பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 17

இரண்டாம் ரமோஸஸின் உடல்

குரான் ஒரு இறை வேதம் தான் என்பதற்கு திட ஆதாரமாக மதவாதிகள் காட்டும் ஆதாரம் ஒன்றிருக்கிறது. இஸ்லாமிய இலக்கியங்களில் கரைகண்ட மதப்பரப்புரையாளர்கள் என்றில்லை வாசிப்புப் பழக்கம் ஏதுமற்ற ஒரு சாதாரண முஸ்லிமும் விதந்து போற்றும் ஒன்று பிர் அவ்னின் உடல். குரானில் கதை ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

“மேலும் இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்கவைத்தோம். அப்போது பிர் அவ்னும் அவனது படையினரும் கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள். அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் வைக்கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவனாக இருக்கிறேன் என்றும் கூறினான்.

இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” குரான் 10: 90,91,92

அதாவது, எகிப்தில் முன்னொரு காலத்தில் பிர் அவ்ன் என்றொரு மன்னன் இருந்தான். இந்த கதை நடக்கும் காலம் சற்றேறக்குறைய முகம்மதுவின் காலத்திற்கு 1900 ஆண்டுகளுக்கு முன்னர். அந்த மன்னனிடம் இறைவனின் நேரான மதத்தை எடுத்துச் சொல்வதற்காக மூஸா எனும் தூதர் வருகிறார். (கிருஸ்தவர்கள் இவரை மோசஸ் என்றும், யூதர்கள் மொசையா என்றும் அழைக்கின்றனர்) அவரின் போதனைகளுக்கு செவிகொடுக்காத அந்த மன்னன் அவரையும் அவரின் சீடர்களையும் துன்புறுத்தத்துகிறான். ஒரு கட்டத்தில் தன்னுடைய சீடர்களுடன் நாடுகடந்து செல்கிறார். இதையறிந்த மன்னன் தன் வீரர்களுடன் துரத்திச்செல்கிறான். செங்கடல் குறுக்கிடுகிறது. உடனே மூஸா தன் இறைவனின் கட்டளைப்படி தன் கைத்தடியால் கடலை அடிக்க இது இரண்டாக பிளந்து அவர்களுக்கு வழி விடுகிறது. அந்த வழியே அவர்கள் தப்பிக்க மன்னனும் அதே வழியில் துரத்துகிறான். மூஸா சீடர்களுடன் மறுகரையை பாதுகாப்பாக அடைந்ததும் கடல் பழையபடி மூடிக்கொள்ள மன்னனும் வீரர்களும் கடலில் மூழ்கி இறக்கின்றனர்.

இந்த கதை நடந்து 1900 ஆண்டுகளுக்கு பிறகு முகம்மது சொல்கிறார், பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக அந்த உடலை பாதுகாப்போம் என்று. அப்போது யாரும் எங்கே அந்த பாதுகாக்கப்பட்ட உடல்? என்று எதிர்க்கேள்வி எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால் இது அந்தப்பகுதியில் புராணரீதியாக வழிவழியாக வழங்கப்பட்டு வரும் கதைதான்.

இப்போது அன்மைக்காலங்களுக்கு வருவோம். எகிப்தின் நைல் ஆற்றங்கரை பள்ளத்தாக்கு ஒன்றில் ஒரு உடல் கண்டெடுக்கப்படுகிறது. ஆய்வுகளுக்குப் பின்னர் அது பண்டைய மன்னனான இரண்டாம் ரமோஸஸ் என்பவனின் உடல் தான் அது என கண்டறியப்பட்டு தற்போது கெய்ரோவிலுள்ள ராயல் மம்மி எனும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குரானில் குறிப்பிடப்படும் பிர் அவ்னின் உடல்தான் அது, இறைவன் தான் வாக்களித்தபடி பிர் அவ்னின் உடலை கெட்டுப்போகாமல் பாதுகாத்து, உடலை பாதுகாத்து வைக்கும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு தெரிந்த காலத்தில் அதை வெளிப்படுத்தி குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதை ஐயம் திரிபற மெய்ப்பித்துவிட்டான். என்னே அவனின் கருணை என்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் காலம், இஸ்ரேல் எனும் தேசத்தை பாலஸ்தீன அரேபியர்களின் பகுதிகளில் உருவாக்குவதற்கான திட்டம் தயாராக இருந்தது. அந்தப்பகுதி மெய்யாகவே தங்களின் தாயகம் தான் என யூதர்களை நம்பவைக்க சியோனிச தலைவர்கள் புராணக்கதைகளுக்கு வரலாற்று வடிவம் கொடுக்கும் வேலைகளில் இறங்கினர். தங்களின் கடவுளான மொசையா எகிப்தின் கொடுமைகளில் இருந்து மீட்டுவந்து வாக்களித்து வாழவைக்கப்பட்ட பகுதிதான் பாலஸ்தீனப் பகுதி என்பதற்கு ஆதாரமாக கடலில் மூழ்கி இறந்துபோன மன்னனைத்தேடி, தங்களின் புராணக்கதைக்கு ஆதாரம் தேடி பல மன்னர்களின் சடலங்களை குறிப்பிட்ட அந்த மன்னனாக அடையாளப்படுத்தும் வேலையை செய்தனர். அஹ்மோஸ், தட்மொஸ், அமேன்கொதப், சேத்தி, ரமோஸஸ், மேர்நெப்தா போன்ற மன்னர்களின் சடலங்களை அதுதான் அந்த மன்னனின் சடலம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு உடலை அடையாளமாக காட்டமுயன்று பின்னர் கைவிட்டனர். இதில் ஒரு உடலான ரமோஸஸ் உடலைத்தான் இஸ்லாமியர்கள் பிர் அவ்ன் உடலாக, ஆதாரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முதலில் பிர் அவ்ன் அல்லது பாரோன் அல்லது பரோவா என்பது குறிப்பிட்ட ஒரு மன்னனின் பெயரல்ல, மாறாக அது அரச பரம்பரையின் பெயர். அடுத்து, ஆரம்பத்திலேயே அந்த சடலத்தை வெளிப்படுத்தியிருந்தால் மனிதர்களால் அதை பாதுகாத்து வைக்கமுடியாமல் போயிருக்கும் என்பதால் மனிதர்கள் அந்த தொழில்நுட்பம் தெரிந்ததும் இறைவன் வெளிப்படுத்தியிருக்கிறான் என்பது மோசடியானது. ஏனென்றால் செத்த உடல்களை மம்மிகளாக பதப்படுத்தி வைப்பதை மனிதர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே செய்துவருகின்றனர். அவர்கள் பதப்படுத்திய உடலும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

