மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

பரிணாமமா? படைப்பா? இதை அறிவியலுக்கு எதிரான மனநிலையில் இருந்துகொண்டு; அவ்வாறு இருப்பதையே சரியானதென்று மதப் பிடிப்போடு இருப்பவர்கள் தங்களின் புரிதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தொடர்வது என முடிவு செய்திருந்தேன். ஆனால் கடந்த கட்டுரையின் எதிர்வினைகளில் காத்திரமான கேள்விகள் எதுவும் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனாலும் தொடர்கிறேன்.

குரங்கிலிருந்து பரிணமித்தவன் மனிதன் என்றால் குரங்கு தான் மனிதனுக்கு நெருக்கமான விலங்காக இருக்க வேண்டும். ஆனால் பன்றி தானே மனிதனுக்கு நெருக்கமான விலங்காக கூறுகிறார்கள்.

ஒரு மூன்றாம் தர அரசியல் வியாபாரி தன்னுடைய நிலை தவறானது என தெரிந்த பின்னரும் வீம்புக்காகவும் வறட்டுத்தனமாகவும் வாதம் செய்வதைப் போன்றது இது. மற்றெந்த விலங்குகளையும் விட மனிதனுக்கு நெருக்கமாக இருப்பது சிம்பன்சிகள் தான். 97 விழுக்காடு மரபணு ஒற்றுமைகளைக் கொண்டதாக மனிதனும் சிம்பன்சியும் இருக்கின்றன. எளிமையாகச் சொன்னால் சற்றே மனநலம் பிறழ்ந்த ஒரு மனிதனைக்காட்டிலும் சிம்பன்சிகள் புத்திக் கூர்மை உடையவை. உருவத்தில், உள்ளுறுப்புகளில், செயலில், உள்வாங்கும் திறனில், சமூக குடும்ப அமைப்புகளில் மனிதனுக்கு சிம்பன்சியைப் போல நெருக்கமான விலங்கு வேறொன்று இல்லை. இவை அனைத்தும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதனின் இதய வால்வுகள் மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பன்றி இதயத்தின் வால்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. 99 விழுக்காடு ஒற்றுமை எங்கே? ஒரு விசயத்தில் இருக்கும் ஒற்றுமை எங்கே? இந்த ஒன்றைக் கொண்டு மனிதக்கு பன்றியே நெருக்கம் என்று கூறுவார்களாயின், அவர்கள் அறிவியல் பார்வை ஏதுமற்ற வறட்டுவாதிகள் என்பதைத்தவிர வேறு பொருளொன்றுமில்லை.

குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம உயிரிகள் இருக்கின்றனவா?

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் பூமியில் வாழ்ந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரமான தொல்லுயிர் எச்சங்கள் பலவுண்டு. ஆண்ட்ரோபிதஸின், ஹோமோ எரக்டஸ், ஹோமோ செபியன்ஸ், ஹோமோ செபியன் செபியன்ஸ், நியாண்டர்தாலிஸ்ட், க்ரோமாக்னன் இதுதான் மனிதர்கள் பரிணமித்து வந்த பாதை. இதில் க்ரோமாக்னன் என்பது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனம், அதாவது நாம். இன்றைக்கு 30000 ஆண்டுகளுக்கு முன்புவரை நியாண்டர்தால்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லா மனித இனங்களின் எலும்புகளும் தொல்லுயிர் எச்சங்களாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தனிமம் ஒருசெல் பலசெல் என‌ படிப்படியாக நடந்தேறியதா? அல்லது

தனிமம் உயிரினம் அப்படியே வார்த்தெடுக்கப்பட்டதா? உயிரி பல்கிப் பெருகும்போது தனிமங்களின் இனப்பெருக்கம் சாத்தியமா?

பரிணாமம் என்பது ஒருவகை உயிர் இன்னொரு வகை உயிராக மாறிச் செல்வது குறித்து விளக்குவதாகும். முதல் உயிர் எப்படி தோன்றியது என்பது குறித்து பரிணாமம் விளக்குவதில்லை. ஆனால் சூழலின் தாக்கத்தால் தான் செல்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த செல்களே எளிய உயிர்களாகவும், அதுவே சிக்காலான கட்டமைப்பு கொண்ட உயிர்களாகவும் மாறின. நேரடியாக தனிமத்திலிருந்து உயிரினங்கள் வந்துவிடவில்லை. தனிமங்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை. உயிர்களுக்கும் தனிமங்களுக்கும் உள்ள வித்தியாசமே அது தான். ஆனால் இனப்பெருக்கம் எனும் பண்பு உயிரிங்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இனப்பெருக்கம் வேறு வடிவங்களில் தனிமங்களில் இருக்கிறது. ஒரு பண்புடைய தனிமங்கள் புற வினைப்பாடுகளுக்கு உள்ளாகி தங்கள் பண்புகளை மாற்றிக் கொள்கின்றன. தனியாக இருக்கும்போது ஆக்ஸிஜனுக்கு இருக்கும் பண்பு நீரில் இல்லை அதுவே ஓஸோனில் அதனிலும் வேறுபடுகிறது. இந்த புதிய பண்புகளை அத்தனிமங்கள் எங்கிருந்து பெற்றன? குளோரின், சோடியம் இரண்டின் பண்புகளும் இல்லாமல் புதிதாக இருக்கிறது உப்பு. இது ஒருவகையில் எளிமையான இனப்பெருக்கம் போன்றது தான். இது உயிர்களிடம் நீடித்து இருந்தாக வேண்டிய தேவையுடன் இணைந்து மேம்பட்டதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் ஆகியிருக்கிறது.

குரங்குதான் மனிதனாக மாறியது என்றால் இப்போது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறுவதில்லை?

ஏற்கனவே இதற்கு சுருக்கமாக பதிலளித்திருந்தாலும், இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். ஒரு விலங்கு பரிணமித்து இன்னொரு விலங்காக மாறுகிறது என்றால் அதற்கு மிக நீண்ட கால அவகாசம் தேவைப்படும். எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம். காலில் இரண்டு குளம்புகளுடைய எருது ஒன்று இருக்கிறது. இந்த எருதுக்குப் பிறந்த குட்டி ஒன்றுக்கு டி.என்.ஏ படிகளில் பிரதியெடுப்புப் பிழையால் குழப்புகள் பிளவு படாமல் ஒட்டி பிறக்கிறது. இப்படியான பிழைகளை உலகில் அனேகமனேகம் பார்க்கலாம். இரட்டைக் குழம்புகளுடன் விரைந்து ஓடுவதற்கு சிரமப்படும் எருதுக்கூட்டத்தில் பிழையாக ஒட்டிய குழம்புடன் பிறந்த எருது அதன் உயிர் வாழும் தன்மைக்கு பாதகமில்லதிருக்கும் பிழையுடன் தொடர்ந்து உயிர் வாழ்கிறது. இந்த எருதுக்கு பிறக்கும் குட்டிகளுக்கு ஒட்டிய குழம்புடன் எருது பிறக்கும் என உறுதியாக கூற முடியாது. ஆனால் அதன் சந்ததிகளில் மீண்டும் பிறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் முதலில் ஒட்டிய குழம்புடன் பிறந்தது பிழைச் செய்தியென்றால் மீண்டும் பிறப்பது டி.என்.ஏ ஏணிகளில் பதியப்பட்ட செய்தியாகும். ஆக பல தலைமுறை கடந்து மீண்டும் ஒட்டிய குழம்புடன் பிறக்கும் எருது பிற எருதுகளைவிட பரிணாமத்தில் ஒரு எட்டு முன்னேறியதாக இருக்கும். எப்படியென்றால் பிளவுபட்ட குழம்புள்ள எருதைவிட பிளவுபடாத குழம்புள்ள எருது விரைந்து ஓடும் தன்மை கொண்டதாக இருக்கும். இப்போது இந்த எருதின் குட்டிகள் குழம்பு பிளவுபடாமல் பிறக்கும் என உறுதி கூற முடியாது. பிளவுபடாத குழம்பின் தன்மை டி.என்.ஏ செய்திகளில் தெளிவாக பதிவாகிவிடுவதால் தலைமுறைகளினூடாக தொடர்ந்து பிறக்கும் குட்டிகள் பிளவுபடாதா குழம்புடன் பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இதன்படி கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து பார்த்தால் அந்த இடத்தில் காலில் இரட்டைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும், ஒற்றைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும் தனித்தனியே இருக்கும். மட்டுமல்லாது ஒற்றைக் குழம்பு எருது இரட்டைக் குழம்பு எருதைவிட தாக்குவதிலும் தாக்கப்படுவதிலிருந்து காத்துக் கொள்வதிலும் விரைந்து செயல்பட முடிவதால், அந்த விரைந்த தன்மை அதன் உருவ அமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மாறுதலுக்குத் தூண்டும். இறுதியில் இன்னொருவகை எருதாக தனித்த விலங்காக இருக்கும். இப்போது இரட்டைக் குழம்பு எருதிலிருந்து பரிணமித்து வந்தது தான் ஒற்றைக் குழம்பு எருது என்பதற்கு என்ன ஆதாரம்? தப்பித் தவறி தொடக்கத்தில் ஒட்டிய குழம்புடன் பிறந்த எருது எதோ வகையில் தொல்லியிர் எச்சமாக கண்டெடுக்கப்பட்டால், அதை இரட்டைக் குழம்பு எருதுகளின் எச்சங்களுடன் ஒப்பிட்டு உயிருடன் இருக்கும் எருதுகளுடன் ஒப்புநோக்கி ஆய்வுகள் செய்து இரட்டைக் குழம்பு எருதிலிருந்து கிளைத்து ஒற்றைக் குழம்பு எருது வந்தது என்று கூறினால் அதை யூகம் என்று ஒதுக்குபவர்களை என்ன சொல்வது? அவர்கள் தங்கள் வாதங்களை நிரூபிப்பதாய் நினைத்துக் கொண்டு இப்போது ஏன் இரட்டைக் குழம்பு எருதுகள் ஒற்றைக் குழம்பு எருதுகளாக மாறவில்லை? என்று கேட்டு புளகமடையவும் வைப்பார்கள்.

அடுத்து நண்பர் ஆஷிக் தன்னுடைய பதிவின் சுட்டிகள் இரண்டைக் கொடுத்து இதற்குப் பதிலென்ன என்று கேட்டிருந்தார். இதைவிட அவர் கேள்விகளாக கேட்பது சிறப்பாக இருக்கும். தங்கள் கேள்விகளாக கேட்பது கூர்மையாக பதில் கூறுவதற்கும் உதவியாக இருக்கும். அந்த இரண்டு சுட்டிகளிலுமே பரிணாம மரம் தவறு என்று சில அறிவியலாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதைக் கொண்டு பரிணாமக் கோட்பாடே தவறு உணர்த்தும் விதமாக தன்னுடைய கட்டுரையை நகர்த்திச் செல்கிறார். மட்டுமல்லாது படைப்புக்கொள்கையே சரியானது என்று மறைபொருளாக உள்ளாடியிருக்கிறார்.

