விந்து குறித்த குரானின் விந்தைகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 15

விந்து வெளிப்படும் இடம் குறித்து அல்லது விந்து உருவாகும் இடம் குறித்து யாருக்கும் தற்காலத்தில் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குரானில் இது சரியாக குரிப்பிடப்படாததில் பெரிய பிழை ஒன்றுமில்லை. தவறாக குறிப்பிடப்பட்டிருக்கும் அதை சரியானது தான் இன்றைய அறிவியல் தவறாக முடிவு செய்திருக்கிறது என்பவர்களை ஒதுக்கித்தள்ளலாம், ஏனென்றால் அவர்களுக்கு மதமும் தெரியாது அறிவியலும் தெரியாது. ஆனால் தவறான அதை சரியானது என்றும் இன்றைய அறிவியலும் அப்படித்தான் விளக்குகிறது என்பவர்களிடம் நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள் நம்மிடம் திணிக்க விரும்புவது அவர்களின் சலவை செய்யப்பட்ட கருவை.

குரான் 86:7 “முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது” இது தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மையை தாங்கியுள்ள வசனம். முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட அந்த இடம் எது? அது ஒரு உறுப்பா அல்லது உறுப்புகளின் கூட்டான ஒரு பகுதியா? என்பது பற்றியோ; தெளிவாக விளங்கிக்கொள்ள ஏதுவான பொருளோ அந்த வசனத்தின் சொற்களிடையே ஒன்றுமில்லை. இன்னும் துல்லியமாக கூறுவதென்றால், விரைகளின் பயன் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இயலா காலத்தில் வாழ்ந்த ஒருவரின், இங்கிருந்து இருக்கக்கூடும் எனும் ஊகத்திலான கூற்று அது. முகம்மதின் காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நிலவிவந்த கிரேக்க கண்டுபிடிப்பு(!) அது. அதைத்தவிர வேறெந்த முக்கியத்துவமும் அந்த வசனங்களுக்கு இல்லை. என்றாலும், இப்போது அது பாமரர்களை மயக்குவதற்காக அறிவியலை அணைத்துக்கொண்டிருக்கிறது.

இதை எப்படி அறிவியலோடு பொருத்துகிறார்கள்? விரைப்பையில் விந்து உற்பத்தியானாலும் அது நேரடியாக அங்கிருந்து வெளிப்பட்டு விடாமல் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்து தான் வெளித்தள்ளப்படுகிறது. இதை இப்போதைய அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் இதை ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு  படிப்பறிவில்லாத ஒருவரால் சொல்லியிருக்க முடியுமா? எனவே தான் குரானை இறைவன் தான் இறக்கினான் என கூறுகிறோம் என்கிறார்கள். விந்து விரைப்பையில் உற்பத்தியானாலும் செமினல்வெசிக்கிள்ஸ் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும், ப்ராஸ்டேட் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும் சேர்த்துக்கொண்டு தான் வெளியேறுகிறது. ஆனால் அந்த இரண்டு சுரப்பிகளும் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் இல்லை என்பது தான் கவனிக்கவேண்டியது.

இந்த வசனத்திற்கு வேறொரு விளக்கமும் கொடுக்கிறார்கள். விந்து வெளிப்படும் விரைப்பு நிலைக்கான தூண்டுதல் முதுகந்தண்டிலிருக்கும் தண்டுவடத்திலிருந்து தான் கிடைக்கிறது எனவே இந்த வசனத்தின் பொருள் அதற்கும் பொருந்துவதால் இதை இறைவனின் வசனம் தான் என அறிவிக்கிறார்கள். ஆனால் விரைப்பு என்பது அனிச்சைச்செயலல்ல என்பதால் அதைக் கட்டுப்படுத்துவது மூளைதான். கூடவே மனத்தூண்டுதலும் இதற்கு முக்கியமானது. கொஞ்சம் பழைய மொழிபெயர்ப்புகளில் தான் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் எனும் சொற்களை பயன்படுத்தியிருந்தனர். ஆனால் அது பொருத்தமான சொற்களாக இல்லை என்பதால் புதிய மொழிபெயர்ப்புகளில் முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் என்று மாற்றிவிட்டார்கள். இப்படி காலத்திற்கு பொருத்தமாக அறிவியல் வளர்ச்சிகளுக்கு பொருத்தமான சொற்களை பயன்படுத்தி பொருள் சொல்லி அதையே அறிவியல் முன்னறிவிப்பாக மேடைகளில் காட்டும் போக்கை அறியாமை என்று அறுதியிட்டுவிட முடியாது.

இந்த வசனத்திற்கான தொடர்விளக்கங்கள் மேலும் வந்துகொண்டே இருக்கின்றன. என்னதான் வேறு சில சுரப்பிகளையும் சேர்த்துக்கொன்டாலும் விந்து வெளிப்படுவது விரையிலிருந்து தானே. அதை முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் என்றும் கூட  கூறமுடியாதே என்பதால், வெளிப்படும் விந்து திரவத்தில் விரைகளின் பங்கு ஐந்து விழுக்காடிற்கும் குறைவு தான் மீதி 95விழுக்காடிற்கு மேல் பங்களிப்பது செமினல்வெசிக்கிள்ஸ், ப்ராஸ்டேட் சுரப்பிகள் சுரக்கும் திரவம் தான் என்பதால் அந்த வசனம் குறிப்பிடுவது சரியானது தான் என நிறுவ முயல்கின்றனர். ஆனால் அதிலும் சிக்கல் இருக்கிறது. அந்த வசனம் மனிதனின் பிறப்பைப் பற்றியே பேசுகிறது என்பதால் மனிதனை உருவாக்கும் விந்து தான் மையப்படுத்தப்படுகிறது. வெளிப்படும் விந்துத்திரவத்தில் ஐந்து விழுக்காடிற்கும் குறைவான பங்களிப்பை செய்தாலும் விரைதான் முக்கியமான பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. விரை உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் இல்லையென்றால் கரு உருவாவது சாத்தியமில்லை. இந்த உயிரணுக்களை பாதுகாப்பாக இலக்கில் கொண்டு சேர்க்கும் வேலையைத்தான் அந்த சுரப்பிகள் செய்கின்றனவேயன்றி, அந்த சுரப்பிகளால் கருவை உருவாக்க இயலாது. செமினல்வெசிக்கிள்ஸில் இருந்து சுரக்கும் திரவம் உயிரணுக்களின் நீண்ட பயணத்திற்கு தேவையான உந்துவிசையை தருகிறது. ப்ராஸ்டேட் சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம் பாதையில் இருக்கும் அமிலத்தன்மையிலிருந்து உயிரணுக்களை பாதுகாப்பதற்கு தேவையான காரத்தன்மையை தருகிறது. என்றாலும், தப்பிப்பிழைக்கும் உயிரணுக்களில் ஏதாவது ஒன்றுதான் பெலோபியன் குழாயில் காத்திருக்கும் சினை முட்டையை துளைக்கிறது. சுலபமாக சொல்லவேண்டுமென்றால், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சையின் போது விரை உற்பத்திசெய்யும் உயிரணுக்களை கொண்டுவரும் குழாய் தான் துண்டிக்கப்படுகிறது. மற்ற இரண்டு சுரப்பிகளின் திரவம் வழக்கம்போல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆனால் இந்த அறிவியலை எல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு உகந்ததை மட்டும் அறிவியலாக்குவது தான் மதவாதிகளின் மரபு.

விந்து குறித்த இன்னொரு விந்தையான தகவலும் குரானில் இருக்கிறது. வசனம் 76:2 கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்…… இந்த வசனத்தில் இருக்கும் கலப்பான இந்திரியத்துளி என்பதற்கு ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் என்று விளக்கமளிக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு பொருளைக் கொள்வதற்கு இந்த வசனத்தில் இடமில்லை. கலப்பான இந்திரியத்துளி என்று இரண்டையும் ஒரே நிலையில் வைத்து குறிப்பிடுகிறது குரான். அவ்வாறன்றி ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் வேறுவேறு தன்மையிலானவை. உயிரணு, சினை முட்டை என்று அறிவியல் வளர்ந்த பிறகு மதவாதிகள் குறிப்பிட்டாலும், அந்த வசனம் விந்துத் திரவத்தைத் தான் குறிப்பிடுகிறது. அதாவது ஆண்களுக்கு நீர்த்த நிலையில் வெளிப்படும் விந்துவைப் போலவே பெண்களுக்கும் நீர்த்த நிலையில் ஒரு திரவம் வெளிப்படுகிறது. ஆண்களுக்கு உயிரணுவை தாங்கி வரும் விந்துவைப் போல் பெண்களுக்கு வெளிப்படும் திரவம் சினை முட்டையை தாங்கி வருவதில்லை. அத்திரவத்தின் பயன் உயவு மட்டும் தான். ஆனால் இந்த அறிவியல் ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மதுவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த முகம்மது அதுவும் ஆண்களிடமிருந்து வெளிப்படுவதைப் போல்தான் என்று எண்ணிக்கொண்டு கலப்பு இந்திரியத் துளி என்று தன குரானைப்படைக்க, இன்று அதை மதவாதிகள் உயிரனுக்கலாகவும் சினை முட்டையாகவும் மொழிபெயர்க்கிறார்கள்.

எவ்வளவு தான் முயற்சித்து அறிவியலையும் வேத வசங்களையும் இணைத்து கட்டுப்போடும் வேலையைச் செய்தாலும் அவை ஒட்டுவதில்லை. ஏனென்றால் இரண்டும் எதிரெதிரானவை. அறிவியல் எப்போதும் மாறும் தன்மையுடையது. தொடர்ந்த ஆய்வுகளால் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது. ஆனால் வேதமோ எப்போதும் மாறாத, மாறவே கூடாத ஒன்று. இரண்டும் எப்படி ஓட்டும்?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

63 thoughts on “விந்து குறித்த குரானின் விந்தைகள்

  1. இது குறித்து தருமி அவர்கள் ப்ளாக்கில் நீண்ட நெடிய விவாதம் ஓடியது! கடைசி வரை சண்டையிட்டார்களே தவிர சரியான பதில் சொல்ல ஆளில்லை!

  2. மதவாதிகளின் கேள்விகளை அடுக்கி அதற்கான பதிலையும் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  3. தங்களின் கட்டுரையே விந்து குறித்தான குர்ஆனின் வசனங்களுக்கு சரியான விளக்கமாகும்.

    கூடுதலான ஒரு தகவல். குழந்தை பிறக்கும் பொழுதுதான் உயிர் கொடுக்கப்பட்டு (ஸூர் ஊதப்பட்டு) பிறக்கச்செய்யப்படுகிறது என்றும் முகம்மதுநபி கூறியுள்ளார். இதன் மூல்ம் விந்தணுக்களுக்கு உயிர் இல்லை என்பதும் அவர்களின் அறிவியல்.

  4. அதான் பதில் சொன்னாங்களே!

    மத்த பதிவெல்லாம் படிக்கிறதில்லையா ?

    குரான் கூறும் திரவம் “முதுகுத் தண்டிற்கும் பக்கவாட்டு எலும்புக்கும் இடையினூடாக விரைந்து செல்கிறது” என்று பல மொழிபெயர்ப்புகள் கூறுகின்றன. நீங்கள் உற்பத்தியைப் பத்தி பேசுறீங்க. ஆனா குர் ஆன் விந்து உற்பத்தியைப் பத்தியா பேசுது ?

  5. நண்பர் நேசன்,

    நீங்கள் சுட்டியிருந்த பதிவுகளை படித்தேன். அவற்றிற்கும் இந்த கட்டுரையில் பதில் இருப்பதாகவே கருதுகிறேன். அந்த வசனத்திலும் முன் பின் வசனங்களிலும் சுட்டப்படுவது மனித உற்பத்தி குறித்துத்தானே? மற்ற சுரப்பிகள் துணை செய்கின்றனவே தவிர கருவை உருவாக்குவதில்லை. மற்ற சுரப்பிகளும் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் இல்லை என்பது தெளிவு. இதை சமாளிக்கும் விதமாக விளக்கங்களை தெளித்திருத்திருக்கிறார்களே தவிர முக்கியமான இந்த கேள்விகளுக்கு பதிலில்லை.

    விரைப்பையிலிருந்து தொடங்கி வேறுபல சுரப்புகளையும் (முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் இல்லாத) இணைத்துக்கொண்டு வெளிப்படும் ஒரு திரவத்தை ஒரு வாதத்திற்கு குரான் சொல்லும் இடத்தின் வழியாக சென்று வந்தாக கொண்டாலும் குறிப்பிட்ட அந்த இடத்திலிருந்து வெளிப்படும் திரவம் என்று எப்படி கூற முடியும்?

    முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் இருந்து வெளிப்படுகிறது
    முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் இடையில் இருந்து வெளிப்படுகிறது
    முதுகுத் தண்டிற்கும், நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது
    இப்போது நண்பரொருவர் கூறியதுபோல் முதுகுத் தண்டிற்கும் பக்கவாட்டு எலும்புக்கும் இடையினூடாக விரைந்து செல்கிறது என்று இன்னும் எத்தனை விதமாக மொழிபெயர்ப்பீர்கள்? அதுவும் நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக உங்கள் இறைவனால் எளிமையாக்கப்பட்ட வசனங்களை.

    செங்கொடி

  6. நன்றி வால்பையன்,

    நீண்ட விவாதம் தான், இலக்கை கவனமாக தவிர்த்த எதிர் வாதங்களை உள்ளடக்கிய நீண்ட நெடிய விவாதம்.

    நண்பர்கள் அதையும் படித்துப்பார்க்க வேண்டும்.

    http://dharumi.blogspot.com/2009/11/354-2.html

    செங்கொடி

  7. செங்கொடி,

    மொழிபெயர்ப்பு வேறுபடுறது என்பதற்காக குர்ஆன் குறைபட்டது என்பதா ? சரி, அது உங்க வசதிப்படி எந்த பதிலாகவும் இருக்கட்டும்.

    உங்களது இந்தப் பதிவிலுள்ள மொழிபெயெர்ப்புப் படி, குரான் 86:7 “முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது”.

    இது எந்த மொழி பெயர்ப்பு ? யார் மொழி பெயர்த்தது ? எந்த பதிப்பு ? எந்த பதிப்பகம் ? தகவலை வெளியிடவும். ஏன் இந்த மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தினீர்கள் எனவும் கூறவும் ? உலக இஸ்லாமிய அறிஞர்கள் பலர் பார்த்து சரிபார்த்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை சுட்டுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?

  8. மொழிபெயர்ப்பு வேறுபடுவது என்பது சிறிய விஷயமா என்ன? ஏனென்றால் இவ்வுலக வாழ்வு அற்பமானது. மறுமை வாழ்வுதான் நிரந்தரமானது. மொழிபெயர்ப்பில் தவறு இருக்கிறது என்று நீங்கள் கூறுவது போன்றே எல்லா மதத்தவர்களும் கூறலாமே. ஒரு புத்தனாக இருக்கும் நான் எதனடிப்படையில் இஸ்லாத்தைத் தழுவமுடியும்? குரானின் தமிழ் மொழிபெயர்ப்பை படித்தோ அல்லது ஆலிம்களிடம் விளக்கம் கேட்டோ அதனைப் பரீசலித்துத்தான் தழுவமுடியும். தவறான மொழிபெயர்ப்பையோ தவறான விளக்கத்தையோ பெறும் நான் இஸ்லாத்தை தழுவமுடியுமா? அல்லது ஒவ்வொரு மத்த்தின் மூல மொழிகளையும் கற்றுணர்ந்து கொண்டிருக்கத் தான் முடியுமா? ஒருவேளை தவறான மொழிபெயர்ப்பினை படிக்கும் நான் குரான் முற்றும் உணார்ந்த கடவுளால் அருளப்பட்டது அல்ல என்ற முடிவுக்கு வருவனேயானால், இறந்தபின் எனது நிலையென்ன? தவறு என்னுடையதல்ல மொழிபெயர்ப்பாளர் மீதுதான் அல்லது சரியாக மொழிபெயர்க்கத் தெரியாத மொழிபெயர்ப்பாளரை தேர்ந்தெடுத்த கடவுள் மீதுதான்.

