இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி: ௩௧
இஸ்லாத்தின் அற்புதங்களின் வரிசையில் ஸம் ஸம் நீரூற்றுக்கு சிறப்பான இடம் உண்டு. அற்புதங்களில் மட்டுமின்றி இஸ்லாமிய வரலாற்றிலும் அந்த நீரூற்றுக்கு தனியாசனம் உண்டு. இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை முடித்துச் செல்பவர்கள் தங்கள் கடவச் சீட்டைவிட பத்திரமாக எடுத்துச் செல்லும் ஒரு பொருள் உண்டென்றால் அது ஸ்ம்ஸம் நீராகத்தான் இருக்கும். சற்றேறக் குறைய 4000 ஆண்டுகளாக நீர் தந்துகொண்டிருக்கும் நீரூற்று, வற்றாத நீரூற்று, எவ்வளவு நீர் எடுத்தாலும் அளவு குறையாத நீரூற்று, நோய் தீர்க்கும் தன்மையுடைய நீரைத் தரும் நீரூற்று, இன்னும் பலவாறாக முஸ்லீம்களால் விதந்து போற்றப்படும் இந்த நீரூற்று மக்கா பள்ளியின் வளாகத்தினுள் காஅபா ஆலயத்தின் வெகு அருகில் இருக்கிறது.
இந்த ஊற்றின் தொடக்கம் பற்றிய கதை ஈர்ப்புக்கவர்ச்சி மிக்கது. கிமு 2000 வாக்கில் அன்றைய இறைத்தூதரான இப்ராஹிம் தன் மனைவி ஹாஜ்ர் ஐயும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் ஆளரவமற்ற அரபு பாலைவனத்தில் ஸபா, மர்வா எனும் இரண்டு குன்றுகளுக்கு அருகில் தனியே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் வந்துவிடுகிறார். தாயையும் சேயையும் அப்படி பலைவன வெயிலில் விட்டுவிடும்படி அவருக்கு இறைக்கட்டளை வருகிறது, இறைத்தூதரல்லவா தட்டாமல் நிறைவேற்றிவிடுகிறார். இதே இப்ராஹிம் தான் பின்னாளில் இதே இஸ்மாயிலை இறைக்கட்டளை எனும் பெயரில் நரபலி கொடுக்க முயல்கிறார். இதன் நினைவாகத்தான் தியாகத்திருநாள் என்று உலக முஸ்லீம்கள் ஆட்டை அறுத்துப் பலியிடுகிறார்கள். கதைக்கு திரும்பலாம், பையில் வைத்திருந்த தண்ணீர் தீர்ந்ததும் பிரச்சனை தொடங்குகிறது. குழந்தை வீறிட்டு அழுகிறது. குழந்தையின் பசி தீர்க்க உதவி ஏதும் கிடைக்காதா என்று பக்கத்திலிருக்கும் குன்றுகளான ஸபா, மர்வா மீது ஏறி ஆட்கள் யாரும் தென்படுகிறார்களா என்று பார்க்கிறார். யாரும் தென்படுவதாக இல்லை. மீண்டும் குழந்தையிடம் ஓடி வருகிறார், குழந்தையின் அழுகையை நிறுத்த வழிதெரியாது மீண்டும் குன்றுகளின் மீதேறி உதவி ஏதும் கிடைக்காதா என தேடுகிறார். இப்படி ஏழு முறை இரண்டு குன்றுகளிலும் மாறிமாறி ஏறி உதவி கிடைக்காதா எனத் தேடுகிறார். இதன் நினைவாகத்தான் ஹஜ் செய்பவர்கள் ஸ்பா, மர்வா குன்றுகளுக்கிடையில் ஏழுமுறை தொங்கோட்டம் ஓடுகிறார்கள்.
இதன் பிறகு வானவர் ஒருவர் குழந்தையின் அருகே தோன்றி தன் கையிலிருக்கும் தடியினாலோ அல்லது தன்னுடைய சிறகினாலோ தரையை தட்டுகிறார். உடன் அந்த இடத்திலிருந்து நீர் குமிழியிட்டு வெளியேறுகிறது. இதையே குழந்தை காலால் அழுது உராய்த்த இடத்திலிருந்து நீர் பீறிட்டுக்கிளம்பியதாக கூறுவோரும் உண்டு. இதைக்கண்ட ஹாஜ்ர் ஓடி வந்து நீர் வெளியேறி வீணாகிவிடக்கூடாதே என்று ஸ்ம் ஸம் (நில் நில்) என்று கூறிக்கொண்டே மணலால் அணைகட்டுகிறார். அதனால் தான் அந்த ஊற்று இன்றும் ஸம் ஸம் நீருற்று என அழைக்கப்படுகிறது.
முதலில் இது 4000 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் ஊற்று என்பதே தவறானது. மேற்குறிப்பிட்ட கதையில் ஊற்று வெளிப்படத் தொடங்கியதும் பிற பகுதியிலுள்ள மக்கள் அங்கு நீர் வளம் இருப்பதைக் கண்டு அந்த இடத்தில் குடியேற தொடங்குகிறார்கள், அதுவே பின்னர் மக்கா எனும் நகரமாகிறது. ஆனால் தொடர்ந்து அந்த ஊற்று எவ்வளவு நாட்கள் பயன்பாட்டில் இருந்தது என்பதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை, தூர்ந்துவிட்டது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல பாதைகளின் சந்திப்பாக இருந்த மக்கா எனும் நகரத்தைப்பற்றி பல நூல்களில் குறிப்புகள் இருந்தாலும் எதிலும் அந்த ஊற்றைப் பற்றிய குறிப்புகள் இல்லை. இப்போதிருக்கும் ஊற்று முகம்மதுவின் காலத்திற்கு சற்றுமுன் முகம்மதின் பெரிய தந்தையான அப்துல் முத்தலிப் என்பவர் குறைஷிகளின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக தோண்டிய கிணறு. தன்னுடைய குலத்திற்காக பெரியதந்தை தோண்டிய கிணறு என்பதால் முகம்மது அதற்கு கொடுத்த முக்கியத்துவமே, இன்று இஸ்லாமியர்களின் புனிதமாகி இருக்கிறது.
1971ல் எகிப்திய மருத்துவர் ஒருவர் இந்தக் கிணறு குறித்து ஐயம் எழுப்பியதாகவும் அதைத் தீர்ப்பதற்கு மன்னர் பைசல் நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் இது குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், அவர்களால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ஹுசைன் என்பவர் அந்தக் கிணற்றின் ஆழம் தோராயமாக ஐந்து அடி இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர் என்று சௌதி அரசின் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அந்த நீரின் புனிதம் குறித்து கதைகள் கட்டி பரப்பப்படுகிறது. அதுவே மதத்துடன் தொடர்புடையது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிவிடுகிறது.
இந்த நீரில் இருக்கும் தனிமங்களின் செரிவு குறித்தும், இது புனித நீராக இருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறது என்பதாகவும் பிரதாபிக்கின்றனர். ஆனால் இதை விட பழமையான ஊற்றுகளெல்லாம் இதுபோல தனிமங்களின் செரிவுற்றதாக இருந்திருக்கிறது. சீனாவில் லிசான் மலையில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெப்ப நீரூற்று மருத்துவ தன்மை கொண்டதாக பயன்பாட்டில் இருக்கிறது.
இந்த கிணற்றிலிருந்து எவ்வளவு நீரை இறைத்தெடுத்தாலும் இதன் நீர்மட்டம் குறைவதில்லை என்றும் ஒரு கருத்து உலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சௌதி அரசு ஏன் அந்த கிணற்றை யாரும் அணுக முடியாதபடி பாதுகாத்து வைத்திருக்கிறது என்பதில் இருக்கிறது.
