செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௫

குரானின் சவாலுக்கு பதில்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

“குரானுக்கு சவாலுக்கு பதில்” எனும் கட்டுரையில் குரானில் பயன்படுத்தப்படும் அடைப்புக்குறிகளின் இலக்கு, குரானில் இருக்கும் ஒரு முரண்பாடு, குரானின் வசனங்களுக்கு நிகராக ஒரு குறள் என்று மூன்று குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்றையுமே நண்பர் மறுத்திருக்கிறார். அவைகளைப் பார்ப்போம்.

குரானில் இடம்பெற்றிருக்கும் அடைப்புக்குறிகள் மொழிபெயர்ப்புச் சிக்கல்களை தீர்ப்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார். அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஆனால் அவை அதற்கானவையல்ல என்பதற்கு அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் எண்ணிக்கையே சான்றாக அமைந்திருக்கிறது. உலகில் குரான் மட்டுமல்ல ஏராளமான இலக்கியங்களும், புதினங்களும், ஆய்வுகளும், அறிவியல் நூல்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. கவிதைகளும் கூட வடிவம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த மொழிபெயர்ப்பிலும் பயன்படுத்தப்படாத அளவிற்கு குரானுக்கான மொழிபெயர்ப்புகளில் அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏன் அரபு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேறு நூல்களில் இந்த அளவுக்கு அதிகமான‌ அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்றால் குரான் மொழிபெயர்ப்புகளில் மட்டும் ஏன் இவ்வளவு அடைப்புக்குறிகள்? காரணம், அது மொழியியல் சிக்கல்களுக்காக மட்டும் கையாளப்பட்ட‌தில்லை. மேலதிகமாக தேவைப்படும் பொருளைக் கொண்டுவருவதற்காகவே கையாளப்பட்டிருக்கின்றன.

இதற்கு இன்னொரு விளக்கத்தையும் கொடுக்கிறார்கள். ஏனைய மொழிபெயர்ப்புகளெல்லாம் மூல மொழியின் பொருளை உள்வாங்கி அதை மாற்று மொழிக்கு இயைந்து பெயர்த்துக்கொள்வது, குரான் அப்படியல்ல, சொல்லுக்குச் சொல் அப்படியே மொழிபெயர்க்கப்படுவ‌தால் பொருள் புரிவதற்காக அடைப்புக்குறிகள் அதிகம் தேவைப்படுகின்றன. ஆனால் இதுவும் தவறான விளக்கமே. எந்த ஒரு மொழியிலிருந்தும் பிரிதொரு மொழிக்கு சொல்லுக்குச் சொல் அப்படியே மொழிபெயர்க்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணவிதிகள் வேறுபடுகின்றன. அப்படி மொழிபெயர்த்தால் குழப்பமே மிஞ்சும். குரான் வாக்கியங்கள் தமிழுக்கியைந்த கோர்வையுடன் இருப்பதால், குரான் அப்படி சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இருக்கமுடியாது. மட்டுமல்லாது, பல்வேறு தமிழ் குரான் மொழிபெயர்ப்புகள் ஒரேமாதிரியான வாக்கிய அமைப்பைக் கொண்டதாகவும் இல்லை. எனவே அரபு குரானின் கருத்துகளைத்தான் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளனர். என்றால் இவ்வளவு அதிகமான அடைப்புக் குறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அடைப்புக்குறிகளை நீக்கிவிட்டுப்பார்த்தால் வசனங்களின் பொருட்களில் பேதம் வருகிறது. அடைப்புக்குறிகளை குறைப்பதற்கு செய்யப்படும் முயற்சிகள் கூட சமகால அறிவியல் பொருளை உள்வாங்கி வார்த்தைகளில், வாக்கியங்களில் நெகிழ்வுடன்தான் செய்யப்படுகின்றன. எனவே குரானின் பொருளில் அடைப்புக்குறிகள் மிகுந்த பங்களிப்பை கொண்டிருக்கின்றன, அதற்காகவே அவை பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட வசனத்தையே (குரான் 2:178) எடுத்துக்கொள்வோம். “சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை” என்பதன் பொருள் என்ன? சுதந்திரமான ஒருவன் கொல்லப்பட்டால் அதற்கு பகரமாக சுதந்திரமான ஒருவனும், அடிமை ஒருவன் கொல்லப்பட்டால் அதற்குப் பகரமாக அடிமை ஒருவனும் என்று நேரடியாகவும்; அடிமை ஒருவனை சுதந்திரமான ஒருவன் கொலை செய்தால் அதற்குப்பகரமாக கொலை செய்த சுதந்திரமானவனின் அடிமை ஒருவன் என்று மறைமுகமாகவும் பொருள் வருகிறது. இப்படி எதிர்மைறையான வகையில் யாரும் பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் “சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை” என்று ‘கொலை செய்த’ என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டு பயன்படுத்துகின்றனர். ஜான் டிரஸ்ட் வெளியீட்டிலும் இதே வசனத்தில் இதே அடைப்புக்குறி சில சொற்கள் தள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மொழியியல் சிக்கல்களுக்காக மட்டுமே அடைப்புக்குறிகள் பயன்படுத்தபட்டுள்ள‌ன என்பது ஏற்கத்தக்கதன்று.

அடுத்து முரண்பாடான வசனத்திற்கு வருவோம். கட்டுரையில், ஒரு வசனத்தில் முதலில் வானம் பின்னர் பூமி என்றும், வேறொரு வசனத்தில் முதலில் பூமி பின்னர் வானம் என்றும் இருக்கிறது, இது முரண்பாடில்லையா? என்று கேட்க்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நண்பர், \\பூமியைப்படைத்தான்; பின்னர் வானத்தைப்படைத்தான்; பின்னர் அதை விரித்தான். இதில் எந்த முரண்பாடுமில்லை// என்று எழுதியுள்ளார். குறிப்பிட்ட கட்டுரைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை கவனித்துப்பார்த்தால் இதே கருத்தை வேறொரு நண்பர் ஏற்கனவே கூறியிருக்கிறார் என்பதை அறியலாம். ஆனால் அவர் வானத்தை இரண்டு முறையாகவும் பூமியை ஒரு முறையாகவும் குறிப்பிட்டார். நண்பர் இஹ்சாஸ் பூமியை இரண்டு முறையாகவும் வானத்தை ஒருமுறையாகவும் குறிப்பிடுகிறார். இவைகளெல்லாம் அந்த முரண்பாட்டை நீர்த்துப்போக வைப்பதற்காக சொல்லப்படும் விளக்கங்களேயன்றி வேறில்லை.

குரானில் பல இடங்களில் இந்த பேரண்டத்தை(பிரபஞ்சத்தை) ஆறு நாளில் படைத்தாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆறு நாட்களை 41:9,12 வசனங்கள் விவரிக்கின்றன. முதல் இரண்டு நாட்களில் பூமி நான்கு நாட்களில் ஏனைய தயாரிப்புகள் பின்னர் இரண்டு நாட்கள் வானம். (கணக்கிற்கு எட்டு நாட்கள் வருகிறது  என்பது அப்பாற்பட்ட விசயம்) இதில் முதல் முறை வானத்தை தோராயமாக படைத்து இரண்டாம் முறை சீராக்கியதாகவோ அல்லது முதல் முறை பூமியை மொத்தமாக படைத்து இரண்டாம் முறை விரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. குறிப்பிடவில்லை என்றாலும் அப்படித்தான் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றால் ஆறு நாட்களைவிட அதிகமாகிறது, தவிரவும் குரானிலேயே எந்தெந்த நாட்களில் என்ன நடந்தது என வரிசைப்படுத்திக் கூறியிருக்கும் போது அதைக் குலைத்து மாறுபட்ட விளக்கங்களை அளிப்பது முரண்பாட்டை மூடிமறைக்கும் வேலையேயன்றி வேறில்லை.

அடுத்ததாக, குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக ஒரு குறள் கூறப்பப்படத்தை கொள்வோம். இந்த இடத்தில் ஒரு குறிப்பை பதிவு செய்து கொள்வது சரியானதாக இருக்கும். திருக்குறள் ஒரு ஆகச்சிறந்த நூல் என்றோ, போற்றப்படத்தக்கது என்றோ கருதுவ‌தால் அதிலிருந்து ஒரு குறளை குரானுக்கு மாற்றாக கூறவில்லை. குறளிலும் அறிவியலுக்கு எதிரான கருத்துகள், ஆணாதிக்கச் சிந்தனைகள் இருக்கின்றன. அதேபோல் குரானிலும் அறிவியலுக்கு எதிரான கருத்துகள், ஆணாதிக்கச் சிந்தனைகள் இருக்கின்றன. ஆனால் இதை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது தான் வித்தியாசம். குறளுக்கென்று ஒரு மதமோ, அதன் வேதமாக குறளும் இருந்திருக்குமேயானால் குறளின் தவறுகளை நியாயப்படுத்தவும் ஒரு கூட்டம் உருவாகியிருக்கும். குரான் ஒட்டுமொத்தமாக மாற்றாக ஒரு நூலைக் கொண்டுவரக் கூறவில்லை. ஒரு ‘அத்தியாயத்தையேனும்’ என்று தான் குறிப்பிட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் ஒரு வசனத்திற்கு மாற்றாக ஒரு குறள் தரப்பட்டது. எனவே தரப்பட்ட குறளை மட்டுமே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாது, குறளின் தவறுகளை பின்புலத்தில் நிறுத்துவது தேவையற்றது.

எடுத்துக்காட்டப்பட்ட குறள் குரானின் வசனங்களுக்கு ஒப்பாகாது என்பதற்கு நண்பர் கையாண்டிருக்கும் ஒப்பீட்டில் ஒரு நேர்மையும் இல்லை. அந்தக் குறள் மருத்துவத்திற்கான இலக்கணத்தை வகுக்கிறது. நோய் என்னதென்று தெரிந்து, அந்த நோய் வந்ததற்கான காரணத்தை அறிந்து, அதை என்ன முறைமையில் போக்குவது என்பதை அறிந்துகொண்டு, செய்வதற்கு வயப்பட்டதைச் செய்யவேண்டும், என்பது அந்தக் குறளின் பொருள். இதை வெறுமனே நோய் வந்தால் மருத்துவம் பாருங்கள் என்பதாக குறுக்கிவிட முடியாது. குறள் கூறும் மருத்துவத்திற்கான இந்த இலக்கணம் இன்றுவரை பொருத்தமானதாக இருக்கிறது, எதிர்காலத்திலும் இது பொருத்தமானதாகவே இருக்கும்.

