மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி: ௩௨

மனிதன் இன்று உயர்வான வசதிகளைப் பெற்ற சிறந்த சமூக விலங்காக இருக்கிறான். பல்வேறு கண்டுபிடிப்புகள், சிந்தனைகளால் தன் வாழ்வையும் சூழலையும் மேம்படுத்தியிருக்கிறான். தன் ஆளுமையால் மண்ணையும் விண்ணையும் சாடி வியத்தகு சாதனைகள்களை செய்திருக்கிறான். சில லட்சம் ஆண்டுகளாக பூமியில் உலவும் மனிதன் எப்படி தோன்றினான் என்பதில் அறிவியலாளர்களின் கருத்தும் மதவாதிகளின் கருத்தும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததில்லை. ஏனென்றால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தான் மனித வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதவாதிகளின் கருத்துகள் பரிசீலனைக்கோ, ஆய்வுக்கோ உட்பட்டதல்ல, அது நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டது என்பதால் அறிவியலாளர்கள் அதை ஏற்பதில்லை. தங்கள் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்கிறது என்பதால் அறிவியலாளர்களின் கருத்துகளை மதவாதிகள் ஏற்பதில்லை. ஆனால் உண்மை என்ன?
கடவுள் படைத்த ஒரு மனிதன் அல்லது ஒரு தம்பதியினரிலிருந்து தான் பூமியில் மனித இனம் தோன்றியது எனும் மதவாதிகளின் கூற்றுக்கு எந்தவித ஆதரங்களோ அடிப்படைகளோ; நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லை. அதே நேரம் மனிதன் பரிணாமத்தின் அடிப்படையில் தோன்றியவன் என்பதற்கு நேரடியான ஆதாரங்கள் எதுவும் இருக்க முடியாது என்றாலும் நேரடியாக இல்லாத ஏராளமான ஆதாரங்கள் எல்லாத்துறைகளிலும் இருக்கின்றன.
மனிதனின் தோற்றம் குறித்து குரான் என்ன கூறுகிறது? அதற்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு? குரானின் கூற்றைக் கொண்டு பரிணாமவியலை மறுக்கமுடியுமா? போன்றவைகளுக்கு கடப்பதற்கு முன்னர் பரிணாமம் குறித்து மதவாதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்துவிடுவது சிறப்பானதாக இருக்கும். எனவே அதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களின் பிறகு தொடரலாம்.
௧) பரிணாமவியல் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையல்ல, அது ஒரு யூகம் தான். கடவுட்கொள்கையை மறுப்பதற்காகத்தான் டார்வினை தூக்கிப்பிடிக்கின்றனரே தவிர அது வெறும் யூகம் தான்.

யூகம் என்பதற்கும் அறிவியல் யூகம் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. வெறுமனே விட்டத்தைப் பார்த்து கற்பனையில் கூறுவதல்ல அறிவியல் யூகம். அதற்கும் சான்றுகள் வேண்டும் அறிவியல் அடிப்படைகள் வேண்டும். அந்தவகையில் டார்வின் பீகிள் கப்பற்பயணத்தில் ஐந்தாண்டுகளாக மனிதன் காலடி படாத தீவுகளிலெல்லாம் சுற்றியலைந்து தொல்லுயிர் எச்சங்களைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன் விளைவாக மனிதனின் தொடக்கம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என யூகித்தது தான் டார்வினின் பரிணாமவியல். இதை வெறுமனே யூகம் என ஒதுக்கிவிட முடியாது.

இன்னொரு விதத்தில், பரிணாமவியலை யூகம் என ஒதுக்கும் மதவாதிகள் அறிவியல் யூகங்களை ஒதுக்குகிறார்களா என்றால் இல்லை என்பது தான் பதில். பெருவெடிப்புக் கொள்கையும் அறிவியல் யூகம்தான் ஆனால் அதை மதவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதன் காரணம் என்ன? பெருவெடிப்புக்கொள்கையை குரான் மறுப்பதில்லை என்பதனால் ஏற்றுக்கொள்கிறார்கள். பரிணாமவியலோ குரானுடன், கடவுட் கொள்கையுடன் நேரடியாக மோதுகிறது. அதனால் அதை ஏற்க மறுக்கிறார்கள். குரான் ஏற்கிறதா மறுக்கிறதா என்பதுதான் ஒன்றை ஏற்பதா மறுப்பதா என்பதைத் தீர்மானிக்குமேயன்றி அது அறிவியலா யூகமா என்பதல்ல.

௨) குரங்குதான் மனிதனாக மாறியது என்றால் இப்போது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறுவதில்லை?

இது அடிப்படையற்ற கேள்வி. குரங்கு திடீரென மனிதனாக உருமாற்றம் பெற்றது என நினைப்பது பரிணாமவியலை அறியாதவர்களின் நினைப்பு. உயிரினங்கள் பரிணமித்து வெவ்வேறு உயிர்களாக காலப்போக்கில் மாறுகின்றன. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது எளிமை கருதி கூறப்படுவது, மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையிலிருந்து கிளைத்துவந்த இருவேறு உயிரினங்கள் என்பதே சரியானது. மனிதன் தன்னுடைய பரிணாமப் பாதையில் பல்வேறு நிலைகளை கடந்து வந்திருக்கிறான். விலங்கு நிலையிலிருந்து மனிதன் எனும் நிலைக்கு வருவதற்கு சற்றேறக்குறைய நான்கு கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. நான்கு கோடிக்கும் அதிகமாக ஒரு மனிதனின் வாழ்நாள் இருக்குமானால் ஒருவேளை பரிணாம மாற்றங்களை அவனால் நேரடியாக கண்டிருக்க முடியும். மட்டுமல்லாது பரிணாமம் என்பது யாரேனும் கட்டளையிட்டு நிகழ்வதல்ல, இயற்கைத் தேர்வு முறையில் சூழலுக்கு உட்பட்டு வினைபடுவது. அப்போது நடைபெற்றது இப்போது ஏன் நடைபெறவில்லை என யாரலும் கேள்வி எழுப்ப முடியாது.

௩) குரங்கிலிருந்து மாறிவந்தவன் மனிதன் என்பது உண்மையானால் பரிணாமவியல் தத்துவத்தின்படி மனிதன் ஏன் இப்போது வேறொரு உயிரினாமாக மாறவில்லை. பரிணாமத்தை தடுத்தது யார்?

யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் முடியாது. பரிணாமத்தின் முக்கியமான காரணியே சூழலால் பாதிக்கப்படுவது. சூழலால் தாக்கப்பட்டு நிர்ப்பந்தத்திற்குள்ளாகும் உயிரினங்கள் விரைவாக பரிணமிக்கின்றன. மனிதனைப் பொருத்தவரை தனக்கு ஏற்ப சூழலை மாற்றியமைத்து கொள்ளும் திறனுடன் இருக்கும் உயிரினினம் என்பதால் பரிணாமம் மெதுவாகவே நிகழும். அதேநேரம் மனிதனும் பரிணமித்திருக்கிறான். மூளையைச் சுற்றியிருக்கும் மெல்லிய உறை கடந்த நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் மனிதன் பெற்றிருக்கும் புதிய பரிணாமம். மட்டுமல்லாது மனிதன் தன் முடி, நகங்களை இழந்துவருகிறான்.

௪) களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டவன் மனிதன் எனும் குரனின் கூற்றை அறிவியல் உலகம் மெய்ப்பித்திருக்கும்போது உயிரினங்கள் ஒன்றிலிருந்து ஒன்று மாறிவந்தது அதிலிருந்து மனிதன் வந்தான் என டார்வின் தத்துவம் பேசுவது அறிவியலுக்கே முரணானதில்லையா?

பொய்களைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. மனித உடலில் இருக்கும் தனிமங்கள் என 58 வகை தனிமங்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். இதை களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாக கூறும் குரானின் கூற்றை மெய்ப்படுத்துவதாக கூறமுடியாது. மென்டலீப் எனும் வேதியியலாளர் சுமார் 108 தனிமங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார். பூமியிலுள்ள எந்தப் பொருளானாலும் அவற்றுக்கு இந்த தனிமங்கள் தான் அடிப்படை. ஆனால் மனித உடலிலிருக்கும் தனிமங்களுக்கு மண்தான் அடிப்படை என மதவாதிகள் திரிக்கிறார்கள். மண் ஒரு பொருள் அந்தப் பொருளுக்கும் மேற்கண்ட தனிமங்களே அடிப்படை என்பது தான் உண்மை.

மனிதன் மட்டுமல்ல உல‌கின் அனைத்துப் பொருட்களும் மேற்கண்ட தனிமங்களினால் ஆனவையே. ஆனால் குரான் மனிதனை மட்டும் சிறப்பாக களிமண்ணினால் படைத்ததாக கூறுகிறது. மனிதன் உட்பட உலகின் அனைத்துப் பொருட்களுக்குமே மேற்கண்ட தனிமங்களினால் ஆக்கப்பட்டிருக்க குரான் மனிதனை மட்டும் களிமண்ணால் படைத்ததாக கூறுவதிலிருந்தே அதற்கும் அறிவியலுக்கும் உள்ள பொருத்தம் எளிதில் விளங்கும்.

மட்டுமல்லாது மனிதன் பூமியிலுள்ள களிமண்ணிலிருந்து படைக்கப்படவில்லை. சொர்க்கம் அல்லது வேற்று கிரகத்திலுள்ள ஒருவகை களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதனின் உடலிலுள்ள தனிமங்கள் அனைத்தும் பூமியிலுள்ளவையே. பூமியில் இருக்கும் தனிமங்கள் வேற்று கிரகத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றாலும் பூமியில் இல்லாத ஒன்றிரண்டு தனிமங்களாவது மனிதனின் உடலில் இருந்தாக வேண்டுமல்லவா? அப்படி எந்த தனிமமும் இல்லை என்பதிலிருந்தே மனிதன் முழுக்க முழுக்க பூமியின் தயாரிப்பு என்பது உறுதியாகிறது.

௫) பலமான விலங்கே உயிர்வாழும் என்று பரிணாமவியல் கூறுகிறது. பலமான விலங்கான புலியை அரசு தனியாக நிதி ஒதுக்கி பாதுகாக்க வேண்டியுள்ளது, பலவீனமான ஆடு பல்லயிரம் கோடி எண்ணிக்கையில் இந்தியாவில் இருக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா டார்வின் தத்துவம் ஏற்கமுடியாத ஒன்று என்பது?

தகுதியான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும், பலமான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. சூழ்நிலையின் வினைப்பாட்டை தாக்குப்பிடித்து நீடிக்கும் விலங்கே உயிர்வாழும் தகுதியைப் பெறும். டைனோசர்கள் வாழும் காலத்தில் அவற்றைவிட பலசாலியான வேறு விலங்குகள் எதுவும் பூமியில் இல்லை. ஆனால் ஒரு குறுங்கோள் பூமியை தாக்கியபோது அதை தாக்குப்பிடித்து வாழும் வலிமையை பலசாலியான அந்த விலங்குகள் பெற்றிருந்திருக்கவில்லை என்பதால் அவை அழிந்துபோயின. ஆடுகளுடன் ஒப்பிடுகையில் புலிகள் வலிமையானவை தான். ஆனால் மனிதனின் உணவுத்தேவையே ஆடுகளை கோடிகளில் வாழவைத்திருக்கிறது. புலிகளிடம் இவ்வாறான தேவை எதுவும் மனிதனுக்கில்லை. ஒருவேளை புலிகளை மனிதன் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்தால் அதும் எண்ணிக்கையில் அதிகம் இருந்திருக்கக் கூடும். அதேநேரம் ஆடுகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வெள்ளாடு, செம்மறியாடு எனும் இரண்டு வகைதான். இந்த இரண்டும் மனிதனின் உணவுத்தேவையை பூர்த்தி செய்கின்றன. இதே ஆட்டினத்தில் வரையாடு என்றொரு வகை உண்டு. தமிழ்நாடு அரசின் விலங்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வரையாடுகள் அரசின் நிதி ஒதுகீட்டிற்கும், பராமரிப்புக்கும் பிறகும் கூட எண்ணிக்கையில் குறைந்துகொண்டே செல்கின்றன. இது ஏன் என சிந்திப்பவர்களுக்கு அந்தக் கேள்வியிலுள்ள பித்தலாட்டம் புரியவரும்.

பின் குறிப்பு:இந்தக் கேள்விக்கு பதில் கூறவில்லை” என நினைப்பவர்களும், “இந்தக் கேள்விக்கு பதில் கூறலாமே” என நினைப்பவர்களும் தங்களிடம் இருக்கும் பரிணாமம் குறித்த கேள்விகளை தெரிவிக்கலாம். அவை அனைத்திற்கும் பதில் கூறிவிட்டே தொடர்வது என எண்ணியுள்ளேன். எனவே பரிணாமம் குறித்த உங்கள் கேள்விகளை தமிழில் பதிவு செய்யவும்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

107 thoughts on “மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா?

  1. Carbon ( /ˈkɑrbən/) is the chemical element with symbol C and atomic number 6.
    —————————————————————————————————————

    Man is a product of space and its mass.

    6:2. He is the One who created you from carbon, then decreed a fixed time period for you; a time only known by Him. Yet you still deny.

    quranist@aol.com

  2. Evolution:
    ————-

    18:37. His friend said to him while discussing with him: “Have you disbelieved in the One who created you from dirt, then from a seed, then He evolved you into a man”

    quranist@aol.com

  3. Wisdom/Science root/thought for invention:
    ———————————————————-

    2:269.He grants wisdom to whom He chooses, and whoever is granted wisdom, has been given much good. Only those with understanding will remember.

    செங்கொடியின் விளக்கம்:

    மனிதன் இன்று உயர்வான வசதிகளைப் பெற்ற சிறந்த சமூக விலங்காக இருக்கிறான். பல்வேறு கண்டுபிடிப்புகள், சிந்தனைகளால் தன் வாழ்வையும் சூழலையும் மேம்படுத்தியிருக்கிறான். தன் ஆளுமையால் மண்ணையும் விண்ணையும் சாடி வியத்தகு சாதனைகளை செய்திருக்கிறான்.

    quranist@aol.com

  4. Question:

    கடவுள் படைத்த ஒரு மனிதன் அல்லது ஒரு தம்பதியினரிலிருந்து தான் பூமியில் மனித இனம் தோன்றியது எனும் மதவாதிகளின் கூற்றுக்கு எந்தவித ஆதரங்களோ அடிப்படைகளோ; நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லை.