    தீனைப் பற்றி அறியாத தீனின் அழைப்பையே கேட்காத இறந்த ஆதிவாசிகளின் நிலை என்ன?

    நீங்கள் தொடர்ச்சியாக மதப் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கவேண்டும், உங்களது வாழ்க்கையைப் பொருட்படுத்தாது. அனைத்து மக்களிடமும் தீனைப் போதிக்க வேண்டும், முடியுமா உங்களால். பல்துலக்குவது முதல் உடலுறவு கொள்வது வரை முஹம்மதின் சுன்னத்தை கறாராகப்(!) கடைபிடிக்கும் நீங்கள், இதை மட்டும் விட்டது ஏனோ?

  9. அஸ்கர்,

    “இவ்வுலக வாழ்வைவிட மறுமை மேலானது” எனக் குர்ஆன் கூறுவதாக நீங்கள் சுட்டிக் காட்டியது உண்மைதான். ஆனால் அதை மொழிபெயர்ப்பதில், பல பொழிபெயர்ப்புகள் வேறுபடுகிறதா ? நான் அப்படி சொல்ல வில்லையெ !

    நீங்கள் தேவையில்லாமல் வேறு இடத்திலிருந்து உங்கள் வாதத்திற்கு துணை தேட வேண்டாம். இங்கு பேசப்படும் குர்ஆன் வசனத்தினைப் பற்றி மட்டுமே பேசுவோம்.

    செங்கொடி எழுதியுள்ள இப்பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ள வசனம்: குரான் 86:7 “முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது”. இந்த மொழி பெயர்ப்பில் உள்ளது போல “இடையிலிருந்து அது வெளியாகிறது” எனும் சொற்றொடர், “இடையினூடாக அது வெளியாகிறது”ஏன்றோ “இடையிலிருந்து அது மேலும் முன்னேறுகிறது” என்றோ பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் கூறுகின்றன. உதாரணத்திற்கு, Proceeding from between the backbone and the ribs. மற்றொரு மொழிபெயர்ப்பு, “Which issues forth from between the loins and the breastbones”.

    “இடையிலிருந்து வெளிப்படுகிறது” என்ற மொழிபெயர்ப்பை ஒரு வாதத்திற்காக சரி என எடுத்துக் கொண்டாலும், செங்கொடி தனது விமர்சனத்தினை “இடையிலிருந்து உற்பத்தியாகிறது” என்றவாறு அவரது “கற்பனைக் கோட்டையின் விரிசல்” வழியாக வாதத்தினை அடுக்குகிறார்.

    குர்ஆனின் மொழிபெயர்ப்புகளில் காணப்படும் வேற்றுமைத்தன்மைக்கு குர்ஆன்தான் பொறுப்பேற்கவேண்டும் என நீங்கள் கூறுவது சற்று விந்தையானது. உங்கள் தகவலுக்காக நான் கூறுகிறேன். குர்ஆனை முதன் முதலில் மொழிபெயர்த்தது ஒரு கிறிஸ்தவ பாதிரியார் ஆவார். அவர் தனது மொழிபெயர்ப்புக் குர்ஆனுக்கு வைத்த தலைப்பு என்னவெனத் தெரியுமா ? அது, “Refutation to Koran” என்பதாகும். இந்த மொழிபெயர்ப்புக்கும் குர்ஆன்தான் பொறுப்பேற்க வேண்டுமா ? நல்ல கதையய்யா.

    நீங்கள் உங்கள் புத்த மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாற ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணங்கள் அவைகள் என நீங்கள் கேட்கிறீர்கள். அக்காரணங்களை நான் பட்டியல் போட ஆரம்பித்தால், இப்பின்னூட்டம் வேறுதிசையில் செல்லும். ஓரிரு காரணத்தினைக் கூற வேண்டுமானால், இதோ:

    1) நன்மைக்கு நற்கூலியும் தீமைக்கு தண்டனையும் கிடைக்கும் எனக் குர் ஆன் கூறுவதோடு, மறுமை எனும் வாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது. புத்த மதத்தில் மறுமை எனும் வாழ்க்கையில்லை (மறுபிறப்பு என்பது புத்த மதத்தில் நாகார்ஜுனர் போன்ற பிராமணர்களால் பிற்காலத்தில் உள்வாங்கப்பட்டது.) தீமை செய்யும் பலர் இவ்வுலகில் நல்ல முறையில் வாழ்வதால், தீமை செய்வது ஒரு வாழ்வியல் நெறியாக பெளத்தர்கள் கருத வாய்ப்புள்ளது.

    2) புத்த மதத்தில் கடவுள் கொள்கைக் கிடையாது. எனவே அதில் யாரை நம்பி நன்மையை ஏவுவது, தீமையைத்தடுப்பது ? நன்மைக்கு யார் கூலி வழங்குவார்கள் ? தீமைக்கு யார் தண்டனைத் தருவார்கள் ?

    நீங்கள் ஒரு கேள்விக் கேட்டீர்கள்: “தீனைப் பற்றி அறியாத தீனின் அழைப்பையே கேட்காத இறந்த ஆதிவாசிகளின் நிலை என்ன?” குர்ஆன் பதில் கூறுகிறது: அவ்வாறு யாரும், எந்த சமூகமும், எந்த குலமும், எந்த கோத்திரமும் இல்லை.

    திருக்குறளில் தமிழர்களுக்கு தீனைப் பற்றிய அறிவிப்பில்லையா ? அது ஏகத்துவத்தைக் கூறவில்லையா ? “தனக்குவமை இல்லாதான்” எனக் கடவுளைப் பற்றிக் கூறியது ஏகத்துவம் தானே ?

  10. இஸ்லாமிய நண்பரே,

    இங்கு இரண்டு செய்திகள் இருக்கின்றன. ஒன்று குரானின் வசனம் தவறான பொருளை கொண்டிருக்கிறது என்பது, இரண்டு மொழிபெயர்ப்பில் இருக்கும் குழறுபடிகள்.
    குறிப்பிட்ட அந்த வசனத்திற்கு சரியான மொழிபெயர்ப்பு எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? உங்களது நம்பிக்கைக்கு இணங்கிப் போகும் ஒன்று தான் சரியானது என்று கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? காலாகாலத்திற்கும் மாறாத ஒரு மூலத்திற்கு காலாகாலத்திற்கும் மாறிக்கொண்டே இருக்கும் மொழிபெயர்ப்பா? எது பிழைகள் இல்லாத மொழிபெயர்ப்பு? அதை நீங்கள் சுட்டிக்காட்டுங்கள், இனிவரும் தொடர்களில் அந்த மொழிபெயர்ப்பிலிருந்து நான் மேற்கோள்கள் காட்டுகிறேன். இதை நான் ஏற்கனவே அறிவித்து விட்டேன், ஆனால் சுட்டிக்காட்டத்தான் யாருமில்லை.

    நான் என்னுடைய தொடரில் ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பை பயன்படுத்துகிறேன். அதன் வித்தியாசங்களை சுட்டிக்காட்ட பிஜே வின் மொழி பெயர்ப்பை பயன்படுத்துகிறேன். நான் தமிழில் எழுதுவதால் தமிழில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிபெயர்ப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். பொருத்தமான காரணம் சொன்னால் அவைகளை விட்டுவிட்டு நீங்கள் கூறுவதை பயன்படுத்தவும் தயார்.

    அடுத்து இத்தொடரில் முன்வைக்கப்படுபவை வெறும் மொழிபெயர்ப்புப் பிரச்சனைகள் என நீங்கள் கருதவில்லையாயின் அவைகளுக்கு பதில் கூற முனையுங்கள்.

    செங்கொடி

  11. நமக்குள் ஏன் சர்ச்சை. அடுத்து ஒரு மொழிபெயர்ப்பில் விதைகளிலிருந்து (testicles) குதித்து ஓடும் விந்தணுவிலிருந்து என்று எழுதிவிட்டால் சரியாப் போகுது. மூலமொழியில் எந்தச்சொல் பயண்படுத்திருந்தால் என்ன? காலத்திற்கு தகுந்தவாறு, அறிவியலுக்குத் தகுந்தவாறு மாற்றி மொழிபெயர்த்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே. குர்ஆன மட்டும்தான் அல்லா பாதுகாக்கிறான். அதனால் குர்ஆன்லதான மாறக்கூடாது. மொழிபெயர்ப்பில் மாறுவதால் தப்பொண்ணும் இல்லே. சொற்பிரச்சனை வந்தால் அவரு தப்பா மொழிபெயர்த்துள்ளார்னு சொல்லிடுவோம். ஆங்கில மொழிபெயர்ப்புகளே சரியானது என்று சொல்பவர்களெல்லாம் ஒன்றை நமக்கு தெளிவா புரியவைக்கிறாங்க. அதாவது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களெல்லாம் முட்டாள்கள் என்பதுதான்.
    குறிப்பு; விந்தணுவின் வடிவம் நீர் அல்ல. ஒரு துளி விந்தும்(with semen) தேவை இல்லை.

  12. //
    நமக்குள் ஏன் சர்ச்சை. அடுத்து ஒரு மொழிபெயர்ப்பில் விதைகளிலிருந்து (testicles) குதித்து ஓடும் விந்தணுவிலிருந்து என்று எழுதிவிட்டால் சரியாப் போகுது. மூலமொழியில் எந்தச்சொல் பயண்படுத்திருந்தால் என்ன? காலத்திற்கு தகுந்தவாறு, அறிவியலுக்குத் தகுந்தவாறு மாற்றி மொழிபெயர்த்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே. குர்ஆன மட்டும்தான் அல்லா பாதுகாக்கிறான். அதனால் குர்ஆன்லதான மாறக்கூடாது. மொழிபெயர்ப்பில் மாறுவதால் தப்பொண்ணும் இல்லே. சொற்பிரச்சனை வந்தால் அவரு தப்பா மொழிபெயர்த்துள்ளார்னு சொல்லிடுவோம். ஆங்கில மொழிபெயர்ப்புகளே சரியானது என்று சொல்பவர்களெல்லாம் ஒன்றை நமக்கு தெளிவா புரியவைக்கிறாங்க. அதாவது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களெல்லாம் முட்டாள்கள் என்பதுதான்.
    குறிப்பு; விந்தணுவின் வடிவம் நீர் அல்ல. ஒரு துளி விந்தும்(with semen) தேவை இல்லை.
    // –சாகித்.

    சாகித்,

    நீங்கள் சொல்வது போல “விந்து விரையிலிருந்து வெளியேறுகிறது” எனக் குர் ஆன் கூறுவதாக எழுதினால், அது “சாகித் எழுதிய குர்ஆன்” எனத் தான் தலைப்பு வைக்க முடியும்.

    குர்ஆன் “மொழி பெயர்ப்பு” எல்லாமே “மொழிபெயர்ப்பு”தான். அது குர்ஆன் ஆக முடியாது. காலத்துக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு வேறுபடுவதும் குர்ஆனின் ஆற்றலையே குறிக்கிறது. இது அதன் புனிதத் தன்மைக்கு சான்று.

    ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ்மொழி பெயர்ப்பை விட சிறந்தது ஏன் என நான் முன்னாலேயே சொல்லிட்டேனே. உங்கள் மார்க்ஸிய அறிவுக்கு எட்டலையோ ? இல்லை உங்களது அறிவு ‘மா’வால் ஆனதா ? ஆங்கில மொழிபெயர்ப்புகள், உலக அளவில் பலராலும் சரிபார்க்கப் படுகின்றன.

    செங்கொடி,

    சரி பதில் சொல்லுங்கள். விந்து-உற்பத்திப் பற்றி குர் ஆன் பேசாத போது, விந்து-உற்பத்தி பற்றி குர் ஆன் பேசுவதாக பதிவிட்டதேன் ? ஜான் டிரஸ்டு மொழி பெயர்ப்புப்படியே தான் கூறுங்களேன். அது விந்து உற்பத்திப் பற்றியா பேசுகிறது ?

  13. நண்பர் மதவாதி,
    நான் வேறு இடத்திலிருந்து எதனையும் துணைக்கழைக்கவில்லை. நீங்கள்தான் இப்பகுதியிலேயே கூறியுள்ளீர்கள்.

    ‘மொழிபெயர்ப்பு வேறுபடுறது என்பதற்காக குர்ஆன் குறைபட்டது என்பதா ? ”

    ஏன் இந்த மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தினீர்கள் எனவும் கூறவும் ? உலக இஸ்லாமிய ’அறிஞர்கள் பலர் பார்த்து சரிபார்த்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை சுட்டுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?’

    இதற்கென்ன பொருள். சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பை விட்டுவிட்டு தவறான மொழிபெயர்ப்பை ஏன் பயன்படுத்தினீர்கள் என்பதுதானே. அப்படியென்றால் நான் ஆங்கிலம் தெரிந்தவனாக இருக்கவேண்டும். எனக்குத் தமிழ் மட்டுமே தெரியும். வேறு மொழி தெரியாத மூடன் நான். நான் என்ன செய்வது. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் தான் குழப்புகிறார்கள் என்றால் இந்த செங்கொடி வேறு குழப்புகிறார். செங்கொடிதான் குழப்புகிறார் என்றால் அவருக்கு சரியான பதிலைக் கொடுக்கமுடியாத நீங்கள் வேறு மேலும் குழப்புகிறீர்களே. ஏன் இறைவன் எதைப் பற்றியும் நேரடியாக கூறமாட்டாரோ?

    ”முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது” முதுகந்தண்டு விலா எலும்பு என்று குறிப்பிட்ட இறைவனுக்கு இவற்றிற்கு இடைப்பட்ட பகுதியின் பெயரைக் கூறுவதில் என்ன தயக்கம்.(இருந்தால்தான் என்கிறீர்களா!)

    ” குர்ஆன் பதில் கூறுகிறது: அவ்வாறு யாரும், எந்த சமூகமும், எந்த குலமும், எந்த கோத்திரமும் இல்லை”
    ஹா ஹா ஹா. நீங்களே கூறிக்கொண்டால் எப்படி. பரவலாகத் தெரியும் மொழிகளிலே பல பிரச்சினை. இதில் பழங்குடியினர் மொழியில் வேறு கதைத்திருக்கிறீர்களா! நல்லது! தெளிவாக விளங்கிடுவார்கள்!

  14. ”குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான்” என்பதோடு விட்டிருந்தால் பிரச்சினையில்லை.
    ”அது முதுகெலும்பிற்கும் நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது” என்று விந்து வெளியாகும் பகுதியைக் குறிப்பதாலேயே விமர்சனம் வருகிறது. செங்கொடி போன்றவர்களூக்கு வாய்ப்பகவும் அமைகிறது.

