லாம்தான் அதை வ‌ழ‌ங்கிய‌து என்று சொல்வ‌து மோச‌டியான‌து. முகம‌து ந‌பியின் முத‌ல் ம‌னைவி பெய‌ர் க‌தீஜா. ம‌க்கா ந‌க‌ரின் மிக‌ப்பெரும் செல்வ‌ந்த‌ர். அரேபியாவின் ப‌ல‌ப‌குதிக‌ளுக்கும் சென்று வியாபார‌ம் செய்ய‌ ப‌ல‌ வ‌ணிக‌ர்க‌ளை வேலைக்கு அம‌ர்த்தியிருந்த‌வ‌ர். அப்ப‌டி ஒருவ‌ர்தான் முக‌ம‌து ந‌பி. க‌தீஜாவின் செல்வ‌த்தோடு ஒப்பிட்டால் முக‌ம‌து ந‌பி ப‌ர‌ம‌ ஏழை. இவ‌ர்க‌ள் இருவ‌ரும் திரும‌ண‌ம் செய்து ப‌ல‌கால‌ம் க‌ழிந்த‌ பின்புதான் இஸ்லாத்தின் முத‌ல் வேத‌ வெளிப்பாடே வ‌ருகிற‌து. வ‌ர‌லாறு இப்ப‌டி இருக்கையில் எந்த‌ப்பொருளில் இஸ்லாம்தான் இல்லாதிருந்த‌ சொத்துரிமையை பெண்க‌ளுக்கு வ‌ழ‌ங்கிய‌து என்று கூறுகிறார்க‌ள். க‌தீஜா போல‌ பொருளிய‌ல் செல்வாக்குள்ள‌ ஒரு பெண்ணை 1400ஆண்டுக‌ள் க‌ட‌ந்த‌ நிலையில் இன்று காண‌முடிய‌வில்லை என்ப‌தே உண்மை.

    இவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ சொத்துக்க‌ளை பிரிப்ப‌தை விரிவாக‌ பேசும் அல்லாவுக்கு, முக்கால‌மும் உண‌ர்ந்த‌ எல்லாம் தெரிந்த‌ ஞான‌மிக்க‌ அல்லாவுக்கு த‌னிச்சொத்துடமைதான் உல‌க‌த்தின் அனைத்துப்பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் ஆணாதிக்க‌த்திற்கும் மூல‌கார‌ண‌ம் என்ப‌து தெரியாம‌ல் போன‌தேனோ? இல்லை இற‌ந்த‌த‌ற்குப்பின்னால் விண்ணில் கிடைக்க‌விருப்ப‌தாக‌ த‌ன்னால் ந‌ம்ப‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் சொர்க்க‌த்தை த‌னிச்சொத்துரிமையை ஒழித்து ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும்போதே ம‌ண்ணிலேயே பெற்றுவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌வா?

    விவாக‌ர‌த்துரிமை: பிடிக்காத‌ ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்ய‌முடியாம‌லும், வேறு திரும‌ண‌மும் செய்ய‌முடியாம‌லும் கொடுமைப்ப‌டுத்துவ‌தும் கொலை செய்வ‌தும் ந‌ட‌ந்து கொண்டிருக்கும் இந்த‌ நாட்க‌ளில், பெண்க‌ளுக்கேகூட‌ அந்த‌ உரிமையை வ‌ழ‌ங்கி பெண்க‌ளின் வாழ்வில் க‌ண்ணிய‌த்தையும் ம‌ல‌ர்ச்சியையும் ஏற்ப‌டுத்திய‌து இஸ்லாம். பெண்ணிய‌ம் ப‌ற்றி பேசும்போதெல்லாம் இஸ்லாமிய‌வாதிக‌ள் த‌வ‌றாம‌ல் எடுத்துவைக்கும் வாத‌மிது. இது மெய்தானா? ஆண்க‌ளுக்கு த‌லாக் என்றும் பெண்க‌ளுக்கு குலாஉ என்றும் இர‌ண்டுவித‌மான‌ விவாக‌ர‌த்துமுறைக‌ளை இஸ்லாம் சொல்கிற‌து. ஆண் த‌ன் ம‌னைவியை பிடிக்க‌வில்லையென்றால் மூன்றுமுறை த‌லாக் என்ற‌ வார்த்தையை சொல்லிவிட்டால் விவாக‌ர‌த்து ஆகிவிட்ட‌தாக‌ப்பொருள். இதை ஒரே நேர‌த்தில் சொல்ல‌ முடியாது, கால‌ இடைவெளிவிட்டு ஒவ்வொரு முறையாக‌ சொல்ல‌வேண்டும். முத‌ல் இர‌ண்டு முறை த‌லாக் சொன்ன‌பிற‌கு சில‌ நிப‌ந்த‌னைக‌ளுக்கு உட்ப‌ட்டு விரும்பினால் மீண்டும் சேர்ந்து கொள்ள‌லாம். ஆனால் மூன்று முறை கூறிவிட்டால் சேர‌முடியாது(ஆனால் மூன்று முறை அல்ல‌ முத்த‌லாக் என்ற‌ ஒற்றை வார்த்த‌யிலேயே ப‌ல‌ பெண்க‌ள் வாழ்க்கையிழ‌ந்து விர‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌துதான் ந‌டைமுறை) இதை ஆண் த‌ன் குடும்ப‌த்திற்குள்ளாக‌வே முடித்துக்கொள்ள‌முடியும். ஆனால் பெண் குலாஉ முறையில் க‌ண‌வ‌னை விவாக‌ர‌த்து செய்ய‌வேண்டுமென்றால் ஊர்த்த‌லைவ‌ரிட‌ம்(அல்ல‌து நீதிம‌ன்ற‌ம்)
    முறையிட்டு பெற்றுக்கொண்ட‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுத்துவிட்டு விவாக‌ர‌த்தைப் பெற‌வேண்டும். ஏற்க‌ன‌வே நான்கு ம‌னைவிவ‌ரை வைத்துக்கொள்ள‌ (கூடுத‌லாக‌ எத்தைனை அடிமைப்பெண்க‌ள் என்றாலும்) அனும‌தி உள்ள‌ நிலையிலும் ஆண்க‌ளுக்கு கால‌ அவ‌காச‌ம் (மூன்று த‌லாக்)அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால் பெண்ணுக்கோ ஊர்த்த‌லைவ‌ரிட‌ம் முறையிட்டு திரும‌ண‌த்தின் போது பெற்ற‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுக்க‌ச் ச‌ம்ம‌தித்தால் அந்த‌க்க‌ண‌மே விவாக‌ர‌த்து. அதாவ‌து உரிமை கொடுப்ப‌தைபோல் கொடுத்துவிட்டு விளைவுக‌ளைக்கொண்டு பெண்க‌ளை மிர‌ட்டுகிற‌து. எச்ச‌ரிக்கை க‌ண‌வ‌னை எதிர்த்தால் ம‌ண‌வாழ்வையும் இழ‌ந்து, பெற்ற‌ ப‌ண‌த்தையும் இழ‌ந்து வேறு வாழ்க்கைத்துணையைத்தான் தேட‌வேண்டிய‌திருக்கும். என‌வே க‌ண‌வ‌னுக்கு அஞ்சி ந‌ட‌ந்துகொள். ஆணுக்கோ ம‌னைவிய‌ரும் அடிமைப்பெண்ணும் இருக்க‌ தெவைப்ப‌ட்டால் அடுத்த‌ ம‌ண‌முடிக்க‌ விவாக‌ர‌த்துப்பெற்ற‌ ம‌னைவி திரும்ப‌க்கொடுத்த‌ ப‌ண‌மும் இருக்க‌ எல்லா வ‌ச‌திக‌ளும் ஆணுக்குத்தான், பெண்ணுக்கு எதிர்கால‌ம் குறித்த‌ ப‌ய‌ம் ம‌ட்டும்தான். பெண்க‌ளுக்கான‌ விவாக‌ர‌த்தின் பின்னே ஆணுக்கு அடிமைப்ப‌ட்டுக்கிட‌க்க‌வேண்டும் என்ப‌துதான் ம‌றைமுக‌மாக‌ தொக்கி நிற்கிற‌து. ஆணும் பெண்ணும் அதாவ‌து க‌ண‌வ‌னும் ம‌னைவியும் பிண‌ங்கியிருக்கும் கால‌த்தில் ஆண்விருப்ப‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே இணைந்து வாழ‌முடியும். பெண்ணின் விருப்ப‌ம் இந்கே ஒரு பொருட்டில்லை. “இருவ‌ரும் ந‌ல்லிண‌க்க‌த்தை விரும்பினால் அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை திரும்ப‌ச்சேர்த்துக்கொள்ளும் உரிமை ப‌டைத்த‌வ‌ர்க‌ள்….” குரான் 2:228. இதில் என்ன‌ க‌ண்ணிய‌மும் ம‌ல‌ர்ச்சியும் இருக்கிற‌து. ச‌ரி குழ‌ந்தைக‌ள் இருக்கும் நிலையில் விவாக‌ர‌த்தானால் குழ‌ந்தை யாருக்கு சொந்த‌ம்? ச‌ந்தேக‌மில்லாம‌ல் ஆணுக்குத்தான். ஆண்க‌ளுக்குத்தான் வாரிசுரிமையே த‌விர பெண்ணுக்க‌ல்ல‌. ஆணைப்பொருத்த‌வ‌ரை பெண் ஒரு போக‌ப்பொருள் தான். விவாக‌ர‌த்து ச‌ம‌ய‌த்தில் பால்குடி குழ‌ந்தை இருந்தால் குழ‌ந்தை பால் குடிப்ப‌த‌ற்கு ப‌ண‌ம் கொடுக்க‌ச்சொல்லி தாய்மையை இழிவுப‌டுத்துகிற‌து குரான். அத‌னால்தான் குரான் கூறுகிற‌து “உங்க‌ள் ம‌னைவிய‌ர் உங்க‌ளின் விளைநில‌ங்க‌ள், உங்க‌ள் விளைநில‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் விரும்பிய‌வாறு செல்லுங்க‌ள்” குரான்2:223. த‌ங்க‌ம், வெள்ளி, குதிரை போன்று பெண்க‌ளும் ஆண்க‌ளுக்கு இவ்வுல‌கின் வாழ்க்கை வ‌ச‌திக‌ள். “பெண்க‌ள்,ஆண்ம‌க்க‌ள், திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ த‌ங்க‌ம், வெள்ளியின் குவிய‌ல்க‌ள், அழ‌கிய‌ குதிரைக‌ள், கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் விளைநில‌ங்க‌ள் ஆகிய‌ ம‌ன‌விருப்ப‌ம் ஏற்ப‌டுத்தும் பொருட்க‌ளை நேசிப்ப‌து ம‌னித‌ர்க‌ளுக்கு க‌வ‌ர்சியாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவை இவ்வுல‌க‌ வாழ்க்கையின் வ‌ச‌திக‌ள்….” குரான் 3:14 இதுதான் ம‌ண‌வாழ்வில் இஸ்லாம் பெண்ணிற்கு த‌ந்துள்ள‌ உரிமை. இவைஎல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ள் செய்வ‌த‌ற்கும், அடிமைப்பெண்க‌ளை ‘வைத்து’க்கொள்வ‌த‌ற்கும் ஆண்க‌ளுக்கு இஸ்லாம் ஏற்ப‌டுத்தியிருக்கும் நிப‌ந்த‌னை த‌குதி என்ன‌ தெரியுமா? ப‌ண‌ம். உன‌க்கு வ‌ச‌தியிருந்தால் புகுந்து விளையாடு என்ப‌துதான்.ம‌ஹ‌ர் கொடுக்கும் வ‌ச‌தியிருந்தால் திரும‌ண‌ம் இல்லையேல் நோன்புவைத்துக்கொள். இதில் என்ன‌ பெண்ணுரிமை இருக்கிற‌து? முக்கிய‌மான‌ செய்திக்கு வ‌ருவோம். இஸ்லாத்திற்கு முன்னால் பெண்ணிற்கு விவாக‌ர‌த்துரிமையோ ம‌றும‌ண‌ உரிமையோ இருந்த‌தில்லையா? மீண்டும் க‌தீஜா பிராட்டியின் வர‌ல‌ற்றுக்கு திரும்ப‌லாம், முக‌ம‌து ந‌பிக்கு க‌தீஜா முத‌ல் ம‌னைவி அனால் க‌தீஜாவுக்கு முக‌ம்ம‌து ந‌பி…..? மூன்றாவ‌து க‌ண‌வ‌ர். எந்த‌ அடிப்ப‌டையில் இவ‌ர்க‌ள் இஸ்லாம்தான் பெண்ணுக்கு விவாக‌ர‌த்துரிமையும், ம‌றும‌ண‌ம் செய்துகொள்ளும் உரிமையும் அளித்த‌து என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்க‌ள்?