    Answer:

    மனித ஆணும் பெண்ணும் வித்திட்டே மனிதனைத்தயாரிக்கமுடியும் என்பதற்கு நாமே உதாரணம்.

    quranist@aol.com

  5. செங்கொடியாரே
    பிறமதத்தினரைவிட முசுலிம் மதத்தினரிடம் மதம் பற்றி மண்டையை உடைப்பது சிரமம்.காரணம்.அவர்களை சிறு வயது முதலே மதம் பற்றியே ,அதன் பெருமை பற்றியே பேசிவளர்க்கின்றனர். மற்றவர்களுக்கு மதம் வாழ்க்கையில் ஒரு அங்கம்.ஆனால் அவர்கள் வாழ்வதே மதக் கடமைகளை நிறைவேற்றிட என்ற மதப் போதையில் இருப்பவர்கள்.
    ரொம்ப சிரமம்.அவர்களை மதம் நம்மை அடிமையாக்கும் ஒரு முதலாளித்துவ போதை ஆயுதம் என உணரவைப்பது.

  6. ///சில லட்சம் ஆண்டுகளாக பூமியில் உலவும் மனிதன் எப்படி தோன்றினான் என்பதில் அறிவியலாளர்களின் கருத்தும் மதவாதிகளின் கருத்தும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததில்லை. ஏனென்றால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தான் மனித வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது///

    மனித அறிவின்

    mathematics/calculus

    பரிணாம வளர்ச்சி

    விரலிருந்து எண்களை அறியும்

    சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்புதான் .

    பின்பு பல பரிமாணங்களில்

    solar lunar space galaxy milky way

    காலெண்டர் வியாபாரம் தொடங்கியது.

    calendar:
    ———–
    calendar is a system of organizing days for social, religious, commercial, or administrative purposes. This is done by giving names to periods of time, typically days, weeks, months, and years. The name given to each day is known as a date. Periods in a calendar (such as years and months) are usually, though not necessarily, synchronized with the cycle of the sun or the moon. Many civilizations and societies have devised a calendar, usually derived from other calendars on which they model their systems, suited to their particular needs.

    quranist@aol.com

  7. செங்கொடியின் வியூகம்
    ——————————————————————————————————————

    யூகம்

    வெறுமனே விட்டத்தைப் பார்த்து கற்பனையில் கூறுவது.

    ——————————————————————————————————————-

    அறிவியல் யூகம்

    டார்வின் பீகிள் கப்பற்பயணத்தில் வெறும் ஐந்தாண்டுகள் *மட்டுமே பயணித்து மனிதன் காலடி படாத ! தீவுகளிலெல்லாம் சுற்றியலைந்து தொல்லுயிர் எச்சங்களைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன் விளைவாக மனிதனின் தொடக்கம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என அறிவைகொண்டு அலசி ஆய்ந்து மல்லaந்து படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்து
    யூகித்தது தான் டார்வினின் பரிணாமவியல்.

    ——————————————————————————————————————-

    //விலங்கு நிலையிலிருந்து மனிதன் எனும் நிலைக்கு வருவதற்கு சற்றேறக்குறைய நான்கு கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. நான்கு கோடிக்கும் அதிகமாக ஒரு மனிதனின் வாழ்நாள் இருக்குமானால் ஒருவேளை பரிணாம மாற்றங்களை அவனால் நேரடியாக கண்டிருக்க முடியும். //

    quranist@aol.com

  8. மென்டலீப் எனும் வேதியியலாளர் சுமார் 108 தனிமங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார். பூமியிலுள்ள எந்தப் பொருளானாலும் அவற்றுக்கு இந்த தனிமங்கள் தான் அடிப்படை. ஆனால் மனித உடலிலிருக்கும் தனிமங்களுக்கு மண்தான் அடிப்படை என மதவாதிகள் திரிக்கிறார்கள். மண் ஒரு பொருள் அந்தப் பொருளுக்கும் மேற்கண்ட தனிமங்களே அடிப்படை என்பது தான் உண்மை.
    ——————————————————————————————————————-

    மனித உடலில் இருக்கும் தனிமங்கள் என 58 வகை தனிமங்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். இதை மந்தவாதிகளான மதவாதிகள் போதுமான கல்வி இல்லாமலும் அறியாமையின் காரணமாக பூமி/கோள்/கிரஹ (Mass in its space )மூலகமான‌ கார்பன் எனக்கூறாமல் மண் என்கின்றனர்.

    ——————————————————————————————————————–

    Carbon (C) is the fourth most abundant element in the universe by mass after hydrogen, helium and oxygen[13] and is the second most abundant element in the human body by mass after oxygen,[14] the third most abundant by number of atoms.[15] There are an almost infinite number of compounds that contain carbon due to carbon’s ability to form long stable chains of C—C bonds.[16][17] All organic compounds, those essential for life, contain at least one atom of carbon;[16][17] combined with hydrogen, oxygen, nitrogen, sulfur, and phosphorus, carbon is the basis of every important biological compound.[17]

    quranist@aol.com

  9. மனிதனும்

    குரங்கும் பன்றியும்

    மற்ற அனைத்தும்

    ஒரே மாதிரியான

    உயிரினமாக

    உருவாக‌ மூலகமான

    கார்பன் CARBON

    மூதாதை/தந்தையிலிருந்து

    கிளைத்துவந்த

    உயிரினங்கள்

    என்பதே சரியானது.

    6:38. And there is not a creature in the Earth, or a bird that fly’s with its wings, but are nations like you. We did not leave anything out of the record; then to their Lord they will be gathered.

    பறப்பன ஊர்வன

    நீந்துவன நகர்வன

    என அனைத்து

    ஒரு/பல செல்

    உயிரினமும் நமது தேசியமே !

    quranist@aol.com

  10. செங்கொடி/யாரு/க்கும் சீ.அ.சுகுமாரன் அறிவுரை:

    செங்கொடியாரே
    பிறமதத்தினரைவிட முசுலிமிடம் மதம் பற்றி மண்டையை உடைப்பது சிரமம்.

    நன்றி !

    quranist@aol.com

  11. உயிர் மற்றும் உயிரற்ற

    அனைத்திற்கும்

    அப்பன்/ஆத்தா

    108 தனிமங்களே.

    மென்டலீப் எனும் வேதியியலாளருக்கு நன்றி !

    quranist@aol.com

  12. Survival of the Fittest:

    “Survival of the fittest” is a phrase which is commonly used in contexts other than intended by its first two proponents: British polymath philosopher Herbert Spencer (who coined the term) and Charles Darwin.

    50:36. 

    And how many a generation before them have We destroyed
    They were stronger in power, and they had dominated the land.
    Did they find any sanctuary.

    சூழ்நிலையின் வினைப்பாட்டை தாக்குப்பிடித்து நீடிக்கும் விலங்கே உயிர்வாழும் தகுதியைப் பெறும். டைனோசர்கள் வாழும் காலத்தில் அவற்றைவிட பலசாலியான வேறு விலங்குகள் எதுவும் பூமியில் இல்லை. ஆனால் ஒரு குறுங்கோள் பூமியை தாக்கியபோது அதை தாக்குப்பிடித்து வாழும் வலிமையை பலசாலியான அந்த விலங்குகள் பெற்றிருந்திருக்கவில்லை என்பதால் அவை அழிந்துபோயின.

    Generation and Evolution:
    ———————————–

    [56:13] Many from the first generations.
    [56:14] And a few from the later generations.
    [56:39] Many from the early generations.
    [56:40] And many from the later generations.
    [56:49] Say: “The people of old and the later generations,”
    [62:3] And to other generations subsequent to them. He is the Noble, the Wise.

    quranist@aol.com

  13. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா?

    மண்,மரம்,மனிதன்,விலங்கு இயற்கையின் படைப்பு பரிணாமத்தின் பரிசு.

    108 elements constitute Organic and Inorganic compounds existing in this universe.

    6:38:

    And there is not a creature in the Earth,

    or a bird

    (microbe/fly/plane/rocket/shuttle/planet/star )

    that fly’s with its wings,

    but are nations like you.

    quranist@aol.com

  14. “மனிதனின் உணவுத்தேவையே ஆடுகளை வாழவைத்திருக்கிறது”

    அதிகக் கொலை புரிவதாலேயே உயிரி
    தானேபெருகி பரிமாணிக்க‌ கடவது

    என்ற 1331 வது பொய்மொழியை/குறளை வாசிக்கவும்.

    quranist@aol.com

  15. சலாம்,

    ——–
    பின் குறிப்பு: “இந்தக் கேள்விக்கு பதில் கூறவில்லை” என நினைப்பவர்களும், “இந்தக் கேள்விக்கு பதில் கூறலாமே” என நினைப்பவர்களும் தங்களிடம் இருக்கும் பரிணாமம் குறித்த கேள்விகளை தெரிவிக்கலாம். அவை அனைத்திற்கும் பதில் கூறிவிட்டே தொடர்வது என எண்ணியுள்ளேன். எனவே பரிணாமம் குறித்த உங்கள் கேள்விகளை தமிழில் பதிவு செய்யவும்.
    ——–

    அப்படியா??????????? அற்புதம்…. மிக்க நல்லது

    http://ethirkkural.blogspot.com/2011/03/vs.html
    http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories.html

    மேலே உள்ள லின்க்குகளுக்கு பதில் சொல்லுமாறு கேட்டு கொள்கின்றேன்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  16. முகமது உட்பட பல தூதர்கள்,யோகிகள் என்று சொல்லபடுபவர்கள் சில கற்பனைகளை தங்களுக்குள்ளேயே உருவாக்கி கொள்கின்றனர். தாங்கள் கடவுளிடம் பேசுவதாகவோ, கடவுள் தங்களிடம் பேசுவதாகவோ, தங்களுக்கு முன்னறிவுப்பு வருவதாகவோ இந்த கற்பனைகள் இருக்கிறது. இவர்களுக்கு மன நல மருத்துவம் செய்தால் இவர்களுக்கு இவ்வாறு தோன்றுவது நின்றுவிடும். இங்கிலாந்தை சேர்ந்த Bach அவர்கள் கண்டறிந்த மலர் மருத்துவத்தில் இதை பற்றி கூறுகிறார்.

  17. நண்பர் ஆஷிக்
    உங்கள் பதிவு பார்த்தேன்.நீங்கள் சொல்வதை சுருக்கமாக‌ சொல்ல வேண்டுமென்றால்
    பரிணாமம் என்பதை சரியாக்வே வரயறுத்து உள்ளீர்கள்

    A
    * *************************************

    1ஒரு செல் உயிரில் இருந்து உயிர்கள் பரிணாம வளர்ர்சி அடைந்த்ன. .

    2.பரிணாமவியலாளர்களின் எண்ணப்படி உலகம் தோன்றி பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு (உலகம் தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆனதாக கணக்கிடப்பட்டுள்ளது) ஒரு வாழும் செல் (Living Cell) உருவாகி இருக்க வேண்டும் (Abiogenesis).

    3.பூமியின் வரலாற்றை 12 மணி நேர கணக்காக (0-12 ) எடுத்துக்கொண்டால், உலகின் முதல் எளிமையான பாக்டீரியாக்கள் 3 மணிக்கும், ஜெல்லி மீன்கள் போன்றவை 10 மணிக்கும், முதல் டைனாசர்கள் 11.45 க்கும், மனிதன் 11.59 மணிக்கும் தோன்றியதாக விளக்கம் கொள்ளலாம். (The Oxford Science Library, 2002 edition, Vol-2, p-5).
    ___________________
    B)
    *********************************************

    1.இங்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடலாம் . நீங்கள் பரிணாம்த்தை சந்தேகப் பட்டு விமர்சித்து கேள்வி எழுப்புகிறீர்கள்.

    2.பரிணாமத்தை நம்பாதவர்கள் அனைவரும் மத புத்தகம் கூறும் படைப்புக் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் அல்ல.இஸ்லாமியர்களிலேயே கட்வுள் வழி நட்த்திய பரிணாமக் கொள்கை உடையவர்களும் இருக்கிறார்கள்.

    Click to access QURANIC%20CONCEPT%20OF%20EVOLUTION.pdf

    நீங்கள் பரிணாமம் தவறு என்பது,எனது அறிவியல் கொள்கையின் படி மட்டும என்றால் பல்வித அறிவியல் கட்டுரைகளை ஆய்ந்து விவாதிப்போம்.

    3.இல்லை குரானின் படியான படைப்புக் கொள்கையையும் அறிவியல் படி எனால் நிரூபிக்க முடியும் என்றால் அதுவும் சரி ஆனால்.
    இப்போது பரிணாமம் பற்றி கால அளவுகளோடு வரையறுத்தது போல் மத புதகங்களில் கூறும் படைப்புக் கொள்கையையும் வரையறுத்து விடுங்கள்..
    _____
    C)
    **************************************
    இரு கொள்கைகளில்( மதமா,பரிணாமமா) எது ஒத்து வருகின்றது என்றே பார்க்க வேண்டும்.
    நீங்கள் சொன்னால் விவாதிக்கலாம்.
    நன்றி.

  18. தாங்கள் கடவுளிடம் பேசுவதாகவோ, கடவுள் தங்களிடம் பேசுவதாகவோ, தங்களுக்கு முன்னறிவுப்பு வருவதாகவோ இந்த கற்பனைகள் இருக்கிறது. இவர்களுக்கு மன நல மருத்துவம் செய்தால் இவர்களுக்கு இவ்வாறு தோன்றுவது நின்றுவிடும்.
    ———————————————————————————————————————

    16:68. 

    And your Lord inspired to the bees: “You shall take homes of the mountains and of the trees and of what they erect.”

    ——————————————————————————————————————–

    கடவுள் தேனியுடனும் தொடர்பு நிலையில் இருப்ப‌வர்.

    தோழர் மது அருந்திய மார்க்ஸிய மதுரசம்

    அவரது குடியை/குலத்தை/குழுமத்தை கெடுக்கும்.

    quranist@aol.com

  19. God and Inspiration
    —————————

    42:51. 

    And it is not for any human being that

    God would speak to him,

    except through inspiration,

    or from behind a barrier(indirect),

    or by sending a message/messenger

    to inspire whom He wills by His leave. He is the Most High, Most Wise.

    16:68. 

    And your Lord inspired to the bees:

    “You shall take homes of the mountains and of the trees and of what they erect.”

    கடவுள் வானிலிருந்து அசரீரியில் பேசினார் என்றால் பொய்.

    Sound
    ———

    Sound is a mechanical wave that is an oscillation of pressure transmitted through a solid, liquid, or gas, composed of frequencies within the range of hearing and of a level sufficiently strong to be heard, or the sensation stimulated in organs of hearing by such vibrations.[1]

    Perception of sound
    —————————-
    Human ear
    —————-
    The perception of sound in any organism is limited to a certain range of frequencies. For humans, hearing is normally limited to frequencies between about 20 Hz and 20,000 Hz (20 kHz)[3], although these limits are not definite. The upper limit generally decreases with age. Other species have a different range of hearing. For example, dogs can perceive vibrations higher than 20 kHz, but are deaf to anything below 40 Hz. As a signal perceived by one of the major senses, sound is used by many species for detecting danger, navigation, predation, and communication. Earth’s atmosphere, water, and virtually any physical phenomenon, such as fire, rain, wind, surf, or earthquake, produces (and is characterized by) its unique sounds. Many species, such as frogs, birds, marine and terrestrial mammals, have also developed special organs to produce sound. In some species, these produce song and speech. Furthermore, humans have developed culture and technology (such as music, telephone and radio) that allows them to generate, record, transmit, and broadcast sound.

