செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.

 

கடந்த ஓராண்டாக “இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் தொடர் செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இது பரவலாக கவனம் பெற்ற தொடராக இருந்துவருகிறது. இத் தொடரை தொடங்கும்போது அனைத்து திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் மறுப்பும் கிளம்பிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் அறிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மறுப்பேதும் வரவில்லை. இத்தொடருக்கு வந்த எதிர்ப்பின் அளவில் கூட மறுப்புரைகள் வரவில்லை. இது என்னில் ஏமாற்றத்தையே உண்டாக்கியது என்றால் அது மிகையான கூற்றல்ல‌.

 

இந்நிலையில் நண்பர் சலாஹுத்தீன் என்பவர் தன்னுடைய தளத்தில் இத்தொடருக்கு மறுப்பு எழுதுவதாக என்னிடம் தெரிவித்தார். அவர் எழுதிய ஓரிரு பகுதிகளில் நானும் சென்று என்னுடைய விளக்கங்களை பின்னூட்டமாக வைத்தேன். (அதை இங்கு காணலாம்)பின்னர் அவர் தன் தொடரை நிறுத்திவிட்டு என்னிடம் விவாதிக்க விரும்புவதாகத்தெரிவித்தார். அந்த விவாதமும் இடையில் நின்றுபோனது. இந்த விவாதம் நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பின் கீழ் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது முஹ‌ம்மது இஹ்சாஸ் என்பவர் இஸ்லாம் குறித்த தொடருக்கு மறுப்பு எழுதுவதற்கென்றே தனியாக ஒரு தளத்தை தொடங்கி, முறைப்படி எனக்கு அறிவிக்கவும் செய்திருக்கிறார். இதுவரை அவர் நான்கு பகுதிகளை எழுதியுள்ளார். தொடக்கத்தில் அதை நான் பொருட்படுத்தவில்லை காரணம், அத்தொடர் தொடருமா என்பதில் எனக்கிருந்த ஐயம் தான். ஆனால் மறுப்புகளை எழுத அவர் எடுத்துக்கொள்ளும் முனைப்பு அத்தொடர் தொடர்ந்து வெளிவரும் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தது. எனவே அந்த மறுப்பிற்கான விளக்கத்தை அளிக்கவேண்டிய தேவை எழுகிறது. மட்டுமல்லாது, இஸ்லாம் குறித்த தொடரின் கடந்த பதிவுகளை மேலதிக விளக்கங்களுடன் கூர் தீட்டவும் பயன்படும் என்பதாலும் இது இன்றியமையாததாகிறது. நண்பர் முஹம்மது இஹ்சாஸ் தன் தொடரை தொடரும் வரை இதுவும் தொடராக வெளிவரும். தொடக்கத்தில் அவருடைய தளத்திலேயே பின்னூட்டமாக பதிவு செய்யலாம் என எண்ணினேன். ஆனால், இஸ்லாம் குறித்த தொடரை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு அதன் மறுப்பையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதாலும் இத்தொடரை தொடங்குகிறேன்.

 

தோழமையுடன்

செங்கொடி

 

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௧

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

தம்முடைய முதல் பதிவை நேரடி விவாதம் பற்றிய சுட்டலுடன் தொடங்கியுள்ளார். அதுகுறித்த விளக்கத்துடனே நானும் தொடங்குகிறேன்.

 

“இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் இந்தத்தொடர், பிஜேவுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதல்ல. நிகழ் உலகின் சுரண்டல்களுக்கு எதிராக, அதிகார வர்க்கங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியுமா எனும் எண்ணத்தில், அனைத்து மதங்களுமே வர்க்கச் சுரண்டல்களுக்கு ஆதரவாகவும், அதை எதிர்க்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன என்றாலும், நான் பிறந்த மதம் எனும் அடிப்படையில் இஸ்லாமிய புனிதங்களுக்கு எதிராக உண்மைகளைப் பேசுவதனூடாக சமூகப் போராட்டங்களுக்கு பயணப்படவைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதுதான்.

 

இந்தத்தொடரைத் தொடங்கியது முதலே பிஜே அவர்களுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ளுங்கள் என்று குறைவாகவும் கூடுதலாகவும் பல வடிவங்களில் எதிர்வினைகள் வந்தன. அதில் சில கட்டுரைகள் கடந்தபின் நண்பர் அப்துல் லத்தீப் சென்னையில் நடக்கும் விவாதத்தில் நீங்களும் பங்குகொள்ள முடியுமா என கேட்டிருந்தார். அதற்கு நான் சாத்தியமில்லை என்றும் எழுத்தில் தயார் என்றும் பதிலிறுத்திருந்தேன். இதன்பிறகே ‘இனிமை’ என்பவர் செங்கொடி தளத்திற்கான சுட்டியை இணைத்து, இதற்கு நீங்கள் பதிலளிக்க முடியுமா என பிஜேவிடம் கேட்கிறார். அவர் தன் கடிதத்தை இப்படித் தொடங்குகிறார்,

 

“தயவுசெய்து கீழேயுள்ள லிங்கை பார்வையிடுங்கள். அதில் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சில தமாஷான கட்டுரைகளை வெளியுட்டுள்ளார். முக்கியமாக தங்களுடைய குரான் மொழியாக்கத்தையும் அறிவியல் ஒப்பீட்டையும் தான் அதிகளவில் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். நாத்திகர்கள் எடுத்துவைத்த வாதங்கள் போன்று இருந்தாலும் இதற்குப் பதில் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்”

 

இதுதான் அவரது கடிதத்தின் முக்கியப் பகுதி. அதாவது நான் நேரடி விவாதத்திற்கு வரமுடியாது என மறுத்துவிட்ட நிலையில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே அவரது கடிதத்தின் நோக்கம். மேலதிக விபரமாக நேரடி விவாதத்திற்கு அழைத்து, மறுத்த விபரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதற்குப் பதிலளித்த பிஜே அவர்கள், கடிதத்தின் நோக்கமான பதிலளிப்பது என்பதை கவனமாக தவிர்த்துவிட்டு, நேரடி விவாதத்திற்கு வரச்சொல்லுங்கள் நாம் தயார் என பதிலளித்திருந்தார். எழுத்தில் தயார் நேரடியாக இயலாது என்பது என் நிலை, எழுத்தில் இயலாது நேரடியாக தயார் என்பது அவர் நிலை. யாருக்கு எதில் வசதிப்படுகிறதோ அதில் பதிலளிப்பது எனும் யதார்த்தமான நிலைக்கான அவர் பதிலின் தொனி எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு \\ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது// இதுபோன்ற அணுகுமுறையின் விளைவாகவும், தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் மின்னஞ்சல்களின் விளைவாகவும் நேரடி விவாதத்திற்கு மறுப்பது என்னுடைய வசதியை அனுசரித்துத்தனேயன்றி பயத்தினால் அல்ல என்பதை வெளிக்காட்டவேண்டி நேரடி விவாதத்திற்கு சம்மதித்தேன்.

 

ஆனால் எந்த நோக்கத்திற்காக நான் எழுதத்தொடங்கினேனோ அந்த நோக்கத்திற்கு நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே பொருத்தமானது என்பதோடு மட்டுமல்லாது, நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே சிறந்ததாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னுடைய அந்த உணர்தலை வெளிப்படுத்தும் விதமாகவும், எப்போது விவாதம் செய்யப்போகிறீர்கள் என தொடர்ந்துகொண்டே இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் நான் ஏன் பிஜேவுடன் நேரடி விவாதம் செய்யவேண்டும் எனும் இடுகையாக வெளியிட்டேன். என்னுடைய இந்த முடிவை தோழர்கள் சிலரும் மீளாய்வு செய்யுமாறு கேட்கிறார்கள். எது நோக்கத்திற்கு சரியானது? எது சிறப்பானது? என்பதில் நான் நின்றுகொண்டிருப்பதால் வடிவத்திற்கு முதன்மையளிக்கவில்லை.

 

காலத்துக்கு காலம் இஸ்லாம் மட்டுமே அனைவராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக நண்பர் கூறுவது தவறு. உலகின் விமர்சனமின்றி கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்று எதுவுமில்லை. அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டே வருகிறது. ஆனால் விமர்சனத்தை எதிர்த்து வளர்வது சரியான வளர்ச்சியல்ல. விமர்சனத்தை உள்வாங்கி அலசிப் பார்த்து தன்னுள் தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்வதே சரியான வளர்ச்சி.

 

பிஜே அவர்கள் பதிலில் தென்படுவதாக நான் குறிப்பிட்ட அதே தொனி நண்பரின் மறுப்பிலும் தொழிற்படுகிறது. மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி.

 

85 thoughts on “செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.

  1. Hello Senkodi.

    I am reading your post about the islam since the beginning. Its excellent. I studied in Christine school, I had to read the bible. whenever I read the it I had same doubt what you explained here. after 20 years i have the answer for my question. Thanks to you.

  2. வணக்கம் தோழர்,
    என்னை பொருத்தவரை எழுத்து பூர்வமான விவாதமே சிறந்தது. எழுத்தில் என்ன சிக்கல் என்றால் குரான் மற்றும் வசனங்களை நம்மால் சரி பார்க்க இயலும். விவாதம் அலல்து ஒலிப் பேழைகளைல் வேகமாக வசனம் அதுவும் அரபியில்ம்பிறகு தமிழில் சொல்லி விட்டும் போய் விடுவார்கள்.
    என்ன பி ஜே வின விளக்கங்கள் என்று பார்த்தால் அவரின் இந்த சொற்றோடர்களை மிக அதிகமாக அவர் பயன்படுத்துவார்.

    இந்த அரபி வார்த்தையை இப்படி விளங்க கூடாது. இந்த வார்த்தைக்கு பல அர்த்தம் உண்டு. அதனை மட்டுமே பயன் படுத்தி விள்ங்க வேண்டும்.
    எடுத்துக் காட்டாக இந்த யாம் என்றால் நாள் என்பார்கள் பிறகு காலம் என்பார்கள்.

    ஹாத்துமான் என்றால் முத்திரை இதை இறுதி என்ற அர்த்தத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பார்கள். முகமதுவின் உடலைல் நபித்துவ முத்திரை இருந்தது என்பார்கள்.

    அவ்ருடைய ச்ல எழுத்து பூர்வமான ஆய்வுகள் எல்லாவற்றிலும் தவறுகள் அதிகமாக உள்ள்ன.
    குரான் 3:81க்கான அவரின் விளக்கம்.

    ரஷாத் கலிஃபா சுட்டுக் கொல்லப் பட்டதாக பி ஜே குறிப்பிடுகிறார்.

    ஆனால் கத்தியால் குத்தப் பட்டு கொல்லப் பட்டதாக விக்கிபிடியா கூறுகிறது. இந்த மாதிரி எழுத்தில் குறைகள் கண்டுபிடிக்க முடியும் என்பதால் எழுத்தை விலக்குகிறார்கள் என்றே தோன்றுகிறது.

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/354/

    http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa
    On January 31, 1990, Khalifa was murdered at Masjid Tucson. He was stabbed multiple times and his body drenched in xylol but not set alight. Although nobody has been convicted of his murder, James Williams, an alleged member of the Jamaat ul-Fuqra organization, was convicted of conspiracy in the slaying.[16] Williams disappeared on the day of his sentencing and could not be found.[17] In 2000 Williams was apprehended attempting to re-enter the United States and sentenced to serve 69 years in prison. His convictions were upheld on appeal by the Colorado Court of Appeals except for one count of forgery.[18][19]
    CBS News reported that Muslim extremist Wadih el-Hage was “connected to the 1990 stabbing death of… Rashad Khalifa [who] was hated by Muslim extremists [that were] opposed to his teachings. El-Hage who was indicted for lying about the case, called the assassination ‘a good thing.'[20]

  3. ஆளுஆளுக்கு வசனம் தான் பேசுகிறார்கள்,
    சட்டுபுட்டுன்னு கேள்வி பதில் ஆரம்பித்து நேரத்தை வெட்டியாக்குங்கண்னே

  4. வெட்டிப்பேச்சு பேசாம உருப்பட வழி பாருங்கண்ணே

  5. இந்து மதத்தில் உள்ள ஓட்டைகளை பெரியார் வெளிப்படுத்தினார்.கிறித்துவத்தின் ஓட்டைகளை சில படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.ஆனால் இஸ்லாமை யாரும் தொட துணிந்ததில்லை .தன்னை நாத்திகன் என்று சுயதம்பட்டம் அடித்துகொள்ளும் மனிதர்கள் கூட இந்த மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட வக்கற்றவர்களாக இருந்ததை வரலாறு சொல்லும்.ஆனால் தோழர் செங்கொடி தொடர்ந்து தனக்கு வந்த (அடிப்படைவாதிகளின்) எதிர்ப்பையும் மீறி மக்களுக்கு உண்மையை உணர்த்தியமைக்கு நன்றி நன்றி நன்றி.நான் ஒரு நாத்திகன்.ஆனால் நான் நினைப்பது ஏன்இந்து மதத்தை எதிர்க்கும் அளவிற்கு மற்ற மதங்களை எதிர்ப்பதில்லை?பதில் ஓட்டுபொறுக்கும் அரசியல் என்பதை நான் உணர்த்து கொண்டேன்.ஆனால் நீங்கள் தைரியமாக இந்த மறைக்கப்பட்ட இஸ்லாமியத்தின் ஓட்டைகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியவிதம் அருமை.உங்களை எவ்வளவு பாராட்டினாலும்தகும்.மீண்டும் ஒரு நன்றி.

  6. senkodi, ///இத் தொடரை தொடங்கும்போது அனைத்து திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் மறுப்பும் கிளம்பிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் அறிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மறுப்பேதும் வரவில்லை. இத்தொடருக்கு வந்த எதிர்ப்பின் அளவில் கூட மறுப்புரைகள் வரவில்லை///.
    தஸ்லிமா,சல்மான் ருஷ்டி போல் உலகப் புகழுக்கு ஆசைப் பட்டு ஆரம்பித்தீர்கள் .///இது என்னில் ஏமாற்றத்தையே உண்டாக்கியது/// அவர்கள் அமெரிக்கா ஆதரவில் எழுதினார்கள்.நீங்கள் ரஷ்யா ஆதரவில் எழுதியுள்ளீகள்.அதனால்தான் என்னவோ?ஆனால் எங்கள் இறைவன் எதிர்ப்பு நிச்சயமாக உமக்கு கிடைக்கும்.காலம் பதில் சொல்லும்.காத்திருங்கள்.

  7. //ஆனால் எங்கள் இறைவன் எதிர்ப்பு நிச்சயமாக உமக்கு கிடைக்கும்.காலம் பதில் சொல்லும்.காத்திருங்கள்//

    நண்பர் இப்ராஹிம்
    எங்கள் இறைவன் என்று கூறுவது ஆய்வுக்குறியது இறைவன் என்பவர் குரான் மற்றும் ஹதிதுகளை நம்பி அதில் கூறியபடி வாழ்க்கை நடத்துபவர்களை மட்டும் காத்து வழி நடத்துகிறார்.மறுமை நாளில் அவர்களுக்கு சொர்க்கம் அளித்து மற்ற அனைவருக்கு நரகம் அளிக்கிறார்.

    நாம் கொஞ்சம் இறைவன் பற்றியும் பேசுவோம்.

    1.ஆதி காலத்தில் வான‌த்தையும் ,பூமியையும் படைத்தார்.

