ராமனா? பாபரா? நாட்டை இடித்தவன் யாரெனச் சொல்

அயோத்தி தீர்ப்பு வெறும் இடப்பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையிலான பிரச்சனையோ அல்ல. மக்களின் உயிரோடும் உடமைகளோடும் தொடர்புடையது எனவே தான் நீதிபதிகள் இடத்தைப் பிரித்துக்கொடுத்தி தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று பார்ப்பன பாசிச கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு சப்பைக்கட்டு கட்டும் இந்துவெறியர்களுக்கு இதைச் சொல்லிக்கொள்கிறோம். தானும் இந்து என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இதை படித்துப்பார்த்துக் கொள்ளட்டும்.

நீளமான இக்குறிப்புகளை தேடி எடுத்து ஒருங்கே தொகுத்து டிவிட்டரிலும் கூகுளிலும் உலவவிட்டு சாதனை படைத்திருக்கும் தோழர் மணி, தோழர் ஏழரை ஆகியோருக்கு மிக்க நன்றி

சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.

உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும், செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்.

னது பலவீனத்தை தோல்வியை தடுமாற்றத்தை பாபர் போல வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை.

டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது.

இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்.

மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார்

திரேதா யுகம் முடிவுக்கு வந்தது கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம், ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி.

பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்.

ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்.

அவனை அவனது சகோதர சகோதரிகளான லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை

தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு.

வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை

சீதை கடத்தப்பட்ட கதை: இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்தது, வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது # நாகார்ஜூனா

கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றைய அயோத்தி கங்கைகரையில் இருந்தது என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்.

தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ நதிக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்.

அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி.

அந்த காடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில் சிக்கவில்லை

இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian Archeology – Areview 1979-80 page 76, 77 – cofirms the research-done by BB Lal, KN Thetchikth

சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆய்வு வேறு முடிவை தந்தது

விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.

ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை

12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 கோயில் என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை, ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.

கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமரகோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை

இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை

எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழுதிய ஆய்வுக்குறிப்பேட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா, எர்நாக், சான்சி, பாம்ரா, நாச்னா போன்றஇடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார். இல்லையா?

பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான், அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் (எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து) ராமன் தூக்கப்பட்டார்

ராமர் கோவில் இடித்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராம சரித்மானஸ் என்ற அவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர்எழுதவில்லை?
இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரியர் கோபால் கேட்கிறார்.

பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாக தனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்

அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜித்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை. பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூனோ ஒரு அகதியாக திரிந்தான்.

18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மரபு தான் செல்வாக்கில் இருந்த்து. இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி தாண்டதவான் குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கான ஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது.

குவாலியரில் கோவில் சிற்பங்களை ரசித்ததை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர், ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கே வரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா. அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்

அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி

பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை

1845 ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சு இதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில் சொல்லவில்லை


1856
னவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது

இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள் வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம் ஆல் தாக்கப்பட்டனர். மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார் புரிந்தனர்

வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகி கொண்டிருந்தது டல்ஹவுசியால். அயோத்தியின் அவுத் மீதும் ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்தது பிப்ரவரியில் அவுத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மன்னன் வாஜித் அலி ஷா கைது செய்யப்பட்டான்.

அவனது நான்கு மனைவிகளில் மூவர் சரண்டைய நான்காவது ராணி மட்டும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிந்தாள்.

பீகாரின் எளிய தாழ்த்தப்பட்டகுடும்பத்தில் அழகாக பிறந்த ஒரே குற்றத்துக்காக கட்டாத வரிக்கு பதிலாக பெண்ணையே மனைவியாக்கி கொண்டிருந்தான் அந்தமன்னன்

அவளுடைய இழிபிறப்பு காரணமாக அவத் அவளை ராணிகளில் ஒருத்தியாக கூட ஏற்கவில்லை. ஆனால் அவத் இன் மானத்தை காப்பாற்றிய அவள்தான் ஹஸ்ரத் பேகம்

ஜான்சியின் லட்சுமி பாயும் அவத் இன் ஹஸ்ரத் பேகமும் சிப்பாய் கலகத்தின் கதாநாயகிகள். ஹஸ்ரத் தன் 10 வயது பாலகனோடு போர்க்களத்தில் நின்ற போது அவுத் இன் நிலபிரபுக்கள் நடுநிலை காத்தார்கள்

அனுமன் கிரியின் பூசாரி ரகுபர் தாஸ் பிரிட்டிசாருக்கு சமையல் செய்ய ஆள் அனுப்பியும் உணவு அனுப்பியும் தைரியமூட்டியும் ஆதரவு அளித்தான். அப்போது ஆற்காட்டில் இருந்து ஆங்கிலம் தெரிந்த ஒரு 70 வயது மௌலவி ஒருவர் அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத்க்கு வந்தார் பாளையக்கார்ர்களின் கலகத்திற்கு ஒரு விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்றால் சிப்பாய் கலகத்திற்கு பைசாபாத் மௌலவி அகமது ஷா

ஜிகாத் என்ற மதப்போர்வையில் பிரிட்டிசாருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். கைதாகி சிறையிலிடப்படுகிறார்.

ஆயுதங்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து மக்கள் ஆதரவுடன் உடைக்கப்ட்டு விடுவிக்கப்படுகிறார் மௌலவி#சிறையையும் தனது பிரச்சார மேடையாக மாற்றிய மௌலவி தனது உதவியாளருடன் கடைசியாக பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது வயது 71

அகமது ஷாவும் ஹஸ்ரத் மஹலும் உள்ள அவுத் இன் சிப்பாய் கலகம் பற்றி மட்டுமே ஜி.ஹட்சின்சன் ஒரு தனி புத்தகமே எழுதி உள்ளார்

அப்புத்தகத்தில் கேப்டன் ரீத் என்பவர் ஹனுமன் கிரி பூசாரிகளின் உதவிக்கு நன்றி பாராட்டுகிறார். மெக்கால்டு இன்சும் அவுத் லக்னோ கலகம் பற்றிய குறிப்புகளில் இதனை குறிப்பிடுகிறார்

ஹனுமன் கிரி பூசாரி மாத்திரம் உணவு தராமல் இருந்தால் தாங்கள் செத்திருப்போம் என்கிறார் வில்சன்தாமஸ் பொர்னஸ் Defence of Lucknow (1858 edition) இந்த துரோகத்திற்கு எதாவது பரிசளிக்க விரும்பினார்கள் ஆங்கிலேயர்கள் ஹனுமன் கிரி பூசாரி ரகுபர் தாசுக்கு பாபர் மசூதிக்கு முன் உள்ள பொதுமனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1865ல் அங்கு ராம் சபூட்ரா என்ற ராமர் பிறந்த இடம் தோன்றியது

முன்னர் கல்லறை வழிபாட்டு தகராறுக்கு நியாயம் கேட்க வந்த முசுலீம்களை பழிவாங்கும் நோக்கம் இருந்ததை பூசாரியின் நடைமுறைகள் காட்டுகின்றன

கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானுக்கு ஒரு வாளும் பட்டாடையும், சிப்பாய கலகத்தை காட்டிக் கொடுத்த ஹனுமன் கிரி பூசாரிக்கு ராமஜென்ம பூமி

னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் முதன்முதலாக பாபர்மசூதி கட்ட யன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர்
இன்று மட்டுமா வரலாற்றை திரிக்கிறார்கள்

ராம் சாபூட்ரா திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலியும் போட்டு வடக்கு வாசல் வழியாக மட்டுமே முசுலீம்கள் வரலாம் என நிபந்தனை விதித்தார்கள். 1859 இலிருந்து இது நடைமுறைக்கு வந்தது.

ஆம் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு கிடைத்த இடம்தான் ராமஜன்ம பூமி. பிரிட்டிசாரின் தயவில் பிறந்த அவதார புருசன்

1885 ல் ரகுபர்தாஸ் இந்த திண்ணையில் கோவில்கட்ட அனுமதிக்குமாறு பண்டிட் ஹரிகிருஷ்ண சாஸ்திரியின் சிவில் கோர்ட்டில் .எண் 61/280 பதிவு செய்கிறார் படுகொலைக்கு வழிவகுக்கும் என அந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஆனால் இடத்தை ஊர்ஜிதம் செய்தார்

அவுத் மாகாண நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் யங் என்பவரால் நவ 1 1886ல் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பாபர்தான் இடித்தார் என ஏற்றுக்கொண்டது

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் இயக்குநர் .பூரேர் 1889 ல் நடத்திய ஆய்வில் மசூதியின் பாரசீக கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. ஹிஜ்ரி 930ல் அதாவது கிபி 1524ல் இப்ராகிம் லோடியால் இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது கல்வெட்டில் உள்ள செய்தி

ஏப் 25 1526 இல் முதல் பானிபட் போரில் இப்ராகிம் லோடி பாபரால் கொல்லப்படுகிறார். பாபர் இந்த பள்ளிவாசல் கட்டப்படுவதை தொடர்ந்தார்

இந்த கல்வெட்டை கவனிக்காமல் திருட்டை உருப்படியாக செய்ய முடியாமல் மாட்டிக் கொள்ளவே கல்வெட்டுக்கு கன்னம் வைக்க கலவரத்திற்கு தேதி குறித்தார்கள்

1934 கலவரத்தில் வெற்றி பெற்றதாக ராக்த் ரஞ்சித் இதிகாஸ் நூலில் ராம ராக்ச திரிபாதி (பக்.60) குறிப்பிடுகிறார்

அந்த கலவரத்தில் கல்வெட்டை மட்டும் அழித்தால் மாட்டி விடுவோம் என பயந்து வெளிச்சுவர் தூபி என பலவற்றை இடித்தனர் இந்துமத வெறியர்கள்

லவரத்தில் சேதமடைந்த பகுதிகளை அரசு செப்பனிட காண்டிராக்டு விட்டதற்கு ஆதாரம் உள்ளது

1949 டிச22 இரவில்தான் பூமியை பிளந்துகொண்டு ராமரும் லட்சுமண சீதா பிராட்டியும் அயோத்தியில் முளைத்தனர்

இதற்கு காரணமான கேகே நய்யர் கூட இந்த அற்புதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
மறுநாளே சிலைகளை அப்புறபடுத்த வாய்ப்பிருந்தும் அப்படி செய்தால் அப்பாவிகள் மடிவார்கள் என நய்யர் அகற்ற மறுத்துவிட்டார் இந்த உதவிக்காக ஜனசங்கம் பின்னர் அவரை எம்பி ஆக்கியது

அகற்ற வாய்ப்பு இருந்ததை அன்றைய காங்கிரசு மா செயலர் அக்சாய் பிரம்மச்சாரி சுட்டிக்காட்டுகிறார்

சாஸ்திரிக்கு 1950ல் கடிதமும் எழுதி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக் கோரி உண்ணாவிரதமும் இருந்தார் அவர். ஏற்கெனவே 1949டிச23 மசூதிக்கு பூட்டு

உண்ணாவிரதமிருந்த காந்தியவாதிகளை தாக்கி வீடுகளை சூறையாடினார்கள் இந்துமதவெறியர்கள். டிச291949ல் பைசாபாத்அயோத்தி கூடுதல் முதல் மாஜிஸ்டிரேட் சொத்தின் ரிசீவராக நகராட்சி தலைவர் பிரியாதர்ராமை நியமித்த்து. அவர் இந்துக்களுக்கு மாத்திரம் விகரக தரிசனத்திற்கு அனுமதித்தார்

இந்திய கிரிமினல் சட்டம் 145 ன் கீழ் இந்நியமனம் நடந்தது. இதன்படி சொத்தை பறிகொடுத்தவன் நீதிமன்ற இறுதிதீர்ப்பு வரை சொத்தை அனுபவிக்கலாம்
ஆனால் முசுலீம்களை மசூதிக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை

ஜன61950ல் சூட் நம்பர் 2ல் கோபல்சிங் விசாரத் ஒரு வழக்கை சிவில்நீதிமன்றம் பைசாபாத் தாக்கல் செய்தார் தடையின்றி இந்துக்கள்வழிபாடு செய்வதற்கு