  15. இந்த கட்டுரையில் ஏதோ கூறப்பட்டுள்ளது. பார்க்கவும்: http://www.islamkalvi.com/portal/?p=4654

    அந்தக் கட்டுரையின் பஞ்ச் லைன்:

    //இனவிருத்தி செய்யும் இந்த விரைக்குத் தேவையான இரத்தம், அது தொடர்புடைய நரம்பு, நணநீர் போன்றவைகள் அனைத்தும் விரை இருந்த பழைய இடமான முதுகந்தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்துதான் கிடைக்கிறது. இவ்வாறு விரை இருக்க வேண்டிய இடமும், விரைக்குத் தேவையான அனைத்தும் முதுகந்தண்டிற்கும், கடைசி நெஞ்சலும்புக்கும் இடையில்தான் இருக்கிறது என்பதால் இறைவன் “முதுகந்தண்டிற்கும் கடைசி நெஞ்சலும்புக்கும் இடையிலிருந்து வெளிப்படும் நீரிலிருந்து” என்று கூறியுள்ளான். இதன் மூலம் அந்த விரை இருந்த ஆரம்ப நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இறைவனின் நோக்கமாக இருக்கலாம்.//

  16. நல்ல கட்டுரை தோழர் தொடர்ச்சியா மதவாதிகளின் முகமூடியை கிழித்தெறியுங்கள்,

    தோழர் அஸ்கர் உங்கள் வாதம் சிறப்பாக இருக்கிறது மதவாதியை விட்டுவிடாதிர்கள், வெளியூர் பயணத்தில் இருப்பதால் இந்த விவாதத்தில்
    தொடர்ச்சியாக கலந்து கொள்ள முடியாத நிலை மற்ற தோழர்கள் கலக்குங்கள்.

  17. “”””””””””””நல்ல கட்டுரை தோழர் தொடர்ச்சியா மதவாதிகளின் முகமூடியை கிழித்தெறியுங்கள்””””””””””””””””””””””
    “நல்ல கட்டுரை தோழர்” இது செங்கொடியை விடுதலை அவர்கள் பாராட்டுகிறார்கள்.
    “தொடர்ச்சியா மதவாதிகளின் முகமூடியை கிழித்தெறியுங்கள்”
    இங்கு தொடர்ச்சியா இஸ்லாமை பற்றிதான் எழுதிகொண்டிருக்கிறார்கள்.அப்படின்னா இவர்களுடைய பார்வையில் மதம் என்றால் அது “இஸ்லாம்” மட்டுமே.மதவாதிகள் என்றால் அது “முஸ்லிம்கள்” மட்டுமே என்பது ஐயத்துகிடமின்றி தெரிகிறது.

  18. யாருய்யா இது மேல ஒரு ஜால்ரா ?!

    ஐயா “விடுதலை”, சொல்லப்பட்ட கருத்து மேல உங்களுக்கு கருத்து இருந்தா சொல்லுங்க. இல்ல, உங்கள் வெளியூர் பயணத்த தொடருங்க. இதுல என்ன ஜால்ரா வேண்டிகிடக்கு. அஸ்கருக்கு ஃபோன் பண்ணி ஜால்ரா தட்டலாமுல்ல ?

  19. நண்பர் செங்கொடி,

    சில வாரங்களுக்கு முன்பு நமக்கிடையே என் பதிவில் நடந்த உரையாடலை எனது வேலைப்பளு காரணமாக தொடர முடியவில்லை. அதை இங்கே தொடரலாமா?

    அந்த உரையாடலை நினைவூட்டிக் கொள்வதற்காக:

    //நம்முடைய தொடர் உரையாடலுக்கு எதை கருவாக கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்து கூறுங்கள். அது எதுவாக இருந்தாலும் இஸ்லாமிய ஒருங்கிணைவு தவறு என்பது குறித்ததாக இருந்தாலும், கம்யுனிச சாரம் குறித்ததாக இருந்தாலும் சரி. எது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் பின் உரையாடலாம் // என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள்..

    அதற்குப் பதிலாக நான் சொன்னது:

    // ‘இஸ்லாமியக் கொள்கைகள் தவறானவை’ என்று நிரூபிப்பதுதான் உங்கள் நோக்கம் என்பதை உங்களின் பதிவுகளின் மூலமாக புரிந்து வைத்திருக்கிறேன். இதுதான் கரு. இந்துப் பாசிசம், வர்க்கப் போராட்டம் என்பதெல்லாம் உப கதைகள். நாம் கிளைக் கதைகளைத் தவிர்த்து கருவைப் பற்றி விவாதிப்போமே!

    இன்ஷா அல்லாஹ், நாம் அடிப்படையிலிருந்தே தொடங்கலாம்.

    மனிதர்களாகிய நாமும், நாம் வாழும் இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டவை என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று.

    இந்த விஷயத்தில் நீங்கள் உடன்படுகிறீர்களென்றால் நாம் அடுத்த கட்டத்திற்கு நகரலாம். இல்லையெனில், உங்கள் கொள்கைப்படி இந்த உலகம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆதாரங்களுடன் விளக்குங்கள்.//

    இதற்குப் பிறகு நீங்கள் எழுதிய ஒரு பின்னூட்டத்தில் எனது மேற்கண்ட கேள்விக்கான பதில் இல்லை. நான் முன்பே சொன்னதுபோல, அடிப்படையிலிருந்தே நாம் இந்த உரையாடலைத் தொடங்குவோம்.

    படைப்பாளன் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைகளை நீங்கள் மறுப்பதாக இருந்தால் உங்கள் கொள்கைப்படி இந்த உலகம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆதாரங்களுடன் விளக்குங்கள்.

    நன்றி.

  20. “”””””””””””நல்ல கட்டுரை தோழர் தொடர்ச்சியா மதவாதிகளின் முகமூடியை கிழித்தெறியுங்கள்””””””””””””””””””””””
    “நல்ல கட்டுரை தோழர்” இது செங்கொடியை விடுதலை அவர்கள் பாராட்டுகிறார்கள்.
    “தொடர்ச்சியா மதவாதிகளின் முகமூடியை கிழித்தெறியுங்கள்”
    இங்கு தொடர்ச்சியா இஸ்லாமை பற்றிதான் எழுதிகொண்டிருக்கிறார்கள்.அப்படின்னா இவர்களுடைய பார்வையில் மதம் என்றால் அது “இஸ்லாம்” மட்டுமே.மதவாதிகள் என்றால் அது “முஸ்லிம்கள்” மட்டுமே என்பது ஐயத்துகிடமின்றி தெரிகிறது.
    இதை செங்கொடியிடம் சொன்னால் அவர் சொல்லும் பதில் “நான் பொதுவாகவே எல்லா மதத்தவர்களையும் எதிர்ப்பவன்” என்று பூசி மொழுகுகிறார்.இவருடைய தளத்தில் மதம் என்ற தலைப்பிலுள்ள கட்டுரைகளை முழுவதுமாக பார்த்தீர்களேயானால் “இஸ்லாமை” பற்றியும் “முஸ்லிம்களை” பற்றியும் மட்டுமே இருப்பதை காண்பீர்கள்.இதற்க்கான அர்த்தம் மதம் என்றால் “இஸ்லாம்” மதவாதிகள் என்றால் அது முஸ்லிம்கள் என்பதை மக்கள் மனத்தில் பதியவைக்கும் முயற்சியை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

  21. எப்பொழுதுமே ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று நம்மிடையே எழும் ஆவல் நம்மை வழிதவறச் செய்துவிடலாம். குறிப்பாக நம்மைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கவேண்டும். தன்னை ஒத்த மனிதன் ஏன் பிச்சை எடுக்கிறான் என்பதைப் பற்றி நாம் சிந்தித்தாலும் கூட அதன் முடிவு இறைவனின் படைப்பின் அற்புதத்தைப் புகழ்வதில்தான் இருக்கவேண்டுமே அன்றி வேறு காரணங்களை தேடும் ஆவல் இருக்கக்கூடாது. அது நம்மை காபிராக்கிவிடும். ஏனென்றால் நம்மை தர்மகத்தர்களாக்கும் அற்புதப் படைப்பல்லவா பிச்சைக்காரர்கள். இங்கு கூட செங்கொடியின் ஆவல் இவரைக் காபிராக்கிவிட்டது. இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று கூட நாம் நினைக்கலாம். இவர் அல்லது இவரைப் போன்ற காபிர்கள் கூட நமக்கு தேவையானவர்கள்தான். ஏனென்றால் இவர்கள் தான் குரானில் கூறப்பட்டுள்ளவற்றை தமது கண்டுபிடிப்புகளின் மூலம் மெய்பிப்பவர்கள், தமது விமர்சனங்கள் மூலம் 6ம் நூற்றாண்டிற்கு தகுந்த அறிவியலைக் கொண்ட குரானை 21ம் நூற்றாண்டிற்கு தகுந்ததானதாக நம்மை திருத்தம் செய்ய வைப்பவர்கள். இவர்களால்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பேவா…..என்று நம்மால் வியக்கமுடிகிறது. இப்பதிவில் கூட ’விந்து’வைப் பற்றி செங்கொடி எழுதிய பிறகே இதைப் பற்றிய குரானின் அறிவியலை நம்மால் வெளிக்கொணர முடிகிறது. ’விந்து பீச்சப்படும்போது’ எனும்போது விதைப்பை ஆணின் இன உறுப்பிற்கு கீழேதான் இருக்கும் என்பது நமக்கு தெரிந்தாலும் கூட கருவாக இருக்கும்போது எங்கே இருந்திருக்கும் என்று யோசிக்கவைக்கிறது. மனிதன் கருவாக உருவாவதற்கு முன்பு ஒன்றில்லாமல் இருந்த நிலையை குரான் விளித்தல் கூட ஆச்சரியம்தான். குழந்தை ஆண்சாயலாகவும் பெண்சாயலாகவும் வருவது முறையே ஆண் நீர் முந்துவதாலும் பெண் நீர் முந்துவதாலும்தான் ஏற்படுகிறதாம். முஹம்மது கூறிய அனைத்திலும் அறிவியல் இருக்கிறது. ஆனால் நாம் தான் இதை விளங்கிக்கொள்வதில்லை, காபிர்கள் கண்டுபிடிக்கும் வரையில்.

    6ம் நூற்றாண்டிற்குப் பிறகு வேறு தூதர் கிடையாது, வேறு மார்க்கம் கிடையாது, வேறு வேதம் கிடையாது என்பதினால் வேறெதைப்பற்றியும் நாம் சிந்திப்பதில்லை. அதற்காக காபிர்களும் சிந்திக்க்க் கூடாது என்று கட்டுப்படுத்த முடியாதல்லவா?

    இப்பொழுது கூறுங்கள் செங்கொடி எழுதலாமா? அல்லது எழுதக்கூடாதா? என்று.

  22. செங்கொடி எழுதுவதென்பது அவருடைய உரிமை அதை தடுப்பதற்க்கு யாருக்கும் உரிமையில்லை.
    இன்று இஸ்லாமைப்பற்றி எழுதுகிறார் நாளை மற்ற மதங்கள் (என்று வேறு ஏதாவது இருந்து அது மதங்களாக அவருடைய பார்வைக்கு பட்டால்?) அதைப்பற்றியும் எழுதினால்கூட தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.
    என்னுடைய குற்றசாட்டுகளெல்லாம் அவருக்கு இஸ்லாம் மீது “மட்டும்” வெறுப்பு இருப்பதாகவே தெரிகிறது.
    இவருடைய எல்லா கட்டுரைகளையும் பார்த்தால் எதற்க்காக இப்படி ஒரு குற்றசாட்டை வைக்கிறேன் என்பதை நான் சொல்லி உங்களுக்கு புரியவேண்டிய அவசியம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்.

    *******************************************************************
    நண்பர் அப்துல்லாஹ்

    உங்களின் பின்னுட்டத்தில் தொடர்ந்து நான் ஒரேவிதமான திருத்தத்தை செய்து வருகிறேன் என்பதை புரிந்திருப்பீர்கள். எனவே மீண்டும் அவ்வாறு செயல்படுவதை தவிர்க்கவும்.

  23. நண்பர் செங்கொடி,

    சில வாரங்களுக்கு முன்பு நமக்கிடையே என் பதிவில் நடந்த உரையாடலை எனது வேலைப்பளு காரணமாக தொடர முடியவில்லை. அதை இங்கே தொடரலாமா?

    அந்த உரையாடலை நினைவூட்டிக் கொள்வதற்காக:

    //நம்முடைய தொடர் உரையாடலுக்கு எதை கருவாக கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்து கூறுங்கள். அது எதுவாக இருந்தாலும் இஸ்லாமிய ஒருங்கிணைவு தவறு என்பது குறித்ததாக இருந்தாலும், கம்யுனிச சாரம் குறித்ததாக இருந்தாலும் சரி. எது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் பின் உரையாடலாம் // என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள்..

    அதற்குப் பதிலாக நான் சொன்னது:

    // ‘இஸ்லாமியக் கொள்கைகள் தவறானவை’ என்று நிரூபிப்பதுதான் உங்கள் நோக்கம் என்பதை உங்களின் பதிவுகளின் மூலமாக புரிந்து வைத்திருக்கிறேன். இதுதான் கரு. இந்துப் பாசிசம், வர்க்கப் போராட்டம் என்பதெல்லாம் உப கதைகள். நாம் கிளைக் கதைகளைத் தவிர்த்து கருவைப் பற்றி விவாதிப்போமே!

    இன்ஷா அல்லாஹ், நாம் அடிப்படையிலிருந்தே தொடங்கலாம்.

    மனிதர்களாகிய நாமும், நாம் வாழும் இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டவை என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று.

    இந்த விஷயத்தில் நீங்கள் உடன்படுகிறீர்களென்றால் நாம் அடுத்த கட்டத்திற்கு நகரலாம். இல்லையெனில், உங்கள் கொள்கைப்படி இந்த உலகம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆதாரங்களுடன் விளக்குங்கள்.//

    இதற்குப் பிறகு நீங்கள் எழுதிய ஒரு பின்னூட்டத்தில் எனது மேற்கண்ட கேள்விக்கான பதில் இல்லை. நான் முன்பே சொன்னதுபோல, அடிப்படையிலிருந்தே நாம் இந்த உரையாடலைத் தொடங்குவோம்.

    படைப்பாளன் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைகளை நீங்கள் மறுப்பதாக இருந்தால் உங்கள் கொள்கைப்படி இந்த உலகம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆதாரங்களுடன் விளக்குங்கள்.

    நன்றி

  24. நண்பர் சலாஹுத்தீன்,

    கடந்த சில நாட்களாக இணைய இணைப்பு இல்லாததால் உடன் பதிலளிக்க இயலவில்லை. தாராளமாக இங்கு தொடரலாம். தேவைப்பட்டால் தனி பகுதியை ஒதுக்கியே கலந்துரையாடலாம். முன்னதாக, உங்கள் நினைவூட்டலில் என்னுடைய ஒரு பின்னூட்டத்தை மறந்து விட்டீர்கள்

    senkodi said…
    நண்பர் சலாவுதீன்,

    உங்கள் புரிதலுக்கும் நகர்தலுக்கும் நன்றி.

    கிளைகளை விட்டுவிட்டு கருவுக்கு வந்திருக்கும் நீங்கள் முதலிலேயே அவ்வாறு கருவுக்கு வந்திருக்கலாம். இந்துப்பாசிசங்களின் திட்டங்கள் குறித்து பக்கம் பக்கமாக விளக்குவதற்கு அவசியமில்லாமல், இஸ்லாம் உள்ளிட்ட மதங்களின் தவறான உள்ளீடுகளை தெளிவுபடுத்துவதற்க்கான காரணத்தை நீங்கள் எடுத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு நீங்கள் எடுத்துக்கொண்டதாலும் பின்னர் அதிலிருந்து விலகி வேறொரு தலைப்பை முன்வைத்ததாலுமே என்னுடைய விளக்கங்களும் உரையாடற்தலைப்பு குறித்த தெரிவும் அவசியம் என்றானது. பரவாயில்லை இப்போது மையத்திற்கு நகர்ந்துவிட்டோம்.