    2.பிறகு ஜின்களை படைத்தார்.

    3.பிறகு ஆதம் மற்றும் ஹவ்வா என்ற மனித ஜோடியை படைத்தார்.அவர்கள் சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தார்கள்.இந்த மனிதர்களையும் ஜின்களையும் அவர் படைத்ததே அவரை மட்டுமே வணங்குவதற்காகவே.

    4.அப்போதே ஆதமுக்கு உலகின் எல்லா பொருள்கள் பற்றிய அறிவு இருந்தது. அவரால் பேச முடிந்தது. (குரான் 2:31௪0).

    5. ஜின்களை ஆத்மை வணங்க சொல்ல அதில் இப்லீஸ் என்ற ஜின் வணங்க மறுத்ததாஅல் சைத்தான ஆகி விட்டார்.

    6. இப்லீஸ் ஆத்மை தவறாக வழி நடத்தி கடவுளின் சொல்லை மீற வைத்ததால் உலகைன் முதம் மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு பூமிக்கு அனுப்ப பட்டார்கள்.

    7. பிறகு பல த்லைமுறை கடந்த பிறகு உலகில் நூஹ்(நோவா)வை தவிர வேறு யாரும் இறைவனை வணங்கவில்லை. ஆகவே உலகை அழித்துவிட முடிவு செய்தார். நூஹ் மற்றும் குடும்பத்தினா மட்டும் ஒரு கப்பல் கட்டி உலகில் உள்ள நைத்து மிருகங்களிலும் ஒரு ஜோடியோடு ஏறி கொள்ள ,மற்ற மனிதர்களை எல்லாம் இறல்வன் பெரிய மழை பெய்ய வைத்து அழித்தார்.

    8. பிறகு கூட மனிதர்கள் அந்த விதமாகவே இருந்து வந்தார்கள்.இப்ராஹிம் என்பவர் இறைவனுக்கு உண்மையாக இருந்ததால் அவரையும் அவர் வம்சத்தினரையும் இறைவன் தேர்ந்தெடுத்தார்.

    9. நிறைய தூதர்கள்,தீர்க்கதரிசிகள் இறைவனால் அனுப்ப்ப பட்டும் மனிதர்கள் திருந்தவில்லை.

    10. இதில் சுமால் 90% தூதர்கள்,தீர்க்க தரிசிகள்யூதர்கள். இவர்களை எகிப்தில் இருந்து மூசா தலைமையில் க்டலை பிளந்து வந்து அங்கு இருந்தவர்களை எல்லாம் துரத்தி விட்டு பாலஸ்தீனத்தை இறைவன் யூதர்களுக்கு கொடுத்தார்.இதனை இன்னும் யூதர்கள் தவறாமல் இறைவன் சொன்னதை செய்து வருகின்றனர்.

    11. ஒவ்வொரு தூதருக்கும் இறைவன் கொடுத்த வேத்த்தை இந்த இப்லீசும் ,யூதர்களும் சேர்ந்து மாற்றி கெடுத்து விடுகிறார்கள். யூதர்களிடம் கொடுத்தால் இப்லீசிடம் கொடுத்து விடுகிறார்கள் என்று இறைவன் ஆலோசித்து.அராபியர்களில் ஒருவரான திரு முகமது அவர்களிடம் கொடுப்பது என்று முடிவு செய்தார்.
    அவருக்கு எழுதப் படிக்க தெரியாமல் இருந்தது கூட இறைவன் அவை தேர்ந்தெடுக்க முக்கியமான காரணமாகும். படிக்க தெரிந்தால் தான யோசித்து மாற்றுவார்கள்.இப்பொழுது கொடுக்கப் படும் வேதம் எவ்வளவு படித்தாலும்,எவ்வளவு நாள் ஆனாலும் ஒரு மனிதனுக்கும் அர்த்தமே புரியக்கூடாது என்று தீர்மானித்தார் இறைவன். அர்த்தம் புரிகிறதோ இல்லையோ வேதம் மட்டும் பத்திரமாக இருக்க வேண்டும்,எததனை தடவைன் வேதம் இறக்கி இறக்கி ஓய்ந்து விட்டார் கடவுள்.

    மொத்தம்மக கொடுத்தால் பிரச்சிஅனை என்று கொஞ்சம் கொங்சமாக கொடுத்து ,இடையில் சில தடங்கல் வந்தாலும் 23 வருடங்களில் வெற்றிகரமாக வகுரானை இறக்கி.

    முகமது தன்க்கு ஜிப்ரயீல் சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி மனப்பாடம் ஆக்கி வைத்து கொண்டார். மனித பதிவுகள் மூலமாகவே குரான் இருந்தது.

    12. முகமது ம்ற்ற தூதர்கள் போல இல்லாமல் மிகவும் விசுவாச்மாக இருந்ததால் இவரே சிறந்த தூதர்,மற்றும் கடைசி தூதர், என்று இறைவன் முடிவு செய்து அவரை எடுத்துக் கொண்டார். இப்லீஸை முதல் முதலாக இறைவனானல் முகமது உதவியுடன் தோற்கடிக்க முடிந்தது.அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.

    13.முகமதுக்கு பிறகு இனி இறைவன் மறுமை நாள் வர உலகில் எது நடந்தாலும் கண்டுகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டார்.முகமதுவிற்கு பிறகு எந்த மனிதனிடத்திலும் இறைவன் பேசப் போவதில்லை.

    14. குரானில் எவ்வளவு புரியுதோ முடிந்த வரைக்கும் பின் ப்ற்றட்டும்,ஆனால் குரான மட்டும் மாறக்கூடாது.சொர்க்கத்தில் உள்ள பிரதி மாதிரியே அப்படியே இருந்தால் போதும் என்று இறைவன் முடிவு செய்து விட்டார். வேதம் இறக்கி இறக்கி இறைவன் களைப்படைந்து விட்டதால் ஓய்வு எடுக்கிறார். எல்லா மனிதர்களையும் மறுமை நாளில் பார்த்துக் கொள்வோம்,கொஞ்ச நாளைக்கு இந்த மனிதப் பசங்க சங்காத்தமே வேண்டாம் என்று இறைவன் நினைக்கிறார்.

    15 மதவாதிகளும் ஹதிது,விளக்கம் என்று எவ்வளவோ எழுதினாலும் குரானின் அற்புதம் என்ன வென்றால் இன்று ஒரு அறிவ்யல் கண்டுபிடிப்பு வந்தாலும் அதற்கு ஆதரவாக ஒரு குரான் வசனம் காட்ட முடியும் என்பதுதான்.அதற்கு எதிராகவும் வசனம் காட்ட முடியும் என்பதே குரான் இறைவனின் அற்புதமான் ஈடு இனையில்லாத படைப்புதான் என்பதை உறுதி செய்கிறது.

    15. நம்முடைய மதவாதிகளும் 1400+ வருடங்களகக் அவரருக்கு தோன்றிய படி விளக்கம் அளித்து மக்களை சொர்க்க கனவில் மிதக்க வைத்து வ்ருகின்றனர்.சொர்க்க க‌னவில் பலர் காத்திருக்கின்றனர்.

    இதுதான் நடந்தது.

  8. செங்கொடி,
    உங்களுடைய “இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” என்ற தொடரை விரும்பி படித்து வருகிறேன்.பாராட்டி எழுத பல தடவை நினைத்து வசதி கிடைக்கவில்லை. எனது பாராட்டும், நன்றியும்.

  9. நேரடி விவாதத்தில் ஒருவர் கூறுகின்றவற்றை உறுதிப்படுத்துவது கடினமான செயலாக இருக்கும். இந்த அரபிப் பதத்திற்கு சரியான விளக்கம் இதுதான். இப்படிதான் விளங்கிக் கொள்ள வேண்டும என கதையளப்பார்கள். இது வரை பி.ஜே தனது நூல்களின் அல்லது பதிவுகளின் மறுப்புகளுக்கு பதில் எழுதியதாக சரித்திரம் இல்லை. அத்துடன் அல்லாவுக்கு உருவம் உண்டு என்று சர்ச்சையை கிளப்பி அவற்றுக்கு விளக்கம், நேரடி விவாதம் நடத்துபவர் இந்நிலையில் நீங்கள் அவருடன் நேரடி விவாதத்திற்கு செல்வது தற்கொலை செய்வது கொள்வதற்கு ஒப்பான செயலாகும்.

  10. ///பிரிட்டிஷ் உளவுத்துறையே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. “ஒரு அறிஞர் என்ற முறையில் கம்யூனிச எதிர்ப்பு நூல்கள் எழுத வேண்டும்; தமக்கு அறிமுகமாகின்ற நண்பர்களில் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்பதை போலீசுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். இந்த முக்கியமான பணிகளுக்காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுத்தோம்” என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். ரஸ்ஸல் மட்டுமல்ல, ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகிய நான்கு பிரபல அறிவாளிகள் உண்மையில் கம்யூனிச எதிர்ப்பு உளவாளிகள் என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். அறிவுலகத்தினரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்செய்தி 1996 ஜூலையில் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ஃபிரான்டியர் (ஜூலை 2531, 1999) வார இதழ் வெளியிட்டுள்ள ஓர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.///

    _____________________________________________

    Mr.Senkodi,

    Why you hate ISLAM ?

    What about YOU ?

  11. hi
    senkodi

    before discussing anything you should have thorough knowledge of that religion
    so first try to understand the concept of islam

    read in the name of lord who created you with the clot of blood

    i am not going to abuse because you are lacking the knowledge

    you are ignorant

    chenkodi

    try to read quran with proper translation

  12. நேரடி விவாதத்தில் கலந்து கொள்ளவேன் என்று நீங்கள் குறிய வாக்கை நிறைவேற்றுங்கள். அதை விட்டு விட்டு நேரடி விவாதம் பயனற்றது என்று இப்போதே புலம்ப ஆரம்பிக்காதிர்கள்.

  13. //try to read quran with proper translation//

    சரியான தமிழ் மொழி பெயர்ப்பு எது?.
    பி ஜேவின் மொழி பெயர்ப்பா?.

    அதில் குரான் 3:81க்கு அவர் மொழி பெயர்ர்ப்பும் விளக்கமும் சரியானதா என்று கூறினால் நல்லது.

  14. ///சரியான தமிழ் மொழி பெயர்ப்பு எது?.
    பி ஜேவின் மொழி பெயர்ப்பா?.///

    மொழிபெயர்ப்புகள் சரியா தவறா என்பதல்ல‌ மாறாக அவரவர் விளங்கியது என்று பொருள்

  15. //அதை விட்டு விட்டு நேரடி விவாதம் பயனற்றது என்று இப்போதே புலம்ப ஆரம்பிக்காதிர்கள்//
    யார் புலம்புகிறார் என்று பாருங்கள்.

    சேஷாச்சல பெரியார் தாச சித்தார்த்த அப்துல்லா அவர்கள் பி ஜேவை புலம்ப வைத்து விட்டார்.இந்த சுட்டியை படித்து பாருங்கள்.

    http://www.onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/abthullaavuku_madal/

  16. //மொழிபெயர்ப்புகள் சரியா தவறா என்பதல்ல‌ மாறாக அவரவர் விளங்கியது என்று பொருள்//
    சரியான மொழி பெயர்ப்பு இல்லாமல் குரான் விளங்க முடியுமா?.ஆகவே தமிழில் ஒரு சரியான மொழி பெயர்ப்பு பரிந்துரை செய்யுங்கள்.அதோடு இந்த குரான் 3:81 ஐ சரியாக எப்படி விளங்குவது என்பதையும் சொல்லுங்கள்.நீங்கள் விளங்கியதை சொன்னால் மட்டும் போதும்.

  17. //read in the name of lord who created you with the clot of blood//

    நண்பரே வணக்கம்,

    நீங்கள் சொன்ன வசனம் அல்‍அலக் சூரா 96:1_3 வசனமாகும். குரானில் முகம்மதுவிற்கு வழங்கப்பட்ட முதல் வசனாமாக‌ பல அறிஞர்கள் கூறுகின்றனர்.

    தமிழ்குரான்

    96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

    96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

    96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி

    பி ஜே அவர்களின் மொழி பெயர்ப்பு

    1.(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக

    2. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.

    3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.
    ____________________

    1. அலக்‍_ரத்தக் கட்டி_கருவுற்ற சினை முட்டை ஆகிறது. மொழி பெயர்ப்பு சரியா?
    இந்த அலக் என்ற அரபி பதததிற்கு கருவுற்ற சினை முட்டை என்ற பி ஜேவின் மொழி பெயர்ப்பை சேஷாசல பெரியார்தாச சித்தார்த்த அப்துல்லா வியந்து பாராட்டி உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பி ஜே வை பற்றி ஏதோ சொல்லி விட்டதால் இந்த வசனம் வரைக்கும் போய் விட்டது அவர்கள் சண்டை.

    2.முகமது எழுதப் படிக்கத் தெரியாதவரை படி(ரீட்) என்றால் எப்படி?.எல்லா தமிழ் மொழி பெயர்ப்புகளிலூம் ஓதுவீராக(ரிசைட்) என்றே மொழி பெயர்த்து உள்ளனர்.

    உங்கள் கருத்தை கூறுங்கள்.

    http://en.wikipedia.org/wiki/Muhammad's_first_revelation

  18. colvin///இது வரை பி.ஜே தனது நூல்களின் அல்லது பதிவுகளின் மறுப்புகளுக்கு பதில் எழுதியதாக சரித்திரம் இல்லை.///
    உங்களின் எந்த மறுப்புக்கு அவர் பதில் எழுதவில்லை.ஒவ்வெரு மறுப்புக்கும் பதிலடி கொடுப்பதே அவருடைய சிறப்பு.பொய்யிக்கு அளவே இல்லையா?

    ///அத்துடன் அல்லாவுக்கு உருவம் உண்டு என்று சர்ச்சையை கிளப்பி அவற்றுக்கு விளக்கம், நேரடி விவாதம் நடத்துபவர் இந்நிலையில் நீங்கள் அவருடன் நேரடி விவாதத்திற்கு செல்வது தற்கொலை செய்வது கொள்வதற்கு ஒப்பான செயலாகும் .///
    இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்ளாதவர்கட்குத்தான் அல்லாஹ்வுக்கு உருவம் சர்ச்சையாகத் தெரியும்.
    செங்கொடியை நேரடி விவாதத்துக்கு செல்வது தற்கொலை பண்ணுவது போல் என்று கூறியுள்ளீர்களே ,செங்கொடி எந்த பதிலும் சொல்லவில்லை.சங்கரும் இந்த கருத்தில் சங்கமிக்க வில்லை.ஒருவேளை உங்கள் கருத்து சரியாகத்தான் இருக்குமோ.ஜமாலி அளவுக்கு செங்கொடிக்கு சமாளிக்கத் தெரியாதா ?