    ஜிஹாப் எனும் பெண்க‌ளுக்கான‌ ஆடை(ப‌ர்தா): ஆண்க‌ளின் காம‌ப்பார்வையிலிருந்து பெண்க‌ள் த‌ங்க‌ளை காத்துக்கொள்ள‌ இஸ்லாம் வ‌ழ‌ங்கிய‌ கொடை இந்த‌ ப‌ர்தா எனும் ஆடை என்ப‌து இஸ்லாமிய‌ வாதிக‌ளின் வாத‌ம். அணியும் ஆடைக‌ள் தொட‌ர்பாக‌ ஆண்க‌ளுக்கு குறிப்பிட‌த்த‌குந்த‌ க‌ட்டுப்பாடு எதியும் வ‌ழ‌ங்காத‌ இஸ்லாம் பெண்க‌ளுக்கு அனேக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்துள்ள‌து. பெற்றோர்க‌ள் க‌ண‌வ‌ன் உட்ப‌ட்ட‌ நெருங்கிய‌ சில‌ உற‌வின‌ர்க‌ளை த‌விர‌ ஏனைய‌வ‌ருக்கு த‌ங்க‌ள் ஆடை அல‌ங்கார‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்த‌க்கூடாது. இருக்க‌மான‌ ஆடைக‌ளை அணிய‌க்கூடாது. தோலின் நிற‌ம் தெரிய‌க்கூடிய‌ அல்ல‌து தோலின் நிற‌த்திலுள்ள‌ ஆடைக‌ள் அணிய‌க்கூடாது. முக‌ம் முன்கைக‌ள் த‌விர‌ ஏணைய‌ பாக‌ங்க‌ள் அனைத்தும் ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வேண்டும் இப்ப‌டிப்ப‌ல‌. பெண்ணை பாலிய‌ல் ப‌ண்ட‌மாக‌ப்பார்ப்ப‌த‌ன் நீட்சிதான் இது. ஆணின் காம‌ப்பார்வைக்கு நான்கு ம‌னைவிக‌ளையும் கூடுத‌லாக‌ அடிமைப்பெண்க‌ளையும் த‌ந்துவிட்டு அவ‌ன் பார்வையிலிருந்து த‌ப்பிக்க‌ பெண்க‌ளை க‌வ‌ச‌ம‌ணிய‌ச்சொல்வ‌து குரூர‌மான‌ ந‌கைச்சுவை. இப்ப‌டிக்கூறுவ‌த‌ன் மூல‌ம் இன்றைய‌ முத‌லாளித்துவ‌ உல‌கின் பெண்ணை காட்சிப்பொருளாக்கும் சீர‌ளிவுக்க‌லாச்சார‌த்திற்கான‌ ஆத‌ர‌வு என‌ யாரும் த‌வ‌றாக‌ எண்ணிவிட‌லாகாது. பெண்ணின் ஆடையை ஆணின் வ‌க்கிர‌ப்பார்வை தீர்மானிக்க‌லாகாது என்ப‌துதான். முழுக்க‌ முழுக்க‌ ம‌றைத்துவிட்டு ஒற்றை விர‌ல் ம‌ட்டும் தெரிந்தாலும் அதையும் வெறித்துப்பார்க்க‌வைப்ப‌து ஆணின் வ‌க்கிர‌மேய‌ன்றி பெண்க‌ளின் உட‌ல‌ல்ல‌. த‌வ‌று ஆண்க‌ளிட‌ம் த‌ண்ட‌னை பெண்க‌ளுக்கா? பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க்கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா? பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம்? ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌துபோல் தைத்துக்கொள்ள‌வேண்டும் என‌த்திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா?

    பொதுவாக‌ ஆணின் பாலிய‌ல் வெறி அல்ல‌து அதீத‌ பாலிய‌ல் உண‌ர்வு என்ப‌து ச‌மூக‌த்திலிருந்து வ‌ருவ‌து. உட‌லுற‌வு என்ப‌து இன‌ப்பெருக்க‌த்திற்கான‌து என்ற‌ இய‌ற்கையை தாண்டி அது இன்ப‌மாக‌ நுக‌ர்வாக‌ ஆன‌து தான் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கான‌ தொட‌க்க‌ப்புள்ளி. எல்லாம் தெரிந்த‌ ஆண்ட‌வ‌ன் இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்துதான் அந்த‌க்குற்ற‌த்தை பார்த்திருக்க‌வேண்டும். இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்து தான் தீர்வை தொட‌ங்கியிருக்க‌வேண்டும். ஆனால் ஆணின் காம‌ உண‌ர்வை இன்ப‌ நுக‌ர்வாக‌ அங்கீக‌ரித்துவிட்டு அதிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ பெண்க‌ளுக்கு ஆடைக்க‌ட்டுப்பாடு விதிப்ப‌து எந்த‌ வ‌கையில் பெண்க‌ளுக்கு க‌ண்ணிய‌த்தை த‌ரும் என்று ம‌த‌வாதிக‌ள் கூற‌வேண்டும்.

    சாட்சிய‌த்தில் பெண் ஆணில் பாதி(2:282), போர்க்கைதிக‌ளோடு உற‌வுகொள்ள‌ அனும‌தி(33:50), ம‌னைவியை அடிப்ப‌த‌ற்கு அனும‌தி(4:34), க‌ண‌வ‌ன் உற‌வுக்கு அழைத்து ஏதாவ‌து கார‌ண‌த்தால் ம‌னைவி ம‌றுத்தால் விடியும் வ‌ரை வான‌வ‌ர்க‌ளால் ச‌பிக்க‌ப்ப‌டுவாள்(புகாரி) போன்று பெண்ணை இழிவுப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ள் குரானிலும் ஹ‌தீஸிலும் ஏராள‌ம் உண்டு. இவைக‌ளையெல்லாம் ம‌ற‌ந்துவிட்ட‌ ந‌ண்ப‌ர் டென்தாரா பைபிளின் வ‌ச‌ன‌ங்க‌ளை சுட்டிக்காட்டியுள்ளார். பெண்ணை ஆணாதிக்க‌த்திற்கு ப‌லியாக்கும் பிற்போக்குத்த‌ன‌த்திற்கு எந்த‌ ம‌த‌மும் விதிவில‌க்க‌ல்ல‌. ஆணோ பெண்ணோ ந‌ம்பிக்கை கொண்டு ந‌ல்ல‌ற‌ம் செய்தால் அவ‌ர்க‌ளை ம‌கிழ்ச்சியான‌ வாழ்க்கை வாழ‌ச்செய்வோம். அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌த‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ளின் கூலியை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குவோம்(16:97) என்ப‌ன‌போன்ற‌ ஆணையும் பெண்ணையும் பொதுவாக‌ பாவிப்ப‌து போன்று தோற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ளும் குரானில் உண்டு. ஆண், பெண்ணின் ந‌ல்ல‌ற‌ம் எது என்று பார்த்தால் அங்கே பேத‌ம் ப‌ல்லிளிக்கிற‌து.