அரசு முசுலீம் என 8பேர் பிரதிவாதிகள்.உபி அரசு சார்பில் ஆசரான பைசாபாத் துணை ஆணையர் உக்ரா கள்ளத்தனமாக சிலை வைக்கப்பட்டதையும் மசூதியின் நீண்ட கால அனுபவ பாத்யதையையும் ராமர் கோவிலின் ஆதாரமின்மையையும் அறிக்கையாக தந்தும் நீதிபதி என்என் சத்தர் சிலைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கிறார். மார்ச் 51ல் ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது.பின் 1961அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச ..12கீழ் வந்தது

ராமஜனம்பூமி மீட்பு ரதயாத்திரயை சீதை பிறந்தாக சொல்லப்படும் நேபாளின் ஜனக்பூரிலிருந்து 1984 செப் 25ல் விசுவிந்து பரிசத் துவங்கி அக்7,1984இல் அயோத்தி வந்தது மசூதி பூட்டை உடைத்து ராமர் கோவிலாக மாற்ற உறுதிமொழி எடுத்தனர்.தாலா கோலே (பூட்ட உடை) முழக்கம்ஆனது

அக் 31 இந்திரா செத்ததால் கலவரத்தை ஓராண்டு தள்ளி போட்டார்கள். மார்ச்9,1986க்குள் கதவு தங்களுக்கு திறக்காவிடில் பூட்டு உடைபடும் என்றனர் விஇப

டிச18,1985ல் விஇபல் உள்ள முன்னாள் நீதிபதிகள் கத்திவு அகர்வால் முன்னாள் போலிசு ஐஜி தீட்சித் ஆகியோர் பைசாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட் இந்துகுமார் பாண்டே சந்தித்து கோவிலை பூட்டிவைப்பது சட்டவிரோதம் திறந்துவிட வேண்டும் என்றனர்

உமேஷ் சந்தர் பாண்டே என்ற 28 வயது (உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது 2 வயது) முன்சீப் நீதிமன்றத்தில் பூஜிக்க தடையை நீக்ககோருகிறார்

முன்சீப் ஹரிசங்கர் துபே ஜன28,1986ல் இம்மனுவை உயர்நீதிமன்ற வழக்கு நிலுவை காரண‌மாக நிராகரிக்கிறார். இம்மனு மேல்முறையீட்டுக்காக மாவட்ட நீதிபதி கேஎம் பாண்டே முன் பிப் 1,1986 அன்று விசாரணைக்கு வருகிறது. அன்று மாலையே பூட்டை திறந்துவிடும்படி உத்தரவிட்டார்

உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் மாவட்ட நீதிமன்றம் அவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்தது நீதித்துறை வரலாற்றில் விசித்திரம்தான்

தீர்ப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவோ விக்ரகத்தை பாதுகாக்கவோ பூட்டு தேவையில்லை 35 ஆண்டுகளாக இந்துக்களை கைதிகள் போல இருந்துள்ளனர் என்றும்
பூட்டை திறப்பதால் வானம் இடிந்து விழாது. முசுலீம்கள் ஏற்கெனவே வருவது இல்லை. பூட்டை திறந்தால் மாத்திரம் எப்படி பிரச்சினை வரும் என்றும் தீர்ப்பளித்த பாண்டே, பிரதிவாதியாக சேர்க்க கோரிய முகமது காசிம் என்பவரது மனுவை தள்ளுபடி செய்து பிப் 1,1986, 4.40க்கு உத்தரவிட 5.20க்கு அமலானது

பூட்டை திறந்தால் முசுலீமுக்கு பாதிப்பு என்பது கற்பனைக்கு கூட தகாது என பகடி செய்தார். சட்டம் ஒழுங்கு பாதிக்கபடாது என்றார் அல்லவா லவரம் வட இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்தது

1985 ஏப்ரல ஷாபானு வழக்கில் முசுலீம்களை திருப்தி செய்ய முசுலீம் பெண்களின் வாழ்க்கையை பறித்தெடுத்த நேருவின் குலக்கொழுந்து 1986 சிவராத்ரி மார்ச்8க்குள் பூட்டை உடைக்க அனுமதி தருவதாக விஇப இடம் அனுமதி கொடுத்தார்.அருண்நேரு போன்ற கூட்டாளிகளிடம்

முசுலீம் தனிநபர் சட்டத்திற்கான பழிக்குப்பழிதான் இது என சொன்னது அக்பரே நவ் இன் பேட்டி ஒன்றில் அருண்நேருவே ஒத்துக்கொண்டது நவ9,1989இல் 25 கோடியில் கோவில் கட்ட அலகாபாத் விராத் சாந்த சம்மேளன கூட்டத்தில் ஜனவரியில் 4ல் கட்டநடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது

எம்கே நாராயணன், பூட்டாசிங், தவாண் போன்றோர் விஇப உடன் இது சம்பந்தாக பேசி உள்ளனர். செங்கற்களுக்கு வரும்வழியில் பாதுகாப்பு வழங்க,அடிக்கல் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க அரசு சம்மதித்தது. ஆக 14 89ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் ல்க்னோ பெஞ்ச் ஸ்டேட்டஸ் கோ வை உத்தரவிட்டது ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி ஊர்வலம் நடந்தது. பகல்பூரின் கார்லிபிளவர் செடிகளுக்கு உரமான முசுலீம் பிணங்களை பார்த்த பிறகும் ராஜிவ் அக் 26 1989ல் ராம்லீலா ஊர்வலங்களை தடைசெய்ய முடியாது என்றார் பாட்னா விமான நிலையத்தில் தானே அடிக்கல் நாட்ட வரப்போவதாகவும் பூட்டாசிங் மூலம் தூது அனுப்பி சொன்னார் ராஜீவ். நவ 3 முதல் பிளாட் 586ல்

முசுலீம்களின் அடக்கதலத்தின் மீது காவிகொடி பறக்கவிட்டு இடத்தை தேர்வு செய்தார்கள். அன்றுதான் ராஜீவ பைசாபாத்தில் தேர்தல்பிரச்சாரத்தை துவக்கினார்

ராமராஜ்யம் அமைக்கபோவதாகவும் கூறினார். ஜிகாத் என்ற பெயரில் மக்களை திரட்டிய மௌலவிக்கும் இந்த பொறுக்கிக்கும்தான் எத்தனை வேறுபாடு முசுலீம் ஓட்டுக்களை இழக்க விரும்பாமல் உபி அரசு மூலம் தடையும் கோரினார் ராஜிவ்.

மானஸாரா என்ற இந்துகட்டடகலை குறித்த சிற்ப சாஸ்திர நூலின் 3 வது அத்தியாயத்தில் மனித மண்டை ஓடுகள்எலும்புக்ள-..பிணங்கள் நிறைந்து காணப்படும் இடத்தை கோவில் கட்ட தேர்வு செய்ய கூடாது என உள்ளது. ஆனால் தற்போது அடிக்கல் நாட்டிய இடம் முசுலீம்களின் கல்லறைதான். இது 2010 தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தெரியாதா?


மினரா இல்லாமல் பள்ளிவாசல் இருக்க முடியாது என்பதும் ஒரு வாதம். செருசலத்தில் உள்ள பைத்துல் முகத்துஸஃ பள்ளிவாசல், மெக்காவின் க்பா, இந்தியாவின் முதல் பள்ளிவாசலான கேரளத்தின் கொடுங்களூர் பள்ளிவசலிலும் மினரா கிடையாது. எனவே அயோத்தியில் இல்லாத்து பிரச்சினை இல்லை.

அக்பர் தான் எழுதிய திவான் அக்பர் என்ற நூலில் தானே திண்ணை அமைத்து ராமர்கோவில் கட்ட உதவியதாகவும் விஇப தனது அதீத் கி அஹூத்யான் வர்த்தமன் கி சங்கல்ப் என்ற நூலில் சொல்கிறது.அபூல் பசல் தனது அய்னி அக்பரியின் ஜலாலுதீன் அக்பருக்கு எழுத படிக்க தெரியாத்தை பதிவு செய்கிறார். மற்றபடி அவர்கள் சொல்லும் நூற்கள் 18 ஆம் நூற்றாண்டின் சூபி மரபின் இலக்கிய பதிவுகளாக இரு புத்தகங்கள் உள்ளன சில வார்த்தை வித்தியாசங்களுடன்

பாபர் மசூதி கட்டப்பட்ட போது அதை எதிர்த்து 1,72,000 இந்துக்கள் போராடி மடிந்தனராம்.
அதாவது 1528ல். ஆனால் 1881 இல் அயோத்தியின் மக்கட்தொகை 11,643. 

ராமர் கோவிலின் கருப்பு கசவ்டி தூண்களைத்தான் மசூதிக்கும் பயன்படுத்தினார் பாபர் என்கிறார்கள்.கார்பன் 14 பரிசோதனை மூலம் இந்த தூணின் வயதை கண்டறிந்த போது அது எதுவும் 450 (1989ல்) ஆண்டுகளை தாண்டவில்லை.(Radiance Views Weekly, 24-30 April 1988, 25 June-1 July 1989, 17-23 Dec 1989) 

பாபர் நாமாவில் டிச 24,1528 ல் 26 தூண்களை வடிவமைத்ததை பாபர் குறிப்பிடுகிறார் (பக்கம் 362) பாபர்நாமா ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1528ல் எழுதப்படவில்லை. இந்த கட்டத்தில்தான் பாபர் அயோத்தி வந்து இடித்தார் என்கிறார்கள்

இக்குறிப்பிட்ட காலத்திற்கான குறிப்புகள் பலத்த சூறாவளி காற்றில் காணாமல் போனது பற்றி பாபர் நாமா பதிவு செய்து தான் உள்ளது. ஆனால் பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹூமாயூன் நாமா வின் பக். 100-103ல் இதற்கு விளக்கம் உள்ளது1528 ஏப்ரல் 5-8ல் ஆக்ரா வருகிறார். ஜூலைக்கு பிறகு பதேபூஃர சிக்கரிக்கு செல்கின்றனர். அங்குள்ள பூந்தோட்டத்தில் பாபர் நாமா எழுத ஒரு இடம் பூங்காவில் அமைக்கப்பட்டதை பதிவு செய்கிறார்ஃஆப்கானியர் மீதான வெற்றி மழையால் தள்ளிப் போனதை பற்றியும் குறிப்பு உள்ளது.

58 thoughts on “ராமனா? பாபரா? நாட்டை இடித்தவன் யாரெனச் சொல்

  1. மிக நல்ல திரட்டல். ஆனால், வெட்டி வேலை.
    இதெல்லாம் நீதிபதிகளுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? மிக மிக நன்றாகவே தெரியும்.

    மேல் முறையிட்டுக்குப்பின் உச்சநீதி மன்ற நீதிபதிகளும் இதெயெல்லாம் நன்கு அறிந்தவர்களாகவே தீர்ப்பு சொல்லப்போகிறார்கள்….! எப்படி?

    “”பாபர் மசூதியா? அப்படி ஒன்று இந்தியாவில் இருந்ததே கிடையாது..!? மாறாக, 1992, டிசம்பர்-6 அன்று அயோத்தியில் பட்டப்பகலில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட ராமர் கோவிலை உடனே அரசு செலவில் கட்டிக்கொடுக்க இந்த உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு இடுகிறது….!!!”” என்று தீர்ப்பு சொல்லப்போகிறார்கள்.

    அப்போதும், நீங்கள் அப்பிராணியாய், ‘இல்லை இது அநீதி’ என்று கூறி, பாபர் மசூதி இடிப்பு யு-டியுப் விடியோ ஆதாரங்களை எல்லாம் இணைத்து நீங்கள்தான் பதிவு போட்டுக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்…பாருங்களேன். ஹா..ஹா…ஹா… செம கேலிக்கூத்து.

    அயோத்தி விஷயத்தில், நம் நாட்டில் நீதி செத்து இன்று அறுபத்து ஒரு வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு வைர விழா கொண்டாட மறந்து விட்டோம் என்பது மட்டும்தான் மகா கொடுமை.