    உங்கள் அடிப்படை நம்பிக்கையை தகர்ப்பதற்குத்தான் நான் தொடராக எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். \\’இஸ்லாமியக் கொள்கைகள் தவறானவை’ என்று நிரூபிப்பதுதான் உங்கள் நோக்கம் என்பதை உங்களின் பதிவுகளின் மூலமாக புரிந்து வைத்திருக்கிறேன்.// எனவே மீண்டும் அவற்றை இங்கு புதிதாக தொடங்க வேண்டிய தேவையில்லை எனக்கருதுகிறேன். ஆகவே, என்னுடைய தொடரின் முதலிரண்டு பகுதிகளான நுழைவு வாயில், அறிமுகம் ஆகியவற்றை விட்டு(ஏற்கனவே நீங்கள் எழுதியும் விட்டீர்கள்) மூன்றாவது பகுதியிலிருந்து உங்கள் மறுப்புரையை தொடங்கலாம். நான் இந்த தளத்திற்கு வந்தே வேண்டிய விளக்கங்களை தருகிறேன்.

    தோழமையுடன்,
    செங்கொடி.
    http://www.senkodi.wordpress.com
    22/01/2010 16:15

  25. இஸ்லாமிய நண்பரே,

    நீங்கள் சுட்டிக்காட்டிய பதிவைப் படித்தேன். கருத்து முதல் வாதம் என்பதற்கு தெளிவான அத்தாட்சியாக இருக்கிறது.

    உடல் உறுப்புகளில் பல இடம் மாறியவை தான். இதயம் முதலில் வயிற்றுப் பகுதியில் தான் இருக்கும். வயிற்றில் இருக்கும்போதே துடிக்கவும் ஆரம்பித்துவிடுகிறது. பின்னர் தான் அது மேலேறி இடது மார்புப் பகுதிக்கு வருகிறது. எனவே விரைப்பைகள் இடம் மாறியதை அந்த வசனத்தில் குறிப்பிட்டுக்காட்டும் தேவை என்ன? தவிரவும் அது பொருத்தமாகவும் இல்லை, ஏனென்றால் இதயத்தைப் போல் விரைப்பை பழைய இடத்தில் செயல்படவும் இல்லை.
    குரானின் வாசங்கள் தவறாகிவிடக்கூடாது என்பதற்காக கொடுக்கப்படும் விளக்கங்கள் தானே தவிர வேறொன்றுமில்லை.

    செங்கொடி

  26. நண்பர் செங்கொடி,

    //முன்னதாக, உங்கள் நினைவூட்டலில் என்னுடைய ஒரு பின்னூட்டத்தை மறந்து விட்டீர்கள்// என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    நான் எனது நினைவூட்டலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்…

    //இதற்குப் பிறகு நீங்கள் எழுதிய ஒரு பின்னூட்டத்தில் எனது மேற்கண்ட கேள்விக்கான பதில் இல்லை. நான் முன்பே சொன்னதுபோல, அடிப்படையிலிருந்தே நாம் இந்த உரையாடலைத் தொடங்குவோம்.//

    எனவே, உலகம் எவ்வாறு தோன்றியது என்ற அடிப்படையிலிருந்தே நமது உரையாடலை தொடங்குவோம்..

    நன்றி.

  27. நன்றி சலாஹுத்தீன்,

    விரைவில் இதற்கான புதிய பகுதி ஒன்றை தொடங்குகிறேன்.

    செங்கொடி

  28. செங்கொடி,
    இவ்வாறு கடுமையாக முயற்சித்து சால்ஜாப்பு சொல்லுவதற்கு பின்னால் இருப்பது அன்றைய கிரேக்க மருத்து அறிவியல். நீங்கள் போட்டுள்ள வரைபடத்தை பாருங்கள். விதையிலிருந்து விந்து உற்பத்தியாகி மேலே பைக்கு போகிறது. அங்கு சேமிக்கப்பட்டு பிறகு வெளியே வருகிறது. ஆகவே விந்து அங்குதான் உருவாக்கப்படுகிறது விரைகளில் அல்ல என்று கருதினார்கள்.

    http://books.google.com/books?id=CyK2oKiLDTAC&pg=PA49&lpg=PA49&dq=castration+galen&source=bl&ots=CHcF3xjP3Q&sig=Nl_RqGrR7hen8zjV04V_xGuV8No&hl=en&ei=0MmTS-LTIcq0tgeuvaTUCg&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CAgQ6AEwAQ#v=onepage&q=castration%20galen&f=false

    இதே தவறான கருத்தையே முகம்மதின் குரான் முன் வைக்கிறது.

  29. According to spiritual development of individuals,these kind of arguments yields no result.Every one has to follow their own religion and attain the enlightment.

    All rivers at end reaches the sea so as all teh religions merges with me.

    –Bhagavat Gita.

  30. நன்றி ராம்.
    Every one has to follow their own religion என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே இஸ்லாமிய ஷரியாவை முஸ்லீம்கள் பின்பற்ற அனுமதிக்கவேண்டும். ஆகவே முஸ்லீம்கள் செய்யும் குற்றங்களுக்கு கைகளை கால்களை வெட்டுவதையும் இந்திய அரசு அனுமதிக்கவேண்டும். பெண்கள் தவறு செய்தால் அவர்களை கல்லலடித்து கொல்வதற்கும் அனுமதிக்க வேண்டும். இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கு சட்டப்படி மரணதண்டனை வழங்குவதை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும். முஸ்லீம்களுக்கு மற்ற இந்துக்களும், கிறிஸ்துவர்களும் ஜிஸியா வரி கொடுக்கவேண்டும். மனைவிகளை அடித்தால் domestic abuse என்று கேஸ் போடுவதற்கு முஸ்லீம் ஆண்களுக்கு விலக்கு வேண்டும். ஏனெனில் அல்லாவே மனைவிமார்களை அடிக்க சொல்லியிருக்கிறார். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

  31. இப்னுமசுரு ச்ச்சீ டங்கு சிலிப்பயிடுத்து இப்னு பஷிரு.
    ஷேமமாக இருக்கேளா அப்புடியே மனுதர்மத்துல உள்ள நீதியான மனிதநேய சட்டங்களை இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் நீங்க அதுக்கும் கொஞ்சம் ரெக்கமன்ட் பன்னுங்கோ உதராணத்துக்கு இந்த சட்டத்த பாருங்கோ ஒரு பார்ப்பான் சூத்திர பென்னை கற்பழித்து விட்டால் அதற்கு தன்டனையாக நடுவீதியில் அந்த பார்ப்பான் ஒரு முடியை பிடுங்கி போட்டால் போதும் தன்டனை நிறைவேறிவிடும் என்ன அருமையான சட்டம்!!!

  32. சிவலிங்கம்,
    கூடவே கணவன் இறந்துவிட்டால் மனைவியை உடன்கட்டை ஏறும் சட்டத்தையும் நிறைவேற்றச் சொல்லுங்கள். இன்னும் அருமையாக இருக்கும்

  33. சிவலிங்கம்,
    எனக்கெதுக்குங்க அத பத்தியெல்லாம். இஸ்லாமிய ஷரியாவை உலகமெல்லாம் அமல் படுத்துவதற்குத்தானே நாங்க போராட முடியும்? இந்து சட்டத்தை அமல்படுத்தனும்னு நாங்க ஏங்க போராடனும்? இந்து சட்டத்தை இந்துக்களே தூக்கி போட்டுட்டாங்க. கேட்டா, அதெல்லாம் பழங்காலத்து சமாச்சாரம்;ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும்;இப்போதைக்கு அம்பேத்கார் எழுதுனதத்தான் நாங்க பாலோ பண்ணுவோம்ங்கிராங்க. அதவிட கூத்து என்னான்னா, மனுதர்மத்திலேயே படிச்சவங்க பத்து பேர் சேர்ந்து மனுதர்மத்தில இருக்கிற எந்த விதியையும் மாத்திக்கலாம்னு இருக்குதாங்க.

    இப்ப சட்டமன்றம்னு ஒன்னு தனியா வச்சிருக்காங்க. அதில உட்கார்ந்து சட்டத்தை மாத்துறதுக்கு தேர்தல் வேற வச்சி எம்பி எம்எல்ஏக்களை வச்சி சட்டத்தை அப்பப்ப மாத்திக்கிறாங்க. அல்லாவுக்கு போட்டியா சட்டத்தை மாத்துறதுக்கு மனுசனுங்கள தேர்ந்தெடுக்கிறதெல்லாம் நாங்க ஒத்துகிறதில்லை. அதுனாலத்தான் நாங்க தேர்தல்-ஜனநாயகங்கறதையெல்லாம் ஒத்துகிறதில்லை. நாங்கல்லாம் அப்படி மனுசனுங்க செய்த சட்டத்தை பாலோ பண்றதில்லை. அல்லா உருவாக்கிய சட்டத்தைத்தான் பாலோ பண்ணுவோம். அல்லா 1400 வருடங்களுக்கு முன்னால ஒரு சட்டத்தை எங்களுக்கு கொடுத்தாரு. அதை எந்த மாத்தமும் இல்லாம பாலோ பண்றதுதான் எங்க வேலை. உங்களை மாதிரி ஒவ்வொரு பிரச்னை வரும்போதும் ஒருமாதிரி மாத்திக்க முடியாதுங்க. தெரியுதா? ரெண்டு பொண்டாட்டி கட்டறதுக்கு இந்தியாவில பழங்காலத்தில எந்த ஒரு தடையும் கிடையாது. இப்ப பாத்தீங்கன்னா, ரெண்டு பொண்டாட்டி கட்டினா இந்து சட்டப்படி தப்புன்னு சொல்றாங்க. நாம உட்டுடுவோமா? நம்ம நாலு பொண்டாட்டி கட்ட அல்லா அனுமதி கொடுத்திருக்காரு. அதே போல நினெச்சா தலாக் தலாக் தலாக்ன்னு ஒரு பொண்டாட்டிய ரத்து பண்ணிட்டு இன்னொரு பொண்டாட்டி கட்டிக்கலாம். எவ்வளவு ஈஸியா பண்ணிக்கொடுத்திருக்காரு அல்லா. இதனாலதான் கொஞ்சம் கொஞ்சமா இஸ்லாமிய ஷரியாவை இந்தியாவுக்குள்ள புகுத்தணும்னு நாங்க டிரை பண்ணிகிட்டு இருக்கோம். உங்களுக்கு ரெண்டு பொண்டாட்டி ஏன் நாலு பொண்டாட்டி கட்டனும்னா ஓடியாங்க.பச்ச குழந்தையைக் கூட கல்யாணம் பண்ணிக்கலாம். ஒரு தடையும் கிடையாது. இஸ்லாத்துக்குல்ல வந்தீங்கன்னா நெனச்சா ஒரு பொண்டாட்டி கட்டலாம். ஒரு பொண்டாட்டியை தலாக் பண்ணலாம். ஓடியாங்க.

  34. விதைப்பை எங்கிருந்து இறங்குகிறது என்று தெரியுமா ?
    ஒரு விதை இல்லாத குழந்தை களுக்கு எங்கிருக்கும் இந்த விந்து பை ?

    முத்துக்கு தண்டுவடதிர்க்கும் விலா எலும்புக்கும் இடையில் விதை இருந்தது ,பிறந்த உடன் அது விதை பைக்கு இறங்கிவிடும்(A testis absent from the normal scrotal position can be:
    found anywhere along the “path of descent” from high in the posterior (retroperitoneal) abdomen, just below the kidney, to the inguinal ring;
    found in the inguinal canal;.. http://en.wikipedia.org/wiki/Cryptorchidism ..)எனவே விந்துவின் மூலம் இறைவன் கூறியது தான் சத்தியம் ..

    ஆயுர்வேதம் சொல்கிறது ..சுக்ரம் சர்வ சரீரம் வ்யாபத்..விந்து உடம்பின் எல்லா பகுதியில் இருந்தும் பிறக்கிறது ..
    விந்து வெளிவிடும் போது ஏன் உடல் புல்லரிக்கிறது ?,வெறும் ஜனன உறுப்புகள் மட்டும் சந்தோஷம் அடைகிறது ?

    மறைவானவற்றை இறைவன் ஒருவனே அறிவான் ..

  35. இந்த அரிவற்ற செங்கொடியின் வாகியங்கள் கன்டு கோபம் வேன்டாம் நண்பர்கள we have many work, but his only work is saying unknown things and trying him to show as a big person.

    what he know about Islam??.i think he is from RSS and doing these kind of dirty things. Does he know fully about hindu god’s and their birth. KRISHNAN’S TIMEPASS IS WATCHING THE NAKED BATHING GIRL IN RIVER.

    Shandu

  36. வாளுக்கு பயந்து முஸ்லீமாக மாறிட்டு, இப்ப அதுக்காக எவ்வளவு சப்பகட்டு கட்டவேண்டியிருக்கு…????ஹூம்

  37. நண்பர் அஷாக்,

    மறுபடியும் முதல்ல இருந்தா? நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டியில் கூறப்பட்டிருக்கும் விளக்கத்திற்கும் சேர்த்தே இங்கு பதில் கூறப்பட்டிருக்கிறது. இன்னொரு முறை நன்கு அமைதியாக படித்து உள்வாங்கிக் கொண்டு பின் பதிலளிக்கவும், உங்களால் இயன்றால்.

    நன்றி

  38. விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என கேள்வி கேட்பது முட்டாள்தனமாக இல்லையா உங்களுக்கு? குர்ஆன் என்ன உங்களுக்கு அறிவியல் பாடமா நடத்துகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதற்கான சான்றாகத்தான் இதுபோன்ற அறிவியல் சார்ந்த வசனங்களை தருகிறது. மேலும் மொழி பெயர்ப்பில் தவறு காண்கிறீர்கள். மொழிபெயர்ப்பு தவறாக இருந்தாலும் அதற்கு குர் ஆன் எப்படி பொறுப்பாக முடியும்? நீங்கள் வேண்டுமானால் அரபி இலக்கணம் படித்துவிட்டு வந்து மொழி பெயர்ப்பு செய்யுங்கள். முட்டாள்தனமாக இது போன்று உளராதீர்கள்.

  39. நண்பர் யாஸீன்,

    புதுசா நீங்க, இங்கு குரான் குறிப்பிடும் வசனங்கள் எவ்வாறு அறிவியலுக்கு மாறாக இருக்கிறது என விளக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு மத வியாபாரிகள் எவ்வாறு ஜல்லியடிக்கிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் உங்களுக்கு மாற்றுக் கருத்து உண்டா? கூறுங்கள். உங்கள் பங்குக்கு நீங்களும் சுற்ற வேண்டாம்.

  40. ஆம் நான் புதிதுதான். இதுபோன்ற முட்டாள் தளங்களுக்கு நான் புதிதுதான். என்னுடைய பதிவிற்கு தகுந்த பதிலை நீங்கள் கூறவில்லை. மத வியாபாரிகளைப் ப்ற்றி நீங்கள் ஏதேனும் குறை கூறினால், அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நீங்கள் குறை கூறுவது இறைவனின் வார்த்தைகளான குர்ஆன் பற்றி குறை கூறுகிறீர்கள். அப்படி குறை கூற வேண்டுமானால் அது அறிவுப் பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர முட்டாள்தனமாக இருக்ககூடாது. அறிவு இருந்தால் நிச்சயமாக குறையும் காண இயலாது, ஏனென்றால் அறிவியலுக்கும் அறிவியலை போதிக்கிறது குர்ஆன்.

  41. நண்பர் யாஸீன்,

    குரான் அறிவியலுக்கும் அறிவியலை போதிக்கிறது என்பது உங்களின் கருத்து, உங்களின் நம்பிக்கை. அது உங்களின் நம்பிக்கையாக மட்டுமே இருக்கும் வரை யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால், அது மட்டுமே உண்மை எனும் போதுதான் பிரச்சனை வருகிறது. குரானில் மலிந்து கிடக்கும் குழப்பங்கள் தான் மத வியாபாரிகளுக்கான அடிப்படையை உருவாக்குகிறது.

