ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 6

முஸ்லீம்களின் ஒரே வேதம் குரான் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. குரான் ஒரு முஸ்லீமுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதல்ல. அது மட்டுமன்றி குரான் கூறியிருக்கும் செய்திகளிலேயே விளங்குவதற்கு சிரமமான, இறைவனை தவிர வேறு யாராலும் முழுமையாக பொருள் விளங்கிக்கொள்ள முடியாத வசனங்களும் இருக்கின்றன. ‘நீங்கள் அறிந்து கொள்வதற்க்காக இதனை இலகுவாக்கியிருக்கிறோம்’ எனும் பொருளில் குரானில் சில வசனங்கள் இருந்தாலும் குரானை மட்டுமே வைத்துக்கொண்டு அதனை முழுமையாக புறிந்துகொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக குரான் குறிப்பிடும் வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவைகளை ஒவ்வொரு முஸ்லீமும் நிறைவேற்ற வேண்டும் என குரான் வலியுறுத்துகிறது, ஆனால் அந்த வணக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்றால் அதற்கு குரானில் விளக்கம் கிடைக்காது. விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லும் தண்டனை குறித்து அநேகம் பேர் அறிந்திருக்கக்கூடும் ஆனால் இந்த தண்டனை பற்றிய விபரங்களை குரானில் தேடினால் இருக்காது. இப்படி விடுபட்ட, விளங்கிகொள்ள முடியாதவைகளுக்கு விளக்கமாக வருபவைகள் தாம் ஹதீஸ்கள் எனப்படுபவை.

ஹதீஸ் எனும் சொல்லிற்கு செய்தி அல்லது புதிய விசயம் என்பது பொருள். முகம்மது இறப்பதற்கு முன் ஆற்றிய கடைசிப் பேருரையில், “நான் உங்களிடம் இரண்டை விட்டுச்செல்கிறேன். ஒன்று இறைவனின் வேதம். மற்றது என்னுடைய வழிகாட்டுதல். இந்த இரண்டையும் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கும் வரை நீங்கள் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார். இதில் என்னுடைய வழி காட்டுதல் என்று அவர் குறிப்பிடுவது தான் ஹதீஸ் எனப்படுகிறது. அதாவது முகம்மது கூறிய, செய்த அல்லது செய்வதற்கு அனுமதியளித்தவைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டு ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

முகம்மதிற்கு இறைச்செய்தி (வஹி) வரும்போது அவர் கேட்டுச்சொல்வதை உடனிருந்தவர்கள் எழுதிவைத்துக்கொள்வார்கள் அது குரான். அந்த குரானின் வாசகங்களில் ஐயம் ஏற்பட்டால் அல்லது செயல் முறையில் நடைமுறையில் ஏதாவது சந்தேகம் வந்தால், இன்னும் நடப்பு வாழ்வில் ஏற்படும் குழப்பங்கள், அறியாமைகள் ஏற்பட்டால் அவைகளை முகம்மதுவிடம் விளக்கம் கேட்பார்கள். அவர் அவைகளுக்கு வேண்டிய விளக்கங்களை அளிப்பார், இது தான் ஹதீஸ். ஆனால் அவ்வப்போது அவர் அளிக்கும் விளக்கங்களும் குறிப்புகளும் எழுதிவைக்கப்படவில்லை. முகம்மதின் சம காலத்தவர்கள், சற்றே பிந்தியவர்கள் போன்றவர்களுக்கு அது ஆவணமாக வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் பின்னர் வந்தவர்களுக்கு அவைகளின் தேவை தோன்றியது. அதனால் உமர் இப்னு அஜீஸ் (அபூபக்கருக்கு பின்னர் ஆட்சிசெய்த உமர் அல்ல இவர் இரண்டாம் உமர்) என்பவர்தான் முதன் முதலில் ஹதீஸ்களை தொகுக்கவேண்டியதன் தேவையறிந்து ஆபூபக்கர் இப்னு ஹஸம், இப்னு இஸ்ஹாக்,  ஸூஃப்யானுத் தவ்ரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, இப்னு ஜூரைஜ், அப்துல்லாஹ் இப்னு முபாரக் போன்றோர்களைக்கொண்டு நூல்களாகத்தொகுத்தார். எப்போது? முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து. இதனைத்தொடர்ந்து இமாம்கள் என இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் ஷாபி, ஹன்பலி, மல்லிக் ஆகியோர்களால் தனித்தனியே முஸ்னத் ஷாபி, முஸ்னத் அஹ்மது, முவத்தா போன்ற ஹதீஸ் நூலகள் தொகுக்கப்பட்டன. இவைகளில் முஸ்னத் அஹ்மது மட்டும் இன்னும் இருப்பதாக தெரிகிறது. மற்றவைகள் பற்றி தகவல் இல்லை.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். முகம்மது இறந்து நூற்றைம்பது முதல் இருநூறு ஆண்டுகள் கழித்து இவைகளை எப்படி தொகுத்திருப்பார்கள் என்பது தான். செவி வழிச்செய்திகள் தான். இன்னாரிடமிருந்து இன்னார் கேட்டார், அவரிடமிருந்து இவர் செவியுற்றர் என்று தொகுத்தவர்களை அடைந்தவைகள் தான் தொகுக்கப்பட்டன. இவைகளில் முகம்மது சொல்லி செய்தவைகள் மட்டுமன்றி அவர் சொல்லாததும் செய்யாததும் அவரின் பெயரில் கலந்துவிடுவது இயல்பானது தான். இதனால் இவர்களுக்கு பிறகு வந்த அறுவர் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் தொகுத்து பல முறைகளில் சரிபார்க்கப்பட்டு தவறானவைகள் என அறியப்பட்டவைகளை எல்லாம் நீக்கி ஆறு தொகுப்புகள் வந்தன‌

1) முகம்மது இஸ்மாயீல் புஹாரி என்பவர் சுமார் ஆறு லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸஹீஹுல் புஹாரி என்ற பெயரில் நூலாக்கினார்.

2) முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் என்பவர் சுமார் மூன்று லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸ்ஹீஹ் முஸ்லிம் என்ற பெயரில் நூலாக்கினார்.

3) அபூதாவூது சுலைமான் அல் சஜஸ்தானி என்பவர் சுமார் ஐந்து லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 5200 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை சுனது அபீதாவூது என்ற பெயரில் நூலாக்கினார்.

4) அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ என்பவர் 4000 ஹதீஸ்களை ஜாமிஉத் திர்மிதி என்ற பெயரில் நூலாக்கினார்.

5) அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ என்பவர் 5700 ஹதீஸ்களை ஸூனனுந் நஸாயீ என்ற பெயரில் நூலாக்கினார்.

6) அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசீர் என்பவர் 4300 ஹதீஸ்களை ஸீனனு இப்னுமாஜா என்ற பெயரில் நூலாக்கினார்.

இவர்கள் அனைவரும் கிபி 800 ம் ஆண்டிலிருந்து கிபி900 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அதாவது முகம்மது இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர்கள். மேற்குறிப்பிட்ட ஆறு நூல்களும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்புகளாக இருந்தாலும் முதல் இரண்டு நூல்களான ஸஹீஹுல் புஹாரி, ஸ்ஹீஹ் முஸ்லிம் என்பவை தான் குரானுக்கு அடுத்தபடியான இடத்தில் உண்மையான, கலப்பில்லாத‌ ஹதீஸ் தொகுப்புகளாக ஏற்கப்பட்டுள்ளன.

இவர்கள் இது சரியான ஹதீஸ் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? பொதுவாக ஹதீஸ் எனப்படுவது இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். முதலாவது சொல்லப்படும் செய்தி அடுத்தது அறிவிப்பாளர்கள் அதாவது தொகுத்த ஆசிரியருக்கு அந்த ஹதீஸ் யார் யார் மூலமாக வந்து சேர்ந்தது என்பது. ஒவ்வொரு ஹதீஸுக்கு பின்னாலும் குறைந்தது எட்டு பேராவது இடம்பெற்றிருக்கும். இந்த அறிவிப்பாளர்களின் வரிசை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள், அதன் படி ஆசிரியருக்கு குறிப்பிட்ட ஹதீஸை சொன்னவரிலிருந்து பின்னோக்கி முகம்மதுவிடமிருந்து நேரடியாக கேட்டவர்வரை செல்லவேண்டும். அடுத்து அறிவிப்பாளர்களின் குணநலன்களில் ஏதாவது குறையிருக்கிறதா? அவர் பொய் சொல்லக்கூடியவரா? மறந்து விடக்கூடியவரா? என்று பார்ப்பார்கள். அறிவிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டவரா? என்று பார்ப்பார்கள் இப்படி சில விதிமுறைகளை வைத்துக்கொண்டு இவற்றில் சிக்கியவைகளை தள்ளிவிட்டு ஏனையவற்றையே தொகுத்தார்கள். இதன்படி அறிவிப்பவர்களில் ஆண்களில் முகம்மதின் நண்பர்களில் ஒருவரான‌அபூ ஹுரைரா என்பவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளராவார், இவர் 5300 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். பெண்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளர் முகம்மதின் மனைவியான ஆயிஷா, இவர் 2200 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்.

ஹதீஸ்களை திரட்டிய ஆசிரியர்களின் உழைப்பு மிகமிகக் கடினமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை என்பது தோராயமானது தான். ஹதீஸ் ஆசிரியர்களின் தேடல் எப்படி இருந்தது என்பதற்கு நிறைய கதைகள் உலவுகின்றன. ஹதீஸ் சேகரிக்கச்செல்லும் போது ஒருவர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தார், அவர் ஆட்டை ஏமாற்ற ஆட்டின் குட்டியைப்போன்ற ஒன்றை ஆட்டின் கண்முன் நிருத்தியிருந்தாராம். பாலுக்காக ஆட்டை ஏமாற்றுபவர் கூறும் ஹதீஸை ஏற்பதற்கில்லை என அவரின் ஹதீஸை கேட்காமலேயே திரும்பிவிட்டாராம். ஒருவேளை அவர் கறந்து முடித்து ஆட்டை ஓட்டிவிட்டு பாலை குடித்துக்கொண்டிருந்த போது சென்றிருந்தால் ஹதீஸ் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லவா? அல்லது ஹதீஸை கேட்டுச்சென்ற பின் இதுபோல் நிகழ்ந்திருந்தால்? இன்னொருவர் தம் பொருட்களை திருட்டு கொடுத்துவிட்டு சோகத்தில் அமர்ந்திருந்தாராம். களவு போன பொருட்களின் பாதிப்பு ஹதீஸிலும் வந்துவிட்டால் என்றெண்ணி அவரிடம் ஹதீஸை கேட்காமலேயே திரும்பினாராம். ஏற்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களில் ஆசிரியருக்கு தெரியாமல் இதுபோன்ற விசயங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்? இது தேவையில்லாத யூகம் என இவற்றை ஒதுக்கித்தள்ளலாம். ஆனால் இதனால் இந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும், இதனால் இந்த ஹதீஸை சேர்க்கவேண்டும் என்றெல்லாம் கூறவரவில்லை. இங்கு சுட்டிக்காட்டப்பட விரும்புவதெல்லாம், அதன் தோராயமான தன்மையைத்தான். இவைகளும் கூட முகம்மது இறந்து நூறு ஆண்டுகளிலிருந்து இருநூறு ஆண்டுகள் வரையில் தான். முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகளில் உள்ள அறிவிப்பாளர்களின் தன்மை எப்படி அறியப்பட்டது? ஏனென்றால் ஹதீஸ்களை திரட்டும் பணி நூறு ஆண்டுகளுக்குப்பிறகுதான் தொடங்குகிறது. அதன் பிறகு தான் ஹதீஸ் ஆசிரியர்கள் அறிவிப்பாளர்களின் குண நலன்களைப்பற்றிய குறிப்புகளை திரட்டியிருக்கிறார்கள்.