  2. paabar oru pazaiya panjaangkam. avarin masuuthi oru aratha pazasu. niingkal ingkee kuRipidubavai ellaamee adiyoodu pazasu. ippoothu niingkaL intha thiirrppai adhikam porutpaduththaamal irukkum musalmaankaLukkum, inthukkaLukkum idaiyee aankileeyanai poola piriththaLum koLakaiyai nadaimuRai paduththukiRiirkaL>

  3. //12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 கோயில் என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை, ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.//

    ஹிந்துக்களின் நம்பிக்கை அனைத்தும் உண்மையல்ல தான். 12 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அங்கு கோயில் எழுப்பப்பட்டதா? இல்லையா? அகழ்வராய்ச்சியில் அங்கு கோயில் இருந்தது நிருபிக்கப்பட்டுள்ளதே?

  4. இங்கு தேவைப்படாத பல விசயங்களையும் திணித்திருப்பதாக உணர்கிறேன்.

  5. நண்பர் ஜிபிடி,

    குறிப்பிட்ட அந்த மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோவில் இருந்ததா? இல்லையா? கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டதா? இல்லையா? பதில் இல்லை என்பது தான்.

    கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என நீங்கள் ஏற்கிறீர்களா? ஆம் என்றால் அதற்கான சான்றுகளைத் தரவும்.

    இந்த இடுகையில் அந்த மசூதியின் வரலாறு தெளிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை என்பதை துல்லியமாக இது காட்டுகிறது. இவற்றில் எது தேவையில்லாதது?

    உங்கள் கேள்விகளைக் குறிப்பாக எடுத்துவைக்கவும். நாம் தொடர்வோம்.

    செங்கொடி

  6. அன்புள்ள செங்கொடி

    http://dharmaveer.blogspot.com/2009/02/muslim-accounts-gloating-over.html.

    இதில் இஸ்லாமிய எழுத்தாளர்களே, வரலாற்றாசிரியர்களே ராமர் கோவில் இடிக்கப்பட்டு அங்கு மசூதி உருவாக்கப்பட்டதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

    மற்ற கட்டுரைகளுக்கெல்லாம் எதிர்தரப்பு வாதம் என்ன சொல்கிறது என்று தேடுகிறீர்களே. இது மட்டும் உங்கள் கண்ணில் படாமல் போனது என்ன விந்தை?

    இதனை நீங்கள் எழுதியுள்ளதற்காக நான் பாராட்டுகிறேன். இது ஒரு திறப்பை எனக்கு உருவாக்கியுள்ளது.

    இந்தியாவெங்கும், தமிழகமெங்கும் கோவில்கள் இடிக்கப்பட்டு அங்கு மசூதிகளும் தர்காக்களும் உருவாகியிருப்பதை முஸ்லீம் வரலாற்றாதாரங்களிலிருந்தே வைக்கிறேன்.

    நன்றி

  7. பாபர் இடித்தார் என்பதற்கு நேரடி ஆதாரம் இலை தான். ஆனால் இந்துக்களின் கோயிலை அன்றைக்கு வேறு யார் இடித்திருக்க முடியும்? இஸ்லாமிய மதமும் அப்போது அவ்வளவாக பரவாத போது ஆட்சியாளர்களை தவிர வேறு யார் இதை செய்ய இயலும்.

  8. //இந்துக்களின் கோயிலை அன்றைக்கு வேறு யார் இடித்திருக்க முடியும்?//

    அங்கு கோயிலே இல்லையெனும்போது எப்படி இடிக்க முடியும்?

  9. நண்பர் நிலா,

    நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டிக்கான கட்டுரை ஆங்கிலத்தில் உள்ளது. அதை தமிழ்படுத்தித்தர இயலுமா?

    செங்கொடி

  10. நிறைய தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்! அருமை!

  11. ஆங்கிலத்திலேயே முடிந்தால் படித்துகொள்ளுங்கள்.
    ரேடியன்ஸ் வீக்லியிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.. இந்த இணையப்பக்கம் மட்டும் புரியவில்லையா?

    Let us now see what the Muslim writers have said:

    1) Abul Fazl (late sixteeth century)

    Abul Fazl, the author of Akbar Nama and Ain-i-Akbari is an eminent writer of the Moghul age who describes Ayodhya as the residential place (banga) of Sri Ram Chandra who during the Treta age was the embodiment of both the spiritual sovereign supremacy as well as the mundane kingly office. Abul Fazl also testifies that Awadh (Ayodhya) was esteemed as one of the holiest places of antiquity. He reports that Ram-Navami festival, marking the birthday of Rama continues to be celebrated in a big way.

    2) Safiha-i Chahal Nasaih Bahadur Shahi, written by the daughter of Bahadur Shah Alamgir during the early 18th century.

    Out of the above Chahal Nasaih (“Forty Advices”), twenty-five instructions were copied and incorporated in the manuscript entitled Nasihat-i Bist-o-Panjam Az Chahal Nisaih Bahadur Shahi in 1816 AD, which is the oldest known account of the destruction of Ram Janmabhoomi for construction of the Babri Mosque, and its author is none other than Aurangzeb’s grand daughter.

    Mirza Jan, the author of Hadiqa-i-Shahda, 1856, Lucknow, has reproduced the above text in Persian on pp.4-7 of his book. The text runs as follows:

    “… the mosques built on the basis of the king’s orders (ba farman-i Badshahi) have not been exempted from the offering of the namaz and the reading of the Khutba [therein]. The places of worship of the Hindus situated at Mathura, Banaras and Awadh, etc., in which the Hindus (kufar) have great faith – the place of the birthplace of Kanhaiya, the place of Rasoi Sita, the place of Hanuman, who, according to the Hindus, was seated by Ram Chandra over there after the conquest of Lanka – were all demolished for the strength of Islam, and at all these places mosques have been constructed. These mosques have not been exempted from juma and jamiat (Friday prayers). Rather it is obligatory that no idol worship should be performed over there and the sound of the conch shell should not reach the ear of the Muslims …”

    3) Hadiqa-i-Shahada by Mirza Jan (1856), pages 4-7.

    The author was an eye-witness and an active participant in the jihad led by Amir Ali Amethawi during Wazid Ali Shah’s rule in 1855 for recapture of Hanumangarhi from the Hindus. His book was ready just after the failure of the jihad due to stout Hindu resistance, and was published the following year (1856) in Lucknow. In Chapter IX of his book, entitled Wazid Ali Shah Aur Unka Ahd (“Wazid Ali Ahah and His Regime”), we find his account of construction of the Babri mosque.

    Mirza Jan who claims to have gone through various old sources says in his own account as follows:

    “The past Sultans encouraged the propagation and glorification of Islam and crushed the forces of the unbelievers (kufar), the Hindus. Similarly, Faizabad and Awadh(Ayodhya) were also purged of this mean practice [of kufr]. This [Awadh] was a great worshipping centre and the capital of [the kingdom of] Rama’s father. Where there was a large temple, a big mosque was constructed and where there was a small mandaf, there a small kanati masjid was constructed. The temple of Janmasthan was the original birthplace (masqat) of Ram, adjacent to which is Sita Ki Rasoi, Sita being the name of his wife. Hence at that site, a lofty (sarbaland) mosque has been built by Babar Badshah under the guidance of Musa Ashikan… That mosque is till date popularly known as Sita Ki Rasoi…”
    (see Annexure 3)

    4) Fasana-i Ibrat by the Urdu novelist Mirza Rajab Ali Beg Surur.

    Dr. Zaki Kakorawi has appended an excerpt from this book by Surur (1787-1867) in his work. The excerpt reads as follows :

    “During the reign of Babar Badshah, a magnificent mosque was constructed in Awadh at a place which is associated with Sita ki Rasoi. This was the Babari mosque. As during this period the Hindus could not dare to offer any resistance, the mosque was constructed under the benign guidance of Saiyed Mir Ashikan. Its date of construction could be reckoned from [the words] Khair-Baqi. And in the Ram Darbar, a mosque was constructed by Fidai Khan, the subedar.”

    5) Zia-i Akhtar by Haji Muhammed Hasan (Lucknow 1878), p.38-39.

    The author states :

    “The mosque which had been built by Saiyid Musa Ashikan in 923 AH in compliance with the order of Zahiruddin Badshah, Delhi, after demolishing the private apartments (mahal sarai) of Raja Ram Chander and the kitchen of Sita, as well as the second mosque built by Muiuddin Aurangzeb, Alamgir Badshah, [in fact] both these mosques have developed cracks at various places because of the ageing character. Both these mosques have been gradually mitigated by the Bairagis and this very fact accounts for the riot. The Hindus have great hatred for the Muslims…”

    6) Gumgashte Halat-i Ajudhya Awadh (“Forgotten Events of Ayodhya”), i.e. Tarikh-i Parnia Madina Alwaliya (in Persian) (Lucknow 1885), by Maulvi Abdul Karim.

    The author, who was then the imam of the Babri Masjid, while giving a description of the dargah of Hazrat Shah Jamal Gojjri states :
    “To the east of this dargah is mahalla Akbarpur, whose second name is also Kot Raja Ram Chander Ji. In this Kot, there were few burjs [towery big halls]. Towards the side of the western burj, there was the house of birthplace (makan-i paidaish) and the kitchen (bawarchi khana) of the above-mentioned Raja. And now, this premises is known as Janmasthan and Rasoi Sita Ji. After the demolition and mitigation of these houses [viz. Janmasthan and Rasoi Sita Ji], Babar Badshah got a magnificent mosque constructed thereon.”

    7) Tarikh-i Awadh(“History of Ayodhya”) by Alama Muhammad Najamulghani Khan Rampuri (1909).

    Dr. Zaki Kakorawi has brought out an abridged edition of this book. An excerpt from vol.II (pp.570-575) of this edition runs as follows :

    “Babar built a magnificent mosque at the spot where the temple of Janmasthan of Ramchandra was situated in Ayodhya, under the patronage of Saiyid Ashikan, and Sita ki Rasoi is situated adjacent to it. The date of construction of the mosque is Khair Baqi (923 AH). Till date, it is known as Sita ki Rasoi. By its side stands that temple. It is said that at the time of the conquest of Islam there were still three temples, viz. Janmasthan, which was the birthplace of Ram Chanderji, Swargadwar alias Ram Darbar, and the Treta ka Thakur. Babar built the mosque after having demolished Janmasthan.”

    8) Hindustan Islami Ahad Mein (“India is under Islamic rule”) by Maulana Hakim Sayid Abdul Hai.
    The book contained a chapter on “The Mosques of Hindusthan” (Hindustan ki Masjidein), giving at least six instances of the construction of the mosques on the very sites of the Hindu temples demolished by the Indian Muslim rulers during the 12th-17th centuries. As regards Babri Masjid, he writes :

    “This mosque was constructed by Babar at Ajodhya which the Hindus call the birthplace of Ram Chanderji. There is a famous story about his wife Sita. It is said that Sita had a temple here in which she lived and cooked for her husband. On that very site Babar constructed this mosque…”

    It is this Babri mosque, built as a symbol of the subjugation and humiliation of Hindus at a spot they venerated so highly, that was damaged by a crowd of Hindus in 1992 at the height of the nationalist movement to rebuild a temple for Shri Ram at the site which had been venerated as his birthplace by Hindus for millenia.

    Islam deliberately destroyed and desecrated what was most sacred to Hindus, and replaced it with a symbol of Islamic victory. The same reason Sultan Mehmet converted the Hagia Sophia into a mosque. The Hindus and the West have been fighting the same foe for centuries.

    I end with the lament of Will Durant, from his Story of Civilization

    “We can never know from looking at India to-day, what grandeur and beauty she once possessed.”

    All of that grandeur and beauty – laid waste by Islam.