இந்த ஊற்றின் மகிமை குறித்து முகம்மது பலவாறாக புகழ்ந்து கூறியிருப்பதாக ஹதீஸ்களில் குறிப்பாக புஹாரி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நீரை என்ன நோக்கத்திற்காக என்ன நினைத்து குடிக்கிறார்களோ அந்தப் பலனையே பெறுவார்கள். இந்த நீர் உணவாகவும், மருந்தாகவும் இருக்கிறது. காய்ச்சல் கண்டால் இந்த நீரைக் குடித்தால் சரியாகிவிடும். முகம்மதை விண்வெளிப் பயணத்திற்கு தயார்படுத்த இந்த நீரால் தான் அவரின் உள்உறுப்புகள் கழுவி சுத்தம் செய்யப்பட்டன என்று பலவாறாக கூறப்பட்டிருக்கிறது. மாறாக குரானில் ஒரு வசனம் கூட இந்த கிணறு குறித்து இல்லை.
குரானில் விரிவான விபரங்கள் கூறப்பட்டிருக்கும் இறைத்தூதர்களில் இப்ராஹீமும் ஒருவர். தன்னுடைய மகனை பலியிட முயன்றது, தன்னுடைய மனைவி மகனை பலைவனத்தில் தவிக்க விட்டது, தந்தையும் மகனும் காஅபா பள்ளியைக் கட்டியது என குரான் அந்த நீரூற்றோடு தொடர்புடைய பல தகவல்களைக் கூறியிருந்தாலும், நேரடியாக அது குறித்து எதுவும் கூறப்படவில்லை. அது போல ஹஜ் எப்படி செய்ய வேண்டும் என்பதும் குரானில் சொல்லப்படவில்லை. ஆனால் ஸபா, மர்வா குன்றுகளுக்கிடையில் தொங்கோட்டம் ஓடுவதையும் இணைத்தே முகம்மது ஹஜ் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்திருப்பதால் குரானின் வசனங்களுக்கும் முகம்மதின் தீர்மானங்களுக்குமிடையில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்றாகிறது. பல வேதங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் தாய் ஏட்டிலிருந்து அருளப்பெற்றதாக நம்பப்படும் குரான் முஸ்லீம்களின் நம்பிக்கையின்படியே முகம்மதுவின் சொற்களில்லை என்றால்; முகம்மதுவின் பெரியப்பா தோண்டிய கிணற்றுக்கும் அதனைச்சுற்றிய கதைக்கும் குரான் ஏன் முக்கியத்துவம் தந்திருக்கிறது என்பது மட்டும் முஸ்லீம்களின் சிந்தனைக்கு.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்
29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா
28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?
27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்
26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்
25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா
24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?
23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா
21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?
20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?
19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?
18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்
17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
15. விந்து குறித்த குரானின் விந்தைகள்
14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்
7. குரான் கூறுவது அறிவியலாகுமா?
6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….
ஜம்ஜம் நீர் எப்படி வந்தது என்ற கதை புஹாரியில் குறிப்பிடப் பட்டுள்ளது.குரானில் ஜம் ஜம் பற்றி குறிப்புகள் இல்லையென்றே தெரிகிறது.
ஜம் ஜம் கதிஅ படிப்போம்.பிறகு விவாதிப்போம்.
3364. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்களின் தரப்பிலிருந்துதான். ஸாரா (அலைஹஸ்ஸலாம்) அவர்கள் மீது ஏற்பட்ட தனது பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்துக் கொண்டார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அஙகு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அஙக இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ண்ர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அஙகேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எஙகளை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள் அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டனர் என்று கேட்க அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள் அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான் என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள். எஙகள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எஙகள் இறைவா! இவர்கள் (இஙகு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளஙகளை ஆக்குவாயாக! மேலும் இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழஙகுவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14-37) இஸ்மாயீலின் அன்னை இஹ்மாயீலுக்கு பாலூட்டும் அந்த தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடஙகினார்கள். தண்ணீர்ப்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்ட போது அவளும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தில்) புரண்டு புரண்டு அழுவதை… அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை…. அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே ஸஃபாவிலிருந்து இறஙகிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலஙகியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமம்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்மாவுக்குமிடையே செய்கின்ற சஃயு (தொஙகோட்டம்) ஆகும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் மர்மாவின் மீது ஏறி நின்று கொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே சும்மாயிரு என்று தமக்கே கூறிக்கொண்டார்கள். பிறகு காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போது (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே (அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உஙகளிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுஙகள்) என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின் அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். …அல்லது தமது இறக்கையினால் தோண்டினார்கள் என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்… அதன் விளைவாக தண்ணீர் வெளிப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம் போல் (கையில்) அமைக்கலானார்கள் அதை தம் கையால் இப்படி (ஓடிவிடாதே! நில் என்று சைகை செய்து) சொன்னார்கள். இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொஙகியபடியே இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்கு கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால்… அல்லது அந்த தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால்… ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் நீர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும் என்று சொன்னார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். பிறகு அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம் நீஙகள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய்விடுவார்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில் இஙகு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னை சார்ந்தோரைக் கைவிடமாட்டான் என்று சொன்னார். இறையில்லமான கஅபா மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள். இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர்…. அல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார்… அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர் அப்போது தணணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு இந்தப் பறவை தண்ணீரின் மீது வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும் நாம் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே என்று (வியப்புடன்) பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அஙகே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார் இஸ்மாயீலின் அன்னை தன் அருகே இருக்க முன்னே சென்று நாஙகள் உஙகளிடம் தஙகிக் கொள்ள எங்களுக்கு நீஙகள் அனுமதியளிப்பீர்களா என்று கேட்க அவர்கள் ஆம் (அனுமதியளிக்கிறேன்) ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர். (ஜுர்ஹும் குலத்தார் தஙகிக்கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்… என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப அவர்களும் (வந்து) அவர்களுடன் தஙகினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சோர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்நதார். அதன் பிறக அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்திருப்பார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடஙகளில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு ஒரு நாள் இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாட்கள் பிரிந்து மீண்டம் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி நடந்துக் கொண்டார்கள் (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்). பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான் எனறு சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் உஙகள் இறைவன் உஙகளுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுஙகள் என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுதற்கு உதவுவாயா என்று கேட்க இஸ்மாயீல் (அலை) அவர்கள் உஙகளுக்கு நான் உதவுகிறேன் என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று சொல்லிவிட்டு சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளஙகளை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்களை கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டளானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள் (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவை கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்து தரலானார்கள். அப்போது இருவருமே இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய். (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அறிவிப்பார் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி இறைவா! எஙகளிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக!) நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாவும் இருக்கின்றாய் (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவை புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள்.
Volume :4 Book :60
முஸ்லீம் மட்டுமல்ல அனைத்துமதங்களிலும் புனைகதைகள் அதிகம் உள்ளன.நம்ம ஊர் வைகை ஆறு பிறப்பைப் பற்றியும் கதைகள் சொல்லப்படுகிறதே.மதங்களை மக்கள் கண்டு பயப்படவேண்டும்.சாமி கண்ணைக்குத்திடும் என்ற பயத்திற்கே இவை உருவாக்கப்படுகிறது. ஆறாம் அறிவுள்ள நாம்தான் ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்.நம்மைவிட ஒரறிவு குறைந்த கால்நடைகள் உட்பட்ட உயிரினங்களுக்கு கடவுள் நம்பிக்கை எங்கே போயிற்று.அவைகளும் வாழ்ந்து மடியதானேசெய்கின்றன.கற்பனை அவைகளுக்குக் கிடையாதே.கற்பனைதானே கடவுளின் பிறப்பிடம்.