பொதுவாக மத நம்பிக்கையுடையவர்கள் மனிதனின் தோற்றம் குறித்து பேசுகையில் பரிணாமக் கோட்பாட்டில் இருக்கும் சின்னஞ்சிறு பிழைகளையும் கூட விடாமல் துருவி பாருங்கள் அங்கே ஒரு தவறு இருக்கிறது எனவே பரிணாமமே தவறு என்று வாதிடுவார்கள். ஆனால் படைப்புக் கொள்கையைப் பற்றி எந்த ஒரு மீளாய்வோ சிந்தனையோ செய்வதில்லை. வேதத்தில் இருக்கிறது ஆகையினால் அதுதான் சரி என்பதைத்தாண்டி எதையும் செய்வதில்லை. நண்பர் ஆஷிக்கும் இதில் விலக்கில்லை.

இது என்றென்றைக்குமானது எனவே இதில் ஒரு எழுத்தோ காற்புள்ளியோ கூட மாறுவதில்லை எனும் வேத ஜம்பத்தைப் போலவே அறிவியலையும் கருதிக் கொள்கிறார்கள். அறிவியல் தொடர் ஆய்வுகளுக்கு உட்பட்டது. பரிணாம விசயத்தில் டார்வினே, “நான் அமைதியுறும் அளவிற்கு சான்றுகள் எனக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து இதில் ஆய்வு செய்பவர்கள் முனைப்புடன் அவற்றை கண்டடையட்டும், தவறு களைந்து திருத்தட்டும்” என்கிறார். அந்த வகையில் பரிணாமவியலில் திருத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன. புதிய சான்றுகள் கண்டடையப்பட்டிருக்கின்றன. விமர்சனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சில அறிவியலாளர்கள் பரிணாமவியலுக்கு எதிர்க் கருத்து கொண்டிருக்கிறார்கள். இவைகளெல்லாம் அறிவியலுக்கு உட்பட்டவை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் பரிணாம்வியலை விமர்சிக்கும் எந்த அறிவியலாளராவது படைப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? என்பது தான்.

இப்போது சொல்லப்பட்டிருக்கும் பரிணாம மரம் தவறு என்றால் சரியான தகவல் பெற்று திருத்தம் செய்து புதிய பரிணாம மரம் அமைக்கலாம் தவறில்லை. பரிணாமக் கொள்கையே தவறு என்று நாளை புதிய கொள்கை வரலாம், அது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக இருப்பில் அறிவியல் உலகம் அதை ஏற்றுக் கொள்ளும் அதிலும் தவறில்லை. ஆனால் இப்போது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக மனிதனின் தோற்றத்தை விளக்கும் வேறொரு கொள்கை உலகில் இல்லை. மட்டுமல்லாது இதுவரை செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகள் பரிணாமக் கொள்கை சரி என்பதையே நிரூபிக்கின்றன. அலோபதி மருத்துவ முறை பரிணாமவியலை அடிப்படையாக கொண்டது தான். மனித உடற்கூறியல் உள்ளிட்டு மருந்தாய்வு நிறுவனங்கள் வரை பரிணாமவியலை ஆதாரமாகக் கொண்டே செயல்படுகின்றன. ஜார்ஜ் நடால் தொடங்கி பல்வேறு உயிரியல் ஆய்வாளர்கள் பரிணாமவியல் சரிதான் என்பதை நிரூபித்திருக்கின்றனர். மரபணு செய்திப் பரிமாற்றப் பிழைகளால் ஊனத்துடனோ கூடுதல் உறுப்புடனோ பிறக்கும் குழந்தைகளும் விலங்குகளும் பரிணாமவியலின் சான்றுகளே. எளிமையாக சொல்வதென்றால் உழைக்காமல் இருப்பவன் கை மென்மையாய் இருப்பதும் உழைப்பாளியின் கைகளில் காய்ப்பேறிக் கிடப்பதும் கூட பரிணாமவியல் சரி என்பதற்கான எல்லோருக்கும் தெரிந்த சான்று.

இதற்கு நேர் எதிராக படைப்புக் கொள்கை சரிதான் என்று எந்த அறிவியலாளன் கூறியிருக்கிறான்? என்னென்ன ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன அந்தத்துறையில்? எதாவது நிரூபணம் உண்டா படைப்புக் கொள்கை சரிதான் என்பதற்கு? ஒன்றுமில்லை. மதவாதிகள் செய்வதெல்லாம் பரிணாமவியலில் நேரும் பிழைகளை சுட்டிக் காட்டுவதைத்தான். அதன் மூலமே படைப்புக்கொள்கையை தக்கவைத்துக் கொண்டதாய் ஒரு சுய ஆறுதல். வேறொன்றுமில்லை. 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

72 thoughts on “மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

  1. இவங்க கிட்ட கத்தி ஏன் எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க ?

  2. செல்லரித்துப்போன கம்யுனிசத்தை சொன்னால் எவன் கேட்கிறான்? அரைக்க அரைக்க அம்மியும் தேயும் என்பார்களே அதனால் நானும் இஸ்லாத்தை அரைத்துப் பாக்கிறேன் .இவண்,செங்கொடி

  3. ஆனால், இஸ்லாம் அம்மி அல்ல என்பது செங்கொடிக்கு புரிய இன்னும் எத்தனை நாள்கள் ஆகுமோ

  4. //99 விழுக்காடு ஒற்றுமை எங்கே?/// அந்த ஒரு விழுக்காடு என்னவென்று கம்யுனிச வியாபாரியால் சொல்ல முடியுமா?

  5. //உருவத்தில், உள்ளுறுப்புகளில், செயலில், உள்வாங்கும் திறனில், சமூக குடும்ப அமைப்புகளில் மனிதனுக்கு சிம்பன்சியைப் போல நெருக்கமான விலங்கு வேறொன்று இல்லை.///
    ம.க.இ.க வில் உறுப்பினராக சேர்க்கும் வாய்ப்பு உண்டா?

  6. செங்கொடி //// 99 விழுக்காடு ஒற்றுமை எங்கே? ஒரு விசயத்தில் இருக்கும் ஒற்றுமை எங்கே? ////
    99 விழுக்காடு விமானம் மாதிரியே ஒரு வாகனம் செய்து கார் என்ஜினை பொருத்திய வாகனம் ஒன்றும் விமானம் மாதிர்யே இல்லாத ஒரு தட்டையான உலோகத்தில் விமான என்ஜினை பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றும் உள்ளது இதில் பறக்கும் வாய்ப்பு எந்த வாகனத்திற்கு உண்டு?

  7. /,,,,குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம உயிரிகள் இருக்கின்றனவா?,,,,,,,பூமியில் வாழ்ந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரமான தொல்லுயிர் எச்சங்கள் பலவுண்டு. ஆண்ட்ரோபிதஸின், ஹோமோ எரக்டஸ், ஹோமோ செபியன்ஸ், ஹோமோ செபியன் செபியன்ஸ், நியாண்டர்தாலிஸ்ட், க்ரோமாக்னன் இதுதான் மனிதர்கள் பரிணமித்து வந்த பாதை. இதில் க்ரோமாக்னன் என்பது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனம், /////
    ஒரு உயிரிலிருந்து வந்த இரு உயிரினங்களில் ஒன்று மட்டும் இத்தனை பரிணாமம் காணும்போது மற்றொரு உயிரினம் அப்படியே இருப்பது முரண்பாடு இல்லையா?இதற்கு வேறு நிருபணங்கள் உண்டா?அல்லது இதைப் போன்று வேறு ஒரு உயிரினத்திலிருந்து இரு உயிர்கள் தோன்றி ஒன்று மட்டும் பல பரிணாமங்கள் கண்டு மற்றொரு உயிரினம் பரிணாம மாற்றம் இல்லாதது எடுத்துகாட்டுகள் உண்டா?

  8. இப்ராஹீம் , மேல் உள்ள உங்கள் பின்னூட்டங்கள் தோழர் செங்கொடியின் கட்டுரைக்கு வலு சேர்க்கிறது. நன்றி 🙂

  9. செங்கொடி ///மனிதனைக்காட்டிலும் சிம்பன்சிகள் புத்திக் கூர்மை உடையவை. உருவத்தில், உள்ளுறுப்புகளில், செயலில், உள்வாங்கும் திறனில், சமூக குடும்ப அமைப்புகளில் மனிதனுக்கு சிம்பன்சியைப் போல நெருக்கமான விலங்கு வேறொன்று இல்லை.///
    ஆரம்பகாலங்களில் குடும்ப அமைப்பு இல்லாமல் விலங்கைப் போல் மனிதன் வாழ்ந்ததாக பரிணாம கொள்கை கூறுகிறதா?
    அல்லது மனிதனைப்போல் விலங்கினங்களும் குடும்ப அமைப்புகளாக வாழ்ந்ததாக பரிணாம கொள்கை கூறுகிறதா?

  10. ///சற்றே மனநலம் பிறழ்ந்த ஒரு மனிதனைக்காட்டிலும்///
    முந்தைய இரண்டு எனது பதிவுகளில் ஒரு மனிதனைக் காட்டிலும் என்பதற்கு முன் உள்ள சொற்கள் விடுபட்டுள்ளது ஒரு பொருட்டல்ல

  11. ரஹ்மானை பிடித்தால் இளையராஜாவை பிடிக்ககூடாது என்பது உலகியல் விதி ( புரிகிறதா? இரண்டு பிரிவினருக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்)

  12. sharfudeen, ஏ.ஆர்.ரகுமானையும் இளையராஜாவையும் பிடிக்காது என்றால் உலகியல் விதிக்கு மாற்றமா?

  13. இப்ராஹீம்,
    இந்த பின்னூட்டங்கள்.

    //
    1.
    S.Ibrahim, on மே31, 2011 at 8:29 மாலை said:

    செல்லரித்துப்போன கம்யுனிசத்தை சொன்னால் எவன் கேட்கிறான்? அரைக்க அரைக்க அம்மியும் தேயும் என்பார்களே அதனால் நானும் இஸ்லாத்தை அரைத்துப் பாக்கிறேன் .இவண்,செங்கொடி
    2.
    S.Ibrahim, on மே31, 2011 at 8:32 மாலை said:

    ஆனால், இஸ்லாம் அம்மி அல்ல என்பது செங்கொடிக்கு புரிய இன்னும் எத்தனை நாள்கள் ஆகுமோ
    3.
    S.Ibrahim, on மே31, 2011 at 8:35 மாலை said:

    //99 விழுக்காடு ஒற்றுமை எங்கே?/// அந்த ஒரு விழுக்காடு என்னவென்று கம்யுனிச வியாபாரியால் சொல்ல முடியுமா?
    4.
    S.Ibrahim, on மே31, 2011 at 8:37 மாலை said:

    //உருவத்தில், உள்ளுறுப்புகளில், செயலில், உள்வாங்கும் திறனில், சமூக குடும்ப அமைப்புகளில் மனிதனுக்கு சிம்பன்சியைப் போல நெருக்கமான விலங்கு வேறொன்று இல்லை.///
    ம.க.இ.க வில் உறுப்பினராக சேர்க்கும் வாய்ப்பு உண்டா?
    ///

  14. மது ,எப்பின்னூட்டங்கள் என்பதற்கு பதில் தந்துள்ளீர்கள் எங்ஙனம் என்பதை சொல்லவில்லையே

  15. //kavignarThanigai., on ஜூன்1, 2011 at 3:38 மாலை said:
    dear senkodi: writing also is a service towards mankind. sometimes it is a weapon to revolution. thank u. vanakkam. continue your service with good motive//

    என்ன “தணிகை” கவிப்பொய்யரே !