  12. ) Abul Fazl (late sixteeth century)

    Abul Fazl, the author of Akbar Nama and Ain-i-Akbari is an eminent writer of the Moghul age who describes Ayodhya as the residential place (banga) of Sri Ram Chandra who during the Treta age was the embodiment of both the spiritual sovereign supremacy as well as the mundane kingly office. Abul Fazl also testifies that Awadh (Ayodhya) was esteemed as one of the holiest places of antiquity. He reports that Ram-Navami festival, marking the birthday of Rama continues to be celebrated in a big way.
    /
    ————————————————————————–
    அபுல் ஃபைசல் கூறியுள்ள விவரங்களாவன‌
    இராமர் திரேதா யுகத்தில்(எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ) பிறந்ததாகவும்

    அவர் வாழ்ந்த காலத்தில் (16 ஆம் நூற்றாண்டு) அயோத்தி ஒரு புனித தலமாக விளங்கியதாவும் கூறுகிறார்.
    ————————————————————————–

    1.அபுல் ஃபைசல் எந்த புத்தகத்தில் இந்த தகவலை கூறியுள்ளார்?.(Reference please)

    2.நீங்கள் காட்டியுள்ள விஷயங்களில் இது மட்டுமே 16ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இவ்வளவு சொன்ன அபுல் ஃபைசல் அயோத்தி கோயில் பற்றி எதுவுமே சொல்ல வில்லையே?

  13. மேலே குறிப்பிட்டவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள்தான். அவர்கள் கூறினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இந்துக்கள் கூறினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பது என்ன நிலைப்பாடு?

    ராம்சரித மானஸ் எழுதிய துளசிதாஸ் ராமர் கோவிலை இடித்து பாபர் கட்டினார் என்று எழுதினால் நீங்கள் ஒப்புக்கொள்ளப்போகிறீர்களா? சொல்லியிர்ந்தால் அவரையும் இந்து வெறியர் என்றுதானே உமிழப்போகிறீர்கள்?

    அதனால்தான் இச்லாமிய வரலாற்றாளர்களையே மேற்கோள் காட்டுகிறேன். இவர்கள் சொன்னது பொய் என்றால், அப்போதே பெரும் புயல் கிளம்பியிருக்குமே? அரசர்கள் இடிக்காத கோவிலுக்கு ஏன் சொந்தம் கொண்டாடவேண்டும்?

    அதுவும் ”இந்து மதத்தை மதிக்கவேண்டும் என்று ஹூமாயுனுக்கு போதித்த பாபர்”?

    இன்னொரு விஷயம், பாபர் தான் இடித்ததாக நிறய கொவில்களை பாபர்நாமாவிலேயே பட்டியல் போட்டிருக்கிறார். அவற்றையெல்லாம் திருப்பி இந்துக்களிடம் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்வீர்களா? தெரிந்துகொள்ள ஆசை

  14. //Out of the above Chahal Nasaih (“Forty Advices”), twenty-five instructions were copied and incorporated in the manuscript entitled Nasihat-i Bist-o-Panjam Az Chahal Nisaih Bahadur Shahi in 1816 AD, which is the oldest known account of the destruction of Ram Janmabhoomi for construction of the Babri Mosque, and its author is none other than Aurangzeb’s grand daughter.//
    1.அப்ப திரேதா யுகத்தில் பிறந்த இராமனுக்கு இருந்த கோயிலுக்கு ஆதாரமெல்லாம் கி.பி 1816 அப்புறம்தானா?.

    2.அந்த கோயிலை கட்டியது யார் என்பதுக்கும் ஆதாரம் இல்லையா?.

    3.ஆனா இடிச்சு மசூதி கட்டியதுக்கு ஆதாரம் அவுரங்கசீப்பின் பேத்தி எழுதிய புத்தகம்?(விளக்கம் கொடுங்கள்).

  15. .Mr Nilaa
    அபுல் ஃபைசல் எந்த புத்தகத்தில் இந்த தகவலை கூறியுள்ளார்?.(Reference please)?

  16. அபுல் பசல் எழுதிய அய்னி அக்பரி
    Ayodhyá, commonly called Awadh. The distance of forty kos to the east, and twenty to the north is regarded as sacred ground. On the ninth of the light half of the month of Chaitra a great religious festival is held.*

    http://persian.packhum.org/persian/pf?file=00702053&ct=103&rqs=413

    ராமாவதாரம் பற்றி அய்னி அக்பரி
    http://persian.packhum.org/persian/main?url=pf%3Ffile%3D00702053%26ct%3D90%26rqs%3D56

  17. //பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. //

    இது மாதிரியெல்லாம் செங்கொடி உளறுவதால்தான் இவர் இஸ்லாமை எதிர்த்து எழுதுவதையெல்லாம் முஸ்லீம்கள் கண்டு சிரிக்கிறார்கள் போலிருக்கிறது.

    சரி இந்தியாவில் ராமர் கோவில் இருப்பதைத்தான் இப்படி நம்பாமல் ஸ்வீப்பிங் ஸ்டேட்மண்ட் அடிப்பீர்கள். இந்தோனேஷியாவில் இருக்கும் ராமர் கோவிலையாவது நம்புவீர்களா?
    http://www.myads.org/hindu_gods/rama.shtml

    அங்கே இன்னும் இடிக்கப்படாமல் ராமர் கோவில் இருக்கிறது. அதுவும் 12ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் கட்டப்பட்டது என்று யார் தலையிலாவது அடித்து சத்தியம் செய்து பாருங்கள். யாராவது நம்புகிறார்களா என்று பார்ப்போம்.

  18. இப்பதிவு கூகிள் ரீடரில் காட்டப்படவில்லையே ஏன்?

  19. //சரி இந்தியாவில் ராமர் கோவில் இருப்பதைத்தான் இப்படி நம்பாமல் ஸ்வீப்பிங் ஸ்டேட்மண்ட் அடிப்பீர்கள். இந்தோனேஷியாவில் இருக்கும் ராமர் கோவிலையாவது நம்புவீர்களா?
    http://www.myads.org/hindu_gods/rama.shtm//

    நீங்கள் குறிப்பிட்ட இணைய தளம் பார்த்தேன்.அதில் அந்த கோயில் எப்போது கட்டப் பட்டது என்று குறிபிடபடவில்லை. அது இந்து ப்ரேயர் சொசைட்டி ,ஹவுஸ்டன் என்னும் குழுவால் வெளியிடப் பட்ட தகவல்கள். இது குறித்து விக்கிபிடிய போன்ற தளத்தில் உள்ள விவரங்களை அளித்தால் நலம்.

    //பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. //

    1.எப்போது இருந்து இராமன் வழிபாடு இந்தியாவில் நடந்து வருகிறது?

    2.இராமருக்கு பழமையான் கோயில் இந்தியாவில் எங்கே ,எப்போது ,யாரால் கட்டப் பட்டது?.

    இப்போது விவாதமானது இராமருக்கு கொயில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து கட்டப் பட்டதா இல்லையா என்பதுதான்.

    அகழ்வாராய்சசி விவரங்களை வைத்து நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்ததாக எடுத்துக் கொண்டால்.அது குறித்து உங்கள் வாதங்களை எதுத்து வையுங்கள்.

  20. சங்கரண்ண்ணே,
    நான் ஆதாரம் வச்சா இந்த பக்கத்திலேயே மன்னிப்பு கேட்டுட்டு ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து கோவில இடங்களையும் மீண்டும் இந்துக்களுக்கே திருப்பி தரவேண்டும் என்று தீர்ப்பு சொல்லிடுவீங்கலாண்ணே?

    ஏதோ நான் தர்ர ஆதாரத்தைத்தான் ரொம்ப நம்பியிருக்கறமாதிரி.. ஏன்னே உதார் விடுறீங்க?

    நான் என்ன சொன்னாலும் அதுல தடுக்கில பூர்ர வேலைதானே நீங்க பண்றது?

    வால்மீகி ராமாயணத்திலேயே ராமனை வணங்கும் காட்சிகள் வர்ரதே.. அப்ப வால்மீகி ராமாய்ணமும் 18ஆம் நூற்றாண்டில எழுதப்பட்டதா இருக்குமோ? அதுக்கும் சும்மா சிபிம்-எல் காரனுங்களை விட்டு ஒரு பக்கம் எழுதி அதனை இங்க மேற்கோள் காட்டிட்டா போச்சு.. இல்லை?

    உங்கள் கிட்டயெல்லாம் ஆதாரம் காட்டுறதே வேஸ்ட். கோவிலை இடிச்சி மசூதி கட்ட வேண்டியது. பிறகு எங்க கோவில் இருந்ததுகு ஆதார்ம்னு கேக்க வேண்டியது.

    வாரணாசியில சோமநாதர் கோவில் மேலயே ஞானவாபி மசூதி கட்டியிருக்காங்களே. அந்த மசூதியை காலிபண்ணனும்னு சொல்ல தைரியம் உண்டா? அட்லீஸ்ட் அங்க இப்படி கேள்வியெல்லாம் கேக்கமுடியாதில்லை?

    நான் கேக்கறதை சொல்லுங்க. ஆதாரம் கொடுத்தா என்ன பண்ணப்போறீங்க? அந்த இடத்தை இந்துக்களுக்கு கொடுக்கணும்னு சொல்லுவீங்களா?

    ஏற்கெனவே சந்தேகத்துக்கு இடமில்லாமல் மதுராவிலும் காசியிலும் கோவில்கள் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதிகளை இடித்து கோவிலை இந்துக்களுக்கே கொடுக்கவேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை சொல்லுங்கள். பிறகு அயோத்திக்கு வருகிறேன்.

  21. //நான் ஆதாரம் வச்சா இந்த பக்கத்திலேயே மன்னிப்பு கேட்டுட்டு ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து கோவில இடங்களையும் மீண்டும் இந்துக்களுக்கே திருப்பி தரவேண்டும் என்று தீர்ப்பு சொல்லிடுவீங்கலாண்ணே//

    நான் என்ன அலகாபாத் நீதிபதியா? நீங்கள் காட்டும் ஆதாரங்களை அப்படியே நம்புவதற்கு?

    //ஏதோ நான் தர்ர ஆதாரத்தைத்தான் ரொம்ப நம்பியிருக்கறமாதிரி.. ஏன்னே உதார் விடுறீங்க?

    நான் என்ன சொன்னாலும் அதுல தடுக்கில பூர்ர வேலைதானே நீங்க பண்றது
    //
    அப்ப நீங்க தரும் ஆதாரம் எல்லாம் அப்படி ஓட்டையா இருக்கு.

    //உங்கள் கிட்டயெல்லாம் ஆதாரம் காட்டுறதே வேஸ்ட்//

    நண்பரே நாம் கேட்கும் கேள்விகள் இதுதான்.

    1.அயோத்தியில் இராம‌ருக்கு கோயில் இருந்த‌து என்றால். அந்த‌ கோயிலை க‌ட்டிய‌ ம‌ன்ன‌ர் யார்?எப்போது க‌ட்டினார்?

    2.எப்போது இருந்து இராமன் வழிபாடு இந்தியாவில் நடந்து வருகிறது?

    3.இராமருக்கு பழமையான் கோயில்(அயோத்தி தவிர இப்பொதும் இருக்கின்ற) இந்தியாவில் எங்கே ,எப்போது ,யாரால் கட்டப் பட்டது?.

    4.அக‌ழ்வாராய்சியில் இராம‌ர் கோயில் இருந்த‌ற்கான‌ ஆதார‌ங்க‌ள் என்னென்ன‌?

    5. 1600 to 1800 இராம‌ர் கோயில் – ‍பாபர் மசூதி குறித்து ஏதாவ‌து ஆதார‌ம்?

  22. //ஏற்கெனவே சந்தேகத்துக்கு இடமில்லாமல் மதுராவிலும் காசியிலும் கோவில்கள் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதிகளை இடித்து கோவிலை இந்துக்களுக்கே கொடுக்கவேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை சொல்லுங்கள். பிறகு அயோத்திக்கு வருகிறேன்.//

    ஆரம்பிச்சிட்டுங்கையா ,ஆரம்பிச்சிட்டுங்கையா.ரொம்ப காமெடியா பேசரீங்க.
    http://en.wikipedia.org/wiki/A._Vaidyanatha_Iyer#Temple_Entry_Movement

    இந்துக்கள் என்பவர்கள் யார்?.ஏற்கனவெ உள்ள கோயில்களில் உள்ள நுழைய முடியாமல் நிறைய பேர் இருந்தார்கள்.அவங்களெல்லாம் இந்த 50 வருஷமாத்தான் கோயிலுக்குப் போயிக்கிட்டு இருக்கிறார். அதிலெ இந்த சாதிக்காரன் மட்டும்தான் பூசை செய்யனும்,குறிப்பிட்ட மொழியில்தான் மந்திரம் ஓதனும்னு ஏகப் பட்ட ரகளை.
    இந்த இலட்சனத்தில் 12ஆம் நூற்றான்டு(ஏதாவது ஒரு) கோயிலில் என்ன நடந்து கொண்டு இருந்து இருக்கும்?
    1.தேவதாசிகள் முறை
    2.உயர் சாதியினர் தவிர மற்றவர் கோயிலுக்குள் செல்ல முடியாது.
    3.குழந்தை திருமணம்
    4.சதி
    இந்த கோயிலுக்காக வக்காலத்து வாங்குபவர்களை என்ன சொல்வது?.