பல திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்மகதையை போல இருக்கிறது இஸ்லாம்!
🙂
//பல திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்மகதையை போல இருக்கிறது இஸ்லாம்//
சரியா சொன்னிங்க தல
அப்படி போடு..
////பல திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்மகதையை போல இருக்கிறது இஸ்லாம்//
சரியா சொன்னிங்க தல//
பிட்டுப்படம் பார்க்கிற பண்ணாடைங்களுக்கு அப்டித்தான் தெரியும்
செங்கொடி பரதேசி…
ஆராய்ச்சி பண்ண வந்துட்டானுக கரிச்சட்டி தலையனுக
வால்பையன்…
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை நிரூபிக்க உங்க படத்தெல்லாம் போட்டு காட்றிங்களே.. பாவம்
ஜம் ஜம் ஐ பாழ்படுத்திய காமேதியன்கள்
கார்மேதியன்கள் வம்சம் பஹ்ரைனை ஆண்டு வந்தனர்.கி.பி 930ல் அபு தாகிர் அல் சுலைமான் அல் ஜனஃபி தல்மையில் மெக்கவை தாக்கினர்,20000 பக்தர்களை கொன்று குவித்தனர்.பிணங்கள் ஜம்ஜம் கிணற்றில் போட்டு நிரப்ப்ப ப்ட்டன.காஃபா வின் செலவங்கள் கொள்ளையடிக்கப் பட்டன. கறுப்பு கல்லையும் கொள்ளையடித்து சென்ற்னர்.
http://en.wikipedia.org/wiki/Abu_Tahir_Al-Jannabi
ஜம் ஜம் ஐ பாதுகாக்க அல்லாவால் ஏன் முடியவில்லை?
//குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை நிரூபிக்க உங்க படத்தெல்லாம் போட்டு காட்றிங்களே.. பாவம்//
சவுதி அரெபியாவில் மெக்காவின் அருகே மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட உயிரினத்தின் படிமங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
//கும்மி, on மார்ச்4, 2011 at 3:52 மாலை said://
நான் இப்பதான் இந்தப் பதிவுக்கே வர்றேன். அதுக்குள்ளே என் பேருல கமெண்டு போட்டிருக்கானுங்க. மதத்தைப் பத்திதான் சிந்திக்கத் தெரியாதுன்னு நெனச்சேன். பேரும் கூட சிந்திச்சு வச்சிக்கத் தெரியாது போல.
sankar உங்களிலிருந்து சனிக்கிழமையன்று வரம்பு மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி சிறுமையடைந்த குரங்குகளாகிவிடுங்கள் என்று கூறினோம். குரான் 2:65
இந்த மனிதனாக இருந்து மாறிய குரங்குகள்
//குரான் 2:65
இந்த மனிதனாக இருந்து மாறிய குரங்குகள்//
சனிக்கிழமை வரம்பு மீறுதல் என்றால் என்ன?
அதாவது மூஸா(மோசஸ்) யூதர்களை எகிப்தில் இருந்து அழைத்து வந்த பின் அளிக்கப்பட்ட கடளைகளின் ஒன்றுதான் இந்தசனிக்கிழமை ஓய்வு. மூஸாவின் காலம் சுமார் கி.மு 1500.இப்ராஹிம்(ஆபிரஹாம்) காலம் கூட சுமார்.கி.மு 2000.
http://prophetsofallah.tripod.com/prophets/id4.html
ஆபிட்ரஹாமின் பேரன் யாகூப்(யாக்கோபு கி.மு 1800) தான் யூத இனத்தின் தந்தை.இவருக்கு இஸ்ராயீல் என்றும் ஒரு பெயலுண்டு.
___________________
2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.
_____________
http://en.wikipedia.org/wiki/Saadanius
கிடைத்திருக்கும் படிமங்கள் 20 மில்லியன் (2 கோடி) ஆண்டுகளுக்கு முந்தியவை.இவை சதானியஸ் ஹிஜஜெனிஸ் என்று அழைக்கப்படுகிறது.யூதர் என்ற இனமே கி.மு 1800க்கு பிறகுதான் என்றால் 2கோடி ஆண்டுகளுக்கு முன் எப்படி யூதர்களை அல்லா குரங்காக மாற்றமுடியும்?.நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கும் வாய்ப்பு இல்லை.
எல்லா மதங்களிலும் இருக்கின்ற ஃபார்முலாவில் ஒன்றுதான் இந்த புனிதநீர். எங்கள் மதத்திலும் புனிதநீர் இருக்கின்றது எனற பெருமிதத்தைத் தவிர வேரொன்றும் இதில் இல்லை.
நண்பர் செங்கொடி
கிணறு போன்ற ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறீர்கள்,அதுதான் ஜம் ஜம் கிணறா அல்லது ஊற்றா?
கடவுளின் கண்டுபிடிப்பான ஜம் ஜம் நீரினால் கடந்த 2000 ஆண்டுகளாக என்ன முன்னேற்றம் அடைந்தது அரபு நாடு? மாறாக அந்நாட்டில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோல் மூலமாகத்தான் அரபு நாடே அடையாளம் காணமுடிந்தது.புனித நீரால் பயன் ஒன்றுமில்லை,புனிதம் என்கிற சொல்லைத்தவிர வேறு என்ன இருக்கிறது புனிதத்தில்?
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
=== புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ===
….
rafi பெட்ரோலும் இறை அருள்தான் அது படுத்தும்பாடுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று மேற்கத்திய நாடுகள் கண்டு பிடித்தவை, லிபியாவில் ஜனநாயகாதையா பார்க்கிறது அமெரிக்காவின் ஆந்தை கண்கள் அங்குள்ள பெற்றோலேயயே குறிவைக்கின்றன
////கும்மி, on மார்ச்4, 2011 at 3:52 மாலை said://
நான் இப்பதான் இந்தப் பதிவுக்கே வர்றேன். அதுக்குள்ளே என் பேருல கமெண்டு போட்டிருக்கானுங்க. மதத்தைப் பத்திதான் சிந்திக்கத் தெரியாதுன்னு நெனச்சேன். பேரும் கூட சிந்திச்சு வச்சிக்கத் தெரியாது போல//
ஏலே கும்மி உன் பேருக்கென்ன காப்பி ரைட்ஸ் எடுத்தா வெச்சிருக்கே.. அந்த கருமத்த எவன்வேணாலும் யூஸ் பண்ணலாம்…
//iniyavan, on மார்ச்5, 2011 at 8:23 AM said:
எல்லா மதங்களிலும் இருக்கின்ற ஃபார்முலாவில் ஒன்றுதான் இந்த புனிதநீர். எங்கள் மதத்திலும் புனிதநீர் இருக்கின்றது எனற பெருமிதத்தைத் தவிர வேரொன்றும் இதில் இல்லை//
இவனுங்க தொல்லை தாங்க முடியல்லடா அடுத்தவன் பொண்டாட்டியிலேயே குறியா இருக்கானுக் சொந்த பொண்டாட்டிய யூஸ் பண்ண தெரியாத கம்முணாட்டிகள்..
