தன் மேலடித்த ஒற்றச் செருப்பால்
இருவருக்கும் பயனில்லை என
இன்னொரு செருப்பையும் ஏசிப் பெற்ற
பகலவனே!
இதோ,
உன் படத்தின் மீதே
குறி நீட்டுகின்றனர்
அடிமையா நீங்கள்
என்று யாரைக் கேட்டு
நீ விரல் நீட்டினாயோ
அவர்கள்
நான் அடிமை தான் என்று
உன் படத்தின் மீதே
குறி நீட்டுகின்றனர்.
எவருடைய அழுக்கை கழுவ நீ
மூத்திரப்பை சுமந்தாயோ
அவர்கள்
தன் மூத்திரத்தை தந்திருக்கிறார்கள்.
நீ நீயாக இருக்கிறாய்
அவர்கள் அவர்களாக இருக்கிறார்கள்.
நாங்கள் யாராக இருப்பது?
குறிகளைத் தேடி
அறிந்தெறிபவர்களா?
உன் குறிக்கோளை நாடி
அடைந்தெடுப்பவர்களா?
இரண்டாகவும் தான்.
superb emotions expressed in words with short form of poetic words…nuch.good punch…
இன்னதென்று தெரியாமல் செய்தேன் என்றாலும்..தெரிந்தே செய்தேன் என்றாலும் காட்டுமிராண்டிகளுக்கு பாவமன்னிப்பு கிடையாது.
https://marubadiyumpookkum.wordpress.com/2015/04/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?fb_action_ids=952214864829887&fb_action_types=news.publishes&fb_ref=pub-standard