ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்கொள்வது எப்படி?

ஆர்எஸ்எஸ் என்றால் என்ன?அதன் நோக்கம் என்ன?இந்தியாவில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்ஸை எப்படி எதிர்கொள்வது?இதுபோன்ற பல விஷயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார் மருதையன்.

திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்ததா என்பது தலைப்பு.தலைப்பைப் பார்க்கும்போதே, திமுக ஆட்சியில் அல்ல என்று சொல்லத்தான் விழைகிறார்கள் என்பது புரிந்து விடுகிறது. (திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்று சொல்ல முடியாதுதான்.ஆனால் திமுக ஆட்சியிலும் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்பதை மறைக்க முயற்சி செய்கிறது இந்த நேர்காணல்)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் என்கிற விஷம் ஊடுருவிக்கொண்டிருக்கிறது. ஓர் அரசாக திமுக அரசு அதற்கு எதிராக வேலை செய்ய முடியாது. ஆனால் எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து பொது வேலைத் திட்டம்போல ஒன்றை உருவாக்கி செயல்பட்டால்தான் அதன் ஊடுருவலைத் தடுக்க முடியும் என்று தெளிவாக விளக்குகிறார்.ஆர்எஸ்எஸ் குறித்த உண்மைகளை அறியாதவர்கள், அவசியம் பார்க்க வேண்டும்.

நன்றி: ஷாஜஹான். ஆர் முகநூல் பதிவு

பாருங்கள் .. .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. .. பரப்புங்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்