    இந்த கட்டுரை குறிப்பிடும் வசனத்தையே எடுத்துக் கொள்வோம். குரான், விந்து வெளிப்படும் இடத்தைக் குறிப்பிடுகிறதா? உருவாகும் இடத்தைக் குறிப்பிடுகிறதா? உருவாகும் இடம் என்றால் அது விரைப்பை. வெளிப்படும் இடம் என்றால் அது குறி. குரானோ, முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் என்கிறது. இது என்ன இடம்? எந்த உறுப்பு? அந்த இடத்திலிருந்து உருவாகிறதா? வெளிப்படுகிறதா?

    கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள் அதன் பிறகு கட்டுரையின் கருத்துக்கு வரலாம்.

  42. நான் அறிவியலில் சிறந்த ஞானியும் இல்லை. அரபு இலக்கணம் தெரிந்தவனும் இல்லை. இருப்பினும் உங்களுக்காக சில வார்த்தைகள். குர்ஆனின் விந்து வெளிப்படும் இடம் என்பது விந்துப்பை ஆக இருக்கக்கூடும் ஏனெனில் விரையில் உற்பத்தி செய்யப்பட்டாலும் விந்துப்பையில் இருந்துதானே விந்து வெளிப்படுகிறது. இது கீழ் முதுகந்தண்டின் பக்கத்தில் தானே இருக்கிறது. மேலும் மொழி பெயர்ப்பாளர்கள் தவறிழைப்பது தவிர்க்க முடியாதவை. ஏனெனில் அரபு மொழி என்பது நம்முடைய தாய் மொழி அல்ல. ஒரு மொழியிலிருந்து அடுத்த மொழிக்கு மாற்றம் செய்யும் போது மூல மொழிக்கு இணையான வர்த்தைகள் மற்ற மொழிகளில் சில சமயம் கிடைக்காது. எனவே அறிஞர்களின் அறிவுக்கு தகுந்தார் போல மொழி மாற்றம் செய்வார்கள். நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள், நீங்களும் அதே தவறை செய்வீர்கள். இது மொழிகளுக்கு இடையிலான தவறேயன்றி, மொழி பெயர்ப்பாளர்களின் தவறாக கொள்ள இயலாது. குர்ஆன் தவறு என நீங்கள் நிறுவ விரும்பினால் முதலில் அரபு மூல மொழியை கற்று பின்பு முடிந்தால் அதில் தவறுகளை கண்டுபிடித்து பின்பு தமிழில் நீங்கள் வெளியிடலாம். அதுவே சாலச் சிறந்தது. உங்களை போன்று குர்ஆன் தவறு என நிரூபிக்க அரபு மூல மொழி கற்ற போது அதன் உண்மைத் தன்மையை அறிந்து முஸ்லிமாக மாறியவர்கள் ஏராளம். எனவே மொழி பெயர்ப்பாளர்களை குறை கூறுவதை விடுத்து அறிவுப்பூர்வமாக செயல்படுங்கள். அறிவுப் பூர்வமான செயல்பாடே மக்களிடம் சென்றடையும். இது போன்ற ஈனச் செயலை செய்ய வேண்டாமென தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.

  43. நண்பர் யாஸீன்,

    உங்கள் விளக்கத்திற்கு(!) நன்றி. நீங்கள் அறிவியலில் சிறந்தவரும் இல்லை, அரபு மொழியில் புலமை பெற்றவரும் இல்லை. ஆனாலும், குரானுக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது எனும் ஒரே காரணத்திற்காக மாற்றுக் கருத்து கூற வந்திருக்கிறீர்கள். அப்படித்தானே, பரவாயில்லை.

    மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான்?குதித்து வெளிப்படும் ஒரு துளி நீரினால் படைக்கப்பட்டான். முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

    இவை தான் அந்த வசனங்கள். இதைத்தான் விதைப் பையில் தொடங்கி விந்துப் பையின் வழியாக முதுகந்தண்டு வரை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வசனம் குறிப்பிடுவது மனிதனை உருவாக்கப் பயன்படும் ஒரு துளி. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “யக்குறுஞ்” எனும் சொல்லுக்கான பொருள் என்ன? வெளிப்படுகிறது என்பது தான். எங்கிருந்து என்பதற்கு தொடர்பே இல்லாத ஓர் இடத்தை குறிப்பிடுகிறது குரான். உருவாகும் இடமான விதைப்பையோ, வெளிப்படும் இடமான குறியோ சொல்லப்படாமல் முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் என்று சொல்லப்படுகிறது. இது ஏன் என்றால் அந்த நேரத்தில் உலகில் புழக்கத்தில் இருந்த (கிரேக்க) கருத்து அது தான். அதனால் தான் அந்த வசனம் வெளிப்படும் போது அரபிகள் யாரும் அதற்கு எதிராக கேள்விகள் எதையும் எழுப்பவில்லை. ஆனால் அந்தக் கருத்து பின்னர் அறிவியலால் நிராகரிக்கப்பட்டு விட்டது. அறிவியலால் நிராகரிக்கப்பட்ட ஒரு கருத்து குரானில் இருக்கிறது என்றால் குரானின் கற்புக்கு இழுக்கு வந்து விடுமே. அதனால் தான் இப்போது தமிழில் மொழி பெயர்ப்பவர்கள் ஏதேதோ சொல்லி, அதற்கு அறிவியல் சட்டையெல்லாம் மாட்டி அழகு பார்க்கிறார்கள்.
    அறிவியல் அடிப்படையில் அந்த வசனத்தின் கருத்து அல்லது பொருள் தவறானது. இதை ஏற்றுக் கொள்கிறீர்களா மறுக்கிறீர்களா என்பது தான் பிரச்சனை. மற்றப்படி அந்த இடமாக இருக்கக் கூடும், இந்த இடமாக இருக்கக் கூடும் என்றெல்லாம் பலரும் தங்களின் சொந்தக் கருத்தை குரானுக்குள் திணிக்கிறார்கள். நீங்கள் உட்பட. தங்கள் சொந்தக் கருத்தை குரானில் திணிக்க வேண்டாம் என்று தான் நான் கூறுகிறேன். நியாயமாக இதற்கு நீங்கள் என்னை பாராட்ட வேண்டும். ஆனால் திட்டுகிறீர்கள். குரானுக்கு எதிரான கருத்தா ஆதரவான கருத்தா என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. சரியான கருத்தா தவறான கருத்தா என்று மட்டும் தான் நான் பார்க்கிறேன்.. அவ்வளவு தான். இதற்கு மேலும் உங்களால் ஏதாவது கூற முடிந்தால் பின்னர் நான் வருகிறேன்.

  44. விந்துப்பை எங்கே இருக்கிறது? அதன் செயல்பாடு என்ன? பொதுவாக விரையிலிருந்து விந்து உருவாகிறது என்று கூறினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனெனில் அறிவியல் சார்ந்த அறிவு இல்லை என்றாலும்கூட இவ்வாறு கூறமுடியும். விரை என்பது ஆண்மையுடன் தொடர்புடையது என்பதை படிப்பறிவே இல்லாதவர்கூட சொல்ல முடியும். விரையில் விந்து சுரந்தாலும் அது முழுமை பெறுவது விந்துப் பையில்தான். விந்துப்பையில் இருந்து வெளிப்படுகிறது எனக் கூறுவதே ஆச்சரியமூட்டும் செய்தியாக இருக்கும். ஏனெனில் விந்துப்பை பற்றிய அறிவு, அறிவியல் பற்றிய புரிதல் இல்லாமல் சாத்தியமில்லை. எனவே அறிவியல் இல்லாத காலகட்டத்திலும் விந்துப்பை பற்றி கூறுவதில்தான் அத்தாட்சி இருக்கிறது. விந்துப்பையில் இருந்து விந்து வெளிப்படுகிறது என்பதில் உங்களுக்கு ஏதும் மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன். இப்போது விந்துப்பை எங்கே இருக்கிறது என குர்ஆன் சரியாக கூறுகிறதா? என்பதில்தான் உங்களுக்கு குழப்பம் வருகிறது இல்லையா. அரபு மூலத்தில் இரண்டு உறுப்புகளுக்கு இடையில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது இல்லையா, அந்த இரண்டு உறுப்புகளுக்கான அரபு மூல வார்த்தை என்ன பயன்படுதப்பட்டிருக்கிறது? அதற்கான சரியான தமிழாக்கம் என்ன? என்று கூறுங்கள். அதில் ஒரு உறுப்பு முதுகந்தண்டு. முதுகந்தண்டின் அருகில்தான் விந்துப்பை இருக்கிறது. எனவே முதுகந்தண்டு என்பதில் முரண்பாடு ஒன்றும் இல்லை. மற்றொரு உறுப்பு எது என்பதில் மொழியாகத்தில் தவறு செய்கிறார்கள். சில அறிஞர்கள் மற்றொரு உறுப்பு விலா எலும்பு என்றும் வேறு சிலர் முன்பகுதி என்றும் கூறுகிறார்கள். முன்பகுதி என்று கூறினால் அதிலும் முரண்பாடு இல்லை. ஏனெனில் முதுகந்தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிதான் விந்துப்பை உள்ளது. எனவே இரண்டு உறுப்புகளுக்கான அரபு மூல வார்த்தையையும் சரியான மொழியாக்கத்தையும் நீங்களே விளக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  45. நண்பர் யாஸீன்,

    நீங்கள் காலத்தைக் குழப்புகிறீர்கள். குறிப்பிட்ட அந்த வசனத்தில் அறிவியல் முன்னறிவிப்பு என்று எதுவும் இல்லை. மாறாக அறிவியலுக்கு முரணான செய்தியாக அது இருக்கிறது. உங்கள் வாதத்தின் படியே பார்ப்போம். அந்த வசனம் அந்தக் காலத்தில் இருந்த தவறான புரிதலை மறுத்து அறிவியல் ரீதியான சரியான செய்தியை கூறியிருக்கிறது. விந்து குறித்த அறிவியல் அந்த அளவுக்கு வளராத அந்தக் காலத்தில் இந்தக் காலத்துக்கும் பொருந்தும் சரியான செய்தியை கூறியிருப்பதன் மூலம் குரான் இறைவனின் ஆக்கம் என உறுதியாகிறது. சரிதானே இதில் மறுப்பு ஒன்றும் இல்லையே.

    முகம்மதின் சம காலத்தில் இருந்த விந்து குறித்த புரிதல் என்ன? விந்து தான் குழந்தை பிறப்புக்கு காரணம் அது ஆணின் அடிவயிற்றின் பின்னிலிருந்து அதாவது முதுகந்தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து உருவாகி கலவியின் போது, குறி வழியே பெண்ணுடலை அடைகிறது. இதுவே குழந்தையாக மாறுகிறது. இதற்கு மேல் அந்தக் காலத்தில் புரிதல் எதுவும் இல்லை. விதைப்பை குறித்து எந்தத் தகவலும் அக்கால மக்களுக்கு இல்லை. குறியின் துணை உறுப்பு என்பதைத் தாண்டி விதைப்பை ஏன் இருக்கிறது என்பது கூட அந்தக் கால மக்களுக்கு தெரியாது. முகம்மதின் காலத்துக்கு சற்று முன்பிருந்து கிரேக்க அறிஞர்களின் இந்த புரிதல் தான் பொதுவில் இருந்தது. இதைத்தான் குரானும் சொல்லி இருக்கிறது. ஒரு வேளை அந்த நேரத்தில் இருந்த புரிதலுக்கு மாற்றான ஒன்றை குரானோ முகம்மதோ சொல்லி இருந்தால் அது குறித்த விளக்கம் கேட்கப்பட்டிருக்கும், அதற்கு முகம்மது ஏதாவது விளக்கம் அளித்து அது ஹதீஸ்களில் பதிவாகி இருக்கும். அப்படி எந்தப் பதிவும் இல்லை என்பதே குரான் அந்தக் கால புரிதலுக்கு மாற்றாக எதையும் சொல்லவில்லை என்பதற்கான ஆதாரம்.

    மொழிபெயர்ப்புகள் எல்லாம் பின்னால் வந்தவை. தமிழைப் பொருந்தவரை 50 அல்லது 60 ஆண்டுகள் தாம் ஆகின்றன. இந்தக் காலத்தில் விந்து குறித்த புரிதல் என்ன? விந்து விதைப் பையிலிருந்து உருவாகிறது. இப்போது மொழிபெயர்ப்பவர்களுக்கு ஒரு சிக்கல் வந்து விடுகிறது. ஏனென்றால் இப்போதைய அறிவியல் புரிதலுக்கு மாற்றமாக குரான் வசனங்கள் இருக்கின்றன. அதனால் தான் மொழிபெயர்ப்பில் இத்தனை குழப்பங்கள்.
    between the backbone and the ribs: யூசுப் அலி
    between the loins and ribs: பிக்தல்
    between the loins and the breast-bones: அல் பெர்ரி
    between the loins [of man] and the pelvic arch [of woman]: ஆஸாத்
    முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து: ஜான் டிரஸ்ட்
    முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து: பிஜே
    நீங்கள் நினைப்பது போல் 1. இது மொழி சார்ந்த குழப்பம் இல்லை. மாறாக அறிவியலுக்கு மாற்றமில்லாமல் குரானை எப்படி மொழிபெயர்ப்பது எனும் குழப்பம். அதனால் தான் அந்த ஏரியாவை சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார்கள். 2. குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு எலும்புகளில் ஒன்று சரியாகவும் இன்னொன்று குழப்பமாகவும் இருக்கிறது என்பதில்லை. இரண்டு எலும்புகளுமே குழப்பம் தான். இதை மேற்கண்ட சில மொழிபெயர்ப்புகள் காட்டுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமே இன்னும் ஏராளம் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. எனவே, இது மொழிபெயர்ப்பில் இருக்கும் பிரச்சனை அல்ல மாறாக, மூலத்தில் அதாவது குரானில் இருக்கும் பிரச்சனை.

    ஆனால் பிற திரவங்களோடு இணைந்து விந்துப்பையிலிருந்து வெளியேறுகிறது எனும் தற்போதைய கண்டுபிடிப்பு மொழிபெயர்ப்பு குழப்பங்களில் இருந்து மத வியாபாரிகளை கொஞ்சம் மூச்சுவிட வைத்திருக்கிறது. அதனால் தான் இந்த வசனத்தை மட்டுமே உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விந்து குறித்த குரானின் கருத்து என்ன? என்பதை கண்டறிய வேண்டுமென்றால் பிற வசனங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டும். கலப்பான இந்திரியத் துளி – குரான் 76:2, பெண்களுக்கு வெளிப்படும் திரவம் – புஹாரி 130 ஆகியவற்றையும் இணைத்துப் பாருங்கள். குரானின் அல்லது முகம்மதின் கருத்து வெகு சாதாரணமான அந்தக் கால மக்களின் அறிவியலுக்கு மாற்றமான கருத்து என்பது உறுதிப்படும்.

  46. நீங்கள் உண்மையிலேயே முட்டாளா? அல்லது முட்டாளாக நடிக்கிறீர்களா? என்பது தெரியவில்லை. விந்துப்பையிலிருந்துதான் விந்து வெளியேறுகிறது என குர்ஆன் கூறுகிறது அதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கும் படசத்தில் குர்ஆன் 86:7. என்ற வசனத்திற்கான தமிழ் மொழியாக்கத்தை நீங்கள் சுயமாக கூறுங்கள் என கேட்டால் அந்த குரானில் தமிழ் மொழி பெயர்ப்பு அப்படி இருக்கிறது இந்த குரானில் தமிழ் மொழி பெயர்ப்பு இப்படி இருக்கிறது என்று வியாக்கியானப்படுத்துகிறீர்கள். இதுவா அறிவுக்கு அழகு? தவறு என நிரூபிக்க வேண்டுமானால் நீங்கள் சுயமாக குர்ஆன் 86:7. வசனத்திற்கான மொழிபெயர்ப்பை சுயமாக கூறி வாதிடுங்கள் அதுவே உங்களுக்கு அழகு. அதை விடுத்து பித்து பிடித்ததுபோல் உளராதீர்கள்.