  19. ஆர்தோடக்ஸ் முஸ்லிம் , முஸ்லிம் என்றால் கட்டுபட்டவன் அதாவது குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் கட்டுபட்டவன் என்று பொருள். நபி[ஸல்] மருத்துவ ஆலோசனையான கத்னா செய்வது, சிறுநீர் கழித்தால்தண்ணீர் விட்டு சுத்தம் செய்வது ,நகம் வெட்டுவது, உடலில் தேவை அற்ற முடிகளை ,அதிக பட்சம் நாற்பது நாட்களுக்குள் அகற்றுவது, கட்டாயமாக செருப்பு அணிவது,பெண்களுக்கு சொத்து உரிமையை பேணுவது,பெண்கள் மீது அவதூறு சொன்னால் .எண்பது கசையடி வழகுவது,தாயை உலகில் மிக சிறந்த,நண்பராக கொள்வது,போன்று ஏரளாமான காலையில் எழுந்தது முதல் படுக்கை அறை வரை மனித ஒழுங்குகள் சொல்லுவது,பிறந்தது முதல் மரணக் குழியில் வைக்கும் வரை நல்ல விதிமுறைகளை வகுத்து தந்தது,இவைகள்தான் முஸ்லீமின் ஐதிகம் ,இவற்றினை மறுத்து விட்டு ஐதிகவழி நடக்கும் [குர்ஆனுக்கும் ,நபிவழிகட்கும் ]கட்டுபட்டவன் என்று சொல்லுவதற்கு வெட்கம்,மானம் சூடு,சொரணை இல்லையா? செங்கொடி,சங்கர் விமர்சிக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்களை முஸ்லிம் என்று சொல்லவில்லை.

  20. சங்கர்,////தமிழில் ஒரு சரியான மொழி பெயர்ப்பு பரிந்துரை செய்யுங்கள்///
    போயும்,போயும் யாரிடம் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு கேட்டுள்ளீர்கள். பீ,ஜே யின் மொழிபெயர்ப்பே சரியானது.அதில் தவறு கண்ட மதீனா யுனிவர்சிட்டியில் பேராசிரியராக இருக்கும் முஜீப் என்பவருடன் நேரடி விவாதத்தில் அவர் சுட்டிகாட்டிய தவறுகளுக்கு விளக்கம் கொடுக்கப் பட்டது.மேலும் விளக்கத்திற்கு அடுத்த விவாதத்திற்கு ஒப்புக்கொண்டு பின் மறுத்து விட்டார்.அதில் நீங்கள் விளக்கம் கேளுங்கள் உங்களுக்கான பதில்கள் கிடைக்கும்

  21. சங்கர்,//// 1. அலக்‍_ரத்தக் கட்டி_கருவுற்ற சினை முட்டை ஆகிறது. மொழி பெயர்ப்பு சரியா?////
    அரிசியும்,உளுந்தும் அரைத்த மாவை,நீராவினால் வேகவைத்தது, என்று சொல்லுவதை” இட்லி ” என்று சொல்லுவது போல் ,அட்டைபோன்று ஒட்டி உறிஞ்சும் ஒன்று என்பதை “சினைமுட்டை” என்று மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது

  22. நண்பர் இபுறாஹிம்,
    //அரிசியும்,உளுந்தும்,அரைத்தமாவை,நீராவியினால் வேகவைத்தது என்று சொல்லுவதை ‘இட்லி’ என்று சொல்லுவதுபோல் அட்டை போன்று ஒட்டி உறிஞ்சும் ஒன்று என்பதை ‘சினைமுட்டை’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது//

    அருமையான விளக்கம் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறு மனிதன் அழகாக குழப்பமில்லாமல் தெளிவாக இட்லிக்கு ஃபார்முலா விளக்கம் தந்துவிட்டான். ஆனால் அரபுநாட்டு கடவுளின் ‘அலக்’குக்கு ஃபார்முலா சொன்னது முகம்மதுவா? அல்லது பி.ஜே வா? முகம்மது எனில் ஹதீஸிலிருந்து ஃபார்முலா ஆதாரம் இருந்தால் தெளிவுபடுத்தவும். முகம்மதுவை தவிர ஆளாளுக்கு விளக்கம் தந்தால் திருத்தப்பட்ட வேதம் என்றாகிவிடாதா?

  23. நண்பர் இப்ராஹிம்
    ஏன் நம்ம ஆர்த்தோடாக்ஸ் மீது இந்த கோபம்?. விட்டால் 111 ஆம் சுரா மதிரி சாபம் கொடுப்பீடர்கள் போல தெரிகிறதே.என்று என்னை திட்டப் போகிறீர்களோ?. பொறுமை கடலினும் பெரிது.ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை. நாங்கள் நாத்திகர்கள் உங்கள் கொள்கைகளை ஏற்காவிட்டாலுல் அந்த கருத்துக்க்கான உங்கள் மற்றும் அனைவ்ரின் உரிமையை ஆதரிக்க்கிறோம்.
    சரி நாம் தொடருவோம்
    _______________

    பி ஜேவின் மொழி பெயர்ப்பு பல் தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் சில வகைகளில் வேறுபடுகிறது. இந்த அலக் என்பது அந்த வாக்கியத்திற்கு பொருந்தி வருகிறது. இந்த லஅலக் என்பது குரன்னில் இன்னும் சில இடங்களில் பயன் படுத்தப் பட்டு உள்ளது. இந்த அர்த்தம் எல்லா இடங்களில் பொருந்தி வந்தாலும் வாக்கிய அமைப்பு பற்றி சில விமர்சனங்கள் உண்டு என்றாலும் அது ஒரு முடிவுக்கு வராம்லே இழுக்கும் என்று தோன்றுகிறது.
    __________________

    நாம் பி ஜேவின் மொழி பெயர்ப்பு என்ற குறுகிய தலைப்புக்குள் செல்வோம்.
    ஆகவே எளிதாக கூறக்குடிய குற்றச்சாட்டு கூறுகிறேன்..

    sura 111

    1.எதிர்காலத்தில் பிற குரான்கள் கூறுவதை ஜே கடந்த காலத்தில் கூறுகிறார்.
    (எ.கா)(வசனம் 1&2).

    2.வசனம் 3&4 .இதனை எதிர்காலத்தில் கூறுகிறார்..

    3.மீண்டும் வசனம் 5 கடந்த காலத்தில் கூறப்படுகிறது.

    அத்தியாயம் : 111
    தப்பத்- அழிந்தது( பிஜே மொ.பெ)

    மொத்த வசனங்கள் : 5
    இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
    1. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான்.
    2. அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.
    3, 4. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.
    5. அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

    மற்ற குரான் மொ.பெ

    111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
    111:2 مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
    111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
    111:3 سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
    111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
    111:4 وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
    111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
    111:5 فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
    111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
    ஸூரா 110

    இதில் வசனம் 1,3,4,&5 எதிர்காலத்தில் கூறப் பட்டு உள்ளது.
    வசனம்2 மட்டும் கடந்த காலத்தில் கூறப் பட்டு உள்ளது.

    பொதுவாக நீங்கள் சொல்லும் விளக்கமானது. அரபி வார்த்தைகளில் காலம் குறித்து (கடந்த ,நிகழ்,மற்றும் எதிர்) ஒரெ வார்த்தையே உபயோகப் படுத்தப் படுகின்றது என்று.

    இது திரு முகமது அவருடைய மமா அபு லஹாம் என்பவரை பார்த்து விடும் சாபம் என்று கொள்ளலாம்.

    இதனை முகமது சொல்லும் போது அபுலஹாப்,அவருடைய செல்வம்,அவருடைய மனைவி ஆகியோர் நல‌மாகவே இருந்திருக்க வேண்டும்.

    நன்றாக‌ இருப்பவர்களைத்தான் கெட்டுப்போ என்று சாபம் விடலாம்.

    இங்கே சாபம் விட்ட்டது சரியா தவறா என்பது பிரச்சினை இல்லை.

    எல்லாமே எதிர்காலத்தில் தானே சொல்லப் பட்டு இருக்க வேண்டும்.

    நான் பார்த்த ஆங்கில மொழி பெயர்ப்பு அனைத்திலும் எதிகாலமே குறிப்பிடப் பட்டு உள்ளது.

    பிறகு அபு லஹாப் என்ன ஆனார்? சாபம் பலித்ததா?

    மொழி பெயர்ப்பு பற்றி உங்கள் கருத்து.

  24. //முகம்மது எனில் ஹதீஸிலிருந்து ஃபார்முலா ஆதாரம் இருந்தால் தெளிவுபடுத்தவும்//
    வணக்கம் ர‌ஃபி
    இந்த 96ஆம் சுராதான் முதன் முதலில் ஜிப்ரயீல் முகமதுக்கு வழங்கிய சூரா. இது நடந்தது. 610 ரமதான் மாதம். இந்த ஹதிதை கூறுபவர் ஆயிஷா .அப்போது அவர் பிறந்தே இருப்பாரா என்பதே சந்தேகம்தாம்.

    Narrated ‘Aisha
    (the mother of the faithful believers) The commencement of the Divine Inspiration to Allah’s Apostle was in the form of good dreams which came true like bright day light, and then the love of seclusion was bestowed upon him. He used to go in seclusion in the cave of Hira where he used to worship (Allah alone) continuously for many days before his desire to see his family. He used to take with him the journey food for the stay and then come back to (his wife) Khadija to take his food like-wise again till suddenly the Truth descended upon him while he was in the cave of Hira. The angel came to him and asked him to read. The Prophet replied, “I do not know how to read.
    The Prophet added, “The angel caught me (forcefully) and pressed me so hard that I could not bear it any more. He then released me and again asked me to read and I replied, ‘I do not know how to read.’ Thereupon he caught me again and pressed me a second time till I could not bear it any more. He then released me and again asked me to read but again I replied, ‘I do not know how to read (or what shall I read)?’ Thereupon he caught me for the third time and pressed me, and then released me and said, ‘Read in the name of your Lord, who has created (all that exists) has created man from a clot. Read! And your Lord is the Most Generous.” (96.1, 96.2, 96.3) Then Allah’s Apostle returned with the Inspiration and with his heart beating severely. Then he went to Khadija bint Khuwailid and said, “Cover me! Cover me!” They covered him till his fear was over and after that he told her everything that had happened and said, “I fear that something may happen to me.” Khadija replied, “Never! By Allah, Allah will never disgrace you. You keep good relations with your Kith and kin, help the poor and the destitute, serve your guests generously and assist the deserving calamity-afflicted ones.”
    Khadija then accompanied him to her cousin Waraqa bin Naufal bin Asad bin ‘Abdul ‘Uzza, who, during the PreIslamic Period became a Christian and used to write the writing with Hebrew letters. He would write from the Gospel in Hebrew as much as Allah wished him to write. He was an old man and had lost his eyesight. Khadija said to Waraqa, “Listen to the story of your nephew, O my cousin!” Waraqa asked, “O my nephew! What have you seen?” Allah’s Apostle described whatever he had seen. Waraqa said, “This is the same one who keeps the secrets (angel Gabriel) whom Allah had sent to Moses. I wish I were young and could live up to the time when your people would turn you out.” Allah’s Apostle asked, “Will they drive me out?” Waraqa replied in the affirmative and said, “Anyone (man) who came with something similar to what you have brought was treated with hostility; and if I should remain alive till the day when you will be turned out then I would support you strongly.” But after a few days Waraqa died and the Divine Inspiration was also paused for a while.
    Narrated Jabir bin ‘Abdullah Al-Ansari while talking about the period of pause in revelation reporting the speech of the Prophet “While I was walking, all of a sudden I heard a voice from the sky. I looked up and saw the same angel who had visited me at the cave of Hira’ sitting on a chair between the sky and the earth. I got afraid of him and came back home and said, ‘Wrap me (in blankets).’ And then Allah revealed the following Holy Verses (of Quran):
    ‘O you (i.e. Muhammad)! wrapped up in garments!’ Arise and warn (the people against Allah’s Punishment),… up to ‘and desert the idols.’ (74.1-5) After this the revelation started coming strongly, frequently and regularly.”
    Sahih Bukhari 1:1:3, See also: Sahih Bukhari 6:60:478, Sahih Bukhari 6:60:479, Sahih Bukhari 6:60:480 & Sahih Bukhari 9:87:111

  25. வணக்கம் சங்கர்,

    ஆதாரம் தந்தமைக்கு நன்றி ஆனால் புரியவில்லை. அலக்_இரத்தக்கட்டி_எப்படி கருவுற்ற சினைமுட்டையாக மாறிய ஃபார்முலா அந்த ஹதீதில் உண்டா? அல்லது அலக் என்பதற்கு கருவுற்ற சினை முட்டை என்பதாக முகம்மது விளக்கம் ஏதும் தந்திருக்கிறார்களா? இந்த ஆதாரம் இருந்தால் கொஞ்சம் தமிழில் தந்து உதவ‌ இயலுமா? என்னிட‌ம் ஹ‌தீது புத்த‌கம் தற்சமயம் இல்லை.

  26. நான் கொடுத்த ஆதாரமானது இந்த 96ஆம் சூரா வழங்கப்பட்டதான சூழ்நிலையை கூறுகிறது. இந்த ஹத்டிதை கூறுபவர் ஆயிஷா. முகமதுவிற்கு முதல் வெளிப்பாடு வந்த ஆண்டு 610 அதில் ஆயிஷா பிறந்தே இருக்க மாட்டார்.அவருக்கு யாராவது கூறியிருந்தால் மட்டுமே சாத்தியம். யார் கூறினார்கள் என்பதையும் கண்டு பிடிப்போம்.
    ___________
    இப்போது கதைக்கு வருகிறேன். அப்படியே மொழி பெயர்க்கிறேன்
    ஆயிஷா(நம்பிக்கையாளர்களின் தாய்) கூறுகிறார்.இறைதூதருக்கு இறை வெளிப்பாடு நல்ல கனவுகளில் இருந்து நன்வாயிற்று.அவர் தனிமையை நாடிச் சென்று ஏக இறைவனையே தொழுவது வழக்கம்.உணவு கூட எடுத்து சென்று குடும்பத்தினரையே சந்திக்காமல் பல நாட்கள் தொழுவது வழக்கம். ஒரு சமயம் ஹிரா குகையில் தொழும் போது ஒரு த்ஹுதன் வந்து ஓதுவீராக என்று கூறினார்.அதற்கு முகமது ஓதுவது அறியேன்டி என்றார்.உடனே அந்த தூதன் அவரால் தாங்க முடியாத அளவிற்கு இறுக்கி பிடித்தார். பிறகு விட்டுவிட்டு திரும்பவும் அத்தூதர் ஓது என்றார்,முகமது நான் ஓதுவது அறியேன் என்றார்.
    இது போல் மூன்று முறை நடந்தது.
    பிறகு அத்தூதர் கூறிய வசனக்கள்தான் இவை.
    _____________________________________
    96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
    96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
    96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி
    __________________________________________
    பி ஜே அவர்களின் மொழி பெயர்ப்பு
    1.(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக
    2. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.
    3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.
    ________________

    முகமது இந்நிகழ்ச்சி தந்த பரவசத்தில் அவர் இதயம் துடிக்க அவர் இல்லம் வந்தார். மனைவி கதிஜாவிடம் சென்று என்னை முழுவதும் போர்வையால் மூடு என்றார். கதிஜா அவரை போர்வையால் முழுவதும் மீடுயபி அவர் தனக்கு நேரிட்ட அனுபவத்தை கூறி எனக்கு ஏதோ ஆகிவிடும் என்று பயமாக இருக்கிறது என்றார். அதற்கு கதிஜா அல்ல மீது ஆணையாக அப்படி கூறாதீர்கள்.அல்லா நல்லவராகவே வாழ்ந்த உங்களை கைவிட மாட்டான் என்று கதிஜா கூறினார்.