    பெண்க‌ளுக்கான‌ க‌ண்ணிய‌மும், ம‌திப்பும் காக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால், ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டும். ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால் த‌னியுட‌மை த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டும். த‌னியுட‌மையை த‌க்க‌வைத்துக்கொண்டு பெண்ணிய‌ம் பேச‌முடியாது.

  28. நான் நாத்திகன் ,உங்களது கருத்துக்கள் அத்தனையும் முழுமையாக செங்கொடி கருத்துக்களே நகலாக வந்துள்ளது இந்த லின்க்களுக்கு அரை குறையாக பதில் இல்லாமல் முழுமையாக பதில் அளியுங்கள்
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/63-manaiviyar-vilai-nilangal/
    nlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/66-vivakaraththu/
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/107/
    பெண்கள்,ஆண்மக்கள் ,தங்கம் ,வெள்ளி குவியல்கள் ,அழகிய குதிரைகள்,கால் நடைகள்,மற்றும் விளைநிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கபட்டுள்ளது .”33:14
    இங்கே மனிதர்கள் என்பவர்கள் ஆணும் பெண்ணும் அடங்குவார்கள்.ஆண்களுக்கு பெண்களை கவர்ச்சியாகவும் ,பெண்களுக்கு ஆண்மக்கள் ,தங்கம் கவர்ச்சியாகவும் மற்றவைகளை பொதுவிலும் கூறியுள்ளான் .ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு இந்த வசனம் சான்றாக உள்ளது

  29. நான் நாத்திகன் கீழ்கண்ட வசனங்களை நான் காட்டியுள்ள சுட்டியுடன் ஒத்து பாருங்கள்
    2 : 228; ஆண்கள் ஒரு படி பெண்களை விட உயர்ந்தவர்கள்.
    2 : 282: ஒரு ஆண் அல்லது இரு பெண் சாட்சி சொல்ல வேண்டும்.

    4 : 11: இரண்டு பெண்களுக்குச் சமமாக ஒரு ஆண் …
    4 : 34: ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்; ஆண்களை அல்லா உயர்வை அளித்துள்ளான்.
    http://www.ethirkkural.com/2011/03/blog-post.html

  30. பெண்களை அடிமைப்படுத்துவது என்பது மத ரீதியாக வளர்த்தெடுக்கப்படுகிறது. பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போன மதங்களுக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. பிற்போக்குத்தனத்தில் கட்டுண்ட மதங்கள் அனைத்தும் ஒன்றுபடுவது ஒரு விசயத்தில்தான் – பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும். இதனைச் சுட்டிக்காட்டினால், இசுலாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள் இசுலாம் மதத்தலைவர்கள். உண்மையில், பெண்களுக்குச் சில உரிமைகளை இசுலாம் வழங்குவதாகவும், ஒரு சில இனத்தவரின் பழக்க வழக்கங்களும், பெண்ணடிமைத்தனமும்தான் இந்நிலைமைக்குக் காரணம் என்றும் கூறுகின்றனர். முகமது நபி சில உரிமைகளைப் பெண்களுக்கு வழங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

    எடுத்துக்காட்டாக, பிறந்த பெண் குழந்தைகளை வேண்டாத குழந்தையென்று மண்ணில் புதைக்கும் வழக்கத்தை அவர்தான் தடை செய்ததாகவும் கூறுகிறார்கள். அதோடு, குரான் அடிப்படையில் பெண்களுக்கு சொத்துரிமையும், பாலியல் ரீதியான சுதந்திரமும் இருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்காத, சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பாரம்பரியம் என்று சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தோடு ஒப்பிடுகையில் இசுலாம் பெண்களுக்கு இவ்வுரிமைகளை வழங்கியிருப்பது உண்மைதான்.

    ஆனாலும் இவ்வுரிமைகளினால் பெண்களுக்கு சம உரிமையோ, குரான் படி பெண்களின் பெண்ணடிமைத்தனம் முற்றிலும் களையப்படவோ இல்லையென்றுதான் கூற வேண்டும். இசுலாமைப் பொறுத்தவரைக்கும் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் மற்றும் முசுலீம் அல்லாத பிற சமய மக்கள். இதில் பெண்கள் என்பவர்கள் ஒரு முசுலீம் ஆணில் பாதிக்குச் சமம். ஒரு பெண், ஆணுக்குக் கொடுக்கப்படும் சொத்துரிமையில் பாதியைத்தான் பெறுவாள் என்பதே இதற்குச் சான்று. ஒரு பெண் கீழ்படியவில்லை அல்லது கண்ணியமற்ற முறையில் நடந்துக்கொள்வதாக தெரிந்தால், ஆண் அவளை அதட்டிக் கேட்கலாம்; உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.

    குரானின் (சுரா 4:34) படி, ஆணின் கையிலேதான் பெண்ணைக் குறித்த முழு அதிகாரமும் இருக்கிறது. பெண்ணைப் பராமரிப்பதிலேயே ஆண் தனது செல்வத்தைச் செலவழிப்பதால் பெண்ணை விட ஆணை உயர்ந்தவராக கடவுள் படைத்திருப்பதாகக் கூறுகிறது. நல்லபடியாக (!) நடந்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சரிநிகராக உரிமைகள் இருந்தாலும், ஆணே எப்போதும் பெண்ணை விட உயர்ந்தவராகக் கருதப்படுவார் என்றும் குரான் கூறுகிறது.

    இசுலாமிய ஷரியத் சட்டப்படி, ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம். தலாக் என்று மூன்று முறை கூறுவதன் மூலம் தனது மனைவியை அல்லது மனைவிகளை மணவிலக்குச் செய்யலாம். ஆனால், ஒரு பெண் விவாகரத்து பெறுவது என்பது நடைமுறையில் மிகச்சிக்கலானது. இசுலாமியச் சட்டப்படி பெண்களும் விவாகரத்து கோரலாம் என்றும், தாய் என்ற இடத்தில் பெண்கள் வணக்குரியவர்களாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

    ஆனால், விவாகரத்தின்போது குழந்தைகளை உரிய வயது வரும் வரையில் வைத்துப் பராமரிக்கும் உரிமை தந்தைக்கே கிடைக்கிறது. தங்களது குழந்தைகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தினாலேயே பெண்கள் தங்கள் கணவன் பலதார மணம் புரிந்தாலும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் பெண்களுக்கு தாய் என்ற மதிப்பிற்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாகக் கூறும் இசுலாம்தான், குழந்தைகள் தந்தையின் உரிமை என்றும் கூறுகிறது.