//rafi, on மார்ச்5, 2011 at 8:42 AM said:
கடவுளின் கண்டுபிடிப்பான ஜம் ஜம் நீரினால் கடந்த 2000 ஆண்டுகளாக என்ன முன்னேற்றம் அடைந்தது அரபு நாடு? மாறாக அந்நாட்டில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோல் மூலமாகத்தான் அரபு நாடே அடையாளம் காணமுடிந்தது.புனித நீரால் பயன் ஒன்றுமில்லை,புனிதம் என்கிற சொல்லைத்தவிர வேறு என்ன இருக்கிறது புனிதத்தில்//
இவ்வளவு பேச தெரியுதில்ல பஞ்சம் பொழக்க மட்டும் ஏண்டா அரபு நாடு போறீங்க.. உங்க செங்கொடியிடம் சொல்லி வேலை வாங்கவேண்டியதுதானே..
//iniyavan, on மார்ச்5, 2011 at 8:27 AM said:
நண்பர் செங்கொடி
கிணறு போன்ற ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறீர்கள்,அதுதான் ஜம் ஜம் கிணறா அல்லது ஊற்றா//
ஆமாம் வந்து குளித்துவிட்டுப்போடா.. பரதேசி
thanking you
hello nee oru madha veriyan enbathu nangu pulapadukirathu ,illai yenral unakku pathi mattumay terintha visayatthi ippadi half boil pola veliyida mattai nee oru ara vekkadu
intha comments ah veliida maruttal neee eni kadhi eluthathey thayavu senju
இபுறாஹிம்
//பெட்ரோலும் இறையருள்தான்//
இறையருள் என்பது தூதர்கள் மூலமாக வந்திருக்க வேண்டும் யூதர்கள் மூலமாக அல்ல.அப்படி அருளியிருந்திருந்தால் அந்நியர்களை அரபுநாடுகள் அடிமைப்படுத்தியிருக்குமே
கும்மி
//இவ்வளவு பேசத்தெரியுதில்ல பஞ்சம் பொழைக்க மட்டும் ஏண்டா அரபு நாடு போறீங்க//
நீங்க மட்டும் அரிப்பு வந்தா ஆண்டவன நம்பாம அந்நிய ஆஸ்பத்திரிக்கு போறீக,புனித யாத்திரைக்கு ஆண்டவனோட அரிய கண்டுபிடிப்பான மெலிந்த ஒட்டகத்தில் போகாம ஆகாய விமானத்தில் போறீக,அத்த உடு நைநா உன்ன காப்பாத்திக்க ஆற்றல் மிக்கவனை நம்பாம அடுத்தவன் கண்டுபிடித்த சொட்டு மருந்தை போட்டுகிட்டு கும்மியடிக்கலாமா? ஏன் ஜம் ஜம் சொட்டு நீரை இரண்டு சொட்டு விட்டுகிட்டு குடும்பத்தோட கும்மியடிக்கலாமே?
கும்மி
//ஆமாம் வந்து குளித்துவிட்டு போடா…பரதேசி//
குடிக்க மட்டும் தாண்டா அந்த தண்ணி,நீ குளிக்கவே சொல்றியே,அதிலும் பரதேசிகள் குளிச்சா அந்த தண்ணி கூவத்த விட மோசமாயிடும் பரவாயில்லியா?
//அடுத்தவன் பொண்டாட்டியிலேயே குறியா//
எதற்கு இவ்வளவு கோபமோ..உண்மையைச் சொன்னால்தான் கோபம் வரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
உண்மையான நாத்திகன் நீங்கதான் செங்கொடி.அதுக்கு சல்யூட் .மற்ற போலி நாத்திகன் போல ஒரு மதத்தை மட்டும் குறை சொல்லாமல் எல்லா மதத்திலும் உள்ள ஓட்டைகளை சுட்டி காட்டுவது பாராட்டத்தகுந்தது.இந்த தைரியத்த வினாவுக்கும் கொஞ்சம் கத்து குடுங்க.
rafi யூதர்களும் இப்ராகிமின் மதத்தவரே .மூசாவின் உம்மத்களே
rafi ///நீங்க மட்டும் அரிப்பு வந்தா ஆண்டவன நம்பாம அந்நிய ஆஸ்பத்திரிக்கு போறீக///
ரஷ்யவிர்க்கோ ரபி வீட்டிற்கோ செங்கொடி வீட்டிற்கோ வரவிலையே
பதிவில் என்ன சொல்ல வருகிறீர் என்றே புரியவில்லை.
எந்த ஆதாரமும் குறிப்பிடப்படவில்லை, சொந்த கற்பனையை வெளியூர் அனுப்பி விட்டு ஆதாரத்துடன் குருப்பிட்டால் நன்றாக இருக்கும்.
//எந்த ஆதாரமும் குறிப்பிடப்படவில்லை, சொந்த கற்பனையை வெளியூர் அனுப்பி விட்டு ஆதாரத்துடன் குருப்பிட்டால் நன்றாக இருக்கும்.//
இது தான் பதிவில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்கள் பதிலா!
விளங்கும்!
///கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல பாதைகளின் சந்திப்பாக இருந்த மக்கா எனும் நகரத்தைப்பற்றி பல நூல்களில் குறிப்புகள் இருந்தாலும் எதிலும் அந்த ஊற்றைப் பற்றிய குறிப்புகள் இல்லை.///
நீங்கள் எந்த நூல்களில் மக்கவைபற்றி பார்த்த குறிப்புகளுக்கும் அதில் கிணறு பற்றிய குறிப்புகள் இருக்கவேண்டும் அதில் இல்லைஎன்றால் கிணறு இல்லை என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று முடிவு எடுப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது?
இப்போதிருக்கும் கிணறு முகம்மதுவின் ஒஎரிய தந்தை தோண்டியது தான் என்பதற்கும் ஆதாரம் தரப் படவில்லையே ஏன்?
/////1971ல் எகிப்திய மருத்துவர் ஒருவர் இந்தக் கிணறு குறித்து ஐயம் எழுப்பியதாகவும் அதைத் தீர்ப்பதற்கு மன்னர் பைசல் நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் இது குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், அவர்களால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ஹுசைன் என்பவர் அந்தக் கிணற்றின் ஆழம் தோராயமாக ஐந்து அடி இருந்ததாக குறிப்பிடுகிறார்////
இது நம்பும்படியாக உள்ளதா? ஒரு குச்சியைவைத்து அளவை சரியாக முடியாதா?தோரயமாக ஐந்து அடி ஆழம் என்று சொல்லுவதற்கு ஒரு மந்திரியை மூலம் தான் விசாரிக்க முடியுமா?
/////இந்த கிணற்றிலிருந்து எவ்வளவு நீரை இறைத்தெடுத்தாலும் இதன் நீர்மட்டம் குறைவதில்லை என்றும் ஒரு கருத்து உலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சௌதி அரசு ஏன் அந்த கிணற்றை யாரும் அணுக முடியாதபடி பாதுகாத்து வைத்திருக்கிறது என்பதில் இருக்கிறது////
சவூதி அரசு பாதுகாப்பது இருக்கட்டும் அறிவியல் பூதங்கள் ,ஒரு பழமையான் நிரூற்றிளிருந்து இத்தனை அளவுக்குமேல் நீரைப் பெற முடியாது .நேர் வற்றிவிடும் என்பதை நிருபித்து பூரிப்படையவேண்டியதுதானே .