இதைக் கூறுவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். அலிஃப், லாம், மீம் என்று பொருளற்ற அசைச் சொற்களையெல்லாம் குரானில் வசனமாக இடம்பெற்றிருக்கிறது என்பதை நண்பர் மறந்துவிட்டாரா? பொருளற்ற அசைச் சொற்களை வசனமாக கூறமுடிந்த கடவுளுக்கு பொருளுடன் கூடிய ஒரு கருத்தைக் கூறுவது எந்த விதத்தில் தேவையின்றிப் போகமுடியும்? நண்பர் நம்பும் கடவுளே கொசுவையோ அதற்கும் அற்பமானதையோ உதாரணம் கூற தயங்கமாட்டேன் என்று கூறியிருக்கும் போது மருத்துவம் குறித்த ஒன்றை கூறுவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். இதுதான் என்னவகை ஒப்பீடோ?

இந்தக் குறளில் நோய்குறித்த முன்னறிவிப்பு இல்லையா? நோய் நாடி அதன்முதல் நாடி தணிக்கும் முறைநாடி அதைச் செய்வது என்று மட்டும் கூறியிருந்தால் அதில் முன்னறிவிப்பு ஒன்றுமில்லை. ஆனால் அதில் வாய்ப்பச் செயல் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நோயைத் தணிக்கும் முறையை அப்படியே செய்துவிடாமல் அதில் வாய்ப்பானதை செய்யவேண்டும் என்பதன் மூலம் ஒவ்வாமை என்னும் நோய் குறித்த முன்னறிவிப்பு அங்கு வருகிறது. நோய்க்கான மருந்தேயானாலும் அந்த மருந்தை உட்கொள்ளும் உடல் அந்த மருந்தை எற்றுக்கொள்கிறதா என்பதையும் கண்டறிந்து அதன் பின்னரே மருத்துவம் செய்ய வேண்டும் எனும் விவரணத்தை அதிலிருந்து பெறலாம். அந்த வகையில் அது ஒவ்வாமை எனும் நோய் குறித்த முன்னறிவிப்பாக இருக்கிறது.

குறளையும் குரானையும் இலக்கிய நயத்தில் எப்படி ஒப்பிட்டுப்பார்த்தார் என்பதை நண்பர் குறிப்பிடவே இல்லை. வெறுமனே அட்ரஸ் இல்லாமல் போய்விடும் என்கிறார். எப்படி என்பதையும் விவரிப்பார் என எதிர்பார்க்கிறேன். இலக்கிய நயம் மட்டுமல்ல இலக்கணக் கட்டும் கொண்டது குறள். அதன் யாப்பை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் 1330 குறட்பாக்களில் எந்த ஒரு குறளும் தளைதட்டாது. அதன் எல்லாக் குறளும் முச்சீர் ஈறாக எழுசீர் விருத்தமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் குரானில் இருக்கும் இலக்கிய, இலக்கண நயங்களில் ஒன்றிரண்டை நண்பர் எடுத்துவிட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

ஒரு உயர்ந்த இலக்கியப் படைப்பாக இருக்க வேண்டுமென்றால் மிகையான உவமைகளும், உருவகங்களும், பொய்களும், புனைவுகளும் இருக்க வேண்டும் என்கிறார். ஆம் உலக இலக்கியங்களில் இவை இடம்பெற்றிருக்கிறன. அதேநேரம் குரானிலும் இவை இடம்பெற்றிருக்கின்றன. உவமைகள் இருக்கின்றன, உருவகங்கள் மிகைப்படுத்தல்கள் இருக்கின்றன. பொய்கள் இருக்கின்றன. நாங்கள் நம்புகிறோம் அதனால் அத்தனையும் சரி, நாங்கள் நம்பாததால் அத்தனையும் பழுது என்பது சரியான ஒப்பீடல்லவே.

உயர்ந்த தரமுள்ள படைப்புகள் பாமர மக்களை விட்டு விலகும், ஆனால் குரான் அப்படியல்லாமல் உயர்ந்த தரமாகவும், பாமர மக்களுக்கு அணுக்கமாகவும் இருக்கிறது என்கிறார் நண்பர். ஒருவருக்கு ஒன்று எளிமையாய் இருப்பதும் கடினமாய் தெரிவதும் அதில் அவர் காட்டும் ஈடுபாட்டிலேயே இருக்கிறது. குறளில் எளிமையானவையும் இருக்கின்றன, கடினமானவையும் இருக்கின்றன. இது எல்லா இலக்கியங்களுக்கும் பொதுவானது தான், குரானும் இதற்கு விலகில்லை. அரபு தெரிந்த ஆனால் குரான் குறித்து அறிமுகமில்லாத ஒருவரிடம் குரானை வாசித்துக்காட்டி பொருள் கூறச்சொன்னால் அது அவருக்கு கடினமானதாகத்தான் இருக்கும். ஏன் அரபு தெரிந்த முஸ்லீம்களுக்கு கூட விரிவுரைகள் இல்லாமல் குரானை விளங்கிக் கொள்வது கடினம் தான். அவ்வளவு ஏன்? முகம்மது குரானை கூறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் கூட மக்களுக்கு புரியாத இடங்களில் விளக்கம் கேட்டிருக்கிறார்கள், முகம்மதுவும் விளக்கியிருக்கிறார், அது ஹதீஸ்களாக பதிவு செய்யப்பட்டும் இருக்கிறது. மட்டுமல்லாது முஸ்லீம்கள் எல்லோருக்கும் குரானும் அதன் கருத்துகளும் பரவலாக்கம் செய்யப்பட்டிருப்பதுபோல், தமிழர்கள் அனைவருக்கும், குறளும் அதன் கருத்துகளும் பரவலாக்கம் செய்யப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவைகளையெல்லாம் தெரிந்து கொண்டே பாமரர்களுக்கு புரியும்படி இருக்கும் இலக்கியம் குரான் என்பது பரிசீலனையற்ற உயர்வுந‌விற்சியாக மட்டுமே இருக்க முடியும்.

ஆக எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் குறள் எல்லா விதத்திலும் ஒரு குரான் வசனத்திற்கு ஈடானதே. குரானுக்கு எதுவும் ஈடாக முடியாது என்பது எங்கள் நம்பிக்கை என்று நண்பர் கூறினால் அதை யாரும் மறுக்கப்போவதில்லை. எல்லா நம்பிக்கைகளும் சரியானதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், அதுதான் உண்மை என்றால் தகுந்த காரணங்கள் வேண்டும். மாறாக நம்பிக்கையையே உண்மைதான் என்று கூறிக்கொண்டிருந்தால் அதற்கு வேறு பெயர்தான் சூட்ட வேண்டும்.

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


63 thoughts on “செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫

  1. //குறளிலும் அறிவியலுக்கு எதிரான கருத்துகள், ஆணாதிக்கச் சிந்தனைகள் இருக்கின்றன. அதேபோல் குரானிலும் அறிவியலுக்கு எதிரான கருத்துகள், ஆணாதிக்கச் சிந்தனைகள் இருக்கின்றன.//

    அந்தந்த காலக்கட்டத்தில் வாழும் மக்களின் நம்பிக்கை சிந்தனைகள் அந்தக் காலக்கட்ட நூல்களில் இடம்பெறுவது இயல்பு… நல்லதை எடுத்துக் கொண்டு தீயதை விலக்குவதே மனித வளார்ச்சிக்கு நன்று …

    நல்லதொரு பதிவு

  2. மொழிபெயயர்பு சித்து வேலைகள்

    கலிமா
    La ilaha ilallah
    லா இலாஹா இல்லல்லாஹு
    இதன் பொருளாக கூறப்படுவது என்ன?

    வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை

    ===============

    நாம் இந்த மொழிபெயர்ப்பு சரியா என்று ஆய்வு செய்வோம்.

    .லா=Lā =“no”=இல்லை

    இலாஹா=Ilāh إله = “God”.”=இறைவன்

    இல்=Illā =except”=தவிர

    அல்லாஹ்=Allāh = the “God”.=அந்த இறைவன்
    ======================
    1.]
    ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்த்தால் இப்படி வருகிறது.

    Threre is no god but the god

    தமிழில்

    அந்த இறைவனை தவிர வேறு இறைவன் இல்லை.
    =====================================

    2.]இல்லை இறைவனுக்குப் பதிலாக அல்லா/இலாஹ் பயன் படுத்தலாம்.

    ஆங்கிலத்தில்

    Threre is no Ilāh but Allāh

    தமிழில்

    அல்லாவை தவிர வேறு இலாஹ் இல்லை.

    ==========================

    3]ஆனால் மதவாத மொழிபெயர்ப்பாளர்கள் செய்தது என்ன‌?

    ஆங்கிலத்தில்

    Threre is no god but Allāh

    தமிழில்

    வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை
    =================

    இலாஹ்,அல்லாஹ் அரபியில் கடவுளை குறிப்பன.ஆங்கிலத்தில் இலாஹிற்கு பதில்ச்ச்க என்றும் அல்லாவை அப்படியே பயபடுத்துவது ஏன்?

    தமிழில் வணக்கத்துக்குறிய்ச என்று இல்லாத வார்த்தை ,இலாஹிற்கு பதிலாக வேறெருவனுமில்லை என்ற்ம் கூறுவதும் ஏன்?

    ===================

    மிகவும் எளிதான காரணம்
    அல்லாஹ் என்ற வார்த்தையை உயர்வாகவும் இலாஹ் என்ற வார்த்தையை தாழ்வாகவும் காட்டும் நோக்க்மே.

  3. கடவுளில்லை அக்கடவுளைத்தவிர‌

    சித்தாந்திகள் மற்றும் வேதாந்திகள் கூறும் மாயக் கடவுள் இல்லை

    குரானியவாதி கூறும்அக்கடவுளைத்தவிர‌

    quranist@aol.com

  4. இலாஹ்=சித்தாந்திகள் மற்றும் வேதாந்திகள் கூறும் மாயக் கடவுள்

    அல்லாஹ் =குரானியவாதி கூறும்அக்கடவுள்

    Prove it from quran

  5. sankar,அல்லாஹ் என்ற சொல் போன்றுதான் இலாஹ் வும் .சொல் வழக்கில் “அல்லாஹ் ” முதன்மை பெற்றுக்கிறது.நீங்கள் புரட்டி புரட்டி ஆய்வு செய்ய அதில் ஒன்றுமில்லை. இறைவன் ,கடவுள் ,ஆண்டவன் இந்த மூன்று சொற்களிலும் இறைவன் என்ற சொல் தமிழ் முஸ்லிம்களிடம் அதிக வழக்கில் உள்ளது ஹிந்துக்களிடம் கடவுள் என்ற சொல் வழக்கில் உள்ளது.