ஒரு ஹதீஸ் உண்மையானதா இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தெரிவதற்கு அறிவிப்பாளர் வரிசை, தன்மை, அடையாளம் காணப்பட்டவரா என்பனவற்றையெல்லாம் விட அதன் உள்ளடக்கம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. எடுத்துக்காட்டாக கீழ்காணும் இரண்டு ஹதீஸ்களை கொள்வோம்.

ஹதீஸ் 1.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனசாட்சி அடிப்படையில் நடந்து மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காக நற்காரியங்களை செய்கிறவன் அறிவாளியாவான். தன் உள்ளத்தை மனோ இச்சையில் விட்டுவிட்டு அல்லாஹ்விடத்தில் ஆசைப்படுகிறவன் வீணனாவான்.

ஹதீஸ் 2.

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். தவறை உணர்ந்த அவன் இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். “இல்லை!” என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்றான். இதுவரை நூறு பேர்களைக் கொன்று விட்டான். பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். அறிஞர் ஒருவர் பற்றி அவனிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தான். ‘தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு பாவமன்னிப்பு உண்டா?’ என்றும் கேட்டான். “உண்டு, உனக்கும், நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்” என்று கூறினார். அவன் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதற்குள் அவனுக்கு மரணம் வந்துவிட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனைதரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், ‘தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தான்’ என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, ‘அவன் நன்மையை அறவே செய்ததில்லை’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள். அவர் கூறினார்; ‘அவன் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!’ என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவன் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவன் உயிரைக் கைப்பற்றினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் அதிகாரபூர்வமான தொகுப்புகளில் உள்ளது. முதலாவது திர்மிதியிலும் இரண்டாவது புஹாரியிலும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஏற்றுக்கொள்ளப்படாதது. திர்மிதி, நவவி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று குறிப்பிட்டிருந்தாலும் முதல் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாதது. ஆனால் இரண்டாவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது ஹதீஸில் நூறு கொலைகள் என்று வந்தாலும் அல்லாவின் மன்னிக்கும் தயாள குணத்திற்கு மெருகூட்டுவதாய் அமைந்துள்ளது. ஆனால் முதல் ஹதீஸில் “மனசாட்சி அடிப்படையில் நடந்து” என்பது அல்லாவின் எல்லைக்கு அப்பாற்பட்டு போகும்கூறு இருக்கிறது. ஆக இந்த இரண்டு ஹதீஸ்களின் ஏற்பிலும் உள்ளடக்கம் தீர்மானகரமான பங்காற்றியிருக்கிறது.

இன்னொரு சமகால எடுத்துக்காட்டு ஒன்றை பார்ப்போம். புஹாரியில் முறையான அறிவிப்பாளர் வரிசையுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்று “முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு செய்யாததையெல்லாம் செய்ததாக கூறும் அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தார்” என்று கூறுகிறது. ஒரு குழுவினர் ‘முகம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டிருந்தது என்றால் மொத்த குரான் மீதே சந்தேகம் வந்துவிடும் எனவே அதிகாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் குரானோடு முரண்படுவதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்றும் மற்றொரு குழுவினரோ ‘ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கக்கூடாது இதில் முரண்பாடு ஒன்றுமில்லை. அல்லாவே குரானின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதால் குரானில் பாதுகாப்பில் சந்தேகம் ஒன்றுமில்லை. அதேநேரம் ஆதாரபூர்வமான ஹதீஸ் முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவதால்; முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர் பாதிக்கப்பட்டார் ஆனால் அது குரானை பாதிக்கும் அளவில் இல்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு ஹதீஸ் ஆசிரியர்கள் வகுத்த விதிமுறைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆனால் அந்த ஹதீஸின் உள்ளடக்கமான கருத்து விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஏற்பதா? மறுப்பதா? என விவாதிக்கப்படுகிறது.

இவைகளின் மூலம் விளங்குவதென்ன? ஒரு ஹதீஸ் என்ன கூறுகிறது என்பது தான் மையப்படுத்தப்பட்டு ஏற்பதும் மறுப்பதும் தீர்மானிக்கப்படுகிறது, அவற்றை மறைப்பதற்குத்தான் அறிவிப்பாளர் வரிசை போன்ற விதிமுறைகளெல்லாம் என்பது தெளிவு. முதலிடத்தில் இருக்கும் குரானிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன எனும் நிலையில் இரண்டாம் இடத்திலிருக்கும் ஹதீஸ்களின் கற்பை தொட்டுப்பார்ப்பது மாற்றுக்குறைவானதாகவே இருக்கும். ஹதீஸ்களை பற்றி குறிப்பிடும் போது சொலவடையாக ஒன்றை கூறுவார்கள் “முகம்மதின் தலையில் எத்தனை நரைமுடி இருந்தது என்று எண்ணிச்சொல்லும் அளவுக்கு ஹதீஸ்கள் அவரின் வாழ்க்கையை படம்பிடித்துக்காட்டுகின்றன” என்று. பல்லாயிரம் ஹதீஸ்கள் இருந்தாலும் அவைகள் அவ்வளவு தெளிவாக முகம்மதின் வாழ்வைச்சொல்லுகின்றன என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. எப்படியென்றால் குரானின் மொத்த வசனங்களில் சில மக்காவில் அருளப்பட்டவை, சில மதீனாவில் அருளப்பட்டவை; இன்னும் சில வசனங்கள் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவிலா என்று முடிவுசெய்ய இயலாதவை. குரான் வசனங்களிலேயே மக்காவிலா மதீனாவிலா எங்கு அருளப்பட்டது என்பதை ஹதீஸ்களின் துணையோடு தீர்க்கமுடியவில்லை எனும்போது நரை முடி என்பதெல்லாம் உயர்வு நவிற்சி தான்.

ஆனாலும் ஹதீஸ் தொகுப்புகளின் காலத்திற்கு முன்பே முகம்மதின் வரலாறு தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.

32 thoughts on “ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

  1. இஸ்லாம்சம்பத்தப்பட்ட தங்கள் இடுகைகளை பார்த்து வருகிறேன். அதில் வரும் படங்கள் மிக மிக அருமை. இம்முறை சூப்பர். எல்லாவற்றையும் சேவ் செய்து கொண்டாலும் இந்த படத்தை நிறைய பேருக்கு அனுப்பியுள்ளேன். மேலும், ஹதீஸ்கள் என்றால் சும்மா கதைகள் என்று நினைத்தோருக்கு அது எப்படி கஷ்டப்பட்டு தேடி தெளிவான அறிவிப்பாளர் ஆதாரத்துடன் துல்லியமாய் தொகுக்கப்பட்டு இருக்கிறது என்று எழுதியுள்ளீர்கள். இதுவரை யாருமே சொல்லாத அழகிய பாணியில் விளக்கி உள்ளீர்கள். நன்றி. தொடரட்டும் உங்கள் பாணி. மறவாமல் நிறைய புதிய படங்களை பதியுங்கள்.

  2. ஆச்சரியம் செங்கொடி,

    கம்யுனிசத்தை கொள்கையாக கொண்ட ஒருவருக்கு இந்த அளவுக்கு இஸ்லாமிய வரலாறு தெரியுமென்பது ஆச்சரியம்தான்.

    மாஷா அல்லாஹ்…

    ஆனால் என்ன பயன்? இன்னும் விரிவாக தெரிந்துகொண்டு இஸ்லாத்தின் பக்கம் வந்துவிடுங்கள், ஏனென்றால் இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் தரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான்.
    உங்களுக்காக வல்ல நாயனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

    ஷைத்தானின் பிடியிலிருந்து உங்களையும் என்னையும் காத்து தனது நல்லருளை பூரணமாக்கி வைப்பானாக….

    ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    அப்துல் காதிர்

  3. இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! – சகுந்தலா நரசிம்ஹன்

    திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.

    சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.

    பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் “சதி” (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

    ‘ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்’ என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

    சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு “பெண்கள் பகுதி” க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.

    செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

    சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

    மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

    “சவுகரியமா? இதன் மூலமா?” என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

    எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

    நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

    மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த “பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்” இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.

    ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த ‘மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்’ என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

    சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

    என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, “கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!” என்றார்.

    நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: “எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?”

    அதற்கு அவர், “நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!” என்றார்.

    “முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்” என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

    என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

    “இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?” பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

    “இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி…!” என்றார்.
    அத்துடன் நில்லாமல், “இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?” என்றார்.

    அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், “புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?” என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

    என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

    “உங்களுக்குத் தெரியுமா?” என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். “மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!” என்றார்.

    “கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்” என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

    பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

    என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், “தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக”க் குறிப்பிட்டார். “சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!” என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

    வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

    அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

    இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

    அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

    அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

    அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்.”நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?” என்று கேட்டு விட்டேன்.

    நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: “இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது” என்றார்.

    என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

    “செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?” என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

    இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள்.

    அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, “கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?” என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.

    எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

    மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே ‘அடிமைத்தனம்’ என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் ‘பெண்ணடிமை’த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

    ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

    என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

    இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

    பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

    இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

    சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்! – தமிழாக்கம்: அபூ ஸாலிஹா நன்றி-(www.satyamargam.com)

  4. இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா – புர்கா, -துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றதுஅணிய கட்டாயப்படுத்துவது ஏன்? முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

    முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை.

    விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல் அதைப் போக்கும் காரணிகளையும் விளக்குகிறது. அது போலவே பர்தா(ஹிஜாப்) விஷயத்திலும் இஸ்லாம் கட்டாயப்படுத்தவில்லை.

    இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக கற்றுத்தருகிறது.
    மனிதனின் இயற்கையான உணர்வான வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரித்தான உயர்ந்த சிறந்த பண்பாகும். வெட்கமின்றிச் செயல்படுதலை இஸ்லாம் நடை, உடை, பாவனை என எல்லா காரியங்களிலும் தடை செய்கிறது.