  23. //இந்துக்கள் என்பவர்கள் யார்?.ஏற்கனவெ உள்ள கோயில்களில் உள்ள நுழைய முடியாமல் நிறைய பேர் இருந்தார்கள்.அவங்களெல்லாம் இந்த 50 வருஷமாத்தான் கோயிலுக்குப் போயிக்கிட்டு இருக்கிறார். //

    அயோத்தியில ராமர் கோவில் இருந்தது என்று நிரூபித்திருந்தாலும் இந்த காமெடியைத்தான் நீங்கள் ஆரம்பித்திருப்பீர்கள்.

    அதனால்தான் உங்களிடம் எதையும் சொல்லுவது வேஸ்ட் என்று சொன்னேன்.

    கோவிலை இடித்து மசூதியை கட்டியதை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறீர்கள்.

    அப்படியென்றால், ஒரு சாரார் நுழைய முடியாத வழிபாட்டுத்தலங்களையெல்லாம் இடித்து வேறொரு வழிபாட்டுத்தளங்களை கட்டிக்கொள்ளலாம் என்று சொல்லுகிறீர்கள்.

    இதே ரூலை மசூதிகளுக்கும் வைத்துகொள்ளலாமா? மசூதிகளில் முஸ்லீம்களில் சரிபாதி இருக்கும் பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆகவே மசூதிகளை இடித்து கோவில்களை கட்டலாமா? அல்லது அங்கே கட்ட சர்ச்சுகளை திட்டம் போட்டு வைத்திருக்கிறீர்களா? செங்கொடி என்ற சங்கர்பாய்?

  24. //கோவிலை இடித்து மசூதியை கட்டியதை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறீர்கள்//

    1.கோவில் இடிக்கப் பட்டு மசூதி கட்டப் பட்டது என்றால்,அதற்கு ஆதாரமாக அலகாபாத் நீதிமன்றம் கருதியது அகழ்வாரய்ச்சி முடிவுகள் என்றால் அத்னை குறித்து விளக்க முடியுமா?.

    2.அயோத்தியில் இராம‌ருக்கு கோயில் இருந்த‌து என்றால். அந்த‌ கோயிலை க‌ட்டிய‌ ம‌ன்ன‌ர் யார்?எப்போது க‌ட்டினார்?

    3.எப்போது இருந்து இராமன் வழிபாடு இந்தியாவில் நடந்து வருகிறது?

    4.இராமருக்கு பழமையான் கோயில்(அயோத்தி தவிர இப்பொதும் இருக்கின்ற) இந்தியாவில் எங்கே ,எப்போது ,யாரால் கட்டப் பட்டது?.

    5. 1600 to 1800 இராம‌ர் கோயில் – ‍பாபர் மசூதி குறித்து ஏதாவ‌து ஆதார‌ம்

  25. // செங்கொடி என்ற சங்கர்பாய்?//
    நான் அவர் இல்லை

  26. //இதே ரூலை மசூதிகளுக்கும் வைத்துகொள்ளலாமா? மசூதிகளில் முஸ்லீம்களில் சரிபாதி இருக்கும் பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆகவே மசூதிகளை இடித்து கோவில்களை கட்டலாமா? அல்லது அங்கே கட்ட சர்ச்சுகளை திட்டம் போட்டு வைத்திருக்கிறீர்களா?//

    உலகத்தில் இருக்கிற கோயில்,மசூதி,சர்ச் அனைத்தும் தேவை இல்லை என்பதெ நமது கொள்கை. இடிக்கனும்னே அலையுரீங்களே?. மசூதியை இடிச்சவனுங்களே அமைதிபுறா மாதிரி பேசுரான். ஏன்னா மக்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிது விட்டது.தோழரே இது 1992 இல்லை 2010

    இதை அமைதிப் படை சத்யராஜ் ஸ்டைலில் படிக்கவும்

    “கடவுள் இல்லைனு சொல்ர கட்சிக்காரன் கூட கோயிலை இடித்ததாக சரித்திரம் இல்லை நிலா.ஆனா கடவுள் இருக்குனு சொல்ர கட்சிக்காரந்தான் கோயிலை இடிக்கிறான்,இடிக்கனும்னு அலையுறான்

  27. அட அட.. உங்க சத்யராஜ் ஸ்டைல் புல்லரிக்க வைக்குது..
    என்னோட கேள்வி மசூதிகளை இடிக்கணும்னு இல்லை. மசூதி கட்ட வேற இடமே இல்லையா என்பதுதான் என் கேள்வி.
    இந்துக்கள் போற காசி விசுவநாதர் கோவில், ராமஜன்ம் பூமி கோவில், மதுரா கோவில்னு இருக்கறது மேலயே தான் கட்டணுமா? அது என்ன வெறி?

    கொஞ்சம் தள்ளி நல்லா நிலம் வாங்கிபோட்டு கட்டித்தரம்னு சொன்னாக்கூட முடியாது எனக்கு உன் தலைமேலதான் மசூதி கட்டணுங்கறவனுங்களுக்கு கம்யூனிச்டு காரனெல்லாம் சப்பைக்கட்டு.
    இப்படியே பேசிகிட்டு இருங்க. உங்க பின்னாடி இன்னிக்கு உங்களோட இருக்கறமாதிரி தறுதலைங்கதான் வருவானுங்க.
    சரி முஸ்லீம்கள் பண்ற அடாவடியஎல்லாம் சப்போர்ட் பண்ணா அவனுங்க நம்ம பின்னாடி வருவானுங்க என்று திட்டம் போடறீங்க. பாவம். அவன் உங்க சப்போர்ட்டை வாங்கிகிட்டு இன்னும் தீவிரவாத இஸ்லாமிய வழியிலதான் போவான்.

    எதுக்கும் உங்களுக்கு இந்த லிங்கை தரேன்
    http://whc.unesco.org/en/tentativelists/5261/
    இது பிகாரில் உள்ள ராம் ஜானகி கோவில். மிகப்பழைய கோவில். இதனை சீர்திருத்தி 11ஆம் நூற்றாண்டில் மேலே கட்டினார்கள். நம் ஊர் மதுரை மீனாட்சி கோவில் மாதிரிதான். ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு கட்டடத்தை கட்டிக்கொண்டே போவார்கள். ஆகையால் இவர்தான் கட்டியது என்று சொல்லமுடியாது. மீனாட்சி கோவில் கற்காலத்தை சார்ந்தது. ஆனால், சமீபத்திய வேலைப்பாடுகள் கட்டிடங்கள் நாய்க்கர் காலத்தியவை.

  28. உங்களுக்கு பிரயோசனம் இல்லைன்னாலும், எதுக்கும் தரேன்.

    பிகார் கோவில்களில் தலித்துகள் பூஜாரிகளாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ராம் ஜானகி கோவில் பிகாரிலேயே மிகப்பெரிய புராதனமான கோவில். இதற்கு தலித் பூஜாரியைத்தான் பாஜக கூட்டணி அரசு நியமித்திருக்கிறது. இதர்கு மட்டுமல்ல, பிகாரில் இருக்கும் பல கோவில்களுக்கு பாஜக அரசு தலித்துகளை தலைமை பூஜாரிகளாக நியமித்துள்ளது.
    http://www.hindu-blog.com/2007/07/dalit-priests-in-hindu-temples-in-bihar.html

    கருணாநிதி அரசு மாதிரியும் உங்களைப்போலவும், போலி புரட்சி செய்யவில்லை. உண்மையிலேயே தலித் பூஜாரிகளை நியமிக்கிறார்கள்.

  29. //////////////////உங்களுக்கு பிரயோசனம் இல்லைன்னாலும், எதுக்கும் தரேன்.
    பிகார் கோவில்களில் தலித்துகள் பூஜாரிகளாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ராம் ஜானகி கோவில் பிகாரிலேயே மிகப்பெரிய புராதனமான கோவில். இதற்கு தலித் பூஜாரியைத்தான் பாஜக கூட்டணி அரசு நியமித்திருக்கிறது. இதர்கு மட்டுமல்ல, பிகாரில் இருக்கும் பல கோவில்களுக்கு பாஜக அரசு தலித்துகளை தலைமை பூஜாரிகளாக நியமித்துள்ளது.

    கருணாநிதி அரசு மாதிரியும் உங்களைப்போலவும், போலி புரட்சி செய்யவில்லை. உண்மையிலேயே தலித் பூஜாரிகளை நியமிக்கிறார்கள்./////////////////////// அப்பப்பா வார்த்தைக்கு வார்த்தை தலித்,தலித்துனு எப்படி பிரிச்சிபேசறாரு பாரேன் இந்து மனுஷன்.

  30. //////////எப்படி பிரிச்சிபேசறாரு பாரேன் இந்து மனுஷன்.////////////////////// மன்னிக்கவும் இந்து மனுஷன் என்பதை “இந்த” மனுஷன் என்று திருத்தி வாசிக்கவும்

  31. அடேங்கப்பா.. லெனின். நீங்களும் இதயெல்லாம் படிச்சிகிட்டுத்தான் இருக்கீங்களா? கேட்டதுக்கெல்லாம் பதில் சொன்னாலும், உடனே ஒரு வார்த்தையை பிடிச்சிகிட்டு தொங்க ஆரம்பிச்சிட்டீங்களே. இதுதானே உங்களால முடிஞ்சது.

    அய்யா தலித் என்பது இன்று நிதர்சனம். அது போகவேண்டுமென்றால், அது பிரச்னை என்று முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும். நாங்கள் எல்லா இந்துக்களையும் ஒரேமாதிரியாகத்தான் பார்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டே பிராம்மணர்களாக நியமித்துகொண்டே இருக்கமுடியாது. தலித்துகளையும் பிராம்மணர்களையும், மற்ற சாதியினரையும் ஒரே கோவிலின் பூசாரிகளாக அருகருகே நியமிப்பதன் மூலமே இருக்கும் மூடபழக்கவழக்கங்களை ஒழிக்கமுடியும். அதற்காக தலித் என்று சொன்னதும் ஆஹா பிரிச்சி பேசறான் என்று ஆரம்பிப்பது உங்களது இயலாமையைத்தான் காட்டுகிறது.

    வேண்டுமானால், நாங்கள் எல்லா மக்களையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம் என்று உங்கள் கட்சி தலைமைப்பதவிகளுக்கு பிராம்மணர்களை மட்டுமே நியமித்துகொள்ளுங்கள். எல்லா மக்களையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம் என்று முஸ்லீம் தோழருக்கு சரியாக பார்த்து முஸ்லீம் தோழியரையே திருமணம் செய்து வையுங்கள். என்ன பிரச்னை எனக்கு?
    நாங்கள் எல்லா இஸ்லாமியரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டே அரபுகளுக்கு மட்டுமே மெக்கா மெதீனா இமாம் பதவி தாருங்கள். உலகத்திலேயே மிக அதிகமான முஸ்லீம்கள் இந்தோனேஷியாவில்தானே இருக்கிறார்கள்? எப்போதாவது ஒரு முறை இந்தோனேஷிய முஸ்லீமுக்கு மெக்கா மெதீனா இமாம பதவி தந்திருக்கிறார்களே? எவனாவது கேட்டால் உடனே “ஆ முஸ்லீம்களை பிரிச்சி பேசறான்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து அரபுகளுக்கே கொடுத்துகொண்டிருக்கலாம் இல்லையா?

    இதெல்லாம் எனக்கு தேவையில்லாத வாதம்.

    நான் கேட்பது, இதுதான்.

    கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்று நிரூபித்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதுதான்.

    கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது என்று நிரூபித்தால் இடத்தை கொடுத்துவிடுவோம் என்பது உங்கள் நிலைப்பாடு என்றால், காசி மதுரா மசூதி இடங்களை விட்டுக்கொடுக்க எப்போது குரல் கொடுக்கபோகிறீர்கள்?

  32. நிலாவுக்கு

    கோவில் என்ற கான்செப்டைப் பற்றி வேதங்களில் ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா அல்லது அவை எல்லாமுமே சமண பள்ளிகளையும் பவுத்த விகாரையும் உட்செறித்து திருத்தி திருடப்பட்டவையா என்பதை நீங்கள் சொல்ல முடியுமா

  33. //கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்று நிரூபித்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதுதான்//
    முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். பிறகு அது சித்தப்பாவா அல்லது பெரியப்பாவா என்று முடிவு செய்யலாம். கீரி பாம்பு ச‌ண்டை மாதிரி இருக்கு இந்தா நிரூபிக்கிறேன் அப்ப‌டி இப்ப‌டின்னு உதார் விடுரிங்களே ந‌ண்பா.
    காட்டுங்க‌ள் ஆதார‌த்தை.அதை நாம் விவாதிபோம்

    //அய்யா தலித் என்பது இன்று நிதர்சனம். அது போகவேண்டுமென்றால், அது பிரச்னை என்று முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும். நாங்கள் எல்லா இந்துக்களையும் ஒரேமாதிரியாகத்தான் பார்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டே பிராம்மணர்களாக நியமித்துகொண்டே இருக்கமுடியாது. தலித்துகளையும் பிராம்மணர்களையும், மற்ற சாதியினரையும் ஒரே கோவிலின் பூசாரிகளாக அருகருகே நியமிப்பதன் மூலமே இருக்கும் மூடபழக்கவழக்கங்களை ஒழிக்கமுடியும்.//
    நீங்கள் தலித்கள் இன்றும் மற்ற சமுதாய மக்களில் இருந்து வேறு படுத்தி பார்க்கப் படுகிறார்கள் என்ற உண்மை சொன்னதற்கு மனமார்ந்த நன்றி.

    கடவுளும் மதமும் (எல்லா குப்பைகளை சேர்த்து தான்) சொல்கிறேன்.இந்த கடவுள் ,மதம் இல்லாமல் வாழ முடியாதா?.

    இந்த‌ க‌ட‌வுளையும் ,ம‌தத்தையும் தூர‌ எறிந்து விட்டால் பிரிவினைக‌ள் ம‌றையாதா?.அமைதி பிற‌க்காதா?

    உங்க‌ளின் குற்ற‌ச்சாட்டை நான் ம‌றுக்கிறேன். ஒரு குறிப்பிட்ட‌ ம‌த‌த்தின‌ர் ம‌ட்டுமே தீவிர‌வாதிக‌ள் என்றும் ம‌ற்ற‌(உங்க‌ள்) ம‌த்த்தின‌ர் ம‌ற்றுமே அன்பே உருவான‌வ‌ர்க‌ள் என்றால் த‌லித்‌கள் மற்ற சாதியினரால் ச‌ம‌மாக‌ ம‌திக்க‌ப் ப‌ட‌வில்லை என்ப‌து முர‌ண்பாடு ஆக‌தா?

    நானும் இஸ்லாமை சில‌ விஷ‌யங்க‌ளில் விம‌ர்சிப்ப‌வ‌ன். ஆனால் முஸ்லீம்க‌ளை அல்ல. எதையாவது இடிக்கிறதிலேயே குறியாக இருக்கும் உங்களை மாதிரியே உங்க‌ள் க‌ட‌வுளுக்கும் ம‌னித‌ நேய‌ம் கிடையாதா?. அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட‌வுள் இல்லாம‌ல் போனால் என்ன‌ ? அவ‌ருக்கு கோயில் அவ‌சிய‌மா. ச‌ம்புக‌ன் த‌வ‌ம் செய்த‌ கார‌ண‌த்திற்காக‌ அவனை கொன்ற‌ இராம‌னுக்கு என‌ த‌ண்ட‌னை கொடுக்க‌லாம்? அவ‌ன் மீது தீண்டாமை ஒழிப்பு ச‌ட்ட‌ம் பாய‌ வேண்டும‌ல்ல‌வா?

    இந்த‌ தீர்ப்பை விட‌ இந்த‌ தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ போது வ‌ன்முறை எதுவும் நிக‌ழாம‌ல் அமைதி இருந்த‌தை எண்ணி ம‌கிழ்ச்சி அடைந்தேன்

    ந‌ம‌து நாடு உருவான‌து 1947 .அத‌ன் பிற‌கு ந‌டைபெறும் செய‌ல்க‌ள் அனை‌த்தும் ந‌ம‌து நாட்டின் ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டே ந‌டை பெற‌ வேண்டும். பேச்சு வார்த்தை மூல‌ம் இந்த கால் காசு பெறாத பிர‌ச்சினையை முடித்து கொண்டால் வ‌றுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ம‌ற்ற‌ ம‌க்க‌ளுக்கு ஏதாவ‌து செய்ய‌ முடியும்.

  34. //The Brahmin priests and dalit priests should do the puja together and this will send out a clear signal to the devotees. Not only Dalits but all Hindus should be allowed to perform pujas. Tamil Nadu has set an example by starting courses for all Hindus for doing pujas in Hindu temples. Also the activity of the Dalit priests should not be confined within the temple walls. People should invite them to homes to conduct pujas. Finally, there should be only Pujari (priest) not Brahmin Pujari and Dalit Pujari.

    In the 20th century, the social revolt against Brahmanism led to the opening of temple doors to Dalits and appointment of Dalits as priests in Bihar. But after the initial hype, the social movement lost steam. //

    நீங்கள் சொன்ன இணையதளம விவரங்கள்.

    இப்போது பீகார் அரசு கோயில்களில் பிராமன புசாரிகளுடன் தலித் பூசாரிகளையும் நியமிக்கிறது.

    சரி இரண்டாவது விஷயம்
    இருபதாம் நூற்றாண்டில் பிராமனர்களுக்கு எதிராக சமுதாய புரட்சி தோன்றியதால் தலித்களும் கோயிலுக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.

    அதாகப் பட்டது உலகம் தோன்றியதில் இநருந்து என்ந்த கடவஉளாலும் செய்ய முடியாத விஷயத்தை சமூகப் புரட்சி செய்து விட்டது.

    இன்னும் இந்த மாதிரி நிறைய தகவல் தாருங்கள் தோழர் நன்றி.

  35. //நாங்கள் எல்லா இஸ்லாமியரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டே அரபுகளுக்கு மட்டுமே மெக்கா மெதீனா இமாம் பதவி தாருங்கள். உலகத்திலேயே மிக அதிகமான முஸ்லீம்கள் இந்தோனேஷியாவில்தானே இருக்கிறார்கள்? எப்போதாவது ஒரு முறை இந்தோனேஷிய முஸ்லீமுக்கு மெக்கா மெதீனா இமாம பதவி தந்திருக்கிறார்களே? எவனாவது கேட்டால் உடனே “ஆ முஸ்லீம்களை பிரிச்சி பேசறான்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து அரபுகளுக்கே கொடுத்துகொண்டிருக்கலாம் இல்லையா//

    மக்கா மசூதி எங்கே இருக்கிறது? சவுதி அரேபியாவில். அந்நாட்டு சட்டப்படி சவுதி மன்னரே அதன் பாது காவலர் ஆவார். இந்த மசூதியை தன் கட்டுக்குமள் கொண்டு வர முகமதுவின் காலத்தில் இருந்தே பல போர்கள் நடை பெற்று உள்ளன .மெக்கா பாதுகாக்கப் பட்ட்தா என்னும் பதிவில் தோழர் செங்கொடி இதனை விவாதித்து உள்ளார்.

    இது பொருளாதாரமும், அரசியலும் சம்பந்தப் பட்டது. இதற்கும் மததிற்கும் சம்பந்த‌ம் இல்லை.

  36. //According to Vedic literature, the present Ram Janaki Temple in Janakpur is located at the birthplace of Goddess Sita, consort of Lord Rama. As mentioned in the great epic of the Ramayana, the area belonged to the realms of King Janak. The Ram Janaki Temple is one of the most holy places for Hindus. Various vestiges of the 11th and 12th Century AD can be found. The temple architecture is of a much later period, however its style is unique; a blend of classical and neo-classical design with elements of fortification within a unique environmental setting.

    ஒரு விஷயத்தில் கூட இந்த கோயில் இந்த மன்னரால் இந்த ஆண்டு கட்டப் பட்டது என்று உறுதியாக கூற முடியாதா?

  37. ////கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்று நிரூபித்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதுதான்//
    முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். பிறகு அது சித்தப்பாவா அல்லது பெரியப்பாவா என்று முடிவு செய்யலாம். கீரி பாம்பு ச‌ண்டை மாதிரி இருக்கு இந்தா நிரூபிக்கிறேன் அப்ப‌டி இப்ப‌டின்னு உதார் விடுரிங்களே ந‌ண்பா.
    காட்டுங்க‌ள் ஆதார‌த்தை.அதை நாம் விவாதிபோம்//

    இது நான் ஏற்கெனவே கேட்டது.
    கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது என்று நிரூபித்தால் இடத்தை கொடுத்துவிடுவோம் என்பது உங்கள் நிலைப்பாடு என்றால், காசி மதுரா மசூதி இடங்களை விட்டுக்கொடுக்க எப்போது குரல் கொடுக்கபோகிறீர்கள்?

    //ந‌ம‌து நாடு உருவான‌து 1947 .அத‌ன் பிற‌கு ந‌டைபெறும் செய‌ல்க‌ள் அனை‌த்தும் ந‌ம‌து நாட்டின் ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டே ந‌டை பெற‌ வேண்டும். //

    அட பேசுவது என்ன நக்ஸலைட்டா? ஆச்சரியாமாக இருக்கிறதே.. எப்போதிலிருந்து நாட்டின் சட்டதிட்டங்களை மதிகக்வேண்டும் என்ற நிலைப்ப்பாட்டை எடுக்க ஆரம்பித்துள்ளீர்கள்?

    //ஒரு விஷயத்தில் கூட இந்த கோயில் இந்த மன்னரால் இந்த ஆண்டு கட்டப் பட்டது என்று உறுதியாக கூற முடியாதா?//

    முன்னரே சொன்னேன். கோவில் புராதனமானது. சமீபத்திய வேலைப்பாடுகள் 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இப்போதுபோல “உபயம் மருதையன்” என்று போட்டுக்கொள்ளும் பழக்கம் அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம்.

  38. //அட பேசுவது என்ன நக்ஸலைட்டா? ஆச்சரியாமாக இருக்கிறதே.. எப்போதிலிருந்து நாட்டின் சட்டதிட்டங்களை மதிகக்வேண்டும் என்ற நிலைப்ப்பாட்டை எடுக்க ஆரம்பித்துள்ளீர்கள்?//

    நான் கம்யுனிசக் கொள்கைகளில் ஈடுபாடு உடையவன். இக்கொள்கைகள் என்க்கு மனித நேயத்தையும் ,நேர்மையையும் கற்றுக் கொடுத்தன.
    அதில் என‌க்கு பெருமைதான். நாட்டின் செல்வ‌ங்க‌ளை அய‌ல் நாட்டு முதலாளிக‌ளுக்கு விற்ப‌வ‌ன் தேச‌ ப‌க்த‌ன் என்றால் அத‌னை எதிர்து போராடும் ந‌க்ச‌லைட் ஆக‌ பெருமை கொள்கிறேன். நான் நக்சலைட் என்றால் நீங்கள் ராம் சேன என்ற அமிப்பை சேர்ந்த இந்து தீவிர வாதியா?

    நாம் இப்போது அலகாபாத் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு பற்றி விவாதித்து கொண்டு இருக்கிறோம் என்பதை நினைவு படுத்துகிறேன்.

    நீங்க‌ என்ன‌ அர‌சியல்(வியா)வாதியா. இந்தா காட்டுரேன் அந்தா காட்டுகிறேன் என்று கூறுக்கொண்டே இருக்கிறீர்க‌ள்.

    ஒருவேளை ஆதார‌ம் இருந்து இருந்தால் முழு நிலத்தை‌யும் இராம‌ ஜ‌ன்ம‌ பூமி ஆட்க‌ளுக்கே கொடுத்து இருப்பார்க‌ள்.