    கொஞ்ச நாளா காணாமல் போயிருந்தீரே !

    அரசால் “தணிக்கை” செய்யப்பட்டு

    தனிமையில் கம்பி எண்ணிட்டு வந்து “பெனாத்துர” மாதிரி இருக்க !!!

    விடுதலையான கையோடு

    பட்டையடிச்சிட்டு ஏதாவது குட்டையில பெறலுங்க !!!

    வெள்ளைகார கலர் தண்ணியை

    குடிச்சிட்டு பீட்டர் உட்டது போதும் போங்க !!!

  16. செங்கொடி ///இரட்டைக் குழம்பு எருதிலிருந்து கிளைத்து ஒற்றைக் குழம்பு எருது வந்தது என்று கூறினால் அதை யூகம் என்று ஒதுக்குபவர்களை என்ன சொல்வது? ////
    அவர்கள் சொல்லிவிட்டு போகட்டும் .உங்களுகென்ன ?நீங்கள் பரிணாமம் தான் சரி என்று சொல்லுங்கள் .ஆக உங்கள் கருத்துப்படி குரங்குதான் மனிதனாக மாறியது என்றால் இப்போது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறுவதில்லை? என்ற வாதத்திற்கு கூர்மையான பதிலை தரமுடியவில்லை.
    ////இதன்படி கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து பார்த்தால் அந்த இடத்தில் காலில் இரட்டைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும், ஒற்றைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும் தனித்தனியே இருக்கும். மட்டுமல்லாது ஒற்றைக் குழம்பு எருது இரட்டைக் குழம்பு எருதைவிட தாக்குவதிலும் தாக்கப்படுவதிலிருந்து காத்துக் கொள்வதிலும் விரைந்து செயல்பட முடிவதால், அந்த விரைந்த தன்மை அதன் உருவ அமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மாறுதலுக்குத் தூண்டும். இறுதியில் இன்னொருவகை எருதாக தனித்த விலங்காக இருக்கும்.////
    கோடிக்கணக்கான ஆண்டுகளில் இரட்டை குழம்பு எருதுவும் ஒற்றை குழம்பு எருதுவும் ஒரு மூதாதையிலிருந்து கிளைத்து வந்த இரு வகை விலங்கினங்கள் போல் தான் மனிதனும் குரங்கும் ஒரு மூதாதையிலிருந்து கிளைத்து வந்த இரு வகை உயிரினங்களா?

  17. //இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் பரிணாம்வியலை விமர்சிக்கும் எந்த அறிவியலாளராவது படைப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? என்பது தான்.///
    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் படைப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களா? இப்படி நானும் கேட்கலாம்.
    பரிணாம கொள்கையை விமர்சிக்கும் அறிவியலார்களுக்கு பதில் சொல்லுவதை விட்டு இது என்ன அரசியல்வாதிபோல் லாவணி பாடுகிறீர்கள்.

  18. எங்ஙனம் என்று விளக்க என்ன இருக்கிறது உங்கள் பின்னூட்டங்களில்,வேற்று உளறல்களை தவிர. நீங்கள் தான் விளக்க வேண்டும் என்ன சொல்லவருகிறீர்கள் என்று. தோழர் செங்கொடி எது எழுதினாலும் எதிர்க்க வேண்டும்.ஏன் என்றால் அவர் இஸ்லாத்தை விமர்சித்து விட்டார், சரிதானே.? இஸ்லாம் என்பது 1400 வருடங்களுக்கு முன்பு ஒரு மனிதனால் பழைய கதைகளை அடிப்படையாக கொண்டு சொந்த கற்பனைகளை சேர்த்து கொண்டு இயற்றப்பட்டது. இதை துணையாக கொண்டு அறிவியல் ஆராய்சிகளின் மூலமாக கண்டுபிடிக்க பட்ட பரிணாம உண்மையை எதிர்க்க முடியாது. அதுவே உங்களது வெற்று உளறல்களுக்கு காரணம்.

  19. மார்க்ஸிய மதுரசமருந்திய சிம்பன்சி மந்திகளான ம.க.இ.க தோழர்கள் ஜீன்ஸ் டி சர்ட் ஏன் அணிவதில்லை?

    மேலும் மினரல் வாட்டர் கோக் பெப்சி சாம்பைன் ஏன் அருதுவதில்லை. குறிப்பாக மெக் டொனால்டு கே எப் ஸி பிஸ்ஸா உண்பதில்லை .

    சோமபான சுராபானமருந்திய ஆர் எஸ் எஸ் இந்துத்வா வெறி நாய்கள் குறிப்பிடும் இந்து தேச பக்தி போல் இரஷ்ய தேசப்பற்றா ? அல்லது மார்க்ஸிய மதுப்பற்றா ?

  20. Mathu////தோழர் செங்கொடி எது எழுதினாலும் எதிர்க்க வேண்டும்.ஏன் என்றால் அவர் இஸ்லாத்தை விமர்சித்து விட்டார், சரிதானே.////
    இஸ்லாம் என்ன சொன்னாலும் அதை விமர்சிக்க வேண்டும் அதன் மூலம் பிரபல்யம் அடைய வேண்டும் என்பதுதான் செங்கொடியின் நோக்கம் அவருடைய கம்யுனிச கொள்கையை மக்களிடம் சொல்லி அதை வளர்க்க திராணியற்ற செங்கொடி நம்பிக்கையை அறிவியலோடு ஒப்பிடும் பொது எங்களின் பதில்கள் உங்களுக்கு ஏன் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது? இஸ்லாம் கூறும் உண்மைகள் எப்போதெல்லாம் அறிவியலோடு ஒத்து போகிறதோ அப்போதெல்லாம் அதை உலகறிய போற்றுவோம் .மற்ற உண்மைகளை அறிவியல் உண்மை படுத்துவரை பொறுத்திருப்போம்
    ///பரிணாமக் கொள்கையே தவறு என்று நாளை புதிய கொள்கை வரலாம், அது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக இருப்பில் அறிவியல் உலகம் அதை ஏற்றுக் கொள்ளும் அதிலும் தவறில்லை. ஆனால் இப்போது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக மனிதனின் தோற்றத்தை விளக்கும் வேறொரு கொள்கை உலகில் இல்லை.///
    இது செகோடியின் கருத்து .அது போலவே இன்று இஸ்லாம் கூறுவதை அறிவியலார் இன்று தவறு கண்டால் நாளை அதை சரி காணும் அறிவியலார்கள் வரலாம் .ஆனால் இன்று இஸ்லாத்தை விட சிறந்த வாழ்வியல் நடைமுறைகள் உலகத்தில் இல்லை என்பதை உணருங்கள் இல்லை கம்யுனிசம் தான் சிறந்த வாழ்வியல் நடைமுறை என்றால் அதை அவரது வலியுருத்தட்டும்.அதை விட்டுவிட்டு
    ///இவங்க கிட்ட கத்தி ஏன் எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க ?//// நீங்கள் சொன்னவாறு செங்கொடியின் வெற்று கூச்சல் போட்டு கொண்டிருக்கிறார் உங்களது அறிவுரையை கேட்டு அவர் தனது கத்தலை நிறுத்திக் கொள்ளட்டும்…

  21. செங்கொடி ஒங்களுக்கு *************************************

    ___________________________________________________

    நண்பர் ப்ரவீன்,

    வேறொரு தளத்தின் மீதான விமர்சனத்தை நீங்கள் அந்த தளத்திலேயே வைக்கலாம். இத்தளத்திலுள்ள இடுகைகளின் மீது நீங்கள் தாராளமாக கருத்துக் கூறலாம் ஆனால் அது பிற தளத்தின் மீதான விமர்சனத்தினூடாக வேண்டாம். மட்டுமல்லாது, உங்களுடைய கருத்தும் தவறானது தான். எந்த சாய்வும் எங்களிடம் இல்லை.

  22. சைவிருக்குன்னு நான் சொல்லலியே!!சில போலிகள் பற்றிய எச்சரிக்கையே!!அம்புட்டுதேன் பெரியார் கருணாநிதி வழி போலி நாத்திகம் (அதாவது ஒரு மதத்தை மட்டும் தாக்குவது)பேசுபவர்களைதான் நான் குறை சொன்னேன்.

  23. //அவருடைய கம்யுனிச கொள்கையை மக்களிடம் சொல்லி அதை வளர்க்க திராணியற்ற செங்கொடி நம்பிக்கையை அறிவியலோடு ஒப்பிடும் பொது எங்களின் பதில்கள் உங்களுக்கு ஏன் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது?//
    ஹி ஹி ஹி ஆத்திரம் யாருக்கு ஏற்படுகிறது . உங்களையே நீங்கள் கேட்டு கொள்ளுங்கள்.
    //இஸ்லாம் கூறும் உண்மைகள் எப்போதெல்லாம் அறிவியலோடு ஒத்து போகிறதோ அப்போதெல்லாம் அதை உலகறிய போற்றுவோம் .மற்ற உண்மைகளை அறிவியல் உண்மை படுத்துவரை பொறுத்திருப்போம்//
    🙂 அறிவியலோடு ஒத்து போகவில்லை என்றால், தூற்றுவீர்கள்.
    //உங்களது அறிவுரையை கேட்டு அவர் தனது கத்தலை நிறுத்திக் கொள்ளட்டும்…//
    யார் எதை பேச வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது.? 1400 வருடங்களுக்கு முன்னமே இஸ்லாம் இதை சொல்லிட்டு ,விஞ்ஞானி மொகமது நபி அப்பவே சொல்லிட்டாரு என்று புருடா விட உங்களுக்கு உரிமை உள்ள போது, இல்லை என்று மறுத்து இஸ்லாமை அம்பலபடுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது.

  24. செங்கொடி அவர்களுக்கு,
    அஸ்ஸலாமு அலைக்கும்

    உங்களின் இத்தொடர் விமர்சனப்பகுதியின் இப்பகுதிக்கு முனிதைய பகுதிக்கு பதிலளித்து முடித்தபின் இதற்கு மேலும் ஏதும் விமர்சனம் இருந்தால் நேரடியாக களத்தில் சந்திக்க வேண்டும் என்றும், நீங்கள் நேரடி விவாதத்திற்கு வரமாட்டேன் என்று சொன்ன காரனங்கள் எதுவும் ஏற்புடையதல்ல் என்பதை விளக்கியும் எந்த மறுமொழியும் விவாதம் தொடர்பாக கிடைக்கவில்லையே! நேரடி விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு மீண்டும் அழைக்கிறோம்! எப்போது வரப்போகிறீர்கள்?