    பிறகு கதிஜா தன்னுடைய (தூரத்து)சகோதரர் வராக் இபின் என்பவரிடம் அழத்து சென்றார். அவர் ஒரு கிறித்தவர் மற்றும் ஹீப்ரு(யூத) மொழியில் தேர்ந்தவர். அவரிடம் சென்று தம்பதியினர் நடந்ததை உரைக்க அவர் முகமதுவே நீங்கள் கண்டது ஜிப்ரியேல் என்ற தூதராக்த்தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.இத்தூதரே மூசாவிற்கும் இறை செய்தி கொடுக்க அனுப்ப பட்டவர் என்றார். முகமது சமாதானமானார்.

    பிறகு அவருக்கு 23 வருடங்களாக செய்தி வந்ததும்,அது குரான் ஆனதும் தெரிந்ததே.
    _________________________________

    இந்த96:2 ல் வரும் அலக் என்ற வார்த்தை 5 இடங்களில் வருகிறது. வரும் எலா இடங்களிலும் படைத்தல் தொடர்பாகவே வருகிறது.

    22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

    23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

    40:67. அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் – இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).

    75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

    96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்
    ___________________

    இதில் பி ஜே வின் மொழி பெயர்ப்பில் அவராகவே அலக் என்பதற்கு கருவுற்ற சினை முட்டை என்று போட்டு விட்டார்.

    __________________________

    இறைவனைன் படைத்தலின் பரிணாம வளர்ச்சிஅயை பாரீர்

    22:5: இந்திரியம்_அலக்_ அரைகுறையான தசைக் கட்டி_மனிதன்(குழ்ந்தை)

    23:14: இந்திரியம்_அலக்_ தசைக் கட்டி_எலும்பு+சதை_மனிதன்(குழ்ந்தை)

    40:57: மண்_இந்திரியம்_அலக்_ மனிதன்(குழ்ந்தை)

    75:38: அலக்_செவ்வையான ம‌னிதன்(குழந்தை)

    96:2: அலக்_மனிதன்

    _____________________________
    ஏன் இத்தனை வித்தியாசமாக ஒரே விஷயத்தை சொல்ல வேண்டும்.

    ஒரே விஷயத்தை பலர் வெவ்வேறு வித்மாக கூற எல்லாவற்றையும் எழுதி விட்டார்களோ?
    அல்லது முதல் முறை ஜிப்ரயீலை கண்ட பயத்தில் முகமது மறந்து விட்டாரா?
    ___________________

    http://www.samuthayaotrumai.com/?p=303

    இதனை பற்றி ஒரு இஸ்லாமியரின் பதிவை பாருங்கள்

  27. சங்கர்,பீ.ஜே வுடைய மொழிபெயர்ப்பு மட்டிலுமல்ல.இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் வெளியீட்டிலும் அதுபோன்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    அபுலஹப் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் மாமா அன்று,பெரியதந்தை,இந்த வசனத்திற்கு குறிப்பு எண்
    356 இல் விளக்கம் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் புகாரி ஹதீத் களிலும் விளக்கம் உள்ளது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.அபுலஹப் தனது கைகளால் மண்ணை அள்ளி நபி[ஸல்] அவர்கள் மீது வீசியதால் ,அதன் மூலம் அந்த கைகள் நாசமாகிவிட்டன ,அவனுடைய செல்வங்களும் அவன் செய்த இந்த காரியத்தை தடுக்கும் அளவில் அவனுடைய பண்பை வளர்க்கவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கலாம்.,.உதாரணமாய் ,சங்கரின் தந்தை,கம்யுனிஸ்ட்க்கு எதிரானவராக இருப்பார்.தங்களின் தந்தையின் நண்பர் ,சங்கர் எப்படி இருக்கிறார் என்று கேட்டால், நீங்கள் செல்வ செழிப்புடன் நலமாக இருந்தாலும் உங்கள் தந்தை,அவன் நாசமாக போயிட்டான் என்று கூறுவது வழக்கம். அதே போன்று தான் இங்கே சொற்கள் கையாள பட்டிருக்கலாம்.வசனம் 5 நிகழ காலத்தில்தான் உள்ளது,அதாவது அவளுக்கு மரணம் எப்போதும் நிகழலாம் என்ற தொனியில் உள்ளது. அபுலகபும் அவனது மனைவியும் நபி[ஸல்] காலத்திலேயே மிக கேவலமான முறையில் இறந்தார்கள்.அபூலகபின் உடல் மிககேவலமான முறையில் தெருவில் கிடந்தது..

  28. சங்கர்,. ///இந்த அர்த்தம் எல்லா இடங்களில் பொருந்தி வந்தாலும் வாக்கிய அமைப்பு பற்றி சில விமர்சனங்கள் உண்டு என்றாலும்///
    ///இதில் பி ஜே வின் மொழி பெயர்ப்பில் அவராகவே அலக் என்பதற்கு கருவுற்ற சினை முட்டை என்று போட்டு விட்டார்///
    குர் ஆனின் நல்ல தமிழாக்கம் எது வென்று சொல்லியாகிவிட்டது.அதில் உள்ள விளக்கம் பொருந்திவருகிறது என்றும் கூறிவிட்டீர் .பிறகு எதற்கு அவராகவே போட்டுவ்ட்டார் என்று எழுத வேண்டும்?பீ.ஜே வுடைய மொழிபெயர்ப்பில் தவறு இருந்தால் கேளுங்கள். மற்றவற்றோடு அதை ஒப்பிட்டு மட்டந்தட்டி காட்டவேண்டும் என்று ஏன் இந்த பொல்லாத ஆசைகள்?.
    __________________________

  29. //மற்றவற்றோடு அதை ஒப்பிட்டு மட்டந்தட்டி காட்டவேண்டும் என்று ஏன் இந்த பொல்லாத ஆசைகள்?.//
    நண்பர் முகமதுவின் பின்னூட்டட்தில் இருந்து சில பகுதிகள்
    _____________________

    மொழிபெயர்ப்புக்கள் என்ன சொன்னலும் Arabic dictionary என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
    புதிய அகராதி என்றால் மாற்றி விட்டீர்கள் என்று சொல்வீர்கள்
    அலகா என்பதற்கு பல பொருள் இருப்பதால் மொழிபெயர்ப்புகளில் ஏதாவ்து ஒன்று இருக்கும்
    பிரசித்தி பெற்ற Muhammed Ibn-Yaqub al-Firuzabadi(1329-1415) அகராதியில் இவ்வாறு வருகிறது
    1.Blood in its normal state or blood which is extremely red or which has hardened or congealed,
    2.a piece thereof
    3. Every thing that sticks ;
    4. Clay that sticks to hands;
    5. Unchanging enmity or love;
    6.Zu `alaq is the name of a hill of Banu Asad, where they defeated Rabi`ah ibn Maalik;
    7. An insect of water that sucks blood;
    8. That portion of a tree that is within the reach of animals.
    தமிழில்
    1. இரத்தக் கட்டி.
    3. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
    ____________________

    இந்த அலக் என்கிற வார்த்தை படைத்தல் குறித்தே குரானில் 5 இடங்களில் கூறப் படுகிறது. அகராதி அர்த்தங்களின் படி கருவுற்ற சினை முட்டை என்று கூற முடியாது.

    ஆனால் கருவுற்ற சினை முட்டை என்கிற வார்த்தை, குரானில் அலக் பயன் படுத்தப் பட்ட இடங்களில் பொருந்துகிறது.

    பொருந்துகிறது என்பது வேறு சரி என்பது வேறு.இப்படி பொருந்துகிற மாதிரி பல வார்த்தைகளை திறமையான பிரச்சாரகர் எவரும் சொல்ல முடியும்.

    நான் மட்டம் தட்டவில்லை .பாராட்டுகிறேன்.பி ஜே ஒரு திறமையான பிரச்சாரகர் என்பதையே இது குறிக்கிறது.

    _____________

    இறைவனைன் படைத்தலின் பரிணாம வளர்ச்சியை பாரீர்.

    22:5: இந்திரியம்_அலக்_ அரைகுறையான தசைக் கட்டி_மனிதன்(குழ்ந்தை)
    23:14: இந்திரியம்_அலக்_ தசைக் கட்டி_எலும்பு+சதை_மனிதன்(குழ்ந்தை)
    40:57: மண்_இந்திரியம்_அலக்_ மனிதன்(குழ்ந்தை)
    75:38: அலக்_செவ்வையான ம‌னிதன்(குழந்தை)
    96:2: அலக்_மனிதன்

    இந்த 5 இடங்களிலும் ஏன் வெவ்வேறு நிலைகள் கூறப்பட்டு உள்ளது?

    இந்த 5 வசனங்களும் ஒரே அர்த்தத்தைதான் கூறுகிறதா ?

    இந்த இந்திரியத்திற்கும் குழந்தை முழு வளர்ச்சி பெறுவதற்கும் இடையே உள்ள பல‌வித நிலைகளின் பெயர்களும் இந்த அலக் என்ற வார்த்தைக்கு பொருந்தும்.
    _______________________

    //இந்த வசனத்திற்கு குறிப்பு எண் 356 இல் விளக்கம் கூறப்பட்டுள்ளது.அபுலஹப் தனது கைகளால் மண்ணை அள்ளி நபி[ஸல்] அவர்கள் மீது வீசியதால் ,அதன் மூலம் அந்த கைகள் நாசமாகிவிட்டன /

    அதாவது இந்த வசனம் கூறப்படுவதற்கு முன்பே அபுலஹப்பின் கைகள் நாசமாகி விட்டன.

    பிறகே இந்த வசனம் கூறப்பட்டது.

    இதற்கு ஆதாரம் காட்டுமாறு வேண்டுகிறேன்

    _____________________________________

  30. வணக்கம் சங்கர்,
    தமிழாக்கத்திற்கு நன்றி. டார்வின் பரிணாமக் கொள்கையைச் சொன்னால் அது நிரூபிக்கப்படவில்லை என்கிறார்களே, அரபுநாட்டு ஆண்டவன் பரிணாமப் மட்டும் நிரூபித்துவிட்டார்களா? மற்றும் தங்களின் சமுதாய ஒற்றுமைப் பதிவையும் பார்வையிட்டேன்,கொஞ்சம் சிரிக்கலாம்.

  31. நண்பர் குரானியவாதி
    அந்த தளத்தில் சொன்ன பொன்னான கருத்துகள் அனைத்தையும் இங்கே மொழி பெயர்த்து கூறினால் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம்.
    முதலில் இந்த அலக் என்ற வார்த்தையின் நீங்கள் விளங்கும் அர்த்தம் என்ன ?`

  32. “அலக்” என்பதற்கு அதிக அதிகமாக விளக்கம் கேட்ட சங்கர்,உங்களுக்கு வேண்டிய விளக்கத்தை பெறுவதற்கு ‘குர்ஆனி’ சரியானதொரு லிங்கை கொடுத்துள்ளார்,நீங்கள்தான் அதிலிருந்து விளக்கம் பெற்றுக்கொள்ளவேண்டும் .உங்களுக்கு வரும் பலவிதமான சந்தேங்களுக்கு நீங்களே மொழி மாற்றி விளங்கிக் கொள்வதுதான் நல்லது.

  33. sankar,இந்த வசனம் கூறப்படுவதற்கு முன்பே எங்கே நாசமாகிவிட்டது?அபுலஹப் தன கைகளால்தான் மண்ணை அள்ளிவீசுகிறார் ,அப்போதுதான் அந்த வசனம் அருளப்பட்டுள்ளது.

  34. Exrafi,டார்வின் கொள்கை நிருபிக்கப்படவில்லை எண்பது மட்டுமல்ல. அது பொய்ப்பிக்கவும் பட்டது. .

  35. //அபுலஹப் தன கைகளால்தான் மண்ணை அள்ளிவீசுகிறார் ,அப்போதுதான் அந்த வசனம் அருளப்பட்டுள்ளது.//

    1.அப்போது வசனம் முகமது அபு லஹப்பை பார்த்து சொல்லப் பட்டது. அப்போது பி ஜே வின் abulahab கைகள் அழிந்தன என்று என்று கடந்த காலத்தில் கூறிய மொழி பெயர்ப்பு தவ‌றா?.

    2.திரு அபுலஹப்பின் கைகள் அழியட்டும் என்றுதாலே கூறியிருக்க வேண்டும்.

    3. அவனும் அழிந்தான் என்றும் பி ஜேவின் மொழி பெயர்ப்பு கூறுகிறது. அழிந்து போ என்றுதானே கூறியிருக்க வேண்டும்.

    4.திரு அபு லஹப்பின் கைகள் என்ன ஆயிற்று? கைகள் எபோது,எப்படி அழிந்தது?.

    5.கைகள் அழிந்த பிறகு எப்போது,எப்படி திரு அபு லஹப் அழிந்தார்?.

    முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் அபு லஹப் பற்றி இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது.

  36. நண்பர் குரானியவாதி குறிப்பிட்ட பக்கத்தில்
    குரான் 22.5க்கு மட்டும் விளக்கம் அளித்து உள்ளார்கள்.

    1.அதில் இந்த அலக் என்பது இரத்தக்கட்டி என்ற முன் மொழி பெயர்ப்புகள் நைத்தும் தவறு என்று சொல்லி விட்டார்கள்(குரான் மாறாதது அதன் அர்த்தமும் விளக்க்முமே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாறும் என்கிற நமது கொள்கையின் படி).

    2. அலக் என்கிற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள்
    வருவதக கூறுகிறார்கள்.( நான்காவதாக ஒட்ட்டுகிற களிமண் என்பதை அவர்கள் கூறவில்லை)
    1. ஒட்டுகிற பொருள்
    2.அட்டைப் பூச்சி
    3.இரத்தக் கட்டி

    22:5: இந்திரியம்_அலக்_ அரைகுறையான தசைக் கட்டி_மனிதன்(குழ்ந்தை)

    இந்த 22:5 ஐ பார்த்தால் இந்திரியத்திற்ககு பின், அரைகுறையான தசைக்கட்டிக்கு முன் இந்த அர்த்தங்களை வைத்து ஏதாவது அர்த்தம் கொண்டு வர முடியுமா என்று பார்த்து 7‍_24 நாட்கள் வளர்ச்சி அடைந்த கரு ஒட்டுகிறது,மற்றும் அட்டை போல் உறிஞ்சுகிறது என்று தோன்றியதால்

    அலக் என்ற வார்த்தைக்கு

    7ல் இருந்து 24 நான்கு நாட்கள் வளர்ச்சி அடைந்த கரு என்று பொருள் தந்து.பாருங்கள் குரானின் அற்புதத்தை அன்றே கூறினார் அல்லா என்று கூறுகிறார்கள்.
    பிறகு 24 பிறகு அரைகுறையான தசைக்கட்டி என்று கூறுகிறார்கள்.

    ____________________

    பொதுவாக சில விமர்சனங்கள்.

    ஒரு வார்த்தைக்கு இரண்டு பொருள் வந்தால் என்ன செய்வோம்?.ஏதாவது ஒன்றை இடத்திற்கு தகுந்தார்போல் பயன் படுத்துவோம். சரிதான். ஆனால் ஒரு வார்த்தைக்கு மூன்று(நான்கு) பொருள் வருகிறது. இதில் இரண்டு பொருளையும் சேர்த்து வேறு அர்த்தம் கூறி அம்புதம் என்கிறார்கள்.

    ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.நூல் என்கிற வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.