எகிப்தின் அன்றைய காலகட்டத்தை மூன்றாக பிரிக்கலாம். கிமு 2950லிருந்து கிமு 2150வரையான முதல் காலம். இந்த காலத்தில்தான் மன்னர் குடும்பத்தினரின் உடலை மம்மியாக பதப்படுத்திவைக்கும் முறை தொடங்குகிறது. இந்த மன்னர்களின் மம்மிகள் புதையல் திருடர்களால் சிதைக்கப்பட்டுவிட்டன. கிமு 2150லிருந்து கிமு 1500 வரையான இரண்டாம் காலம். இந்தக்காலத்தில் முறையான அரசமைப்பு இன்றி குழப்பமான நிலை நிலவியது. கிமு 1500லிருந்து கிமு 1000வரையிலான மூன்றாவது காலகட்டத்தில் தான் மேற்கண்ட மன்னர்கள் எகிப்தை ஆண்டார்கள். இந்த மன்னர்களின் மம்மிகள் அனைத்தும் செயற்கையான முறையில் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தானேயன்றி இயற்கையான முறையில் பாதுகக்கப்பட்டவையல்ல. இவைகளில் அதிகம் சிதையாமல் கிடைத்திருப்பது இரண்டாம் ரமோஸஸ் மம்மிதான்.

மதவாதிகள் இரண்டாம் ரமோஸஸ் மம்மி 1898ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இரண்டாம் ரமோஸஸ் மம்மி கெய்ரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் புகைப்படத்தைத்தான் தங்கள் பரப்புரைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் 1898ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவைகள் இரண்டு உடல்கள். அமேன்கொதப், மேர்நெப்தா ஆகிய இரண்டு மம்மிகள் அந்த ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் ரமோஸஸ் கண்டெடுக்கப்பட்ட ஆண்டு 1881. இரண்டாம் ரமோஸஸ் கிமு 1279ல் ஆட்சியேறி 67 ஆண்டுகள் ஆட்சி புரிந்து கிமு 1213ல் தனது 90ஆவது வயதில் மூட்டு வலியால் அவதியுற்று மரணமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மாரிஸ் புகைல் என்றொரு பிரஞ்சு மருத்துவர், சவூதி அரசரின் தனி மருத்துவராக பணியாற்றியவர். குரானின் அறிவியல் பார்வை என்ற நூலை எழுதியவர். இவர் எகிப்து அரசின் அனுமதியுடன் மேர்நெப்தாவின் மம்மியை ஆராய்ந்தார். ஆராய்ந்து இது நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தார். அதற்கு அவர் கொடுத்த ஆதாரம் அந்த மம்மியில் உப்புத்தன்மை இருந்தது என்பது தான். ஆனால் உடலை மம்மியாக பதப்படுத்த நேட்ரான் எனும் உப்புதான் அந்தக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் நகைக்கக்கூடிய இன்னொரு செய்தி என்னவென்றால், இவரின் வெற்றித்தூண் எனும் கல்வெட்டில் கிமு 1207ம் ஆண்டில் கானான் மீது படையெடுத்து அதை வென்றதாக பொறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மேர்நெப்தாவின் ஆட்சியில் அவரால் துன்புறுத்தப்பட்டு மூஸாவால் தன்னை பின்பற்றியவர்களுடன் செங்கடலை பிளந்து மறுகரையில் குடியிருப்பு உருவாக்கப்பட்டதோ அதுதான் கானான் பிரதேசம் எனப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடலில் மூழ்கி இறந்துபோன மன்னன், தான் உயிருடன் இருக்கும்போது அந்தப்பகுதியை போரிட்டு வென்றதாக கல்வெட்டு நட்டிருக்கிறான்.

தன் கைத்தடியால் தட்டி கடலை பிளந்தது ஒருபுறம் இருக்கட்டும், இஸ்ரவேலர்கள் பெரும் தொகையில் நாடுகடந்து சென்றதாக வரலாறுகளில் எந்தக்குறிப்பும் இல்லை. கானான் பிரதேசம் அதாவது இன்றைய பாலஸ்தீனப் பகுதி தீவல்ல, தரை வழியாகவே செல்லமுடியும் போது கடலை பிளந்து போகவேண்டிய தேவை என்ன? அன்றைய எகிப்தில் கானான் பிரதேசம், இன்றைய சிரியா, நுபுன்கள் தேசம் எல்லாம் அடக்கம். நாடு கடந்து போகும் மூஸா அதே நாட்டின் இன்னொரு பகுதிக்கு தான் போகிறார்.