    அதன்படி தாய் என்பவள் ஒரு பராமரிப்பு வேலைகளைச் செய்பவர் என்றுதான் ஆகிறது. எனில், குரான்படி பெண்களுக்கு சம உரிமைகளோ, சுதந்திரமோ இருக்கிறதென்று எப்படிக் கூற முடியும்?

    இசுலாமிய ஷரியத் படி, ஒரு பெண்ணைக் கொலை செய்தால் அதற்குத் தண்டனையாக ஒரு ஆணைக் கொலை செய்ததற்கு அபராதமாகச் செலுத்தப்படுவதில் பாதியைச் செலுத்தினால் போதும். நீதிமன்றத்தில் ஒரு பெண்ணின் சாட்சியானது ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக மதிக்கப்படும். ஆண், பெண்ணை பராமரிப்பதால் பெண் மீது ஆணுக்கு அதிகாரம் உண்டு. இதிலிருந்து, இசுலாம் பெண்களை சுமையாகத்தான் கருதுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    இத்தனைக்கும், குழந்தைகளைப் பராமரிப்பதிலிருந்து வீட்டு வேலைகளை செய்வதிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உழைப்பும் பெண்களிடமிருந்தே சுரண்டப்படுகிறது. ஒன்பது வயதுச் சிறுமிகள், தங்கள் தந்தையராலேயே மணம் முடித்துக் கொடுத்துவிடப் படுகின்றனர். தாய் மறுத்தாலும் அதைக் கணக்கில் கொள்வதில்லை. பெரும்பாலான சமயங்களில் அந்த ஆண்களுக்கு அது இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணமாக இருக்கும். தீவிர நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதைக்கூட உயர்த்தத் தயாரில்லை. முகமதுவின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா திருமணம் நிச்சயிக்கப்படும்போது ஏழு வயதாக இருந்தார். திருமணத்தின்போது அவருக்கு ஒன்பது வயதுதான். முகம்மது நபிக்கோ கிட்டதட்ட ஐம்பது வயதிருக்கும். அதோடு அவருக்குப் பல மனைவிகள் இருந்ததாகவும் தெரிய வருகிறது.

    பெண்கள் உரிமைகளுக்கான சட்டங்கள் எதுவும் அரசாங்கத்தால் முன் எடுக்கப்பட்டால் அது மதவாதிகளின் தீவிர எதிர்ப்புக்குள்ளாகும். குரானை எவ்விதத்திலும் மாற்றத்துக்கு உள்ளாக்காமல் கடைபிடிக்க வேண்டுமென்று கண்மூடித்தனமாக அச்சட்டத்தை எதிர்ப்பார்கள். ஈரானியப் பெண் சக்கீனாவை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்திருக்க முடியாது. தகாத உறவுள்ளவராக குற்றஞ்சாட்டி அவரைக் கல்லாலேயே அடித்துக்கொல்ல வேண்டுமென்று தண்டனையும் விதித்தது, அரசு. அவருக்கு 99 கசையடிகளும் கொடுக்கப்பட்டது. சுரா (24:1) இல் தகாத உறவு கொண்டவராக இருந்தால் 100 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். முகம்மது நபி கல்லால் அடித்துக்கொல்லப்படுவதை கண்டித்திருந்தாலும், ஒரு இடத்தில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் கல்லால் அடித்துக் கொல்லுமாறு கூறுகிறார்.

    இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதனை பெண்களுக்கு மட்டுமே உரிய தண்டனையாக மாற்றி விட்டார்கள். ஏனெனில் ஆண்களுக்கு நான்கு மனைவிகள் வரை வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. பல முசுலீம் நாடுகளில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை இன்றும் நடைமுறையில் உள்ளது. ஒருபெண் முதலிரவில் கன்னித்தன்மை இல்லாதவளாகக் கருதப்பட்டால் அவளது உறவினர்களாலேயே கொல்லப்பட்டு விடுவாள்.

    இவ்வகையான கவுரவக் கொலைகள் இசுலாமிய நாடுகளில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இந்த கவுரவக் கொலைகளுக்குப் பிஞ்சுக் குழந்தைகளும் தப்புவதில்லை. ஜோர்தானில் எட்டு வயதுச் சிறுமி தந்தையிடம் சொல்லாமல் நண்பர்களைப் பார்க்கச் சென்றதற்காக அடித்தே கொல்லப்பட்டாள். பெண்கள் உயிர் வாழ்வதும், உயிர் பறிக்கப்படுவதும் ஆண்களின் கையில்தான் இருக்கிறது. இப்படி உயிரைப் பறிக்கும் ஆண்கள் அவர்களது நண்பர்களாலும், உறவினர்களாலும் ஒரு ஹீரோவைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்தக் கவுரவக் கொலைகள், சாதி மற்றும் கோத்திரத்தின் பெயரால் நடைபெறுவதைக் கவனித்திருக்கலாம்.

    இப்படி பெண்களின் நடத்தை, கண்ணியம் எல்லாமே ஆண்களின் மேற்பார்வையிலிருப்பதால் பெண்களும் தங்களைப் போல சம உரிமை பெற்ற மனித உயிர் என்று கருத அவர்கள் மறுக்கிறார்கள். சொல்லப்போனால், அப்படிச் சமமாக நடத்துவதை மதமே அல்லவா தடுத்து நிறுத்துகிறது?

    மதத்தின் பெயரால், பெண்களின் கழுத்தின் மீதுதான் ஆண்களின் கால்கள் ஊன்றி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது. இசுலாமிய சமூகத்தில் மதமே வாழ்வின் எல்லாவற்றிலும் கோலோச்சுகிறது – அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் என்று சகலமும் மதத்தையே முதுகெலும்பாகக் கொண்டிருக்கின்றன – இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல

  31. பெண்களை அடிமைப்படுத்துவது என்பது மத ரீதியாக வளர்த்தெடுக்கப்படுகிறது. பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போன மதங்களுக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. பிற்போக்குத்தனத்தில் கட்டுண்ட மதங்கள் அனைத்தும் ஒன்றுபடுவது ஒரு விசயத்தில்தான் – பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும். இதனைச் சுட்டிக்காட்டினால், இசுலாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள் இசுலாம் மதத்தலைவர்கள். உண்மையில், பெண்களுக்குச் சில உரிமைகளை இசுலாம் வழங்குவதாகவும், ஒரு சில இனத்தவரின் பழக்க வழக்கங்களும், பெண்ணடிமைத்தனமும்தான் இந்நிலைமைக்குக் காரணம் என்றும் கூறுகின்றனர். முகமது நபி சில உரிமைகளைப் பெண்களுக்கு வழங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

    எடுத்துக்காட்டாக, பிறந்த பெண் குழந்தைகளை வேண்டாத குழந்தையென்று மண்ணில் புதைக்கும் வழக்கத்தை அவர்தான் தடை செய்ததாகவும் கூறுகிறார்கள். அதோடு, குரான் அடிப்படையில் பெண்களுக்கு சொத்துரிமையும், பாலியல் ரீதியான சுதந்திரமும் இருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்காத, சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பாரம்பரியம் என்று சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தோடு ஒப்பிடுகையில் இசுலாம் பெண்களுக்கு இவ்வுரிமைகளை வழங்கியிருப்பது உண்மைதான்.