  6. (கடவுளில்லை*அக்கடவுளைத்தவிர**

    *மார்க்ஸிய/கம்யூனிஸ/சித்தாந்திகள் கூறும் போலி/கற்பனை/மாயக் கடவுள் இல்லை.

    *இபுராஹிம் போன்ற

    மதவாதிகள்/வேதாந்திகள் கூறும் போலி/கற்பனை/மாயக் கடவுள் இல்லை.

    **குரானியவாதி கூறும்அக்கடவுளைத்தவிர‌

    அக்கடவுள் is the One who gave everything its creation, then guided.

    quranist@aol.com

  7. நண்பர் இப்ராஹிம்,
    நீங்கள் சொவதை அறிவேன் நன்பர் குரானியவாதி சொல்வதை கேட்கலாம்.
    //*இபுராஹிம் போன்ற
    மதவாதிகள்/வேதாந்திகள் கூறும் போலி/கற்பனை/மாயக் கடவுள் இல்லை.
    **குரானியவாதி கூறும்அக்கடவுளைத்தவிர//

    யாரந்த உண்மையான குரானியவாதி கூறும் அக்கடவுள்?

    எப்படி தெரிந்து கொண்டீர்கள்?.கொஞ்சம் விளக்குங்கள்.

  8. Question:

    யாரந்த உண்மையான குர்ஆன் கூறும் கடவுள்?

    Answer:

    Select the words “No GOD” and ” GOD” from Qur’an.

    Study all selected verses with sincerity.

    “கடவுளே இல்லை அப்படி ஒரு கடவுளைத்தவிர”

    quranist@aol.com

  9. 1.கடவுளே இல்லை அக்கடவுளைத்தவிர.

    2.மத/மன‌மாற்ற மேடை நிகழ்வு/உறுதிமொழி இல்லை.

    3.உயிர்/ஆன்மா/விதி/அதிர்ஷ்டம்/மாயப்பேய் பிசாசு/ஆவி/மறுஜென்மக் கோட்பாடில்லை.

    4.கல்/மண்/மரச்சிலை/பட/சிருஷ்டி/சிர‌வணக்க வழிபாடு/தொழுகை/பூஜை புனஸ்காரம்/உக்கி/குனிய/பணிய/சாஸ்டாங்கமுமில்லை.

    5.வேதமந்திர/தஸ்பீஹ்/ஸ்தோத்திர முனுமுனுப்பு/நீட்டிப்பு முழக்கமில்லை.

    6.வேதப்பாராயணம்/சங்கீத/ஞானஸ்நானம்/மௌளூஆத்/யாக/வேள்வித்தீயில்லை.

    7.புனிதப்பயணம்/யாத்திரை/கற்சிலை/கட்டிட வலம்வருதலுமில்லை.

    quranist@aol.com

  10. நன்பர் குரானியவாதி
    நீங்கள் சொல்கிற மாதிரி ஏதாவது மதம் இருக்கிறதா?

  11. செங்கொடி ////அடிமை ஒருவனை சுதந்திரமான ஒருவன் கொலை செய்தால் அதற்குப்பகரமாக கொலை செய்த சுதந்திரமானவனின் அடிமை ஒருவன் என்று மறைமுகமாகவும் பொருள் வருகிறது/////
    இப்படி பொருள் இருப்பதுபோல் வலிந்து முரண்பாடு இருப்பதாக காட்டிட கடும் முயற்சி செய்து உள்ளீர்கள் .மற்ற நூல்களுக்கும் குர் ஆணுக்கும் வித்தியாசத்தை உணராமல் எழுதி வருகிறேர்கள் .மற்ற இலக்கிய மொழியாக்கங்களை இலக்கியவாதிகளும் ,சட்ட நூல்களின் மொழியாக்கங்களை அத்துறையினரும், மட்டுமே படிப்பதால் அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்,மேலும் அவற்றில் அவர்கள் தவறாக புரிந்து கண்டாலும் அது ஒரு பொருட்டல்ல என்ற நிலைதான் அங்கு உள்ளது. ஆனால் குர்ஆன் பாமரனும் விளங்கும் வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.தவறாக விளங்கிடாதா வண்ணம் அடைப்புக்குறி அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.குற்றம் பிடிப்பதற்கும் அளவில்லாமல் போய்விட்டது. யாருடைய பாராட்டுதலுக்காக இப்படியெல்லாம் கஷ்டப்படுகிரீர்களோ !

  12. சங்கர் ,அப்படியெல்லாம் அல்ல குரானியவாதி என்றால் குறையான வாதி ,அரைகுரையானவாதி.பல விவாதங்களில் விரட்டியடிக்கப்பட்ட காசுக்காக மதத்தை வளைத்துக் கொள்ள நினைக்கும் இஸ்லாத்தை கூறுபோட வந்த வாதிகள்

  13. * This page abrogates my previous page*

    1.கடவுளே இல்லை அக்கடவுளைத்தவிர.

    2.கடவுள் வாழ்த்து/பாசுரம்/பாமாலை/ஆலய வழிபாடு/கிழமை/திசை/ஃபாத்திஹா/மத/மன‌மாற்ற/பிரச்சார மேடை நிகழ்வு/பிராத்தனை/உறுதிமொழி இல்லை.

    3.துறவு/காம பேத‌/பலதார/பக்தி/முக்தி/உயிர்/ஆன்மா/விதி/அதிர்ஷ்டம்/கதி மோட்சம்/பிறவி/கர்மப்பலன்/பூத/மாயப்பேய் பிசாசு/ஆவி/கூடுவிட்டு தாவும்/பில்லி/சூனியம்/மாந்திரீகம்/மலர் மாலை சூடுதல்/நினைவு நாள்/மறுஜென்மக் கோட்பாடில்லை.

    4.கல்/மண்/மர/சிலை/பட/சிருஷ்டி/மண்டியிடுதல்/முகங்குப்புர விழுதல்/சிர‌வணக்கம்/விசிலடித்தை/கைதட்டு/கூத்து/கும்மாள‌/உருவ/அருவ/சூன்யம்/வானவர்/தேவர்/தேவதை/தெய்வ‌ வழிபாடு/தொழுகை/பூஜை புனஸ்காரம்/உக்கி/குனிய/பணிய/சாஸ்டாங்கமுமில்லை.

    5.வேதமந்திர/தஸ்பீஹ்/ஸ்தோத்திர முனுமுனுப்பு/நீட்டிப்பு முழக்கமில்லை.

    6.வேதப்பாராயணம்/சங்கீத/ஞானஸ்நானம்/மௌளூஆத்/யாக/வேள்வித்தீயில்லை.

    7.புனிதப்பயணம்/ஸ்தல யாத்திரை/கற்சிலை/கட்டிட/முத்தமிடும் வழிபாடு வலம்வருதலுமில்லை.

    8.வதம்/போர்/கொலை/கொள்ளை/சுரண்டல்/வன்முறை/புரட்சி/முற்றுகை/போராட்டம்/சாலை மறியல்/உபவாசம்/வனவாசம்/சைக்கிள் பேரணி/ரத்த/கண்/ஆம்புலன்ஸ்/பூமி/பொருள் தான பம்மாத்து நாடகம் அரங்கேறுவதில்லை.

    9.போலி விஞ்ஞானம்/மெய்ஞ்ஞானம்/வேதம்/இதிகாஸம்/புராணப்புளுகு/புத்தக/வித்தக/நாடக/நாட்டிய/ஜாலமுமில்லை.

    10.இன/சாதி/மத/மொழி/வர்க்க/வர்ண/பிராந்திய/தேச வேறுபாடும் ஆன்மீகம் அரசியல் என இரட்டை நிலையில்லை.

    quranist@aol.com

  14. //காசுக்காக மதத்தை வளைத்துக் கொள்ள நினைக்கும் இஸ்லாத்தை கூறுபோட வந்த வாதிகள்//

    நீங்க பணத்தைக்கொடுத்து மதி குறையான வாதியை மீட்டு

    நிறைவாதியாக மதமாற்றம் செய்யவும்.

  15. அடைப்புக்குறி எதற்கு பயன் படுத்தப் படுகிறது?

    மதவாதிகள் தாங்கள் விரும்பும் கருத்தை விளக்கமாக அளிக்க‌

    எடுத்துக்காட்டு.
    _______________

    2. 259 அல்லது, சிதைந்து அழிந்துபோன ஒரு சிற்றூரைக் கடந்து சென்ற(உஜைர் என்ப)வரைப் பற்றி (நபியே!) உமக்குத் தெரியுமா? அவர், “இவ்வூர் அழிந்து போய்க் கிடக்கின்றதே! இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) நின்றார். அல்லாஹ் அவரை நூறாண்டுகள்வரை இறந்து கிடக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்பெற்றெழச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரிடம் வினவினான். அதற்கவர், “ஒரு நாளோ ஒரு நாளின் சிறு பகுதியோ” என்று விடையளித்தார். “இல்லை; நீர் நூறாண்டுகள் உயிரற்றுக் கிடந்தீர். இதோ பாரும் உம்முடைய உணவையும் குடிப்பையும். அவை எவ்வித மாறுதலையும் அடையவில்லை. ஆனால், உம்முடைய கழுதையின் நிலை என்னவென்று கவனித்தீரா? மனிதர்களுக்கு ஒரு சான்றாகக் காட்டும் பொருட்டு (உம்மை இவ்வாறு இறப்புநிலையில் வைத்து மீண்டும் எழச்செய்தோம்). (உமது கழுதையின்) எலும்புகளை உற்றுப் பார்த்துக் கொண்டிரும். அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் எவ்வாறு சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி அல்லாஹ் அதனை உயிர் பெற்றெழச் செய்தான். அவருக்கு(அல்லாஹ்வின் ஆற்றல் கண்கூடாக)த் தெளிவான போது, “திண்ணமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆதிக்கப் பேராற்றலுடையவன் என்பதை நான் நேரடியாகக் கண்டறிந்து கொண்டேன்” என்றார்.