ஒட்சியின் உடல்

இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள உடல்களை மனிதன் மம்மிகளாக்கி செயற்கையாக பத்திரப்படுத்தியிருக்கிறான். இதே காலகட்டத்திலுள்ள ஒரு உடல் மனிதனால் பத்திரப்படுத்தாமல் இயற்கையாக  பதப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ரமோஸஸ் விசயத்தில் உண்மை என்றே ஒரு வாதத்திற்காக கொண்டாலும் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. கார்பன் நிர்ணய முறையில் அவ்வுடல் கிமு3300க்கும் 3200க்கும் இடையில் வாழ்ந்த மனிதனுடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்சி என்று பெயரளிக்கப்பட்டுள்ள அந்த உடல் ஆஸ்திரியாவிலுள்ள சவுத் டைரோல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்த ஓட்சிக்கு பின்னால் வேதமோ கதையோ இல்லை.


எல்லோருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும் அறிவியலையே தங்களுக்கு ஏற்ப வளைத்து தங்கள் வேதவிவகாரங்களை வண்ணம் பூசிக்கொள்ளும் மதவாதிகள், வரலாற்றை விலை பேசாமல் விட்டுவைப்பார்கள் என்று நம்பமுடியுமா?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13.  கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9.  பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

48 thoughts on “பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

  1. Holy Quran and the story of Pharaoh Ramses II (Firaun Mummy)

    A miracle, by definition, is a supernatural event beyond the laws of science; it is fulfilled only by Allah’s will and power. It has significance and can be confirmed only by those who directly witnessed the event in time.

    France and the Mummy Of Paraoh :

    When Francisco Mitra became the president of France in 1981, France requested from the Egyptian government to host the mummy of Pharaoh. For the purpose of running laboratory and archeological examinations on the mummy of the most notorious dictator ever lived on earth. Upon arrival, very royal attendants were there including the French president himself and all ministers who bowed in honor for the Firaun Mummy.

    When the ceremony ended, the mummy was carried to a specially-designed section at the Archeology Centre of France . Were it started to be tested by the greatest French archeological and anatomical scientists in order to discover more about such a great Firaun Mummy.

    The scientists were headed by Professor Maurice Bucaille. The scientists were trying to restore the mummy while Professor Maurice Bucaille was mainly concerned with how did this mummy died? The final report of the scientists was released late at night which states that the remaining salt in the mummy is an overt evidence that it was drawn in the sea, and the body was rescued very shortly where it was immediately embalmed to be saved.

    An amazing thing was still confusing Professor Maurice Bucaille is that how could this body possibly be safer than any other mummy despite being taken out of the sea up until this time. Professor Maurice Bucaille was writing his final report on what he thought would be a new discovery about saving Pharaoh’s body immediately after his death and embalming it.
    Note: this was the dead body of Ramses II, the Egyptian King in the era of Prophet Moses (pbuh). Its age is approximately 3000 years old and it was found by the Red Sea, at the place called Jabalain, and is now on display in the Royal Mummies Chamber of the Egyptian Museum in Cairo .
    And there, someone whispered to him that Muslims claim to know something about the drowning of this mummy. Yet Professor Maurice Bucaille firmly denied such thing saying that it’s impossible to discover this without the development of science and without using his high-tech and complicated laboratories and computers.
    To his surprise, he was told that Muslims believe in a book called “Holy Quran” and this Holy Quran narrates the story of Pharaoh’s drowning and ensures the safety of his body after his death as to be a Sign to mankind.

    Professor Maurice Bucaille couldn’t believe his own ears and started to wonder: How can a book existed 1400 years ago speak about the mummy that was only found 200 years ago, in 1898? How can that be possible while the ancient Egyptian heritage was discovered only a few decades ago and no one knew about it before?

    Professor Maurice Bucaille sat down pondering on what he was told about the book of Muslims, Holy Quran while his Holy Book (The Bible) narrates only the drowning of Pharaoh without saying anything about his body.
    “Is it possible that this mummy in front of me is the one who was chasing Prophet Moses?”
    “Is it possible that Prophet Muhammad knew this 1400 years ago?”

    Professor Maurice Bucaille couldn’t sleep that night till they brought him the Old Testament where he read the story.
    Professor Maurice Bucaille was surprised that the Holy Book the Bible didn’t mention about the destiny of the body and that it will be saved.
    When the scientists were done with the mummy, France retuned it to Egypt , but Professor Maurice Bucaille couldn’t rest for a moment since he was told that Muslims know about the safety of the body from Holy Quran. So, he decided to travel and meet anatomy Muslim scientists and there he spoke about his discovery of the safety of the mummy after its death in the sea and so on.

    One of the Muslim scientists stood up and simply opened Holy Quran and pointed to the Professor at one verse:

    “We brought the Children of Israel across the sea and Pharaoh and his troops pursued them out of tyranny and enmity. Then, when he was on the point of drowning, he (Pharaoh) said, I believe that there is no god but Him in whom the Children of Israel believe. I am of those who submit (to Allah in Islam). What! Now! And indeed you disobeyed before and you were of the mischief-makers. This day shall We save you in your body, that you may be a Sign to those who come after you! But verily, many among mankind are neglectful of Our Signs.” (Holy Quran 10:90-92)

    Professor Maurice Bucaille was struck when he read that and immediately stood in front of the crowd and said loudly:
    “I believe in Islam, I believe in Holy Quran.”