  47. நண்பர் யாஸீன்,

    விந்துப்பையிலிருந்து தான் விந்து வெளியேறுகிறது என குரான் கூறவில்லை.

    இதை அரபு மொழியில் புலவராகி குரானை மொழிபெயத்த பின்னர் தான் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் தேவை இல்லை. இஸ்லாமியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளை நாடுகிறேன். இதில் எதுவும் தவறு இருக்கிறதா? அல்லது ஏற்றுக் கொள்கிறவர்கள் மட்டும் தான் இருக்கும் மொழிபெயர்ப்புகளை நாடவேண்டும் ஏனைய அனைவரும் சொந்தமாக அரபிலிருந்து மொழிபெயர்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குரானில் ஏதும் வசனம் இறக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒன்றும் இறக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பை நான் நாடுகிறேன்.

    மொழிபெயர்ப்புகள் வழியாக (இஸ்லாமியர்கள் எப்படி குரனை அறிந்து கொள்கிறார்களோ அது போலவே) குரானை அறியும் நான், குரானில் தவறுகள் பிழைகள் இருப்பதாக கருதும் இடங்களை முன்வைத்திருக்கிறேன். அதில் ஒன்று தான் விந்து குறித்த இந்தக் கட்டுரை. இதில் என்னுடைய கருத்தை மறுத்து வாதிட வந்திருக்கும் நீங்கள் நீங்கள் சொந்தமாக மொழிபெயர்க்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டுகிறீர்கள். மன்னிக்கவும் என்னுடைய வேலை அதுவல்ல. குரானில் மலிந்து கிடக்கும் தவறுகளையும் இன்னபிறவைகளையும் சுட்டிக்காட்டுவதன் வழியாக மக்களை ஒன்றிணைக்க விரும்புவது தான் என்னுடைய வேலை. அதைத்தான் நான் செய்ய முடியும்.

    விதயத்துக்கு வருவோம். விந்துப்பையிலிருந்து தான் விந்து வெளியேறுகிறது என குரான் கூறவில்லை. விந்துப்பை என்ற ஒன்று இருக்கிறதா என்பதே குரானுக்கோ அல்லது அதைச் சொன்ன முகம்மதுவுக்கோ தெரியாது. அவர் சொன்னதெல்லாம், அன்றைய காலகட்டத்தின் புரிதலின் படி முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து (அல்லது அந்தப் பகுதியில் ஏதோ ஓர் இடத்திலிருந்து) வெளிவருகிறது என்பது தான். இதில் அறிவியலுக்கோ வேறு எதுவுக்கோ இடம் ஒன்றும் இல்லை.

    அந்த வசனத்தின் மூலம் மட்டுமல்ல குரானுக்கோ, அதைச் சொன்ன முகம்மதுவுக்கோ அந்தக் காலகட்டத்து அறிவைத் தாண்டி வேறொன்றும் தெரியாது என்பதை மற்றொரு குரான் வசனத்தையும், ஹதீஸையும் சுட்டிக் காட்டி விளக்கியுள்ளேன். உங்களால் முடிந்தால் இதை தவறு என்று நிரூபியுங்கள். இறுதியில் என்னுடைய கருத்து தவறாக இருந்தால் அதிலிருந்து நான் மாறி சரியான கருத்தின் பக்கம் வந்து விடுகிறேன். ஒருவேளை உங்களுடைய கருத்தில் தவறு இருந்தால் அதிலிருந்து மாறி சரியான கருத்தின் பக்கம் வந்து விடுகிறேன் என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? இயன்றால் அதைச் செய்யுங்கள். மாறாக, அரபு மொழியில் இருந்து நானே மொழிபெயர்த்துத் தான் எதையும் சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்.

    பின்குறிப்பு: முட்டாள், முட்டாள்தனம், ஈனச் செயல், பித்துப்பிடித்தவன், உளரல் .. .. .. போன்ற சொல்லாடல்கள் இன்றி நாகரீகமாக உங்களால் உரையாட முடியாதா?

  48. மொழியாக்கம் என்பது புரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை மட்டுமே. ஆனால் அது 100% நிவர்த்தி செய்யுமா என்றால் இல்லை என்றே கூறலாம், மேலும் குர்ஆன் என்பது சாதாரண வசன நடையில் இல்லை. அது செய்யுள் நடையில் இருக்கிறது அதாவது கவிதையைப் போன்ற நடையில் இருக்கிறது. அதுவும் அரேபியர்களை வியப்பில் ஆழ்த்திய மிக உயர்ந்த நடையில், மனிதர்களால் இயற்ற இயலாத வகையில் உயர் இலக்கணக்கணங்களை கொண்டு இருக்கிறது. அதானல்தான் குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் குர்ஆன் தங்கள் காதுகளில் விழுந்தால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விடுவோமோ என அஞ்சி அரபுகள் தங்களது காதுகளை பொத்திக்கொண்டனர். மற்றவர்கள் கேட்டுவிடாமல் இருக்கும்படியும் மக்களை தடுத்தனர். குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என நிரூபிக்க அது பல சான்றுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் இந்த இலக்கண வகையும் ஒன்று. அதேபோல் பலவித முன்னறிவிப்புகளும் ஒன்று. அதேபோல் அறிவியல் சான்றுகளும் ஒன்று. இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல அறிவியல் சான்றுகளையும் தன்னகத்தே உள்ளடக்கி இருக்கிறது. அதனால்தான் உலகின் பல விஞ்ஞானிகள்கூட இஸ்லாத்தை ஆய்வுசெய்து இஸ்லாத்தை ஏற்கின்றனர். குரானில் முரண்பாடுகள் இல்லாத காரணத்தால்தான் உலகம் முழுவதும். அனைவரும் ஒத்த குரலில் ஆதரிக்கின்றனர். அப்படி முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் யாரும் இஸ்லாத்தை தழுவவும் மாட்டார்கள். இந்து மதத்தை இந்துக்களே விமர்சிப்பது போல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களே விமர்சித்திருப்பார்கள். ஆனால் உலகில் மற்ற மதத்தினராலும் விரும்பி ஏற்கப்படும் மதமாக இஸ்லாம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உலகில் எதிரிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகும் மார்க்கமும் இஸ்லாம்தான் அதிக வளர்ச்சி கானும் மார்க்கமும் இஸ்லாம்தான். இஸ்லாம் உண்மை என்பதே இதற்கு காரணம்!. ஆகவே ஒன்றை குறை கூறுவதற்கு முன்னதாக அதுபற்றி முடிந்தவரை முழுமையாக தெரிந்து கொண்டு பின்னர் செயல்படுவதே நன்று!

    மொழி பெயர்ப்புகள்:
    between the backbone and the ribs: யூசுப் அலி
    between the loins and ribs: பிக்தல்
    between the loins and the breast-bones: அல் பெர்ரி
    between the loins [of man] and the pelvic arch [of woman]: ஆஸாத்
    முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து: ஜான் டிரஸ்ட்
    முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து: பிஜே

    குர்ஆன் மொழிபெயர்ப்பில் ஏன் இத்தனை குளறுபடிகள் என்றால் இவை அனைத்திற்கும் இணையான ஒரு சொல்லாடல் குர்ஆனில் கவிதை நடையில் கையாளப்பட்டிருக்கிறது என புரிந்துகொள்வதே சரியான விளக்கம். எனவே இந்த மொழிபெயர்ப்புகள் தவறானவை அல்ல!

    விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என்பதை 1400 வருடங்களுக்கு முன்பு கூற வேண்டுமானால் எப்படி கூறுவது? விந்துப் பையிலிந்து விந்து வெளியேறுகிறது என்று நேரடியாக கூற முடியுமா? அப்படி கூறினால் விந்துப்பை என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கு எப்படி புரியும்?. சொல்கின்ற வார்த்தை அந்த மக்களுக்கும் புரிய வேண்டும், பிற்கால மக்களுக்கும் புரிய வேண்டும் என்றால், இந்த விதத்தில்தான் சொல்ல முடியும். ஏனெனில் குர்ஆன் என்பது முக்காலத்துக்கும் பொருத்தமானது.

    விந்துப்பையில் இருந்து விந்து வெளியேறுகிறது என கூறுவதுதான் அறிவுப்பூர்வமானது. ஆனால் உங்களுடைய கட்டுரைப்படி ஆண்குறியிலிருந்து விந்து வெளியேறுகிறது என்று கூறுவதற்கு எந்த விதமான அறிவு தேவை என்று தெரியவில்லை.

    மறைவான அறிவுப் பூர்வமான விஷயங்களை இரத்தினச் சுருக்கமாக கூறுவதே குர்ஆனின் அழகு.

    உங்களுடைய கருத்து தவறாக இருந்தால் அதிலிருந்து மாறி சரியான கருத்தின் பக்கம் வந்து விடுவதாக கூறியிருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ். இது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற நேர்மையான சிந்தனை உண்மையாக இருந்தால் உங்களை நேர்வழி நடத்த அல்லாஹ் போதுமானவன். அவனே உள்ளங்களை புரட்டுபவன். உங்களுக்கும் அருள்புரிந்து நேர்வழி காட்டுவானாக! ஆமீன்.

    என்னையும் அதேபோல் சரியான கருத்தின்பால் வருவீர்களா? என வினவியுள்ளீர்கள். நான் சரியான கருத்தை ஏற்ற காரணத்தினால்தான் இந்து மதத்தில் ஓர் உயர் குலத்தில் பிறந்தும்! பிறந்த ஊரிலிருந்தும் வெளியேற்றப்பட்டு தனியொருவனாக வாழ்க்கையின் அனைத்து துயர்களையும் எதிர்கொண்டு இன்றைய நிலையில் ஒரு குடும்ப தலைவனாக உங்களுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறேன். ஆம் நான் குர்ஆனை விளங்கி இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை ஏற்றவன். சரியான கருத்தை ஏற்பதில் நான் உங்களுக்கு முன்னோடி.

    சரியான புரிதலுள்ள மனிதர்களுக்கு இந்த விளக்கம் போதுமென்றே தோன்றுகிறது. அல்லாஹ் போதுமானவன்.

    அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர் ஆன்: 14:4.)

  49. நண்பர் யாஸீன்,

    உங்கள் பதிலின் முதல் பத்தி மொழிபெயர்ப்பில் தொடங்கி, குரானின் விதந்தோதல்களை இறுப்பூறெய்தலாக விவரிக்கிறது. அதில் ஓர் எளிய இஸ்லாமியனுடைய மத நம்பிக்கையின் புளகத்தை தவிர வேறொன்றும் இல்லை என்பதால் கடந்து செல்கிறேன். தவிரவும் அந்த விதந்தோதல்கள் எல்லாம் தவறானவை என்று ஏற்கனவே இந்த தளத்தின் பல கட்டுரைகளில் ஆங்காங்கே விளக்கப்பட்டிருக்கிறது. எனவே, நேரடியாக விந்து குறித்த குரானின் வசனம் தொடர்பான விவாதத்துக்கு வந்து விடுகிறேன்.

    குரானின் குறிப்பிட்ட அந்த வசனத்தின் மொழிபெயர்ப்பில் இருக்கும் பல்வேறு முரண்பாடுகளுக்கு குரானின் செறிவு மிக்க, திறன் மிக்க சொல்லாடல் தான் காரணமா? இல்லை. அந்த குரான் வசனத்தில் சொற்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. “யக்குறுஞ் மின் பாய்னி வுல் சுல்ஃபி வத் தரைபி” சுல்பி எனும் சொல்லுக்கு (மூலச் சொல் சலபு என்பது பொருள் சிலுவை. சிலுவை போன்ற வடிவத்தில் இருப்பதால் தண்டுவடத்தொடருக்கு சுல்பி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது) தண்டுவடம் என்பதும் தரைபி எனும் சொல்லுக்கு (மூலச் சொல் துறாப் என்பது பொருள் மண். ஹவ்வாவை உருவாக்க ஆதமின் விலா எலும்பை மண்ணாக பயன்படுத்தியதால் விலா எலும்பைக் குறிக்க தரைபி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது) விலா எலும்பு என்பதும் தன் பொருள். இதில் மீப்பெரும் அறிவியல் தரவுகளைக் கொண்ட திறன்மிகு செறிவான கவிதை நயம் கொண்ட சொற்கள் என்று எதுவும் இல்லை. இயல்பான நடைமுறைச் சொற்கள் தாம். இந்தச் சொற்களை மொழிபெயர்ப்பதற்கு குழப்பமோ, முரணோ ஏற்பட வேண்டிய தேவை எதும் இல்லை. தேவை எங்கு இருக்கிறது என்றால், குரானின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் புனித பிம்பத்தின் மீது தான். அது தவறே இல்லாதது, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது என்பன போன்ற புனித பிம்பங்கள் தாம். அந்த புனித பிம்பத்தை உடைத்து விடக் கூடாது என்பதனால் தான் குழப்பமும் முரண்களும் ஏற்படுகின்றன.

    விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என்று கூறுவது அந்த நேரத்தில் கூறவே கூடாத, கூறவே இயலாத, கூறினால் முகம்மதின் திட்டங்களை குலைத்துப் போடும் அளவிலான சொற்களா? அப்படி ஒன்றும் இல்லையே. உடலில் விந்துப்பை என்று ஒன்று இருக்கிறது அதிலிருந்து தான் விந்து வெளியேறுகிறது என்று கூறினால் அந்த காலத்தில் பெரும் சச்சரவுகள் ஏற்பட்டு விடும் அளவுக்கான சூழல் இருந்ததா? ஒன்றும் இல்லையே. பின் அந்த சொல்லைக் கூறுவதிலிருந்து தடுக்கும் அளவுக்கு என்ன பிரச்சனை முகம்மதுவுக்கு இருந்தது? இன்ன காரணத்தினால் தான் நேரடியாக கூறுவதிலிருந்து தவிர்த்து மறைமுகமாக கூறினார் என்று எதேனும் ஒரு காரணம் கூற முடியுமா?

    மாறாக, அந்தக் காலத்தில் பெரும் சச்சரவை ஏற்படுத்திய, மக்களின் நம்பிக்கைகளை புரட்டிப் போட்ட, பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்திய, சமூகத்தில் பிளவை ஏற்படுத்திய, மக்களுக்கு புரியாமல் மீண்டும் மீண்டும் ஹதீஸ்களில் விளக்கம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய பல சொல்லாடல்களை, வசனங்களை, கருத்துகளை முகம்மது குரானில் கூறியிருக்கிறார். பெரிய பெரிய விசயங்களையெல்லாம், பெரிய பெரிய ஆபத்து நேர்ந்து விடக்கூடும் என பகை சூழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் வெகு சாதாரணமாக குரானில் கூறியிருக்கிறார் முகம்மது. அப்படியிருக்க விந்துப்பை என்று ஒன்று உடலில் இருக்கிறது, அதிலிருந்து தான் விந்து வெளியேறுகிறது என்று சொல்வதில் முகம்மதுவுக்கு என்ன முடை இருந்திருக்க முடியும்? ஒரே ஒரு முடையைத் தவிர. விந்துப்பை எனும் சொல் அந்தக் காலத்தில் எந்தவித சச்சரவையும் ஏற்படுத்தி இருக்காது, மக்களின் நம்பிக்கைகளை புரட்டிப் போட்டிருக்காது, பழக்க வழக்கங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காது, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி இருக்காது, மக்களுக்கு புரியாமலும் போயிருக்காது. என்றால் என்ன தயக்கம் முகம்மதுவுக்கு? அவருக்கு அந்த விசயம் தெரியாது என்பதைத் தவிர. நீங்கள் நேர்மையாளராக இருந்தால் இது குறித்து மீளாய்வு செய்யுங்கள். மாறாக, உங்கள் மத அறிஞர்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுத்ததை அப்படியே இங்கே வந்து ஒப்பிக்காதீர்கள்.