    நூல்=புத்தகம ,மெல்லிய‌ கயிறு

    புத்தக்மாகவோ அல்லது மெல்லிய கயிறாகவொ இடத்திற்கு தகுந்த படி பயன் படுத்தலாம்.

    நான் நூல் என்பதற்கு புத்தகத்தை தைக்க(கட்ட) உதவும் கயிறுதான் என்று கூறினால ஏற்றுக் கொள்வீர்களா.

    இவர்கள் செயலே மிக அற்புதம் என்கிறேன்.

  37. இபுறாகிம்,

    //டார்வின் கொள்கை நிரூபிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல அது பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது//

    கடவுள் என்கிற கற்பனையையும்,அவன் படைத்ததாக கதைக்கும் ஆதம் என்கிற மண்பொம்மையையும் நிரூபிக்கப்படவில்லை. எனவே கடவுள் செயல் அனைத்தும் ஒவ்வொன்றாக பொய்ப்பிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.

  38. Dear Senkodi/sankar,

    கடவுள் ஒரு கற்பனை என்ற தலைப்பில் கட்டுரை எழுதி பலரின் கடவுட்கோட்பாட்டை விமரிசிக்கவும்.

    quranist@aol.com

  39. //கடவுள் ஒரு கற்பனை என்ற தலைப்பில் கட்டுரை எழுதி பலரின் கடவுட்கோட்பாட்டை விமரிசிக்கவும்//
    நீங்கள் கேட்ட(பாடல்) தலைப்பு என்றா நினைத்தீர்கள்.?

  40. /கடவுள் ஒரு கற்பனை என்ற தலைப்பில் கட்டுரை எழுதி பலரின் கடவுட்கோட்பாட்டை விமரிசிக்கவும்//
    Dear friend quarnist
    See htese videos.You may like it.
    Bye
    http://evolutionofgod.net/videos/

  41. ஒவ்வெரு மறுப்புக்கும் பதிலடி கொடுப்பதே அவருடைய சிறப்பு.பொய்யிக்கு அளவே இல்லையா?//
    Good Joke
    சகோ. செங்கொடியின் எந்த பதிவிற்காவது பதில் எழுதினாரா?

    இதோ சகோ. உமரின் பதிவுகளுக்கு அதுவும் பி.ஜேயினால் வரையப்பட்ட கட்டுரைகளுக்கே மறுப்பு எழுதவில்லை.
    http://isakoran.blogspot.com/
    இத்தொடுப்பில் பாருங்கள்.

    அல்லது உங்களுக்கு முடியுமானால் சகோ. செங்கொடிக்கோ அல்லது சகோ. உமருக்கு பதில் எழுதுங்கள்.

  42. //அல்லது உங்களுக்கு முடியுமானால் சகோ. செங்கொடிக்கோ அல்லது சகோ. உமருக்கு பதில் எழுதுங்கள்//
    நாங்கள் ச‌கோதரர்கள் அல்ல தோழர்கள். நாங்கள் எல்லா மதங்களையுமே எதிர்ப்பவர்கள். முகமது தவிர்த்து பார்த்தால் இஸ்லாமின் 99% தீர்க்க தரிசிகளும் கிறித்தவத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் செய்ததும் விமர்சன்த்திற்கு உரியதுதான்.

    1.ஆதம் ஏவாள் தோன்றியது 6000 ஆண்டுகளுக்கு முன்பு என்ற பைபிளின் கருத்து தவறு.

    2.நோவாவின் கப்பல் கதை,ஜல பிரளயம் போன்றவற்றிற்கு அதாரம் இல்லை.

    3. இங்கும் உள்ள தீர்க்கதரிசிகளுக்கு வரலாற்று ஆதாரம் கிடையாது.

    4. பழைய ஏற்பாடு=குரான்,புதிய ஏற்பாடு=ஹதிது, இயேசு=முகமது அவ்வளவுதான்.அதே இனவெறி கடவுள்,எதிர்ப்பவர்களை பக்தர்களின் கையில் ஒப்படைப்பார்,பிறர் ஆலயங்களை இடிப்பார்

    4. என்ன இயேசு அன்பே வடிவானவர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்று சுவிஷேஷங்களில் எழுதப்பட்டு இருப்பதால் மட்டும் கிறித்தவம் சமரச சன்மார்க்கம் ஆகிவிடாது

    5.இயேசு(ஈசா) என்று ஒருவர் இருந்ததற்கான ஆதாரம் பைபிள் தவிர சம கால புத்தகங்கள் எதிலுமே குறிப்பிடவில்லை.
    _______

    கிறித்தவர்களும் பைபிளிலும்,குரானிலும் சொல்லப் பட்ட பொதுவான சம்பவங்களுக்கு பொறுப்பு என்பது தெரியுமா?
    தோழர் எழுதிய

    அ) நூஹி(னோவா)ன் கப்பல் நிறைய புராண புழுகுக‌ள்.

    இந்த கப்பலை பிரபல படுத்டியவர்களே கிறித்தவர்கள்தான்.

    ஆ) சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

    ஈசா(இயெசு) என்பவர் ஒரு கருத்தாக்கம் என்று கூறுகிறது.
    ____________

    இந்த பதிவுகளுக்கு கிறித்தவர்களும் பதில் அளிக்கவில்லை என்பதையும் தெரிவிக்கிறேன்.

  43. கொல்வின் , நீங்கள் மதவாதியாக இருந்தால் செங்கொடியை துணைக்கு இழுத்த்திருக்க கூடாது, நீங்கள் கம்யுனிஸ்ட் டாக இருந்தால் உமரை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது.

  44. nichayamaha neengal verutha pothilum isalm thavira matra kolhaikal anaithum velchi adaiyum. ithuvarai appadithan nadakkirathu

  45. Mahatma Gandhi, statement published in ‘Young India,’1924.
    I wanted to know the best of the life of one who holds today an undisputed sway over the hearts of millions of mankind…. I became more than ever convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet the scrupulous regard for pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his fearlessness, his absolute trust in God and in his own mission. These and not the sword carried everything before them and surmounted every obstacle. When I closed the second volume (of the Prophet’s biography), I was sorry there was not more for me to read of that great life.

  46. Michael Hart
    in ‘The 100, A Ranking of the Most Influential Persons In History,’ New York, 1978.

    My choice of Muhammad to lead the list of the world’s most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the secular and religious level. …It is probable that the relative influence of Muhammad on Islam has been larger than the combined influence of Jesus Christ and St. Paul on Christianity. …It is this unparalleled combination of secular and religious influence which I feel entitles Muhammad to be considered the most influential single figure in human history.

  47. தோழர் SANKAR நான் மதத்தை பற்றி பேச வரவில்லை. மதத்தினை நீங்கள் எதிரப்பீர்கள் என்ற அறிவு எனக்கு உண்டு. நான் பதில் அளித்தெல்லாம் சகோ. S.Ibrahim, அவரின் ஆதாரமில்லாத கூற்றுக்கு

    //கொல்வின் , நீங்கள் மதவாதியாக இருந்தால் செங்கொடியை துணைக்கு இழுத்த்திருக்க கூடாது, நீங்கள் கம்யுனிஸ்ட் டாக இருந்தால் உமரை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது.//
    நான் மதவாதி அல்ல. உங்கள் கேள்விக்கு பதில் தரும் நோக்கத்தியே அவ்வாறு குறிப்பிட்டேன். மற்றும் அனைத்துக் கருத்துக்களையும் படிப்பவன் நான். ஒன்றை ஏற்றுக் கொள்வது ஏற்றுக் கொள்ளாதது என்பது என சுயவிருப்பத்தைப் பொறுத்தது.

  48. பரிணாமத்திற்கு மட்டும் ஆதாரம் உள்ளது என நினைக்கிறீர்களா? குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கதை மாறி பன்றியிலிருந்து வந்தான் என்று புதிய கதையை விடுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட விஞ்ஞான நூலினை இன்று உபயோகிக்க முடியுமா? விஞ்ஞானம் எந்நேரமும் மாறுபட்டுக் கொண்டிருக்கும்.

  49. Sir George Bernard Shaw in ‘The Genuine Islam,’ Vol. 1, No. 8, 1936.

    “If any religion had the chance of ruling over England, nay Europe within the next hundred years, it could be Islam.”
    “I have always held the religion of Muhammad in high estimation because of its wonderful vitality. It is the only religion which appears to me to possess that assimilating capacity to the changing phase of existence which can make itself appeal to every age. I have studied him – the wonderful man and in my opinion for from being an anti-Christ, he must be called the Savior of Humanity.”

    “I believe that if a man like him were to assume the dictatorship of the modern world he would succeed in solving its problems in a way that would bring it the much needed peace and happiness: I have prophesied about the faith of Muhammad that it would be acceptable to the Europe of tomorrow as it is beginning to be acceptable to the Europe of today.”

  50. Speaking on the aspect of equality before God in Islam,
    Sarojini Naidu said:

    It was the first religion that preached and practiced democracy; for, in the mosque, when the call for prayer is sounded and worshippers are gathered together, the democracy of Islam is embodied five times a day when the peasant and king kneel side by side and proclaim: “God Alone is Great”… I have been struck over and over again by this indivisible unity of Islam that makes man instinctively a brother. (1918, p. 169)

  51. //பரிணாமத்திற்கு மட்டும் ஆதாரம் உள்ளது என நினைக்கிறீர்களா? குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கதை மாறி பன்றியிலிருந்து வந்தான் என்று புதிய கதையை விடுகிறார்கள்./

    நாங்கள் ஒரு புத்தகத்தை வைத்து எல்லாமே அன்றே கூறினார் ஆண்டவன் என்று கூறுபவர்கள் அல்ல.

    1.பரிணாமத்தை விட அறிவியல் நாளை ஒரு சிறந்த விளக்கத்தை உலக ,மனித தோற்றத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வழங்கினால அப்போதும் விவாதித்ததே ஏற்போம்.

    2.ஆதம் ,நோவா,ஆபிரஹாம்,இயேசு ஆகியோர் கற்ப்னை அல்ல என்பதற்கு பரிணாமம் அளவிற்காகவாவது ஆதாரம் உள்ளதா?

    3.பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்ளுக்கு முன் உண்டானது. பூமி 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உண்டானது. மனிதன் 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தான் என்பன அறிவியலில் நிரூபிக்கப் பட்ட உண்மைகள். இதை பைபிள் ஏற்கிறதா?

    4.பைபிளின் படி எழுதப்பட்ட அறிவியல் கட்டுரை ஏதாவது தாருங்கள் பைபிள் அறிவியலையும் பார்ப்போம்.

    5. போப் ,ரோமன் கத்தோலிக்கம் என்பது பைபிளின் படியான சரியான கிறித்தவ மதமா?

    6. பரிணாமத்தை விட கிறித்தவம் கூறும் படைப்புக் கொள்கையே சிறந்தது என்று கூறும் பதிவுகள் காட்டுங்கள்.பதில் தருகிறோம்.

    7. பாலின் நிருபங்கள் சுவிஷேஷங்களுக்கு முந்தியது என்று கூறுகிறேன். மறுக்க முடியுமா?

    8. பழைய ஏற்பாட்டு கடவுள் ஏன் யூத இனவெறி உடையவராக இருக்கிறார்.?

    9.பைபிளை தொகுத்தவர் கன்ஸ்டன்டைன். இயேசுவை கடவுள் ஆக்கியதும் அவர்தான் .சரியா?.

    10.ஏன் கிறித்தவத்தில் சாதி இன்னும் இருக்கிறது?.

    தோழர் எழுதி வரும் இந்த தொடர் பதிவு இஸ்லாமை பற்றியது. இஸ்லாமின்(கிறித்தவத்தின்) தீர்க்கதரிசிகளை பொய் என்று காட்டும் இந்த பதிவுகளை உங்கள் கிறித்தவ உமர் என்ற உண்மைஅடியான் (சத்தியவான்) அவர்களை மறுப்பு எழுதுமாறு வேண்டுகிறேன்.

  52. இன்றுள்ள ஜனத்தொகை பெருகிவர எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதை சிந்திதுப் பாருங்கள். பல இலட்சம் ஆண்டுகள் முன் மனிதனோ உயிரினமோ தோன்றியிருந்தால் இன்றைய ஜனத்தொகை இதைவிட பல மடங்காயிருக்கும்.

    அடுத்து பைபிள் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல அறிவுரைகளை தருகிறதே அன்றி அதில் நாங்கள் பொதுவாக விஞ்ஞான ஆராய்சியில் இறங்குவதில்லை.

    இருப்பினும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  53. //அடுத்து பைபிள் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல அறிவுரைகளை தருகிறதே அன்றி அதில் நாங்கள் பொதுவாக விஞ்ஞான ஆராய்சியில் இறங்குவதில்லை.//

    நண்பர் கால்வின்
    உங்களை ற்றப்படுத்துவதோ, காயப்படுத்துவதோ,என் நோக்கமல்ல.
    மதம் என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம்.ஆனால் உங்கள் நம்பிக்கைகளின் எல்லைகளை புரிந்து கொள்ள வேண்டும்.மதம் என்பது சர்வ ரோஹ நிவாரனி அல்ல.

    உங்களால் நேசிக்கப் படும் திரு இயேசு,ஜீசஸ்,ஈசா என்று பல விதங்களில் அழைக்கப்படும் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

  54. கொல்வின் ////குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கதை மாறி பன்றியிலிருந்து வந்தான் என்று புதிய கதையை விடுகிறார்கள்.///
    அறிவுகடவுளின் செல்வமே கொஞ்சம் அறிவோடு பேசுங்கள்.

  55. sankar,///பிறகு கதிஜா தன்னுடைய (தூரத்து)சகோதரர் வராக் இபின் என்பவரி/// ஒன்று வரக்கா இப்ன் நவ்பல் என்றோ அல்லது வரக்கா என்றோ தான் சொல்லப் பட வேண்டும். 22;5, 23;17 40;67 ,75;38 ,96;2 வசனங்களில் ஏன் இத்தனை வித்தியாசமாக ஒரே விஷயத்தை சொல்ல வேண்டும்?ஒரு வித்தியாசமும் இல்லை, விமர்சிப்பவர்களின் சிந்தனையில் தான் வித்தியாசம் உள்ளது..

  56. //22;5, 23;17 40;67 ,75;38 ,96;2 வசனங்களில் ஏன் இத்தனை வித்தியாசமாக ஒரே விஷயத்தை சொல்ல வேண்டும்?ஒரு வித்தியாசமும் இல்லை, விமர்சிப்பவர்களின் சிந்தனையில் தான் வித்தியாசம் உள்ளது.//

    கீழ்க்கண்டவாக்கியங்களுக்கும் இதற்கும் நண்பர் இப்ராஹிம் சொன்னதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    1. இங்கே நல்ல‌ மீன்கள் விற்கப்படும்.

    2. இங்கே மீன்கள் விற்கப்படும்.

    3.மீன்கள் விற்கப்படும்
    .
    4. மீனகள்
    .

    நன்றி திரு பார்த்திபன் மற்றும் திரு வடிவேலு

  57. செங்கொடி,நீங்கள் பல வலைத்தளங்களுக்கு இணைப்புகள் கொடுத்துள்ளீர்கள்.ஆனால் அவைகளில் மூன்று மட்டுமே உங்கள் தளத்திற்கு இணைப்புகள் கொடுத்துள்ளன.ஒருவேளை ,[மூன்று பேர் தவிர]அந்த நல்லவர்கள் இஸ்லாம் விமர்சிக்க படுவதை விரும்பவில்லையோ.?