    Then he went back to France with a different face he traveled with. In France , he dedicated 10 years investigating the scientific discoveries and comparing them with Holy Quran and trying to come up with one scientific contradiction with Holy Quran. Finally he quoted one verse from Holy Quran to be his conclusion:
    “No falsehood can approach it (this book) from before or behind it: it is sent down by One Full of Wisdom, Worthy of all praise.” (Holy Quran 41:42)

    As a result of all years of his research, Professor Maurice Bucaille wrote a book that shook all Europe , especially the scientists there “The Bible, the Quran and Science: The Holy Scriptures Examined in the light of Modern Knowledge.”

    Where Is Mummy now :

    the Cairo Museum where the mummy is preserved and there you get astonished at the scenery of thousands of people from all over the world visiting the place everyday , unfortunately, many of the tourists there would think: ‘Woow, look at that! Amazing!! So nice to see people of all times!! Without realizing the intended lesson that Allah has kept this body a Sign to all mankind of anyone who denies Allah and His messengers.

    So now For Us :
    Quran Says:

    ‘Has not the time arrived for the Believers that their hearts in all humility should engage in the remembrance of Allah and the Truth which has been revealed to them, and that they should not become like those to whom was given Revelation aforetime, but long ages passed over them and their hearts grew hard? For many among them are rebellious transgressors.

    And those who believe in Allah and His messengers- they are the Sincere (lovers of Truth), and the Witnesses (who testify), in the eyes of their Lord: they shall have their Reward and their Light.

    But those who reject Allah and deny Our Signs,- they are the companions of Hell-Fire ‘

    Quran 57: 16-19

  2. வாழ்த்துக்கள். நிறைய ஆராயுங்கள். இதுபோன்று அறிவுப்பூர்வமாக ஆராய்ந்த எத்தனையோ அறிவாளிகள் இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார்கள். நீங்களும் கூடிய விரைவில் இஸ்லாத்தில் இணைவீர்கள்….இன்ஷா அல்லாஹ்.. இறைவன் நாடினால்

  3. நல்ல கட்டுரை தோழரே! வாழ்த்துகள்! கட்டுரையில் முழுதும் உடன்பட்டாலும் இரண்டு விஷயங்களை நான் இங்கே முன் வைக்கிறேன்.

    // இதே காலகட்டத்திலுள்ள ஒரு உடல் மனிதனால் பத்திரப்படுத்தாமல் இயற்கையாக பதப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ரமோஸஸ் விசயத்தில் உண்மை என்றே ஒரு வாதத்திற்காக கொண்டாலும்//

    இல்லை தோழரே! இரண்டாம் ராம்செஸின் உடல், அவர் மரணமடைந்த உடனேயே பதப்படுத்தப்பட்டு, Valley of the Kings என்னும் இடத்திலுள்ள KV7 எனப்படும் Tomb- ல் வைக்கப்பட்டது. பிறகுத் திருட்டுகளுக்கு பயந்து அவ்வுடல் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு இறுதியாக Royal Cache என்னுமிடத்தில் வைக்கப்பட்டது. இவை அனைத்தும் hieroglyphics முறையில் அவரது உடலைச் சுற்றியிருந்த துணியில் பதியப்பட்டுள்ளது.
    அவரது உடல் பதப்படுத்தப்ப்படும்பொழுது, துண்டாகிவிட்ட தலையை இணைப்பதற்காக செருகப்பட்ட மரப்பலகையும், X-Ray பரிசோதனையில் தெரியவந்துள்ளது. முன்னரே பதப்படுத்தப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த உடல்தான் அது.

    இது தொடர்பான சுட்டி.
    http://www.touregypt.net/19dyn03.htm

    இரண்டாவதாக, எனக்கு அந்த வசனத்திலேயே சிறிது ஐயம் உள்ளது.
    //This day shall We save you in your body, that you may be a Sign to those who come after you!//
    Save you in your body என்பதன் பொருள் வேறு. Save your body என்பதன் பொருள் வேறு. Save you in your body என்னும்பொழுது, உயிர் பிழைக்கவிட்டதாய்தானே அர்த்தம்? அப்படியானால் அன்று Pharaoh மன்னனை கொல்லாமல் மன்னித்ததாய் அர்த்தமாகுமா? (இதுபோன்ற கேள்விகள் எழத்தொடங்கியதும், “Preserve your body” என்று மொழிபெயர்ப்புகள் மாறத்தொடங்கியதை கவனித்தீரா?)

  4. நன்றி தோழர் கும்மி,

    நானும் அதை செயற்கையாக பதப்படுத்தப்பட்ட உடல் என்று தான் கூறியிருக்கிறேன். ஒரு வாதத்திற்காக அது இயற்கையாக பாதுகாக்கப்பட்டது என்று எடுத்துக்கொண்டாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்பது தான் நான் அந்த இடத்தில் சொல்ல வருவது.

    குரான் வசனங்களின் தன்மை குறித்து குறிப்பிடுவது என்றால் அது காலந்தோறும் மாறியே வந்திருக்கிறது.