    ——————————————————————————————————————-

    quranist@aol.com

  20. அப்படியா??????????? அற்புதம்…. மிக்க நல்லது

    Conversation
    ——————

    Always converse in clear, straightforward and decisive language, which contains no ambiguity: (33:70)

    Use language, which is recognised by society and commonly used.

    (4:5) “Speak to them in words that are commonly recognised and used.”

    Also adopt an elegant manner for speech:

    (2:83) “And speak to men in a charming way.”

    (22:30) “And shun the words that are deceitful and showy”.

    (6:153) “When you say something, say with justice and equity, even if it goes against your relatives.”

    “Do not shout, a shrieking voice is disliked by others”. (31:19)

    “Speak softly, for the harshest of sounds, without doubt, is the braying of any ass.”

    quranist@aol.com

  21. Transformation of Man:

    According to Science Mankind has undergone four transformation as listed below.

    Australopithecus: These are the earliest ancestors who resembles today’s human beings, 1.5 meter in size, smaller than today’s average man. Cranial capacity is about 500 cubic centimeters, capable of thought and using tolls designed by himself, the quality that is not seen in apes. Time wise about 3.5 million years ago. Subsequently replaced by; Pithecanthropines: This is the second wave of hominids, estimated to have lived about 500,000 years ago, survived for about 350,000 years. Their size had grown between 1.58 cm to 1.78 meter. Cranial capacity had grown to 900 Cu. Cm. And intellectual power had grown, invention, creation, and reasoning have developed. Again replaced by; Neanderthals (Paleanthropians): is third wave of hominids appeared about 100,000 years ago and lived for 60,000 years. They were medium sized, perfectly bipedal, low forehead, rudimentary chin, cranial capacity reached 1300 cc. Lived in caves. They used to bury their dead with horns antlers and tools indicating some spirituality, replaced by;

    Homo Sapiens: is today’s man; started about 40,000 years ago. Height increased to 1.80 cms, cranial capacity reached 1350 cc, skull became more spherical, ridge above the orbits disappeared, psychic activity much superior than predecessor. These are the four stages of human evolutions, where one group of people were replaced by subsequent group with progressive increase in the size of brain and increase in the intellectual capacity. The size of the brain of man 40, 000 year ago was as large as it is today, while mankind was primitive and did not even need that sized brain. Think about, why? Robert Ornstein raises this question in his book “Evolution of consciousness”. There is some purpose behind it, it is not created in vain. Why do we have a highly evolved visual system. Why creator gave us sophisticated hearing mechanism. Does nature have a future plan for us.

    quranist@aol.com

  22. சலாம் சங்கர்,

    இன்ஷா அல்லாஹ், உரையாடுவோம் சகோதரர். என்னுடைய லிங்க்குகள் இந்த கட்டுரையை எழுதியவருக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. நாம் உரையாட ஆரம்பித்தால் அது திசை திருப்பியது போலாகும். ஆக, இந்த பதிவை எழுதியவர் பதிவில் கூறியுள்ளது போல் பரிணாமம் குறித்த என்னுடைய பதிவுகளுக்கு பதில் சொல்லட்டும். எங்களுக்குல்லான உரையாடல் முடிந்தவுடன் இன்ஷா அல்லாஹ் உங்களிடம் வருகின்றேன்.

    புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன்…

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  23. நண்பர் குரானிஸ்ட்,

    உங்களின் ஆங்கில வெட்டி ஒட்டல்களுக்கு இங்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என நினைக்கிறேன். இனி நீங்கள் தமிழில் எழுதாத உங்களின் பின்னூட்டங்கள் வெளிவராது, அறியவும்.

  24. எந்த‌ மொழியிலும்

    தகவல் பெற‌ முடியும்

    எனும்போது ஏன் கட்டுப்பாடு?

    “தமிழ் மட்டும்”

    அப்படியானால்

    அனைவருக்கும் பொது நியதி.

    quranist@aol.com

  25. டார்வின்,தனது கொள்கைகேற்ப யூகத்தை அமைத்துக் கொண்டு அந்த யூகத்திர்க்கேற்றவாறு ஆய்வுகள் செய்துள்ளார்.

    நான்கு கோடி ஆண்டுகளும் யூகமே .அதை யாராலும் உண்மை படுத்த முடியாது. குரங்குகள் மனிதனாக மாற நான்கு கோடிகள்ஆண்டுகளே ஆகட்டும் .ஒவ்வொரு நான்கு கோடிகள் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மாறுமா?அல்லது படிப்படியாக பரிணாமம் பெறுமா?அப்படிஎன்றால் இப்போது நாம் குரங்குளையும் மனிதனையும் மட்டுதான் பார்க்கிறோம் .இடையிலுள்ள பரிணாமங்களை எங்கே?

  26. ////மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையிலிருந்து கிளைத்துவந்த இருவேறு உயிரினங்கள் என்பதே சரியானது. //// உடலின் உட்கூருகளோ மற்றும் ரத்தமோ ஏன் மனிதனுட ஒத்து போகவில்லை?

  27. //மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையிலிருந்து கிளைத்துவந்த இருவேறு உயிரினங்கள் என்பதே சரியானது////
    ஒரே மூதாதையிலிருந்து இனபெருக்கத்தின் மூலம் வந்த இருவேறு உயிரினங்களா?உங்கள் கூற்றுப்படி பார்த்தால் ஒரே மூதாதையிலிருந்து வந்த இருவேறு உயிரினங்களில் ஓரினம் மனிதனாக பரிணாமம் பெற்றது என்றால் இன்னொரு உயிர் பரிணாமம் அடையாததற்கு என்ன காரணம்? இல்லை இரண்டு இனங்களில் ஓரினம் மனிதனாகவே இருந்து விட்டது இன்னொரு இனம் குரங்காக பரிணாமம் பெற்றதாக இருக்க கூடாதா?

  28. ////மனிதன் மட்டுமல்ல உல‌கின் அனைத்துப் பொருட்களும் மேற்கண்ட தனிமங்களினால் ஆனவையே. ஆனால் குரான் மனிதனை மட்டும் சிறப்பாக களிமண்ணினால் படைத்ததாக கூறுகிறது. மனிதன் உட்பட உலகின் அனைத்துப் பொருட்களுக்குமே மேற்கண்ட தனிமங்களினால் ஆக்கப்பட்டிருக்க குரான் மனிதனை மட்டும் களிமண்ணால் படைத்ததாக கூறுவதிலிருந்தே அதற்கும் அறிவியலுக்கும் உள்ள பொருத்தம் எளிதில் விளங்கும்////
    குரான மனிதனை பற்றியே மட்டுமே கூறி உள்ளது.மற்ற உயிரினங்களை பற்றி கூறப்படவில்லை.ஆதலால் மனிதன் படைப்பைபோல் மற்ற உயிரினங்களை யும் இறைவன் படைத்திருப்பான் என்றே கருத்தில் கொள்ளவேண்டும்.

  29. //மட்டுமல்லாது மனிதன் பூமியிலுள்ள களிமண்ணிலிருந்து படைக்கப்படவில்லை. சொர்க்கம் அல்லது வேற்று கிரகத்திலுள்ள ஒருவகை களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதனின் உடலிலுள்ள தனிமங்கள் அனைத்தும் பூமியிலுள்ளவையே. பூமியில் இருக்கும் தனிமங்கள் வேற்று கிரகத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றாலும் பூமியில் இல்லாத ஒன்றிரண்டு தனிமங்களாவது மனிதனின் உடலில் இருந்தாக வேண்டுமல்லவா? அப்படி எந்த தனிமமும் இல்லை என்பதிலிருந்தே மனிதன் முழுக்க முழுக்க பூமியின் தயாரிப்பு என்பது உறுதியாகிறது.//

    🙂

  30. ////ஆடுகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வெள்ளாடு, செம்மறியாடு எனும் இரண்டு வகைதான். இந்த இரண்டும் மனிதனின் உணவுத்தேவையை பூர்த்தி செய்கின்றன. இதே ஆட்டினத்தில் வரையாடு என்றொரு வகை உண்டு. தமிழ்நாடு அரசின் விலங்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வரையாடுகள் அரசின் நிதி ஒதுகீட்டிற்கும், பராமரிப்புக்கும் பிறகும் கூட எண்ணிக்கையில் குறைந்துகொண்டே செல்கின்றன. இது ஏன் என சிந்திப்பவர்களுக்கு அந்தக் கேள்வியிலுள்ள பித்தலாட்டம் புரியவரும்////.
    வெள்ளாடுகள் செம்மறியாடுகள் செயற்கை முறையில் இனபெருக்க்கம் செய்யப் படவில்லையே
    வரையாடும் உணவுக்கு பயன்படாது என்பதால் அரசு பராமரித்தும் அழிந்து போகின்றன..செமரியாடும் வெள்ளாடும் மனித உணவுக்கு தேவை என்பதால் இறைவனால் அதன் இனபெருக்கம் அதிகரித்து வருகிறது

  31. தனிமம் ஒருசெல் பலசெல் என‌ படிப்படியாக நடந்தேறியதா ?

    அல்லது

    தனிமம் உயிரினம் அப்படியே வார்த்தெடுக்கப்பட்டதா ?

  32. உயிரி பல்கிப்பெருகும்போது தனிமங்களின் இனப்பெருக்கம் சாத்தியமா?

  33. ந்ண்பர் இப்ராஹிம் நல்ல இருக்கீங்க்ளா?
    ______________
    6:94. அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்: நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன” (என்று கூறுவான்).

    6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
    ___________
    சில சந்தேகங்கள்
    1.குரான் 6.94ல் முதல் முறையாக‌ படைத்ததென்றால் என்ன?

    2.குரான் 6.98 ல் எல்லா மனிதர்களும் இறந்த,வாழும்,பிறக்கப்போகும் அனைத்து மனிதர்களுமே ஒரே ஆத்மாவில் இருந்து உண்டானார்களா?

    3.ஒரே ஆத்மா என்றால் என்ன(யார்)?

  34. நலமே ,புகழனைத்தும் இறைவனுக்கே ,நன்றி
    சகோதரர் பீஜே அவர்களின் மொழியாக்கத்திலும் இப்னி கதிர் இலும் முதன் “முறையாக் படைத்தோம்” என்று இல்லை.பார்த்துக் கொள்ளவும்.சிறந்த தமிழாக்கங்கள் இருக்கையில் தங்களது விமர்சனத்திற்கு அதிலிருந்து பெறுவதே நன்செயல்.மேலு பீஜேயின் தமிழாக்கம் ஆங்கிலத்திலும் வந்துவிட்டது..
    :”அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான்.அதிலிருந்து அதன் துணையையும் அவன்தான் படைத்தான்.அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் அவன் பல்கிபெருக செய்தான்[.’4 :1 ]
    அந்த ஒரே ஆத்மா ஆதம் [அலை]அவர்கள்

  35. கடவுள் யார் ?

    16:79. 

    Did they not look to the birds held in the atmosphere of the sky

    No one holds them up except God.

    In that are signs for a people who believe.

    வானில் பறவை பறக்கின்றது.

    அதை தாங்கிப்பிடிப்பவன் தான் இறைவன்.

    தாங்கிப்பிடித்தல் என்றால் கைகளால் அல்ல.

    ஏரோடைனமிக்ஸ் என்ற விதி செயல்படுகிறது.

    Aerodynamics is a branch of dynamics concerned with studying the motion of air, particularly when it interacts with a moving object.

    பூமியின் ஈர்ப்பு விசை/gravity of earth.

    காற்றின் அழுத்தம்atmospheric pressure.

    திசை வேகம்/velocity .

    பறவையின் எடை/mass.

    இறக்கையின் இயக்கவிசை.

    இந்த இயற்பியல் இறையியல் அமைப்பாகும்.

    quranist@aol.com

  36. shankar avarkalay koduththa thalaipin keeeel paysavum. veeeenaaana pithatrarkal vayndaaaam

    senkodi pls delete replies (frm out of topic) it is irritating to follow valuable replies frm other frnds

  37. விவாத ஒழுக்கங்களை தயவு செய்து பின்பற்றுங்கள் கொடுத்த தலைப்பின் கீழ் பேசவும்
    ஏனென்றால் மற்ற அறிவியல் பூர்வமான பின்னூட்டங்களை படிப்பதற்கு சிரமமாக உள்ளது

  38. SANKAR, on April15, 2011 at 11:30 மாலை said:

    சில சந்தேகங்கள்

    1.குரான் 6.94ல் முதல் முறையாக‌ படைத்ததென்றால் என்ன?
    2.குரான் 6.98 ல் எல்லா மனிதர்களும் இறந்த,வாழும்,பிறக்கப்போகும் அனைத்து மனிதர்களுமே ஒரே ஆத்மாவில் இருந்து உண்டானார்களா?
    3.ஒரே ஆத்மா என்றால் என்ன(யார்)?
    ——————————————————————————————————————–

    Human male and female

    Conservation status

    Least Concern (IUCN 3.1)[2]
    Scientific classification [ e ]
    Kingdom: Animalia
    Phylum: Chordata
    Class: Mammalia
    Order: Primates
    Family: Hominidae
    Genus: Homo
    Species: H. sapiens
    Subspecies: H. s. sapiens
    Trinomial name
    Homo sapiens sapiens
    Linnaeus, 1758

    quranist@aol.com

  39. //நான்கு கோடிக்கும் அதிகமாக ஒரு மனிதனின் வாழ்நாள் இருக்குமானால் ஒருவேளை பரிணாம மாற்றங்களை அவனால் நேரடியாக கண்டிருக்க முடியும். மட்டுமல்லாது பரிணாமம் என்பது யாரேனும் கட்டளையிட்டு நிகழ்வதல்ல, இயற்கைத் தேர்வு முறையில் சூழலுக்கு உட்பட்டு வினைபடுவது. அப்போது நடைபெற்றது இப்போது ஏன் நடைபெறவில்லை என யாரலும் கேள்வி எழுப்ப முடியாது.////
    மனிதனின் கற்பனைகேற்றவாறு யூகமாக இருக்க முடியும்.
    ஒரே மூதாதையிலிருந்து வந்த இரு வேறு உயிரினங்கள் குரங்கும் மனிதனும் .வெளி தோற்றத்தில் ஒத்துபோவதைவிட உட்கூருவான ரத்தத்திலும் இதயத்திலும் மனிதனோடு அதிகமாக பன்றி ஒத்து போகிறதே .இந்த மூன்று உயிரினங்களும் ஒரே மூதாதையிலிருந்து வந்துள்ளனவா ?என்று செங்கொடி மற்றும் சுற்றலில் வரும் சங்கரும் முயற்சிக்கலாமே .அடுத்து ஆசிக்கின் கட்டுரைகளுக்கு தங்களது பதிலை காணவில்லையே

  40. //shankar avarkalay koduththa thalaipin keeeel paysavum. veeeenaaana pithatrarkal vayndaaaam//

    இதுதான் பதிவின் தலைப்பு

    மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா?
    பரிணாமம் பற்றி பலர் இப்பதிவில் கூறுவதை ஒரு கருத்தாக கொள்கிறேன்.
    குரானின் படி(அல்லாவின் அருள்) படைப்புக் கொள்கையை வரையறுக்க முயல் கிறேன். நடப்பதற்கு எது மிகவும் அதிக வாய்ப்பு என்றே விவாதிக்கிறேன்.
    இது எப்படி தலைப்புக்கு வெளியே செல்வதாகும்!!!!!