    நாகரீகம் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட மனிதன் தன் உடம்பை இலை, தழைகளை வைத்து மறைப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டான். எனில் உடம்பை மறைத்தல் என்பது மனிதர்களுக்கு இடையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய செயல் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

    அத்தகைய சமூகத்தில் மரியாதையும் கண்ணியமும் பெற்றுத் தரும் உடை விஷயத்தில் இஸ்லாம் அதிகக் கவனம் செலுத்துகிறது.

    உடை என்பது சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. எனவேதான் ஒருவர் உடை அணியும் விதம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பாத விதத்தில் இருப்பதற்கும், தங்களது மறைவான பகுதிகள் வெளியில் தெரியும்படியான இறுக்கமான ஆடைகளை தவிர்க்கும்படியும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இது இருபாலருக்குக்கும் பொதுவானதுதான்.

    பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் கை மணிக்கட்டுக்கு கீழ் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு மறைப்பதற்கு ஏதுவான உடையாக தற்காலத்தில் வடிவமைத்திருக்கும் பர்தா இருப்பதனாலேயே இஸ்லாம் கூறும் அறிவுரையை மனப்பூர்வமாக பேணும் பெண்கள் இதனை அணிகின்றனர்.

    கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சமுதாயத்திலிருந்து பெற விரும்பும் பெண்களுக்கான சிறப்பான பரிந்துரையாகவே இஸ்லாம் இதனைக் கூறுகிறது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பெண்கள் மட்டுமே பர்தாவை அணிகின்றனர். இதனை தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையை வைத்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

    பர்தா போன்ற உடை அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறை திருக்குர்ஆனின் 33 வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப்பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

    நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள்
    தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.

    பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும், அவர்கள் சமூகத்தில் மோசமானவர்களால் விளையும் தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் தான் பர்தா போன்ற உடையை உபயோகிக்க இஸ்லாம் பெண்களுக்குப் பரிந்துரைக்கிறது. இறைவன் மிக அறிந்தவன்.

    பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் அது ‘ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

    முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

    ‘ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!” என்று முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் அந்தப் போலித்தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

    ‘ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

    இதுபற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

    ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம்

    ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

    ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். அனால் சமத்துவம் பேசும் இவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

    உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். இதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை எதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை.

    தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் அந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

    அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை எதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் அவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் அந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள் அவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

    அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட அந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. என் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே அதை அனுமதிக்க மாட்டார்கள்.

    ‘ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்” என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

    ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று?

    பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று?

    முழு அளவுக்கு இல்லையானாலும் ஒரளவுக்கு அவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
    பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

    மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு யாருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

    பெண்களுக்கு பாதுகாப்பு

    இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

    ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு அதுதான்.

    பெண்களின் ரசனை அத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. அதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

    ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

    ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்
    .
    அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
    பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம்.

    தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

    இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

    ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

    பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு அவ்வாதம் வலுவானதன்று.

    ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

    இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. அனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

    அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

    ஹிஜாபைக் குறை கூறுவோர் அதைச் சிந்திப்பதில்லை.

    பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர்.

    ‘இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்” என்றெல்லாம் கூறுகின்றனர்.

    ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

    பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது?

    பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

    பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் என்?

    பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும்போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

    பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

    எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

    இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.
    பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத்தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானதுதான். அதைவிட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் அந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

    ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக்குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.

    முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

    ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்டவேண்டும்.

    மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

    பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.

    எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

    நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

    கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபட கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். அதனால்தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

    இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக்கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

    முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

    இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

    பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் ஆடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக்கொண்டிருப்பதில்லை.

    ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படிஏற்க முடியும்?

    அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

    ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பதுதான் நமக்கு வியப்பாகவுள்ளது.

    இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

    கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் (பர்தா – புர்கா, -துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது) குறை கூற முடியாது.

  5. நண்பர் அப்துல்காதிர்,உலகையே படைத்த அல்லா..தனக்கு எதிரியான
    சைத்தானை ஏன் படைத்தார்?இல்லாத சைத்தானை விடுங்கள்,இருக்கின்ற‌
    மதம் என்ற சைத்தானின் பிடியிலிருந்து விடுபட்டு மனிதனாகி புதிய சமுதாயம்
    படைப்போம் வாருங்கள்.

  6. தோழர்கள் அனைவருக்கும் நவம்பர்7 புரட்ச்சி தின வாழ்த்துக்கள்
    தோழமையுடன்
    நா.திப்புசுல்தான்சுகதேவ்

  7. TO EVERYONE,
    PLS SEE PEACE TV LIVE IN ONLINE INSHA ALLAH YOU WILL BE UNDERSTAND THE ISLAM & HOLY (NOBLE) QURAN VERY
    WELL………..

    When You Stop Learning, You Stop Leading.

    Watch PeaceTV Live
    Notice: Undefined index: mode in E:\domains\p\peacetv.tv\user\htdocs\
    watchpeacetv.php on line 13. Please select your preference to watch: …

    peacetv.tv/watchpeacetv.php – 2k – Similar pages

    Peace TV United Kingdom (512k stream)
    Peace TV United States (256k stream)
    Peace TV India (128k stream)

  8. எந்த கனியும் அந்தந்த மரத்தின் அடியில்தானே விழும். அத்தகைய இனிப்பு மிகு இஸ்லாம் என்று முஸ்லிம்களால் புகழப்படும் இஸ்லாமிய இயக்கத்தில் பொதிந்துள்ள இனிப்புப் பழத்திற்கு இணையான கோட்பாடுகள் எவை? இஸ்லாமிய அரசியல், கலாச்சார கோட்பாடுகளால் விளைந்தவைகள் என்னென்ன? கல்வி கேள்விகளால் பெற்ற அறிவு, அறிவியல், அரசியல், மேலாண்மை, முன்னேற்றம், மனித சமுதாய நல உரிமை — ஆகியவைகளில் இஸ்லாமிய உலகத்தின் வெற்றி அல்லது தோல்வி, எத்தகையது? இங்கே அவைகளைப்பற்றி சற்று ஆராய்வோம்.

    இஸ்லாம் ஒரு முழுமைபெற்ற கலாச்சாரம், ஆகவே அது எல்லா கலாச்சாரங்களைக் காட்டிலும் மிகச்சிறந்தது என குரான் வாயிலாகக் கூறிக் கொள்கிறது. [1]

    இனி உலகளவில், அரசியல், பெருளியல், கலாச்சாரம், ஆகியவைகளில், மேற்கூறியவாறு மிகச் சிறந்ததாக கருதப்படும், இஸ்லாம் இயக்கத்தைப் பின்பற்றும் நாடுகளை, தற்காலத்தில் முன்னேற்ற மடைந்த நாடுகளாகக் கூறிக்கொள்ளும் நாடுகளுடன், தக்க ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?

    குரான் ஒரு முற்றிலும் பரிபூர்ணமான புத்தகம், அதில் உள்ள அரசியல், அறிவியல், சமூகக் கோட்பாடுகளால், இஸ்லாமைப் பின்பற்றும் முஸ்லிம்களை, நுண்ணறிவு சம்பந்தமான தேர்ச்சிகளில், முஸ்லிமல்லாத காஃபிகளைக் காட்டிலும் மிகச்சிறந்தவர்களாக ஆக்கவல்லது என இஸ்லாமின் நிலைப்பாடு. (Islam claims that the Koran is the perfect book with the perfect political and social doctrine that will make Muslims intellectually superior to kafirs). இதைக்கூறுகையில், நம் நினைவில் கொள்ள வேண்டியது, குரான் என்னும் நூல், எல்லோரைக் காட்டிலும், மிக நுண்ணறிவு படைத்த, சர்வ வல்லமையுள்ள, அல்லாஹ் என்ற இறைவனாலேயே அவர் மேற்பார்வையில், எழுதப்பட்டது. [ஆகவே, மிக பரிபூரணத்துவம் பெற்ற ஒரு கடவுளாலேயே எழுத வைக்கப்பட்டது என்பதால், அவரே நிர்மாணித்த இஸ்லாம் என்னும் இயக்கம் பூரணமான கருத்துகளைத் தானே உள்ளடக்கியிருக்க வேண்டும்?] ஆகவே உலகிலேயே முஸ்லிமளே மிகச்சிறந்த அறிவாளிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருக்கவேண்டும். உலகளவில் இஸ்லாமே மிகச்சிறந்த, பூர்ணத்வம் நிறைந்தது. (Remember that the Koran is the perfect recording of the mind of infinitely intelligent god, Allah, so Muslims should be the absolute leader in knowledge and ideas. Islam is the finest, most perfect idea that can exist).

    பெண்டிர்:

    அரபு நாடுகளில்தான் பெண்டிர் கல்வி மிக குறைந்த அளவு உள்ளது. அரபு நாட்டில் சரிபாதி பெண்களும், ஆண்கள் மூன்றில் ஒருபங்கும், கல்வி அறிவற்றவர்கள், [18] முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் நாடுகளின் சராசரியைக் காட்டிலும், அரபு நாடுகளில், கல்வி அறிவற்றவர்கள் மிக அதிகமாகவே உள்ளனர் [19]

    பெண்களின் பண சம்பாதிப்பு மற்ற உலக நாடுகளின் அளவைக்காட்டிலும் குறைந்து காணப்படுகிறது, இதில் 33% அரபு நாட்டுப் பெண்களின் பண சம்பாதிப்பு, சஹாராவுக்குக் கீழ் பிரதேச ஆப்பிரிக்க பெண்டிரைக்காட்டிலும் குறைந்து காணப்படுகிறது. (சஹாரா பாலைவனத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் உலகளவில் மிகத் தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது). [20]

    பாராளுமன்றத்தில் அரபு நாட்டுப் பெண்கள் பங்கேற்பு, உலக நாடுகளின் சதவீதத்தைக்காட்டிலும் தாழ்ந்தே காணப்படுகிறது. [21]

    மேற்கூறிய முடிவுகள் யாவுமே இஸ்லாமினால் விளைந்த விபரீத பலன்கள். இம்முடிவுகள் யாவும் எதிபார்த்தது தான். முடிவுகளால் எவரும் வியப்படைய முடியாது.

    இஸ்லாம் கோட்பாடுகளின்படி, எந்த பெண்ணும், இஸ்லாமுக்காக குழந்தைகளைப் பெற்றுத் தரவும், ஆண்களுக்கு வேண்டும் போதெல்லாம் சுக போகத்திற்காக மட்டுமே.