    _____________

    யார் இறந்து நூறாண்டுகளுக்கு பிறகு உயிர்த்த மனிதர்? என்று பல குரான்களில் இவ்வசனத்தை பார்த்தேன். இந்த தளத்தில் இருந்த குரானில் உஜைர் என்று வழக்கம் போல் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட பட்டு இருந்தது.

    http://sites.google.com/site/tamilquraan2/chapter002ver201-286

    பி ஜே அவர்களின் மொழி பெயர்ப்பிலும் பெயர் குறிப்பிடபடவில்லை.
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍சரி கேள்விக்கு வருகிறேன்.

    1.குரானில் குறிப்பிடப்படும் பல விஷயங்கள் யார் எங்கே ,எப்போது என்று அறுதியிட்டு கூறவே முடியாது போல இதையும் இவர் யார் என்று தெரியாது என்று விட்டு விடலமா? இல்லை உஜைர் என்று எப்ப்டி சொல்கிறார்கள் என்று கூற முடியுமா?
    2.முந்திய வசனமும்(257),பிந்திய வசனமும்(260) திரு இப்ராஹிமை குறிக்கின்றது.இடயில் உள்ள வசனம் யாரைகுறிக்க முடியும்?.

    3.இதே மாதிரி குரான் 17.1 ல் இறைவனின் அடியார் என்பது முகமது என்று எப்படி கூற முடியும்?

    17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

    4.முகமதுவின் பெயர் குரானில் 4 இடங்களில் மட்டுமே வருகிறது..மற்ற இடங்களில் எல்லாம் அடைப்புக் குறியினூடே வ்ருகிறது.ஆகவே அவையெல்லாம முகமதுக்காகவே சொல்லப்பட்டது என்று உறுதியாக கூற முடியுமா?
    _______

  16. 2:178. O you who believe, equivalent execution in warfare has been decreed for you in the case of mass killings; the independent for the independent, and the dependent for the dependent, and the female for the female. Whoever is forgiven anything by his brother, then it is to be followed with good deeds and kindness towards him; that is an alleviation from your Lord, and a mercy. Whoever transgresses after that, he will have a painful retribution.

    quranist@aol.com

  17. 948
    ————————————————————————–

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.
    ————————————————————————–
    அப்படியே அரபியில் மொழிமாற்றம் செய்யவும்.

    —————————————————————————

    quranist@aol.com

  18. /அப்படியே அரபியில் மொழிமாற்றம் செய்யவும்./
    குறள் 948:
    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.
    _____________
    கலைஞர் உரை:
    நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
    ____________________
    மு.வ உரை:
    நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
    _________________
    சாலமன் பாப்பையா உரை:
    நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
    ____________________

    Translation:
    Disease, its cause, what may abate the ill:
    Let leech examine these, then use his skill.
    ________________
    Explanation:
    Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).
    ________________________
    English to Arabic translation(google translation0

    المرض ، وقضيته، ما قد تخفف من حدة سوء :
    واسمحوا علقة دراسة هذه، ثم استخدم مهارته.

  19. இப்போது மொழி மாற்ரம் செய்வது எளிது.அதே மொழி (ஏ)மாற்று
    வேலைகளையும் மிக எளிதாக கண்டறிய முடியும்.

    மேற்கூறிய திருக்குறள் மொழி பெயர்ப்பில் எங்காவது அடைப்புக் குறி வந்துள்ளதா?

    வேறு எந்த புத்தகத்திலும் இல்லாத அளவிற்கு அடைப்புக் குறி இடுவதின் காரணம் என்ன?

    ஃபைனல் டெஸ்டமன்டிலேயே ஒரு ஏடுத்துக்காட்டு தருகிறேன்

    [13:30] We have sent you (O Rashad)* to this community, just as we did for other communities in the past. You shall recite to them what we reveal to you, for they have disbelieved in the Most Gracious. Say, “He is my Lord. There is no god except He. I put my trust in Him alone; to Him is my ultimate destiny.”

    *13:30 If we add the gematrical value of “Rashad” (505), plus the value of “Khalifa” (725), plus the sura number (13), plus the verse number (30), we get 505+725+13+30 = 1273 = 19×67. God thus specifies the name of His messenger (see Appendix 2 for the details).

    ஃபைனல் டெஸ்டமன்ட் வேண்டுபவர்கள் இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    http://www.scribd.com/doc/14305280/Quran-The-Final-Testament

    ____________________

    13:30. (நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது” என்று நீர் கூறுவீராக!
    _________________

    திரு ரஷாத் கலிஃபா தன் பெயரை அடைப்புக் குறிக்குள் போட்டு விட்டார் .பிற மொழி பெயர்ப்புகள் அது முகமது என்றே விளக்கம் அளிக்கப் படுகின்றன.

    நாம் சொல்ல வருவது என்னவென்றால் குரானில் யாரென்று தெளிவாக குறிப்பிடதாத பல வசனங்கள் உண்டு.அது மத வாதிகளால் பல விதமாக உபயோகிக்கப் படுகிறது.
    ____________

  20. quranist, on மார்ச்24, 2011 at 7:16 மாலை said:

    Repeat
    ————————————————————–

    Code 19 என்ற எந்த‌க்கடவுளும் இல்லை.
    —————————————————————

    quranist@aol.com

  21. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.
    ———————————————————————

    English to Arabic translation(google translation)

    المرض ، وقضيته، ما قد تخفف من حدة سوء :
    واسمحوا علقة دراسة هذه، ثم استخدم مهارته.

    ————————————————————-
    Translate the above to Kufic text/script.
    ————————————————————-

    quranist@aol.com

  22. /Translate the above to Kufic text/script/..

    குயுஃபிக் எழுத்து முறை என்றால் என்ன?

  23. குயுஃபிக் எழுத்து முறை என்றால் என்ன?
    —————————————————————-
    இணைய தள/களத்தில் நூல்களுக்கு முன்னும் சர்வாகன் என்ற பெயருக்குப்பின்னும் செங்கொடியின் நகலாகவும் மதங்களை மதம் கொண்டு கசக்கி காயாப்போடும் சங்கராகவும் அறிவுப்புரட்சி நடத்திவரும் நபருக்கு திருக்குறளை திருக்குரானாகத் திரிக்க முடியாது போய்விட்டதோ ?

    quranist@aol.com

  24. /திருக்குறளை திருக்குரானாகத் திரிக்க முடியாது போய்விட்டதோ ?/
    நான் அதற்கு முயற்சிக்கவில்லை. ஆங்கிலத்தில் இருந்து அரபிக்கோ,அரபியில் இருந்து ஆங்கிலத்திற்கோ மொழி மாற்றம் எவரும் செய்யலாம் என்பதை விளக்கினேன்.
    அரபிபுலமை உள்ளவர் மட்டுமே குரானை ஆய்வு செய்யமுடியும் என்பதையும் தவறு என்று கூறும் ஒரு முயற்சி.

    மற்றபடி ஒன்றும் இல்லை.

  25. sankar///குரானில் குறிப்பிடப்படும் பல விஷயங்கள் யார் எங்கே ,எப்போது என்று அறுதியிட்டு கூறவே முடியாது போல இதையும் இவர் யார் என்று தெரியாது என்று விட்டு விடலமா? இல்லை உஜைர் என்று எப்ப்டி சொல்கிறார்கள் என்று கூற முடியுமா?////
    இப்ராகிம் நபியிடம் வாதம் புரிபவருக்கு ,இறைவன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான் என்ற வாதத்திற்காக 2 ;258 வசனம் அதுபோன்ற உயிர்ப்பித்தல் சம்பவங்களை தொகுக்கிறது.இதில் கூறப்படும் சம்பவமே முக்கியமே தவிர யார் ?என்பது முக்கியமன்று,அவ்விடத்தில் சம்பவம் மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர அவசனத்தில் கூறப்பாடதவை தேவையற்றவை. குரான் வரலாற்று ஆய்வு நூல் அல்ல.யார் என்பதல்ல என்ன செயல் அதன் மூலம் மக்களுக்கு அறியவேண்டியவை என்ன ?என்பதே முக்கியம் .இறைவனுக்கு இறந்தவர்களை உயிர்பிக்க செய்ய முடியும் என்பதை நம்பவேண்டும் என்பதே கருத்து.இருந்தாலும் வர யாராக இருக்கும் என்பதை த்ப்சிர் இப்னு கதிர் என்ற குரான் தப்சீரில் பக்கம் 692 இல் விளக்கம் உள்ளது . பீ.ஜே மற்றும் இப்னுகதிர் மொழியாக்கங்களில் உஜைர் என்ற அடைப்புக்குறி இல்லை .மற்ற மொழியாகங்களில் இருந்தாலும் யார் என்பது குர்ஆனில் இல்லை ஆனால் தப்சீர் மஞ்சித் போன்ற நூல்கள் மூலம் கிடைத்த ஆதாரத்தை வைத்து மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் கூடுதல் தகவலாக அடைப்புக்குறி பயன்படுத்தப் பட்டுள்ளது இந்த அடைப்புக்குறிக்கு எப்படியெல்லாம் உள்நோக்கம் கற்பிக்கலாம் என்பதர்க் கெல்லாம் ஒரு ஆய்வு தேவையா?
    ////3.இதே மாதிரி குரான் 17.1 ல் இறைவனின் அடியார் என்பது முகமது என்று எப்படி கூற முடியும்?////
    செங்கொடியின் நகலாகவும் மதங்களை மதம் கொண்டு கசக்கி காயப்போடுபவராகவும் ,தேவைக்கான லின்க்கை உடன் எடுத்து தருபவராகவும் உள்ள ஒருவர் என்று இத்தளத்தில் குறிப்பிடப்பட்டால் அது சங்கர்தான் என்று கூற முடியுமோ அப்படித்தான் குர்ஆனை வாசிக்கும்போது அந்த அடியார் முகம்மதுதான் என்பதை எளிதாக அறிந்து கொள்ளமுடியும் .
    ////4.முகமதுவின் பெயர் குரானில் 4 இடங்களில் மட்டுமே வருகிறது..மற்ற இடங்களில் எல்லாம் அடைப்புக் குறியினூடே வ்ருகிறது.ஆகவே அவையெல்லாம முகமதுக்காகவே சொல்லப்பட்டது என்று உறுதியாக கூற முடியுமா?////
    குர்ஆனின் சவாலுக்கு பதில் என்று பொதுவாகத்தான் செங்கொடி ஆரம்பித்துள்ளார் இது யாருக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

  26. குர்ஆனுக்கு “எண்ணிக்கை”யிட்டதன் விளைவு

    19 என்ற எண் கணிதக்கோட்பாடு.