    நான் பிதற்றுகிறேன் என்றால் குரானின் படி படைப்புக் கொள்கையை வரையறுத்தால் எப்படி இருக்கும்?
    குன் என்றால் ஆகிவிட்டது.
    3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
    2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” – ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
    36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
    ————–
    குரான்(மதவாதிகளின் விளக்கம்) பெருவெடிப்பு கொள்கை ஏற்கிறது பரிணாமத்தை எதிர்க்கிறது. குரானில் குறிப்பிடப்படாத விஷயங்கள்.
    1.எப்போது பிரபஞ்சம்(பெரு வெடிப்பின் படி) படைக்கப்பட்டது?
    2.சூரியன,சந்திரன்,பூமி எப்போது தோன்றியது பற்றி முரண்படும் கருத்துக்கள்
    3.பூமி,சந்திரன்,சூரியன்,நட்சத்திரங்கள் ஆகியவற்றின் அளவுகள் பற்றி முரண்படும் கருத்துக்கள்
    4.எப்போது மனிதன் படைக்கப்பட்டான்?
    ——————-

    இந்த வரிசையில் நமது பூமி உருவானது பற்றி அறிவியல் கருத்தாக்கம் பெரு வெடிப்பு கொள்கை என்று அழைக்கப் படுகிறது.
    இதன் முக்கியமான கருத்துகள்
    பிரபஞ்சம் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
    பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
    முதல் உயிரினம் ஒரு செல் உயிரி சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகள்
    ..ஹொமொ சேபியன்கள் எனப்படும் மனித இனம் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

    http://saarvaakan.blogspot.com/2011_01_01_archive.html
    ________________

    இப்போது மதவாதிகள் பரிணாம்த்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பழ்மையானவை,பதில் அளிக்கப் பட்டவை.
    http://www.pbs.org/wgbh/evolution/library/faq/cat02.html

    Click to access QA_Evolution.pdf

    http://www.talkorigins.org/origins/faqs-qa.html

    குரானின் படைபியல் கோட்பாடி மிகவும் மேலோட்டமானது.முரண்படும் கருத்துகளை கொண்டது.
    _______________

  41. Intelligent design theory/natural selection/random mutation theory of man is limited.

    6:35.

    And if their aversion has become too much for you,

    then perhaps you could penetrate in the Earth, or fly to the heavens, and bring them a sign.

    மனித உடற்கூறு

    விண்ணில் பறக்க (fly in space)

    பூமிக்குள் ஊடுருவ (pass through mass)

    சக்தி பெறாது.

    13:15. 

    And to God submit all who are in the heavens/space and the earth/mass,

    willingly and unwillingly,

    அனைத்தும் இயற்கையின்(law of nature) விதிப்படியே.

    quranist@aol.com

  42. மனிதப் பரிணாம வளர்ச்சியைகுரங்கு வகைகள் மூலமே அறிவியல் அவ்வப்போது மெய்ப்பிக்க முயல்கிறது. கைமுட்டிகளால் நடக்கும் இக்குரங்கினத்தின் டி.என்.ஏ மனித டி.என்.ஏ உடன் 97 சதவீதம் வரை ஒத்துப்போகிறது, மனிதனைப் போலவே கைவிரல் ரேகைகளும் ஒவ்வொரு குரங்குக்குமே மாறுபட்டிருக்கிறது.

  43. கடவுள் உலகத்தைப் படைச்சார்
    இருக்கட்டும். கடவுளை யாருவோய் படைச்சார்
    கண்காணா உன் கடவுள் தான் தோன்றி ஆகிறப்போ, கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?
    என்ற அறிவார்ந்த கேள்வியை பெரியார் தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பார்த்திருக்கிறோமே நினைவிருக்கிறதா?

    உலகை, உயிர்களைப் படைத்தவர் கடவுள்தான் என்று தான் ஆத்திகர்களும், மத நம்பிக்கையாளர்களும் அளந்து கொண்டிருந்தனர். ஒரு நாள் கடவுள் விஷ்க் என்று கையை ஆட்டியவுடன் உலகம் தோன்றியது; உயிர்களும் தோன்றின என்று காலங்காலமாக கதை விட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு மதமோ உயிர்களைப் படைப்பதற்கென்றே ஒரு தனிக் கடவுளை உண்டாக்கியது. அவருக்கு வேலையே சதா உயிர்களைப் படைத்துக் கொண்டிருப்பதுதான். அவரைத்தவிர வேறு யாரும் அப்பணியைச் செய்ய முடியாது என்றது. உயிரை அவனன்றி யாரும் ஆக்க முடியாது என்றது மதம். உலகின் தோற்றம், உயிரின் தோற்றம் மற்றும் உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்தவர்களை, ஆய்வு செய்யலாம் என்று கருத்துச் சொன்னவர்களைக் கூட விட்டுவைக்காமல் கூண்டிலேற்றினார்கள்; கழுவி லேற்றினார்கள். கொன்று குவித்தார்கள். ஆக மொத்தம் எந்த மதமும் உயிரின் உருவாக்கம் குறித்து யாரையும் எதுவும் பேசவிடவில்லை. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் அறிவியல் வளர்ச்சிக்கு முன்னர் உடைந்து போனது.

    உலகை கடவுள் படைக்கவில்லை. சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய எண்ணற்ற நெருப்புப் பந்துகளில் ஒன்றுதான் குளிர்ந்து பூமியானது என்று அறிவியல் சொன்னது. அப்படியானால், அந்த சூரியன் எப்படித் தோன்றியது என்றார்கள் மதவாதிகள்.

    பிக் பேங் எனப்படும் பெரு வெடிப்பு நிகழ்ந்தது; சின்னஞ்சிறிய அணுவிலிருந்து தான் பூமியும், சூரியனும், எண்ணற்ற நட்சத்திரங்களும், கோள்களும் கொண்ட இந்த மாபெரும் பிரபஞ்சம் எனப் படும் பேரண்டம் உருவானது என்றனர் அறிவியலாளர்கள்.

    அப்படியானால் அந்த பெரு வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்றனர் மதவாதிகள். பெருவெடிப்பு எப்படி நடந்திருக்கக் கூடும்; அப்போது தோன்றியிருக்கக்கூடிய ஆற்றல் எப்படியிருந்திருக்கும் என்பதை ஒரு செயல் விளக்கம் போல செயற் கையாகவே பெருவெடிப்பை நிகழ்த்திக் காட்டினார்கள் அறிவியலாளர்கள்.

    அது மட்டுமா?

    டார்வின் தாத்தா பற்றி நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம் அல்லவா? ஒரே நாளில் உலகம் தோன்றிவிடவில்லை. உயிரினங்கள் படிப்படியாகத்தான் பரிணாம வளர்ச்சி பெற்றன என்றார்.

    குரங்கும் மனிதனும், ஏப் என்ற வேறொரு இனத்திலிருந்து உருவானவை என்றார் அவர்.

    ஆகா! இவ்வளவு நாள் கடவுள் தன் வடிவில் மனிதனைப் படைத் தார் என்றல்லவா நாம் சொல்லி வருகிறோம். குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்றால் கடவுள் என்ன குரங்கா? விடக் கூடாது இவனை என்று துள்ளித் துடித்தனர். அப்படியானால் குரங்குக்கு முன்னால் என்ன? அதற்கு முன்னால் என்ன? அதற்கும் முன்னால் என்ன? என்று கேள்விகளை அடுக்கி கட்டிப் போட்டுவிடலாம் என்று திட்ட மிட்டனர் அவர்கள். கேள்விகளுக்கா அறிவியல் சளைக்கும். கேட்கக் கேட்க பதில் கிடைத்தது. கடைசியில் விடை ஒரு செல் உயிரிலிருந்து உயிர் தோன்றியதாக வந்தது. இனி என்ன செய்யலாம்?

    “அந்த ஒரு செல் உயிரி எங்கிருந்து தோன்றியது..? எங்களுக்கு நேரமில்லை விடை சொல் விரைவாய்” என்றது மதக் கூட்டம். “தாராள மாய் சொல்லலாமே… உயிரற்ற பொருள்களின் மீது ஏற்பட்ட விளைவு, அமினோ அமிலத்தின் செயல், வேதியியல் மாற்றம் இவைதான் முதல் செல்லின், உயிரின் தோற்றத்திற்குக் காரணம்” என்று அதற்கும் விடை சொன்னது அறிவியல்.

    அப்போது தான் நீண்ட காலமாக தேங்கி யிருந்த அந்தக் கேள்வியை மீண்டும் எடுத்து வீசினர் மூடநம்பிக்கையின் மொத்தக் குத்தகை தாரர்களான மதவாதிகள்.

    “எப்படியோ வந்ததென்று விடை சொன்னாய்? போகட்டும். அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. உன்னால் ஒரு புதிய உயிரை உருவாக்கிக் காட்ட முடியுமா?” என்றொரு கேள்வியை எடுத்து வீசி இறுமாப் புடன் நின்றது மடமைக் கூட்டம்.

    “முடியாது என்பது முட்டாள்கள் பேச்சு! நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்! பொறுத்திருங்கள் நாங்கள் உருவாக்கிய உயிரோடு வருகிறோம்.” என்று சொன்ன அறிவியல் ஓருயிரிலிந்து அதே மாதிரியில் இன் னொன்றை நகலெடுத்துக் காட்டியது.

    ஆம். அப்படித்தான் முதல் குளோனிங் செய்யப்பட்டது. டாலி என்ற ஆடு, பிறகு எலி, குரங்கு, தேவி என்ற மான் இப்படி எல்லா உயிர்களையும் உருவாக்கிக் காட்டியது. மனிதனை உருவாக்க இன்னும் ஒரு அடி தான்… எட்டிப்பிடித்துவிடும் என்ற நிலையில், “போதும் போதும். ஆண்டவன் உருவாக்கிய ஒரு உயிரிலிருந்து இன்னொன்றை உருவாக்கி விட்டீர்கள். நாங்கள் கேட்டது புதிய உயிர். முற்றிலும் உயிரற்ற பொருள்களிலிருந்து ஒரு செயற்கை உயிர். எப்படி வசதி? தோல்வியை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?” என்று தனது தோல்வியை மறைத்துக் கொள்ள பதில் கேள்வி தொடுத்தது.

    தொடர்ந்தன ஆய்வுகள்! புதிய உயிர்.. செயற்கை உயிர்… உயிரற்றவற்றிலிருந்து உயிர்! ஆய்வகங்கள்… நூல்கள்… மாதிரிகள்.. முயற்சிகள்…. முடிவில்… வெற்றி… வெற்றி….

    அய்யாயிரம் ஆண்டின் கேள்விகளுக்குக் கிடைத்த வெற்றி..! அறிவை விரிவு செய்ததால் கிடைத்த வெற்றி! ஆம் செயற்கை உயிர் உருவானது. முற்றிலும் செயற்கை உயிர்.. உயிர்களின் கட்டமைப்பான டி.என்.ஏ.விற்குள் மனிதன் உருவாக்கிய புதிய உயிர். குழந்தை வடிவில் பொம்மையை உருவாக்கி அதனை மின்சாரம் மூலம் செயல்பட வைப்பதுபோல், வெள்ளாட்டின் மடியில் ஒருவித நோயினை உருவாக்கும் பாக்டீரியாவின் வடிவத்தில் வேதியியல் பொருள்களைக் கொண்டு உயிர் தரப்பட்டுள்ளது. பாக்டீரியா இப்போது செழித்து வலர்ந்து இனப்பெருக்கம் செய்து குட்டிக் குட்டி புதிய பாக்டீரியாக்கள் உருவாகிவிட்டன. அறிவியல் சாதித்துவிட்டது.

    பாக்டீரியா என்னும் உயிரை உருவாக்க முடியும் போது, மாடு, ஆடு, பூனை, யானை, மனிதன் ஏன் விரும்பினால் டைனோசரைக் கூட இனி உயிரோடு கொண்டு வரமுடியும்.. வாழும் மனிதனுக்கு நோய்களிலிருந்து மாற்று அளிக்க முடியும்… ஆம் அறிவியல் சாதித்துவிட்டது. கடவுள் மட்டும்தான் படைக்க முடியும் என்று சொன்னவர்கள் இப்போது நடையைக் கட்டிக் கொண்டுவிட்டார்கள். அமெரிக்க அறிவியலார் ஜெ. கிரெய்க் வெண்டர் மற்றும் அவரது குழுவினர் தங்களின் தொடர் முயற்சிகளின் விளைவால் உருவாக்கிய செயற்கை உயிர் தான், இனி அடுத்த கட்ட அறிவியலின் அடிக்கல்.. அறிவைத் தடுத்த கடவுள் கொள்கைக்கு சமாதிக் கல். கிரிக், ஹாமில்டன் ஸ்மித், வாட்சன், சஞ்சய் வாஸி இப்படி எண்ணற்ற உயிர் வேதியியல் வல்லுநர்க ளோடு ராதா கிருஷ்ணகுமார் என்ற நம் தமிழ் நாட்டு அறிவியலாளரும் இணைந்து தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. வேதிப்பொருள்களின் வினைதான் உயிர் களின் உருவாக்கம் என்று இத்தனை நாள் கருத்தளவில் நாம் சொல்லி வந்தது இப்போது செய்து காட்டப்பட்டுள்ளது. பகுத்தறிவின் பெருவெற்றி இது என்று கூடிக் கொண்டாடு வோம். மடமையைப் பந்தாடுவோம்.

  44. naan naathigan, on April17, 2011 at 3:38 மாலை said:
    //கடவுள் உலகத்தைப் படைச்சார்
    இருக்கட்டும். கடவுளை யாருவோய் படைச்சார்//

    கடவுள் இல்லை.

    3:2. God, there is no god …

    கடவுள் எதையும் தயாரிக்கவுமில்லை.

