ஆ.ராசா அதிர்வேட்டு ராசா

இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் என்று ஆ.ராசா மீது காவி பயங்கரவாதிகள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஆ.ராசா பேசிய அந்தப் பேச்சை கேட்காதவர்களைக் கூட, அப்படி என்ன பேசி விட்டார் ராசா என்று கேட்க வைத்து விட்டார்கள். அதற்கு அந்த பயங்கரவாதிகளுக்கு நன்றி சொல்லலாம்.

இந்துக்களை இழிவு படுத்தி விட்டார் என்று பயங்கரவாதிகள் கூக்குரல் போடுவதே இந்துக்களை இழிவுபடுத்துவது தான். அனைவரும் அர்ச்சகர் ஆகும் உரிமை என்று இந்து உரிமை பேசினால், பார்ப்பான் மட்டும் தான் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு பார்ப்பன உரிமை பேசும் அதே பயங்கரவாதிகள் தான், தன்னால் இழிவுபடுத்தப்படும் மக்களை மேலும் இழிவு படுத்துவதற்காக இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் என்று கூச்சல் போடுகிறார்கள். இந்து உரிமை என்றால் பார்ப்பன உரிமை மட்டுமே என்று செயல்படும் அந்த பயங்கரவாதிகள் பார்ப்பன என்பதை மறைத்துக் கொண்டு இந்து என்று பேசும் ஒவ்வொரு நிகழ்விலும் இந்து இழிவுபடுத்தப்படவில்லையா?

தங்களை இந்து என்று கருதிக் கொள்வோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லது, ஆ.ராசா மீண்டும் பேசியிருக்கும் இந்த அதிவேட்டு பேச்சை கேளுங்கள்.

பாருங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்