  25. விட்டால் எலி குட்டி போட்டு அது விஸ்வரூபம் பெற்று டைனோசராக மாறியது என்று கூறுவார்கள். கடவுள் மறுப்பை மனதில் வைத்து கொண்டு உண்மையை மறுக்கும் கூட்டம். கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் அல்லாவாக இருக்குதாலும் சரி யாராக இருந்தாலும் சரி ஆனால் மனிதன் அறிவிக்கு மிஞ்சிய ஒரு சக்தி உள்ளது அதுதான் இப்போதுள்ள அறிவியல் கூறு உண்மை.

  26. சக்தி,
    // மனிதன் அறிவிக்கு மிஞ்சிய ஒரு சக்தி உள்ளது அதுதான் இப்போதுள்ள அறிவியல் கூறு உண்மை.//
    அறிவியல் ஆதாரத்தோடு அந்த உண்மையை விளக்கமாக கூற முடியுமா.?அந்த சக்திதான் எல்லாவற்றையும் படைத்ததா.??

  27. மது ////1400 வருடங்களுக்கு முன்னமே இஸ்லாம் இதை சொல்லிட்டு ,விஞ்ஞானி மொகமது நபி அப்பவே சொல்லிட்டாரு /////1400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களை மனிதர்கள் வணங்கி வந்த காலத்தில்,தன்னையும் வணங்க வந்த மக்களை தடுத்து மனித சுய மரியாதயை கற்று தந்த அவர் விஞ்ஞானி தான்
    மனிதர்கள் அனைவரும் சமம் பிறப்பால் ,செல்வத்தால் ,பதவியால் ,நிறத்தால் யாரைவிடவும் யாரும் உயரவில்லை என்று கற்றுத் தந்த அவர் விஞ்ஞானி தான்.
    யாருக்கும் யாரும் உயர்வு கருதி எழுந்து நிற்பதை மனித மாண்புக்கு இகழ்வு என்று நடைமுறையை கற்றுதத் தந்த அவர் விஞ்ஞானி தான்.
    ஆணுக்கு இருபது போன்றே பெண்ணுக்கு உரிமைகள் உண்டு என்பதை எடுத்துரைத்த அவர்விஞ்ஞானி யே!
    மன்னராக இருந்தும் தனக்கென்றும் தன வாரிசுகளுக்கென்றும் காணி நிலம் கூட சேர்த்து வைக்காத அவர் மெங்ஞானி
    ஒருநாள் கூட வயிறார உண்ணதில்லை என்ற நிலையில் வாழ்ந்த அவர் ஒரு விஞ்ஞானியே
    கத்னாவை கட்டாயப் படுத்தியே அவர் விஞ்ஞானியே ,
    செருப்பு அணியாதவன் சாட்சி ஏற்று கொள்ளபடாது என்று செருப்பு அணிவதை வற்புறுத்திய அவர் ஒரு விஞ்ஞானியே !
    நாற்பது நாட்களுக்கு மேல் தேவையற்ற முடிகளை அகற்ற வேண்டும் என்று சொன்ன அவர் விஞ்ஞானியே !
    சிறு நீர் கழித்த பின்னும் ,தினசரி பல முறை பல்துலக்குதல் உடல் அவயங்களை சுத்தம் செய்வதை வற்புறுத்திய அவர் விஞ்ஞானியே!
    ஏழ்மையை ஒழிக்க சக்காத் திட்டம் கற்று தந்த வர விஞ்ஞானியே !

  28. மது ///அறிவியலோடு ஒத்து போகவில்லை என்றால், தூற்றுவீர்கள்.///
    ‘உண்மைகளை அறிவியல் உண்மை படுத்துவரை பொறுத்திருப்போம்” என்று தெளிவாக கூறிய பின்பும் தூற்றியுள்ளீர்களே! மதுவின் மயக்கமோ !

  29. மது ///அறிவியல் ஆதாரத்தோடு அந்த உண்மையை விளக்கமாக கூற முடியுமா.?அந்த சக்திதான் எல்லாவற்றையும் படைத்ததா.?///
    அறிவியலார் விளக்கம் தரும் காலம் வரும் .பொறுக்க

  30. முதலில் அறிவியல் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு பிறகு பேசுங்கள். புத்தரும்,வள்ளுவரும்,வள்ளலாரும், ஔவையும் முகமதை விட அதிக வாழ்வியல் நெறிகளை கூறியுள்ளனர். முகமது போல் மக்களிடம் வேறுபாடு காட்டாமல்,காழ்புணர்வை வளர்க்காமல் நன்னெறிகளை போதித்தனர்.
    //‘உண்மைகளை அறிவியல் உண்மை படுத்துவரை பொறுத்திருப்போம்”//
    யாரு மப்புல இருக்காங்கனு படித்து கொண்டிருபவர்களுக்கு தெரியும்.

  31. //A.Mohamed Ihsas//

    adhennala neradivivadhanthen venumunnu adam pudikkiradhu… adhu avarukku vasathiya illanna udane adhu thaan vazhinnu piduchittingalo

  32. brother pathil

    senkodikku vasathi illannu unkalukkeppadi theriyum? unka velaya mattum paarunka! naama summa kooppudala! avaru sonnathukkellaam pathil sollittuththaan naanka kooppurroam! avarukku vasathi illandu proof pannaarunna naam appadi kaekkamaattoam! but, avaru ethuvum sollaamam mounamaa irukkurathaa paaththaa avaru thayankuraarunnuthaan arththam!

  33. நண்பர் இஹ்சாஸ்,

    நேரடி விவாதத்திற்கு வருமாறு நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியபோதே முறைப்படி அதற்கு பதிலும் தரப்பட்டுவிட்டது. மீண்டும் மீண்டும் நீங்கள் அதை தொடர்ந்துகொண்டிருப்பது உங்களுக்கு வேறு எதுவோ உள்நோக்கம் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

    இனிமேல் இதை தொடரமாட்டீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  34. மது
    ////முதலில் அறிவியல் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு பிறகு பேசுங்கள். புத்தரும்,வள்ளுவரும்,வள்ளலாரும், ஔவையும் முகமதை விட அதிக வாழ்வியல் நெறிகளை கூறியுள்ளனர்.////
    எங்கே கொஞ்சம் பாகபிரிவினை பற்றி இவர்கள் சொன்ன வாழ்வியல் நடத்தை விதிகளை சொல்லுங்களேன் .
    மேலும் முஹம்மது நபி[ஸல்]சொல்லாததை அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை சொல்லுங்கள். முஹம்மது நபி[ஸல்] அவர்கள் சொன்னார்கள் செய்தார்கள் .மக்களோடு மக்களாக வாழ்ந்து காட்டினார்கள்.காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கையறைக்கு செல்லும் வரை நன்னடத்தைகளை கற்று தந்தார்கள்.அதனாலே தேர்ந்தெடுத்த நூறு மனிதர்களில் முதல் மனிதனாக காணப்பட்டார்.
    /‘///உண்மைகளை அறிவியல் உண்மை படுத்துவரை பொறுத்திருப்போம்”//
    யாரு மப்புல இருக்காங்கனு படித்து கொண்டிருபவர்களுக்கு தெரியும்.///
    உண்மைகளை என்றால் இஸ்லாம் கூறும் உண்மைகள் என்பது முந்தைய பதிவில் உள்ளது ஆகவே மது,மயக்கத்தில் உள்ளது தாங்களே

  35. இப்ராஹீம்,
    மொகமது சொன்னத மட்டும் தான் நான் பாப்பேன் கேப்பேன் என்று அடம் புடிச்சா இப்படிதான். படிச்சி பாருங்க மத்தவங்களையும். 100 பேருல மொத ஆளா வந்ததுக்கான காரணம், most popular personality என்று தான் நினைக்கிறன். ஐஸ்வரியா ராயை கூடத்தான் தேர்தெடுத்தார்கள் உலக அழகி என்று.அவர் என்ன உலகத்திலேயே அவர்தான் அழகியா.?
    அது என்ன இஸ்லாம் கூறும் உண்மைகள். அதெல்லாம் உண்மைகளாக இருந்தால் இந்த கற்பனை கோட்டையை பற்றி இங்கு விவாதிக்கவே தேவை இல்லையே.

  36. ////மொகமது சொன்னத மட்டும் தான் நான் பாப்பேன் கேப்பேன் என்று அடம் புடிச்சா இப்படிதான். படிச்சி பாருங்க மத்தவங்களையும்.////
    எனது வாழ்க்கைக்கு தேவையான விசயங்கள் அனைத்தும் அழகிய முன்மாதிரி முஹம்மது நபி[ஸல்]அவர்களிடத்தில் இருக்கும்போது மற்றவர்கள் பற்றி பள்ளிப்பாடம் போதும்..முஹம்மது நபி[ஸல்] அவர்கள் போல் சொன்னதை செய்தார்களா?செய்ததை சொன்னார்களா? பாமர மக்களோடு வாழ்ந்து காட்டினார்களா? குடும்பம் நடத்துவது முதல் குடும்ப கட்டுப்பாடு வரை அனைத்தையும் கற்று தந்தார்களா?என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லுங்கள்
    //ஐஸ்வரியா ராயை கூடத்தான் தேர்தெடுத்தார்கள் உலக அழகி என்று.அவர் என்ன உலகத்திலேயே அவர்தான் அழகியா.?///
    அவ்வாறெனின் ஹுசைனை விட அதி வேக ஓட்டக்காரர்கள் இருக்கிறார்களா?
    டெண்டுல்கரை விட அதிக ரன் எடுக்கக் கூடியவர்கள் இருக்கிறார்களா?
    ///இஸ்லாம் கூறும் உண்மைகள். அதெல்லாம் உண்மைகளாக இருந்தால் இந்த கற்பனை கோட்டையை பற்றி இங்கு விவாதிக்கவே தேவை இல்லையே///
    பரிணாம கொள்கையும் விவாதிக்கப் படுகிறதே உங்கள் கருத்துப் படி பரிணாமம் பொய் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?.

  37. செங்கொடி பிரபஞ்சம் தோன்றி கோடான கோடிகள் ஆண்டுகள் ஆகியும் எத்தனை பரிணாமங்கள் நடந்தும் ஏன் மனிதன் மட்டுமே பேச கற்றுக் கொண்டான்? ஏன் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு உள்ளது? 99 விழுக்காடு ஒத்துப் போகும் உங்களது உடன் பிறப்புகளுக்கு ஏன் பேச்சும் பகுத்தறிவும் ௦.001௦.௦௦விழுக்காடு கூட வரவில்லை?