    முடிவுரை:

    எந்த கலாச்சாரத்தையும் ஓர் அளவுகோலால் சீர்தூக்கிப்பார்க்கும்போது, அரேபியர்கள், கடைசியிலோ, அல்லது கடைசியிலிருந்து ஒருபடி இன்னும் கீழேதான் மதிப்பிட முடியும். இதற்கு ஒரு நல்ல காரணம் உண்டு – இஸ்லாம்தான். இஸ்லாமின் கலாச்சாரக் கோட்பாடே எல்லாவற்றையும் உருவமைக்கிறது. இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் கல்வி முறை –அறியாமையையும், புதிதாக எதையும் திறமையுடன் உண்டாக்க இயலாமையையும், குறுகிய மனப்பாங்கையும், மற்றவர்களைப்பற்றி முழு உண்மையும் தெரிந்து கொள்வதற்கு முன்பே, அவர்களைப்பற்றி, தப்பெண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், ஆகியவைகளுடன் கூடிய கலவைதான். இஸ்லாமிய மத கொள்கை, அந்த கோட்பாட்டுக்கே தங்களை முழுமையாக சமர்ப்பித்துக் கொள்ளுதலைக் கற்றுக்கொடுக்கிறது. முழுமையாகச் சமர்ப்பித்துக் கொள்ளுதல் என்பது திரும்பத் திரும்ப சொன்னவைகளையே மீண்டும் கற்பதுதான். இஸ்லாமியர்களால் புனிதமாக்கருதப்படும் ஹடிஸ் இஸ்லாமைப்பற்றி எந்த கேள்வியையும் கேட்பதற்கு அனுமதிக்காது. இஸ்லாமிய கோட்பாடு–இஸ்லாமே எல்லா விஷயத்திலும் மிகச் சிறந்தது, முடிவில் இஸ்லாம் தான் மிக முக்கியம், உலகிலுள்ள மற்ற எதுவும், எவரும் முக்கியமில்லை. மேலாக, காஃபிர்கள் எல்லாவற்றிலும், எப்போதுமே, குற்றவாளிகள், ஆகவே அல்லாவால், வெறுக்கப் படுபவர்கள், என கற்றுக்கொடுக்கிறது. காஃபிர்களிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளக்கூடாது, முக்கியமாக, தொழில் நுட்பக்கலையப் பற்றி ஆராயும் விஞ்ஞானத்தை எதிர்க்கிறது. ஆகவே கற்றுக் கொள்ளக்கூடாது. இஸ்லாமிய அரசியல் கொள்கை என்பது, ஒட்டுமொத்தமாக மக்கள் எல்லோருமே இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அடிமைகள். அப்படி தன்னை இஸ்லாமின் அடிமை என ஒப்புக்கொள்பவனே சிறந்த (இஸ்லாமிய) முஸ்லிம் குடிமகன். இஸ்லாமியத்தால் புனிதமாகக் கருதப்படும் சுன்னாவில் சாராம்சமாக இருப்பது முகம்மது தனது கத்தியால்தான் மிகசக்திமானாக ஆகி, தன் இஷ்டப்படி ஆளத்தகுதிபடைத்தவர் ஆனார். ஆகவே கத்தியே, புத்தியைக் காட்டிலும் சாலச்சிறந்தது. [முகம்மது கூறியது, ”எனது வெற்றிகள் அனைத்தும் பயங்கர வன்முறையால் தான் விளைந்தவை”. (Hadith: Al-Bukhari, 4.52.220 – Narrated Abu Huraira: Allah’s Apostle said, “I have been sent with the shortest expressions bearing the widest meanings, and I have been made victorious with terror (cast in the hearts of the enemy), …………..].

    Thanks To

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=20910293&format=html

  9. எழில் சொன்னது,

    “”””முகம்மது கூறியது, ”எனது வெற்றிகள் அனைத்தும் பயங்கர வன்முறையால் தான் விளைந்தவை”. (Hadith: Al-Bukhari, 4.52.220 – Narrated Abu Huraira: Allah’s Apostle said, “I have been sent with the shortest expressions bearing the widest meanings, and I have been made victorious with terror (cast in the hearts of the enemy), …………..]. “”””””””””””
    நண்பர் எழில் கூறியதுபோல் எந்தவொரு ஹதீஸ்-ம் இருப்பதாக நான் இதுவரை கேட்டதுமில்லை,
    படித்ததுமில்லை.
    நண்பர் எழில் அவர்களே , எங்கேயோ யாரோ எழுதி(கிறுக்கி)ய கட்டுரையை அப்படியே copy & paste செய்துவிட்டீர்கள்.ஆனால் அது உண்மையா பொய்யா என்று ஆராயமல் விட்டு விட்டீர்களே.நீங்கள் குறிப்பிட்ட எண்(4.52.220) ஹதீஸில் இல்லவே இல்லை.

    “””””””””””””””””””அரபு நாடுகளில்தான் பெண்டிர் கல்வி மிக குறைந்த அளவு உள்ளது. அரபு நாட்டில் சரிபாதி பெண்களும், ஆண்கள் மூன்றில் ஒருபங்கும், கல்வி அறிவற்றவர்கள், [18] முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் நாடுகளின் சராசரியைக் காட்டிலும், அரபு நாடுகளில், கல்வி அறிவற்றவர்கள் மிக அதிகமாகவே உள்ளனர் “””””””””””””””””””””””””””””””””””
    இது முஸ்லிமுடைய குறைகளென்று கூறுவதுதான் சரி ஆனால் இஸ்லாம்தான் முஸ்லிம்களை செய்ய சொல்லுகிறது என்பது அப்பட்டமான பொய்.
    கல்வியின் அவசியத்தைப்பற்றி எடுத்து கூறும் எத்தணையோ வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?இதுபோல் எந்த வேதத்திலாவது காட்ட முடியுமா?
    ஆட்சிசெய்ய கல்வி அவசியம் 2:247,2:251,27:42,38:20
    கற்றவரும் கல்லாதவ்ரும் சமமில்லை 39:9,58:11
    கல்வியாளர்கள்தான் வதந்தியிலிருந்து உண்மையை ஆராய்ந்து பிரித்தறிவர் 4:83
    நண்மையை ஏவி தீமையைத் தடுப்பது கல்வியாளர்கள் மீது கடமை 5:63
    கல்வியை மறைக்கக்கூடாது 2:42,146,159,174, 3:71,187, 4:37 இது சிறு உதாரணம்தான்.இன்னும் ஏராளமான வசனங்கள் கல்வியை ஆதரித்துதான் இஸ்லாம் போதிக்கிறது.
    ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு நன்மையைத்தான் கூறுவாள்.ஆனால் தாய் சொல்வதை எல்லா குழந்தைகளும் கேட்பதில்லை.அதற்கு அந்த தாயின் மீது பழிபோடுவது தவறு.

  10. நண்பர் அப்துல்லாஹ் அவர்களே ஹதிஸ் இல் அப்படி ஒரு எண் உள்ளதாகத் தான் தரவுகள் காட்டுகின்றன

    கீழே உள்ள இணைப்பை பாருங்கள்.
    http://www.islam-watch.org/Library/Understanding-Muhammad-Tamil.htm

    இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகிறது என்று சொல்கிறீர்கள்.அதே நேரத்தில் அது முழுமையான கீழ் படிதலையும் வலியுறுத்துகிறது.முழுமையாக கீழ் படிந்தால் எதையும் கேள்வி எழுப்ப முடியாது.பின்னர் எந்த விதமான பகுத்தறிவுக்கும் இடமில்லை.அது அறிவு வளர்ச்சிக்கு மாபெரும் தடை என்பது வெள்ளிடை மலை .இது இஸ்லாம் மட்டுமில்லை எல்லா மதமும் தான்.ஆனால் இஸ்லாமில் கொஞ்சம் தூக்கல் அவ்வளவே.

    மேலும் முஸ்லிம்கள் மட்டும் ஏன் தங்களை மத அடிப்படையில் அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் சுத்தமாக விளங்கவில்லை.ஒருவன் முஸ்லிம் ஆக மாறும் போது அவனுடய பாரம்பரிய மொழி இன அடையாளங்கள் அழிக்கப் படுவது ஏன் ?

  11. சகோதரர் எழில் அவர்களுக்கு.. தங்களின் கடிதம் இஸ்லமிய வெறுப்புணர்வை காட்டுவதாகவே உள்ளது.. திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் அவர்களின் கட்டுரையை படித்த பின்பும் இஸ்லாம் மீதான உங்களது காழ்புணர்ச்சியை கொட்டி உள்ளீர்கள்.. நிச்சயமாக இஸ்லாம் மார்க்கம் நுண்ணறிவான மார்க்கம் என்பதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால் குர்-ஆன் கூறும் அறிவியல் கருத்துகளை பொய் என நிருபியுங்கள். அதை விடுத்து அதை பின்பற்றுபவர்களை கூறை கூறாதீர்கள்… இன்று பொருளாதார பிரச்சனையில் உலகின் பல நாடுகளில் வங்கிகள் திவாலாகி கொண்டிருக்க எந்த ஒரு இஸ்லாமிய வங்கியாவது திவாலான செய்தியை உங்களால் கூற முடியுமா… அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல இஸ்லாத்தின் தவறுகளை ஆரய தொடங்கி இஸ்லாமியர்களின் தவறுகளை இங்கு தந் துள்ளீர்கள்… பசுவை தெய்வமாக வணங்கும் இந்து நண்பர்கள் எத்துனையோ பேர் மாட்டிறைச்சி உண்கின்றனர்… அப்படி என்றால் உங்களின் இந்து வேதங்கள் மடமையனது என்பதை ஒத்துகொள்கிறீர்களா. இது போல பட்டியலிட்டால் தனியாக ஒரு கட்டுரையே போடலாம்…. எனவே இஸ்லாமை பரந்த கணோட்ட்த்தோடு பாருங்கள் இறைவன் உங்களுக்கு நேர் வழி காட்டுவான்…

  12. எழில் சொன்னது,
    “””””””””””””””இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகிறது என்று சொல்கிறீர்கள்.அதே நேரத்தில் அது முழுமையான கீழ் படிதலையும் வலியுறுத்துகிறது.””””””””””””‘
    இஸ்லாம் என்றால் அமைதி,சமாதானம்,சரணடைதல்,கீழ்படிதல் என்றும அர்த்தம்.இங்கு கீழ்படிதல் என்பது இறைவனுக்கும்,இறைவனுடைய “கட்டளைக்கும்” கீழ்படிதல் என்ற அர்த்தம்.(இறுதி இறை வேதமான திருக்குர்ஆனில் கற்காதே,சிந்திக்காதே என்று எந்தவொரு வசனமும் உங்களால் காட்டமுடியாது).
    *******************************************
    எழில் சொன்னது,

    “”””””””””””””””””””””முழுமையாக கீழ் படிந்தால் எதையும் கேள்வி எழுப்ப முடியாது.பின்னர் எந்த விதமான பகுத்தறிவுக்கும் இடமில்லை.அது அறிவு வளர்ச்சிக்கு மாபெரும் தடை””””””””””””””””””