    முத்தாய்ப்பாக ஒரு வாக்கியத்தைக் கூறியிருக்கிறீர்கள், \\ மறைவான அறிவுப் பூர்வமான விஷயங்களை இரத்தினச் சுருக்கமாக கூறுவதே குர்ஆனின் அழகு // என்று. குரானின் ஆறாயிரத்துச் சொச்சம் வசனங்களில் கூறியது கூறலாக மீண்டும் மீண்டும் வரும் வசனங்கள் இல்லையா? முன்னொட்டுகளாக, பின்னொட்டுகளாக திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப வரும் வாழ்துக்களும் வசைகளும் இல்லையா? புரியாத, புழக்கத்தில் இல்லாத, பொருள் இல்லாத வீண் சொற்கள் பல இடங்களில் இடம்பெற்றிருக்க வில்லையா? அறிவியலுக்கு மாற்றான, அறிவியலுக்கு எதிரான விசயங்கள் இல்லையா? சிந்தித்துப் பாருங்கள். விரிவஞ்சி நான் தவிர்க்கிறேன்.

    நண்பரே, உங்கள் பழைய வாழ்வைக் கூறியிருந்தீர்கள் வாழ்த்துக்கள். நான் ஓர் இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்து குரான் ஹதீஸை உணர்ந்து கற்றதினால் இஸ்லாத்திலிருந்து வெளியேறியவன். எப்போதுமே நான் சரியானதின் பக்கம் நிற்க வேண்டும் என்பதில் உறுதியானவன். நீங்களும் அவ்வாறு இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறாயின், குரான் 76:2, புஹாரி 130 ஆகியவற்றோடு இணைத்து இந்த வசனத்தின் பொருளைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று உங்களைக் கோருகிறேன்.

  50. குர்ஆனில் கவிநயம் இல்லை என்று கூறும் நீங்களே குரான் 86:7 வசனத்தை விவரித்திருக்கும் விதத்தை பாருங்கள்.

    “அந்த குரான் வசனத்தில் சொற்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. “யக்குறுஞ் மின் பாய்னி வுல் சுல்ஃபி வத் தரைபி” சுல்பி எனும் சொல்லுக்கு (மூலச் சொல் சலபு என்பது பொருள் சிலுவை. சிலுவை போன்ற வடிவத்தில் இருப்பதால் தண்டுவடத்தொடருக்கு சுல்பி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது) தண்டுவடம் என்பதும் தரைபி எனும் சொல்லுக்கு (மூலச் சொல் துறாப் என்பது பொருள் மண். ஹவ்வாவை உருவாக்க ஆதமின் விலா எலும்பை மண்ணாக பயன்படுத்தியதால் விலா எலும்பைக் குறிக்க தரைபி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது) விலா எலும்பு என்பதும் தன் பொருள்.”

    நீங்கள் விவரித்திருக்கும் விதத்திலிருந்தே இதில் கவிநயம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. மேலும் கவிநயம் என்பது இயற்றப்பட்ட மொழியில் மட்டுமே விளங்க முடியுமே அன்றி மொழிமாற்றம் செய்து இதில் கவிநயம் இல்லை என்பது முட்டாள்தனம். இருப்பினும் இது நமது விவாதத்திற்கான பொருள் இல்லை எனவே இதை நாம் தவிர்ப்போம்.

    குர்ஆன் என்பது முகமது நபி (ஸல்) அவர்களின் வார்த்தை என குறிப்பிடுகிறீர்கள். இது நபியின் வார்த்தை அல்ல!. இறைவனின் வார்த்தை!. எனவே நபி ஏன் இப்படி கூறவில்லை என கேட்பதைவிட இறைவன் ஏன் இப்படி கூறவில்லை என கேளுங்கள்.

    மேலும் “விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என்று கூறுவது அந்த நேரத்தில் கூறவே கூடாத, கூறவே இயலாத, கூறினால் முகம்மதின் திட்டங்களை குலைத்துப் போடும் அளவிலான சொற்களா?” என கேட்கிறீர்கள்.

    விந்துப்பை என்றால் என்னவென்றே தெரியாத மக்களிடம் விந்துப்பை என்று ஒரு உறுப்பு இருக்கிறது. அது எவ்விதம் செயல்படுகிறது என அறிவியல் பாடம் ஏன் நடத்தவில்லை, அப்படி ஒரு பாடம் நடத்தினால் அதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி கேடபது எப்படி அறிவுடைமை ஆகும் என தெரியவில்லை. அதை உங்களை படைத்த இறைவனிடம்தான் நீங்கள் கேட்க வேண்டுமே தவிர எங்களிடம் அல்ல! புரிந்து கொள்ளுங்கள் இது அறிவியல் பாடம் நடத்த வந்த புத்தகம் அல்ல!. அறிவியல் சார்ந்த சொருகல்கள் இருப்பது இது மனிதனின் வார்த்தையல்ல என்பதை விளக்கவே!. அன்றி வேறில்லை!

    இருக்கின்ற அறிவியல் சார்ந்த வசனங்கள் அறிவியலுக்கு முரண்படாத வகையில் இருக்கின்றதா? என பார்க்க வேண்டுமே தவிர, அது அப்படி இருந்திருக்கலாமே இது இப்படி இருந்திருக்கலாமே என்பது அறிவுடைமை ஆகாது.

    விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என தெரிந்துகொண்டே, விந்துப்பை பற்றி ஒரு வார்த்தைகூட உங்களது கட்டுரையில் எழுதாமல் அதை முழுமையாக மறைத்து, ஆண்குறியிலிருந்து விந்து வெளியேறுகிறது என எழுதி மடமையை விதைப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்படேயன்றி வேறில்லை!. உங்களது கட்டுரையிலேயே உண்மை இல்லாத போது உங்களது விவாதத்தில் எப்படி உண்மை இருக்கமுடியும். நீங்கள் என்னதான் மடமையை கையில் பிடித்துக்கொண்டு ஓலமிட்டாலும் கடைந்தெடுத்த மடையர்களைத்தவிர வேறெவரையும் அது எட்டாது.

  51. நண்பர் யாஸீன்,

    நான் கேட்டிருப்பதற்கான பதில் உங்கள் பதிவில் இல்லை எனக் கருதுகிறேன். கடந்த பதிவில் உள்ளவற்றை சுருக்கமாக கூறுகிறேன். 1. குறிப்பிட்ட அந்த வசனம் எளிமையான நடைமுறைச் சொற்களைக் கொண்டதாகவே இருக்கின்றன என்பதை அருஞ்சொற்பொருளுடன் விளக்கியிருக்கிறேன். 2. மொழிபெயர்ப்பின் குழப்பங்களுக்கு சொற்செறிவு காரணமல்ல, புனிதம் உடைந்து விடாமல் காப்பற்றுவது தான் காரணம் என்பதை விளக்கி இருக்கிறேன். 3. மறைபொருளாக கூறவேண்டிய தேவை முகம்மதுவுக்கு இல்லை என்றும், இதைவிட மறைபொருளாக தேவை அதிகம் கொண்ட வேளைகளில் கூட முகம்மது நேரடியாகவே கூறியிருக்கிறார் என்று எடுத்துக் காட்டியுள்ளேன். இவை எதற்கும் உங்களது பதிவில் பதில் இல்லை.

    குரானில் அறிவியல் வாசம் கொஞ்சமும் இல்லை என்று தான் நான் கூறிக் கொண்டிருக்கிறேன். அதை மறுத்து அறிவியல் இருக்கிறது என்று கூற வந்த நீங்கள், இப்போது அது அறிவியல் புத்தகமல்ல என்றும், வியாக்கியானங்களை நீங்கள் இறைவனிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள். இந்தக் கட்டுரையில் விவாதம் செய்ய வந்தது நீங்கள், நான் கேள்விகளை உங்களிடம் கேட்காமல் இறைவனிடம் கேட்கவேண்டுமா? நண்பரே, நான் இறைவன் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து விட வேண்டாம். தவிரவும் என்னுடைய பல கட்டுரைகள் வழியாக குரான் இறைவனின் வார்த்தைகள் இல்லை, அவை முகம்மதின் வார்த்தைகளே என்பதை நிரூபித்துள்ளேன். தேவை ஏற்படின் படித்துப் பாருங்கள்.

    என்னுடைய கட்டுரையில் விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என்று தெரிந்து கொண்டே அதைக் கூறாமல் மறைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளீர்கள். தவறான புரிதல் அல்லது திட்டமிட்டு திசைதிருப்பும் போக்கு. உங்களைப் போன்றோர் தாம் அந்த வசனத்திலிருந்து விந்துப்பை எனும் பொருளை கற்பிதமாக உருவாக்கிக் கொள்கிறார்களேயன்றி நானில்லை. எனவே விந்துப் பை என்று கற்பனையாக கூறும் தேவை எனக்கு இல்லை. கற்பனையாக கூறுவோர் உங்களைப் போன்றோர் என்பதால் அதை நிரூபிக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    உங்களுக்கு நான் நன்றி கூறியாக வேண்டும். உங்கள் வசைச் சொற்கள் நான் சரியான கேள்விகளைக் கேட்டிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திகிறது. உங்களிடமிருந்து பாராட்டுதல்கள் வந்திருந்தால் தான் நான் கூச்சப்பட்டிருக்க வேண்டும். போகட்டும். ஒரு விதயம் உறுதிப்படுகிறது. தவறு என நிரூபித்தால் சரியானதின் பக்கம் வந்து விடுகிறேன் என உறுதியளித்து, அது போல உங்களையும் உறுதியளிக்க கேட்டிருந்தேன். நீங்களோ உங்கள் நிகழ்வு ஒன்றைக் கூறி உறுயளிப்பது போலக் கூறியிருந்தீர்கள். ஆனால் நான் கூறியதை எந்த அளவுக்கு மீளாய்வு செய்தீர்கள்? என்பது கேள்விக்குறி. ஆனால் விவாதத்தில் இது ஓர் இன்றியமையாத பண்பு. நீங்கள் கூறுவதை நானும், நான் கூறுவதை நீங்களும் மீளாய்வுக்கு எடுத்துக் கொண்டே ஆகவேண்டும். இப்படியான மீளாய்வுக்கு எந்த மதவாதியும் ஆயத்தமாக இருப்பதில்லை. ஏனென்றால் அவர்களிடம் புனிதம் இருக்குமே தவிர, உண்மை இருப்பதில்லை. நீங்கள் மட்டுமல்ல, தமிழில் மதப்பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்கள் சிலரிடம் நான் சவாலே விட்டிருக்கிறேன். விவாத நேர்மையுடன் இருப்பீர்கள் என உறுதியளித்தால் உங்களை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன் என்று. அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, உங்களால் ஏற்றுக் கொள்ள முடியமா?

    பின்குறிப்பு: கடைந்தெடுத்த மடையர்களைத் தவிர வேறெவரையும் என்னுடைய பதிவு எட்டாது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் பதிவு உங்களை எட்டியதால் தான் நீங்கள் மறுப்பு எழுத முன்வந்திருக்கிறீர்கள் என்பது உங்கள் கவனத்திற்கு. அதற்காக நான் உங்களை அப்படிக் கூறுகிறேன் என நீங்கள் எண்ணிவிடலாகாது.

  52. நான் அனைத்திற்கும் பதிலளித்திருந்தேன். ஆயினும் உங்களை அது திருப்திபடுத்தவில்லை என்பதால் பதில் இல்லை என்று கூறிவிட்டீர்கள்.

    மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளீர்கள். முதல் இரண்டு கேள்விகளும் அராபிய இலக்கண தொடர்புடையது. உங்களுக்கும் அரபு மொழி புலமை இல்லை (நீங்கள் கூறியதுதான்), எனக்கும் இல்லை. ஆகவே அதை தவிர்க்கிறேன். மூன்றாவது கேள்வியை பார்ப்போம்.

    ஏன் நேரடியாக விந்துப்பை என்று பெயர் கூறவில்லை என்பதே உங்களது ஆதங்கமாக இருக்கிறது. என்ன அறிவுப்பூர்வமான பதில் கூறினாலும் உங்களை திருப்திபடுத்த இயலவில்லை. எனவே உங்களது கண்னோட்டத்திலேயே இப்போது பார்ப்போம்.

    விந்துப்பை என்று நேரடியாக குர்ஆன் பெயர் கூறியிருந்தால் (அது மக்களுக்கு புரியாவிட்டாலும் பரவாயில்லை) அந்த வார்த்தையைக் கொண்டே எளிமையாக குர்ஆனை பொய்ப்படுத்தி விடலாம் என்பதை கவனிக்கவும்.

    விந்துப்பையை கண்டுபிடித்து அதை உலகுக்கு அறிமுகம் செய்யும் அறிவியல் கண்டுபிடிப்பாளர் அதற்கு இடும் பெயரும் குர்ஆனில் ஏற்கனவே விந்துப்பைக்காக கூறியிருக்கின்ற பெயரும் ஒத்துப்போகாது. வேண்டுமென்றே குர்ஆன் வைத்த பெயருக்கு மாற்றமாகக்கூட பெயர் வைக்க முடியும்.

    அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களை போன்றோர் என்ன செய்வீர்கள்? குர்ஆன் விந்துப்பை குறித்து கூறவில்லை. அது தவறாக எதையோ சம்பந்தமில்லாத ஒரு பொருள் பற்றி கூறுகிறது. எனவே குர்ஆன் கூறுவது தவறு. மேலும் உங்களின் மனோ இச்சைக்கு தகுந்த வசை பாடுவீர்கள் இல்லையா?

    எனவேதான் விந்துப்பை என்ற பொருளின் பெயர்
    அறியப்படாத நேரத்தில், விந்துப்பை என்று பெயர் கூறுவதைவிட விந்துப்பை இருக்கும் இடம்பற்றி கூறுவதே உசிதமானது. எவராலும் பொய்பிக்க இயலாதது.

    அறிவு சிறுத்தவர்களுக்கே இதுபோன்ற விளக்கங்கள் தேவைப்படுகிறது. என்னசெய்வது!!!

    ஒருவேளை இதிலும் நீங்கள் திருப்தியடையாமல், எல்லோரும் எளிதில் ஏற்கும் விதமாக இன்னும் நன்றாக விளக்கமாக குர்ஆன் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கி இருக்கலாமே, அப்படி விளக்கி இருந்தால் நாங்களும் ஏற்றுக்கொண்டுவிடுவோமே என்று நீங்கள் புலம்பக்கூடும்.
    இதுபோன்ற புலம்பல்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இருந்தது.

    “இவரது இறைவனிடமிருந்து இவருக்கு தக்க சான்று அருளப்பட வேண்டாமா?” என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். நீர் எச்சரிப்பவரே. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி உண்டு.

    (இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.

    நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன. எனினும் அவற்றைக் கொண்ட (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு. எனினும் அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு. எனினும் அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக கேடுகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர். (7:179)

    பின்குறிப்பு: கடவுள் இல்லை என்கிறீர்கள், ஆனால் குர்ஆன் கடவுள் இருக்கும் இடம்பற்றி தெளிவாக கூறுகிறது. எனவே உங்களால் முடிந்தால் மேலும் நீங்கள் உண்மையான நாத்திகவாதி என்றால் அங்கு சென்று பார்த்துவிட்டு வந்து உறுதி செய்யவும்.