    செங்கொடி

  5. //The scientists were headed by Professor Maurice Bucaille. The scientists were trying to restore the mummy while Professor Maurice Bucaille was mainly concerned with how did this mummy died? The final report of the scientists was released late at night which states that the remaining salt in the mummy is an overt evidence that it was drawn in the sea, and the body was rescued very shortly where it was immediately embalmed to be saved.//

    நான்சென்ஸ்
    http://en.wikipedia.org/wiki/Ramesses_II
    ராம்செஸ் இறக்கும்போது அவருக்கு வயது 90.

    இதோ ராம்ஸெஸை பாரிஸில் பரிசோதனை செய்தது பற்றிய இணையப்பக்கம்.

    http://library.thinkquest.org/C0116982/HTML%20page%20folder/hramses.htm

    இதில் எங்கே அவர் தண்னீரில் மூழ்கி இறந்ததாக இருக்கிறது. வழக்கமான மாரிஸ் புகாயில் வகை பொய்.
    For the last decades of his life, Ramesses II was essentially crippled with arthritis and walked with a hunched back,[58] but a recent study excluded ankylosing spondylitis as a possible cause of the pharaoh’s arthritis.[59] A significant hole in the pharaoh’s mandible was detected while “an abscess by his teeth was serious enough to have caused death by infection

  6. //குரான் வசனங்களின் தன்மை குறித்து குறிப்பிடுவது என்றால் அது காலந்தோறும் மாறியே வந்திருக்கிறது.
    //

    அது காலம்தோறும் மாறியே வந்திருக்கிறது என்பதை நாம் ஆதாரபூர்வமாகக் காட்டுவதற்கு, இது போன்ற வசனங்கள் உதவி வருகின்றன. யுசுப் அலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும், பிஜே அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கும் இடையே உள்ள வித்தியாசங்களையும் நீங்கள் முன்வைத்தால், இன்னும் கூட சிலர் விளங்கிக்கொள்ளக்கூடும்.

  7. வரலாற்றின் அத்துணை பக்கங்களிலும் ஒயிட்னர் வைத்து நகலெடுத்து எல்லா விசயங்களையும் குரானுடன் தொடர்பு விளக்கம் அளிக்கும் இஸ்லாமியத்தின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை !

    இந்த மானங்கெட்ட பிழைப்பில் பார்ப்பனீய குயுக்திக் கென்றும் குறைச்சலிருந்ததாக தெரியவில்லை !

    ஓட விட்டு உதைக்க வேண்டும் மத யாவாரிகளை !

  8. தேவையான கட்டுரை தோழர் !
    பொதுவாக பிர்அவ்ன் பற்றி சொல்லும்போது இஸ்லாமியர்களுக்கு பெருமை தாங்காது ஆண்டவன் அல்லா இருக்கறத இப்பவாது நம்புறீங்களா? என்று என்னிடம் கேட்பார்கள்.

    பிரிஅவ்ன இத்தன வருசம் உசிரோட வெச்சிருந்து காட்டிருந்தா அல்லா டாப்புன்னு ஒத்துக்கலாம் ஆனா பொணத்தகாட்டி அல்லாவ வாழ வெக்கறீங்களேடா கண்ணு? என்று கேள்வி கேட்டபடி நான் வந்து விடுவேன் ஆனால் இந்த கட்டுரை மதவாதிகளின் இத்துப்போன பொய்களை வரலாற்று ஆதாரத்தோடு தகர்க்கிறது சிறப்பான விடயம், தொடர்ந்து அம்பலபடுத்துங்கள் தோழர்

  9. //நல்லவேளையாக இந்த ஓட்சிக்கு பின்னால் வேதமோ கதையோ இல்லை.//

    நல்ல காமெடி போங்க

    நம்மூரு சவுண்டி பாப்பான் எவனாவது இதுதான் கிஸ்ண ஒடலு, ராமன் ஒடலுன்னு கரடிவுடாம இருந்தா சரிதான். 😉

  10. உப்பு இருந்ததால் இது தண்ணீரில் மூழ்கித்தான் இறந்திருக்கவெண்டும் என்று பிராடு டாக்டர் கண்டுபிடித்தாராம்.
    சவுதி பல்கலைக்கழகத்தில் காசு கொடுத்தால் என்னவேனாலும் சொல்வார் இந்த பிராடு டாக்டர்.

    மம்மிபிகேஷன் செய்வதே உப்பை வைத்துத்தான்.

    http://www.kingtutone.com/mummies/mummification/

    After the body had been cleansed and the organs removed, it was then ready for the next step, the drying of the body. The process remains a controversial subject because of Herodotus’s choice of words used to describe the process. He used the word pickle; which led many Egyptologists to believe the body was submerged in a solution of natron salt. The other method, which was tested and proved more logical, called for large amounts of natron salt packed around the body until the 70th day, when the body was desiccated.

  11. ”கால்மார்க்ஸின் உடல் அல்ஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டால்”

    சோளியக்குடியில் தர்ஹா கட்டுவோம்!