  58. சங்கர் சொன்னது சரியே | ஆனால் கீழ்க்கண்டவற்றை நான் சொன்னதோடு தொடர்பு படுத்தி பார்க்கலாம்.
    1 கடல் மீன்கள் விற்கப் படும்
    2 . சீலா மீன்கள் கிடைக்கும்
    3 உயர் ரக மீன்கள் விற்கப்படும்.
    4 மீன் கடை

  59. Hollo.your website is verymuch helping to muslimpeople to understandclearly. thankyou verymuch keepit op

  60. செங்கொடி அவர்களுக்கு. இஸ்லாமை தொட யாரும் துணிந்ததில்லை .. வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி உங்களின் கடின உழைப்புக்கு இதோ பரிசு நான் ஒரு முஸ்லிம் இன்று முதல் முன்னாள் முஸ்லிம் ஆகிறேன் மன்னிக்கவும் மனிதன் ஆகிறேன்

  61. இஸ்லாம்
    சிந்திப்பவன் ஒப்பு நோக்குபவனெல்லாம் இஸ்லாத்தைவிட்டு விலகி மனிதனாக
    மாற்றுக் கருத்துள்ளவா;களை கருவிகளால் அழிக்க நினைப்பவன் கைதிப் பெண்களைக் கற்பழிக்க அனுமதி கேட்பவன் எல்லாம் இஸ்லாம் ஆகினால் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறையாது தரம் குறைந்துவிடும். 700 கோடியில் 125 கோடி குறிப்பிடத்தக்க தொகை இவா;களைக் அப்படியே விட்டுவிட்டு தப்புவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

  62. கொல்வின்
    ஒரு பற்றீரியா நோய்க் கிருமியை பெருக விட்டால் அதன் பிளவடையூம் கணக்கில் அதன் பெருக்கம் 24 மணி நேரத்தில் பல்லாயிரம் டன் ஆக இருக்க வேண்டும்.
    அனால் அவ்வாறு நடப்பதில்லை அதற்கு சூழல் இடங்கொடுக்காது.
    மனிதனின் பிறப்பு எண்ணிக்கையூம் இறப்பு எண்ணிக்கையூம் பல்லாயிரம் ஆண்டுகளாக சமனானதாகவே இருந்தது. தற்காலத்தில் வசதி வாய்ப்புகள் சுகாதார வைத்திய முன்னேற்றங்களால் சூழல் கட்டுப்பாடுகளை எதிர்த்து இறப்புவீதத்தைக்பிறப்பு வீதத்திலும் குறைத்து பெருகும் எண்ணிக்கையை அதற்கு முன்னுள்ள காலத்து மனித எண்ணிக்கையூடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

  63. இபுறாகிம்
    வினாக்களுக்கு மேற்கோள்களை விடையாக்கமல் டார்வின்; கேட்பாடு எப்படி பிழையாக்கப்பட்டுள்ளது என்று எழுது.
    டார்வின் எழுந்து வந்து அதைப் பிழை என்று சொன்னாலும் அவரும் ஆதாரங்கள் கொடுத்துத்தான் நிருபிக்க வேண்டும்.
    இது விஞ்ஞானம்
    சுவடுகள்இ முளையவியல்இ மூலக்கூற்று உயிரியல்இ பதாங்க உறுப்புகள்இ…….. இப்படி பல்வேறுவழிகளில் ஆதாரங்கள் பெறப்பட்டு நிரூபிக்கப்பட்ட கோட்பாடுதான் பரினாமம்.
    இஸ்லாம் இல்லாதவா;கள் எல்லாம் இஸ்லாத்தை படித்து எழுதும் பொழுது நீங்களும் கொஞ்சம் பரினாமத்தை படித்து எழுதுங்களேன்.

  64. பழைய ஆங்கிலேயே வரலாற்றை படித்து விட்டு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பார்கள் .
    மக்களின் உள்ளங்களை பார்த்துவிட்டு அபின் என்பார்கள்.
    இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் .ஆனால் இஸ்லாம் வளரும்

  65. இஸ்லாமிய ஷரியா சட்டநகல் படிக்க வேண்டும். இரத்தப்பணம் என்றால் என்ன ? விளக்கலாமே ? குரானும்,அரேபிய இலக்கிங்களும் உலகிற்கு கலகத்தையே கொண்டுவரும்.உங்களது கட்டுரை அதைக் தெளிவாகக் காடடுகிறது.ஆன்மீகத்திற்கு சமூக வாழவிற்கு அல்லாவிற்கு பிடித்தது அரேபிய கலாச்சாரம் என்று பேசும் முகம்மது . நியாயத்தீர்ப்புநாள் ”அரேபிய கலாச்சாரப்படிதான்”நடக்கும் என்ற தவறான போதனை.
    1.இறைவனின் நபியான இயேசு ஏன் 1.காபாவை நோக்கி பிரார்த்தனை செய்யச் சொல்லவில்லை 2. பிறை பார்க்கச் சொல்லவில்லை 3.ரம்சான் கொண்டாடச் சொல்லவில்லை 4.ரம்சான் நோன்பு இருக்கச் சொல்லவில்லை 5. அரேபியர்கள் போல்தான் நடிக்க வேண்டும் எனச் சொல்லவில்லை 5.சாத்தானை கல் ஏறியச் சொல்லவில்லை 6.குமுஸ் பெண்களை வைப்பாட்டிகளாக வைக்கச் சொல்லவில்லை 7.விவாகரத்தை சுலபமாக அனுமதிக்கவில்லை 8.அரேபிய கலாச்சார வாழ்வின் அடிப்படையில்தான் அவரும் வாழவில்லை.நியாயத் தீர்ப்பு நாளும் அரேபிய கலாச்சாரவாழ்வின் அடிப்படையில் நடக்கும் என்று போதிக்கவில்லை 9. நானும் என்பிதாவும் ஒன்றாய் இருக்கின்றோம். என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்று போதித்துள்ளார் – (இது இந்துமதம் போதிக்கும் அத்வைதம்- சித்தத்துக்குள்ளே சிவலிங்கம் காட்டி என்றும் தன்னில் சிவத்தை காணல் என்றெல்லாம் கருத்துக்கள் உள்ளன)முகம்மது அப்படி யெல்லாம் கூறவில்லை.10.விபச்சாரம் செய்த பெண்ணுக்கு கல்அடி மரணம் விதிக்கக் கோரிய மக்களிடம் உங்களில் யோக்கியன் -கற்பு நெறி தவறாதவன்- பிரம்மச்சரியம்
    பேணியவன் – முதல் கல்லை ஏறியக் கடவன் என்றார் .ஆச்சிரியம் கூட்டத்தைக் காணவில்லை. 11.முகம்மது தனது காலத்தில் கொலை பல செய்ய தீரப்பு வழங்கியவர்.
    12.நியாயத்தீர்ப்பு நாள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என பல கடிதங்களில் மேலும் பல கருத்துக்கள் தெரிவித்துள்ளேன். அதற்கு எந்த விளக்கமும் தாங்கள் தரவில்லை.

  66. ஐயா அகமது அவர்களுக்கு,தங்களின் கடிதத்திற்கு நன்றி.காதியானிகள்காபீர்கள்,1. பெண் மாப்பிள்ளை கொடுக்காதே 2.அவன் கடையில் சாமான் வாங்காதே3.அவர்கள் இறைச்சிக் கடை இறைச்சியை
    வாங்காதீர்கள்-அது கராம் 4.பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிக்கக் கூடாது 5. அடக்கம் செய்ய ஊர் கல்லறை தோட்டத்தில் அனுமதிக்கக் கூடாது….தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியவை-தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. நான் பார்த்தேன்.முகம்மதுவை ரசுலாக ஏற்காத அனைவரும்-யுதர்கள்,புத்தமதத்தினர், சீக்கியர்கள், இந்துக்கள்,…
    அரேபிய மேலாதிக்ககோட்பாடுபடி ” இழிவானவர்கள்-காபீர்கள் – கராம் ஆனவர்கள்-ஷெர்க் … இப்படி பல வார்த்தைகள். அரேபிய முகமதிய நூல்கள் படி ஒரு காபீர் மனிதன் ஆக மாட்டான்.இந்துக்கள் காபீர்கள் என்றால் அவர்களுக்கும் ” மேற்படி நடவடிக்கைதான் என்பதுதானே பொருள்.காபிர் என்ற பட்டம் சுமத்தி யுதர்களையும், கிறிஸ்தவர்களையும் அரேபிய மண்ணில் இருந்து அகதியாக விரட்டிஅடித்தார் கருணை வள்ளல் முகமது.ஆப்கானிஸதானம் – இந்துக்கள் மட்டும் வாழ்ந்த நாடு. இன்று அங்கி இந்துக்கள் யாரும் இல்லை. கௌதம புத்தர் போல் அன்வை மட்டும் முதலீடாக வைத்து சமய பிரசாரம் செய்ய விலலை. காபிர் பட்டம் அளித்து, வறுத்துஅழித்து விட்டார்கள். பாக்கிஸ்தானிலும் இந்து காபிர்களைக் காணவிலலை. கிழக்கு பாக்கிஸ்தானிலும் இந்துக்களைக் காணர்மல் போய்க் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் உள்ளதுபோல் சிறுபான்மை கல்வி உதவித்தொகை,சிறப்பு உதவித் தொகை, அரசுபணிகளில் இடஒதுக்கீடு,சிறுபான்மைமக்கள் பொருளாதார கழகம் போன்றவை இந்துகாபிர்களுக்கு கிடையாது.காபீர் என்றால் பழைய விளக்குமாறுதான் கிடைக்கும்.முஸ்லீம்கள் நடத்தும் பயங்கரவாத காரியங்களுக்கு தத்துவ ஆதாரம் ” காபீர்களை ” அழிக்கலாம் என்பதே.இந்த பட்டத்தை இந்துவாகிய நான் விரும்பவேண்டுமா ?
    சொல்லுங்கள் அகமது அவர்களே ?

  67. பாக்கிஸ்தானில் அரசால் காபீர் என்று முத்தரைகுத்தப்பட்ட காதியானிகளுக்கு எதிராக பிற முஸ்லீம்கள் செய்த கலவரம் குறித்த அறிக்கை -முனீர் கமிஷன் அறிக்கை -www.newageislam என்ற
    தளத்தில் உள்ளது. படித்துப் பாருங்கள்.உலகில் உள்ள முஸ்லீம்களால் நடத்தபபடும் நூற்றுக்கணக்கான பயங்கரவாத இயக்கங்களின் ( Al quida,Al-umma ,Laxur Toiba etc ) சித்தாந்தம் ” காபீர்களை அழிப்பது சுன்னா ” அல்லாவுக்கு பிரியமானகாரியம் என்பதுதான்.பாக்கிஸதானில் பிறந்து இந்திய பாக் பிரிவனையின்போது 3 இந்துக்களை கொலை செய்த அன்வர் சேக் என்பவா் பிற்காலத்தில் அரேபிய போரினவாதமே இஸ்லாம் என்று தெரிந்து இஸ்லாத்தின் பல கருத்துக்களை விமர்சனம் செய்த போது நாடடை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.அவா பின்னர் தானாகவே இந்துவாக மதம் மாறிவிட்டார். அவரின் வலைதளம் http://www.anwarsheik .படித்துப் பாருங்கள். ஆன்மீகம் வேறு. இயக்கம் வேறு.முகம்மது தனது தாய் மண்ணின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களை அல்லாவின் கட்டளை என்று தவறுதலாக போதித்து உலகில் மிகக் கொடுரமான இரத்தக் களறிக்கு காரணமாக இருக்கின்றார்.ஒவ்வொரு நாட்டிற்கும் தனிமொழி, பண்பாடு, இலக்கியங்கள்,பாரம்பரிங்கள்,என்று உலகே ஒரு அற்புத மலர் தோட்டம். இதை அரேபியாவாக மாற்ற முயலும் இயக்கமே இஸ்லாம் என்பது.- இந்தியாவில் சைவம்-வைணவம் இயக்கமாக மாறிய பேர்து வன்முறை நிறைய நடந்தது. சமணம்- சைவமும் இயக்கமாகியபோது வன்முறை நடந்தது.இறைவனை அடைய பல வழிகள் உண்டு என்பதை பெரும்பாலான மக்கள் உணர்ந்திருந்ததால் இயக்கங்கள் அழிந்துபோய் வன்முறை நடவடிக்கைகள் ஆதரவற்று போய் வாடி விட்டது இஸ்லாம் கிறிஸ்தவம் என்பது கூட்டததைச் சோ்- ஜமாத்-சபையை உருவாக்கு.ஆதிக்கபோர் நடத்து என்பதுதான்.தம்மை சிலுவையில் அடித்துச் சித்திரவதை செய்த மக்களுக்காக ” பிதாவே இவர்களை மன்னியும்.தாங்கள் செய்வது என்னவென்று அறிகிலார்” என்று பிரார்த்தனை செய்த இயேசு ஆன்மிகவாதி. இயக்கவாதி அல்ல.இந்தியாவில் பிறந்த சமய நூல்களில் ” இந்து ” எனற் வார்த்தையில்லை.இந்துத்துவம் என்து இந்திய கலாச்சார மேலாதிக்கம் அல்ல. அது பண்பாடு தர்மம்.மனித நேயம்.தனிமனித ஒழுக்கம்.மனித வளம் பெருக்கம் நடவடிக்கை.

  68. அரேபியாவின் அசிங்கமான,கோரமுகத்தை காணுங்கள் அகமது மற்றும் கபீப்
    அவர்களே! ஒரு தந்தை தன் மகளை,ஒரு கணவன் தன் மனைவியை, ஒரு முஸ்லீம் முஸ்லீம் அல்லாதவரை-காபீரைக் – கொன்றாலும் அது கடுமையானக் குற்றம் அல்ல என்கிறது முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் உள்ளச் சட்டம்.இந்துக்களை காபீர்கள் என்ற நிலையில் ஒரு முஸ்லீம் இந்துவைக் கொன்றால் அது கடுமையானக் குற்றம் அல்ல. ஒரு இந்து ஒரு முஸ்லீமைக் கொன்றால் அது கடுமையான மரணதண்டனை விதிக்கக் கூடிய குற்றம்.எனனே மனிதத்தன்மை.காட்டுமிராண்டித்தனத்தை சட்டமாக்கிவைத்திருக்கும் ஒரு சமுதாயத்தின் சட்டம், சமபிராதய்ங்கள் -இஸ்லாம் என்ற பெயரில் உலக்துக்கு உதாரணம்.உலகம் உருப்படுமா ? இந்துக்கள் காபிர் என்ற வார்த்தைக்கு எவ்வளவு கொடுமையான அரத்தம் உள்ளதுஎன்பதை தற்சயம் உங்களுக்கு புரிந்து இருக்கும். அதை அறிந்துதான் நான் பதைபதைக்கின்றேன். என்னை ”இந்து” என்று கண்ணியமாக,மதிப்புமிக்கவனாக என்னை நடத்தும்
    ஒரு கருத்தை இஸ்லாமிய சமூகத்தில் தேடுகின்றேன். அகலுவைத் இணையதளத்தை படிக்க பங்கேற்றது அதற்குதான்.அகலுவைத் தளத்தை நடத்தும் திரு.அப்துல் ரசாக் அவர்களும்
    அரேபிய காட்டுமிராண்டித்தனத்தை அடியொன்றி இந்துக்களை காபீர் என்றுதான் கருத்து தொிவித்துள்ளார்.இக்கருத்து உலகில வாழும் பெருவாரியான – 98% இந்துக்களுக்கு தெரியாது.அரேபியாவின் ” காட்டுமிராண்டிக்தனத்தை” மேலும் அறிந்து கொள்ளத்தான் நான் அகலுபைத் தளத்தைப்படித்து வருகின்றேன். அரேபிய அடிமைகள் வேறு எதைப்பற்றி சிந்திப்பார்கள்.எழுதுவார்கள்.ஒரு தமிழ்பேசும் முஸலீம் என்ற நிலையில் திருக்குறளைப் பற்றியோ தமிழ் இலக்கியம் பற்றியோ ஒரு குறிப்பையும் அகலுபைத் இதுவரை எழுதியதில்லை.அவரை விதைத்தால் ஆப்பிளா விளையும். இந்துக்களை மலினப்படுத்துவதில் இலங்கை தமிழ்பேசும் முஸ்லீம்கள் அரேபியர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.