    இது அப்பட்டமான பொய்.சிந்திக்காமல் எந்தவொன்றையும் இஸ்லாம் பின்பற்ற சொல்லவில்லை.இரண்டே இரண்டு விஷயங்களைத்தவிர 1)இறைவனுடைய பிறப்பு (அ) தோற்றத்தைப்பற்றியும் 2) விதியைப்பற்றியும்.
    (ஏன் இந்த இரண்டை மட்டும் சிந்திக்க வேண்டாமென சொல்கிறது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம்.இரண்டையும் மனிதன் சிந்திக்க தொடங்கினால் முடிவை கண்டுபிடிக்க முடியாமல் அவன் அனைத்தையும் இழந்து பைத்திய நிலைக்கு சென்று விடுவான் என்ற காரணத்திற்காகத்தான்.நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லையென்றால் உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.)
    மக்களை அதிகதிமாக சிந்திக்க சொல்லும்,தூண்டும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் இடம்பெற்றிருக்கிறது.நீங்கள் குர்ஆனை முழுவதுமாக நன்றாக நடுநிலையோடு படித்து பார்த்தீர்களேயானால் நான் சொல்வது உண்மையென்பது உங்களுக்கு புரியும்.
    கல்வி விழுக்காட்டில் முஸ்லிம்கள் பின் தங்கியிருக்கிறார்களென்றால் அது முஸ்லிகளுடைய தவறுதானேயொழிய இஸ்லாமுடைய தவரில்லை என்பதை நான் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

    ****************************************************
    எழில் சொன்னது,
    “”””””””””””””””””””””””””மேலும் முஸ்லிம்கள் மட்டும் ஏன் தங்களை மத அடிப்படையில் அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் சுத்தமாக விளங்கவில்லை.ஒருவன் முஸ்லிம் ஆக மாறும் போது அவனுடய பாரம்பரிய மொழி இன அடையாளங்கள் அழிக்கப் படுவது ஏன் ?””””””””””””””””””””””””””””””””””””””””””””
    எல்லாம் “ஒற்றுமை” க்காகத்தான். இஸ்லாம் ஒரு கலாச்சாரம் அதனால்தான் மதம் என்று சொல்லாமல் மார்க்கம் என்றழைக்கிறோம்.பாரம்பரிய மொழி அழிக்கப்படுகிறது என்று கூறுகிறீர்களே இதை தாங்கள் தெரியாமல் போட்டுவிட்டீர்களென நினக்கிறேன்.ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையென்றால் இதுவரை யார் யார் தங்களுடைய மொழிகளை மாற்றியுள்ளார்கள்? என்பதை தாங்கள் தெளிவு படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.
    தோழர் எழில் அவர்களுக்கு,
    நீங்கள் கொடுத்த இணைப்பை என்னால் பார்க்கமுடியவில்லை ஆதலால் அதிலுள்ளதை copy&paste செய்து எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
    என்னுடைய மின்னஞ்சல் முகவரி
    shah_jshafi@yahoo.co.in

  13. Hello Ezhil. Just after seeing, i understood, there will be no such number in Hadith: Al-Bukhari, 4.52.220. Anyhow, i searched in many many possible permutation and combination, for that number, 4.52.220 …nothing. In Saheeh Buhaari, there are 7563 hadhees only, from 1,….100,….1000,……5000,…..7000,…. and 7563. Thats all. No such nonemclature : 4.52.220. So, Ezhil is the big lier.

  14. அப்துல்லாஹ் சொன்னது

    //எல்லாம் “ஒற்றுமை” க்காகத்தான். இஸ்லாம் ஒரு கலாச்சாரம் அதனால்தான் மதம் என்று சொல்லாமல் மார்க்கம் என்றழைக்கிறோம்.பாரம்பரிய மொழி அழிக்கப்படுகிறது என்று கூறுகிறீர்களே இதை தாங்கள் தெரியாமல் போட்டுவிட்டீர்களென நினக்கிறேன் //

    இஸ்லாம் ஒரு கலாச்சாரம் என்று சொல்லி உள்ளீர்கள் .இது முற்றிலும் அறிவுக்குப் பொருந்தாத வாதம்.கலாச்சாரம் என்பது ஒரு மனிதன் வாழிடம்,சூழ்நிலை,தட்பவெட்பம் ஆகியவற்றைப் பொருத்து இடத்துக்கு இடம் மாறுபடும்.அரபு நாட்டில் உள்ள எல்லா பழக்க வழக்கங்களையும் இங்கே அப்படியே தொடர முடியுமா ? முழுக்க குளிரில் இருக்கும் அல்பானிய முஸ்லிமும் வறண்ட பாலையில் இருக்கும் அரபியனும் ஒரே மாதிரி உடை,உணவு பழக்கங்களை கொண்டிருக்க முடியுமா ? இங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது .
    எல்லாவற்றையும் அரபு மாடல் இன் கீழ் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துவதன் மூலம் ஒரு பாசிச சிந்தனையை கட்டமைக்க முயல்கிறீர்கள்.

    ஒருவனின் மொழி அழிக்கப் படுகிறது என்றால் மொழியை முற்றிலும் அழிப்பது என்று பொருளல்ல.
    மதம் மாறிய பின் ஒருவன் வணங்க வேண்டிய மொழியாகவும் படிக்க வேண்டிய மொழியாகவும் அரபியை முன் வைக்கிறீர்கள்.ஏன் அவனுடைய மொழியிலயே அதை செய்ய கூடாது ?

    நிஜார் அஹ்மத் க்கு

    //குர்-ஆன் கூறும் அறிவியல் கருத்துகளை பொய் என நிருபியுங்கள்.//

    இஸ்லாமம் அறிவியல் பூர்வமான மதம் என்றால் இதுவரை கண்டு பிடிக்கப் பட்டுள்ள அறிவியல் சாதனங்களில் எத்தனை இஸ்லாமில் இருந்து வந்தது ? எல்லாம் மனித முயற்சியினால் விளைந்தவை தான் எந்த மதமும் அறிவியலுக்கும் அறிவுக்கும் எதிரானது தான்.எல்லா மதங்களுமே அறிவியல் சாதனங்களை பயன் படுத்தி தங்களது பரப்புரையை முன்னெடுத்து மக்களை தொடர்ந்து முட்டாளாக வைத்திருக்கத் தான் முயல்கின்றன.இதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்று உங்களுக்கு நீங்கள் நம்பும் அந்த இறைவன் வழி காட்டட்டும் ?!?

  15. கிறித்தவர்களின் website-ல் வேறு என்ன எழுதமுடியும் இஸ்லாமைப்பற்றியும்,முஸ்லிம்களைப்பற்றியும் தரகுறைவாகத்தான் எழுதுவார்கள்.
    கிறித்தவத்தைப்பற்றி தரகுறைவாக என்னால்கூட எழுதமுடியும் ஆதலால் தாங்கள் அதை சரி என்று ஒப்புகொள்வீர்களா? robin

  16. சகோதரர் எழில் அவர்களுக்கு.. கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் சென்று குர்-ஆன் கூறும் விஞ்ஞான கருத்துகளை தெரிந்துக்கொள்ளுங்கள்…..

    http://tamililquran.com/quransciencefile.asp?file=quranscience.html

    இவை எல்லாம் 1400 வருடங்களுக்கு முன் மனிதன் கண்டு பிடிக்கும் முன் குர்-ஆனில் கூறப்பட்டவை…

    ஈடேற்றம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உங்களது தேடல் இருக்கட்டும்…

  17. //கிறித்தவர்களின் website-ல் வேறு என்ன எழுதமுடியும் //
    அப்துல்லாஹ்,
    அது கிறிஸ்தவர்களின் website அல்ல. அலி சினா என்ற முன்னாள் முஸ்லிமின் website. நீங்கள் இன்னும் அந்தத் தளத்தை பார்வையிடவில்லை என்று நினைக்கிறேன்.
    //கிறித்தவத்தைப்பற்றி தரகுறைவாக என்னால்கூட எழுதமுடியும் // இந்தத் தொடரின் ஆரம்பித்திலேயே பைபிள் மாற்றப்பட்டுவிட்டது என்ற தாக்குதலோடுதான் ஒரு இஸ்லாமியர் விவாதத்தை ஆரம்பித்தார். வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள்.

  18. செங்கொடி ஆசிரியர் அவர்கள் இஸ்லாத்தை தழுவ இப்போதுதான் முதல் பணியை ஆரம்பித்து இருக்கிறார். வாழ்த்துகள்.. தங்களின் ஆராய்ச்சிகள் தொடரட்டும்.. தங்களிடம் ஓர் வேண்டுகோள் தங்கள் இஸ்லாத்தை தலுஉம்போது தங்களுக்கு அழகிய இஸ்லாமியரின் பெயரை நான் தான் வைப்பேன்.. கூடிய விரைவில் என்னை அழைப்பீர்கள் (பெயர் வைக்க) என நம்பும்…..
    எம் : ஹாமீம்
    துபையில் இருந்து…

  19. //////////////.ஏன் அவனுடைய மொழியிலயே அதை செய்ய கூடாது ?////////////////////////
    அருமையான் வாதத்தை முன் வைத்திருக்கிறீர்கள்.இத்தனை மொழி பேசும் நம் பாரத திரு நாட்டில் ஏன் தேசிய கீதம் மட்டும் வங்காள மொழியில் இருக்கிறது.இந்நாட்டில் வங்காள மொழிதான் சிறந்ததா என்ன? இல்லை ஒரு ஒற்றுமையை கடைபிடிக்கத்தான் அதை ஏற்று கொண்டுள்ளோம்.
    அறிமுகமில்லாத மொழியாக இருந்தாலும் “ஜன கன மன” என்ற பாடலைக் கேட்டதும் இது தேசிய கீதம் என்ற உணர்வு நமக்குள் வந்து விடுகிறது.
    இஸ்லாம் என்பது அரபு நாட்டவர்களுக்கு மட்டும் சொந்தமில்லை.அகில உலகத்திற்கும் சொந்தம்.குர்ஆன் அரபு மொழியில்தான் அருளப்பட்டது.இஸ்லாமியர்கள் தொழும்போது குர்ஆனிலுள்ள வசனங்களைத்தான் ஓதுவார்கள்.நிச்சயமாக் குர்ஆன் தமிழில் அருளப்பட்டிருந்தால் உலக மக்கள் அனைவரும் தமிழில்தான் ஓதுவார்கள்.வேறு எந்த மொழியில் அருளப்பட்டிருந்தாலும் அந்த மொழியில்தான் ஓதுவார்கள் ஒற்றுமையை கடைப்பிடிக்கத்தானேயொழிய அரபு மொழிதான் சிறந்தது என்பதற்காக அல்ல.
    எந்தவொரு மொழியும் எந்தவொரு மொழியைவிட சிறந்ததும் கிடையாது எல்லா மொழியும் சமம்தான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
    மூல மொழியில் படிப்பதால்தான் இன்றுவறை குர் ஆனில் உள்ள ஒரு வசனம்கூட மாற்றபடாமலிருக்கிறது.இது இறைவனுடைய ஏற்பாடு.இதை யாராலும் மாற்றமுடியாது.
    /////////////////////அரபு நாட்டில் உள்ள எல்லா பழக்க வழக்கங்களையும் இங்கே அப்படியே தொடர முடியுமா ? முழுக்க குளிரில் இருக்கும் அல்பானிய முஸ்லிமும் வறண்ட பாலையில் இருக்கும் அரபியனும் ஒரே மாதிரி உடை,உணவு பழக்கங்களை கொண்டிருக்க முடியுமா ? இங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது .
    எல்லாவற்றையும் அரபு மாடல் இன் கீழ் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துவதன் மூலம் ஒரு பாசிச சிந்தனையை கட்டமைக்க முயல்கிறீர்கள்.////////////////////////////////////
    முதலில் உடை விஷயத்திற்கு வருவோம் எல்லோரையும் ஒரே மாதிரி (அரேபிய)உடையணியச் சொல்லவில்லை எங்களுடைய மார்க்கம்.நாங்கள் விரும்பியவாறு உடையணிய எங்களுக்கு முழு உரிமையிருக்கிறது.ஆனால் சிலவற்றைமட்டும் போட வேண்டாமென உபதேசிக்கிறது அது 1)சல்லடையைப்போல் ஆடையணிவது,
    2)தரையில் படுமாறு தாராளமாய் உடையணிவது,
    3)பாதி அங்கங்கள் வெளியே தெரியுமளவுக்கு ஆபாசமாய் உடையணிவது,
    4)இருக்கமாய் ஆடை அணிவது
    4)அழுக்கான ஆடையணிவது(இது அனைத்தும் ஆண் பெண் இருவருக்கும் பொதுவாகத்தான்).
    உணவு விஷயத்திற்கு வருவோம்.பன்றி,இரத்தம்,தானாக செத்தவை,அல்லாஹ்வின் பெயரைக்கூறாமல் அறுக்கப்பட்டவை,வேட்டையாடும் பிரானிகள்(கூர்மையான பற்கள் கொண்டவை ),மனிதனுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை இந்தமாதிரி உணவுவகைகளைத்தான் தவிர்த்து கொள்ள சொல்கிறது.நன்மையைத்தானே போதிக்கிறது இதில் பாசிசம் எங்கே இருக்கிறது.