  38. //னது வாழ்க்கைக்கு தேவையான விசயங்கள் அனைத்தும் அழகிய முன்மாதிரி முஹம்மது நபி[ஸல்]அவர்களிடத்தில் இருக்கும்போது மற்றவர்கள் பற்றி பள்ளிப்பாடம் போதும்..முஹம்மது நபி[ஸல்] அவர்கள் போல் சொன்னதை செய்தார்களா?செய்ததை சொன்னார்களா?//
    எனக்கு 1400 வருடத்துக்கு முந்தைய மொகமதுவின் அறிவு போதும் சொன்னா நான் என்ன செய்ய முடியும்.! இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழுகிரார்களே மொகமது நபியா சொல்லி கொடுத்தாரு.? மொகமது நபி ஊருலதான் பணக்கார அரபிகள் பெண் பித்தனாக திரிகிறார்கள். அவ்வளவு சொன்னாரே மொகமது நபி எல்லாரும் 4 பொண்டாட்டி கட்டிகிலாம் என்று சொல்லிட்டு அவரு மட்டும் 12 கட்டிகிட்டாரே எப்படி.? அவரு பொண்டாட்டிய மட்டும் யாரு மறு மனம் செஞ்சிக்க கூடாதாமே அது ஏன்.? அதுல பாவம் ஒரு 9 வயது சிறுமி வேற.
    //டெண்டுல்கரை விட அதிக ரன் எடுக்கக் கூடியவர்கள் இருக்கிறார்களா?//
    இல்லையா.?
    //பரிணாம கொள்கையும் விவாதிக்கப் படுகிறதே உங்கள் கருத்துப் படி பரிணாமம் பொய் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?//
    அதான் அறிவியல். ஆராயப்படும் ,விவாதிக்கப்படும், நிரூபிக்கபட்டால் உண்மை என்று ஏற்று கொள்ளப்படும்.
    இதுவரை நடந்த ஆய்வுகளில் பரிணாமம் உண்மை என்பதற்கான ஏராளமான தடயங்கள் ,ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.அதன் அடிப்படையில் உண்மை என்று ஏற்று கொள்கிறேன்.

  39. //இன்று இஸ்லாத்தை விட சிறந்த வாழ்வியல் நடைமுறைகள் உலகத்தில் இல்லை//

    அவரவருக்கு அவரவர் அம்மா நல்லவர்கள்; சிறந்தவர்கள்; அன்பானவர்கள். என் அம்மா எனக்குப் பெரியவர்; சிறந்தவர்; அன்பானவர்.

    அவ்வளவே …!

  40. ////எனக்கு 1400 வருடத்துக்கு முந்தைய மொகமதுவின் அறிவு போதும் சொன்னா நான் என்ன செய்ய முடியும்.! ////
    1400 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு சொத்துரிமை இஸ்லாம் வழங்கியது.
    தமிழகத்தில் 1990 இல் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழக்கப்பட்டது.
    மாதவிடாய் பெண்களிடம் உடலுறவு கொள்வதை தவிர்ப்பதை தவிர மற்றபடி அந்த நிலைகளில் மற்ற பெண்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடுகளும் காட்டக்கூடாது என்று 1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் நடைமுறை படுத்தியதை இப்போதுதான் உலகம் நடை முறைபடுத்தியுள்ளது.
    இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன் கூறிய வட்டியில்லா கடன் திட்டத்தை இன்றைய இந்திய பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது.இவ்வாறாக முகம்மதுநபி[ஸல்] அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் காட்டித் தந்த நடைமுறைகளில் எதை தவறு என கூறுவீர்?அதற்கு பகரமாக எதை சரி காண்பீர்?
    ///இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழுகிரார்களே மொகமது நபியா சொல்லி கொடுத்தாரு.? மொகமது நபி ஊருலதான் பணக்கார அரபிகள் பெண் பித்தனாக திரிகிறார்கள்///
    நீங்கள் ஒழுக்கத்திற்கு என்ன அளவுகோல் வைத்துள்ளீர்களோ என்பதை நான் அறியேன்.அங்குள்ள பணக்கார அரபிகள் பென்பித்தர்களாக திரிகிறார்கள் என்பது தங்கள் கூற்று .இங்குள்ள பணக்காரார்கள் புத்தர்களாக திரிகிறார்களா? இரு நாட்டிலுள்ள பணக்காரர்களையும் சரியான முறையில் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் உங்களுக்கு உண்மைகள் புரியக் கூடும்.
    . /////அவ்வளவு சொன்னாரே மொகமது நபி எல்லாரும் 4 பொண்டாட்டி கட்டிகிலாம் என்று சொல்லிட்டு அவரு மட்டும் 12 கட்டிகிட்டாரே எப்படி.? அவரு பொண்டாட்டிய மட்டும் யாரு மறு மனம் செஞ்சிக்க கூடாதாமே அது ஏன்.? அதுல பாவம் ஒரு 9 வயது சிறுமி வேற.////
    முஹம்மது நபி அவர்கள் பசியால் வாடும் மக்களின் துயர்கள் எண்ணி ஒருநாளும் ஒரு வேலையும் கூட வயிறார உண்டதில்லை.ஆனால் மற்றவர்களை அதைப் போல் உன்ன வேண்டாம் என்று சொல்லவில்லை.தனகென்று சொத்து சேர்க்கவில்லை .ஆனால் பிறரையும் அவ்வாறு சேர்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை.தனக்கு வாரிசு நியமிக்கவில்லை ஆனால் மற்றவர்களுக்கு அவ்வாறு கட்டளைஇடவில்லை. தனது மகள் பாத்திமாவுக்கு தங்க நகை அணிவதை தடுத்து எளிமையாக வாழும்படி செய்தார்கள் .ஆனால் மற்ற பெண்களை தங்க அணிவதை தடுக்கவில்லை,
    அக்காலம் உலகம் முழுவதும் பால்ய விவாகம் இருந்தது .ஆனால் மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நல்லவற்றை மட்டுமே சொல்லிவிட்டு மற்றதை மறைத்தார்கள். ஆனால் முஹம்மது நபி[ஸல்] அவர்கள் வாழ்க்கையில் கடுகளவும் மறைக்க படாமல் அத்தனைகளும் மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது,இது போன்று மற்றவர்கள் வாழ்க்கை வெளியிட்டால் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் உயர்வு உங்களுக்கு புரியும் .பால்ய விவாகத்தையும் முதலில் தடுத்தது இஸ்லாம்தான் ஒரே சமயத்தில் அவர்களுக்கு பனிரண்டு மனைவியர்கள் இருந்ததில்லை.மனைவியரில் பெருபாலானோர் ஐம்பது வயதுக்கும் மேற்பட்டோர். தாம்பத்திய வாழ்க்கை பற்றி பெண்களிடையே அறிவுரைகளும் ஆலோசனைகள் வழங்கவுமே விதவைகளை மணந்து போதனைகள் வழங்கினார்.அந்த மனைவியர் மூலம் பெண்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.முஹம்மது நபி[சல] அவர்கள் மனைவியர் முஸ்லிம் களுக்கு அன்னையர் போன்று ஆவார்கள் ஆகவே மணமுடிக்க தடை செய்யபட்டார்கள்

  41. ////அவரவருக்கு அவரவர் அம்மா நல்லவர்கள்; சிறந்தவர்கள்; அன்பானவர்கள். என் அம்மா எனக்குப் பெரியவர்; சிறந்தவர்; அன்பானவர்.
    அவ்வளவே …!////
    காக்கைக்கு அதன் குஞ்சு பொன் குஞ்சு ஆக இருந்தாலும் காக்கைகுஞ்சையும் கிளி குஞ்சையும் ஓரிடத்தில் காண்பவர்கள் எந்த குஞ்சை தேர்ந்தெடுப்பார்கள் என்பது தருமிக்கும் தெரியும் கருமிக்கும் தெரியும்

  42. இப்ராஹிமின் பொய்கள்
    //1400 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு சொத்துரிமை இஸ்லாம் வழங்கியது.//

    கதீஜாபிராட்டியார் சொத்துரிமை இல்லாத பணாதையா? அவரிடம் கூலி வேலை பார்த்தவர்தானே முகம்மது? ஏன் இந்த புளுகு?

    //தமிழகத்தில் 1990 இல் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழக்கப்பட்டது.//
    ஏன் இந்த புளுகு? இந்தியாவில் பெரும் வணிகர்களாகவும் சொந்தமாக நாட்டை ஆளும் ராணிகளாகவும் (ராணி மங்கம்மா என்ன 1990இல் பிறந்தவரா?) இருந்திருக்கிறார்கள். ரகுவம்சத்தில் அக்னி வர்மனின் மனைவி பிறகு ராணியாக ஆகிறார். அதாவது ராமாயண காலத்தில்! இவர் சொல்கிறார் 1990 இல்தான் பெண்களுக்கு இந்தியா சொத்துரிமை வழங்கியதாம்..

    //இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன் கூறிய வட்டியில்லா கடன் திட்டத்தை இன்றைய இந்திய பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது.//

    அதென்ன வட்டியில்லா கடன்? வட்டி என்ற பெயருக்கு பதிலாக மார்க் அப் என்று பெயர்வைத்துவிட்டால் இஸ்லாமிய வங்கியா? இஸ்லாமிய வங்கி, வட்டியில்லா முறை என்பதெல்லாம் சுத்த டுபாக்கூர்.

    //.பால்ய விவாகத்தையும் முதலில் தடுத்தது இஸ்லாம்தான் //
    இதுதான் உலகமகா ஜோக் என்பது.

    //ஒரே சமயத்தில் அவர்களுக்கு பனிரண்டு மனைவியர்கள் இருந்ததில்லை.மனைவியரில் பெருபாலானோர் ஐம்பது வயதுக்கும் மேற்பட்டோர். தாம்பத்திய வாழ்க்கை பற்றி பெண்களிடையே அறிவுரைகளும் ஆலோசனைகள் வழங்கவுமே விதவைகளை மணந்து போதனைகள் வழங்கினார்.//
    ஏன் மணக்காமல் அந்த போதனையை சொல்லமுடியாதா?
    மருமகளை திருமணம் செய்துகொள்ளலாம் என்பதற்கு மருமகளையே திருமணம் செய்து காட்டிதான் சொல்லவேண்டுமா? அவர் இப்படி மூத்திரம் போனார் என்பதையெல்லாம் பார்த்து அப்படியே மூத்திரம் போகும் முஸ்லீம்கள் மருமகளை திருமணம் செய்யலாம் என்று சொன்னால், செய்யமாட்டார்களா? செய்துதான் காட்டணுமா? இதெல்லாம் அவரது காமவெறிக்கு இவர்கள் கட்டும் சப்பைக்கட்டு. நித்யானந்தா தோத்தான். நித்யானந்தா சீடர்கள் தோத்தார்கள்

    //முஹம்மது நபி[சல] அவர்கள் மனைவியர் முஸ்லிம் களுக்கு அன்னையர் போன்று ஆவார்கள் ஆகவே மணமுடிக்க தடை செய்யபட்டார்கள்//

    கதீஜாவுடன் நிறுத்தியிருந்தால், அந்த பிரச்னையே வந்திருக்காதே?