  53. நண்பர் யாஸீன்,

    குறிப்பிட்ட அந்த வசனம் மொழிபெயர்ப்புப் பிரச்சனை அல்ல எனும் என்னுடைய கூற்றை மறுத்து எதையுமே நீங்கள் கூறவில்லை. எளிமையான நடைமுறைச் சொற்களைக் கொண்ட வசனத்தின் மொழிபெயர்ப்பில் குழப்பம் ஏற்பட வேண்டிய தேவை என்ன? இதற்கு உங்கள் பதிவு எதிலாவது பதில் இருக்கிறதா? இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். இதைத் தான் நீங்கள், நம் இருவருக்குமே அரபு மொழியில் புலமை இல்லை எனவே தவிர்க்கிறேன் என்கிறீர்கள். நமக்கிடையேயான விவாதத்தின் கருவே அதில் தானே நிலை கொண்டிருக்கிறது. நான் அதை மொழிபெயர்ப்புப் பிரச்சனை இல்லை மூலத்தின் (குரானின்) பிரச்சனை என்கிறேன். நீங்களோ மொழிபெயர்ப்புப் பிரச்சனை தான் என்கிறீர்கள். இந்த நோக்கில் உங்களின் பதில்களை தொகுத்துப் பாருங்கள், அதிலிருக்கும் போதாமை உங்களுக்கே வெளிப்படும்.

    முகம்மது அந்த நேரத்தில் இருந்த புரிதலை மட்டும் தான் வெளிப்படுத்தினார். அது கிரேக்க அறிவியல் புரிதல் பின்னர் அது நவீன அறிவியலால் மாற்றப்பட்டது என்றேன். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.
    ஒருவேளை அது அந்த நேரத்தின் கருத்துக்கு மாற்றமாக இருந்திருந்தால் அதற்கான விளக்கம் ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கும். அப்படி எதுவும் இல்லை என்றேன். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.
    இது குறித்த முகம்மதின் அல்லது குரானின் புரிதல் என்ன? என்பதற்கு வேறொரு வசனத்தையும், ஹதீஸையும் எடுத்துக் காட்டி இருந்தேன். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.
    எனக்கு அரபு மொழியில் புலமை இல்லை என உங்களிடம் கூறியதாக நினைவு இல்லை. இருப்பினும், குறிப்பிட்ட அந்த வசனத்தின் சொற்களை அருஞ்சொற்பொருளுடன் விளக்கி இருந்தேன். நானே மொழிபெயர்க்க வேண்டும் என அடம் பிடித்த நீங்கள், நான் விளக்கியது சரியா தவறா என்பது குறித்து எதுவும் கூறவில்லை. கடந்து விட்டீர்கள். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.
    அந்த அருஞ்சொற்பொருளின் வழியே தான் மொழிபெயர்ப்பில் குழப்பம் ஏற்படும் தேவை அந்த வசனத்தின் சொற்களில் இல்லை, அதன் கருத்தில் இருக்கிறது என்பதை விளக்கி இருக்கிறேன். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.

    நீங்கள் பதில் கூற எடுத்துக் கொண்ட ஒரே ஒரு விதயம், அது மறை பொருளாக கூற வேண்டிய தேவை ஏன் வந்தது என்பது மட்டுமே. அதுவும் என்னுடைய கருத்தின் மறுப்பாக இல்லாமல் உங்கள் கருத்தின் மறு வடிவமாகவே இருக்கிறது.

    கவனிக்கவும் விவாதம் என்பது என் கருத்தை நீங்களும் உங்கள் கருத்தை நானும் மறுத்து தரவுகளுடன் முன்வைப்பது தான். உங்கள் கருத்தை மீண்டும் மீண்டும் வேறு வேறு வடிவத்தில் கூறிக் கொண்டிருப்பதல்ல. விளங்கவும். அதாவது என்னுடைய கருத்தை உறுதியுடன் மறுத்து நிருவுவதின் மூலமே உங்கள் கருத்து வைக்கப்பட வேண்டும். விளங்கவும், உங்கள் கருத்தை மறுத்துத் தான் நான் மேற்கண்ட, 1. கிரேக்கப் புரிதல், 2. ஹதீஸ்களில் இல்லை, 3. வேறொரு வசனம், ஹதீஸ், 4. அருஞ்சொற்பொருள் விளக்கம் போன்ற தரவுகளை வைத்துள்ளேன். யோசித்துப் பாருங்கள். மேற்கண்ட என்னுடைய தரவுகளை மறுத்து நீங்கள் வைத்திருக்கும் தரவு என்ன? இனியேனும் முயலுங்கள்.

    இனி உங்களின் மீள் விளக்கத்துக்கு வருகிறேன். விந்துப்பை என்று பெயர் கூற வேண்டிய தேவை இல்லையே. அப்படி பெயர் கூறினால் தான் அந்த வசனத்தின் பொருள் விளங்குமா? என்ன பெயர் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். குரானை தந்ததாக நீங்கள் கற்பனையாக கருந்தும் அந்தப் பேராற்றல் முக்காலமும் உணர்ந்தது தானே. குறிப்பான இந்த இடத்தில் இருக்கும் ஒரு பையிலிருந்து (பெயரைத்தான் மாற்றி வைக்க முடியும் பெயர் இல்லாமல் பை என்று மட்டும் கூறியிருந்தால் யாராவது மறுத்திருக்க முடியுமா?) தான் நிச்சயமாக விந்து வெளியேறுகிறது என்று என்று குரான் கூறியிருந்தால், இன்று நீங்களும் நானும் விவாதிக்க வேண்டிய தேவையே நேர்ந்திருக்காதே. இதை நீங்கள் இறைவனிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறாதீர்கள். என்னிடம் இறைவன் விவாதத்துக்கு வரவில்லை. இறைவனின் சார்பாக நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள். எனவே உங்களிடம் தான் நான் கேட்க முடியும். அப்படி கூற முடியாமல் அந்த முக்காலமும் உணர்ந்த பேராற்றலை தடுத்தது எது? ஆக உங்கள் மீள் விளக்கம் எல்லாம் அந்த வசனத்தில் இல்லவே இல்லாத, நீங்கள் கற்பனையாக கருதும் அறிவியல் முன்னறிவிப்பு எனும் ஒன்றை முட்டுக் கொடுப்பதாக இருக்கிறதே அன்றி தரவுகளாக இல்லை என்பதை புரிந்து கொள்ள முயலவும்.

    இந்த இடத்தில் இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்க்கலாம். பெயர் கூறினால் நீங்கள் மறுத்துவிட மாட்டீர்களா என புளகமடைகிறீர்களே. குரானை முகம்மது கூறிக் கொண்டிருந்த காலத்தில் கரு உருவாகும் முறை பற்றி யாரும் எதுவும் அறிந்திருக்கவில்லை. அலக் எனும் கட்டியின் மூலம் என்று குரான் ஒரு பெயரைக் குறிப்பிடுகிறது. கட்டுரை குறிப்பிடும் வசனத்தில் பெயரை குறிப்பிட்டால் பின் அறியும் மக்கள் எதிரான பெயர் வைப்பதன் மூலம் மறுத்துவிட மாட்டார்களா? என வினா எழுப்பும் நீங்கள் ‘அலக்’ எனும் பெயர் குறித்து என்ன கூறுவீர்கள்? அரபு மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் அலக் என்ற பெயர்ச் சொல் இல்லை. இதனால் குரானின் அந்த வசனத்தை யாரும் பொய்ப்பித்து விட்டார்களா? (அது தவறு என்பது இந்த விவாதத்துக்கு அப்பாற்பட்ட விதயம்) என்றால் இந்த வசனத்துக்கு பெயர் கூறியதால் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் அந்த வசனத்துக்கு பெயர் கூறினால் பிரச்சனை வந்து விடும் என்று நீங்கள் கருதுவீர்களாயின், மன்னிக்கவும் அதற்குப் பெயர் சந்தர்ப்பவாதம். விளக்கம் அல்ல. மீண்டும் கூறுகிறேன். பெயர் கூறி அறிவியல் பாடம் நடத்த வேண்டும் என்று யாரும் குரானிடம் எதிர்பார்க்கவில்லை. கூறுவதை தெளிவாக கூற வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். குருட்டாம் போக்கில் மேற்கு திசையிலிருந்து உங்களுக்கு வேலை கிடைக்கும் என்று ஜோதிடர்கள் பசப்புவதை போன்று பசப்பி இருக்கும் ஒன்றை அறிவியலாக ஒப்ப முடியாது என்று தான் கூறுகிறார்கள். இவ்வளவு தான் இதன் விளக்கம். என்ன செய்வது? கொஞ்சத்திலும் கொஞ்சமேனும் சிந்திக்கும் திறன் இருந்தாலும் கூட இது விளங்கி விடும். விளங்காவிட்டால் .. .. ..! போராடத்தான் வேண்டும். அதற்காக சக மனிதனை கெட்டழி என்று விட்டுவிட முடியுமா?

    சிந்தித்துப் பாருங்கள். தேவைப்பட்டால் மீண்டும் வருகிறேன்.

  54. இது உங்களின் முந்தைய பதிலுரை:
    —————————————

    “அரபு மொழியில் புலவராகி குரானை மொழிபெயத்த பின்னர் தான் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் தேவை இல்லை. இஸ்லாமியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளை நாடுகிறேன். இதில் எதுவும் தவறு இருக்கிறதா? அல்லது ஏற்றுக் கொள்கிறவர்கள் மட்டும் தான் இருக்கும் மொழிபெயர்ப்புகளை நாடவேண்டும் ஏனைய அனைவரும் சொந்தமாக அரபிலிருந்து மொழிபெயர்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குரானில் ஏதும் வசனம் இறக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒன்றும் இறக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பை நான் நாடுகிறேன்.

    மொழிபெயர்ப்புகள் வழியாக (இஸ்லாமியர்கள் எப்படி குரனை அறிந்து கொள்கிறார்களோ அது போலவே) குரானை அறியும் நான், குரானில் தவறுகள் பிழைகள் இருப்பதாக கருதும் இடங்களை முன்வைத்திருக்கிறேன். அதில் ஒன்று தான் விந்து குறித்த இந்தக் கட்டுரை. இதில் என்னுடைய கருத்தை மறுத்து வாதிட வந்திருக்கும் நீங்கள் நீங்கள் சொந்தமாக மொழிபெயர்க்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டுகிறீர்கள். மன்னிக்கவும் என்னுடைய வேலை அதுவல்ல”.

    இது உங்களின் தற்போதைய பதிலுரை:
    ——————————————–

    “எனக்கு அரபு மொழியில் புலமை இல்லை என உங்களிடம் கூறியதாக நினைவு இல்லை. இருப்பினும், குறிப்பிட்ட அந்த வசனத்தின் சொற்களை அருஞ்சொற்பொருளுடன் விளக்கி இருந்தேன். நானே மொழிபெயர்க்க வேண்டும் என அடம் பிடித்த நீங்கள், நான் விளக்கியது சரியா தவறா என்பது குறித்து எதுவும் கூறவில்லை. கடந்து விட்டீர்கள். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை”.
    ——————–*******———————–

    இதுபோன்று முன்னுக்கு பின்னாக பதிலுரைக்கிறீர்கள்.

    உஙகளுடைய புரிதலிலும் தெளிவு இல்லை. உங்களுடைய மீளாக்கத்திலும் தெளிவு இல்லை. எனவே இத்துடன் முடிக்கிறேன். வஸ்ஸலாம்!

    அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அர் குர்ஆன் : 25:63)

  55. நண்பர் யாஸீன்,

    உங்களின் இந்த முடிவு எனக்கு வியப்பளிக்கவில்லை. தவிரவும் எதிர்பார்த்தது தான். இது போன்ற பல நிகழ்வுகள் என்னுள் இருக்கின்றன. எங்கு பதிலளிக்க முடியாத இடம் வருகிறதோ அங்கு இது போன்ற தப்பித்தல்களைச் செய்ய மதவாதிகள் தயங்குவதே இல்லை. உங்களைப் போன்ற மதவாதிகள் எந்தவித தேடலையும் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை கணந்தோறும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலுக்கு புனுகு தடவிக் கொள்வார்கள், உள்ளில் பார்த்தால் முடை நாற்றம் தாங்க முடியாதாக இருக்கும். புனுகு வாசனையை வெளிப்படுத்துவதாக கருதிக் கொண்டு முடை நாற்றத்தை கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    மொழிபெயர்ப்பு குறித்து என்னிடம் முன்னுக்குப் பின்னான முரண் இருக்கிறதா? குரானை சொந்தமாக நீங்கள் மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறினீர்கள். அதற்கு பதிலுரையாக என்னுடைய சொந்த மொழிபெயர்ப்புக்கு தேவை இல்லை. இஸ்லாமியர்கள் எப்படி மொழிபெயர்ப்புகள் மூலம் அறிந்து கொள்கிறார்களோ அந்தப்படியே நானும் அறிந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். காரணம் என்னுடைய இஸ்லாம் தொடர்பான கட்டுரைகள் அனைத்திலும் நான் மொழிபெயர்ப்புகளையே பயன்படுத்தி இருக்கிறேன். என்னுடைய சொந்த மொழிப்புலமையை அல்ல. காரணம், தவறு என்றாலும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை கொண்டிருக்கக் கூடிய மதம் மீதான விமர்சனம் என்றால் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புகளை பயன்படுத்துவது தான் பொருத்தமானது என்பதால். மேலதிக விளக்கம் தேவை என்றால் என்னுடைய புலமையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் என் எண்ணம். அதைத் தான் நான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். (இந்த வசனத்துக்கான அருஞ்சொற்பொருளை என்னுடைய மொழிப் புலமையிலிருந்து தான் கூறியிருந்தேன்) இதைத்தான் நான் உங்களுடனான இந்த விவாதத்திலும் பயன்படுத்தினேன். அதேநேரம் எனக்கு அரபுப் புலமை இல்லை என்பதை உங்களிடம் வெளிப்படுத்தவும் இல்லை. ஆனால் நீங்களோ இருவருக்குமே அரபு மொழிப் புலமை இல்லை என்பதாக பொதுமைப் படுத்தி இருந்தீர்கள். இதை மறுப்பது எப்படி முரண்பாடு ஆகும்? உங்களைப் பொருத்தவரை விவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு காரணம் தேவை. அதற்காக இதை பயன்படுத்திக் கொண்டீர்கள், அவ்வளவு தான்.

    என்னிடம் இல்லாத முரண்பாட்டை கண்டுபிடித்த நீங்கள் கடைசியாகவும் ஒரு முரண்பாட்டை உங்களுக்கு நீங்களே வரித்துக் கொண்டிருக்கிறீர்களே, கவனிக்கவில்லையா? முத்தாய்ப்பாக ஒரு வசனத்தை பயன்படுத்தி இருக்கிறீர்களே அதைச் சொல்லுகிறேன்.
    அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அர் குர்ஆன் : 25:63)
    இந்த விவாதத்தைப் பொருத்தவரை பணிவுடன் நடந்து கொண்டது யார்? தொடக்கம் முதலே முட்டாள், உளரல், ஈனச் செயல், பித்துப் பிடித்தவன் என என் மீது தொடர்ச்சியாக வசைச் சொற்களை வீசிக் கொண்டிருந்தீர்கள். மாறாக நானோ, நண்பரே என்று பணிவுடனும் வாஞ்சையுடனும் தான் உங்களை விழித்துக் கொண்டிருந்தேன். என்றால் யார் பணிவுடன் நடந்து கொண்டது? யார் மூடத்தனமாக நடந்து கொண்டது?
    இந்த விவாதத்தை முதலில் தொடங்கியது யார்? நான் உங்களை அழைத்து விவாதத்தை தொடங்கினேனா, அல்லது நீங்கள் என்னை அழைத்து விவாதத்தை தொடங்கினீர்களா?
    உங்களுக்கு எதிராக நீங்களே குரான் வசனத்தை பயன்படுத்திக் கொண்டு அது எனக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக புளகமடைந்து கொள்கிறீர்கள். உங்கள் தேடலின் எல்லை இந்த மட்டில் தான் இருக்கிறது என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

    உங்களின் தொடர்புக்கும் கருத்தாடலுக்கும் நன்றி.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்