  20. பார்ப்பன பயங்கரவாதத்தினை ஒழிக்க சகோதர சக்திகளான கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய வரலாற்று கடமை இன்று இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நேரத்தில் இது போன்ற உள் முரண்பாடுகளை ஊதி பெரிதாக்க கூடாது என்று கருதுகிறேன். சகோதர சக்திகளை அணைத்து அணிவகுக்க நீங்கள் உழைக்க வேண்டுமே அன்றி, இப்படி கிறிஸ்துவர்களுக்கு எதிராகவும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிடுவதும் அந்த நட்பு சக்திகளுக்கு எதிராக பதிவுகளை பதிவதும் ஆக்கப்பூர்வமானது அல்ல என்று கருதுகிறேன்.

    இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்தினை கம்யூனிஸ்டுகளும், கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட்டாலே ஒழிக்க முடியும். இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதம் ஒழிந்தாலே உலகத்தில் அமைதி பூக்கும் என்பது அசைக்கமுடியாத உண்மை. உலகத்தினை இன்று அச்சுருத்தி வரும் மாபெரும் பயங்கரவாதம் இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதமே என்பது வெள்ளிடை மலை. இதனை எதிர்த்து போரிட வேண்டிய முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் உலகளாவிய அளவில் தங்களுக்குள்ளே போரிட வைத்து வேடிக்கை பார்த்து வருவது இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதம்.

    சகோதர சக்திகளான கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    முஸ்லீம்களும் இஸ்லாமிய அமைப்புகளும் பாகிஸ்தானை போல இந்தியாவையும் சவுதி அரேபியாவின் கீழ் காலனி நாடாக்கி இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்தினை அழிக்க கடுமையாக உழைத்து வருகின்றன.

    கம்யூனிஸ்டுகள் சீனாவின் கீழ் காலனி நாடாக நேபாளை ஆக்கியதுபோல இந்தியாவையும் ஆக்கி இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்துக்கு முடிவினை கொண்டுவர கடுமையாக உழைத்து வருகின்றன.

    சோனியா காங்கிரஸும் கிறிஸ்துவ சக்திகளும் அமெரிக்காவுக்கு கீழ் பிலிப்பைன்ஸை போல இந்தியாவையும் ஒரு காலனி நாடாக்கி இந்து பார்ப்பன பயங்கரவாதத்தினை முடிவுக்கு கொண்டுவர வேலை செய்கின்றன.

    ஆனால் இந்து மதவெறியும், பார்ப்பன பாஜகவும் சற்று வலிமையாக இருப்பதால், அதனை செய்யமுடியாமல் இருக்கிறது.

    ஆகவே நட்பு சக்திகளான கம்யூனிஸ்டுகளும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் தங்களது வேற்றுமைகளை தற்போது பெரிது படுத்தாமல் ஒன்று இணைந்து இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்தினை ஒழிக்க முன்வரவேண்டும்.

    அமெரிக்க பயங்கரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், கிறிஸ்துவ பயங்கரவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிராமல், உலக மக்களின் முதன்மை எதிரியான இந்து பார்ப்பன பனியா பயங்கரவாதத்தினை அழிக்க தோளோடு தோள் சேருவோம்.

  21. //எல்லாம் “ஒற்றுமை” க்காகத்தான். இஸ்லாம் ஒரு கலாச்சாரம் அதனால்தான் மதம் என்று சொல்லாமல் மார்க்கம் என்றழைக்கிறோம்.பாரம்பரிய மொழி அழிக்கப்படுகிறது என்று கூறுகிறீர்களே இதை தாங்கள் தெரியாமல் போட்டுவிட்டீர்களென நினக்கிறேன்.ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையென்றால் இதுவரை யார் யார் தங்களுடைய மொழிகளை மாற்றியுள்ளார்கள்? என்பதை தாங்கள் தெளிவு படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.//

    தமிழ்நாட்டில் பல முஸ்லிம்கள் தங்கள் தாய் மொழி உருது என்று கூறுகின்றனர். பத்திரிக்கைகளில் திருமணம் விளம்பரங்கள் பகுதிகளில் மணமகன் தேவை பகுதியை பார்த்தால் தமிழ் முஸ்லிம், தாய்மொழி உருது என்று போட்டிருப்பார்கள். இந்தியாவில் நிறைய மொழிகள் இருந்தாலும் உருது இந்திய மொழியே அல்ல. பிறகு எப்படி தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு உருது தாய் மொழியாக முடியும். ஆங்கிலம் தெரிந்த, பேசுகின்ற மக்களும் நம் நாட்டில் இருக்கின்றனர். ஆனால் யாரும் என் தாய் மொழி ஆங்கிலம் என்று சொல்வது இல்லை. பல முஸ்லிம்கள் வீடுகளில் உருதில்தான் பேசுகின்றனர். வெளியில் பிறருடன் பேசும்போது மட்டுமே தமிழில் பேசுகின்றனர். பிறந்தது தமிழ்நாட்டில், வளர்ந்தது தமிழ்நாட்டில், பணிபுரிவது தமிழ்நாட்டில் ஆனால் இவர்களது தாய்மொழி உருது. இதற்கு பெயர்தான் பாரம்பரிய மொழி அளிக்கபடுவது. முஸ்லிம்களின் எந்த மசூதியிலும் தமிழில் வழிபடுவது கிடையாது. உலகத்தை படைத்து உயிரினங்களை படைத்த எல்லாம் வல்ல அல்லா தமிழில் வழிபாடு நடத்தினால் புரிந்து கொள்ள மாட்டாரா. உருதினை தாய் மொழி என்று கூறும் முஸ்லிம்கள் இல்லை என்று நீங்கள் சப்பை கட்டு கூற வேண்டாம். முஸ்லிம்கள் விரும்புவது முற்றிலும் அரபு கலாச்சாரம் சார்ந்த ஒரு வாழ்க்கை. அதனால் தான் எந்த பிற கலாச்சார மக்களுடனும் அவர்களுக்கு ஒத்து போக முடிவது இல்லை.

  22. ””””””தமிழ்நாட்டில் பல முஸ்லிம்கள் தங்கள் தாய் மொழி உருது என்று கூறுகின்றனர். பத்திரிக்கைகளில் திருமணம் விளம்பரங்கள் பகுதிகளில் மணமகன் தேவை பகுதியை பார்த்தால் தமிழ் முஸ்லிம், தாய்மொழி உருது என்று போட்டிருப்பார்கள். இந்தியாவில் நிறைய மொழிகள் இருந்தாலும் உருது இந்திய மொழியே அல்ல. பிறகு எப்படி தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு உருது தாய் மொழியாக முடியும்.””””””””’

    உருது மொழி பேசுபவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களா என்றால் கிடையாது.அவர்கள் “பட்டான்” என்ற பகுதியிலிருந்து வந்தவர்கள் அவர்களுடைய தாய்மொழி உருது அவர்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் தங்களுடைய தாய்மொழியான உருதைத்தான் தங்களுடைய வம்சத்துக்கு சொல்லி தருவார்கள்.தங்களுடைய மொழியை பரம்பரை பரம்பரையாக கடை பிடித்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் தாங்கள் செல்லும் ஊர்களிலுள்ள மொழியை அவர்கள் கற்காமல் பேசாமலுமில்லை.இரண்டையும் அவர்கள் சரிவர கடை பிடிக்கிறார்கள்.
    ஜெயப் பிரகாஷ் அவர்களே நீங்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுகிறீர்கள் என்று வைத்துகொள்வோம் உங்களுடைய குழந்தைகளும் அங்கேயே பிறந்து வளர்கின்றது அப்படியென்றால் அவர்களுடைய தாய்மொழி வேறாகிடுமா என்ன? உங்களுடைய வம்சத்தாருக்கு தமிழை சொல்லி கொடுக்க மாட்டீர்களா என்ன?வெளியில் அந்த நாட்டினுடைய மொழியை பேசுவீர்கள் ஆனால் வீட்டில் என்ன மொழியை உபயோகிப்பீர்கள்.தமிழைத்தானே உபயோகிப்பீர்கள்.அது போலத்தான் அவர்கள் உருது மொழியை உபயோகிக்கிறார்கள்.

    “””””பிறந்தது தமிழ்நாட்டில், வளர்ந்தது தமிழ்நாட்டில், பணிபுரிவது தமிழ்நாட்டில் ஆனால் இவர்களது தாய்மொழி உருது.””””””””””

    எத்தணையோ தமிழர்கள் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து படித்திருக்கிறார்கள் அந்த நாட்டினுடைய பிரஜையாகிகூட இருக்கிறார்கள் அவர்களெல்லாம் தமிழை தாய்மொழியாக கொண்டிருக்கக்கூடாது என்று சொல்ல வருகிறீர்களா என்ன?

    “””””””””அதனால் தான் எந்த பிற கலாச்சார மக்களுடனும் அவர்களுக்கு ஒத்து போக முடிவது இல்லை””””””””””””

    கலாச்சாரமென்று நீங்கள் எதை சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை? இறைவனுக்கு இணை வைக்காத எந்த கலாச்சாரத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை எனக்கு தெரிய படுத்துங்கள்.யோசித்து பார்த்தேன் எனக்கு ஒன்னும் புலப்படவில்லை என்னவென்பதை நானும் தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன்.

