இன்று செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினம்.
“தொண்டு செய்து பழுத்த பழம்.
தூய தாடி மார்பில் விழும்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும்.
மனக் குகையில் சிறுத்தை எழும்.”
பாவேந்தர் பாரதிதாசன் பெரியார் குறித்து எழுதிய வரிகள் இவை. ஆனால் பெரியார் என்றதும் கடவுள் மறுப்பாளர் என்றே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். அது வானத்தை கிண்ணத்தை பிடித்து வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல் முழுமையற்றது. பெரியாரின் புரட்சிகரமான சிந்தனைகள் இன்னும் பரவலாக, முழுமையாக கிடைக்கும்படி எளிமையாக்கப்படவில்லை.
தவிரவும், பாசிச பார்ப்பனியக் கும்பல் இரண்டு முனைகளிலும் அதிகாரத்தில் இருக்கும் இந்த நேரத்தில், தந்தை பெரியாரின் சிந்தனைகள் முன்னெப்போதையும் விட அதிகம் இன்றியமையாததாக இருக்கின்றன.
அந்த வகையில், “பெரியார் ஈவேரா சிந்தனைகள்” எனும் தொகுப்பு நூலின் முதல் பகுதி வலையேற்றப்படுகிறது. பத்திரப்படுத்துங்கள், பார்வையிடுங்கள், பரப்புங்கள்.
அருமையான புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படிக்கும் வாய்ப்பை அளித்தமைக்கு மிக்க நன்றி தோழரே… வாழ்க உம் பணி.