///முகம்மதுவின் பெரியப்பா தோண்டிய கிணற்றுக்கும் அதனைச்சுற்றிய கதைக்கும் குரான் ஏன் முக்கியத்துவம் தந்திருக்கிறது என்பது மட்டும் முஸ்லீம்களின் சிந்தனைக்கு////
குர்ஆன் கூறும் பல அற்புதங்கள் முகம்மதுநபி[ஸல்] நிகழ்ந்ததை நேரில்பார்த்த மக்களுக்கு உண்மை புரிந்திருக்கும் அவற்றில் அறிவியல் பூர்வமாக அப்போது நிருபணங்கள் கிடைத்திருக்காது.நேரில் பார்க்காதவர்களும் அறிவியல் நிரூபணங்களும் இல்லாத காலத்திலும் நம்பிய மக்கள் இஸ்லாத்தை பின்பற்றியே வந்தனர் சில அறிவியல்பூர்வமாக நிருபணம் ஆகும்போது பெருமை பட்டுக்கொள்வோம் மற்றவை காலாவ்ப்போக்கில் நிருபணம் ஆகும் என்று நம்புகிறோம் இஸ்லாத்தின் படி வாழ்ந்து கொள்வதையே இப்போது சிந்திக்கிறோம் ஆகவே செங்கொடியே தங்களது சிந்தனை மார்க்ஸ் ஏட்டு சுரைக்காயை எப்படி நடைமுறைப்படுத்துவது எப்படி உலகம் முழுவதும் ஆணாதிக்கத்தை ஒழித்து தனியுடைமையை நீக்குவது என்பதிலேயே இருக்கட்டும் .அதற்காக செயல் பட துவங்குங்கள் ,இப்படி இணைய தளத்தில் இருந்தால் பில்லியன் ஆண்டு கனவு நனவாக ட்ரில்லியன் ஆண்டுகள் ஆகக்கூடும் .இஸ்லாத்தை சிதைத்துவிடலாம் என்று நீவிர் சிந்திக்க சொன்னால் இஸ்லாம்யர்கள் தங்களை சர்க்கஸ் கோமாளியாகவே பார்ப்பார்கள்.உங்கள் மார்க்ஸ் கனவு ஆக்டிலியன் ஆண்டு கனவாகிவிடும் .
பிழைகள்
ஒஎரிய தந்தை _-பெரிய தந்தை
நேர் வற்றிவிடும் _நீர் வற்றிவிடும்
சங்கர் ////ஜம்ஜம் நீர் எப்படி வந்தது என்ற கதை புஹாரியில் குறிப்பிடப் பட்டுள்ளது.குரானில் ஜம் ஜம் பற்றி குறிப்புகள் இல்லையென்றே தெரிகிறது////
ஹதித் கதை அல்ல வரலாற்று குறிப்புகள் என்று நிருபிக்கப்பட்டுள்ளது மீண்டும் கதைப்பது சரியன்று
/ஹதித் கதை அல்ல வரலாற்று குறிப்புகள் என்று நிருபிக்கப்பட்டுள்ளது /
1.யாரால் எங்கே எப்போது?ஏதாவது இணப்பு தரவும்.
2.ஆபிரஹாம்(இப்ராஹிம்)என்பவர் இருந்தாரா,அவர் மெக்காவிற்கு வந்தாரா,அவருடைய காலம் என்பதெல்லாம் ஹதிது பைபிள் தவிர வேறு எங்கும் குறிப்பிட பட்வில்லை.அப்படி ஏதாவது இருந்தால் தெரிவிக்கலாம்.
3.சுருக்கமாக சொன்னால்,ஆபிரஹாமின் கதை ஒரு மரபுபுராணக் கதையே
1./அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அஙகு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அஙக இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ண்ர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அஙகேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். /
ஷாம் நாடு என்றால் சிரியா நாடாகும்.சிரியாவில் இருந்து மெக்கா வரை[1300கி.மீ] சாதரணமாக வந்து செல்கிறார் இப்ராஹிம்..யாரும் இல்லாத இடத்தில் மனவியையும் பச்சை குழந்தையுடன் விட்டு செல்கிறார்.
2.\இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எஙகளை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். \
மெக்கா பள்ளதாக்கில் இருக்கிறதா?
3./எஙகள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன்/
விட்டு விட்டு போனது மனைவி ,சிறு குழந்தை மட்டுமே.குடி அமர்த்துவது என்றால் இவரிடமே கற்று கொள்ள வேண்டும்.இங்கும் பள்ளத்தாக்கு என்றே கூறப்படுகிறது.
4./.ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர்…. அல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார்… அவர்களைக் கடந்து சென்றார்கள்./
யார் இவர்கள்?
5.//குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர்.//
இஸ்மாயீல் வாலிபனாகும் வரை இப்ராஹிமை பார்க்கவில்லை.
இப்ராஹிம்,இஸ்மாயிலின் தாய்மொழி அரபி அல்ல.இஸ்மாயிலின் வம்சமான முகமது அரபி அல்ல.
அரபி மொழி தோன்றியதே கி.மு 1000க்கு பிறகுதான்.இப்ராஹிமின் காலமோ கி.மு 2000 என்றும்[பைபிளின் படி] கூறப்படுகிறது.
கி.பி 400க்கு முன் மெக்கா,காப,ஜஜம் பற்ற் எந்த ஒரு வரலாற்று குறிப்பு கிடையாது.அரேபியாவை சுற்றிபார்த்த கிரெக்க அறிஞர் ஹிரோடோடுஸ் எழுதிய புத்தகத்தில் மெக்கா கூறபடவில்லை [Batlimos Bin Lagos and Aristopolos] அலெக்சான்டரின் வாழ்க்கை வ்ழ்லாறை எழுதியவர்கள் கூட.மெக்கா பற்றி எதுவுமே கூறரவில்லை.
.ஆகவே இந்த கதைகள் எல்லாமே கி.பி 400 க்கு பின் வந்திருக்க வேண்டும்.
http://brotherpete.com/index.php?topic=1138.0
http://www.britannica.com/EBchecked/topic/263507/Herodotus
சங்கர் ////கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல பாதைகளின் சந்திப்பாக இருந்த மக்கா எனும் நகரத்தைப்பற்றி பல நூல்களில் குறிப்புகள் இருந்தாலும் எதிலும் அந்த ஊற்றைப் பற்றிய குறிப்புகள் இல்லை.///
////அரேபியாவை சுற்றிபார்த்த கிரெக்க அறிஞர் ஹிரோடோடுஸ் எழுதிய புத்தகத்தில் மெக்கா கூறபடவில்லை [Batlimos Bin Lagos and Aristopolos] அலெக்சான்டரின் வாழ்க்கை வ்ழ்லாறை எழுதியவர்கள் கூட.மெக்கா பற்றி எதுவுமே கூறரவில்லை./////
சங்கர் உங்களது செங்கொடி மக்கா பல பாதைகள் சந்திக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது என்கிறார்.ஆனால் அரேபியாவை சுற்றி பார்த்த அறிஞர் ஹிரோடோடுஸ் புத்தகத்தில் மக்காவைப் பற்றி குறிப்பிடவில்லை அவ்வாறு எனின் கிரேக்கர் அரேபியாவை சுற்றி பார்த்ததாக கூறுவது கதையாக இருக்கக் கூடும். அவர் சுற்றி பார்த்தர்க்க்கான ஆதாரத்தை கூறுங்கள் .அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் எதையெல்லாம் எழுதவில்லையோ அதுவெல்லாம் உலகத்தில் கிடையாது என்பதற்கு தங்கள் கைவசம் ஆதாரம் உள்ளதா?
/அதுவெல்லாம் உலகத்தில் கிடையாது என்பதற்கு தங்கள் கைவசம் ஆதாரம் உள்ளதா?/
1.மக்கா[இந்த பெயரிலேயே] அரபிக் குரானில் எத்தனை தடவை குறிபிட பட்டு உள்ள்து?
2.கி.பி 400க்கு முன் மக்காவைப் பற்றி கூறும் ஒரு வரலாற்று பூர்வமான ஆதாரம் கூறுங்கள்
முகமதுவினால் இடிக்கப் பட்ட இன்னொரு காபா
______________________________________________
4355. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) கூறினார்.