  43. இப்ராஹீம்
    //காக்கைக்கு அதன் குஞ்சு பொன் குஞ்சு ஆக இருந்தாலும் காக்கைகுஞ்சையும் கிளி குஞ்சையும் ஓரிடத்தில் காண்பவர்கள் எந்த குஞ்சை தேர்ந்தெடுப்பார்கள் என்பது தருமிக்கும் தெரியும் கருமிக்கும் தெரியும்//

    மனிதன் கண்ணுக்கு கிளி அழகாக தெரிகிறது எனப்தற்காக காக்காவின் குஞ்சு கிளிஅம்மாவிடம் போகமுடியுமா? அதுதான் தருமி கேட்பது. கொஞ்சம் புரிந்துகொண்டு எழுத முயற்சிக்கவும்

  44. நிலா நான் நிஜங்களை சொல்லுகிறேன் நீங்கள் நிழலாய் ஆடுகிறீர்கள் இந்திராகாந்தி பிரதமராக வந்தார் சொத்துரிமை அடைப்படையிலா?வாரிசு இல்லாததால் .சிலர் தங்கள் மகன்களுக்கு சொத்துக்களை கொடுக்காமல் மகள் களுக்கு கொடுத்து இருப்பார்கள்.இதற்கு பெயர் சொத்து உரிமையா?சட்டரீதியாக பெண்களுக்கு சொத்துரிமை வந்தது எப்போது?
    ////இஸ்லாமிய வங்கி, வட்டியில்லா முறை என்பதெல்லாம் சுத்த டுபாக்கூர்.///
    இப்படி இங்கிருந்து பேசுவதுதான் டுபாக்கூர்.
    //.பால்ய விவாகத்தையும் முதலில் தடுத்தது இஸ்லாம்தான் //
    இதுதான் உலகமகா ஜோக் என்பது.////
    கோமாளிகளுக்கு உண்மைகள் ஜோக்காகவே தெரியும்.
    ///ஏன் மணக்காமல் அந்த போதனையை சொல்லமுடியாதா?///
    இல்லற வாழ்க்கை பற்றி அந்நிய பெண்களிடம் உரையாடுவது இரு சாராருக்குமே வெட்க உணர்வுகள் இருக்கவே செய்யும் காமம் தான் பிரதானம் என்றால் அவர் நினைத்திருந்தால் இளம் பெண்களை மணம் செய்திருக்க முடியும்.மேலும் அவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் இல்லை .இதன் மூலம் அதிகமாக அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்பது கோமாளிகளுக்கு புரியாது.காம உணர்வு அதிகம் இருக்கும் இளமையில் ஒரு மனைவியுடன் வாழ்ந்தவர் ,அதாவது 25 ஆண்டுகளாக ஒரு மனைவியுடன் வாழ்ந்தவர் தனது ஐம்பது வயதுக்கு பிறகு பல மனைவியருடன் வாழ்ந்தால் காமத்தை விடுத்து வேறு காரணங்கள் இருக்குவேண்டும் என்பது காழ்புணர்வு மிக்கவர்களுக்கு புரியாது.

    ///மாதவிடாய் பெண்களிடம் உடலுறவு கொள்வதை தவிர்ப்பதை தவிர மற்றபடி அந்த நிலைகளில் மற்ற பெண்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடுகளும் காட்டக்கூடாது என்று 1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் நடைமுறை படுத்தியதை இப்போதுதான் உலகம் நடை முறைபடுத்தியுள்ளது////
    விமர்சிக்க வழியில்லை.

  45. ///அதுதான் தருமி கேட்பது. கொஞ்சம் புரிந்துகொண்டு எழுத முயற்சிக்கவும்////
    காக்கையும் கிளியும் தன குஞ்சுகள் பொன் குஞ்சுகள் என்றே நம்பும் .ஆனால் .பார்க்கும் மனிதர்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்?என்பதே என் கேள்வி
    நிலா கொஞ்சம் நான் சொன்னதை புரிந்து கொண்டு எழுத முயற்சிக்கவும்

  46. ////அவர் இப்படி மூத்திரம் போனார் என்பதையெல்லாம் பார்த்து அப்படியே மூத்திரம் போகும் ///
    உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள்.அதன் பின்னர் நீர் விட்டு கழுவுங்கள் என்று ஒழுக்கத்தை கற்று தந்தார்.நாற்பது நாட்களுக்கு மேல் தேவையற்ற முடிகளை அகற்றுங்கள் என்றார்.இதை நவீனமும் ஏற்றுக் கொண்டது.

  47. இப்ராஹிம்
    இந்தியாவின் புராதனமான மிடாக்‌ஷரா சட்டத்திலேயே பெண்களுக்கு சொத்துரிமை உண்டு. போய் படித்து பார்க்கவும்.

    காக்கை கிளி உங்களுக்கு இன்னமும் புரியவில்லை. புரிந்துகொள்ள முடியவில்லை போலிருக்கிறது. ஒரு நாள் உட்கார்ந்து சிந்தித்து பாருங்கள்.

    திருமணம் செய்துதான் காட்டவேண்டுமா என்று கேட்டதற்கு பாவம் முகம்மதுவே இல்லாத வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாம் கொண்டுவந்து டான்ஸ் ஆடுகிறீர்களே.

  48. அக்கா மகளை அதாவது மருமகளை திருமணம் செய்வது முஸ்லிம்கள் அல்ல

  49. நிலா,அந்த சட்டத்தை இங்கே காப்பி பேஸ்ட் செய்திருக்கலாம் அல்லவா? மற்றபடி உங்களது பதில்கள் பல்லிலுத்து கொண்டிருக்கின்றன.

  50. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த நிகழ்ச்சி ஸவ்தா பின்ட் ஜமா என்ற ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகும். இப்பெண் ஆரம்பகால இஸ்லாமியர்களில் ஒருவராக இருந்த “அஸ் ஸக்ரன் இபின் அமர் இபின் அப்த் ஷம்ஸ் (as-Sakran ibn ‘Amr ibn ‘Abd Shams)” என்ற ஒருவரை திருமணம் செய்து இருந்தார். மக்காவில் தனக்கு கொடுமைகள் அதிகரித்ததால், இவர் தன் மனைவியாகிய ஸவ்தாவையும், இன்னும் தன் நண்பர்களாகிய ஏழுபேரோடும் கூட‌எத்தியோப்பியாவிற்கு தப்பித்துச் சென்றார். எத்தியோப்பியாவில் ஸவ்தாவின் கணவர் மரித்துவிடுகின்றார், இதனால் அப்பெண் தன் தாய் நாட்டிற்கு திரும்பி வருகிறார்.
    இந்த கால கட்டத்தில் தான் முஹம்மது தன் மனைவி கதிஜாவை இழந்து தனிமரமாக நிற்கிறார்.

    சீக்கிரத்திலேயே முஹம்மது ஸவ்தாவை திருமணம் செய்துக்கொள்கிறார். ஸவ்தாவின் மற்றும் முஹம்மதுவின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பினால் இவர்கள் வேதனை அடைந்து இருப்பதினால், ஒருவரின் மனவேதனையை இன்னொருவர் புரிந்துக்கொண்டவர்களாக இவ்விருவர் ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு வாழ்ந்தனர்.

    காலம் செல்லச் செல்ல, முஹம்மது இன்னும் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொண்டார். அவர் மரிப்பதற்கு முன்பாக அவருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தார்கள்.

    இபின் கதீர் என்ற‌ இஸ்லாமிய விரிவுரையாளர் கூறும் போது, முஹ‌ம்ம‌து ம‌ரிக்கும் போது அவ‌ருக்கு ஒன்ப‌து ம‌னைவிக‌ள் இருந்தாக‌ கூறுகிறார்.

    ஆனால், முஹம்மது தன் நாட்களை எட்டு மனைவிகளுக்கு மட்டும் பகிர்ந்து கொடுத்து இருந்தார். முஹம்மது செல்லாத அந்த ஒன்பதாவது மனைவி யார் என்று கேட்டால், அவர் தான் ஸவ்தா என்பவராவார். இந்த ஸவ்தா என்ற முஹம்மதுவின் மனைது தன்னிடம் வந்து முஹம்மது தங்கும் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்து இருந்தார்.
    முஹம்மதுவிற்கு ஒரு நீண்ட கால துணையாக மனைவியாக வாழ்ந்த ஸவ்தா, ஹதீஸ்கள் கூறுகின்றபடி, தனக்கு இருந்த மனைவி என்ற உரிமையை அதாவது முஹம்மது தன்னிடம் செலவிடுகின்ற நாளை விட்டுக்கொடுத்தாராம். ஸவ்தாவிற்கு ஒரு கணவன் என்ற முறையில் செய்யவேண்டிய கடமையை மட்டுமல்ல, ஸவ்தாவை சந்திப்பதையும் நிறுத்திக்கொண்டாராம் முஹம்மதுமுஹம்மது. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா? ) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?

    2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?

    3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?

    4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுயும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது

  51. நண்பர், நான் நாத்திகன் தயவுடன் வேண்டுவது கீழே உள்ள சுட்டியில் முஹம்மது நபி[ஸல்] பலதாரமணம் பற்றி படித்துவிட்டு பின்னர் உங்கள் விமர்சனத்தைத் தொடரலாம்

    http://onlinepj.com/books/nabikal_pala_thirumanangal_seythathu_en/ .

  52. முஹம்மதுவின் விருப்பம்/ஆசை/காமம் எதுவென்று நபித்தோழர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது, அதனால், தான் தங்கள் குருவிற்கு விருப்பமானது எது என்று புரிந்துக்கொண்டவர்களாக கண்ணில் பட்ட அழகான பெண் பற்றி தங்கள் குருவிடம் சொன்னார்கள். பெண்கள் என்றால் அதிக விருப்பமில்லாத ஒரு மனிதரிடம் அவருடைய சீடர்கள் பெண்களைப் பற்றி கூறுவார்களா.பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருப்பவர்கள், அப்பெண்ணை தனியாக அழைத்து, ஒரு கோட்டையில் தங்க வைத்து பெண் பேசுவார்களா? அல்லது அப்பெண்ணின் பெற்றோர்களிடம், அல்லது பெரியவர்களிடம் முதலாவது தன் விருப்பத்தைச் சொல்லி, பெற்றோர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, பெற்றோர்களின் உதவியுடன் தன் திருமண விருப்பத்தை அப்பெண்ணிடம் சொல்ல முயற்சி எடுப்பார்களா?………

    19) ஒரு வழிகாட்டி என்ற நிலையில் இருக்கும் முஹம்மதுவிற்கு, இதுவரை இருக்கும் மனைவிகள் போதாதா? இன்னும் மனைவிகள் தேவையா? கணக்கில்லாமல் திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் ஒருவர் எப்படி உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.
    1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?

    2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?

    3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?

    4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுவும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?தன்னோடு உடலுறவு கொள்ளும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்?

  53. இப்ராஹிம்,

    நித்யானந்தாவுக்கு முகம்மதுவுக்கும் ஆறு ஒற்றுமைகள் ஆறு வேற்றுமைகள் சொல்லுங்களேன்.
    நான் நித்யானந்தா சீடர்களுக்கும் முகம்மதுவின் சீடர்களுக்கும் ஆறு ஒற்றுமைகள் சொல்லுகிறேன்.

    வேண்டுமானால் ஒன்று ஆரம்பித்து வைக்கிறேன். நித்யானந்தா 35 வயது பெண்ணுடன் உடலுறவு கொண்டார். முகம்மது 6 வயது பெண்ணுடன் உடலுறவு கொண்டார். நித்யானந்தா செய்தது தப்பு என்றால் முகம்மது செய்தது என்ன?