    //முன்னரே சொன்னேன். கோவில் புராதனமானது. சமீபத்திய வேலைப்பாடுகள் 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இப்போதுபோல “உபயம் மருதையன்” என்று போட்டுக்கொள்ளும் பழக்கம் அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம்//

    அல்லது கோயிலை கட்டியவனுக்கு எழுத படிக்க தெரியாமல் இருந்து இருக்கலாம்.
    இராமனுக்காவது எழுதப் படிக்க தெரியுமா?
    அந்த கோயிலில் ஏதாவது அகழ்வாராய்சி நடைபெற்று உள்ளதா? அது குறித்து ஏதாவது விவரம்?

  39. 1.கோவில் இடிக்கப் பட்டு மசூதி கட்டப் பட்டது என்றால்,அதற்கு ஆதாரமாக அலகாபாத் நீதிமன்றம் கருதியது அகழ்வாரய்ச்சி முடிவுகள் என்றால் அத்னை குறித்து விளக்க முடியுமா?.

    2.அயோத்தியில் இராம‌ருக்கு கோயில் இருந்த‌து என்றால். அந்த‌ கோயிலை க‌ட்டிய‌ ம‌ன்ன‌ர் யார்?எப்போது க‌ட்டினார்?

    3.எப்போது இருந்து இராமன் வழிபாடு இந்தியாவில் நடந்து வருகிறது?

    4.இராமருக்கு பழமையான் கோயில்(அயோத்தி தவிர இப்பொதும் இருக்கின்ற) இந்தியாவில் எங்கே ,எப்போது ,யாரால் கட்டப் பட்டது?.

    5. 1600 to 1800 இராம‌ர் கோயில் – ‍பாபர் மசூதி குறித்து ஏதாவ‌து ஆதார‌ம்

  40. சங்கர்.

    //இது நான் ஏற்கெனவே கேட்டது.
    கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது என்று நிரூபித்தால் இடத்தை கொடுத்துவிடுவோம் என்பது உங்கள் நிலைப்பாடு என்றால், காசி மதுரா மசூதி இடங்களை விட்டுக்கொடுக்க எப்போது குரல் கொடுக்கபோகிறீர்கள்?//

    இந்த கேள்வியை மட்டும் கவனமாக ரொம்ப நாட்களாக தவிர்த்து வருகிறீர்களே.

    இதற்கு பதில் சொல்லுங்கள்.

  41. //இது நான் ஏற்கெனவே கேட்டது.
    கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது என்று நிரூபித்தால் இடத்தை கொடுத்துவிடுவோம் என்பது உங்கள் நிலைப்பாடு என்றால், காசி மதுரா மசூதி இடங்களை விட்டுக்கொடுக்க எப்போது குரல் கொடுக்கபோகிறீர்கள்?/

    இது உங்களை போன்ற இந்து தீவிரவாதிகளின் நிலைப்பாடு.

    குர‌ல் கொடுப்பது என்றால் கடப்பாறை எடுத்துக் கொண்டு போய் இடிப்பதுதானே உங்கள் அகராதியின் பொருள். முத‌ல்ல‌ க‌ட‌ப்பாறையை எடு. எங்கெங்கே இஷ்ட‌மோ அங்க‌ எல்லாம் தோண்டு, எல்லாப் ப‌க்க‌மும் ஒரே குண்டும் குழியுமா ஆகிற‌வ‌ர‌க்கும் விடாதீர்க‌ள்.

    தோண்டும் போது இங்க‌ இராம‌ன் பிற‌ந்தான்.அங்கே மச்சம்,கூர்மம்,வராக,நர‌சிம்ஹம்,வாம‌னன்,இராமன்,பரசு இராமன் ,கிருஷ்ண‌ன்,ப‌ல‌ராம‌ன், எல்லா மிருக‌ம், அவதாரங்களும் இங்கேதான் பிற‌ந்தான்னு சொல்லிக் கொண்டே தோன்ட‌னும். அப்ப‌டியே சாமி ஆடிக் கொண்டும் தோண்ட‌லாம். ச‌ர‌க்கு அடித்துக் கொண்டும் தோன்ட‌லாம்.

    விள்ம்ப‌ர‌ம்:
    இங்கே க‌ட‌ப்பாறை ,ம‌ண்வெட்டி போன்ற‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ள் அதிக‌ அள‌வில் தேவை ப‌டுகிற‌து. வேலையில்ல‌ம‌ல் வெட்டிய‌க‌த் திரிப‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்ன‌ ச‌ம்ப‌ள‌த்தில் தோண்டும் வேலை காத்திருக்கிற‌து.முன்பு இடித்த‌வ‌ர்க‌ள்,வ‌குப்பு க‌ல‌வ‌ர‌ங்க‌ளின் ப‌ங்க‌ கொண்டோருக்கு முன்னுரிமை அளிக்க‌ப் ப‌டும்.

    பின் குறிப்பு:
    அப்புற‌ம் வேறு மத‌த்துக‌ர‌ர் வீடு ஆல‌ய‌ங்க‌ளிலே ம‌ட்டுமே தோண்ட‌னும். க‌ல்ல‌றையை கூட‌ விட‌க் கூடாது.

  42. ஹஹ்ஹஹா.
    வெறியாட்டம் ஆடியதற்கு நன்றி.
    கேட்ட கேள்வி ரொம்ப சாதாரணமானதுதான்.

    ஒரு கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்று நிரூபித்தால் உங்கள் நிலைப்பாடு என்ன?

    இந்த கேள்விக்கு ஏன் இவ்வளவு வெறியாட்டம்?

    ஆனால், கோவிலை இடித்து மசூதி கட்டினால் மட்டும் ஆதரவு. ஆனால் மசூதியை இடித்து கோவில் கட்டினால் ஆதரவில்லை என்று தெளிவு படுத்தியதற்கும், இப்படி வெறியாட்டம் ஆடி உங்களது மரைகழண்ட நிலையை எல்லோரும் அறிய உணர்த்தியதற்கும் நன்றி.

    ஆக எதையும் நிரூபிப்பதில் என்ன பிரயோசனமும் இல்லை.

    செங்கொடி சங்கர் என்ற பெயரில் உளறினாலும், அல்லது செங்கொடி வாயையே திறக்காமல் இருந்தாலும், தெளிவாக தெரிவது அதுதான்.

    என்ன இருந்தாலும் இஸ்லாமிய பாசம் போய்விடுமா? அல்லது உண்மையான நடுநிலைதான் வந்துவிடுமா?

    பாவம் இப்படிப்பட்ட இஸ்லாமிய வெறியருடன் இஸ்லாமியர்கள் ஏன் மல்லுக்கட்டுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

  43. //என்ன இருந்தாலும் இஸ்லாமிய பாசம் போய்விடுமா? அல்லது உண்மையான நடுநிலைதான் வந்துவிடுமா?//

    //பாவம் இப்படிப்பட்ட இஸ்லாமிய வெறியருடன் இஸ்லாமியர்கள் ஏன் மல்லுக்கட்டுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.//

    என்ன சார் கொடுமை இது. உரலுக்கு ஒத்தை பக்கம் இடின்னா மத்தளதிற்கு ரெண்டு பக்கம் இடி.

    தோழ‌ர் இது கோயில் ம‌சூதி க‌ட்டும் பிர‌ச்சினை ம‌ட்டும‌ல்ல‌. க‌ட‌ந்த‌ கால‌த்தின் நிக‌ழ்வுக‌ளுக்கு ப‌ழி தீர்க்கும் விஷ‌யமாக‌வே இப்பிர‌ச்சினை மத மற்றும் அர‌சிய‌ல்(வியா)திக‌ளால் எடுத்து செல்ல‌ப் ப‌டுகிற‌து. இப்படியே நடந்தால் இப்பிரச்சினை முடிவுக்கு வராது.

    நண்பரே உங்கள் கருத்துகளை மதிக்கிறேன். ஆனாலும் அது மற்றவர்களின் சுதந்திரத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும்.

    ம‌த‌ம் க‌ட‌வுள் என்ப‌து உங்க‌ள் த‌னிப்ப‌ட்ட‌ ந‌ம்பிக்கை. நீங்க‌ள் பிற‌ந்த‌ ச‌முக‌ம் சார்ந்து வ‌ருவ‌து. எல்லா ம‌த‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ நிறைய‌ப் ப‌டியுங்கள். விவாதியுங்க‌ள்.

    எனக்கு தெரிந்த‌ வ‌ரை எல்ல‌ மத‌த்திலும் 50% ந‌ல்ல‌து 50% கெட்ட‌து உள்ள‌து. என்னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ல்ல‌ ப‌க்தி உள்ள‌வ‌ர்க‌ள்தான். ஆனாலும் ம‌ற்ற‌ ம‌த‌கங்க‌ளின் மீதும் அதே அள‌வு ம‌ரியாதை காட்டுவார்க‌ள். இந்தியாவில் வாழும் 95% ம‌க்க‌ள் இவ்வாறே இருக்கிறார்க‌ள்.அத‌ற்காக‌ நாம் பெருமை ப‌ட‌லாம்.

    நான் இஸ்லாமிய‌ன் அல்ல‌.எந்த‌ ம‌தத்தையும் சேர்ந்த‌வ‌னாக‌ கருதுவ‌தும் இல்லை.இன்னும் நிறைய பேசுவோம்.ந‌ன்றி

  44. *******.
    அறிவுரை சொல்ற மூ***ப்பாரு.

    என்னோடகருத்தை மதிக்கிறாராம். ஆனா அது மத்தவங்களோட சுதந்திரத்தை பாதிக்காம இருக்கணுமாம்.

    மத்தவங்களோட சுதந்திரம் இங்க எங்க வந்திச்சி? உங்க வீட்டு மேல் இடிச்சிகிட்டு ஒருத்தன் வீடு கட்டினா சும்மா இருந்துடுவீங்களா? அப்ப நான் உங்கள்கிட்ட வந்து பாவம் அவரு. அவரோட சுதந்திரத்தை மதிச்சி அவர் உங்கள் தலையில உக்கார அனுமதிக்கணும். இப்படி சும்மா கோபப்படக்கூடாதுன்னு சொன்னா நீங்க என்ன சொல்வீங்க?

    ஏங்க மசூதியை கட்ட வேற இடமே இல்லையா? மதுரா கோவில் மேலயும் காசி விசுவநாதர் கோவில் மேலயும்தான் கட்டணுமா? நீ வேற இடத்தில கட்டிக்கோ. நானே இடம் தரேன். கட்டியும் தரேன்னு சொன்னா முடியாது. உன் தலைமேலயே உக்கார்ந்திருப்பேன்னு சொல்றவங்களுக்கு நீங்க வக்காலத்து. வெக்கமா இல்லை?

    இந்த லட்சணத்தில இந்த நக்ஸலைட்டு “இந்திய நாட்டு சட்டத்தை மதிக்கணும்னு இந்துக்களுக்கு அறிவுரை வேற.. வெக்கமே இல்லை!

    எல்லா மதத்தையும் ஒழிக்கணும்னு பேசற ஆளு ஏன் எல்லா மதத்திலயும் 50 சதம் நல்லது இருக்கு 50 சதம் கெட்டது இருக்குன்னு பேசுது?

    உங்களோட பார்வையில இந்துமதத்தில இருக்கிற 50 சதம் நல்லதை பட்டியல் போடுங்களேன் . பாக்கிறேன்.

    ஏமாளிங்க நிறைய இருக்கிற மதம்னும் வேணா இந்துமதத்துக்கு உங்களோட “நல்ல சர்டிபிகேட்டை” குடுக்கலாம்.