அறியாமைக் காலத்தில் ‘துல் கலஸா”என்றழைக்கப்பட்டு வந்த (இணைவைப்போரின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது ‘யமன் நாட்டு கஅபா’ என்றும் ‘ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா’ என்றும் அழைக்கப்பட்டு வந்தது. எனவே, என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘என்னை துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். உடனே நான் நூற்றைம்பது (குதிரை) சவாரி செய்யும் வீரர்களுடன் புறப்பட்டு விரைந்து சென்றேன். அதை அங்கு நாங்கள் கண்டவர்களைக் கொன்று விட்டோம். பிறகு நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு (விபரம்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கு பெற்ற) ‘அஹ்மஸ்’ குலத்தாருக்காகவும் (நலம் நாடிப்) பிரார்த்தனை புரிந்தார்கள்.
Volume :4 Book :64
4355. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) கூறினார்.
அறியாமைக் காலத்தில் ‘துல் கலஸா”என்றழைக்கப்பட்டு வந்த (இணைவைப்போரின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது ‘யமன் நாட்டு கஅபா’ என்றும் ‘ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா’ என்றும் அழைக்கப்பட்டு வந்தது. எனவே, என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘என்னை துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். உடனே நான் நூற்றைம்பது (குதிரை) சவாரி செய்யும் வீரர்களுடன் புறப்பட்டு விரைந்து சென்றேன். அதை அங்கு நாங்கள் கண்டவர்களைக் கொன்று விட்டோம். பிறகு நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு (விபரம்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கு பெற்ற) ‘அஹ்மஸ்’ குலத்தாருக்காகவும் (நலம் நாடிப்) பிரார்த்தனை புரிந்தார்கள்.
Volume :4 Book :64z
2.///கி.பி 400க்கு முன் மக்காவைப் பற்றி கூறும் ஒரு வரலாற்று பூர்வமான ஆதாரம் கூறுங்கள்///
கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்க
Arab Tribes
Rulership and Princeship among the Arab
s
sankar
2.///கி.பி 400க்கு முன் மக்காவைப் பற்றி கூறும் ஒரு வரலாற்று பூர்வமான ஆதாரம் கூறுங்கள்///
இணைய தளத்தில் கீழ் காணும் நூலின் குறிப்பிட்ட தலைப்புகளை காண்க
என்ற நூலில்
Arab Tribes
Rulership and Princeship among the Arabs
sankar நூலின் பெயர் Ar Raheeq Al Maktoom
சங்கர் அலெக்சாண்டர் ,கிரெக்க அறிஞர் ஹிரோடோடுஸ் உங்களிடம் ஆதாரம் கேட்டால் முகம்மதுவினால் இடிக்கப்பட்ட இன்னொரு கஹ்பா பற்றி பேசுவது ஏனோ?
ஸம் ஸம் நீரைத்தான் எல்லாரும் பயன்படுத்துராங்க, இது அல்லாவின் அற்புதம்,எய்ட்ஸ், சர்க்கரை நோஅல்லாவிடம் துவா செய்தா எல்லாம் சரியா பொகும்ய்,எல்லாவட்ரிர்கும் மருந்து வுண்டு. http://naannaathigan.blogspot.com/-
.இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100 – ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது67- முதல் 74- வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950– ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50- ஆக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் 1940– ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100– க்கு 9– பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100– க்கு 50– பேராக ஆனதுதான். அதோடு கூடவே, “கடவுளும்,” “கடவுள் செயலும்” வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.
கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும். சுதந்திரம் அதிகமாகும்.
//இது தான் பதிவில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்கள் பதிலா!//
It is his opinion, there is no evidence for this.
Anybody can say any opinion, i can even say senkodi is a corrupted person without evidence, but the true might be the different.
So what is the use of this post, just filling up the space??
I am advicing you do not go blindly behind someone without any evidences.
Hope senkodi will repost this with the evidence if he has(??!!)………….
/சங்கர் அலெக்சாண்டர் ,கிரெக்க அறிஞர் ஹிரோடோடுஸ் உங்களிடம் ஆதாரம் கேட்டால்/
http://religionresearchinstitute.org/mecca/classical.htm
http://www.britannica.com/EBchecked/topic/263507/Herodotus
http://religionresearchinstitute.org/mecca/construction.htm
Click to access Islam_In_Light_of_History..pdf
ஸம் ஸம் தன்ணி எல்லா நோயிக்கும் மருந்தா? அரிவியல் விளக்கம் வுன்டா?
http://classics.mit.edu/Herodotus/history.html
/I am advicing you do not go blindly behind someone without any evidence/
நாங்களும் இதைத்தான் சொல்கொறோம்.
ஆதாரம்ற்ற கதைகளை கூறும் குரான் மற்றும் ஹதிகளை விட்டு விடுங்கள்.
சரி இந்த காபா, ஜம்ஜம் பற்றி இஸ்லாமியர்கள் கூறுவது என்ன?
http://www.ezsoftech.com/hajj/hajj_article1.asp
1.உலகம் படைக்கப் படுவதற்கு முன்பே சொர்க்கத்தில் இருந்தது.
2.உலகின் முதல் மனிதர் ஆதம் காபாவை இப்போது உள்ள இடத்தில் அமைதார்.
3.நூஹ் ஜல பிரளயத்தின் போது அழிந்து விட்டது.
4.இப்ராஹிம்,இஸ்மாயில் அதே இடத்தில் காபாவ்சி கட்டினார்கள்.
5.இப்ராஹிம் காலத்தில்[கி.மு 2000] இருந்தே மெக்கா,காபா அரேபியா சுற்றியுள்ள பகுதிகளில் புக்ழ் பெற்று விளங்கியது.
.
6.இப்ராஹிமிற்கு பின் அவரின் ஓரிறை கொள்கையை பல அரபியர்கள் பின்பற்றினர்.
7.முகமது இஸ்மாயிலின் வம்சா வழியினர்.
———————-
மேலே சொன்ன விஷயங்கள் குரான்,ஹதிது,பைபிள் மட்டுமே ஆதாரமாக கொண்டவை.
இந்த மூன்றும் சொல்வதை வரலாறு,அகழ்வாராய்சி மூலம் நிரூபிக்க முடியுமா என்பதே கேள்வி.
[இன்னும் பேசுவோம்]
நம் தேடலில் கிடைத்தவை.
1.பல காபாகள் அரேபியா,யேமன் பகுதிகளில் இருந்துள்ள்ன.முகமது யேமன் நாட்டு காபாவை இடித்த்ச்தில் இருந்து மற்ற காபாக்களை அழித்து விட்டார்கள் என்ற முடிவுக்கு எளிதில் வரலாம்.
2.இஸ்லாமிய வரலாறு இபின் இஷாக்,இபின் அப்பாஸ் ,இபிப் கதிர் போன்றவ்ர்களால் கி.பி 7ஆம் நூற்றாண்டுகளில் குரானுகு தகுந்தாற்போல் எழுத்ச் பட்டது.
3.ஆஆதம்,நூஹ் பிரஹாம் வரலாற்றில் இல்லை.
4.காபா கி.400 ல் ஒரு யேமன் அரசரால்[யுப்பா ஆசாத் அபு கார்ப்] என்பவரால் கட்டப்பட்டது
http://tropicandstorm.blogspot.com/2010/03/kaaba-different-perspectives.html
/1.பல காபாகள் அரேபியா,யேமன் பகுதிகளில் இருந்துள்ள்ன./
3499. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருமையும் கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.
அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:
‘யமன்’ நாடு கஅபாவுக்கு வலப் பக்கம் அமைந்திருப்பதால் தான் அதற்கு ‘யமன்’ என்று பெயரிடப்பட்டது. ‘ஷாம்’ நாடு கஅபாவின் இடப்பக்கம் அமைந்துள்ளது. ‘மஷ்அமா’ என்பதற்கு ‘மய்ஸ்ரா’ இடது என்று பொருள். இடக்கரத்திற்கு ‘ஷுஃமா’ என்பர். இடப் பக்கத்திற்கு ‘அல் அஷ்அம்’ என்பர்.
Volume :4 Book :61
//இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை முடித்துச் செல்பவர்கள் தங்கள் கடவச் சீட்டைவிட பத்திரமாக எடுத்துச் செல்லும் ஒரு பொருள் உண்டென்றால் அது ஸ்ம்ஸம் நீராகத்தான் இருக்கும்//
ஹஜ்ஜை முடித்துச் செல்லும் அனைவரும் எடுத்துச் செல்வதில்லை. இஸ்லாம கட்டளையிடவில்லை. மக்கள் செய்வதேல்லாமே இஸ்லாம ஆகாது. அந்த மாதிரி எடுத்தால் நாமும் கம்யுனிஸ்ட்கள் செய்யும் அயோக்யதனங்களை பட்டியல் போட முடியும்..
இதை விமர்சன்ம் செய்யும் நீங்கள் கொடிய வணங்குவது அரிவார்ந்த செயலா ? உயிரற்ற பொருளை வணங்குவது முட்டாள்தனம் என்று உங்கள் மூளைக்கு உரைக்கவில்லை. மதவாதிகளிடம் உள்ள சிந்தணை சக்தி கூட உங்கள் கூட்டங்களுக்கு கிடையாது.
வரிக்கு வரி பதில் வரும் டைவேர்ட் ஆக வேண்டாம்.
//ஊற்று முகம்மதுவின் காலத்திற்கு சற்றுமுன் முகம்மதின் பெரிய தந்தையான அப்துல் முத்தலிப் என்பவர் குறைஷிகளின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக தோண்டிய கிணறு. //
அப்துல் முத்தலிப் என்பவர் முகம்மதின் பெரிய தந்தையல்ல. முகம்மதின் தந்தையின் தந்தை (பாட்டனார்). இந்த சாதரண விஷயம் கூட தெரியவில்லை. இப்ப்டி பட்ட ஆய்வுகள்க்கு பதில் சோல்ல வேண்டுமா என தோன்றுகிற்து.
//மக்கா எனும் நகரத்தைப்பற்றி பல நூல்களில் குறிப்புகள் இருந்தாலும் எதிலும் அந்த ஊற்றைப் பற்றிய குறிப்புகள் இல்லை//
அரேபிய வரலாற்று குறிப்புகள் புத்தகங்கள் பல அரபியில் உள்ள்ன. பார்த்து
தெரிந்து கொள்ளவும் அரைகுரை ஆய்வு வேண்டாம்.
//1971ல் எகிப்திய மருத்துவர் ஒருவர் இந்தக் கிணறு குறித்து ஐயம் எழுப்பியதாகவும் அதைத் தீர்ப்பதற்கு மன்னர் பைசல் நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் இது குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், அவர்களால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ஹுசைன் என்பவர் அந்தக் கிணற்றின் ஆழம் தோராயமாக ஐந்து அடி இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர் என்று சௌதி அரசின் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அந்த நீரின் புனிதம் குறித்து கதைகள் கட்டி பரப்பப்படுகிறது. அதுவே மதத்துடன் தொடர்புடையது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிவிடுகிறது.
இந்த நீரில் இருக்கும் தனிமங்களின் செரிவு குறித்தும், இது புனித நீராக இருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறது என்பதாகவும் பிரதாபிக்கின்றனர். ஆனால் இதை விட பழமையான ஊற்றுகளெல்லாம் இதுபோல தனிமங்களின் செரிவுற்றதாக இருந்திருக்கிறது. சீனாவில் லிசான் மலையில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெப்ப நீரூற்று மருத்துவ தன்மை கொண்டதாக பயன்பாட்டில் இருக்கிறது.//
இவை அனைத்தும் ஆதாரப்பூர்வமான செய்திகள் என்பதற்கு என்ன சான்று. சவுதி அரசு இந்த தகவலை தந்ததா.
ஹதீஸ்கள் கதையல்ல. வரலாறு என்று எழுதி வைத்துள் ளார்களே அதில் பொய் சேர்வதற்கு வாய்ப்புள் ளது. ஹதீஸ்கள் அறிவித்தவர்களின் சுயவரலாறு – பண்புகள் உள் ளது. ஹதீஸ்களுக்கு வரையறை உள் ளது. வரலாறு எழுதியவர் உண்மையானவரா ? வரலாறு உண்டா ? .
வரிக்கு வரி பதில் வரும் டைவேர்ட் ஆக வேண்டாம்.
நாத்திக நண்பர்க்ளே ஓட்ட பந்தயதில் முதல் ரவுண்ட் முடிவதற்குள் ஜெயித்து விட்டதாக குதூகலிக்கும் முட்டாள்கள் போல் கருத்து தெரிவிக்காதீர்.மதரீதியான விவாதம் என்றால் முதலில் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க வேண்டும். அதன் பிறகு தான் குரானில உள் ள நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பேச வேண்டும் . சமூகம் சார்ந்த விஷயம் என்றால் மக்களுக்கு நன்மை தர கூடிய சித்தந்தம் இஸ்லாமா ? கம்யுனிசமா ? பேசலாம்.. மற்ற மதங்கள் கொள்கைகள் (கம்யுனிஸ்ம் உட்பட)போல் தான் இஸ்லாம் என்று கூறமுடியாது. ஏனென்றால் நாம் மேடை போட்டு சவால் விடுகிறோம் விவாதிக்க தயாரா? வேறு யார் சவால் விட்டாலும் தயாராக இருக்கிறோம். அதற்கு உதாரணங்கள் பி.ஜே.,ஜாகிர்நாயக்., அஹ்மத்திதாத்., ஹபீப்முஹமத்., மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பேர் . அதனால் சிந்தியுங்கள்.
எழுத்து விவாதத்துக்கு எல்லோருக்கும் கால அவகாசம் இருக்காது. நீண்டு கொண்டே போகும். நேரடி விவாதம் அனைத்து பாமர மக்கள்க்கும் உபயோகமாக இருக்கும். பி.ஜே.அழைக்கிராரா ? சென்று சத்தியத்தை நிலைநாட்டுங்கள். சல்சாப்பு வேண்டாம்…
/அரேபிய வரலாற்று குறிப்புகள் புத்தகங்கள் பல அரபியில் உள்ள்ன. பார்த்து
தெரிந்து கொள்ளவும் அரைகுரை ஆய்வு வேண்டாம்./
புத்தகத்தின் பெயரும்,ஆசிரியரும் விவரம் அளிக்கவும்.
/இவை அனைத்தும் ஆதாரப்பூர்வமான செய்திகள் என்பதற்கு என்ன சான்று. சவுதி அரசு இந்த தகவலை தந்ததா./
http://en.wikipedia.org/wiki/Zamzam_Well
/ஹதீஸ்கள் கதையல்ல. வரலாறு என்று எழுதி வைத்துள் ளார்களே அதில் பொய் சேர்வதற்கு வாய்ப்புள் ளது. ஹதீஸ்கள் அறிவித்தவர்களின் சுயவரலாறு – பண்புகள் உள் ளது. /
ஆயிரக் கணக்கில் ஹதிது சொன்ன அண்ணன் அபு ஹுரைரா பற்றி கூறுங்கள்.