    நித்யானந்தா தன்னை எதிர்த்தவர்களை கொல்ல ஆள் அனுப்பவில்லை. முகம்மது தன்னை எதிர்த்த கவிஞரை கொல்ல ஆள் அனுப்பி கொன்றார்.

    நித்யானந்தா தன்னை கடவுளின் தூதர் என்று சொல்லி ஊரை ஏமாற்றவில்லை. முகம்மது தன்னை கடவுளின் தூதர் என்று சொல்லி ஊரை உலகத்தை ஏமாற்றினார்.

    நித்யானந்தா தன்னை நம்பாதவர்களின் வியாபார வண்டிகளை கொள்ளையடிக்கவில்லை. முகம்மது தன்னை கடவுளின் தூதர் என்று நம்பாதவர்களின் வியாபார வண்டிகளை தன் சீடர்களை வைத்துகொண்டு கொள்ளையடித்தார்.

    நித்யானந்தாவின் சீடர்கள் யாரும் சொல்லாமலேயே ஒண்ணுக்கு போய்விட்டு கழுவுவர்கள். ஆனால் முகம்மதுவின் சீடர்களுக்கு முகம்மது சொல்லவில்லை என்றால் ஒண்ணுக்கு என்றாலே என்னவென்று தெரியாது

    தொடருங்கள்.

  54. நான் நாத்திகன் ;’அய்யய்யோ கடையில் உள்ள பணத்தை திருடி காரையும் திருடி அதில் ஓடிவிட்டான் ”
    இப்ராஹீம்;:நான் நாத்திகா, அது எனது கடை அதில் இன்று வசூலான பணத்தை பாங்கில் டெப்பாசிட் பண்ண எனது காரில் கொண்டு செல்கிறேன்”
    நான் நாத்திகன்; :அய்யய்யோ கடையில் திருடி காரையும் திருடி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான்”.

  55. முஸ்லிமாகிய எனக்கும் ஹிந்துவாகிய நிலாவுக்கும் அநேக வித்தியாசங்கள் இருந்தும் ஆறு வித்தியாசங்களை பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.
    1. நான் எனது மதத்தை பற்றிய விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன்.
    நிலா தனது மதத்தைப் பற்றிய நாத்திகர்களின் விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை அல்லது பதில் சொல்ல இயலவில்லை.
    2. நான் அடுத்த மதங்கள் பற்றிய நாத்திகர்களின் விமர்சனகளை கண்டுகொள்வதில்லை .நிலா இஸ்லாத்தை பற்றி கிஞ்சிற்றும் குறை கிடைத்தால் அதை தூக்கிக் கொண்டு ஆடுவதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்.
    3.நான் கண்ணியமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன் .நிலா
    கண்ணியக் குறைவான வார்ர்த்தைகளை மட்டுமே பயன்படுத்துவார்.
    4. நான் ஆதாரங்களுடன் பதில் தருகிறேன்.நிலா அவதூறுகளை மட்டுமே பதிலாக தருவார்.
    5.நான் மற்ற மதங்கள் மீது பொறாமை கொள்ளவில்லை .நிலா இஸ்லாத்தின் மீது பொறாமையில் பொங்கி எழுகிறார்.
    6. நான் பிற மதத் தலைவர்களை பொருட்படுத்துவது இல்லை.நிலா இஸ்லாமியத்ததலைவர் பற்றி அவதூறுகள் அள்ளிவீசுவதையே தொழிலாகக் கொண்டவர்.

  56. மௌதுதி (Maududi: மரணம் – 1979) என்பவர் மிகவும் மதிக்கப்பட்ட‌ குர்‍ஆன் விரிவுரையாளர், அவர் இவ்வார்த்தைகளுக்கு பொருள் கூறுகிறார், அதாவது “அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது நியாயமானது” என்று விளக்கிக் கூறுகிறார். ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். திருமணம் தான் நிபந்தனை என்று இருந்திருந்தால் அடிமைப் பெண்களும் மனைவிகளில் ஒருவராக ஏற்கப்பட்டிருப்பார்கள், அவர்களை தனியே பிரித்துக் கூற வேண்டியிருக்காது. போரில் பிடிப்பட்ட பெண்கள், திருமணமாவர்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி, தங்கள் ஆண் எஜமானர்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். அதாவது, அந்த எஜமான்கள் தங்கள் அடிமைப்பெண்களிடம் (சொத்துக்கள் – இஸ்லாமின் படி அடிமைப்பெண்கள் எஜமான்களின் உடமைகள்) உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, ஆனால் அல்லாஹ் அதில் விருப்பமற்றவாராக இருக்கிறார் – இப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது.நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் ‘குமுஸ்’ நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்

  57. முகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று “தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றுச் சொல்கிறார்.