  23. 25+75=100
    65+15= 80
    85+65=150
    27+13= 40
    TOTAL=6200

    என்னடா கணக்கு சரியா இருக்கு TOTAL தவறாக இருக்குன்னு பாக்குர்றிங்களா அப்படிதான் இருக்கு உங்கள் பதிவும் ஆரம்பதில் சரியாகதான் ஏழுதுகிறீர்கள் முடிவில் தான் உங்களை நீங்களே குழப்பிக்கிறீர்கள்

  24. \\#முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை#\\
    இசுலாம் பற்றியோ இசுலாமிய வரலாறு பற்றியோ சரியாகத் தெரிந்துக்கொள்ளாமல் யாராவது எதையாவது சொன்னால் அதனை சரியா என்று மறு ஆய்வு செய்யாமல் த்த்து பித்துன்னு உளறுவது இவர்களின் பண்பாக உள்ளது.
    அன்றைய இஸ்லாமியப் பெண்கள் மலம் கழிக்க முன்னிரவு நேரத்தில் வெளியில் செல்வதே வழக்கம், அவ்வாறு முகம்மது நபியின் மனைவியரில் ஒருவரான சௌதா என்பவர் மலம் கழிக்க இரவு சுமார் 8 மணியளவில் (இஷா நேரம்) வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அருகிலிருந்த நபித்தோழர் (இரண்டாம் கலிபா) உமர் அவர்களுக்கு வெளியில் சென்றவர் யார் என்று தெளிவாகத் தெரிந்ததாம், சௌதா அவர்கள் மற்றவர்களை விட சற்று உயரமாக இருந்ததும் அதற்கு ஒரு காரணம்,
    உமர். முகம்மது நபியிடம் இந்நிகழ்ச்சியைக் கூறி பெண்கள் முக்காடிட்டு வெளியில் செல்ல கட்டளையிடக் கோருகிறார், இந்நிகழ்ச்சிக்கு முன்பும் சிலதடவை பெண்கள் முக்காடிட்டு வெளியில் செல்ல கட்டளையிம்படி அவர் கோரிக்கை வைத்துள்ளார், பெண் வெளியில் செல்லும் பொழுது யார் செல்கிறார்கள் என்று எந்த ஆணுக்கும் தெரியக்கூடாது என்பது உமரின் பெரும் விருப்பம், அதற்கிணங்க முகம்மது நபியும் குர்ஆன் வசனம் 33:59 ஐ அல்லாவிடமிருந்து இறங்கியதாகக் கூறி பெண்கள் தங்கள் தேவைக்காக வெளியில் செல்லலாம், ஆனால் முக்காடிட்டு முகத்தினை மறைத்தவாறே செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள், பாலைவனப் பகுதியில் காற்றால் மணல் உடலை நிறைப்பதை தடுப்பதற்காக பொதுவாக ஆண். பெண் இருபாலரும் வெளியில் செல்லும்போது உடல் முழுக்க போர்த்தியதான ஆடை அணிவது தான் வழக்கம், இந்நிகழ்ச்சிக்குப் பின் பெண்கள் வீணாக வெளியில் செல்லக்கூடாது என்றும் முகத்தில் திரையிட்டே வெளியில் செல்ல வேண்டும் என்று முகம்மது நபி முழு பர்தாவையும் இஸ்லாமியச் சட்டமாக்கினார்,

    புர்கா பெண்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டது என்பதற்கு இந்த வரலாறு மட்டுமல்லாது, இன்று புர்கா அணியாமல் செல்லும் பெண்களை இசுலாமிய ஆண்கள் படுத்தும் பாடும் சாட்சியாக உள்ளது.
    ஐயா, நானும் இசுலாமிய குடும்பத்தில் பிறந்து இசுலாமியப் பகுதில் வாழுபவன்தான். வறுப்பறுத்துவதே இல்லை என்று கதைக்க வேண்டாம்.
    \\#கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சமுதாயத்திலிருந்து பெற விரும்பும் பெண்களுக்கான சிறப்பான பரிந்துரையாகவே இஸ்லாம் இதனைக் கூறுகிறது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பெண்கள் மட்டுமே பர்தாவை அணிகின்றனர். இதனை தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையை வைத்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்#\\
    முகம்மது நபியின் காலம் முதல் காலிபா உமர் கத்தாப் அவர்களின் இடைக்காலம் வரை பெண்கள் பள்ளிவாசலில் தனிப்பகுதியில் தொழ அனுமதிக்கப்பட்டு வந்தனர், இந்த உமர் காலிபாவின் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலில் தொழ தடை செய்யப்பட்டுவிடுகிறது,
    தொழுகைக்கு வரும் பெண்களை ஆண்கள் கேலியும் கிண்டலும் செய்ததால் மார்கத்திற்கு முரணான செயல் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத் தடை செய்யப்படுகிறது, அங்கு வேறு மதத்தினரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இஸ்லாமியர்களாக மாறியவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை, அப்படியானால் கேலி செய்தவர்களும் இஸ்லாமிய ஆண்களே! பர்தாவின் பாதுகாப்பு எங்கே சென்றது?
    பர்தா சட்டத்திற்குப் பிறகு பெண், ஆண் துணையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்ற சட்டமும் பெண்மீது திணிக்கப்படுகிறது,

    மேலும் சில விவரங்களுக்கு எனது “அடிமை அது அல்லாவின் ஆணை” என்ற புத்தகத்தை வாங்கி படிக்கவும்.
    அடிமை அது அல்லாவின் ஆணை

  25. இஸ்லாத்தின் மடமைகளை வெளிப்படுத்தும் மேலும் பல கட்டுரைகளை எதிர்பார்கிறேன்

    இது தொடர்பாக வேறு இணையதளங்கள் இருந்தால் அறியத்தரவும்

  26. கம்யூனிஸத்திற்கு இஸ்லாமியர்களை கண்டால் பிடிக்காதோ என்னவோ.சைனாவில் உய்குர் முஸ்லிம்கள் எத்தைனை பேரை கொன்றொழித்திருக்கிறது என்பதை இநத சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தவகல்களை பாருங்கள்.

    —————————————————————-
    ஆஃப்கானிஸ்தானில் எத்தனைபேரை கொன்றிருக்கின்றது என்பதை இந்த சுட்டியை பாருங்கள்.
    http://thamizmani.blogspot.com/2008/01/blog-post_24.html
    இப்ப குரானில் தவறு என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்?
    எப்ப எப்ப என்னென்ன யுத்திகளை கையாளுவதில் கம்யூனிஸ்ட்டுகள் புத்திசாலிகள்தான்(!) இன்னும் எத்தனை உயிர்கள் கம்யூனிஸ்டுகளால் போக தயாராகி கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
    கம்யூனிஸத்தின் கொடி சிகப்பு நிற(இரத்த)மாகவும் ஆயுதமும் இருப்பது எதனால் என்பது புரிகிறதா? ஜாக்கிரதையா இருந்துகொள்ளுங்கள் மக்களே.

  27. ஐயா ஹாமீம் அவர்களே,
    இசுலாமியக் கோட்பாடுகளையும், வரலாறுகளையும், நடைமுறையில் உள்ள பித்தலாட்டங்களையும் உங்களைவிட அதிகதிகமாக நன்கறிந்த என்போன்ற ஏராளமானோர் இசுலாத்தைவிட்டு வெளியேறி கம்யூனிஸ்டுகளாக மாறியுள்ளோம். உங்களைப்போல் அறைகுறையாக, ஆளும்வர்க்க சிந்தனைவாதியாக (எல்லோரும் பணக்கார்ர்களாக மாறிவிட்டாள் வீட்டுக்கு பெயின்ட் அடிக்க, க்க்கூஸ் கழுவ யார் வருவா? என்று பிஜே சொல்லுவது போல) இருப்பவர்களால் மட்டுமே இசுலாத்தில் இருக்கமுடியும்.
    அபுதாபி வாழ் பிஜே அவுலியாவை ஈமான் கொண்டவரான ஹாமீம் இபுராகிடம் இந்த கேள்வியை கேளுங்கள். ஒரு இசுலாமியப் பெண்ணோ ஆணோ காதலித்தால், ஒரு இசுலாமியப்பெண் ஒரு ஆடவனிடம் தனியாக பேசினால் கட்டிவைத்து அடித்து தவ்ஹீதை, சரீயத்சட்டத்தைக் காத்தீர்களே. அதுபோல், பட்டுப்புடவை எடுத்துக் குடுத்து கோவில்பட்டிக்கு கூட்டிச் சென்று சல்ஜாப் பண்ணின மன்மதன் பாக்கரை மட்டும் கட்டிவைத்து அடித்து சரீயத் சட்டத்தை பாதுகாக்காமல் மன்னிப்பு கொடுத்து கொஞ்சநாள் பிரச்சாரத்திற்கு அனுப்புவதை தவிர்த்துவிட்டு மீண்டும் ஏகதுவத்தை காக்க பிரச்சாரத்திற்கு அனுப்பி அவர்கள் எல்லாம் ஏகதுவத்தை காக்கவந்த உத்தமர்களாக பசப்பித் திரிகிறீர்களே இது என்னவகை நியாயம்? அதற்கடுத்து கோவை ஷகீலா பிரச்சணையும், அதனை பிஜே எவ்வளவுதான் மூடி மறைத்துவிடலாம் என்று முயற்ச்சி செய்தும் ஹாமீம் இபுராகிமின் மிரட்டலால் பாக்கரை வெளியேற்றியதும் தனிக்கதை

  28. போடுவது என்பதும் ஆண்கள் எவரும் அதனை அவர்கள் மீது திணிக்கவில்லை என்று கூறுவதும் அப்பட்டமான பொய்.
    ஓ ! நெத்தியடி முகம்மதே நீர்கேளும். நீர் உமது உள்ளத்தில் உள்ளதை மறைத்து பொய் கூறுகிறீர் என்பதும், முழுப்பூசணிக்காயையும் சோற்றிலே மறைக்க எத்தனிப்பதும் நாம் அறிந்தவற்றில் மிகத் தெளிவானதே. கீழே எழுதப்பட்டுள்ளது உமக்கல்ல. பிற பின்னூட்டக்காரர்களுக்கு.