    குர்ஆன் “உச்சரிப்பு”க்காக புள்ளி/கோடிட்டது

    கருத்துப்பெயர்ப்பு/திரிப்பு.

    quranist@aol.com

  27. சங்கர் ////அரபிபுலமை உள்ளவர் மட்டுமே குரானை ஆய்வு செய்யமுடியும் என்பதையும் தவறு என்று கூறும் ஒரு முயற்சி.
    மற்றபடி ஒன்றும் இல்லை.///
    கலைஞர் ,மு.வ .சாலமன் பாப்பையா இந்த மூவர்களும் தமிழில் புலமை இல்லாமல் தான் ஆய்வு செய்தார்களா?
    ////மேற்கூறிய திருக்குறள் மொழி பெயர்ப்பில் எங்காவது அடைப்புக் குறி வந்துள்ளதா?///

    ,திருக்குறளை எத்தனை பேர் வேத நூலாக கொண்டுள்ளனர் ? அதை வாழ்க்கை நெறியாக பின்பற்றுவது யார்? கலைஞர் கூட தனது புலமையையும் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லும்போது வசதி கேற்றவாறு பயன்படுத்திக்கொள்வார்.பள்ளியில் கேள்விகளுக்கு பதில் எழுதி மதிப்பெண்கள் பெறுவதற்கும் மேடை பேச்சு அலங்காரத்திற்கும் ஒழிய அதை வாசித்து பொருள் உணரவேண்டும் அதன் அடிப்படையில் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தமிழர்களில் எத்தனை பேர் உள்ளனர்.?
    குர்ஆன நிலையம் திருக்குறள் நிலையும் ஒரே நிலையா?குரானை போல் எந்த நூலும் இல்லை .குரானைப்போல் எந்த நூலும் தினசரி பல கோடி மக்களால் பலதடவைகள் வாசிக்கப்படுவதில்லை.மேற்கோள் காட்டப்படுவதில்லை விவாதிக்கப் படுவதில்லை.ஆதலின் சாதாரண மக்களும் புரிதலின் பொருட்டு அதிகமான அடைப்புக்குறிக்குள் விளக்கம் தேவைபடுகிறது .பல விளக்கங்களும் ஆதாரத்துடனே கூறப்பட்டுள்ளது.அல்லாவின் கயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள் என்பதை சிலர் புரிதல் இல்லாமல் ஒற்றுமை எனும் கயிறு என்று ஒற்றுமையை அடைப்புக்குள் கொண்டுவந்தது போன்று சில தவறுகள் திருத்தப் பட்டுள்ளன.

  28.  ”அல்லாவின் கயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்”
    ——————————————————————————————————–
    3:103. And hold strong the link of God, all of you, and do not be separated.
    ——————————————————————————————————–

    quranist@aol.com

  29. //இப்ராகிம் நபியிடம் வாதம் புரிபவருக்கு ,இறைவன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான் என்ற வாதத்திற்காக 2 ;258 வசனம் அதுபோன்ற உயிர்ப்பித்தல் சம்பவங்களை தொகுக்கிறது.இதில் கூறப்படும் சம்பவமே முக்கியமே தவிர யார் ?என்பது முக்கியமன்று,அவ்விடத்தில் சம்பவம் மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர அவசனத்தில் கூறப்பாடதவை தேவையற்றவை. குரான் வரலாற்று ஆய்வு நூல் அல்ல.யார் என்பதல்ல என்ன செயல் அதன் மூலம் மக்களுக்கு அறியவேண்டியவை என்ன ?என்பதே முக்கியம் .//

    இந்த விளக்கம் இஸ்லமிய ஆன்மீகவாதிகளுக்குப் மட்டும் போதுமானது.

    ஆனால் இறை மறுப்பாளர்கள் குரான் இறை வார்த்தையா என்று ஆய்வு செய்பவர்கள். ஆகவே குரானில் குறிப்பிடப்படும் ஒவ்வொருவரும்,செயலும் உண்மையாக நடந்திருக்குமா என்றே விவாதித்து வருகிறோம்.

    ச‌ரி இந்த குரான் 2.259 உஜைர்(465-424 BCE) என்று இபின் கதிர் (1301–1373) என்றவர் அளிக்கும் விளக்கத்தை வைத்தே கூறப்படுகிறது.அவரி விளக்கத்தை பார்க்கலாம்.

    Ibn Abi Hatim recorded that `Ali bin Abi Talib said that the Ayah ﴿2:259﴾ meant `Uzayr. Ibn Jarir also reported it, and this explanation was also reported by Ibn Jarir and Ibn Abi Hatim from Ibn `Abbas, Al-Hasan, Qatadah, As-Suddi and Sulayman bin Buraydah.

    Mujahid bin Jabr said that the Ayah refers to a man from the Children of Israel, and the village was Jerusalem, after Nebuchadnezzar destroyed it and killed its people.

    அவர் முகமதுவின் உறவினரான இபின் அப்பாஸ் உட்பட சிலர் கூறுவதாலேயே கூறுகிறேன் என்றே கூறுகிறார்.திரு இப்ராஹிமுடன் விவாதித்த மன்னன் நிம்ரோத்,அந்த கிராமம் ஜெருசலேம் இது அரசன் நெபுகாத்நேச்சார்(b.c 634 – 562 ) பாலஸ்தீனத்தை(இஸ்ரேல்) அழித்து சென்ற பின் நடைபெறுவதாக விளக்கப் படுகிறது.
    இந்த விவரங்கள் சரியா என்பது பற்றி இன்னும் ஆய்வோம்.

    இந்த நிம்ரோத் என்பவர் பைபிளின் படி திரு நூஹ்(நோவா)ன் கொள்ளுப்பேரன் ஆகவே காலம் நிச்சயம் கி.மு 5000 க்கு முன்னால்.திரு ஆபிரகாம் சுமார் கி.மு 2000ல் வாழ்ந்ததாக கூறப்படுபவர். திரு உஜைர் (காலம் 465-424 BC).

    அதாவதி கி.மு 5000ல் வாழ்ந்த மன்னனுடன் கி.மு 2000ல் வாழ்ந்த திரு இப்ராஹிம் பேசினார். அவருக்கு கி.மு 500ல் வாழ்ந்த உஜைரின் கதை முன்பு நடந்ததாக கூறபடுகிறது.

    இப்ராஹிமிற்கு பின்தான் யூத இனமே தோன்றுகிறது. இந்த உஜைர் (எஸ்ரா)யூதர்களின் விடுதலைக்காக போராடியவர். ஒரு விவரம் கூட சரியில்லையே…

    .

  30. //திருக்குறளை எத்தனை பேர் வேத நூலாக கொண்டுள்ளனர் ? அதை வாழ்க்கை நெறியாக பின்பற்றுவது யார்? கலைஞர் கூட தனது புலமையையும் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லும்போது வசதி கேற்றவாறு பயன்படுத்திக்கொள்வார்.பள்ளியில் கேள்விகளுக்கு பதில் எழுதி மதிப்பெண்கள் பெறுவதற்கும் மேடை பேச்சு அலங்காரத்திற்கும் ஒழிய அதை வாசித்து பொருள் உணரவேண்டும் //
    திருக்குறளை தன்னிஷ்டத்திற்கு பயன் படுத்தினால் கலைஞரைத்தான் விமர்சிப்பார்கள்,அது போலவே மதவாதிகளும் திருக்குரானை தங்கள் அரசியல் சித்தாந்திற்காக பயன்படுத்தும் போது விமர்சிக்கப் படும்.

    திருக்குறளால் இது வரை யாராவது உடல் உறுப்பு,உயிர் இழந்து உள்ளார்களா?

    திருவள்ளுவரையும்,திருக்குறளையும் விமர்சித்தவர்கள்(எ.கா பெரியார்) உண்டு.அதற்காக யாரும் அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்று கூறவில்லை.

    /அதன் அடிப்படையில் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தமிழர்களில் எத்தனை பேர் உள்ளனர்.?/

    குரான்,இஸ்லாம் விமர்சிக்க படுவது அதுவே இறுதி உண்மையான நெறி(மத வாதிகளின் கூற்று) ,பிற மதத்தினரின் சதி என்பது தவறு.இஸ்லமை ஆன்மீக கொள்கையாக கொண்டு மறணத்திற்கு பின் அழிவற்ற வாழ்க்கையும், எல்லையற்ற பேரின்பமும் அடைய விரும்பினால் யாருக்கும் ஆட்சேபனை இல்லை..

    இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் சந்தேகத்திற்கு உள்ளாக்கியது.

    இஸ்லாமிய அரசின் கீழ் வாழு பிற ம‌தத்தவர்,இறை மறுப்பாளர்கள் ஏன் ஷாரியா சட்டங்களை பின்பற்ற வேண்டும்?அப்படித்தான் இருக்க வேன்டும் என்றால் இஸ்லாமின் வழியில் பிற மதத்தினரும் செல்வதற்கு
    மிக அதிகமான வாய்ப்பு இருக்கிறது.ஏற்கெனவே இந்துத்வா கொள்கையாளர்கள் ஆரம்பித்து விட்டனர்.

  31. //அல்லாவின் கயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள் என்பதை சிலர் புரிதல் இல்லாமல் ஒற்றுமை எனும் கயிறு என்று ஒற்றுமையை அடைப்புக்குள் கொண்டுவந்தது போன்று சில தவறுகள் திருத்தப் பட்டுள்ளன.//
    ஆன்மீக விஷயங்களில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.
    திருமண‌த்தை இறைவன் போட்ட முடிச்சு என்று கூறுவது வழக்கம்.இறைவன் எந்த கயிறைக் கொண்டு முடிச்சு போடுவார். இருவரை இணைக்கும் விவரத்தையே அப்படி கூறப்படுகிறது.

    அது போல்

    Pickthall: 3:103 And hold fast, all of you together, to the cable of Allah, and do not separate.