  12. குறை சொல்லனும்னு நினைச்ச எந்த விசயத்தையும் குறை சொல்லலாம். குரானை பற்றி குறை சொல்ல ஆயிரம் மடங்கு யோசிக்கணும். மற்ற விசயம்னா ஒரு நிமிடம் போதும். முதலில் உங்க கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கணும். நீங்க எந்த மதத்தில் இருந்து இந்த சென்கொடிக்கு வந்தீர்கள். அப்புறம் பேசலாம் செங்கொடியை நிறம் வெளுக்க செய்யலாம். இன்ஷா அல்லாஹ்

  13. எல்லாம் சரி இதுதான் ஃப்ரவுன் உடல் என யார் அடயாளம் காட்டீ தந்தது? ஆய்வாளர்களா?அல்லது ஆன்மீகவாதிகளா? ஃப்ரவுன் முகம் எப்படி இருக்கும் என்றாவது இன்றய தலைமுறயினருக்கு அடயாளைங்காட்ட என்ன அளவுகோலை அமைத்துக் கொடுத்தான் அந்த அனைத்தும் அறீந்தவன்? எவன் உடலையாவது தோண்டிக்கான்பித்தாலும் ஏற்றூக்கொள்வீர்களா? யார்? எந்த மதவாதியால் உறூதிசெய்யப்படும்?

  14. அருமையான கட்டுரைகள்…. நீண்ட நாள் எதிர்பார்த்த கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்தது. தொடர்ந்து எழுதுங்கள். இந்த அகபக்கத்தை பூக்மார்க் செய்துள்ளேன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து படிப்பேன். இனி மூட பழக்க வழக்கங்கள் மெல்ல சாகும். வாழ்த்துக்கள் நன்றி.

  15. கலாநிதி மாரிஸ் புகைல் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு
    ஒரு பிரான்ஸ் நாட்டவரும் மம்மியும் 1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது. இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

    தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார். பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது. உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார். அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே” என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

    prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

    இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான். அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

    பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்.

    மாரிஸ் புகைல்
    சொல்கின்றார் கேளுங்கள்.

  16. மவுரிஸ் புகைல் என்பவரை பற்றி இஸ்ல்லமியர்கள் கூறுவதல் அவரைப் பற்றியும் நாம் எழுத வேண்டி உள்ளது.இவர் 19 ஜுலை 1920 ஆண்டு ஃப்ரான்ஸ் நாட்டில் பிறந்தவர்.1945 முதல் 1982 வரை மருட்துவராக காஸன்ட்ராலோஜி(ஜீரண உறுப்புகள் துறை) பிரிவில ப்ணியாற்றியவர். ப்ரான்ஸ் எகிப்தியல் குழுவிலும் உறுப்பினராக செயல் பட்டு வந்துள்ளார்.

    1973 முதல் சவுதி மன்னர் ஃபைசல் அவர்களுக்கு குடும்ப மருத்துவராக பணியாற்றியவர்.
    http://en.wikipedia.org/wiki/Maurice_Bucaille

    1976 ஆம் ஆண்டு பைபிள், குரான் , மற்றும் அறிவியல் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில் குரானில் அறிவியல் நிறைய கூறப் பட்டு உள்ளது பைபிளில் இல்லை என்று கூறியுள்ளார்.

    1981 ஆம் ஆண்டு ஃப்ரான்ஸ் வந்த ராமோஸ் 2 மமமியை பார்த்து இஸ்லாமை பற்றி ஆராய்சி செய்தார் என்றால் நம்பும் படியாக இல்லை.

    http://www.quranandscience.com/new-muslim-stories/209-maurice-bucaille-.html

    மதம் மாறினாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. நண்பர்கள் இருந்தால் பகிரலாம்.
    http://www.islamicbulletin.org/newsletters/issue_6/embraced.aspx

  17. மவுரிஸ் ஃபுகைல் பற்றி தொடர்வோம்.

    அவருடைய பைபிள்,இஸ்லாம் மற்றும் அறிவியல் எனன்ற புத்தக்த்தின் ஆஅங்கில மூலம் இந்த இணைப்பில் உள்ளது. வேண்டுவோர் பதிவிற‌க்கம் செய்து கொள்ளலாம்..

    இந்த புத்தகம் வெளிவந்தது கி.பி.1976. இதில் இவ்ர் கூறுவது
    பைபிள் ஆதம் படக்கப் பட்டது சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் என்று கூறுவது தவறு.
    குரான் கால அளவு எதுவுமே சொல்லாததால் நம் இஷ்டத்திற்கு அறிவியல் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கலாம்.

    படைப்புக் காலம் 6 நாட்கள் அல்ல யாம் என்ற அரபி வார்த்தைக்கு காலம் என்றே பொருள். ஆகவே எவ்வளவு ஆண்டு வேண்டுமென்றாலும் கூற வாய்ப்பு உள்ளது.

    32:4. அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?

    70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

    ___________________

    இத்ற்கு சாகிர் நாயக் பாணியில் ஒரு விளக்கம்.

    இரு மணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.ஆதம் தோன்றிய வருடம் எது என்ற கேள்விக்கு மடல் மாணவன்(பைபிள்) கி.மு 4000 என்று எழுதுகிறார்.இரண்டாம் மாண‌வர் எதுவும் விடையளிக்கவில்லை.யார் சிறந்தவர்.
    கெள்வி பாடத்திட்டத்திற்கு வெளியே எடுக்கப் பட்டு இருந்தால்.தப்பாக எழுதிய மாணவர்முழு மதிபெண் பெறுவார். விடை அளிக்காதவர் 0 பெறுவார்.

    ஒருவேளை தப்பான பதிலுக்கு எதிர்மறை(நேகடிவ் மார்க்) மதிப்பென் இருந்தால் இரண்டாம் மாணவர் 0 ம் முதல் மாணவர் ‍‍மைன்ஸ்1 மதிப்பெண் பெறுவார்கள்.