    ************************.

  45. //அறிவுரை சொல்ற மூ***ப்பாரு//
    கோடிட்ட இடத்தை நிரப்பவும். ஏன் நினைத்ததை எழுத வெட்கமாக இருக்கிறதா?//
    கோடிட்ட இடத்தை நிரப்பவும். ஏன் நினைத்ததை எழுத வெட்கமாக இருக்கிறதா? இந்த உணர்வு உங்களுக்கு இருந்தால் நல்லதுதான். நன்றி

    //உங்க வீட்டு மேல் இடிச்சிகிட்டு ஒருத்தன் வீடு கட்டினா சும்மா இருந்துடுவீங்களா? அப்ப நான் உங்கள்கிட்ட வந்து பாவம் அவரு. அவரோட சுதந்திரத்தை மதிச்சி அவர் உங்கள் தலையில உக்கார அனுமதிக்கணும். இப்படி சும்மா கோபப்படக்கூடாதுன்னு சொன்னா நீங்க என்ன சொல்வீங்க?//
    சரி உங்கள் வழிக்கே வருவோம். ஒரு வீடு உங்களுடையது என்றால் உங்களிடம் அதற்கான பத்திரம் இருக்க வேண்டும்.

    ராமர் கோயில், பாபர் மசூதி இரு தரப்புமே தங்கள் இடம் என்பதற்கான ஆதாரங்களை வைத்திருக்க வில்லை என்று நீதி மன்றம் கூறியது. அப்படி இருக்கும் பட்சத்தில்.கண் முன்னால் கண்ட மசூதி இருப்பதுதானே சரி.

    இது கோயில் கட்டும் முயற்சி அல்ல. இஸ்லாமியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டும் ஒரு முயற்சி. அவர்களை எதிரிகளாக சித்தரித்து ஓட்டு வங்கி உருவாக்கும் ஒரு முயற்சி.
    இந்த லட்சணத்தில இந்த நக்ஸலைட்டு “இந்திய நாட்டு சட்டத்தை மதிக்கணும்னு இந்துக்களுக்கு அறிவுரை வேற.. வெக்கமே இல்லை!

    எல்லா மதத்தையும் ஒழிக்கணும்னு பேசற ஆளு ஏன் எல்லா மதத்திலயும் 50 சதம் நல்லது இருக்கு 50 சதம் கெட்டது இருக்குன்னு பேசுது?//

    நான் நக்ஸலைட்டு என்று நீங்கள் நினைத்தால் அது எனக்கு பெருமைதான். ஆனால் நானும் உழைத்து குடும்பம் குழந்தை என்று வாழும் சராசரி மதிய குடும்பத்து ஆசாமிதான்.

    நாட்டில் வன்முறையை தூண்டி அதன் மூலம் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஆட்கள் எல்லாம்தான் வெட்கப் பட வேண்டும். நாட்டின் செல்வங்களை முதாலாளிகளுக்கு தாரை வார்க்கும் ஆசாமிகள்தான் வெட்கப் பட வேண்டும்.

    உங்க‌ளுக்கு சொன்னதை இந்துக்களுக்கு சொன்னதாக எப்படி எடுக்க முடியும்?. இதுதான் அக்மார்க் இந்துத்வா ஆசாமிகளின் தந்திரம். வேண்டுமென்றால் இந்துத்வா ஆட்கள் என்று எடுத்து கொள்ளுங்கள்.

    மதங்களை ஒழிப்பதற்கு இன்னும் நாட்களாகும். உங்கள் மதங்கள் மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்கும் வரை வாழும்.

    ஏதோ ஒரு மத‌த்தில், சாதியில் பிறந்து விட்டோம். அதனால் அதையே பின்பற்றுவோம்,கேள்வி கேக்க மாட்டோம். அதற்காக எதையும் செய்வோம் என்றால் உங்களை மாதிரி ஆளுங்க ரொம்ப குறைவு தோழர். இன்னும் பேசுவோம்.

  46. திறமையாக கட் அண்ட் பேஸ்ட் செய்யும் மூஞ்சிக்கு (நான் நேராகத்தான் எழுதுகிறேன். செங்கொடிதான் ஸ்டார் போடுறார்) திரும்பவும் கேட்கிறேன்.

    அங்கே கோவில்தான் இருந்தது என்று நிரூபிக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன?

    ஏற்கெனவே கோவில் மீது கட்டப்பட்டிருக்கும் மசூதிகள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

    இந்த கேள்விகளுக்கு நீங்கள் மட்டுமல்ல, யாருமே இங்கே பதில் சொல்லவில்லை.

    இதற்கு பதில் சொல்லாமல் மேன்மேலும் உளறுவதாகவும் தோழர் என்று என்னை கெட்டவார்த்தையில் திட்டுவதாகவும் இருந்தால் இதுவே என் கடைசி பின்னூட்டம்

    செங்கொடி இங்கே கேட்டுள்ள என் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லவில்லை. காட்டிய ஆதாரத்தை பார்க்கவில்லை. இஸ்லாமிய அடாவடியாளர்களை போலவே இதுவும் ஒரு அடாவடி கும்பல். இங்கே எந்தவிதமான ஆதாரங்களும், வாதங்களும் பிரயோசனமில்லை.

  47. எல்லா இந்துக் கோவில்களும் ஏற்கெனவே இருந்த சமண பள்ளிகளையும், புத்த விகாரகைகளையும் ஆக்ரமித்துதான் கட்டப்பட்டவை. வேத இந்து மதம் தன்னில் கோவில் என்ற கான்செப்டே வரவில்லை.

    உதாரணம் – ஸ்ரீரங்கம் கோவில், திருப்பதி கோவில், சபரிமலை ஐயப்பன் கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவில், திருச்சி மலைக்கோட்டை முருகன் கோவில், பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம்…

  48. அங்கே கோவில்தான் இருந்தது என்று நிரூபிக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன?

    ரொம்ப காமெடியா பேசரீங்க நிலா. அதான் மேல் முறையீடு செய்யப் போகிறார்கள் அல்லவா?. இன்னும் ஒரு 50 வருஷம் கழித்து இந்த கால் காசு பெறாத பிரச்சினையை பேசுவோம்

    ஏற்கெனவே கோவில் மீது கட்டப்பட்டிருக்கும் மசூதிகள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?//

    இந்த‌ ப‌திவை பாருங்க‌ள் ந‌ண்ப‌ரே. உங்க‌ளை மாதிரியே இன்னொரு கோஷ்டியும் இடிக்கிற‌துக்கு அலையுறான்.

    http://kalaiy.blogspot.com/2010/10/blog-post_15.html

  49. ரொம்ப காமெடியா பேசரீங்க நிலா. அதான் மேல் முறையீடு செய்யப் போகிறார்கள் அல்லவா?. இன்னும் ஒரு 50 வருஷம் கழித்து இந்த கால் காசு பெறாத பிரச்சினையை பேசுவோம்

  50. பாபர் என்ற மனிதர் வாழ்ந்தார் என்ற ஆதாரம் இருக்கிறது ஆனால் ராமர் என்ற மனிதரோ அல்லது[யாரோ ]வாழ்ந்த ஆதாரம் இல்லாமல் பேசுவது முட்டாள்தனம் . இருந்த மசுதிஐ இடித்தது அயோக்யத்தனம்

  51. mani,
    ரொம்ப அறிவாக பேசுவதாக நினைப்பா? சமணப்பள்ளிகளை இடித்து அதன் மீது பள்ளிகளை கட்டியதால்தான் இஸ்லாமிய மசூதிகளுக்கு பள்ளிவாசல் என்று பெயர். அதுதெரியுமா உங்களுக்கு?
    பௌத்த விஹாரங்களையும் பௌத்த இந்து பல்கலைக்கழகங்களான நாலந்தா தட்சசீலம் ஆகியவற்றை கொளுத்தியது இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் ஜிகாதிகள்தான் அதுவாவது தெரியுமா?

    கொஞ்சம் வரலாறு படிக்கவேண்டும். சும்மா திகக்காரனும் வினவுக்காரனும் சொல்றான் என்று நம்பி உளறக்கூடாது. போய் படித்துவிட்டு வாருங்கள் பிறகு பேசுவோம்.

    சங்கர்
    உங்களுக்கு நான் எதுவும் கேட்கவும் போவதில்லை. நீங்கள் பதில் சொல்லவும் தேவையில்லை. நீங்கள் ஒத்துகொண்டால் என்ன ஒத்துகொள்ளவில்லை என்றால் என்ன? உங்களுடைய பாரபட்சமான சிந்தனையை, இஸ்லாமியர்களுக்கு சார்பான மதவெறியை ஏற்கெனவே வெளிக்காட்டியாகிவிட்டது. இனி நீங்கள் வேஸ்ட்

    abuthahir,
    கோவில் இருந்ததா இல்லையா என்பதற்குதான் ஆதாரம். பாபரா அல்லது ராமரா என்பதற்கு ஆதாரம் யாரும் கேட்கவில்லை. ரொம்ப அறிவாக பேசுவதாக நினைப்பா? உங்கள் முகம்மது குதிரை மீது ஏறி சொர்க்கம் பார்த்துவிட்டு வந்ததற்கு ஆதாரம் தருகிறீர்களா? ஆதாரம் தாருங்கள், இல்லை என்றால் எல்லா மசூதிகளையும் இடித்துவிடலாமா?

    கொஞ்சம் யோசித்து பதில் எழுதுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் டவுசர் கிழியும்,.

  52. நிலா
    பள்ளிவாசல் பற்றிய உங்களது பெயர்காரணம் பற்றிய அறிவில் புல்லரித்து போய் இருக்கிறேன். ஆதாரம் இருந்து உரைத்தால் வரலாற்றுக்கு வரலாறு என்று பெயர் என நினைக்கிறேன். பௌத்த இந்து பல்கலைக் கழகம் என்று எப்படி குறிப்பிடுகின்றீர்கள். வரலாற்று ஆதாரத்துடன் இதை விளக்க முடியுமா ? எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றிய நாடும் இதுதான். வரலாற்றை வாந்திகளில் இருந்து பொறுக்க முடியாது என்பதற்கு கட்டுரையின் தொடர்ச்சியான ஆதாரபூர்வமான சமூக கண்ணோட்டம் முதன்மையாக உள்ளது தெரியவில்லையா…

    எதற்கு வீண் பிரச்சினை.. நீங்கள் சொன்ன வரலாற்றுக்கு ஆதாரத்தை கட்டுரை முன் வைத்திருப்பது போல முன்வையுங்கள். மற்றபடி நம்பிக்கைக்காக அலகாபாத் நீதிமன்றத்துடன் மோதுவது போல உங்களுடனும் மோதுவது கல்லில் போய் முட்டுவது போலத்தானே

  53. மனி
    தேவையில்லை. அவற்றை நிரூபிப்பது இங்கு தேவையுமில்லை. அந்த இடம் இதுவுமல்ல.

    மனி என்று பெயரிருப்பதால் நீங்கள் முஸ்லீமும் அல்ல என்று நினைக்கிறேன். ஆகவே உங்களிடமும் பேச தேவைஇல்லை.

    இங்கே கேள்விகள் முஸ்லீம்களுக்குத்தான். மற்ற பதிவுகளிலெல்லாம் வண்டிவண்டியாக எழுதுபவர்கள் இங்கே ஏன் என் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன் என்கிறார்கள் என்பதுதான்.

    போய்வாருங்கள். உங்களை போல ஏராளமான இந்துக்கள் இருக்கிறார்கள். இந்த திம்மி இந்துக்களிடம் பேசுவது வீண்.

  54. மணி என்ற பெயரில் எந்த இந்து சாமி இருக்கிறது ஐயா… ராமர் மாதிரி பிராடு பண்றீங்களா

  55. செங்கொடி ஒரு ரகசிய முஸ்லிமா?.

    இஸ்லாத்தை ஒழிக்க அரும்பாடு படும் செங்கொடி ஏன் பாபரி பள்ளிக்கு வக்காலத்து வாங்குகிறார்?. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கொயிலா?.

    என்னைக்கேட்டால், பாபரி மசூதி இடிப்பு முஸ்லிம்களுக்கு கிடைத்த முதல் சுதந்திரம். இதற்கு முன்னால் முஸ்லிம் என்று சொல்வதற்கே பயந்தவர்கள் இன்று தைரியமாக புர்காவும் தொப்பியும் அணிந்து செல்கிறார்கள்.

    முஸ்லிம்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டுமானால், ஹிந்துக்கள் முதலில் தாஜ் மஹாலை உடைக்க வேண்டும். ஹிந்துக்களை காபிரென அறிவிக்கும் திருக்குரானை தடை செய்ய வேண்டும்.

    தெம்பிருக்கா காபிர்களுக்கு?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்