    112:3. He does not beget, nor was He begotten,

    quranist@aol.com

  45. கடவுள் என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்தை தெளிவாக சொல்லிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது . ஆனால் அதை சொல்ல மாட்டார்கள். சொன்னால்தான் அடித்தளமே ஆட்டம் கண்டு விடுமே.மூட நம்பிக்கையின் அடிப்படைதான் கடவுள். மனிதனின் இயலாமையின் வடிவம்தான் கடவுள். செய்வன திருந்தச் செய்தால், கடவுளின் தேவை இருக்காது

  46. ஒருவனை ஒருவன் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாத்திகமாகும். கடவுளைச் சரியாக அறியாத்தே யாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாத்திகர்களாவர். கடவுள் இருந்தால் ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்கவாவது முடியுமா? ஆகவே நாத்திகம், நாத்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளேயாகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்தக் கவலையே இருக்க நியாயமில்லை.

  47. நான் நாத்திகன் //கண்காணா உன் கடவுள் தான் தோன்றி ஆகிறப்போ, கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?///
    எங்கள் சொல்லுக்கு நம்பிக்கையே ஆதாரம் .கண்கண்ட பேரண்டம் தான் தோன்றியது என்பது நம்பிக்கையா?அல்லது அறிவியல் ஆதாரம் உண்டா?

  48. 6:2. He* is the One who created you from carbon**,

    *கடவுள் என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்தை தெளிவாக சொல்லிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது .

    **வேதிப்பொருள்களின் வினைதான் உயிர் களின் உருவாக்கம் என்று இத்தனை நாள் கருத்தளவில் நாம் சொல்லி வந்தது இப்போது செய்து காட்டப்பட்டுள்ளது.

    quranist@aol.com

  49. ////ஒரு செயல் விளக்கம் போல செயற் கையாகவே பெருவெடிப்பை நிகழ்த்திக் காட்டினார்கள் அறிவியலாளர்கள்.////
    சின்னஞ்சிறு அணு எப்படி உருவானது என்பதற்கு செயல் விளக்கம் காட்டினீர்களா?

  50. 112:3. 

    He does not beget, nor was He begotten,”

    கடவுள் தான்தோன்றியில்லை. எதையும் தயாரிக்கவுமில்லை.மேலும்

    எதனாலும் தயாரிக்கப்படவுமில்லை.

    quranist@aol.com

  51. நான் நாத்திகன் ///குரங்கும் மனிதனும், ஏப் என்ற வேறொரு இனத்திலிருந்து உருவானவை என்றார் அவர்.///

    ‘ஏப் ‘காண மிச்சங்கள் எச்சங்கள் ஆதாரம் காட்டினாரா?அல்லது உங்க டார்வின் தாத்தா எடுத்த சினிமாவா?அப்புறம் ஏப் எந்த இனத்திலிருந்து உருவானது என்று டார்வின் தாத்தா சொனாரா?ஏப் வின் மூதாதையர் இனத்திலிருந்து வேறு என்ன இனமெல்லாம் தோன்றியது என்று தாத்தா கூறியுள்ளாரா?நாயும் நரியுமாக இருக்குமா/அல்லது ஆடும் மாடுமாக இருக்குமா? கடலினங்கள் கடல் ஏப்பிலிருந்து உருவானவைகளா?

  52. /// டாலி என்ற ஆடு, பிறகு எலி, குரங்கு, தேவி என்ற மான் இப்படி எல்லா உயிர்களையும் உருவாக்கிக் காட்டியது. ////
    இந்த குளோனிங் ஆடு எலி,குரங்கு இவைகள் தங்கள் இனபெருக்கத்தை உடலுறவு மூலம் செய்யுமா?இல்லை ஒவ்வொரு முறையும் குளோனிங் மூலம் இனபெருக்கம் செய்ய வேண்டுமா?

  53. களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டவன் மனிதன் எனும் குரனின் கூற்றை அறிவியல் பேசுவது அறிவியலுக்கே முரணானதில்லையா?முகமது நபி அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட குரான் வாக்கியங்கள் எல்லாமே கிட்டதட்ட முகமதுவின் சொந்த சரக்குபோலத்தான். அவர் நினைத்தால் அவருக்கு தேவையான சரக்கை மேலே இருந்து அல்லாவின் பெயரைச் சொல்லிக் கொண்டி இறக்கி விடுவார். மேலும் முகமதுவின் வாழ்க்கை போரும் (காம) களியாட்டும் நிறைந்ததாக இருந்த படியால் அவரால் எந்த விசயத்தையும் சரியாக சிந்திக்க முடியவில்லை. இதைச் சமாளிக்க அவர் எதையாவது மேலே இருந்து இறக்கவேண்டியிருந்தது. இல்லாத அல்லா அதற்கு உடந்தையாக இருந்தார்.

    குரான் குழப்பங்களை ஆராயும் முயற்சியில் முதலாவதாக குரான் மனிதனின் படைப்பு அல்லது சிருஸ்டிப்பு குறித்து என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா? இதை தொடர்ந்து படித்து நீங்கள் முடியைபிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

    1.அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே¢ அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் ‘குன்” (ஆகுக) எனக் கூறினான்¢ அவர் (மனிதர்) ஆகிவிட்டார் (அல்குர்ஆன் 3 : 59).

    2.ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அல் குர்ஆன் 15 : 26,7:12, 17:61, 35:11, 38:71, 55:14)

    3.அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான் (அல் குர் ஆன் 16 : 4)
    அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்(அல் குர் ஆன் 16 : 4,36 : 77,76 : 2,80 :18)

    குரான் குழப்பங்களை சுட்டிக்காட்டுகிற இக்கட்டுரையில் இந்த ஒரு காரியம் இப்போதைக்கு போதும். ஆரம்ப வரலாரே சறுக்கல் ஆக இருக்கிற படியால் குரான் இன்னமும் சறுக்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சரியான விளக்கத்தை புரிந்து கொள்ள முகமது எதையும் இறக்கவில்லை

  54. மனிதனையும் உயிர்களையும் தாவரங்களையும் படைத்ததாகக் கடவுள் உரிமை கொண்டாடுகிறது. படைக்கப்பட்டபோது, புவியில் செடி கொடிகளே முளைக்கவில்லை; காரணம் கடவுள் மழையைப் பொழிவிக்கவில்லை, நிலத்தில் பாடுபட மனிதன் இல்லை, எனக் கூறிவிட்டு, ஓடை நீர் பாய்ந்து நிலப் பகுதி முழுதையும் நனைத்து வைத்தது எனக் கூறப்பட்டுள்ளது முதல் நூலில் (பைபிளில்). இந்த ஓடையை, அல்லது ஓடைகளை யார் படைத்தது? விடை இல்லை.

    பின்னர் மனிதனை மண்ணிலிருந்து கடவுள் படைத்ததாம். படைத்த உருவத்தின் மூக்குத் துளைகளில் உயிரை ஊதியவுடன், மனிதன் உயிருள்ளதாக மாறினான் என்று படைப்பைக் கூறுகிறது ஆதி ஆகமம். அதற்குப் பிறகு, எல்லா விலங்குகளையும் நிலத்திலும் எல்லாப் பறவைகளையும் வானத்திலும் படைத்தாராம். அவற்றை மனிதனிடம் கொண்டு வந்து நிறுத்திப் பெயர் சொல்லுமாறு கடவுள் கேட்டதாம். மனிதன் என்ன என்ன சொன்னானோ அவையெல்லாம் அவற்றின் பெயர்கள் ஆகின. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதனே பெயர் வைத்தான்.

    முதல் மனிதனான ஆதாமுக்கு உதவி செய்ய யாரும் இல்லையாதலால் அவனை ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திய கடவுள் அவனது விலா எலும்பு ஒன்றினை முறித்து எடுத்து அந்தக் காயத்தைச் சதையால் மூடியதாம்; அந்த விலா எலும்பிலிருந்து பெண்ணைப் படைத்து மனிதனிடம் அழைத்து வந்ததாம். அப்போது மனிதன் கூறினானாம். இது என் எலும்பின் எலும்பு; சதையின் சதை,மனிதனிடம் (Man) இருந்து படைக்கப்பட்டதால் மனுஷி (Woman) என அழைக்கலாம் என்றானாம். அவர்கள் அப்போது அம்மணமாகத்தான் இருந்தனர். இதுதான் முதல் நூலில் கூறப்பட்டுள்ள மனிதப் படைப்பு.

    வழி நலான குர்ஆன் கூறுவது இப்படிப் போகிறது: (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம் (சூரா 23-12) என்று தொடங்கி அந்தப் படைப்புப் பணியின் ஒவ்வொரு கட்டமாக விவரிக்கிறது. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.(சூரா 23-13). பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம். பின்னர் அத்திசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாக)ச் செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லா பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன் என்று சூரா 23-14 கூறுகிறது.

    இது அல்லாவே கூறியது என்கிறார்கள். அல்லா தனக்குத் தானே பாக்கியம் உடையவன் என்றும் அழகானவன் என்றும் கூறித் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்கிறது. இதைத்தான் சிக்மண்ட் ஃபிராய்டு நார்சிசம் என்று வகைப்படுத்தியுள்ளார்.

    அடுத்தது ஒன்று, படைப்பாளர்களில் எல்லாம் மிக அழகான… என்றால் எத்தனை படைப்பாளர்கள்? பிரம்மா, கர்த்தர் என்று பிற மதப் படைப்பாளர்களைக் கணக்கில் எடுத்துத் தனக்குத்தானே வழங்கப்பட்ட சான்றிதழா?

    இது இப்படியிருக்க சூரா 77-20 முதல் 23 வரை என்ன கூறுகிறது? அற்ப நீர்த் துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா? பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கி வைத்தோம். ஒரு குறிப்பிட்ட (கால) அளவு வரை எனக் கூறுகிறது.

    சூரா 21-30 இல்… உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம்… என்றும், சூரா 25-54 இல்… அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும் சம்பந்தங்களையும் ஏற்டுத்துகிறான் என்றும், சூரா 24-45 இல்… எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லா நீரிலிருந்து படைத்துள்ளான் எனக் கூறப்பட்டுள்ளது.

    படைத்தது என்பதையே ஏற்றுக் கொள்ள அறிவும் அறிவியலும் இடம் கொடுக்காதபோது, எதைக் கொண்டு படைத்தது என்றால் என்ன?

  55. பிரபஞ்சம் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

    பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

    முதல் உயிரினம் ஒரு செல் உயிரி சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகள்
    .
    .
    .
    .
    .
    .
    ஹொமொ சேபியன்கள் எனப்படும் மனித இனம் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

    இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று கூறுகிறீர்கள் அல்லவா?
    இபோதுதான் பதிவுக்கே வருகிறேன். இது சும்மா முன்னோட்டம் தான்.

    அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் எங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது என்பது என்பது மதவாதிகளின் வழக்கமான கூற்றுதான் என்றாலும்.இந்த பூமி மற்றும் மனிதனின் தோற்றம் பற்றிய அறிவியலின் கருத்தாக்கம் அவர்களை மிகவும் நடுங்க வைத்டு விட்டது.

    அறிவியலை முழுமையாக எதிர்தால் நிச்சயம் தோல்வி என்பதும் மத்ம் காணாமல் போய்விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.ஆகவே அவர்களும் பரிணாமம் நீங்கலாக பெரு வெடிப்பு கொள்கையை ஆத்ரித்து பூமி மனித தோற்றங்களுக்கு மத புத்தகங்களில் இருந்து கருத்துகளை சொல்லி தப்பித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
    .
    அதனால் பரிணாமத்தை எதிர்த்து படைப்பியல் கொள்கை என்ற கருத்தாக்கத்தை உருவக்கினர்.

    கடவுளுக்கு கூட பெரு வெடிப்பு போன்ற செயல் உலகை படைக்க அவசியமாகிறது என்றால் கடவுளும் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப் பட்டவராகிறார் என்பதும் ஒரு நகைசுவையான விஷயமே.

    இந்த படைப்பியல் கொள்கை என்றால் என்ன அதன் பல பிரிவுகளை பற்றி இப்பதிவ்ல் பர்ப்போம்.

    படைப்பியல் கொள்கை என்பதை கடவுள்(கள்) பிரபஞ்சம்,பூமி,மற்றும் உயிரினங்கள்(மனிதன் உட்பட) உருவாக்கினர் என்பதாகும்.பிறகு என்ன சிக்கல் கடவுள் படைத்தார் என்று சொல்லிவிட்டால் கதை முடிந்தது அல்லவா என்றால் நீங்கள் கொஞ்சம் அவர்கள் பிரச்சிஅனைகளை ப்ருந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

    பிரபஞ்சமும் படைக்கப்பட்டது என்றால் கடவுள்(கள்) எங்கே இருந்தார் என்ற கேள்வியும் வருகிறது.ஆகவே இந்த பிரபஞ்சம் அல்லாத பல பிரபஞ்சங்கள் உண்டு.அதனால் படைபியல் கொள்கை நமது பிரபஞ்சம் பற்றி மட்டுமே கூறுகிறது. மத புத்தகங்களில் வார்த்தை விளையாட்டு செய்வது எளிது ஆகையால் அறிவியலை முற்றும் மாறுபடாமல் மத புத்தகத்தில் கூறும் விதமாக கொள்கைகளை அமைக்கிறார்கள்.

  56. கடவுள் என்ற கற்பனையை வைத்து கண்ணாமூச்சி ஆடாவிட்டால் மதங்கள் என்றோ ஒழிந்திருக்கும்.வேதங்களை கடவுள் தந்ததாக கதை கட்டவில்லையென்றால் அவைகள் குப்பைத்தொட்டிக்குள் என்றோ கொட்டப்பட்டிருக்கும்.கடவுளும் வேதமும் புனிதமாக்க‌ப்பட்டதாலேயே இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிமன்றன. புனிதம் இல்லையேல் ஒரு புண்ணாக்கும் இல்லை.

  57. பிரபஞ்சமும் படைக்கப்பட்டது என்றால் கடவுள்(கள்) எங்கே இருந்தார் என்ற கேள்வியும் வருகிறது.ஆகவே இந்த பிரபஞ்சம் அல்லாத பல பிரபஞ்சங்கள் உண்டு.அதனால் படைபியல் கொள்கை நமது பிரபஞ்சம் பற்றி மட்டுமே கூறுகிறது. மத புத்தகங்களில் வார்த்தை விளையாட்டு செய்வது எளிது ஆகையால் அறிவியலை முற்றும் மாறுபடாமல் மத புத்தகத்தில் கூறும் விதமாக கொள்கைகளை அமைக்கிறார்கள்அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் எங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது என்பது என்பது மதவாதிகளின் வழக்கமான கூற்றுதான் என்றாலும்.இந்த பூமி மற்றும் மனிதனின் தோற்றம் பற்றிய அறிவியலின் கருத்தாக்கம் அவர்களை மிகவும் நடுங்க வைத்டு விட்டது.