    சரியாக,எளிதாக‌ மொழி பெயர்த்தால்

    கடவுளின் தொடர்பை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள்,உங்களுக்குள் பிரிவினை வேண்டாம்.
    _____________
    முகமதுவிற்கு பின் வந்தவர்கள் குரானை மொழி பெயர்ப்பு,விளக்கங்கள் அளித்து மதம் பரப்புவதை விட நாடு பிடித்து பரப்புவதையே நம்பினர்.அதனாலேயே சரியான மொழி பெயர்ப்புகள் நெடுங்காலமாக வரவில்லை.பல‌ மொழிபெயர்ப்புகளும் இந்த 50_ 100 வருடங்களில் வந்தவையே.

    ஏன் இந்த 1400 வருடங்களாக அனைத்து முஸ்லிம்ளும் ஏற்றுக் கொள்ளும் சரியான மொழிபெயர்ப்பு எந்த மொழியிலுமே வரவில்லை என்பதே நமது கேள்வி.

  32. Question:

    ஏன் இந்த 1400 வருடங்களாக அனைத்து முஸ்லிம்ளும் ஏற்றுக் கொள்ளும் சரியான மொழிபெயர்ப்பு எந்த மொழியிலுமே வரவில்லை என்பதே நமது கேள்வி.
    ————————————————————————————————————–

    Answer:

    ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியர் ஒரே பாடத்தை சுமார் அய்ம்பது மாணவர்களுக்கு நடத்துகிறார்.மாணவர்கள் விளங்கியதை ஒரு வினாத்தாளைக்கொண்டு விடையளிக்குமாறு வினவுகிறார்.மாணவர்கள் அதன் பதிலை அவரவர்களுக்குண்டான பாணியில் அவரவர் விளங்கியவாறு வித‌விதமான வாக்கியங்களுடன் சமர்பிப்பர்.அதில் சரியும் தவறும் இருக்கும்.இது பள்ளியில் படித்தவர்களுக்கு அனுபவப்பூர்வமான பதில்.

    குர்ஆன் எனும் ஒரே பாடம் பல்வேறுபட்ட மனிதர்களால் பற்பல‌கோணங்களில் பல காலங்களில் சரியாகவும்/தவறாகவும் விளங்கப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றது.

    பல பரிமாண‌ங்களில் மொழிபெயர்ப்பு மற்றும் கருத்துத்திரிப்பு எனவும் கிடைக்கபெறுகின்றது.

    புறப்பார்வையில் நீரின் வடிவம் அதன் பாத்திரத்தைப்பொறுத்தே அமையும் எனிலும் அதன் அணுக்கூறு வடிவம் சிதையாமல் அதன் உண்மைத்தன்மையில் நிலைக்கும்.

    உண்மையறியும் உள்ளம் கொண்டவர் மட்டுமே
    உண்மையறிவைப்பெறுவர்.

    quranist@aol.com

  33. //குர்ஆன் எனும் ஒரே பாடம் பல்வேறுபட்ட மனிதர்களால் பற்பல‌கோணங்களில் பல காலங்களில் சரியாகவும்/தவறாகவும் விளங்கப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றது.
    பல பரிமாண‌ங்களில் மொழிபெயர்ப்பு மற்றும் கருத்துத்திரிப்பு எனவும் கிடைக்கபெறுகின்றது.
    புறப்பார்வையில் நீரின் வடிவம் அதன் பாத்திரத்தைப்பொறுத்தே அமையும் எனிலும் அதன் அணுக்கூறு வடிவம் சிதையாமல் அதன் உண்மைத்தன்மையில் நிலைக்கும்.//

    நீங்கள் தமிழ் ஆசிரியரா? உங்கள் உவமைக்கு உருவகம் தருகிறேன்.

    அதாவது

    நீர்=குரான்(உண்மையான விளக்கம்)

    நீரின் வடிவம்=இஸ்லாமிய கொள்கைகள்,சட்ட விதிகள்

    பாத்திரம் =இஸ்லாமிய பிரிவுகள்

    சரியா நண்பர் குரானியவாதி அவர்களே!!!!!!

  34. No GOD n One GOD
    —————————–

    You do not get something from nothing.

    Therefore, a necessary and eternal Being exists.
    —————————————————————————————-

    Some interesting things about the God who created the universe.
    —————————————————————————————–

    He is:

    • Supernatural in nature (as He exists outside of His creation)
    • Incredibly powerful (to have created all that is known)
    • Eternal (self-existent, as He exists outside of time and space)
    • Omnipresent (He created space and is not limited by it)
    • Timeless and changeless (He created time)
    • Immaterial (because He transcends space)
    • Personal (the impersonal can’t create personality)
    • Necessary (as everything else depends on Him)
    • Infinite and singular (as you cannot have two infinites)
    • Diverse yet has unity (as nature exhibits diversity)
    • Intelligent (supremely, to create everything)
    • Purposeful (as He deliberately created everything)
    • Moral (no moral law can exist without a lawgiver)
    • Caring (or no moral laws would have been given)

    Pose your opinion regarding above by referring Qu”ran.

    quranist@aol.com

  35. //You do not get something from nothing.
    Therefore, a necessary and eternal Being exists.//
    நண்பர் குரானியவாதி. ,

    சூன்யத்தில் இருந்து ஒன்றும் வர முடியாது.ஆகவே ஏதாவது ஒரு சக்தி இருந்தாக வேன்டும் என்று கூறுவது சரியா?

    கடவுள் மட்டும் சுயம்புவாக எப்போதும் இருப்பவர்.இதனை எல்லா மதங்களுமே சொல்கின்றன.இறை மறுப்பாளர்களின் விளங்குதலின் படி பூமி உட்பட்ட பிரபஞ்சம் சுமார் 10 பில்லியன் ஆண்டூகளுக்கு முன் தோன்றியது.அறிவியல் கூறும் கருத்துகளை மத புத்தகம் கொண்டு சரி பர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை.
    _________________________

    மத ரீதியான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டது ஆகவே அது என்ன வகையில் மத வாதிகளால் சொல்லப்பட்டாலும் அதனை ஆதரித்து பின் பற்றுவோம் என்பதாலேயே ,மதமும்,கடவுளும்,ம்த புத்தகங்களும் இங்கே விமர்சிக்கப் படுகிறது.

    மத புத்தகத்தில் கூறப்பட்ட விஷயங்கள் சரியாக இருக்க முடியுமா என்று விவாதிக்கப் படுகிறது.இங்கு யாரும் கடவுளை தேடிக்கொண்டு இருக்கவில்லை

    மதரீதியான அரசியல் கொள்கைகள் மனித உரிமை மீறலாக இருப்பதாலேயே விமர்சிக்கிறோம்.

    பாகிஸ்தானில் மதத்தை விமர்சித்தவருக்கு மரணதண்டனை.

    இருவ்ரை கொன்ற அமெரிக்கன் இரத்தப் பணம்(blood money) கொடுத்து தப்பித்து விட்டான்.

  36. 1.சூன்யத்தில் இருந்து ஒன்றும் வர முடியாது.

    2.ஆகவே ஏதாவது ஒரு சக்தி இருந்தாக வேன்டும் என்று கூறுவது சரியா?

    1.சரி.
    2.சரியாகாது.

    quranist@aol.com

  37. 1.சூன்யத்தில் இருந்து ஒன்றும் வர முடியாது.

    2.ஆகவே ஏதாவது ஒரு சக்தி இருந்தாக வேன்டும் என்று கூறுவது சரியா?

    3.கடவுள் மட்டும் சுயம்புவாக எப்போதும் இருப்பவர்.இதனை எல்லா மதங்களுமே சொல்கின்றன.

    4.இறை மறுப்பாளர்களின் விளங்குதலின் படி பூமி உட்பட்ட பிரபஞ்சம் சுமார் 10 பில்லியன் ஆண்டூகளுக்கு முன் தோன்றியது.

    5.அறிவியல் கூறும் கருத்துகளை மத புத்தகம் கொண்டு சரி பர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை.

    1.சரி.
    2.சரியாகாது.
    3.சரியாகாது.
    4.சரியாகாது.
    5.சரி.

    quranist@aol.com

  38. சங்கர் //மத புத்தகத்தில் கூறப்பட்ட விஷயங்கள் சரியாக இருக்க முடியுமா என்று விவாதிக்கப் படுகிறது.////
    இஸ்லாத்தில் கூறப்பட்ட சட்டங்களை விட சிறந்த சட்டங்களை சொல்லுங்கள் .
    ////மதரீதியான அரசியல் கொள்கைகள் மனித உரிமை மீறலாக இருப்பதாலேயே விமர்சிக்கிறோம்.///
    இஸ்லாமிய ரீதியான அரசியல் கொள்கைகள் மனித உரிமை மீறல்களாக இருக்கின்றனவா? அப்படி என்றால் கம்யுனிச சட்டங்கள் எல்லாம் மனித உரிமைகளை எப்போது எப்படியெல்லாம் மனித உரிமைகளை மீறவே இல்லையா? பாகிஸ்தானில் இருவரை கொலை செய்தவர்கள் ரத்த பணத்தை கொடுத்து விட்டு ஓடிவிட்டார்கள் .பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்கள் இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். போபாலில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றதோடு பல்லாயிரக்கணக்கான மக்களை நோயில் தள்ளிய அமெரிக்கரை பிரதமரே பத்திரமாக தப்பவைத்தாரே அது மனித சட்டம்தானே. தினசரி உலகில் நடைபெறும் கொலைகளுக்கு தண்டனை கொடுத்து மனித உரிமை மீறலை எத்தனை நாடுகள் காப்பாற்றி வருகின்றன.?இங்கே நான் பாகிஸ்த்தானுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை அந்நிய நாடு ஜனாதிபதியை நிர்வானாவ்த்தோடு சோதனை செய்வதும் அவர்நாட்டு ஜனாதிபதி அந்நிய நாட்டுக்கு செல்லும்போது அந்நிய நாட்டின் பாதுகாவலை நம்பாது அவர்களே தங்களது பாது காப்புதுறையை அழைத்து வருவதும் என்ன மீறலோ ?முஸ்லிம் நாடு என்றாலே தண்ணி குடிக்காமலே பேசுவீர்கள்?
    ஆப்கானுடன் குழந்தைகளுக்கு உயிர் காக்கும் மருந்துகள் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கனின் சொல்ல்லைக் கேட்டு மருந்து அனுப்ப மறுத்தது ஜப்பான். இதனால் ஆத்திரமுற்ற தாலிபான்கல் எங்கள் குழந்தைகள் மருந்து இல்லாமல் சாகும் நிலையில் வணங்க ஆளே இல்லாத எங்கள் நாட்டில் புத்தர் சிலை தேவையா என்று தாலிபான்கள் தர்த்தனர் அன்றாடம் மருந்து இல்லாமல் மரணித்த குழந்தைகளை விட புத்தர் சிலை தகர்க்கப்பட்டதை உலக மாக கொடுமையாக மீடியாக்களா வர்ணித்தன. அதே நேரத்தில் சொந்த நாட்டிலே முதல்வரின் ஜோசியர் சொன்னதற்காக கண்ணகி சிலை நேர்த்தியாக லாரியை மோதவிட்டு அப்புற படுத்தினார்கள் யாரும் காண்டு கொள்ளவில்லை.
    இப்படித்தான் இஸ்லாம் என்றால் வருத்தெடுப்பதர்க்கேன்றே இவ்வுலகம் உள்ளது .அதில் புதியதாக இணைந்த கோமாளி செங்கொடி. ஸ்டாலின் ஆட்சியை ஒன்றே மட்டுமே சோஷலிச உதாரணமாக கொண்ட இவர்கள் மனித உரிமை மீறலை பேசுவதை விட கொடுமை உண்டோ