    ஆகவே குரானே பைபிளை விட சிறந்தது.
    ________________

    அண்ணன் ஃபுகைல் அவர்கள் இந்த பாணியில் விளக்கங்கள் அளிக்கிறார். நஅனைவரும் அவரின் பொன்னான் விளக்கங்களை படித்து பய பெறுக‌.

    Click to access xx.pdf

  18. அதுசரி.. குப்பையில் போகவேண்டிய உடலை பல்லாயிரமாண்டுகளாக பாதுகாத்து வைத்து இந்த உலகுக்கு தர வேண்டிய உபயோகம்தான் என்ன? பாதுகாத்து வைக்கவில்லையேன்னு இங்கு யார் கவலைப்பட்டது? கணினி காலத்தில் காட்டுமிராண்டி காலத்து கதை எதற்கு?

  19. எந்த பேராசிரியர்?
    இந்த மவுரிஸ் ஃபுகைல் என்பவர் 1976லேயெ புத்தகம் எழுதி விட்டார். பிறகுதான் 1981ல் ராமோஸ் 2 மம்மியை பார்த்தார். 1973ல் இருந்தே சவுதி மனன்ர் குடும்ப வைத்தியராக பணியாற்றியவர். இந்த உண்மைகளை மறுக்கிறீர்களா?

    மவுரீஸ் ஃபுகைலின் அரபி புலமை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். அவர் எப்போது முஸ்லீமாக மாறினார் என்பதை சொல்லுங்கள்.

    அவர் எழுதிய புத்தகத்தை படித்து அதில் இருந்து விவாதிப்பது அல்லது உங்கள் கருத்தை கூறாமல் இதை பார் அதை பார் என்பது, நேர விரயமே.

    இஸ்லாமை விமர்சிக்க நாங்கள் செய்யும் தேடலைல் படிப்பில் பாதி அளவு கூட நீங்கள் செய்வது இல்லை எது என்றாலும்,அவரை கேள் ,இவர் இப்படி கூறிஉள்ளார் என்பது.

    நான் கூறுகிறேன்.

    1.குரானில் கூறப்படும் பல நபிகள் வராலாற்றில் இல்லாதவர்கள்.இதை பற்றி யாராவது.1400+ வருடங்களில் ஏதாவது கூறியுள்ளாரா என்று பகிர்ந்தால் நல்லது.

    2. 610_632 முகமதுவிற்கு எவ்வளவு விஷயங்கள் தெரியுமோ அவ்வளவுதான் குரானிலும் இருக்கும் அவ்வளவுதான்.

  20. சங்கர் ,///610_632 முகமதுவிற்கு எவ்வளவு விஷயங்கள் தெரியுமோ அவ்வளவுதான் குரானிலும் இருக்கும் அவ்வளவுதான்///
    மனிதன் வாழ்விற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவும் குர் ஆனில் இருக்கும்.துல்கர்னைன் எப்போது பிறந்தார்?அவருடைய அப்பா அம்மா யார்?எத்தனை குழந்தை,எப்போது கல்யாணம் ஆகியது ?இது போன்ற விவரங்கள் இருக்காது அவ்வளவுதான்

  21. Senkodi:
    ————

    “பிர்அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை”

    A.Mohamed Ihsas:
    ————————-

    இரண்டாம் ராம்செசின் உடல் குர்ஆன் குறிப்பிடும் பிர்அவனுடையது இல்லை .

    quranist@aol.com

  22. SANKAR, on December14, 2010 at 6:46 மாலை said:

    2. 610_632 முகமதுவிற்கு எவ்வளவு விஷயங்கள் தெரியுமோ அவ்வளவுதான் குரானிலும் இருக்கும் அவ்வளவுதான்.

    ————————————————————————————————
    ஆருடம் கூறும் அருகதை எந்த மனிதனுக்கும் இல்லை.
    ————————————————————————————————

    quranist@aol.com

  23. ஆருடம் கூறும் அருகதை எந்த மனிதனுக்கும்[முகமதுவையும் சேர்த்து] இல்லை.

  24. ஆருடம் கூறும் அருகதை முகமதுக்கும் இல்லை.

  25. இருநூறு கோடி மக்களால் பின்பற்றப்படக் கூடிய ஒருவரும் ,அறுநூறு கோடி மக்களில் ஒருவரும் சம நிலையில் உள்ளவர்களா?

  26. “ஆருடம் கூறும் ஏழாம் அறிவு முகமதுக்கும் இல்லை”

    Reference from The Final Testament

    11:31. 
    “Nor do I say to you that I have the treasures of God,
    ——————————–
    nor do I know the future,
    ——————————–
    nor do I say that I am an Angel,
    nor do I say to those whom your eyes look down upon that God will not grant them any good.

    quranist@aol.com

  27. இருநூறு கோடி மக்களால் பின்பற்றப்படக் கூடிய ஒருவரும் ,அறுநூறு கோடி மக்களில் ஒருவரும் சம நிலையில் உள்ளவர்களா?
    ———————————————————————————————————————-

    Reference from The Final Testament

    6:116. And if you obey the majority of those on Earth they will lead you astray; that is because they follow conjecture, and that is because they only guess.

    11:31. 
    “Nor do I say to you that I have the treasures of God,
    nor do I know the future,
    nor do I say that I am an Angel,
    —————————————————————————————-
    nor do I say to those whom your eyes look down upon that God will not grant them any
    —————————————————————————————–
    ——-
    good.
    ——-

    quranist@aol.com

  28. நண்பர் குரானியவாதி
    நீங்க 19 ஆளா?.இஸ்லாமிய தமிழர்களில் கூட இந்த அமைப்பு உள்ளதா?.இந்த ஃபைனல் டெஸ்டமென்ட் மொழிபெயர்ப்பு பிற மொழி பெயப்புகளில் இருந்து வேறுப்டுவது ஏன்?.இன்னும் பெசுவோம்.