/வரலாறு எழுதியவர் உண்மையானவரா ? வரலாறு உண்டா ? /
எந்த வரலாற்று ஆசிரியரின் வரலாறு வேண்டும்?
இஸ்மவேலின் தாயார் ஹாஜர் எகிப்திய அடிமை பெண்ணா?
2635. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் மனைவி) ஸாரா அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். எகிப்து நாட்டு மன்னரின் ஆட்கள், ஸாராவுக்கு ஹாஜரை (பணிப் பெண்ணாகக்) கொடுத்தார்கள். ஸாரா திரும்பி வந்து, ‘அல்லாஹ், நிராகரிப்பாளனை இழிவுபடுத்தி (எனக்கு) ஓர் அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகத் தந்ததை நீங்கள் அறிவீர்களா?’ என்று இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
“எகிப்து நாட்டு மன்னன், ஸாராவுக்கு ஹாஜரைப் பணிப் பெண்ணாக அன்பளிப்புச் செய்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
//ஆயிரக் கணக்கில் ஹதிது சொன்ன அண்ணன் அபு ஹுரைரா பற்றி கூறுங்கள்.//
இது கிணற்று தவளை கதை தான் . விக்கிபீடியா எனும் கிணற்றில் வாழ்பவர்க்ள். இறுதியில் இப்படிதான் கேட்பார்கள். தஹ்தீபு தஹ்தீப் என்ற நூலில்.70000க்கும் அதிகமான அறிவிப்பாள்ர்களின் தகவல்கள் உள்ளன. முதலில் ஒரு மார்க்க அறிஞரை சந்தித்து சந்தேகங்களை தீர்த்து கொண்டு ஆய்வு செய்யவும்.
விக்கிபீடியாவின் நிலை.
about wikipedia
Wikipedia is written collaboratively by largely anonymous Internet volunteers who write without pay. Anyone with Internet access can write and make changes to Wikipedia articles
articles may contain misinformation, unencyclopedic content, or vandalism
//எந்த வரலாற்று ஆசிரியரின் வரலாறு வேண்டும்?//
வரலாற்று ஆசிரியர் கிப்பனின். வரலாறு வேண்டும்.
1 /அரேபிய வரலாற்று குறிப்புகள் புத்தகங்கள் பல அரபியில் உள்ள்ன. பார்த்து
தெரிந்து கொள்ளவும் அரைகுரை ஆய்வு வேண்டாம்./
முழு ஆய்வு செய்வது எப்படி என்று கற்று கொடுங்கள்.
2./வரலாற்று ஆசிரியர் கிப்பனின். வரலாறு வேண்டும்./
திரு எட்வர்ட் கிப்பன் அரபியில் எழுதவில்லை.பரவாயில்லை.இவ்ர் என்ன சொல்கிறார்?
நண்பரே நீங்கள் கேட்ட புத்தகம். இதில் இருந்து என்ன கூற வேண்டுமோ கூறுங்கள். கேட்க ஆவலாக உள்ளோம்.
http://en.wikipedia.org/wiki/Edward_Gibbon
http://en.wikipedia.org/wiki/The_History_of_the_Decline_and_Fall_of_the_Roman_Empire#Further_reading
Click to access EDWARD_GIBBON-THE_HISTORY_OF_THE_DECLINE_AND_FALL_OF_THE_ROMAN_EMPIRE.pdf
/முதலில் ஒரு மார்க்க அறிஞரை சந்தித்து சந்தேகங்களை தீர்த்து கொண்டு ஆய்வு செய்யவும்./
நீங்கள் மார்க்க அறிஞர் இல்லையா?
=========
ஒரு சின்ன கேள்வி
குரானில் இருந்து[மட்டுமே] காபா, மெககாவில் உள்ள்து என்பதை தெளிவாக குழப்பமில்லாமல் கூற முடியுமா?
இதுக்கும் மார்க்க அறிஞர் வேணுமா?
//இறைத்தூதர்களில் இப்ராஹீமும் ஒருவர். தன்னுடைய மகனை பலியிட முயன்றது, //
Genesis 22
King James Version
And they came to the place which God had told him of; and Abraham built an altar there, and laid the wood in order, and bound Isaac his son, and laid him on the altar upon the wood. 10And Abraham stretched forth his hand, and took the knife to slay his son. 11And the angel of the LORD called unto him out of heaven, and said, Abraham, Abraham: and he said, Here am I. 12And he said, Lay not thine hand upon the lad, neither do thou any thing unto him: for now I know that thou fearest God, seeing thou hast not withheld thy son, thine only son from me. 13And Abraham lifted up his eyes, and looked, and behold behind him a ram caught in a thicket by his horns: and Abraham went and took the ram, and offered him up for a burnt offering in the stead of his son. 14And Abraham called the name of that place Jehovahjireh: as it is said to this day, In the mount of the LORD it shall be seen.
Abrogated
————–
37:100-110
சமூகஆர்வலர் அப்ரஹாம் மக்கள் பணி செய்யும் மகவை வேண்டினார்.அதற்கான சமிஞ்கை பெற்றார். மகன் அதற்கான பருவம் வந்ததும் அவரும் சேர்ந்து சமூகநலப்பணிகளில்(sacrifice) ஈடுபட்டதும் அவர் ஆசை நிறைவேறியதும் மதவாதிகளால் (Animal sacrifice)அற்புதமாக திரிக்கபட்டது.
உயிர்பலி/நரபலியை குர் ஆன் தடை செய்கிறது.
22:37.
Neither their meat nor their blood reaches God, but what reaches Him is the righteousness from you. It
quranist@aol.com
இந்த இடுகைக்கான மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பார்க்க:http://ihsasonline.blogspot.com/2011/05/blog-post_09.html
SANKAR, on மார்ச்15, 2011 at 2:00 AM said:
ஒரு சின்ன கேள்வி
குரானில் இருந்து மட்டுமே காபா, மெக்கா எங்கே உள்ள்து என்பதை தெளிவாக குழப்பமில்லாமல் கூற முடியுமா?
——————————————————————————————————————–
Kaaba :05:06,05:95,05:97,78:33
Mecca: 48:24
Becca: 03:96
quranist@aol.com
SANKAR, on மார்ச்15, 2011 at 2:00 AM said:
ஒரு சின்ன கேள்வி
காபா, மெக்கா குரானில் எங்கே உள்ள்து என்பதை தெளிவாக குழப்பமில்லாமல் கூற முடியுமா?
——————————————————————————————————————
Kaaba :
05:06 =the ankles/
05:95 =heel/foot/talus/cube/Quadrangle
05:97 =heel/foot/talus/cube/Quadrangle
78:33 =splendid companions/ripe
Makka: 48:24=enabled
Bakka: 03:96=yourself
quranist@aol.com
aasirayar avarkalku ….
thaankal thankalin inayathalathil islaam sabanthamaha sila karuthukalai veliyidukireekal ithai nirubibbavarkalaha irunthal ithu sanbathamaha tntj vinarudan (thairiyam irunthal ) vivathikka thayaaraa?
ஜம்ஜம் நீர்=ஹைட்ரஜன் டை ஆக்ஸைடு=சாதாரண நீர்
இவற்றில் புனிதம் என்ற எந்த மன்னாங்கட்டியுமில்லை
Ivan oru poyyan .ithil yethayum padikkadhirgal intha web anaithum poiii hadisai kuda mathi potturukan kevalam vunmayana hadish iduthan ., எண் 5255
அபூ உசைத் மாலிக் இப்னுண் 5255அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒருதோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ iyhai ivan thirumana oppantham seyyapattavisayathye cut seythu vittta yentha mada sahodararhalum yemaratheergal