  39. இரத்தப் பணம் பற்றியும் அது முஸ்லிமலாதவர்களின் உயிரை எவ்வளவு மதிப்பு கொடுக்கிறது என்று ஆதாரம் காட்டிய பிறகும் ஷாரியா சரி என்றால் என்ன செய்வது?.

    ஷாஅரியாவினால் பாத்க்கப் படுவது பிற மதத்தினர் மட்டுமல்ல ,பிற பிரிவு,நடு நிலமையான இஸ்லாமியர்களும்தான். நிறைய இஸ்லாமியர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருந்து புலம் பெயர்வது இந்த ஷாரியாவினால் தான்.

    இந்தியாவில் ஷாரியா பற்றி பிறர் கவலை கொள்ள வேன்டியது இல்லை ஏனெனெஇல் இந்தியா இஸ்லாமிய நாடு அல்ல.எப்போதும் ஆகாது என்றாலும்,இஸ்லாமியர்கள் மதச்சட்டம் போல் இந்துத்த்வாவாதிகளும் செய்ய ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்பதே நம் கவலை.
    கம்யுனிச‌ ஆட்சி வந்தால் கூட அத்னையும் விமர்சிக்கும்,வேண்டாம் என்றால் அதையும் தூக்கி எறியும் வல்லமை கொண்டதாக ,இன மத பேதமற்று சுரண்டலற்ற அரசியலமைப்பு சட்டமே வேண்டும் என்பதே என் கருத்து.

    யாரும் மார்கஸ் சொல்லிவிட்டார் அதுதான் சரி என்றெல்லாம் சொல்வதில்லை. மார்க்ஸ் திருடுவதற்காக கையை வெட்டு,திருமணமில்லாத பாலுறவுக்கு கல்லெறிந்து கொல் என்றால் அவரை இந்நேரம் தூக்கி எறிந்து இருப்பார்கள்.

    ஷாரியா பற்றி விவாதிப்பது என்றால் சரி இன்னும் பேசுவோம்.முதலில் இந்த இரண்டு நிகழிவுமே ஷாரியாவினால் நிகழ்ந்தவை

    பாகிஸ்தானில் மதத்தை விமர்சித்தவருக்கு மரணதண்டனை.

    இருவ்ரை கொன்ற அமெரிக்கன் இரத்தப் பணம்(blood money) கொடுத்து தப்பித்து விட்டான்.

  40. //திருடியவன் கையை வெட்டுதல்,

    விபச்சாரத்திற்கு கல்லெறிந்து கொல்லுதல்,

    மதத்தை விமர்சித்தவருக்கு/வெளியேறியவருக்கு மரணதண்டனை//

    குர் ஆன் கூறவில்லை.

    quranist@aol.com

  41. //ஷாரியா பற்றி விவாதிப்பது என்றால் சரி இன்னும் பேசுவோம்.//

    Sharīʿah = unquranic

    quranist@aol.com

  42. //மறைபொருள். வசனமே இல்லாத, ஆனால் அதிகம் பேசவைக்கும் குறும்படம்//

    மறைபொருள் கூறும் மறுபொருள் பெண்ணுடல்
    முப்பரிமாணத்தை பார்க்கவியலாதது.

    quranist@aol.com

  43. //புத்தகத்தில் கூறப்பட்ட விஷயங்கள் சரியாக இருக்க முடியுமா என்று விவாதிக்கப் படுகிறது//

    அறிவைத்தேடி நாமும் உம்முடன்.

    quranist@aol.com

  44. குர்ஆனில் அறிவியல் என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?
    ——————————————————————————————————-

    19:89. You have come with a gross blasphemy.

    அறிந்தோ/அறியாமலோ அவதூறுப்பிரச்சாரம் மூலமாக.
    ——————————————————————————————————-
    quranist@aol.com

  45. குர்ஆன் மீது பின்வருமாறு அவதூறு/பொய்பிரச்சாரம் செய்யலாம்.

    ——————————————————————————————————-

    Qur’an offers freedom-of-faith (10:108, 6:104, 10:99, 39:41, 11:121, 73:19, 43:88-89, 2:272, 76:29, 18:29, 42:48, 76:3, 3:20, 88:21-22),

    freedom-of-religion (2:256, 109:6, 22:67-69, 42:15, 10:41, 2:139, 42:6),

    freedom-of-freethinking (15:3, 17:84, 6:110, 10:11, 11:121, 52:45).

    But I don’t like too much freedom, you know!

    Therefore, Qur’an cannot be the revelation from God.

    —————————————————————————————————————-
    Qur’an strongly condemns (female) infanticide (16:58-59, 81:8-9, 6:137, 6:140, 6:151, 17:31).

    But I don’t like it, as I’m a killer of my infants!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    —————————————————————————————————————-

    Qur’an strongly opposes terrorists and oppressors (4:75, 22:39-40, 9:13-14, 42:39-43, 38:28, 2:190-193).

    But I don’t like it, as I’m a terrorist and oppressor!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ——————————————————————————————————————-
    Qur’an strongly condemns unjust killing and suicide (5:32, 2:195, 4:29-30, 4:92-93, 17:31, 17:33, 6:151, 25:68, 3:21).

    But I don’t like it, as I’m a killer and suicide bomber!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ——————————————————————————————————————

    Qur’an teaches self-defense and tolerance (60:7-9, 2:190, 6:107-8, 6:68, 49:11, 39:3, 16:126-128, 73:10, 19:46-47).

    But I don’t like it, as I’m an aggressor and intolerant person!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ——————————————————————————————————————-

    Qur’an teaches that Islam is for everyone (2:62, 22:17, 21:107, 2:111-112, 5:69, 34:28, 103:1-3, 22:67, 10:47, 35:24, 16:36, 68:52, 49:13, 4:1, 2:213, 10:19, 17:70).

    But I don’t like it, as I’m a racist, nationalist, and communal minded person!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ——————————————————————————————————————-

    Qur’an teaches love, mercy, kindness, and forgiveness (1:1-2, 85:14, 21:107, 60:7, 4:17, 7:199, 39:53, 16:119, 3:159, 15:85, 16:119, 19:96, 2:160, 2:163, 4:27-28).

    But I don’t like these kinds of teachings, you know!

    Therefore, Qur’an cannot be the revelation from God
    ——————————————————————————————————————

    Qur’an gives equal status and rights to men and women (4:1, 4:7, 4:124, 3:195, 16:97, 33:35, 49:13).

    But I don’t believe in equality!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ——————————————————————————————————————-

    Qur’an strongly condemns priesthood and religious peddlers (2:41, 2:79, 5:44, 3:187, 9:9, 9:31, 9:34, 2:174, 12:104).

    But I don’t like it, as I’m a religious peddler!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ——————————————————————————————————————-

    Qur’an teaches to give charity to poor and needy (2:43, 2:177, 2:277).

    But I don’t want to spend anything for them, as I will not get any return!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ——————————————————————————————————————–

    – Qur’an strongly forbids eating up others’ property (2:188, 4:2, 4:10, 4:161).

    But I don’t like it, as I’m used to eating up others’ property!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ——————————————————————————————————————–

    – Qur’an strongly condemns defrauders (83:1-4, 55:7-9).

    But I don’t like it, as I’m a defrauder!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ——————————————————————————————————————–

    – Qur’an strongly discourages intoxicants and gambling (5:90-91).

    But I don’t like it, as I’m a drunker and gambler!

    Therefore, Qur’an cannot be the revelation from God.
    ———————————————————————————————————————

    quranist@aol.com

  46. குர்ஆன் மீது பின்வருமாறு அவதூறு/பொய்பிரச்சாரம் செய்யலாம்.
    ——————————————————————————————————–

    Argument from flat earth: Qur’an says, “God hath appointed the earth as a bed for you.” (20:53) Therefore, Qur’anic God thought that the earth is flat!

    LOL!

    But wait a moment! Although the ‘shape’ of the earth appears to be ‘circular’ but my bed is ‘rectangular’! So, Qur’anic God didn’t intend to compare the ‘shape of the earth’ with the ‘shape of my bed’ in the first place!

    Anti-LOL!

    Therefore, Qur’an cannot be the revelation from God. Otherwise I will be proven wrong, unless I have already made a ‘circular bed’ in my room secretly! Moreover, I have never read the verse 84:3-4 that talks about the Last Day, “And when the earth is flattened out, and casts forth what is in it and becomes empty.” So, if the earth is already flat in verse 20:53, then how would it be flattened out again and becomes empty?

    What a ‘logical’ person I am, you see!

    When Qur’an says “Heavens and earth were joined together and We clove them asunder”, it may indicates anything but the concept of Big-Bang. Because it was plagiarized from pagan belief, as Ali Sinner rightly said. But when Qur’an says “God hath appointed the earth as a bed for you, God hath made the earth a wide expanse for you, God hath made for you the earth like a carpet spread out”, it must indicate the flat-shape of the earth, although I don’t bother whether it talks about the ‘shape’ of the earth in the first place! It cannot have any other interpretation. Period.

    Therefore, Qur’an cannot be the revelation from God.

