ஒரு தோழரின் கரு மாற்றம்

கடந்த இரண்டு நாட்களாக என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறாகவும் இழிவாகவும் செ.கார்கி எனும் முனைவர் செ கார்த்திகேயன் என்பவர் எழுதி வருகிறார். மட்டுமல்லாமல் தோழர் தமிழச்சி குறித்தும், சாரதா அவர்கள் குறித்தும் கூட கீழ்த்தரமாக பதிவிட்டு வருகிறார். செ.கார்கி என்பவர் முகநூலிலும், கீற்று தளத்திலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.  மார்க்சிய பார்வையில் நிகழ்வுகளை எழுதுபவர் எனும் அடிப்படையில் அவர் கட்டுரைகளை படித்திருக்கிறேன். முகநூல் பதிவுகளில் தொடர்ந்திருக்கிறேன். வெகு சில பதிவுகளில் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். இவை தவிர … ஒரு தோழரின் கரு மாற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே

அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள்.  “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே

எழுத்தாளர் ஜெயகாந்தன், 'கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது, 'எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்' என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது. 1945, 46, 47-ஆம் ஆண்டுகளில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் தஞ்சையிலும், கடலூரிலும், விழுப்புரத்திலும் வாழ்ந்தபோது அங்கெல்லாம் இந்த இயக்கம் என்னை விடாமல் தொடர்ந்து வருவது … ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஃபீலிங்கு

சிறிது காலத்துக்கு முன்பு நானும் கோவையைச் சேர்ந்த ஒரு தோழரும் இணைந்து அதிகளவாக பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவது போன்ற தலைப்புசார்ந்த காணொளிகளை எடுத்து வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். அதற்கு சில வரையறைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம். அழகியல், திரைமொழி, காட்சிப்பாட்டை என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கம்யூனிசம் தான் கருவாக இருக்க வேண்டும், ஆனால் கம்யூனிச கலைச் சொற்கள் எதையும் பயன்படுத்தி விடக் கூடாது. எளிமையாக மக்கள் வாழ்வில் இருக்கும் கேள்விகளை எடுத்துக் கொண்டு, … ஃபீலிங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?

இன்னைக்கு பெண்கள் தினமாம், இருந்துட்டு போகட்டும்.. சித்ரா ராமகிருஷ்ணன்னு ஒரு பெண் பங்குச்சந்தை ஊழலில் கைதுன்னு செய்தி வருது ஆனா போட்டோ வரமாட்டேங்குது. ஒரு பத்திரிக்கைல கூட போட்டோ வரமாட்டேங்குது ஏன்னு தெரில, ஆனா கனிமொழி  2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டபோது பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு விதவிதமாக போட்டோ எடுத்து குமிச்சிறுக்காங்க.. என்ன மாயம்னே தெரில சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மாதிரி ஒரு புகைப்படம் கூட வரல.. ஹீரோயின் மாதிரி டாம்பீகமான அந்த நான்கு புகைப்படங்கள்தான் … தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு சம்பவம் நடந்த போது .. ..

முகநூல் நேரலை 1 மேற்கண்ட இந்த முகநூல் நேரலையை பாருங்கள். இந்த நேரலையில் தோழர் தமிழச்சி ஒரு சம்பவம் செய்யப் போவதாக குறிப்பிடுகிறார். அந்த நேரலையில் மிக விரிவாக ஒரு சிக்கல் குறித்து, பாலியல் சுரண்டல் குறித்து பேசுகிறார். ஆனால், முதன்மையான அதை விடுத்து ஒரு சம்பவம் செய்யப் போவதாக கூறிய ஒற்றைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் ஒரு அமைப்பினர். அவர்கள் வேறு யாருமல்லர், தன் மீது ஒற்றைச் செருப்பை … ஒரு சம்பவம் நடந்த போது .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரண வியாபாரி

"உங்களது மாமன்னன் ஒரு அயோக்கியக் கொலைகாரன் என்றால், அவனுக்கு முட்டுக் கொடுக்கும் நீங்கள் அதை விடக் கொடூரமான ஈவு இரக்கமற்றக் கொலைகாரர்கள். அதை மறவாதீர்கள்.ஒருவேளை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம்." ******** இந்தியா கோவிட்டின் மரணக் கிணறாக மாறி வருகிறது. முற்றிலும் செயலற்ற ஒரு பிரதமரும் அவரைச் சுற்றி இருக்கும் அமைச்சர்களும் எந்தக் குற்றவுணர்வும் இன்றி அடுத்து இந்தியாவின் எந்தப் பொதுத்துறை நிறுவனத்தை அம்பானிக்கும் அதானிக்கும் விற்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தெற்கு பரவாயில்லை. … மரண வியாபாரி-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிய்ந்த செருப்பு இருக்கிறதா?

ஜெகத் கஸ்பரின் யுடியூப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (liberty Tamil சானலில்). அதில் அவர் ஓரிடத்தில் தனக்கு தில்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்தது என்கிறார். தமிழகத்தில் உள்ள கிறுத்துவர்களை ஒரு வாக்குவங்கியாக திரட்டி அவர்களிடம் பிரச்சாரம் பண்ணினால் 20 இடங்களை பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறார்கள். இவர் தனக்கு மதசார்பற்ற அரசியலில் மட்டுமே நம்பிக்கை எனச் சொல்லி அதை மறுத்திருக்கிறார். பாஜகவினரின் சிறுபான்மை அரசியல் குறித்த ஒரு சரியான புரிதல் இதில் … பிய்ந்த செருப்பு இருக்கிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வங்கிகள் யாருக்காக?

முன்குறிப்பு 1: இது போன்ற சிக்கல்களில் தொடர்புடையவர்கள் ஏன் வங்கியின் பெயரை மறைக்கிறார்கள்? என்ன வங்கி என வெளிப்படையாக எழுத வேண்டியது தானே. முன்குறிப்பு 2: படித்து வேலையில் இருக்கும் நடுத்தர பிரிவினர்களே இப்படித்தான் நடத்தப்படுவார்கள் என்றால், ஒப்பீட்டளவில் அறியாமையில் இருக்கும் எளிய மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்களின் நடப்புகளும் இவ்வாறு வெளிவர வேண்டும். ஒரு Nationalised bank ல கார் லோன் இரண்டரை லட்சம் வாங்கியிருந்தேன். ஐந்து வருசம் EMI கட்டனும். மாதாமாதம் கட்ட … வங்கிகள் யாருக்காக?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தி .. .. .. !

IAS அதிகாரி இளம்பகவத் எழுதியது... நீங்கள் வெளியே போங்கள்! பரீதாபாத்தில் ஐ.ஆர்.எஸ் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தபொழுது, இந்தி மொழி கற்றுத் தருவதற்கான வகுப்புகள் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்தனர். சரி நாமும் இந்தியைக் கற்றுக் கொள்ளலாம் என்ற முடிவோடு, புதிய நோட்டு புத்தகம் ஒன்றை வாங்கி, பெயரெழுதி, கோடுபோட்டு, குளித்து முடித்து, இன்ன பிற சடங்குகள் எல்லாம் செய்து வகுப்புக்குச் சென்றேன்! எங்கள் ஐ.ஆர்.எஸ் பேட்ச்சில் ஒரு பெரிய தமிழ் கேங்க் இருந்தது. அதில் சிலருக்கு … இந்தி .. .. .. !-ஐ படிப்பதைத் தொடரவும்.