  29. Code 19 என்ற எந்த‌க்கடவுளும் இல்லை குர்ஆன் கூறும் அத்தகையதொரு கடவுளைத்தவிர‌

    quranist@aol.com

  30. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
    Posted on மார்ச்26, 2010 by செங்கொடி
    ——————————————————————————————————————

    10:90-92

    பின்பு ஃபிர்அவ்னும் அவன் படையினரும் கொடுமையும், பகைமையும் கொண்டு இஸ்ராயீலின் சந்ததியினரை பின்தொடர்ந்தபோது நாம் அவர்களை(துன்பக்)கடலிருந்து மீட்டோம்.

    பின்பு ஃபிர்அவ்னும் அவன்சமூகமும் துன்பத்தில் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் வைக்கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவனாக இருக்கிறேன் என்றும் கூறினான்.

    இந்த‌ இன்றைய நிகழ்வை உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக குர்ஆனில் உம் வரலாற்றை கூறுவோம்.
    ——————————————————————————————————————-
    quranist@aol.com

  31. சார்,
    முதலில் இஸ்ரேலியர் என்னும்படியான் பிரிவு மக்கள் பொ.மு.2ம் ஆயிர காலத்தில் வாழ்ந்தனரா?

    மோசே காலம் பைபிளில் உள்ளதில் உள்ள அர்த்தமற்ற தன்மை இவை பற்றிய தேவப்ரியா சாலமன் வலைக் கட்டுரைகள்
    யாத்திராகமம்- மோசே- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு
    http://pagadhu.blogspot.com/2012/08/blog-post.html

    யாத்திராகமம்-மோசஸ் கதைகள் – கர்த்தரின் குழப்பம்
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_26.html

    ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_25.html

    கர்த்தர் செய்த கொலைகள்.
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_22.html

    கர்த்தர் மனித குல எதிரி-பாபேல் கோபுரம் கதை!
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_18.html

    கர்த்தர் மனித குல எதிரி-ஆதிபாவக் கதை!
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_17.html

    கர்த்தர் உளறல் ஆபிரகாம் – ஈசாக்கு கதைகள்
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_15.html

    யாத்திராகமம் கட்டுக்கதை. இஸ்ரேல் பல்கலைக் கழகக் காணொளி- வீடியோ
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_1302.html

    ஆபிரகாம்- ஈசாக்கு கட்டுக்கதை. இஸ்ரேல் பல்கலைக் கழகக் காணொளி.http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_12.html

  32. உங்கள் கருத்துகளை அனைத்தையும் படித்தேன் இதை பற்றி மக்கள் முன் விவாதிக்க தயாரா இஸ்லாம் பொய்யான மார்க்கம் குர்ஆன் பொய்யானது என்று நிருப்பிக்க ஒரு வாய்ப்பு வாருங்கள் பகிரங்க விவாதத்திற்கு அலைகின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
    மாநில தலைமையகம் நேம்பர்30
    அரண்மணைகாரன் தெரு மண்ணடி சென்னை1

  33. இஸ்மாயில் பாய்,

    நீங்க என்ன புதுசா!

    எப்போது வேண்டுமானாலும் என்ன தலைப்பினிலானாலும் விவாதிக்கலாம். நீங்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து வரலாம். விவாதம் இந்த தளத்தில், எழுத்து வடிவில் தான் நடக்கும். இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்க்கம் இல்லை என்று நிரூபிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறது செங்கொடி தளம். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  34. ஆமாங்கோ ரஃபீக், உங்களைப்போல மாக்கள் இருக்கும்போது கம்யூனிசம் ஒருபோதும் வெள்ளாதுதான். ஒரு முஸ்லிம் என்ற நிலையில் ரஃபீக்குகள் அதிகரித்தமைக்காக வெட்கித் தலைகுனிகிறேன்.

  35. இந்தியாவில் முஸ்லிம்களின் கழுத்தை மோடிகளால் நெக்கிப் பிடிக்க இயலாததன் காரணம் மதச்சார்பற்ற சக்திகள்தான் என்பதையும் இவர்களை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர்கள் செங்கொடிகள்தான் என்பதும் ரஃபீக் போன்ற அறிவாளிகளுக்குத் தெரியாது. ரஃபீக்கு களுக்கு நல்ல அறிவைத் தருவாயாக யா, அல்லாஹ் என்பதுதான் என்னுடைய இப்போதைய பிரார்த்தனை. (நந்தன் முஸ்லிமாகி விட்டான் என்று கூச்சல் போட்டுடாதீங்கப்பு; ஏற்கனவே நான் முஸ்லிம்தான்.) உங்கள் மொழியில் சொல்வதானால், செங்கொடிபோல் பெயர் தாங்கி முஸ்லிம். இந்து சமூகம்போல், கிறிஸ்தவ சமூகம்போல், இஸ்லாமிய சமூகமும் பெயர் தாங்கி முஸ்லிம்களை அனுமதித்திருந்தால், இவ்வளவு அவப்பெயரை சுமந்திருக்க மாட்டோம்.

  36. பிங்குபாக்: Nakkeran

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்