    ஆனாலும் இவ்வுரிமைகளினால் பெண்களுக்கு சம உரிமையோ, குரான் படி பெண்களின் பெண்ணடிமைத்தனம் முற்றிலும் களையப்படவோ இல்லையென்றுதான் கூற வேண்டும். இசுலாமைப் பொறுத்தவரைக்கும் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் மற்றும் முசுலீம் அல்லாத பிற சமய மக்கள். இதில் பெண்கள் என்பவர்கள் ஒரு முசுலீம் ஆணில் பாதிக்குச் சமம். ஒரு பெண், ஆணுக்குக் கொடுக்கப்படும் சொத்துரிமையில் பாதியைத்தான் பெறுவாள் என்பதே இதற்குச் சான்று. ஒரு பெண் கீழ்படியவில்லை அல்லது கண்ணியமற்ற முறையில் நடந்துக்கொள்வதாக தெரிந்தால், ஆண் அவளை அதட்டிக் கேட்கலாம்; உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.

    குரானின் (சுரா 4:34) படி, ஆணின் கையிலேதான் பெண்ணைக் குறித்த முழு அதிகாரமும் இருக்கிறது. பெண்ணைப் பராமரிப்பதிலேயே ஆண் தனது செல்வத்தைச் செலவழிப்பதால் பெண்ணை விட ஆணை உயர்ந்தவராக கடவுள் படைத்திருப்பதாகக் கூறுகிறது. நல்லபடியாக (!) நடந்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சரிநிகராக உரிமைகள் இருந்தாலும், ஆணே எப்போதும் பெண்ணை விட உயர்ந்தவராகக் கருதப்படுவார் என்றும் குரான் கூறுகிறது.

    இசுலாமிய ஷரியத் சட்டப்படி, ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம். தலாக் என்று மூன்று முறை கூறுவதன் மூலம் தனது மனைவியை அல்லது மனைவிகளை மணவிலக்குச் செய்யலாம். ஆனால், ஒரு பெண் விவாகரத்து பெறுவது என்பது நடைமுறையில் மிகச்சிக்கலானது. இசுலாமியச் சட்டப்படி பெண்களும் விவாகரத்து கோரலாம் என்றும், தாய் என்ற இடத்தில் பெண்கள் வணக்குரியவர்களாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

    ஆனால், விவாகரத்தின்போது குழந்தைகளை உரிய வயது வரும் வரையில் வைத்துப் பராமரிக்கும் உரிமை தந்தைக்கே கிடைக்கிறது. தங்களது குழந்தைகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தினாலேயே பெண்கள் தங்கள் கணவன் பலதார மணம் புரிந்தாலும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் பெண்களுக்கு தாய் என்ற மதிப்பிற்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாகக் கூறும் இசுலாம்தான், குழந்தைகள் தந்தையின் உரிமை என்றும் கூறுகிறது.

    அதன்படி தாய் என்பவள் ஒரு பராமரிப்பு வேலைகளைச் செய்பவர் என்றுதான் ஆகிறது. எனில், குரான்படி பெண்களுக்கு சம உரிமைகளோ, சுதந்திரமோ இருக்கிறதென்று எப்படிக் கூற முடியும்?

    இசுலாமிய ஷரியத் படி, ஒரு பெண்ணைக் கொலை செய்தால் அதற்குத் தண்டனையாக ஒரு ஆணைக் கொலை செய்ததற்கு அபராதமாகச் செலுத்தப்படுவதில் பாதியைச் செலுத்தினால் போதும். நீதிமன்றத்தில் ஒரு பெண்ணின் சாட்சியானது ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக மதிக்கப்படும். ஆண், பெண்ணை பராமரிப்பதால் பெண் மீது ஆணுக்கு அதிகாரம் உண்டு. இதிலிருந்து, இசுலாம் பெண்களை சுமையாகத்தான் கருதுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    இத்தனைக்கும், குழந்தைகளைப் பராமரிப்பதிலிருந்து வீட்டு வேலைகளை செய்வதிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உழைப்பும் பெண்களிடமிருந்தே சுரண்டப்படுகிறது. ஒன்பது வயதுச் சிறுமிகள், தங்கள் தந்தையராலேயே மணம் முடித்துக் கொடுத்துவிடப் படுகின்றனர். தாய் மறுத்தாலும் அதைக் கணக்கில் கொள்வதில்லை. பெரும்பாலான சமயங்களில் அந்த ஆண்களுக்கு அது இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணமாக இருக்கும். தீவிர நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதைக்கூட உயர்த்தத் தயாரில்லை. முகமதுவின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா திருமணம் நிச்சயிக்கப்படும்போது ஏழு வயதாக இருந்தார். திருமணத்தின்போது அவருக்கு ஒன்பது வயதுதான். முகம்மது நபிக்கோ கிட்டதட்ட ஐம்பது வயதிருக்கும். அதோடு அவருக்குப் பல மனைவிகள் இருந்ததாகவும் தெரிய வருகிறது.

    பெண்கள் உரிமைகளுக்கான சட்டங்கள் எதுவும் அரசாங்கத்தால் முன் எடுக்கப்பட்டால் அது மதவாதிகளின் தீவிர எதிர்ப்புக்குள்ளாகும். குரானை எவ்விதத்திலும் மாற்றத்துக்கு உள்ளாக்காமல் கடைபிடிக்க வேண்டுமென்று கண்மூடித்தனமாக அச்சட்டத்தை எதிர்ப்பார்கள். ஈரானியப் பெண் சக்கீனாவை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்திருக்க முடியாது. தகாத உறவுள்ளவராக குற்றஞ்சாட்டி அவரைக் கல்லாலேயே அடித்துக்கொல்ல வேண்டுமென்று தண்டனையும் விதித்தது, அரசு. அவருக்கு 99 கசையடிகளும் கொடுக்கப்பட்டது. சுரா (24:1) இல் தகாத உறவு கொண்டவராக இருந்தால் 100 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். முகம்மது நபி கல்லால் அடித்துக்கொல்லப்படுவதை கண்டித்திருந்தாலும், ஒரு இடத்தில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் கல்லால் அடித்துக் கொல்லுமாறு கூறுகிறார்.

    இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதனை பெண்களுக்கு மட்டுமே உரிய தண்டனையாக மாற்றி விட்டார்கள். ஏனெனில் ஆண்களுக்கு நான்கு மனைவிகள் வரை வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. பல முசுலீம் நாடுகளில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை இன்றும் நடைமுறையில் உள்ளது. ஒருபெண் முதலிரவில் கன்னித்தன்மை இல்லாதவளாகக் கருதப்பட்டால் அவளது உறவினர்களாலேயே கொல்லப்பட்டு விடுவாள்.

    இவ்வகையான கவுரவக் கொலைகள் இசுலாமிய நாடுகளில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இந்த கவுரவக் கொலைகளுக்குப் பிஞ்சுக் குழந்தைகளும் தப்புவதில்லை. ஜோர்தானில் எட்டு வயதுச் சிறுமி தந்தையிடம் சொல்லாமல் நண்பர்களைப் பார்க்கச் சென்றதற்காக அடித்தே கொல்லப்பட்டாள். பெண்கள் உயிர் வாழ்வதும், உயிர் பறிக்கப்படுவதும் ஆண்களின் கையில்தான் இருக்கிறது. இப்படி உயிரைப் பறிக்கும் ஆண்கள் அவர்களது நண்பர்களாலும், உறவினர்களாலும் ஒரு ஹீரோவைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்தக் கவுரவக் கொலைகள், சாதி மற்றும் கோத்திரத்தின் பெயரால் நடைபெறுவதைக் கவனித்திருக்கலாம்.

    இப்படி பெண்களின் நடத்தை, கண்ணியம் எல்லாமே ஆண்களின் மேற்பார்வையிலிருப்பதால் பெண்களும் தங்களைப் போல சம உரிமை பெற்ற மனித உயிர் என்று கருத அவர்கள் மறுக்கிறார்கள். சொல்லப்போனால், அப்படிச் சமமாக நடத்துவதை மதமே அல்லவா தடுத்து நிறுத்துகிறது

  32. இப்போது ஒரு கேள்வி எழுப்பலாம், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட லட்சத்தில் ஒருவருக்குத் தானே குழந்த பிறந்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட எல்லாருக்கும் பிறக்க வில்லையே என்று. இங்கேயும் இறைவனின் சான்று பளிச்சிடுகிறது. அதாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதிகளில் எப்படி தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருவது போன்று, அறுவைச் சிகிச்சை செய்தவர்களிலும் தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருகிறான் இறைவன் என்பதுதான் அது.

    இதைத்தான் இறைவனின் தூதர்[ஸல்] அவர்கள் பின்வரும் பொன்மொழியில் தெளிவான வார்த்தையில் சொல்லியுள்ளார்கள்;

    அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;

    ”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.[புகாரி]

    நாத்திக மடையர்களான வீரமணியார் வகையறாக்கள் என்ன கேட்பார்கள் என்பதை முன்னரே யூகித்து சகோ முகவை அப்பாஸ் பதிலளித்துள்ளார்கள்.

    அல்லாஹ் யாருக்கு குழந்தையை தர நாடுகிறான் என்பது நமக்கு தெரியாது. ஏன் நபிகள் நாய்கத்துக்கே தெரியாது. அவரும் ஆண் குழந்தைக்காக இறைஞ்சி அவருக்கு ஆண் குழந்தை கொடுக்கப்படவில்லை. எத்தனையோ பெண்களை நபிகள் நாய்கம் கற்பழித்தததால்தான் என்று பிறமத சகோதரர்கள் அவதூறு சொல்லியுள்ளார்கள். ஆனால் அது உண்மை இல்லை. உங்களது பாவம் உங்களது பிள்ளைகளுக்கு இல்லை என்று அல்லாஹ் திருமறையில் அறிவித்திருக்கிறான். ஆகவே நபிகள் நாய்கம் செய்த கற்பழிப்புகளின் பாவம் அவரது பிள்ளைக்கு எப்படி வரும்? இது கூட தெரியாத் நாத்திக மடையர்களான வீரமணி வகையறாக்கள் என்ன விவாதம் செய்யப்போகிறார்கள்?

    சரி இப்போது நபிகள் நாய்கத்தின் பொன்மொழிக்கு வருவோம். அதிலிருந்து இறையச்சம் பெறுவோம்.

    நபிகள் நாய்கதின் போர்வீரர்கள் கற்பழிப்பு செய்கிறார்கள். யாரை? போரில் பிடிக்கப்பட்ட பெண்கைதிகளை. அபு க்ரைபுக்கு முன்னாலேயே அமெரிக்காவுக்கே வழிகாட்டியாக நபிகள் நாய்கம் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

    அபு க்ரைபில் எந்த பெண்கைதியையும் அமெரிக்கா கற்பழிக்கவில்லை. ஆனால், இனி அமெரிக்கா நபிகள் நாய்கம் வழியை மேற்கொண்டால், ஈராக்கில் பெண்கைதிகளை பிடித்து கற்பழிக்கலாம் என்ற உயரிய போதனையை நபிகள் நாய்கம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அறிவிக்கிறார்கள்.

    இதில் நபிகள் நாய்கத்தின் போர்வீரரான அபு சயீத் (ரலி) ஒரு அக்கறையாக இந்த பெண் போர்க்கைதிகளை கற்பழிக்கலாமா என்று கேட்கிறார். அவருக்கு அந்த பெண்கள் அன்றுதான் தன் கணவன்மார்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் கொல்லப்படுவதை கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அன்றே நபிகள் நாய்கத்தின் போர்வீரர்கள் அந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்களுக்கு இன்பம் தருகிறார்கள்.

    இந்த வேளையில் அபு சயீத் (ரலி) அவ்ர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், இந்த பெண்களை விற்று பணம் பண்ண முடியாதே என்று கவலைப்படுகிறார்.

    ஒரு குலத்தார் மீது போர் தொடுத்து அவர்களது ஆண்களை கொன்று பெண்களை சிறைபிடிக்க வேண்டும் என்பது நபிகள் நாய்கத்தின் வழிமுறை. அவ்வாறு செய்திருக்கும் இந்த நிகழ்வில் அதுவரை சுதந்திர பெண்களாக இருந்த அவர்கள் அடிமைகளாக விற்கப்பட தகுதியுடையவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதுவும் நபிகள் நாய்கத்தின் வழிமுறை. இது தவறு என்று இன்று நாம் கருதக்கூடாது. நபிகள் நாய்கம் எந்த புறம் நின்று உச்சா போனார் என்பதையும் நாம் பின்பற்றுபவர்கள். இப்படிப்பட்ட முக்கியமான அறிவுரையை நாம் உதறித்தள்ளி விட முடியுமா? சிந்தியுங்கள் என்று அல்லாஹ் அல்குரானில் அடிக்கடி நம்மை கேட்டுகொள்கிறான்.