    நம்ம உமரு காலிபா இருக்காருங்களே அவர்தாங்க இந்த பர்தாவை திணிப்பதில் முழு மூச்சாக நினறாரு. அவரு பல தடவை முகம்மது நபியிடம் கட்டாயப்படுத்தினாருங்க. ஒருநாள் முகம்மதுநபி மனைவிமார்களில் ஒருத்தரான சௌதா வீட்டிலேர்ந்து வெளியே மலம் கழிக்க போனாருங்களாம் (வழமையானதே! அப்போவல்லாம் ஊட்ல கக்கூஸ் இல்லீங்க) எந்த நேரத்தில் போனாங்க தெரியுமா? கருக்கல்ல. அந்த கும்மிருட்டுள்ள போனாங்கலாம். அய்யோ இந்த உமருக்கு யார் போறதுன்ன அடையாளம் தெரிஞ்சுட்டதாம். அதனால் வம்படியா சண்டை போட்டார். முகம்மதுநபியும் மௌணமா இருந்துப்பார்த்தார். உமரு விடுவதாக இல்லை. புர்காவை கட்டாயமாகக்கிட்டாருங்க. அதிலேருந்து இது இசுலாமிய பெண்களுக்கு ஷாரியத் சட்டமுங்க. அவங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போட்டாத்தாங்க இசுலாமிய பெண் இல்லைன்னா சொர்க்கத்தில் இடமில்லை நரகம்தான்.

    1. இன்று, புர்கா ஆண்களால் திணிக்கப்படுவதில்லை என்று கூறுவது பொய்.

    என்னோட கூட பிறந்தவங்க 7பேரு. இரண்டு பேரு பெண்கள். என் தாய் இறக்கும்வரை பர்தா அணிந்ததில்லை எனது சகோதரிகளும் தனது ஏறக்குறைய 33, 35 வயதுவரை அணிந்ததில்லை. எங்களுக்கெல்லாம் மூத்தவருக்கு நாங்கள் மரியாதை செலுத்துவது வழக்கம் ஏன்னா தன்னுடைய 18 வயதிலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பத்தில் அளப்பரிய தியாகம் செய்தவர். அவரும் தனது 35 வயதுவரை குடித்துக்கொண்டு இருந்தவர்தான். ஆனால் திடிரென்று பக்தியோ பக்தி புடிச்சிக்கிருச்சி. அதிலிருந்து எல்லாரையும் புர்கா போடச் சொல்லிட்டாரு. என்னுடைய அண்ணியர்கள் எவரும் அதுவரை புர்கா அணிந்ததில்லை. அதிலும் எங்களின் மூத்தவரின் மனைவி தலையில் முக்காடு கூட போடமாட்டார்கள். இந்த முக்காடு போடாதற்காக எங்க அண்ணி வாங்கிய அடிகளும் எங்க அண்ணன் தன்னைதானே காயப்படுத்திக் கொண்டு வருத்திக்கொண்டதும் ஏராளம்.

    ஏன் எங்கள் குடும்பம் புர்கா அணியவில்லை? எங்கள் ஊரில் அது வழக்கமில்லை. தென் மாவட்டங்கள் எதிலும் இந்த பழக்கமில்லை. பொதுவாக இசுலாமியர்கள் என்று சொன்னதும் பலருக்கும் எளிதாக நினைவு வரும் ஊர் கீழக்கரை. (இந்த ஊருல அவுங்க தெருவுல அன்னிய ஆண்கள் நுழையக்கூடாதுன்னு தடை இருக்கு. ஒரு அறிவிப்பு பலகையும் உண்டு.) காயல்பட்டிணம், முத்துப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ஊர்கள் இந்த ஊர்களில் எவரும் புர்கா ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அணிந்ததில்லை. வாணியம்பாடி உருது முஸ்லீம்கள் தவிர). பொதுவாக தமிழ் முசுலீம்கள் அணிவதில்லை.
    கேரள பெண்கள் விஷயம் முற்றிலும் வேறு. அவர்கள் முக்காடு போட்டாலும் அங்குள்ள பண்பாட்டைச் சார்ந்து மாராப்பு போடுவதில்லை. புர்காவும் கிடையாது.

    எங்கள் குடும்பம் எங்கள் ஊரில் கண்ணியமிக்க குடும்பத்தில் நம்பர் 1 இசுலாமிய சட்டங்களில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்வது, இந்த கழிசடை ஊர் சுற்றி சுமஜ்லா போலில்லாது (அப்படி நான் சொல்லஙீங்க. இசுலாம் சொல்லுது) பெண்கள் வீணாக வெளியில் சுற்றுவதில்லை என்பது போன்ற அனைத்தையும் கறாராக கடைபிடித்தவர்கள். எனது தாத்தா பட்டம் பெற்ற ஆலிம். எனது தந்தை பட்டம் பெறாவிட்டாலும் இமாமாகவும் அரபி போதராகவும் பணியாற்றியவர் (35 வயதுக்குமேல்)

    இப்பொழுது என் சகோதரிகள் தாங்கள் விரும்பியே புர்கா அணிகிறோம்; எவரும் கட்டாயபடுத்தவில்லை என்றுதான் கூறுகிறார்கள்.

    எனது உறவுக்காரர் ஒருவர் தனது பருவமடையாத 11வயது மகளுக்கு பர்தாவின் கண்ணியத்தை திணித்துள்ளார் என்பது இதன் புதிய பரிணாம வளர்ச்சி.பெண்கள் அவர் விரும்பியே பர்தா

    2. கண்ணியம் எங்குள்ளது?

    மதுரையில் ஒரு நிகழ்வு அந்தக் குடும்பம் மிகப்பெரும் பணக்கார குடும்பம் கிரானைட் அவர்களது தொழில். தந்தை மகன் ஆளாலுக்கு தனிகார்களும் உண்டு. அவர்கள் குடும்பத்துடன் ஒரு சேட்டுக்கு ( கிரானைட் வியாபாரிதான்) நட்பு ஏற்பட்டது. அவர் வீட்டுக்கு வர போக இருந்தார். மகனின் மனைவிகூட அவரிடம் சகஜமாக உரையாடுவார்.

    ஒருநாள் மகனின் மனைவிக்கு ஒரு தனிக்கார் வீட்டிற்கு வந்தது. அது பற்றி அவரது மனைவி “சேட் அன்பளிப்பாக” வழங்கியதாக கூறியுள்ளார். அந்த மனைவி அடிக்கடி தனது தோழிகளை காண வெளியில் செல்வாராம். இப்பொழுது காரில் செல்லலானார். அதுவும் அதிகமாகியதால் மகனின் மனதில் ச்நதேகம் தோன்றியது. கார் அன்பளிப்பு மனதை உறுத்தியது. ஒருநாள் மனைவி வெளியில் செல்லும்போது தானும் அவருன்னுடன் வருவதற்காக கூறியிருக்கிறார். ஆனால் அவரது மனைவி சாக்குபோக்கு சொல்லி தடுத்துவிட்டார். அவரது மனம் நிலைகொள்ளாமல் குளம்பியது. தாங்கமுடியாத மனஉலைச்சல். ஒருநாள் மனைவி வெளியில் செல்லும் போது அவளரறியாத பின் தொடர்ந்தார். மனைவியின் கார் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு நுழைகிறது. பொருத்திருந்து கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற திட்டமிட்டார். சில மணிதுளிகள் அவருக்கு நகர வேதனையாக நகர்கிறது. அந்த சில மணிதுளிகள் கடக்கும் வரை அவரது உடல் படபடக்கிறது. பிறகு மெதுவான வரவேற்பை அனுகி விவரம் கூறி அறை எண்ணை தெரிந்துகொண்டு வேகமாக விரைகிறார். அறையை அடைந்து கதவை தட்டுகிறார்
    . தாம் இருப்பது தனது கணவருக்கு தெரியாது என்பதில் எள்ளளவும் அந்த மனைவிக்கு சந்தேகமே இல்லை. அதனால் வேறு யாரோ ஹோட்டல் தொழிலாளியாக இருப்பார் என்று அவரது மனைவி கதவை திறக்கிறாள்.

    மனைவியின் அழகில் வாலிப மிடுக்கில் கிறங்கி தனது செல்வத்தினை உள்ளம் உவக்க நனையச் செய்து, தனது மும்தாஜியாக பெருமையுடன் இணைந்து உலா வந்த அந்த மகன், தன் மனைவி கதவை திறந்த்தை கண்டு சில வினாடிகளில் கண்ணாடிபோல நொறுங்கினாலும் மறுகனமே ஆத்திரம் உச்சந்தலையை சூடாக்க உள்ளே இருக்கும். சேட்டை, அந்த அயோக்கிய காஃபிரை எதிர்பார்த்து ஆவேசமாக உள்ளே நுழைகிறார்.
    அங்கே அதிலும் பெரும் அதிர்ச்சி!! கல்லாக உரைகிறார்!! அங்கே காண்பது கனவா நினைவா?
    ஆம்! உள்ளே இருப்பது சேட் அல்ல தாடியும் தொப்பியுமாய் சொல்லுக்குச் சொல் மாஷா அல்லாஹ் (அல்லா அற்புதமானவன்), அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வின் கருனையால்) என்று சொல்லும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அவரது…..
    தந்தை!
    மறுநாள் அந்த இசுலாமிய “மகன்” தூக்கில்தொங்கிக் கொண்டிருந்ததை நாளிதழ்கள் வெளியிட்டன.

    சுமஜிலா நீங்கள் உங்கள் தந்தையின் முன்பும், மாமனார் முன்பும், வீட்டினுள் இருக்கும் போதும்கூட பர்தாவில் இருந்தால்தான் கண்ணியமாக இருக்கும்.

    தவறு எங்கே உள்ளது?
    எந்த பெண் வெளியில் செல்கிறார் என்று தெரிந்தால் என்ன?
    வெளியில் செல்ல தடை விதித்தலில் தவறு உள்ளது.

    பெண்கள் பள்ளிவாசலில் தொழுக வந்தால் என்ன?
    உமரின் சாட்டையை கேளி செய்தவர்களை விளாசித்தள்ளாதலில் தவறு உள்ளது.

    பெண்கள் புர்கா அணியாமல் வெளியில் வந்தால் என்ன?
    சுமஜ்லா போல் அதற்கு உண்மைக்கு புரம்பான விளக்கங்களை கூறி பெண் இனத்திற்கே துரோகம் செய்வதில் தவறு உள்ளது.

    பர்தாவோ புர்காவோ ஆணின் பாலியல் வக்கிர புத்தியை அடித்து நொறுக்காதவரை பெண்கள் வன்உணர்வின் மிரட்டலில்தான் வாழ முடியும்.
    <A href ="http://www.paraiyoasai.wordpress.com&quot;

  29. செங்கொடி,
    உங்களின் பதிவிலுள்ள செய்திகள் எங்கிருந்து பெற்றீர்கள் என தெரிந்து கொள்ள ஆவல். மிக அழகாக கோர்வையாகத் தந்துள்ளீர்கள். நன்றி

  30. //அதன் படி ஆசிரியருக்கு குறிப்பிட்ட ஹதீஸை சொன்னவரிலிருந்து பின்னோக்கி முகம்மதுவிடமிருந்து நேரடியாக கேட்டவர்வரை செல்லவேண்டும். //

    …… முன்னோக்கி முகம்மதுவிடமிருந்து நேரடியாக கேட்டவர்வரை செல்லவேண்டும் என்று அமைய வேண்டும்.

    200 வருடங்கள் பிற்பட்டு ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். அந்த காலம் வரை விசாரித்து அறிய சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருந்திருப்பார்களா? Logic இல்லாது கதையளக்கிறீர்களே!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்