  69. Mohammed had practiced “Karimath ” and Koran advocates free sex -sex outside marriage.Everything done by Paris Hilton and the Govt.of southi Arabia is perfectly in tune with Koran and Mohammed. மாலிக் பின் நுவைராவின் அழகிய மனைவியை அபகரித்துக் கொள்வதற்காக மாலிக் பின் நுவைராவுடன் அந்தக் குடும்பத்தின் பதின் ஏழு ஆண்களை நடு நிசியில் கழுத்தை அறுத்துக் கொலை செய்து அன்றிரவே அந்த அபலைப் பெண்ணைக் கற்பழித்தார் பல நைட் கிளப்களுக்கு சொந்தக்காரர் ஹசரத் காலித் பின் வலீத்-Similarly mohammed killed Father,Uncle Husband and all other relatives and had married SOFIA and had Sex with her in the same night.ஹசரத் யஸீத் ரலி அண்ணல் நபியின் அருமைப் பேரரின் கழுத்தை அறுத்து டிரேயில் வைத்தவாறு உலகை வலம் வந்தாரே…..அது அடல்ட்ஸ் ஒன்லிதானே?.wimilarly A sect Headed by a women Banu Fatesh was killed by Mohammed by joining her two legs with two Camels travelling in opposite direction and her Head was cut and paraded along the city and displayed in the heart of the town.Her young tender daughter was given as a gift to the Uncle of Mohammed.ஹசரத் உமர் ரலி ஐந்து வயது குழந்தை உம்மு குல்தூமை மணந்து உறவு கொண்டாரே……அதுவும் அடல்ட்ஸ் ஒன்லி தானே…..similarly Mohammed had married 9 yers old Aysha when he was more than 50 years old.”நமது அரபிக் குஞ்சுகளின் காமக் களியாடடத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் அவர்கள் அல்லவா?similarly Mohammed has morethan 20 Kumus girls as concubines.Frequent reference to ” Virginity of Girl”s Vagina in Koran”.Ahulabaith should decide ” Who is to be blamed ?

  70. NOTHER ADULTS ONLY SCENE
    அப்படியே மறுமுறை முஹம்மதுவுக்கு ஜிப்ரீல் காட்சி தந்தவுடன் “இதோ ஜிப்ரீல் வந்துவிட்டார்” என்று கதீஜாவை உடனே அழைத்தார். “எழுந்திருங்கள் !” என்று அவரை எழுப்பிய கதீஜா, “எழுந்து என் இடதுதொடைப் பக்கம் அமர்வீராக” என்று சொல்ல, அப்படியே அமர்ந்தார் முகம்மது. “என்ன இன்னும் அவரைக் காண்கிறீர்களா?” என்று கேட்க “ஆம்” என்றார் முகம்மது. “சரி, இப்போது வலதுதொடைப் பக்கம் வந்து அமர்வீராக!” என்று சொல்லி “இன்னும் உள்ளாரா?” என்று கேட்க “ஆம்” என்று பதில் சொன்னார் முஹம்மது.

    பின்னர் அவரைத் தம் மடியிலேயே வந்து அமர்ந்து கொள்ளுமாறு கதீஜா கேட்டுக்கொள்ள முஹம்மதுவும் அப்படியே செய்தார். மடியில் அமர்ந்து கொண்ட பின்னரும் ஜிப்ரீலைத் தொடர்ந்து காண்பதாகச் சொன்னவுடன், கதீஜா ஆடையை விலக்கினார். தம் அழகை வெளிக்காட்டி “இப்போது (ஜிப்ரீலைக்) காண்கிறீர்களா?” என்று கேட்க “இல்லை” என்றார் முகம்மது. “மகிழ்ச்சி கொள்ளுங்கள் நீங்கள் கண்டது ஜிப்ரீலையே, சைத்தானை அல்ல!” என்று உறுதி செய்தார் கதீஜா.
    February 7, 2013 at 3:29 PM
    Dr.Anburaj said…

    புகாரி ஹதீஸ் -4788
    ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.
    February 7, 2013 at 3:38 PM
    Dr.Anburaj said…

    ஸவ்தா ப‌ற்றி இபின் க‌தீர் மேலும் கூறும் போது:
    “குர்‍ஆன் வ்ச‌ன‌ம் 4:128 பற்றி மேலதிக விவரங்கள், “ஆயிஷா கூறினார்: இரு மனைவிகள் உள்ள கணவனை பற்றி இது குறிக்கும். இவ்விரு மனைவிகளில் ஒரு மனைவி வயது சென்றவளாகவும், அல்லது அழகில்லாமலும் இருந்தால், இந்த மனைவியின் துணையை, அந்த கணவன் விரும்பவில்லையானால், அவளோடு வாழ அவனுக்கு விருப்பமில்லையானால், அவள் அவனிடம்” என்னை விவாகரத்து செய்ய வேண்டாம், இதற்கு பதிலாக எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்ய வேண்டியதில்லை” என்று நான் என் உரிமைகளை விட்டுக் கொடுக்கிறேன் என்றுச் சொல்லலாமஇந்த வசனம் சொல்ல வருவது என்ன? அவள் தன் உரிமைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால், அந்த து செய்துக்கொண்டு பிரிவதை விட இருவரும் சமாதானம் அடையலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. இதன்படித் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யாமல் தன் மனைவிகள் என்ற எண்ணிக்கையில் ஸவ்தாவையும் இருக்கச் செய்தார். இதற்காக‌ ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக் கொடுத்தார்கள். ஆக, இஸ்லாமியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரிகளின் படி செய்யலாம், ஏனென்றால், முஹம்மது நபி (ஸல்) இதனை செய்துள்ளதால், இது இஸ்லாமிய சட்டபூர்வமானதும், அனுமதிக்கப்பட்டதுமாக இருக்கிறது.
    இந்த செய்தியைப் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர் இபின் அல் அரபி (Ibn al-’Arabi) கூறும் போது:
    “.. ஸவ்தா வயதானவராக மாறினபோது, அல்லாஹ்வின் தூதர் அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இருந்தபோதிலும், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒருவராக இருக்கவே விரும்பினார். ஆகையால், ஸவ்தா “என்னை விவாகரத்து செய்யவேண்டாம், என் நாள் ஆயிஷாவின் நாளாக இருக்க நான் விட்டுக்கொடுக்கிறேன்” என்றார். அதே போல, முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை. ஆக, ஸவ்தா இறக்கும் போது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில் ஒருவராகவே மரணமடைந்தார்கள்.
    இபின் அபி மாலிக் கூறும் போது: இந்த‌ வ‌ச‌ன‌ம் ஆயிஷாவிற்காக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌து, ஒரு ம‌னித‌ன் ஒரு இள‌ம் பெண்ணை திரும‌ண‌ம் செய்துக்கொண்டு, பிற‌கு அவ‌ளுக்கு வ‌ய‌து அதிமான போது, அவளை விவாகரத்து செய்து அவளுக்கு பதிலாக வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்றுச் சொல்லும் சில முட்டாள்களுக்கு இந்த வசனம் வெளிச்சம் தருகிறது. இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுதலையாக அல்லாஹ் இறக்கிய இவ்வசனத்திற்காக நான் அல்லாஹ்வை புகழுகிறேன்.]
    ஆக‌, முஸ்லீம்கள் அறியாமையினால் முஹம்ம‌து நபி (ஸல்) அவர்களை கண்மூடித்த‌ன‌மாக‌ பின்ப‌ற்றின‌ர் ம‌ற்றும் அதே நேர‌த்தில் இத‌ற்காக‌ அல்லாஹ்வை புக‌ழ்வ‌தையும் ம‌றக்க‌வில்லை.
    டாக்ட‌ர் பின்த் அஷ் ஷாதி (Dr bint ash-Shati’) என்ப‌வ‌ர், இவ‌ர் “இறைத்தூத‌ரின் ம‌னைவிகள் (The Wives of the Prophet [nisaa’ an-Nabi] )” என்ற‌ புத்த‌க‌த்தை எழுதிய‌வ‌ர். இவ‌ர் த‌ன் புத்த‌க‌த்தில் “ஸவ்தா பார்ப்ப‌த‌ற்கு அழ‌கில்லாத‌வ‌ராக‌ இருப்பார் ம‌ற்றும் ப‌ரும‌னாக‌ இருப்பார்” என்று கூறுகிறார் ]. (புகாரி கூறுகிறார், ஸவ்தா உய‌ரமாக‌ இருப்பார், ப‌ரும‌னாக‌ இருப்பார் ம‌ற்றும் நிதான‌மாக‌ வேலை செய்வார்) அந்த ஒரு நாள், தனக்கு அன்பினால் மன ஒருமைப்பாட்டினால் கொடுக்கப்பட்டது அல்ல, அது இரக்கத்தின் அடிப்படையில் தரப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு சிறிதும் இடமின்றி ஸவ்தா புரிந்துக்கொண்டார்.
    இருவருக்கும் இடையே அன்பும், ஒற்றுமையும் இல்லையானால், ஏன் முஹம்மது ஸவ்தாவை முதன் முதலிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
    மேலும், அன்பும், ஒற்றுமையும் எங்கு இல்லையோ, அங்கே இரக்கம் எப்படி வரும்?
    டாக்ட‌ர் பின்ட் அஷ் ஷாதி கூறுகிறார்: ஹோலா பின்ட் ஹ‌கீம் (Khola bint Hakim) தான் ஸவ்தாவை முஹ‌ம்ம‌து திரும‌ண‌ம் செய்து கொள்ள‌ வேண்டும் என்று அறிவுரை கூறினாராம். அந்த‌ நேர‌த்தில் ஆயிஷா 6 வ‌யதுடைய‌வ‌ராக‌ இருந்தாராம். கோலாவிடம் முஹ‌ம‌ம்து “யார் என்னுடைய‌ வீட்டை பார்த்துக் கொள்வார்க‌ள், யார் இறைத் தூத‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை க‌வ‌னித்துக் கொள்வார்க‌ள்” என்று கேட்டாராம். அத‌ற்கு ஹோலா “ஸவ்தாவை திரும‌ண‌ம் செய்துக்கொள்ளும்” என்றுச் சொன்னார்கள், இத‌ற்கு ந‌பி அங்கீக‌ரித்தார். ம‌ற்றும் ஸவ்தா முஹ‌ம்ம‌து நபி (ஸல்) அவர்களின் வீட்டை க‌வ‌னித்துக்கொள்ளவும், அவ‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை பார்த்துக்கொள்ள‌வும் மிக‌வும் விருப்ப‌முடைய‌வ‌ராக‌ இருந்தார்க‌ள்.
    இப்போது நமக்கு காட்சி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஆயிஷா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காதலாக மாறினார், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகள்களை கவனிக்கும் வேலைக்கார ஆயாவாக‌ மாறினார்.

  71. பாலை நிலம். வெயில் கடுமையாகக் காய்கிறது. புலவர் ஒருவர் பாலை வழியாக நடந்து செல்கிறார். அங்கே அவர் கண்ட காட்சி . வெயில் கெர்டுமையில் நடந்து சோர்ந்து போன கர்ப்பமாக இருக்கம் பெண்மான் வெயிலில் படுத்து கிடக்கிறது ஆண் மான் வெயிலை தான் தாங்கி – ஆண் மானின் நிழலில் – பெண் மான் ஒய்வு எடுக்கிறதாம்.
    இந்நிழல் யின்மையால் வருந்திய மடப்பிழைக்கு தன்னிழல் கொடுக்கும் கலை – என்று மேற்படி நாட்டை சிறப்பித்துப் பாடுகிறார் புலவர். கற்பனை என்றாலும் அன்பை , தியாகத்தை எப்படி அழகாக எடுத்துச் சொல்கிறது.
    நான்கு பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி குடும்பச்சுமையை ஏற்று தாய்மையின் வடிவமாகத் திகழ்ந்த உலக வழிகாட்டி முகம்மது அவர்களின் 2- மனைவி செளாதா கிழவியாகி விட்டக் காரணத்தால் விவாகரத்துக்கு பயந்து நியாய தீரப்பு நாளில் முகம்மதுவின் மனைவியாக உயிர் தெழ வேண்டும் என்ற ஆசையால்- தன்னோடு கணவர் முகம்மது தங்கும் நாளை ” குழந்தை மனைவி ” ஆயிசா ” க்கு விட்டு கொடுத்து விவாகரத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டது கொடுமையா ? ஷரியத்தா ? சுன்னா வா ? அமெரிக்க ஆதிக்கமா ? அரேபிய கலாச்சாரமா ? காமநுகர்ச்சிக்கு ருசியற்றுப் போன மனைவியை புறக்கணிக்கலாம் . விவாகரத்து செய்யலாம் ? என்பதுதான் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக அரேபியாவில் உள்ளவர் கதை.
    2000 ஆண்டுகளுக்கு முந்தைய பிளேட்டோ – காமம் இல்லாது ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்று காதலின் வகை பற்றி வரைந்துள்ளார். இன்று அது பிளோட்டோவின் காதல்
    ” PLATONIC LOVE” சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