    ஆனால் அங்கே நபிகள் நாய்கம் என்ன அறிவுரை சொல்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.

    ”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

    ”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

    “அடே நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளே.! நான் இந்த காலத்துக்கு மட்டுமா போதனை கொடுக்க வந்தேன்? இனி வரும் காலம் அனைத்துக்கும் போதனை கொடுக்க வந்தேன். இதே ஆட்கள் நம்மை கைப்பற்றினால் நம் பெண்களை இதே போல கற்பழிப்பார்கள். அது உண்மைதான். அது காட்டிமிராண்டி வழக்கம். நாம் நாகரிகமான புதிய மதத்தில் இருக்கிறோம். அந்த மதத்தில் இது போன்ற காட்டிமிராண்டித்தனமான செய்கைகளுக்கெல்லாம் இடமில்லை. இவர்களை மரியாதையாக கண்ணியமாக நடத்துங்கள். இவர்களை அடிமைகளாக விற்காதீர்கள். அவர்கள் பெண்கள். அவர்கள் நம்மோடு போர்புரியவில்லை. அவர்களது கணவன்கள், பெற்றோர்கள் குழந்தைகள் நம்மோடு போர் புரிந்தார்கள் தோற்றார்கள் இறந்தார்கள். ஆனால் இந்த பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? . அதற்காக இவர்களை கற்பழிப்பதோ இவர்களை அடிமைகளாக்கி விற்பதோ தகுமா? இந்த பெண்களே நம்முடன் போரிட்டாலும், இவர்களை அவமரியாதை செய்வதோ கற்பழிப்பதோ தகுமா? அது நாகரிகமானதா? பண்பாடுள்ள விஷயமா? இவர்களை கற்பழிப்பவன் கேடுகெட்டவனிலும் கேடுகெட்டவனாயிற்றே. நாம் செய்யக்கூடாது. இவர்களை க்ளங்கப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள். அந்த பெண்களை கவுரதையாக அனுப்பி வையுங்கள். அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்கள் யாரை கணவராக எடுத்துகொள்கிறார்களோ அவர்களிடம் செல்லட்டும். அந்த பெண்கள் தனியாகவே இருக்க விரும்பினாலும் இருக்கட்டும். அவர்களை அடிமையாக விற்பது மனித அறத்துக்கே எதிரானது. இறைவனின் முன்னால் மனிதர்கள் எல்லோருமே சமம். அப்படியிருக்கும்போது ஒரு மனிதனின் அடிமையாக இன்னொரு மனிதன் இருப்பது தகுமா?” என்றா நம் நபிகள் நாயகம் சொன்னார்? இல்லவே இல்லை!

    அவர்கள் என்ன சொன்னார்கள்?

    அந்த பெண்களை எப்படி கற்பழிக்க வேண்டும் என்றல்லவா நமது நபிகள் நாயகம் அறிவுரை வழங்குகிறார்! சிந்தியுங்கள்!

    “அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? உச்சகட்டத்தில் ஆண் குறியை வெளியே எடுத்து விந்தை கொட்டக்கூடாது என்று ஒன்றுமில்லை. ஆனாலும் அப்படி செய்யாமலிருப்பதே மேலானது. அதாவது அந்த பெண்ணின் கருப்பைக்குள் உங்கள் விந்தை அனுப்புவதே மேலானது. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!”

    ஆஹா…!

    இதுதானே நம் இறைதூதரின் அதுவும் இறுதி இறைதூதரின் அறிவுரை!!!
    இதுவல்லவோ இறைதூதரின் இலக்கணம்!!!! படிக்கும் எனக்கே புல்லரிக்கிறது!!. இப்படிப்பட்ட்வரை இறைதூதராக கொண்ட நாம் எவ்வளவு பேறு பெற்றவர்கள்!! இப்படிப்பட்ட இறைதூதரிடம் எப்படிப்பட்ட கூட்டம் சேரும்!!!, எவ்வளவு கூட்டம் சேரும்!!! என்று சிந்தித்து பாருங்கள். சும்மாவா அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா என்று குரான் வசனங்களில் இறைஞ்சுகிறான்.

    இவையே நபிகள் நாயகத்தின் வழிமுறைகள்.

    போரில் பிடித்த பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், எப்படி கற்பழிக்க வேண்டும், எப்படி விந்தை உள்ளேயே விட வேண்டும் என்பதனை தெளிவு படுத்தியிருக்கும் இந்த பொன்மொழிகள் இன்னமும் 1400 ஆண்டுகளுக்கு பின்னாலும் முகவை அப்பாஸ் போன்ற மனிதர்களை இஸ்லாமுக்கு அழைத்து வருகின்றன. இப்பொன்மொழிகள் முகவை அப்பாஸ் பொன்ற ஈமானுள்ள முஸ்லீம்களை உற்சாகப்படுத்துகின்றன என்றால் அதில் ஆச்சரியம் இருக்கிறதா?

  33. மெஹர் பற்றிய விவாதம் இருப்பதால், அதற்கான விளக்கத்தை என் நண்பன் எழுதி நான் பிரசுரித்திருக்கிறேன்

    மெஹர் என்பது என்ன?

    உங்கள் மேலான கருத்துக்களை அங்கே எழுதுங்கள்

  34. அண்ணா போதும் நீங்க பேசாம நீங்க “‘காவிக்கொடி'” ன்னு மாத்தீருங்க ஏன் இந்த பெயர வெச்சு என்ன மாதிரி பஸ்ல உண்டியல்ல போடறவங்கள கெடுக்கிறீங்க ????

  35. ஆணுக்கு பல தேவைகள் இருக்கிறது, அவன் திருமணம் செய்யும் போது மஹர் கொடுக்கவேண்டும், மனைவி பெற்றோர் பிள்ளைகள் எல்லோரின் செலவுகளை சமாளிக்கவேண்டும், ஆனால் சில சமயம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து கிடைக்கும் பாதி சொத்தைவிட அதிகமாக மக்கர் கிடைக்கும், இஸ்லாம் பொருளாதாரத்தை பெரியதாக எடுக்காத மார்க்கம் , ஆனால் இருப்பதை அறிவு பூர்வமாக பிரித்து உண்ணச்சொல்லும் மார்க்கம், உங்களைப்போன்ற அறிவிலிகளுக்கு அது புரியாது

    100 ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கும் போது எப்படி 200 கிடைக்கும்? முட்டாள்தனமான வாதம்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்