பிம்பச் சிறை

எம்.ஜி.ஆர் - எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல். இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், … பிம்பச் சிறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இடையே பொங்கல் விடுப்பு விடுபட்டதும் வந்து போனது. ஆனால் இப்படி பொங்கி எழுந்து போராடும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு என்ன கனம் இருக்கிறது? வீர விளையாட்டு, நாட்டு மாடுகள், தமிழர் அடையாளம் இத்யாதி, இத்யாதிகளை.. .. .. கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு பார்ப்போம். மாட்டுக் கொம்பின் கூர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வீரமா? கொத்துக் … ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் புரட்சியாளரா? சீர்திருத்தவாதியா?

வணக்கம் தோழர் எது புரட்சி ? எது சீர்திருத்தம் ? புரட்சியாளருக்கும் சீர்திருத்தவாதிக்கும் என்ன வித்தியாசம் ? ராஜ்ரம்யா, கேள்வி பதில் பகுதியிலிருந்து ஜப்பான் ஒரு இரண்டாம் உலக போரில் அனைத்தும் இழந்து விட்டது.அதற்கு காரணம் அமெரிக்கா. பின் ஏன் அமெரிக்கா மூலதனம் அங்கு குவிக்கப்பட்டது அதனை எப்படி அந்த நாட்டு மக்கள் ஏற்று கொண்டர்கள் குமரன், கேள்வி பதில் பகுதியிலிருந்து 1937ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போரை முன்னின்று நடத்திய பெரியார், 1965ம் ஆண்டின் மாபெரும் … பெரியார் புரட்சியாளரா? சீர்திருத்தவாதியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?

இந்தியா மூன்றுபுறம் கடலால் சூழப்பட்டிருக்கிறது, நான்கு புறமும் கடனால் சூழப்பட்டிருக்கிறது என்று வேடிக்கையாய் சொலவடை சொல்வார்கள். இப்போது எட்டுத் திக்கிலிருந்தும் பார்ப்பனியம் சூழ்ந்து கொண்டிருக்கிறது எனச் சொல்வது தகும். இந்தியாவில் அரசு இயந்திரம் பார்ப்பனமயமாகி இருக்கிறது என்பதை உணர்வதற்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை. ஆனால் குறிப்பாக மோடி பிரதமரான பிறகு இது மிகுந்த விரைவுடன் செயலாற்றுகிறது. சமஸ்கிருதமயமாக்கம், உயர்கல்விக் கூடங்களில் ஆக்கிரமிப்பு, மாட்டுக்கறி, பகுத்தறிவுவாத அறிஞர்களின் படுகொலை என இதற்கு பற்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இவைகளுக்கு பலரும், … பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதிமுக வெற்றி மக்கள் முடிவா?

பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?  திரு. மணி கேள்வி பதில் பகுதியில் நண்பர் மணி, பாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் … அதிமுக வெற்றி மக்கள் முடிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?

தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? என்றொரு கட்டுரை புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 இதழில் வெளிவந்திருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முறையை புறக்கணிக்கிறோம் என்பதால் அதில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளை ஒரே தட்டில் வைத்து சமமாகப் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை என விளக்கப்பட்டிருக்கிறது. உடனே, தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு கட்டுரை தேவையா எனத் தொடங்கி இது திமுக வுக்கு ஆதரவான கட்டுரை என்பதினூடாக இதற்கு ஐ சப்போர்ட் திமுக என்று எழுதியிருக்கலாமே என்பது வரை பல்வேறான … திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள்(!) எழுவரின் விடுதலை நீதி மன்றத் தீர்ப்பாலும், ஜெயாவின் அறிவிப்பாலும் மீண்டும் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி விடுதலைக்கு எதிராகவும், திமுக சற்றே அடக்கி வாசித்தும், அதிமுக, தமிழினவாதிகள் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் திமுகவை, கருணாநிதியை திட்டுவது தான் தமிழினவாதிகளின் ஈழ ஆதரவாளர்களின் தொல்காப்பியமாக ஆகியிருக்கிறது. அந்த அடிப்படையில் எழுவர் விடுதலை குறித்த குரல்கள், மெய்யாக அவர்களின் விடுதலை எனும் எல்லையை கடந்து, அதிமுக அமைச்சர்களே (அமைச்சர்கள் என்பது … எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்

  2009 ல் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பாசிச அரசால் கொல்லப்பட்டட்து அறிந்ததே. இது குறித்து ராஜபக்சே கூறிக் கொண்டிருந்தவை பொய் என்பதை சேனல் 4 நிறுவனம் அண்மையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவும் இலங்கையை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று சில கட்சிகளும் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று வேறு சில கட்சிகளும் குரல் … ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்

  சென்னையில் இரண்டு மணிநேரமும் சங்கரன் கோவில் நீங்கலாக ஏனைய பகுதிகளில் எட்டு முதல் பத்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப் படுகிறது.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின்வெட்டை வெட்டிவிடுவோம் என்று அம்மா கூறியதன் பொருள் என்னவென்பது இப்போது தான் மக்களுக்கு விளங்குகிறது. கடந்த ஆட்சியில் மின்வெட்டு அமைச்சராக ஆர்காடு வீராசாமி புகழப்பட்டார், இப்போது நத்தம் விஸ்வநாதன். யார் மாறினாலும், யார் ஆண்டாலும் மின்வெட்டு மட்டும் மாறாது ஆளும் என்பது வெளிப்படையாகி இருக்கிறது. ஆனால் … மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?

இன்றைய பொழுதுகளில் ஒரு திரைப்படத்தின் முதன்மையான கணம், அதற்கு செலவு செய்யப்படும் தொகையும், அது மடைமாற்றித் தரப்போகும் தொகையும் தான். கலை, சமூக விழிப்புணர்வு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏனைய பிறவெல்லாம் பின்னர் தான். இந்த வகையில் எல்லாவற்றையும் விட ஒரு திரைப்படத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதற்கு பலவாறான உத்திகள் ஒவ்வொரு திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழாம் அறிவில் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி தமிழர் பெருமை, தமிழ் தேசியம்.   கிபி ஆறாம் நூற்றாண்டில் … ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.