  72. துபாய் அரேபியர்களின் இராஜ்யம். இங்கு பிறர் அனைவரும் -முஸ்லிம்கள் உட்பட – காபீர்களே.
    பெண்களை தாயாக பார்ப்பது எக்காலம். என்றார் பட்டிணத்தார்.பிறன்மனை நேர்க்காப் பேரர்ண்மை வேண்டும் என்றார் -குரானுக்கு 500 ஆண்டுகளுக்கு மூத்த திருககுறள். 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இராமாணய இலக்கியத்தின் நாயகன் ஸ்ரீராமபிரான் -மனைவி- சீதை தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொடேன் ! என்கிறர்ர். போரில் தப்பி ஓடிய முஸலீம் தளபதியின் மகளை கைப்பற்றிய மராட்டியதளபதி , அப்பெண்ணை சிவாஜி மகராஜாவுக்கு பரிசாக அளித்தார். பேரழகு வாய்த்த அந்த அபலைப் பெண்ணைப் பார்த்த சிவாஜி மகராஜா ” இப்பெண்ணைப் போல் எனது தாயார் மட்டும் அழகாக இருந்திருந்தால், நான் இப்போது இருப்பதை விட மிகவும் அழகாகப் பிறந்திருப்பேன் ” என்றார் – இராமயாணம் படித்தவன் சத்ரபதி சிவாஜி.குரான் படித்தவனாயிருந்தால் அப்பெண் -குமுஸ்- கரிமத்-அடிமைப் பெண்ணாகி – வன்புணார்ச்சிக்கு -அல்லா வழியில் – குரான் வழியில் – ஆளாகி அவதிப் பட்டிருப்பாள்.முறையான சமயப் பயிற்சி இன்றி இந்திய இந்து சமூகம் தனது பண்பாட்டு உன்னதங்களை இழந்து வருகின்றது.பிரமமச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாபம் என்கிறது யோக நுர்ல்.ஆணோ பெண்ணோ பிரம்மச்சிரியம் காக்க வேண்டும். அது உடலுக்கும்,மனதிற்கும் ஆத்மாவுக்கும், சமூகத்திற்கும் உன்னதங்களைத் தரும் . முறையான சமய பயிற்சி இருந்தும், தவறான நபரை- முகம்மது என்ற அரைகுறை அரேபியரை – வழிகாட்டியாக பிடித்துக் கொண்டிருப்பதால் அரேபியாவும், அல்லாவுக்குப்பயந்து அரேபியனாக நடித்துக் பாழாய் போய்க் கொண்டிருக்கும் முஸ்லீம்களும் சற்று தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.இருப்பினும் ஸ்ரீபகவத் கீதை சொல்லுவது போல் – சத்வ குணம் மேலோங்கிய மக்கள் எந்த நாட்டிலும் -(அந்ததானில்) வாழ்ந்தாலும் துபாயில் வாழ்ந்தாலும் நற்குணம் மிக்கவராகவே யிருப்பார். இரஜ,தாம்ச குணம் மிக்கவர்கள் எங்கே பிறந்தாலும் பிரச்சனைக்குரியவர்களாகவே இருப்பார்கள். சுழ்நிலை பொறுத்து அவர்களின் துஷ்ட குணத்தின் தீவிரம் சற்று குறைக்க முடியும். அரேபிய சமூகம் பெண்கள் குறித்து சரியாக கண்ணேட்டத்தை வளர்க்கவில்லை. பிடிவாதமாக அரேபிய-குரான் – முகம்மது- என்ற அரேபிய கிணற்றுக்குள் வாழும் தவளைகளாக அரேபியர்களும், அரேபியர்கள் போல் நடித்துக் கொண்டிருக்கும் மக்களும் இருக்கும் வரை பாதை ஏதும் தெரியாது. இருள்தான்.அரபு மொழியில் கம்பராமாயாணத்தை இராமன் கடவுளின் அவதாரம் என்றுச் சொல்லாமல் இந்தியாவில் தோன்றிய நபி என்ற கருத்தின் அடிப்படையில் மொழிபெயர்த்து அரேபிய உலகம் முழுவதும் தீவிரமான போதிக்க முடியுமா? ஏற்றுக் கொள்வர்களா ? முகம்மதுக்கு முந்தைய போதனை இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவார்களா ?
    அரேபியன் அல்லாதவனை உயர்ந்த வாழிகாட்டியாக அரேபியர்கள் ஏற்க மாட்டார்கள். இன உணர்ச்சி பொல்லாதது ? இராமாயாணம் படிக்க ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளைப் படிக்க,ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் ஞான தீபத்தைப் படிக்க ஒருவன் ”இந்துவாக” மதம் மாற வேண்டியதில்லை.அரேபியனாகவே நடிக்க முயன்று கொண்டிருக்கலாம்.

  73. முகம்மது இறக்கும் தருவாயில் தனது மனைவியர்களை அழைத்து நீங்கள் அனைவரும் ஜமாத்தின் தாய் போல வாழ வேண்டும். வேறு திருமணம் செய்யக் கூடாது என்று மனைவியர்களுக்கு ” சந்நியாசம்” வழங்கினார் என்று படித்தேன். உண்மையா ? ஆயிசா,ரெகானா போன்ற வயதில் மிகக்குறைந்த இப்பெண்களுக்கு முகம்மது ஜமாத்தின் தாயாக இருக்க வேண்டும் என்று ஆணையிட்டு இறந்துள்ளர்.பெண்ணைத் தாயாக பார்க்கும் கருத்து அரேபியாவில் துளிர்த்துள்ளது. சிவாஜி மகராஜாவின் வாழ்க்கை சம்பவம்போல் பெண்களிடம் உன்னத நடத்தைக் காட்டிய சம்பவம் அரேபிய வரலாற்றில் நிச்சயம்இருக்கும்.முஸ்லீம்கள் முறையான சமய கல்வி பெற்றவர்கள. அதில் சிலவற்றை வெளியிடலாமே!

  74. முஹம்மது கூறுகிறார்: “யூதர்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள், இந்த பூமி அல்லாவிற்கும் அவரது தூதருக்கும் சொந்தமானது. இந்த நாட்டை விட்டு(அரேபியா) உங்களை துரத்தப்போகிறேன், ஆகையால், உங்களிடம் ஏதாவது சொத்துக்கள் இருந்தால், அவைகளை விற்றுவிடுங்கள்”What a cruel statement who claims to be a Prophet of God.Mohammed is dead against Kafirs and Jews.

  75. சுவாமி விவேகானந்தரின்சிகாகோ சொற்பொழிவுகள்

    1. வரவேற்புக்கு மறுமொழி செப்டம்பர் 11, 1893

    அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

    இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

    இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.

    உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

    எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
    இறுதியிலே கடலில் சென்று
    சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
    பின்பற்றும் தன்மை யாலே
    துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
    வளைவாயும் தோன்றி னாலும்
    அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
    அடைகின்ற ஆறே யன்றோ!

    இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.’

    பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

    அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன
    விவேகானந்தர் நூல்கள்

  76. source:- http://www.free faith international
    Unhappy Muslims

    The Muslims are not happy!
    They’re not happy in Gaza.
    They’re not happy in Egypt.
    They’re not happy in Libya.
    They’re not happy in Morocco.
    They’re not happy in Iran.
    They’re not happy in Iraq.
    They’re not happy in Syria
    They’re not happy in Southi Arabia
    They’re not happy in Islamic Bangaladesh
    They’re not happy in Yemen.
    They’re not happy in Afghanistan.
    They’re not happy in Pakistan.
    They’re not happy in Syria.
    They’re not happy in Lebanon.

    So, where are they happy?

    They’re happy in Australia.
    They’re happy in England.
    They’re happy in France.
    They’re happy in Italy.
    They’re happy in Germany.
    They’re happy in Sweden.
    They’re happy in the USA.
    They’re happy in Norway.
    They’re happy in SriLanka
    They’re happy in India
    They’re-Palestinians- happy in Israel
    They’re happy in every country that is not Muslim.
    And who do they blame?
    Not Islam.
    Not their leadership.
    Not themselves.
    THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!
    AND THEY WANT TO CHANGE THEM TO BE LIKE THE COUNTRY THEY CAME FROM
    WHERE THEY are UNHAPPY.

  77. இஸ்லாமிய சமுதாயம் உருப்பட
    முஸ்லீம் பெண்கள் முதலில் சுதந்திரமாக கல்வி கற்கட்டும்.
    அந்தக் கல்வி சுதந்திரத்துக்கு களம் அமைக்கும்.
    பெண் சுதந்திரம் சுதந்திரமான ஒரு முஸ்லீம் சமூகத்துக்கு வித்திடும்.முதலில் 1.பெண் குழந்தைகளுக்கு மிகக்குறைந்த வயதில் திருமணம் செய்யும் செய்கையை நிறுத்தவேண்டும்.பெண்களுக்கு திருமண வயது 22 என நிர்ணயம் செய்ய வேண்டும். முடியுமா ? உலக வழிகாட்டி அரேபிய முகம்மதுவின் சுன்னா சுக்கு மல்லி திப்பிலி என்று போலி வாதம் செய்தால் …. ? அலோபதி மருத்துவர் கருத்துப்படி வயதை நிர்ணயம் செய்ய வேண்டும்.
    2. முகத்தை மறைக்கும் உடை ஆகாது.பெண்கள் எந்தவிதமானக் கல்வியும்,பெற சுழ்நிலைக்கு பொறுத்தமாக தேவையின் அடிப்படையில் சுதந்திரமாக வெளிவே சென்றுவர அனுமதிக்க வேண்டும்.3.ஆசிரியர் , மருத்துவம் தையல் போன்ற துறைகளில் பெண்களை அதிகம் ஈடுபடுத்தலாம்.4.சுயவேலைதரும் திறனை வளர்க்க ஆவன செய்யலாம்.5.தாங்கள் ” முஸ்லீம் ” என்று இறுமாந்து பிறரை ”காபீர்” என்று இழிவாக எண்ணி மற்றவர்களிடம் சுமுகமாகப பழக முடியாமல் தவிக்கும் நிலை மாற வேண்டும்.

    6.உண்மையான இஸ்லாம் உலக அமைதிக்கு வழி சொல்லும் ??? இதுதான் பத்தி 5யில் சொன்னது. இஸ்லாம் -அரேபிய கலாச்சாரம் மட்டும் உலகத்திற்கு அமைதியைக் கொடுக்காது.கெடுத்துக் கொணடிருப்பது தொடர்ந்து கெடுக்கும். பிற கலாச்சாரங்களிலும் உன்னதங்கள் உள்ளன.அதைப்புரிந்து கொள்ளவும், பின்பற்றவும்
    தெளிவான அரேபியஅடிமைப்புத்தியில்லாத மனம் வேண்டும்.
    அரேபியா கலாச்சாரம் உலகத்திற்கு வழிகாட்ட வேண்டும், தலைமை தாங்க வேண்டும் என்பது முட்டாள்தனமாக வாதம். அதற்கான யோக்கியதை அதற்கு இல்லை. ஒருபோதும் வராது.இந்த உலகை அரேபியர்களும்,அரேபியர்கள் போல் நடித்துக் கொண்டிருக்கும் மக்களும் வெல்ல வேண்டும் எனற பேராசை அரேபிய மேலாதிக்கம் ஆகும்.மேலாதிக்க சிந்தனையாளர்கள் மற்றவர்களோடு இணக்கம் வைக்க மாட்டார்கள்.யுத்தம் ,கலகம் செய்பவர்களாகவே இருப்பார்கள்.அரேபிய கலாச்சாரம் பிற மக்களை வெல்ல வேண்டும் என நினைப்பு வேண்டாம். பிறமக்கள் கொண்டையில் ,,,,,,,, வைத்திருக்கவில்லை.பரஸ்பரம் கொடுக்கல் வாங்கல் முறையில் நன்மை அடையலாம்.அரேபியா அல்லாத மக்களின் அழிவை நாடும் அனைவரையும் அல்லா அழிப்பார். இறைவன் தங்களின் மனதில்அரேபிய மேலாதிக்க அடிமைப்புத்தியை நீக்கி அனைத்து சமய கலாச்சார மற்றும் பிற குழுக்கள் கொண்டிருக்கும் கல்வி,கலாச்சார சமய அறிவியல் உன்னதங்களை அடையாளம் காணும் நல்லறிவை, தெளிந்த புத்தியை அளிக்க இறைஞ்சுகிறேன்.உங்களது நயவஞசக திட்டம் தோல்வி அடைவது திண்ணம்.அரேபியமேலாதிக்க குரானுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய ரிக் வேதம் சொல்கிறது” உன்னதமான நல்லறிவு நான்கு திசையிலும் இருந்து நம்மை வந்து சோ்வதாக” !Let Noble thoughts come to us from Every side. இந்தியாவில் தோன்றிய புத்தகங்கள் மக்களை கிணற்று தவளை ஆக்கவில்லை என்பதற்கு மேற்படி சுலோகம் நிருபணம் ஆகும். முஸ்லீம்களை அரேபிய மேலாதிக்கம் என்ற பேரால் கிணற்று தவளையாக ஆக்காதீர்கள்.குடி கெடுக்காதீர்கள்.

  78. ahlulbaithtamil@gmail.com என்ற வலைதளத்திற்கு நான் எழுதிய கடிதங்களை வெளியிட்டு இஸ்லாம் என்பது அரேபிய மேலாதிக்கம் என்ற கருத்து பரவிட உதவியமைக்கு நன்றி.

  79. http://www.mekka majjis chennai என்ற இணையத்தில் அண்ணல்நபி என்ற சொற்பொழிவு உள்ளது. இது 8.2.2013 அன்று தமிழன் தாலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் மெக்காவிலிருந்து வந்த அன்ப்ர்கள் சிலரிடம் தனது மனைவியர் இருவரைக்காட்டி இவர்களில் யார் வேண்டும் சொல்லுங்கள்.தலாக் செய்து விடுகிறேன்.திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று முகம்மது கூறினாராம். அது தோழர்களிடம் அவர் கொண்ட அன்பிற்கு அடையாளம் என்று மெளாலானா சம்சுதீன் காஸ்கி கூறுகிறார். மனைவியை காட்டி யாருக்கு வேண்டும் என்று கேட்பவன் ……….. அசீங்கமாக உள்ளது. முகம்மதுவை விவேகானந்தர் கூட மன நோயாளி என்று கூறுகிறார். ஒருமுறை முகம்மதுவை பார்க்க குருடர் ஒருவர் வந்தாராம். மனைவியார் இருவர் அங்கி இருந்தனர்.உடனேமனைவியர்களை உள்ளே போங்கள் என்றாராம் முகம்மது. வந்தவர் குருடர் தானே என்றார்களாம். மனைவிமார்கள். முகம்மது உடனே ” உனக்கு கண் உள்ளதே ” என்றாராம்..

  80. http://www.iraillaislam என்ற வலைதளத்தில் கூடுதல் தகவல்கள் உள்ளது. படிக்க படிக்க இஸ்லாம் என்பது அரேபிய வல்லாதிக்கம் என்பதன் மறுபெயர் என்பது நீருபணம் ஆகும்.

  81. புர்காவை தூக்கி எறி என முற்போக்கு வேடம் போடும் வேடதாரிகளே! முதலில் எங்கு திரும்பினாலும் பெண்களைப் போகப் பொருளாக்கும், ஆபாசமாகக் காட்டும் பெண்களுக்கு எதிரான சமூக விரோதிகளுக்கு எதிராக சண்ட மாருதம் செய்யுங்கள். 5 வயதுக் குழந்தையைக் கூட வெளியில் அனுப்ப முடிவதில்லை. கையிலே செல்போனுடன் செல்போனில் ஆபாசபடங்களுடன் அலையும் வெறிநாய்கள் கடித்துக் குதறுகின்றனர். இணயத்தில் ஆபாசத்தை பரப்பும் நிறுவனங்களுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் உன் கருத்தை உன் போராட்டத்தை பதிவு செய். தங்களுடைய முந்தானைகளை சரிசெய்தே பெண்களின் கைகள் மருத்துவிட்டன. ஆண்களின் காமவெறிப் பார்வையை கண்டனம் செய்து ஒரு சமூக மாற்றத்திற்காகப் போராடு. பிறகு புர்காவை எறீவதைப் பற்றிப் பேசலாம்.

  82. நண்பர் அன்வர்,

    தேவையில்லாமல் இந்த இடத்தில் புர்கா குறித்து ஏன் பேசுகிறீர்கள். உங்களுக்கு புர்கா குறித்து பேச வேண்டும் என்றால் அதை குறித்து எழுதப்பட்ட பதிவுக்கு வாருங்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்