விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்

விடுதலைப் புலிகளையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்பிட்டு பலரும், பல போதுகளில், பல்வேறு விதங்களில் பேசி வந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பிறகும் கூட இந்த ஒப்பீடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்று இலங்கையின் நிலை வேறு. இன்று இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மக்களின் எழுச்சிக்கு பலரும் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்றளித்ததன் வினை என்று பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் வழியே விடுதலைப் புலிகள் குறித்த பெருமிதம் மீண்டும் உருவாக்கப்படுகிறது. இந்த சூழலில் ஓரிரு ஆண்டுகள் பழமையான இந்த கேட்பொலி பதிவிடப்படுவது பொருத்தமானதாகவும், புலிகள் குறித்த புரிதலுக்கு இணக்கமாகவும் இருக்கும் எனக் கருதுகிறேன்.

கொரோனாவின் முதல் ஊரடங்கு காலம் என எண்ணுகிறேன். வாட்ஸாப் குரல் பதிவின் வழியாக பல தலைப்புகளில் தோழர்கள் நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பதில் தான் இது. என்னுடைய புரித்லிலிருந்து அளிக்கப்பட்ட பதில் தான் இது, இதனோடு முரண்படுவோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டால் சரிகாண்பதற்கும், சரிகாட்டுவதற்கும் வாய்ப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்.

பாருங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்