    அறிவியலை முழுமையாக எதிர்தால் நிச்சயம் தோல்வி என்பதும் மத்ம் காணாமல் போய்விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.ஆகவே அவர்களும் பரிணாமம் நீங்கலாக பெரு வெடிப்பு கொள்கையை ஆத்ரித்து பூமி மனித தோற்றங்களுக்கு மத புத்தகங்களில் இருந்து கருத்துகளை சொல்லி தப்பித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
    .
    அதனால் பரிணாமத்தை எதிர்த்து படைப்பியல் கொள்கை என்ற கருத்தாக்கத்தை உருவக்கினர்.

    கடவுளுக்கு கூட பெரு வெடிப்பு போன்ற செயல் உலகை படைக்க அவசியமாகிறது என்றால் கடவுளும் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப் பட்டவராகிறார் என்பதும் ஒரு நகைசுவையான விஷயமே.
    .

  58. கடவுளுக்கு கூட பெரு வெடிப்பு போன்ற செயல் உலகை படைக்க அவசியமாகிறது என்றால் கடவுளும் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப் பட்டவராகிறார் என்பதும் ஒரு நகைசுவையான விஷயமே.
    ——————————————————————————————————————–
    பெரு வெடிப்பு போன்ற செயல் உலகை படைக்க அவசியமாகிறது என்றால் இயற்கையின் விதிகளுக்குட்பட்டு பிரபஞ்சத்தை உருமாற்றுவது மனித அறிவிற்கு ஏற்புடையதாகவே இருக்கவே.
    ——————————————————————————————————————–

    No God.

    கடவுள் பிரபஞ்சத்திற்கு உள்ளும்/வெளியிலும் இல்லை.

    கடவுள் சுயம்பு அல்ல.

    கடவுள் சூனியத்திலிருந்து எதையும் படைக்கவில்லை.

    But His பிரபஞ்சம் பரிணாமத்திற்கு(Be=Natural selection/random mutation) Evolutionary theory உட்பட்டது.

    quranist@aol.com

  59. பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
    41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
    41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
    41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
    வானம் என்பதை பூமி நீங்கலான பிரபஞ்சம் என்று கொள்கிறார்கள்.
    பூமி 2 நாட்கள்
    மலைகள்+இத்தியாதி=4 நாட்கள்
    வான‌ம 7 ஆக பிரித்தல் 2 நாட்கள்

    மொத்தம் 8 நாட்கள்

    முதலில் 6 நாட்கள் என்று சொன்னீர்களே என்றெல்லாம் யோசித்தால் அறிவியல் தெரியாது. இந்த ஒழுங்கு படுத்துதலும் இந்த நான்கு நாட்களுக்குள் அடக்கம் என்று (நாமாகவே)எண்ணி பார்த்தால் குழப்பம் நீங்கும்(?).

    http://naannaathigan.blogspot.com/

  60. படைப்பியல் கொள்கையை வரையறுத்து பரிணாம கொள்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் பரிணாமமே வாய்ப்பு அதிகமாக இருப்பதால்,பரிணாம்த்தை விமர்சிக்கும் மத வாதிகள் மத படைப்பியல் கொள்கையை விவாதிக்க மாட்டாட்கள்.

    ஒரு வகை ஆப்பிரிக்க குரங்கினம்[ஹோமோ சேபியன் இடல்டு] பரிணாம வளர்ச்சி அடந்து மனித இனமாக [ஹோமோ சேபியன்] 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மாறியது என்பது பரிணாம கொள்கை.

    இறைவன் (களி)மண்ணில் இருந்து மனித்னையும்(ஆதம்),மனிதனின் விலா எலும்பில் இருந்து மனுஷியையும்(ஏவாள்) படைத்தார் என்பது ஆபிரஹாமிய‌ மத படைப்பியல் கொள்கை.

    இறைவைன் படைத்த அனைத்து உயிரினங்களும் சிறு சிறு மாற்றங்களுடன் அப்படியே இருக்கின்றன.ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக் பரிணமிக்காது என்பதை மத வாதிகள் நிரூபிதால் மட்டுமே துல்லியமற்ற மத படைப்பியல் கொள்கையை காக்க‌ முடியும்.

  61. குரான் குழப்பங்களை ஆராயும் முயற்சியில் முதலாவதாக குரான் மனிதனின் படைப்பு அல்லது சிருஸ்டிப்பு குறித்து என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா? இதை தொடர்ந்து படித்து நீங்கள் முடியைபிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

    1.அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே¢ அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் ‘குன்” (ஆகுக) எனக் கூறினான்¢ அவர் (மனிதர்) ஆகிவிட்டார் (அல்குர்ஆன் 3 : 59).

    2.ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அல் குர்ஆன் 15 : 26,7:12, 17:61, 35:11, 38:71, 55:14)

    3.அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான் (அல் குர் ஆன் 16 : 4)
    அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்(அல் குர் ஆன் 16 : 4,36 : 77,76 : 2,80 :18)

    குரான் குழப்பங்களை சுட்டிக்காட்டுகிற இக்கட்டுரையில் இந்த ஒரு காரியம் இப்போதைக்கு போதும். ஆரம்ப வரலாரே சறுக்கல் ஆக இருக்கிற படியால் குரான் இன்னமும் சறுக்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சரியான விளக்கத்தை புரிந்து கொள்ள முகமது எதையும் இறக்கவில்லை. ” naan naathigan, on April19, 2011 at 4:17 மாலை said:)

    அய்யா (பகுத்தறியா) நாத்திகரே!!! நான்கு குர் ஆன் வசனங்களையும் பக்கத்தில் சில எண்களையும் எழுதி “குரான் குழப்பங்களை ஆராயும் முயற்சி, குரான் இன்னமும் சறுக்கிக் கொண்டே இருக்கிறது. இதை தொடர்ந்து படித்து நீங்கள் முடியைபிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.” என்பது போன்ற நடைமொழியால் வார்த்தை ஜாலம் காட்டத் தெரிந்த உங்களுக்கு அந்த குர் ஆன் வசனங்களை படித்து உணரத் தெரியவில்லையே, ஓ ஹோ… ஒரு வேளை “கடவுள் மறுப்பு” என்ற கருங்கல் கண்ணாடி அணிந்து கொண்டதாலோ என்னவோ.

    (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும், அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! அவ்வாறே மலக்குகள் – அவர்கள் எல்லோரும் – சிரம் பணிந்தார்கள். இப்லீஸைத்தவிர – அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான். “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான். அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான். (15: 28 – 33)
    மேற்கண்ட வசனங்கள், மண்ணால் படைக்கப்பட்ட ஒரே மாந்தர் இப்பூவுலகின் முதல் மனிதர் ஆதம் நபியைப் பற்றி மிக தெளிவாக கூறுகிறது, இதற்கு வலுசேர்க்கும் மேலும் சில வசனங்களை கான்போம்…
    ” சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். (55:14)

    நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். (23:12)

    மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; (22:5)

    அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். (32:7)

    பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான். (32:8)

    அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து – பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான். (35:11)

    கீழே குறிப்பிடும் வசனங்கள் அனைத்தும் ஆதமுக்கு பின்னுள்ள மனித குலத்தைப் பற்றியதாகும்,

    திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா? (76:1)

    (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (76:2)

    பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம் (23:13)

    நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்! (80:17)

    எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?) (80:18)

    குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். (86.6)

    (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான். (80:19)

    பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான். (32:8)

    அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா? (77:20)

    பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம். (77:21) ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.

    கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (75:37)

    இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (53:45)

    (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. (53:46)

    மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். (36:77)

    அய்யா நாத்திகரே! குர் ஆனில் குழப்பம் ஏதுமில்லை, முடியை பிய்த்துக் கொள்ளவும் வேண்டியதில்லை, உங்களது வாதத்தில் நீங்கள் குழம்பிப்போயுள்ளது தெரிகிறது, இனியாவது நுனிப்புல் மேயாதீர்கள்.

  62. இஸ்லாம் ஒரு குழப்ப மார்க்கம்
    பைபிளில் இருந்து திருடி, அதை உல்டா செய்து, கடவுள் சொன்னதுன்னு கப்ஸா விட்டுக்கொண்டிருக்கும் இஸ்லாமின் மற்றுமொறு முரண்பாட்டு…
    மனிதனை கடவுள் படைத்தார். மண்ணில் இருந்து படைத்தார்னு பைபிள் சொல்லுது… அதை காப்பி அடிச்ச இஸ்லாமும் அதையே சொல்கிறது….

    குரானில்…

    15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.

    உடனே விவிலியமும், குரானும் ஒரே விஷயத்தைத்தான் சொல்லுதுன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க…

    இஸ்லாமின் திருட்டுத்தனம் அடுத்த ஸூராவுலயே தெரிஞ்சுடுது… அடுத்த ஸூரா வரைக்கும் கூட தன்னுடைய தப்பை மறைக்க முடியல இஸ்லாமால…

    அடுத்த ஸூரா இதோ…

    16:4. அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.

    மனிதனை படைத்த அடிப்படை விஷயத்துலயே குழப்பு குழப்புன்னு குழப்புறீங்களே, இதுல எந்த ஸூரா உண்மைன்னு சொல்லுவீங்களா இஸ்லாமியா்களே… குரான் குழப்பலைன்னு, உங்களால மறுக்க முடியுமா என்ன?

  63. உலகத்தை படைத்தது ஆறு நாளா இல்லை எட்டுநாளா?

    குரானில் உள்ள வார்த்தைகளை அல்லா இறக்கினார்னு கப்ஸா விடுபவா்களே… அதனால குரான்ல எந்த முரண்பாடும் இருக்காதுன்னு சொல்லிக்குறவங்களே… இதோ இன்னொரு முரண்பாடு உங்களுக்காக….

    குரான்னின் 7:54 ஸூரா சொல்லுறதை படிச்சு பாருங்க…

    7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் – அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு – ஆட்சிக்குக் – கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

    இந்த ஸூராவுல உலகத்தை ஆறு நாளில் படைத்தான் அல்லான்னு சொல்லுறீங்க. ஒப்புக்கிறீங்களா? அல்லா ஆறு நாள்ள உலகத்தை படச்சிட்டானா? அப்புறம் மாத்தி பேசக்கூடாது சரியா….

    இப்போ வாங்க அடுத்த ஸூராவுக்கு

    41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.

    இப்போ என்ன சொல்றீங்க… ஓ உலகத்தை படைக்கத்தான் ஆறு நாள் ஆச்சு. பூமியை இரண்டே நாளில் படைத்துவிட்டார்னு சொல்லப்போறீங்களா… வாங்க தொடா்ந்து படிப்போம்…

    41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.

    41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

    41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.

    41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

    இப்போவாது புரிஞ்சுதா?

    ஏழாவது ஸூரா படி உலகத்தைப் படைக்க அல்லாவுக்கு ஆறு நாள் ஆச்சு… (பைபிளில் இருந்து சுட்டது தான் இந்த கதையும்)
    நாற்பத்தி ஒன்றாவது ஸூரா படி பூமியை மட்டும் படைக்க இரண்டு நாள், (பூமியை மட்டும் படைக்க இரண்டு நாள் ஆச்சுன்னா, சூரியன், நிலா மற்ற கிரகங்கள், பால்வெளிவீதியை படைக்க எத்தனை வருஷம் ஆகியிருக்கும் அல்லாவுக்கு) பூமியில் அவற்றின் உணவுகைள நான்கு நாட்களில் நிர்ணயித்தான், அதாவது ஆறு நாள் ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் ஏழு வானங்களை ஏற்படுத்த இரண்டு நாள்… மொத்தம் எட்டு நாள்…

    எல்லாம் அறிந்த அல்லா வந்து நபிகிட்ட சொல்லி இறக்கின குரானில் எவ்வளவு முரண்பாடு… படைத்த அல்லாவுக்கு கணக்கு தெரியலையா? இல்லை கதைவிடும் நபி அவா்களுக்கு கணக்கு தெரியலையா? ஏன் இந்த குழப்பம்… இதில் இருந்து குரான் கப்ஸா கதைன்னு ஒப்புக்கிறீங்களா?

  64. அய்யா (பகுத்தறியா) நாத்திகரே!!! குர் ஆனிற்கு விளக்கம் குர் ஆன் தான், குர் ஆன் காப்பி அடிக்கவும் இல்லை, டீயடிக்கவும் இல்லை, உங்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படையும் தெரியவில்லை.
    “ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். 15:26 ) என்ற வசனத்தை குறிப்பிட்டுவிட்டு. இஸ்லாமின் திருட்டுத்தனம் அடுத்த ஸூராவுலயே தெரிஞ்சுடுது… என்று அத்தியாயம் 16:4 க்கு தாவிய நீங்கள், அத்தியாயம் 15, வசனம் 26 முதல் 33 வரை என்ன சொல்கிறது என்பதை ஏன் குறிப்பிடவில்லை? உங்களுடைய மேதாவித்தனம் தெரிந்துவிடும் என்பதாலா?
    நாத்திகன் என்ற பெயரில் ஒளிந்திருப்பவரே! மண்ணால் படைக்கப்பட்ட மனிதன் யார் எனக் கேட்டால் தங்களது பாட்டன், முப்பாட்டனையோ, சொந்த பந்தங்களையோ குறிப்பிடாமல், எல்லா முஸ்லிம்களும் ஒரே குரலில் சொல்வார்கள் முதல் மனிதர் ஆதம் (நபி) என்று, காரணம் குர் ஆன் முதல் மாந்தரைத்தான் மண்ணால் படைக்கப்பட்டவர் என சுட்டிக்காட்டுகிறதே அன்றி உங்களையும், என்னையும் அல்ல அரை குறையாக ஒரு வசனத்தைப் பிடித்துக் கொண்டு தொங்காமல் ஆழ்ந்து படிப்பது நன்று, இறுதியாக உங்கள் சிந்தனைக்கு…….

    ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (15:26)

    (அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (15:27)

    (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும், (15:28)

    அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! (15:29)

    அவ்வாறே மலக்குகள் – அவர்கள் எல்லோரும் – சிரம் பணிந்தார்கள். (15:30)

    இப்லீஸைத்தவிர – அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான். (15:31)

    “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான். (15:32)

    அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான். (15:33).

  65. ////அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான். (15:33).//////

    அப்போ இப்லீஸ் தான் உண்மையான தௌஹீத் வாதி 🙂

    என்ன அவன் அல்லா சொன்ன கூட ஒரு மனிதனை சிரம் பணியமாட்டான்.
    சிரம் பணிதல் நா சுஜூத் தானே பாய் !!!