    America is a rich and technologically developed nation. Majority of Americans are Christians, although I know for sure that they do not follow the true teachings of the Bible; otherwise America would have been a real hell long ago!

    On the other hand, Afghanistan is a poor and technologically backward nation. Majority of Afghanis are Muslims, although I know for sure that they do not follow the true teachings of the Qur’an.

    Therefore, Qur’an cannot be the revelation from God.

    – Christianity produces people like Mother Teresa; forget about the people like Hitler and Bush, btw! Hinduism produces people like Mahatma Gandhi; forget about the people like Narendra Modi, btw!

    On the other hand, Islam produces people like Bin Laden, although no one knows for sure how many people he has killed so-far. Oh my Ghost! Islam = Bin Laden! Islam = 9-11 event! Islam = Al-Qaeda! Islam = Afghanistan! Islam = Pakistan! Islam = KILL! Islam = Rape! Islam = Suicide Bombing! Islam = Terrorism! Islam = Extremism! Islam = Fanaticism! Islam = Violence! Islam = Beating innocent wife with hot iron rod! Islam = Black Burqa! Islam = ? Islam = ? Islam = ? See the clear-cut contrast?

    Therefore, Qur’an cannot be the revelation from God. How could it be, man!

    quranist@aol.com

  47. sankar///இரத்தப் பணம் பற்றியும் அது முஸ்லிமலாதவர்களின் உயிரை எவ்வளவு மதிப்பு கொடுக்கிறது என்று ஆதாரம் காட்டிய பிறகும் ஷாரியா சரி என்றால் என்ன செய்வது?.///
    பாதிக்கப்பட்டவன் அதர்க் காண நஷ்ட ஈடுவை பெற்றோ பெறாமலோ மன்னித்துவிடும்போது மூன்றாவது நபருக்கு அங்கெ அலுவல் இல்லை. முஸ்லிம் அல்லாதவர்களின் உயிரை பற்றிய மதிப்பீட்டுக்கு நீங்கள் கூறிய குற்ற சாட்டுக்கு குர்ஆன் ஹதிதில் ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.
    /////இந்தியா இஸ்லாமிய நாடு அல்ல.எப்போதும் ஆகாது என்றாலும்,இஸ்லாமியர்கள் மதச்சட்டம் போல் இந்துத்த்வாவாதிகளும் செய்ய ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்பதே நம் கவலை…/////

    நீங்கள் நிபுணத்துவமிக்க பல நிகழ்வுகளை முன்பே கூறிய ஜோசியரா?
    இந்துத்துவா வேதங்களில் சிவில்,கிரிமினல் சட்டங்கள் உள்ளனவா?

  48. சங்கர் ,இப்ராஹீம் நபி[அலை]அவர்களிடம் விவாதித்த அந்த மன்னரின் பெயரை நம்றுத் என்றோ நிம்ரோத் என்றோ குரான் கூறாதபோது பைபிள் சமாச்சாரங்களை வைத்து குர் ஆனை விமர்சிக்க முயல வேண்டாம்.

  49. sankar .////யாரும் மார்கஸ் சொல்லிவிட்டார் அதுதான் சரி என்றெல்லாம் சொல்வதில்லை. மார்க்ஸ் திருடுவதற்காக கையை வெட்டு,திருமணமில்லாத பாலுறவுக்கு கல்லெறிந்து கொல் என்றால் அவரை இந்நேரம் தூக்கி எறிந்து இருப்பார்கள்.///
    அப்படி கையை வெட்டுவது பாவம் .லட்ச கணக்கில் பணத்தை திருட கொடுத்துவிட்டு பின்னர் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலையாவது பற்றி சங்கர் எண் கவலை பட வேண்டும்?ஒருவனிடம் அதிகமாக இருக்கும் பணத்தை பசிக்காக திருடியவன் என்ன பாவம் செய்தான்?அவன் கைக்கு விளகிடுவது பாவம் .தங்க பிரஸ்லேட் போட்டு கவுரவிப்பதே சிறப்பு /நெல்லையிலுள்ள ராமையன்பட்டி சேர்ந்த மூன்று கார்கள் பல டூ வீலர்கள் பங்களா வசதியுடன் வாழ்ந்த ஒருவர் ,தனது குடும்பட்ட்தினருடன் ஊர் ஊராக சென்று திருடுவதை தொழிலாக கொண்டவர் என்று கண்டு பிடிக்கப்பட்டுசெய்திகளில் பிரபலமானார் .இப்போது செய்திகள் முடித்து திரும்பவும் ஜாமீனில் வெளியே வந்து அவரது தொழில் சிறப்பாக நடந்து கொண்டிருகிறது. இந்த திருடனால் மானம் இழந்தோர் உயிர் இழந்தோர் எத்தனை பேர் என்பது யாருக்கு தெரியும்?நாம் கவலைப்பட ,ஆனால் இந்த திருடனை தெரியும் அவன் கை வெட்ட படாமல் பாதுகாக்க சங்கர் போன்று அதிகமான மனித [திருடர்]நேயர்கள் இருக்கும்போது திருடன் கவலை படாமலிருக்க . அதனால் தான் ஒரு லட்ச .இரண்டு லட்ச கோடிகள் அடிப்பவர்களை பற்றி யார் கவலைப்படுவார்கள் ?

  50. //?ஒருவனிடம் அதிகமாக இருக்கும் பணத்தை பசிக்காக திருடியவன் என்ன பாவம் செய்தான்?அவன் கைக்கு விளகிடுவது பாவம் .தங்க பிரஸ்லேட் போட்டு கவுரவிப்பதே சிறப்பு ///

    இஸ்லாமிய நாடுகளில் திருட்டே ந்டைபெறுவது இல்லை ஏனெனில் ஷரியா சட்டமானது உண்மையான திருடர்களை கண்டு கைகளை வெட்டி விடுவதால்.

    இது துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ய்ப்பு அதிகம்.நமது சட்டப்படி ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான்.

    ஒருவன் திருடினால் அப்பணத்தை திரும்ப பெறும் வழி கான் வேண்டும்,அபராதம்,சிறைத்தண்டனை போதும்.1.7 இலட்சம் கோடி திருடியவனை கூட கைகள் வெட்டக் கூடாது.

    அமெரிக்கா அரபி எண்ணெய் திருடுகிறது,அதற்கு கூட்டுகளவானியாகிய சவுதி அரசுக்கு எதை வெட்டுவ்து?

    சவுதிக்கு வேலை பார்ர்க்க சென்று முதலாளி சரியாக சம்பளம் தராததை கேட்டால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு கைகளை இழந்தவர் பலர்.பெண்களென்றால் பாலியல் கொடுமை எதிர்த்தால் திருட்டுக் குற்றம் சாட்டி கைகள் இழப்பு.

    சரியான விசா இல்லாமல் சவுதி உட்பட்ட அரபு நாடுகளில் இலட்ச்க்கணக்கானோர் திரிகின்றார்.அவர்களின் உழைப்பு சுரண்டப் படுகிற‌து.இது அரசுக்கு தெரியாதா? ஷாரியப்படி இது சரியா?

    ஒவொரு வாரமும் சவுதியில் இருந்து இலட்சக்கணக்கானோர் பஹ்ரைனுக்கு செல்வது எத்ற்காக?

    சவுதியில் இருந்து துபாய்,ஷார்ஜா வழியாக இந்தியா வரும் பல் நண்பர்கள் வாங்குவது என்ன?

    ஏர் இந்தியா சவுதி _இந்தியா விமாங்களில் பயணிகளுக்கு மது அளிக்கப்படுகிறது.இத்னை ஏன் தடை செய்யக் கூடாது?

    கள்ளக் கடத்தல் தொழில் செய்வதும் ஷாரியாவின் படி சரியா?

  51. //சங்கர் ,இப்ராஹீம் நபி[அலை]அவர்களிடம் விவாதித்த அந்த மன்னரின் பெயரை நம்றுத் என்றோ நிம்ரோத் என்றோ குரான் கூறாதபோது பைபிள் சமாச்சாரங்களை வைத்து குர் ஆனை விமர்சிக்க முயல வேண்டாம்.//
    குரான் சொல்லும் பல ஆட்கள் சம்பவங்கள் அடையாளம் கட்ட முடியாத போது,இபின் அப்பஸ் காட்டும் ஆட்கள் வரலாற்று ரீதியாக தவறு என்னும் போது.அது காட்டிய ஷாரியாவை ஏன் ஏற்று கொள்ள வேண்டும்?.
    முதலில் குரானில் சொல்லிய ஒவ்வொரு விஷயமும் சரி என்று ஆதார பூர்வமாக நிரூபிக்க வேண்ரும்.
    குரான் சரியாக அனைத்து பிரிவு முஸ்லிம்களும ஏற்றுக் கொள்ளும் வண்னம் மொழி பெயர்த்து,புதிதாக ஷாரியா சட்டம் கொண்டுவந்து,இஸ்லாம்ய நாடுகளில் ஜனநாயகம் கொண்டுவந்த பின்தான் சரியான் ஷாரியா பயன்படுத்தப்படவேன்டும்

    அமெரிக்காவின் வேலைக்காரர்களாள் ஷாரியா பயன் படுத்தக்கூடாது.

  52. //முஸ்லிம் அல்லாதவர்களின் உயிரை பற்றிய மதிப்பீட்டுக்கு நீங்கள் கூறிய குற்ற சாட்டுக்கு குர்ஆன் ஹதிதில் ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.//

    குர்ஆன் ஹதிதில் ஆதாரமில்லாமெலே கடைப்பிடிக்கும் அமெரிக்க பிரதிநிதி சவுதி அரசை கண்டிக்க வேண்டாமா?

  53. குா்ஆனும் குரளும் ஒன்றா.நான் உங்கள பின்பற்ற நினைத்தேன்.அஸ்தஃபிாுல்லாஹ்ஃ

  54. நண்பர் முஸ்டாக்,

    குரானும் குறளும் சம மதிப்புடையனவா என்பது இங்கு கேள்வி அல்ல. ஒரு வசனத்துக்கு மாற்றாக ஒரு குறளை எடுத்துக் கொண்டால் என்ன தவறு என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. குரானின் வசனங்களுக்கு குரான் மாற்றாக முடியாது என நீங்கள் கருதினால் எப்படி மாற்றாக முடியாது என்று கூறுங்கள் பரிசீலிக்கலாம்.

    நன்றி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்