  66. “குன்” அப்டினாதான் ஆகிட போகுதே , அப்பறோம் ஏம்பா 6 நாள் 8 நாள் 2 நாளுன்னு அடிசிகிறீங்க….
    அப்போ “குன்” அப்டின்னா ஆவாதா ? அது என்ன சும்மா வாய் உதாரா ?
    இல்லை குன் குன் குன் ………… அப்டின்னு 6 நாளுமா சொல்லி இருப்பான்…?
    அல்லாஹ் ஒரு காமெடி பீஸ் 🙂

  67. அரை குறையாக ஒரு வசனத்தைப் பிடித்துக் கொண்டு தொங்காமல் ஆழ்ந்து படிப்பது நன்று. 🙂

  68. கடுவுளை அறிவியல் தான் என்று நம்பினால் எந்த சண்டையும் மக்களிடத்தில் வராது இந்த உலகத்தில் எந்த ஒரு கடவுல்லாலும் எதையும் கொடுக்க முடியாது ஆனால் அறிவியலை ஆராய்ந்தால் முடியாதது எதுவும் இல்லை அல்லாஹு அக்பர் (அறிவியல் மிக பெரியது )

  69. கடவுள் இல்லை அல்லா தான் இருக்கிறான் அல்லா என்றால் அறிவியல் தான். அறிவியலை நம்பியவன் ஒரு போதும் கடவுளை நம்பி மோசம் போகமாட்டன் அரபில் -அல்லா தமிழில்-அறிவியல் ஆங்கிலத்தில்-சயின்ஸ்

  70. குர்ஆனில் எந்த ஒரு மந்தரம் மாயஜாலம் இல்லை ஆனாலும் முஸ்லிம்கள் நம்புகிறோம் இது நாங்கள் சரியாக குரானை புரிந்துகொள்ள தவறி விட்டோம் புரிந்து கொண்டவர்கள் வின்னானிகள் அதனால் தான் கடல் தண்ணீரையும் குடிநீர் ஆக்கமுடின்தது ஆகாயத்தில் பரக்கமுடின்தது இந்த உலகத்தில் மதவாதிகள் தேவையில்லை வின்னாநிகளே தேவை அல்லா(அறிவியல் )இன்றி ஒரு அணுவும் இல்லை

  71. கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லுவது தவறு .கடவுளை சரியாக கர்பிகாதவன் முட்டாள்.எதற்கு என்றால் கடவுள் என்பது அறிவியல்.அறிவியலை ஆராய்ந்தால் மனித மலத்தையும் எரிவாய்வை ஆக்க முடியும்

  72. அல்லாஹ்வை (அறிவியலை ) நம்பாதவன் ஒரு போதும் அறிவு பெற முடியாது . அல்லஹ்வை கடவுள் என்று சொல்லும் மதவாதிகளால் எந்த ஒரு லாபமும் இந்த உலகத்துக்கு இல்லை. ஆனால் அல்லாஹ்வை அறிவியல் என்று சொல்லும் வின்னாநிகல்லால் தான் முன்னேற்றம் . மதவாதிகள் எதை உருவாகின்நார்கள் மனிதர்களிடம் மத சண்டைகளை தான் உண்டாக்கினார்கள் ஆனால் அர்வியல்லாளர்கள் சமாதானத்தை உருவாகினார்கள்.

  73. நான் நாத்திகனே ,முதல் வாழை மரம் எப்படி வந்தது?வாழையடி வாழையாக மற்ற வாழைகள் எப்படி வருகின்றன.?

  74. கா.காவே ////அப்போ இப்லீஸ் தான் உண்மையான தௌஹீத் வாதி
    என்ன அவன் அல்லா சொன்ன கூட ஒரு மனிதனை சிரம் பணியமாட்டான்.
    சிரம் பணிதல் நா சுஜூத் தானே பாய் !!!
    இறைவன் என்ன சொன்னாலும் இறைவனுக்கு கட்டுபடுபவனே ஏகதுவவாதி

  75. முஹம்மத் பாய் , வாழ்த்துக்கள் !
    நீங்க கொஞ்சம் குழம்பி இருக்கிறீர் என்று நான் நினைக்கிறன் !!!
    அறிவியலோ, இல்லை ஆண்டவனோ நம்பதேவை இல்லை , இரண்டையும் பகுத்து அறிந்து புரிந்து கொள்ள முயற்சி எடுங்கள் !!
    இரண்டையும் நம்புபவன் முட்டாள் !!
    ஏன் என்றால், அறிவியல் முன்ன சொன்னதை பின்னால் அறிவியலே மறுக்கும் !! அறிவியல் நம்பிக்கை சார்ந்ததல்ல அது தரவு மற்றும் புலனாய்வு சார்ந்தது !
    ஆனால் அல்லா முற்றிலும் ஒரு பாகன் கடவுள் நம்பிக்கை ,
    அல்லாவை அறிவியலுடன் சேர்த்து அறிவியலை அசிங்கமாக்காதீர் !

  76. இப்பு காக்கா ,
    ////முதல் வாழை மரம் எப்படி வந்தது?வாழையடி வாழையாக மற்ற வாழைகள் எப்படி வருகின்றன.?////
    முதல் வாழை வந்தது அப்புரம் பாக்கலாம் , முதல்ல உங்க அல்லாஹ் எப்படி வந்தான்.
    சரி முதல் வாழை அல்லாஹ்வே நாட்டு வெச்சானா ?
    இல்லை “குன்” வாழை அப்டினான்ன ?
    இல்லை குன் நானே அப்டின்னு தன்னை தானே படைத்தானா ?

  77. கா.காவே //குரானில்…
    15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
    அடுத்த ஸூரா இதோ…
    16:4. அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.
    மனிதனை படைத்த அடிப்படை விஷயத்துலயே குழப்பு குழப்புன்னு குழப்புறீங்களே, இதுல எந்த ஸூரா உண்மைன்னு சொல்லுவீங்களா இஸ்லாமியா்களே… குரான் குழப்பலைன்னு, உங்களால மறுக்க முடியுமா என்ன?///
    இவ்வாறு முதல் மனிதனை களி மண்ணிலும்மற்றவர்களை விந்து துளியிலும் படைத்ததை விமர்சித்துள்ள நான் நாத்திகன் என்பவரிடம் தான் முதல் வாழை மரம் எப்படி வந்தது இப்ப்போது வாழைகள் எப்படி வருகிறது என்று கேட்டிருந்தேன்.அதில் குறுக்கே வந்த அறிவு கொழுந்தாகிய தாங்கள் அதைப் போன்று என்னிடம் கேட்டுள்ளீர்கள்..நாங்கள்தான் அல்லாவை நம்பும் முட்டள்களாயிற்றே நீங்கள் அறவியலின் அகராதியாய் இருந்து பதில் சொல்லுவதை விட்டு இப்படி மண்ணை கவ்வுவது சரியா?

  78. இப்பு காக்கா ,
    மிகவும் நன்றி ,
    ///.நாங்கள்தான் அல்லாவை நம்பும் முட்டள்களாயிற்றே ///
    உங்கள் நிலைப்பாடு எனக்கு மிகவும் உவகையாயுள்ளது. அல்லாஹ்வை நம்பும் கூட்டம் நிச்சயமாக முட்டாள் கூட்டம் தான் , உங்களையும் சேர்த்து !! 🙂

    //// குறுக்கே வந்த அறிவு கொழுந்தாகிய தாங்கள்////
    அது நான் இல்லை நீ தான்.

    (((காதர், on மே1, 2011 at 6:53 AM said:

    ////அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான். (15:33).//////

    அப்போ இப்லீஸ் தான் உண்மையான தௌஹீத் வாதி 🙂

    என்ன அவன் அல்லா சொன்ன கூட ஒரு மனிதனை சிரம் பணியமாட்டான்.
    சிரம் பணிதல் நா சுஜூத் தானே பாய் !!!)))

    இப்பு , இது நான் உனக்கு கேட்ட கேள்வி இல்லை , உனது பதிலையும் நான் கோர வில்லை, பிறகு நீ என் “முந்திரி கோட்டை பயல்” மாதிரி நடுவுல வந்து , இறைவன் என்ன சொன்னாலும் இறைவனுக்கு கட்டுபடுபவனே ஏகதுவவாதி அப்டீன்னு உன் தௌஹீத் குப்பய கொட்டுனே ???

    மண்ணை கவ்வுவது நீ தான் இப்பு , நீ நம்பும் அல்லா வாழை நட்டு வெச்சானா ?
    பதில் சொல்லவும் !!

  79. வணக்கம் செங் கொடி பார்வையாளர்களுக்கு இனி சரியான பாடம் புகுட்டப்படும்
    முதல் தலைப்பு இறைவண் உண்டு இஸ்லாம் மார்க்கம் உண்டு கட்டுரை எழதுத வருகின்றேன் இம்றான் நீங்கள் தயாரா

  80. பரிதாபத்திற்குரிய படைப்பியல் கொள்கை

    புகாரி ஹதீஸ் : 3191
    ….நாங்கள், தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், (ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான் என்று கூறினார்கள்…
    இது படைப்பின் துவக்கத்தைக் கூறும் காமெடி. “அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை” எனும் போது அல்லாஹ் தனது இருக்கையை தண்ணீர் மீது எப்படி வைக்க முடியும்? எந்த தண்ணீர்? தண்ணீரைத் தாங்க ஏதேனும்(பூமி) வேண்டாமா? முதலில் படைக்கப்பட்டது தண்ணீரா? இருக்கையா? பாதுகாக்கப்பட்ட பலகையா? எழுதுகோலா? வானமா? பூமியா?
    பலகை எந்த வகை? கற்பலகையா? மரப்பலகையா? concrete பலகையா? காகித அட்டையா?
    எந்த வகையான எழுதுகோல்? எழுத்தாணியா? மை உதவியால் எழுதும் வகையைச் சார்ந்ததா?
    முதலில் படைக்கப்பட்டது தண்ணீர் என்கிறார்கள். H2O-ல் முதலில் உருவானது ஹைட்ரஜனா? ஆக்ஸிஜனா?
    பூமியைத் தவிர்த்த வெளி வானம் எனில், பெருவெடிப்பில் முதலில் உருவானது எது? தண்ணீரா? பூமியா? வெளியா(ஹீலீயமா)? அறிவியல் யூகமான பெருவெடிப்புக் கொள்கை குர்ஆன் கூறியதுதான் சொறிந்து கொண்டிருப்பவர்கள் படைப்பின் வரிசையை விளக்குவார்களா?

    இது கொசுறு:

    “பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான்.”
    அவன் எந்த மொழியில் எழுதினான்? மொழி சமூகவயப்படல் காரணமாக உருவானது, மனிதர்களின் வசதிக்காக, நாளடைவில் ஒலி, மொழி, எழுத்து என்று வளர்ச்சியடைந்தது. “அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை” எனில் மொழி எப்படித் தோன்றியது? தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தானா? எழுதி வைத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன? கஜினி திரைப்படத்தில் வரும் சஞ்சய் ராமசாமி காதாபாத்திரம் போல மறதியால் பாதிக்கப்பட்டிருந்தானா?

    தஜ்ஜால்

  81. தஜ்ஜால், on மே11, 2011 at 3:19 மாலை said:

    “லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும் பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான்.”
    ——————————————————————————————————————–
    85:22. في لوح محفوظ

    85:22. In a tablet*, preserved.

    Tablet* = Law of nature*.

    The law of nature* has been described as a law whose content is set by nature and is thus universal.

    quranist@aol.com

  82. உலக வரலாற்றில் மதங்களின் தோற்றத்தை நோக்கும் போது, பழைய மதங்களின் மறு மலர்ச்சியாகவே புதிய மதங்கள் தோன்றியதைப் பார்க்கலாம். மேலும் மனிதர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து அபிப்பிராய வேறுபாடுகளினால் மதங்களில் பல பிரிவுகள் ஏற்படலாயின. ஒவ்வொரு மதக்காரனும் தன் மதம் மூலமாகத்தான் மக்கள் முழுவதும் மோட்சத்திற்கு போக முடியும் என்றும், தன் தன் மதத்தலைவைர் தான் கடவுள் மகன், கடவுள் தூதன், கடவுள் அவதாரம் என்றும் சொல்லித் திரிகின்றான். இவர்களில் யார் உண்மையானவர்களாக இருக்க முடியும் என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஒவ்வொரு மதக்காரனும் அவனவன் மதத்தை நம்பாதவனுக்கு பாவம் என்றும், மோட்சம் இல்லை என்றும் சொல்லக்கேட்கிறோம். மனிதனாகப் பிறந்தவன் இந்த மதங்களுக்காக மனிதனின் ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இருக்கிறார் என நினைத்து பல கடவுள்களை வணங்கினான். மடலாயத் தலைவர்களும், மதத் தலைவர்களும் தங்கள் அபிப்பிராயங்கள், சுயநலங்கள் காரணமாகவும் கடவுள்களுக்குள் பிரிவுகளை உண்டாக்கினார்கள். கடவுள் மனிதனைப் படைத்தார் என்று கூறிக்கொண்டு மனிதன் கடவுள்களைப் படைப்பது முற்றுப்பெறவில்லை.எத்தனை நரகத்திற்குப் போய் வருவது.

  83. மக்களின் நலத்திற்காக ஒழுக்கத்தைப் போதிப்பதற்காகவும், உலகத்தில் நியாயத்தை நிலை நாட்டவும் மதம் உருவானதாகவும், அவற்றிற்கு கடவுள் ஒருவர் இருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகின்றது. பல இனிப்பான, அழகான, செல்வாக்கான வார்த்தைகளை எடுத்துக் காட்டுகிறார்கள். மதவாதிகளை கூறுவதுபோல் சொல்கின்ற ஒழுக்க விதிகளின்படி யார் ஒழுகுகிறார்கள்?

    கடவுள் சொன்னபடி மதக் கோட்பாடுகளின்படி யார் நடந்து கொள்கிறார்கள்?

    மதங்களைப் போதிக்கின்றவர்களாவது அவர்கள் கூறும் ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகளின் படி வாழ்ந்திருப்பார்களா?எளிமையான அமைப்புடன் தோன்றிய உயிரினங்களில் படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவே புதிய உயிரினங்கள் தோன்றியுள்ளன. தற்போது காணப்படுகின்ற உயிரினங்கள் பல தொடக்க காலத்தில் இருந்திருக்கவில்லை. இவையெல்லாம் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியால் உருவானவையே. பரிணாம வளர்சியின் உச்ச நிலையே மனிதன்.படைப்பு என்பது இன்மையிலிருந்து உண்டாக்கபடல் என்ற பொருளை உடையது. ஆனால் இல்லாத ஒன்றிலிருந்து எதுவும் உண்டாக முடியாது என்றும், உள்ள பொருளிலிருந்தே எதுவும் காலப்போக்கில் உருமாறி உருமலர்ச்சி (Evolution) பெற்றுத் தோற்றம் அளிக்கும் என்பதே அறிவியல். சார்ல்ஸ் டாவினின் பரிணாமக்கொள்கையின் படி ஒரு கல உயிர் கால ஓட்டத்தில் பல கலமுள்ள உயிராகிப் பெருகி வளர்ந்து மென்மேலும் உயர்ந்த நிலைகளுக்கு மாறிக் கடைசியில் மனித உருவம் தோன்றியுள்ளது

  84. நான் நாத்திகன், on மே12, 2011 at 9:54 AM said:

    //உலக வரலாற்றில் ………………………..எத்தனை நரகத்திற்குப் போய் வருவது.//

    இஸ்லாம் மதம்/கோபம்/வேதம்/சித்தம்/வதம்/வாதம் அல்ல.

    அறிவின் தாகம் இஸ்லாம்/நாத்திகம்.ஆத்திகம் மெளட்டீகம்.

    மற்றவை மதங்கள். மார்க்ஸியம்/கம்யூனிஸம் ஒரு வர்க்கத்தின் கோபம்.

    quranist@aol.com

  85. நான் நாத்திகன், on மே12, 2011 at 10:21 AM said:

    ///மக்களின் நலத்திற்காக ஒழுக்கத்தைப் போதிப்பதற்காகவும், உலகத்தில் நியாயத்தை நிலை நாட்டவும் மதம் உருவானதாகவும், அவற்றிற்கு கடவுள் ஒருவர் இருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகின்றது.//

    கடவுள் இல்லை.

    குரான் கடவுளை மறுக்கிறது.

    கடவுள் மனிதனை படைக்கவில்லை.

    மாறாக மனிதனே கடவுளையும் மதத்தையும் படைத்தான்.

    குரான் படைப்பியல் கொள்கையை மறுத்து மாறாக பரிணாமத்தை ஆதரிக்கிறது.

    quranist@aol.com

  86. அய்யா குரானிஸ்ட் ,
    என்னய்யா பேரு இது , செம்ம காமெடி போ !!

    சரி நீ என்ன லூசாப்பா ?
    என் நீ குழப்புற ?

  87. வணக்கம் சங்கர்
    3 நாள் கேள்வி பதில்

    1 ம் கேள்வி பதிலுக்கு உங்கள் தளத்தில் இருந்து யாரும் முன்வரவில்லை

  88. மக்கா பற்றி உங்கள் கட்டு கதை இன்னும்வெளியாகி விட்டது சரியான விழக்கம் இல்லாத காரணத்தால் உங்கள் கருத்தை ஏற்க்க முடியாது

  89. வணக்கம் நண்பர் இம்ரான்
    என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள்
    /மக்கா பற்றி உங்கள் கட்டு கதை/
    எதை சொல்கிறீர்கள்?
    நான் யாரையும் என் கருத்தை ஏற்க வைப்பதற்காக விவாதம் செய்வது இல்லை.தெரிந்து கொண்ட விஷயங்களை கூறுகிறேன். தளத்தில் உள்ள கட்டுரைகளுக்கு இங்கேயோ அல்லது உங்கள் இணைய தளத்திலோ ஆதாரபூர்வமாக மறுப்பு எழுதுங்கள்.பதிவராக நிறைய எழுத வாழ்த்துகள்.

  90. சங்கர் அவர்களே வணக்கம்
    யார் மதம் இல்லையன்டு செல்கிறானோ மதத்தில் உள்ள சில கடவுளுக்கு வழங்கப்படுகின்ற சொல்லை பாவிக்க கூடாது உதாரணம்
    அஸ்ஸலாமு அலைக்கும் . வணக்கம் நடஸ்காரம்

    சங்கர் அவர்களே நாம் இருவரும் விவாத்தை தொடருவேம் முதலில் நீங்கள் எனக்கு தலைப்பொன்றை வழங்குங்கள்

  91. அஸ்ஸலாமு அலைக்கும்
    தலைப்பு மார்க்கத்தை பின்னற்றல்

    அன்புக்குறிய செங்கொடி வாசகர்களே இத்தலத்தில் நாளந்தம் பல விவாதங்கள் மற்றும்
    தேவையில்லாத பிரச்சினைகள் போன்றவை எல்லாம் நடக்கிறது என்பதை நான் விழங்கி கொண்டேன்?
    சிலர் விஞ்ஞானம்தான் கடவுள் என்று எண்ணிய நாத்தினர்களும் கடவுள்தான் கடவுள் என்று நினைத்த மனிதனுக்கும் நிறைய வேறு பாடு உண்டு
    உண்மையில் உலகம் கடவுளால் படைக்கப்பட்ட ஒன்று மனிதன் நீரினால் படைக்கப்பட்டான் என்று சிலர் கருத்து
    உண்மையில் மனிதன் மண்னால் படைக்கப்பட்து அல்குர்ஆன் என்ன சொல்கிறாது என்றான் நாம் மனித வர்க்கத்தையும் ஜின்களையும் படைத்தை காரணம் என்னை வணங்குவதற்குதான்
    ஆனால் நாத்தினர்கள் அறிவு கெட்ட விஞ்ஞானிகள் படிபடியாக அவர்களுடைய மண்டையை குழப்பி கொள்கிறார்கள் அவர்கள் இறந்து உக்கி போன சில மிருகங்களுடைய உலை வைத்து ஆய்வு செய்து அவர்களுடைய சிந்தனைக்கு ஏற்றவாறு நடக்கின்றார்கள்
    இவ்வாருதான் நாத்தினர்களுடைய கருத்தும்
    அவாகளுடைய சில கேள்விகள் பின்வருமாரு
    01 இறைவண் மணிதனை படைத்து நரகம் சொர்க்கம் என்று வைத்து இதனால் அவனுக்கு என்ன லாப
    02அவன் ஏன் மனிதனையும் ஜின்களையும் வணங்குவதற்கு படைத்தான் என்று கேள்வி
    03அவன் எங்கு இருக்கிறான்
    04 மனிதன்னைப்படைத்து அவனை நரகத்தில் போட்டு அவனுக்கு என்ன லாபம்

    தொடரும்????????????????????????????????????????????

  92. இம்ரான் அவர்களே ,
    இப்போ என்ன சொல்ல வருகிறீர் ?
    //////தேவையில்லாத பிரச்சினைகள் போன்றவை எல்லாம் நடக்கிறது என்பதை நான் விழங்கி கொண்டேன்?//////
    எது தேவை இல்லாத பிரச்சனை , கடவுள் இருக்கிறார் என்று பிடிவாதம் பிடிப்பதா ?
    இல்லை ஒரு பழைய புத்தகத்தை நம்பி மாற்று மதத்தினரை கொல்வதா?
    ///// விஞ்ஞானம்தான் கடவுள் என்று எண்ணிய நாத்தினர்களும்///////
    எந்த நாத்திகனும் அறிவியலை கடவுள் என்று சொல்லியதில்லை. சொன்னால் அவன் நாத்திகன் இல்லை .
    வேறெந்த விளக்கத்தை விடவும் அறிவியல் விளக்கம் மிக தெளிவு என்பதால் அறிவியலை ஆராயிந்து போற்றுகிறோம்.
    ///அவாகளுடைய சில கேள்விகள் பின்வருமாரு
    01 இறைவண் மணிதனை படைத்து நரகம் சொர்க்கம் என்று வைத்து இதனால் அவனுக்கு என்ன லாப
    02அவன் ஏன் மனிதனையும் ஜின்களையும் வணங்குவதற்கு படைத்தான் என்று கேள்வி
    03அவன் எங்கு இருக்கிறான்
    04 மனிதன்னைப்படைத்து அவனை நரகத்தில் போட்டு அவனுக்கு என்ன லாபம் தொடரும்////

    நல்ல கேள்விகள் நீங்களே பதில் தரலாமே ? 🙂 : )

  93. //நீங்கள் எனக்கு தலைப்பொன்றை வழங்குங்கள்//
    குரான் தோன்றிய வரலாறு

  94. அஸ்ஸலாமு அலைக்கும்=உங்களுக்கு அமைதி உண்டாவதாக‌
    As-Salāmu `alayk(a) —Peace be upon you (m. sing.)
    As-Salāmu `alayk(i) —Peace be upon you (f. sing)

    As-Salāmu `alayk(umā) —Peace be upon you (to two people of any gender)

    As-Salāmu `alayk(unna) —Peace be upon you (f. plural – to three or more females only)

    As-Salāmu `alayk(umu)—Peace be upon you (To a group of three or more people, where at least one is a male – or to a member of state such as a prime minister, president, king)
    ____________
    நண்பரே இதில் வணக்கம் எங்கு வந்தது? இரண்டு ஹதிதும் தருகிறேன்
    3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் மீது சாந்தி பொழியட்டும்” என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
    எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    ____________
    2935. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    யூதர்கள் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) ‘அஸ்ஸாமு அலைக்க” (“உங்களின் மீது மரணம் உண்டாகட்டும்”) என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)” என்று கேட்டார்கள். நான், ‘அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘நான் (அவர்களுக்கு பதிலளித்த போது) அவர்களிடம், ‘வ அலைக்கும் – (உங்களின் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)’ என்று கூறியதை நீ கேட்கவில்லையா?’ என்றார்கள்.
    _____________

  95. பல உயிரினங்களில் சில தேவையற்ற அல்லது பயனற்ற உறுப்புகள் காணப்ப்டுவதுண்டு. மனிதனில் எளிதாக எல்லோருக்கும் புரியும் அத்தகைய ஓர் உறுப்பு – குடல்வால் – appendix.

    மனிதர்களிடம் இவ்வுறுப்பு ‘உபகாரம் இல்லாமல் உபத்திரமாகத்தான் உள்ளது’. ஏனைய தாவர உண்ணிகளில் இது மிக முக்கியமான உறுப்பாகச் செயல்படுகிறது. செல்லுலோஸை செரிக்க இந்த உறுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதனாலேயே அந்த உயிரினங்களில் அவைகள் பெரியதாகவும் அமைந்திருக்கும். மனிதர்களுக்கு இவ்வுறுப்பு தேவையில்லை. ஆனால் முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சியில் மனிதர்களிடமும் பயனேதுமின்றி – தொல்லை தரும் ஒரு உறுப்பாக – இன்னும் உள்ளது.

    இதுபோன்று ஏறத்தாழ நூறு உறுப்புகள் போல் மனிதனிடம் உள்ளதாக பட்டியல் போட்டுள்ளார்கள். அவைகளில் சில – nictitating membrane – பல முதுகெலும்பிகளின் கண்களில் இது ஒரு ஒளிபுகக்கூடிய சவ்வாகக் கண்களின் மூன்றாவது ‘இமை’யாக உள்ளன. பறவைகளில் முழு வளர்ச்சியுடன் உள்ளன. கண்ணின் பாதுகாபிற்காக உள்ள இந்த அமைப்பு பாலூட்டிகளில் மிகச்சிறியதாக, கண்ணின் ஓரத்தில் இருக்கும் அமைப்பாக சுருங்கியுள்ளன. பாலூட்டிகளில் இந்த அமைப்புக்கு ஏதும் முக்கிய வேலையோ முக்கியத்துவமோ கிடையாது. இருப்பதற்குரிய காரணம் – முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சியில் பாலூட்டிகளிடம் தக்கவைக்கப்பட்டுள்ளது.

    காது மடலுக்குரிய தசை நார்கள் மூலம் பல உயிரினங்கள் தங்கள் காது மடல்களை ஒலியை உள்வாங்க அசைக்க, திருப்ப முடியும். மனிதர்களிடமும் இந்த தசை நார்கள் உள்ளன. ஆனால் அவைகள் முழு ஆற்றலோடு இல்லாமல் வெறுமனே உள்ளன.சிலருக்கு மட்டும் புறச்செவியை அசைக்க முடியும்.
    இதன் காரணம் – முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சி மனிதனிடமும் நீட்புடையது.

    வால் மனிதனுக்கும் உண்டு; வெளியேகூட சிலருக்கு சிறிது தெரியலாம். ஆனால் எல்லா மனிதர்களின் எலும்புக்கூடுகளில் வாலுக்குரிய எலும்புகள் உள்ளன. காரணம்: – முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சி மூலமாக மனிதனிடமும் பின் தங்கிவிட்டது.

    கடைசியாக நமது wisdom tooth. நமக்கு வயதான பிறகு வெளிக்கிளம்பும் இப்பற்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; சிலருக்கு இப்பற்கள் வெளிவருவதும் முழுமையாக நடப்பதில்லை. இவைகளும் ‘உபகாரத்திற்குப் பதில் உபத்திரவத்திற்குத்தான்’ காரணமாக உள்ளன. பரிணாம வளர்ச்சியில் மனிதனிடம் அடுத்ததாகக் காணாமல் போகக்கூடிய உறுப்பாக இது இருக்கலாம். இப்போது இருப்பதற்கான காரணம் – முந்திய உயிரினங்களில் இருந்த அந்த உறுப்பு பரிணாம வளர்ச்சி மூலமாக இன்னுமும் மனிதனிடமும் உள்ளன.

    இதுபோல் நீண்ட ஒரு பட்டியலை மற்றைய உயிரினங்களிலும் தரமுடியும். ஆனால் மேலே சொன்னது மனிதனுக்கு மட்டுமானது. இதுவே பரிணாமம் கட்டுக்கதை என்று நம்பும் இறைநம்பிக்கையாளர்களுக்கு போதுமென நினைக்கிறேன்.

    “We have indeed created man in the ‘best of moulds’.” (Qur’an 95:4) என்று குரான் சொல்கிறது. (1.அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக! 2.சினாய் மலையின் மீதும். 3.மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக! 4. திண்ணமாக, நாம் மனிதனை மிகச்சிறந்த அமைப்பில் படைத்தோம்.)

    இந்த மேற்கோளில் இரண்டு கேள்விகள்.

    1. ‘best of moulds’ என்கிறீர்கள்;மனிதனை மிகச்சிறந்த அமைப்பில் படைத்தோம் – என்கிறீர்கள். பின் மனிதனின் உடம்பில் ஏன் இத்தனை தேவையற்ற உறுப்புகள் ?

    2. ஒலிவத்தின் மீதும் சத்தியமாக! (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக .. -. கடவுள் after all தன் படைப்பான மனிதனுக்குச் சொல்லும் ஒரு விஷயத்திற்கு ‘கடவுள் இத்தனை சத்தியம் பண்ணணுமா? ஆச்சரியமான அல்லா .. கடவுள் படைத்திருந்தால் எப்படி சில இனங்கள் அழியும். (Extinction). அப்படி அழிவதாயிருந்தால் கடவுளின் ஆற்றல் என்ன ஆச்சு.தவறு என நிரூபிக்கப்பட்ட போதும் தொடர்ந்து அவைகளை நம்புதல்; ஒரு மனநோய்க்கான அறிகுறி

  96. ஐயா ஆதிமனிதன் மட்டும் தான் களிமன்னில்லிருந்து படைக்கப்பட்டான் மற்றவர்கள் இந்திரியத்தில்லிருந்து அதாவது நீரில்லிருந்து படைக்கப்பட்டோம் சரியா ?

  97. முதலில் தோன்றிய உயிர் ஆணா பெண்ணா…
    பெண்தான் என்றால் ஆணாக மாறியது எப்படி……

  98. பிங்குபாக்: Nakkeran

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்