    அதற்கு முகமது, “வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்” என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன்.முகம்மது செய்த கொலைகள்
    டாக்டர் ஏ. என். சலீம்
    முகம்மது எவ்வாறு தன்னை விமர்சிப்பவர்களை ஆள் வைத்து தீர்த்துக்கட்டியிருக்கிறான் என்பதை முகம்மதுவின் வரலாற்றை எழுதியவர்கள் குறித்து வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து கீழ்க்கண்டதை பார்க்கலாம்.
    மதபோர்வை போர்த்திக்கொண்டு, வரும் போகும் எல்லா காரவான்களையும் கொள்ளையடித்து முகம்மது வாழ்வதை அருகிலிருந்து பார்த்தவர்களில் ஒருவர் சுலாஸ் பின் சுவாயித் பின் சாமத் அவர்கள். முகம்மது தன்னை நம்பி வந்த சீடர்களை இப்படி கீழ்த்தரமான வழிக்குக் கொண்டு செல்வதைக் கண்டு தன்னொத்த அன்சார்கள் இன்று கொள்ளையடித்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதை கண்டு மனம் வருந்தி தன் நண்பர்களான அன்சார்களிடம் “முகம்மது உண்மையிலேயே ஒரு நபியாக இருந்தால், இப்படி கழுதைகளைப் போல நாம் வாழமாட்டோ ம்” என்று புலம்பினார். மற்ற வரிகளில் சொல்வதென்றால், முகம்மதின் தலைமை, அன்சார்களை கழுதைகளை விட கேவலமானவர்களாக ஆக்கிவிட்டதை கூறியிருக்கிறார். ஆனால், இந்த விமர்சனத்தை கேட்ட சுலாஸின் தத்து புத்திரனான உமைர் பின் சாத், முகம்மதின் உளவாளியாக இருந்து முகம்மதிடம் சொல்லிவிட்டான். முகம்மதின் கைக்கூலிகளால் கொல்லப்படுவதை நினைத்து அஞ்சிய சுலாஸ் முகம்மதிடம் ஓடிச்சென்று, தான் அப்படிச் சொல்லவேயில்லை என்று சத்தியம் செய்தார். சுஇலாஸின் சகோதரனான ஹரித்-பின்-சுயாத்-பின் சமத் என்பவர் தப்பிச்சென்று மெக்காவின் குரேஷிப்படையில் சேர்ந்து [2] பின்னர் மெதீனாவுக்கு திரும்பி வந்தபோது முகம்மதுவின் ஆணையால் கொல்லப்பட்டுக்கிடந்தார் [3].
    அபு அமீர் அப்த் அம்ரு என்ற ஒரு துறவியும் முகம்மது இப்படி ஆபிரஹாமின் மதத்தை அழித்துக்கொண்டிருப்பதைக் கண்டு கொண்டார். தனது மக்கள் இப்படி இஸ்லாத்தில் கட்டாயமாக சேர்க்கப்படுவதைக் கண்ட இந்த துறவி, முஸ்லீம்களுடன் வன்முறையாக போராட மனமின்றி மெக்காவுக்கு சென்றார். இவ்வாறு துறவி மெக்காவுக்குச் சென்றதை கேள்விப்பட்ட முகம்மது” அவனை துறவி என்று சொல்லாதே, பாவி என்று சொல்” என்று சொன்னான். முஸ்லீம்கள் மீண்டும் மெக்காவை ஆக்கிரமித்தபோது, அபு அமிர் அவர்கள் டையிஃப்க்கு தப்பிச் சென்றார். அங்கிருக்கும் மக்களும் இஸ்லாத்துக்குள் சேர்க்கப்பட்டபோது, அவர் சிரியாவுக்கு தப்பிச் சென்று அங்கு இறந்தார். (4)
    மெதீனாவில், பானு அமிர் பின் அவ்ஃப் இனத்தை சார்ந்த பானு உபைய்தா குடும்பத்தை சார்ந்த அபு அஃபக் என்ற வயதானவர் இருந்தார். கடவுளின் பெயரால் முகம்மது இபப்டி கொலைகள் செய்வதை நியாயப்படுத்தி நாசம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். இவர் வயதானவராக இருந்ததால், உண்மையைச் சொல்ல அஞ்சாதவராகவும் இருந்தார்.
    நான் வெகுகாலம் வாழ்ந்திருப்பவன்
    வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும்,
    அன்பாக உபசரிப்பதிலும் ஈடிணையற்ற
    அன்சார் போன்றதொரு இனத்தை பார்த்ததில்லை.
    இவர்கள் அஸ் மற்றும் கஜ்ராஜின் தாய்வழி மூதாதையர்
    மலைகளை பெயர்ப்பார்களேயன்றி யாருக்கும் அடிபணியமாட்டார்கள்
    ஆனால் இவர்களது விருந்தினன் முகம்மது அவர்களை மோசம் செய்து விட்டான்
    தனது போதனையால் ஒரே மூச்சில்
    அனுமதிக்கப்பட்டதையும் அனுமதிக்கப்படாததையும் கலந்தடிக்கிறான்
    சட்டப்பூர்வமானதையும் சட்டப்பூர்வமில்லாததையும் கலக்கிறான்
    அபு அஃபக் மிகச்சரியாகவே முகம்மதுவின் சைக்கோ குணத்தை கண்டுபிடித்திருக்கிறார். அதிகார வெறியில் முகம்மது எது சரியானது எது சரியில்லாதது என்று பிரித்துபார்க்க முடியாதவனாக ஆகிவிட்டான். தாங்கள் செய்த குற்றங்கள் வெளியே தெரிந்துவிட்டால், பெரும்பாலான சைக்கோக்கள் தங்கள் நிதானத்தை இழந்துவிடுவார்கள். அப்படியே இந்த முகம்மதுவும் நிதானம் இழந்து “யார் இந்த அபு அஃபக்கை எனக்காக கொல்வார்கள்?” என்று தனது சீடர்களிடம் கேட்டான். சலீம் பின் உமைர் என்ற தீவிரவாத முஸ்லீம் தான் செய்கிறேன் என்று எழுது சென்று அபு அஃபக்கை நள்ளிரவில் கொன்றான். முகம்மதுவின் புகழ் பாடும் ஒரு கவிக்கோ, உமாமா பின் முசாய்ரியா, பின்வருமாறு கவிதை பாடினார்.
    அபு அஃபக், நீ அல்லாவின் மதத்தை எதிர்த்தாய்
    முகம்மதுவை பொய் சொல்கிறான் என்று சொன்னாய்
    உண்மையான ஒரு நம்பிக்கையாளன் உன்னை பாதாளத்தில் தள்ளிவிட்டான்
    இரவின் கருத்த இருட்டில்,
    “இதோ அபு அஃபக், உன் முதுமைக்கு ஒரு பரிசு” என்றவாறு.
    பேய் கொன்றதா மனிதன் கொன்றானா
    நான் சொல்லமாட்டேன் யாரென்று [5]
    பேய் கொன்றதா மனிதன் கொன்றானா? (Whether it was a jinn or man who slew you) என்ற வரிக்கு ஒரு விளக்கம் எழுதவேண்டும். ஜின்கள் என்ற பேய்கள் முகம்மதுவை பாதுகாக்கின்றன; அவைகளே அவன் சார்பாக கொலை செய்கின்றன என்று முகம்மதுவின் சீடர்கள் வதந்தி பரப்பி வந்தார்கள். இந்த பிரச்சாரமும் ஒரு காரணத்துடனேயே செய்யப்பட்டுவந்தது. அந்த கால அரேபியாவில் படிப்பறிவற்ற, ஏழையான, சரியாக விஷயம் தெரியாத, மூடநம்பிக்கையில் மூழ்கிய, இது போன்ற நபிகள், சாமியார்கள் போன்றவர்களை நம்பிய மக்களிடம் ஒரு பய உணர்வை ஏற்படுத்துவதும், அதன் மூலம் மனோதத்துவ ரீதியில் அவர்களை சிறைப்படுத்தி முகம்மதுவைப்பற்றி பாராட்டு, பயம், மரியாதை ஆகியவற்றை ஏற்படுத்துவதும்தான். [[1]]. இவ்வாறுதான் அந்தகால அரேபியாவில் நபி என்று தங்களை கூறிக்கொண்டவர்களும் சாமியார்களும் மக்களை பயமுறுத்தி ஏமாற்றி தன் சீடர்களையும் மக்களையும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். இருப்பினும் அந்த காலத்தில் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை வெளிப்படையாக எள்ளி நகையாடி வந்தவர்களும் இருந்தார்கள். அபு அஃபக் கொலை செய்யப்பட்ட செய்தி பரவியவுடன் அஸ்மா பின்ந் மார்வான் என்ற பெண்மணி சொல்லொண்ணா துயரம் அடைந்தார். இவர் பானு உமையா பின் ஜைத் இனத்தைச் சார்ந்தவராகவும், பானு காத்மா என்ற இனத்தைச் சார்ந்த மனிதரை திருமணம் செய்தவராகவும் இருந்தார். இது பேய்களோ ஜின்களோ அல்ல, முகம்மதின் கைக்கூலிப்படையில் ஒருவன் தான் இப்படி அபு அஃபக் அவர்களை கொலை செய்திருக்கிறான் என்பதை புரிந்து வைத்திருந்தார். தன் துயரத்தின் காரணமாக,
    மெதீனாவின் இனங்களின் பொது மூதாதையர்களின் பேரில் சொல்கிறேன்.
    அன்னியனுக்கு கீழ்ப்படிந்து உங்கள் தலைவர்களை கொல்கிறீர்கள்
    அன்னியனுக்கு மிகவும் நம்பிக்கை கொடுக்கிறீர்கள்.
    சமையல்காரனின் உணவுக்கு காத்திருக்கும் பசிகொண்டவனைப்போல. (உங்களை தின்னப்போகிறான்)
    இந்த தீய கூட்டத்தை எதிர்க்க கௌரவமான ஒருவன் கூட உங்களில் இல்லையா?
    சுயலாபம் தேடுபவனின் நம்பிக்கைகளை உடைக்க உங்களில் ஒருவனும் இல்லையா?
    —-
    அஸ்மா இவ்வாறு பேசினார் என்று கேள்விப்பட்ட முகம்மது கோபம் கொண்டு, “மார்வானின் மகளை யார் எனக்காக கொல்வீர்கள்?” என்று கேட்டான். அஸ்மாவின் கணவனின் இனத்தைச் சார்ந்த உமைய்ர் பின் அதியால் காத்மி என்ற முகம்மதுவின் சீடன் அந்த இரவே அஸ்மாவை கொன்றான். காலையில் கொலைகாரன் உமைய்ர் முகம்மதுவை பார்க்க வந்து முகம்மது கேட்டதை செய்துவிட்டேன் என்று கூறினான். முகம்மது அவனை ஆசீர்வதித்தான். “ஓ உமைய்ர் நீ அல்லாவுக்கும் அல்லாவின் தூதருக்கும் உதவி செய்தாய்!” என்றான். அஸ்மாவின் ஐந்து மகன்களால் தான் பழிவாங்கப்படுவோம் என்று அஞ்சிய உமைய்ர் தான் அவர்களால் கொல்லப்படுவோம் என்று அஞ்சுவதாக தெரிவித்தான். இதனைக் கேட்ட முகம்மது, “இரண்டு ஆடுகள் கூட அவளுக்காக முட்டிக்கொள்ளாது” என்று கூறினான். தனது கைக்கூலியை காப்பாற்றுவதற்காக, முகம்மது, “ஏ பானு காத்மா மக்களே, நான் மார்வானின் மகளை கொன்றேன். உங்களால் முடிந்தால் என்னை எதிர்த்து நில்லுங்கள்” என்று சவால் விட்டான். முகம்மதுவின் கொலைவெறித்தனத்துக்கு அஞ்சிய பானு காத்மா மக்கள் முகம்மதுவிடம் வந்து முஸ்லீம்கள் என்று பதிந்து கொண்டார்கள். முகம்மதுவின் அரசவை கவிஞர் ஹிசான் பின் தாபித் இவ்வாறு முஸ்லீம்கள் பாதுகாப்பற்ற ஒரு பெண்ணை ௾வ்வாறு கொன்றதை இப்படி கொண்டாடுகிறார்.
    பானு காத்மா, பானு வாகிஃப், பானு வாயில் ஆகிய உங்கள் இனங்கள்
    பானு காஜ்ராஜையும் அன்சாரையும் விட தாழ்ந்த இனங்கள்
    தனது துயரத்தால், அவள் அழும்போது முட்டாள்தனத்துக்கு அழைத்தாள்
    சாவுதான் வந்தது. அவள் தலைமேல் சுற்றிக்கொண்டிருந்தது
    நல்குடியில் பிறந்த முகம்மதுக்கு சவால் விட்டாள்.
    முகம்மதுவே நல்ல நடத்தைக்கு உதாரணம்
    அவள் நள்ளிரவில் அவன் அவளது முடியை அவளது ரத்தத்தால் சாயமேற்றினாள்
    அவன் பாவி அல்ல (7)
    “அவன் பாவி அல்ல” என்ற வரிக்கு விளக்கம் தேவை. தன் நபி வேஷத்தை எதிர்ப்பவர்களையும், முகம்மது ஊரை ஏமாற்றுகிறான் என்ற உண்மையை சொல்பவர்களையும் கொல்வதை சட்டப்பூர்வமாக ஆக்கிக்கொண்டான். ஆகையால், ஒரு பெண்ணை நள்ளிரவில் கொன்ற பின்னாலும், பொதுவாக அன்றைய காலத்து அரேபியர் நினைத்ததைப் போன்று அவன் பாவி அல்ல என்பதை இவர் வலியுறுத்துகிறார். இதைத்தான், அபு அஃபக், எது சட்டப்பூர்வமற்றதோ அதனை சட்டப்பூர்வமாக்குகிறான் முகம்மது என்று புலம்பியிருந்தார். இந்த கவிதை மூலம் “கௌரவமான செயல்” என்பதன் வரையறை மாறுகிறது. “யாரெல்லாம் முகம்மதுவின் விமர்சகர்களை கொல்கிறார்களோ அவர்கள் கௌரவமானவர்கள்” (6)
    முகம்மதிவின் உளவாளிகள் சொன்னதன் அடிப்படையில் முகம்மது தனது கொலை ஆணைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தான்.

  58. எனக்கு வயது 26. ஒரு நல்ல குடும்பத்தைச் சார்ந்த ஒரு நல்ல பெண் எனக்கு தெரியவந்தது. நான் அவளை திருமனம் செய்து கொள்ள விரும்பி அந்த பெண்ணின் பெற்றோர்களிம் கேட்க விரும்புகிறேன்.
    பிரச்னை என்னவென்றால், அவளுக்கு வயது 13தான் ஆகிறது. அவள் என்னைவிட 13 வயது இளையவள்.
    அவளை திருமணம் செய்துகொள்ள கேட்பது ஒழுக்கமானதா? இந்த வயசு வித்தியாசம் காரணமாக, அது சமூகத்திலும் மதத்திலும் சரியானதா என்று கேட்க விரும்புகிறேன்.
    இது ஒரு வேளை அனுமதிக்கப்பட்டதாக இருந்தால், ஒரு பெண்ணின் விருப்பத்தைக் கேட்டு திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் கோருகிறதே.
    ஒரு மிக இளம் பெண்ணால், எப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுக்க முடியும்?
    இப்படிப்பட்ட விதயங்களில், எப்படி இஸ்லாம் இப்படிப்பட்ட திருமணத்தை அனுமதிக்கிறது என்று கேட்க விரும்புகிறேன்.
    பதில்:
    அல்லாவுக்கு புகழ்.
    உங்கள் இருவருக்கும் பெரிய வயசு வித்தியாசம் இருந்தாலும் இந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதில் எந்த தவறும் இல்லை. அவள் மத நம்பிக்கையுடையவளாகவும் நல்ல குணமுள்ளவளாகவும் இருப்பதே முக்கியம். இதுதான் திருமணத்தில் சந்தோஷமும் இணக்கமும் கொண்டுவரும். இன்ஷா அல்லா.
    வயதுக்கு வராத இளம் (மைனர்) பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கான அங்கீகாரத்தை அல்லாவின் இந்த வரிகள் நிரூபிக்கின்றன.

    65:4 மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், ‘இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும். தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (’இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும். மேலும், எவர் அல்லாவுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
    ஆகவே, இன்னும் மாதவிடாயே வராத பெண்களுக்கு இத்தா காலம் 3 மாதங்கள். இத்தா என்பது திருமணமானவர்கள் விவாகரத்து பெற்றதும் திரும்ப திருமணம் செய்துகொள்ள காத்திருக்க வேண்டிய காலம். இது இங்கு குறிப்பிடப்பட்ட பெண் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவள் என்பதைக் காட்டுகிறது.
    முகம்மது நபி அயீஷாவை திருமணம் செய்யும்போது ஆயீஷாவின் வயது 6. அயீஷாவுக்கு 9 வயதாகும்போது திருமணத்தை பூஇர்த்தி செய்தார். அந்த சமயம் அவருக்கு வயது 50க்கும் மேல்.
    அல் புகாரி (3894) முஸ்லீம்(1422) ஆகியவை அயீஷா சொன்னதை குறிப்பிடுகின்றன. : நபி என்னை 6 வயதாக இருக்கும்போது திருமணம் செய்தார். எனக்கு 9 வயதாக ஆகும்போது திருமணத்தை பூர்த்தி செய்தார்.
    ஒரு பெண்ணுக்கு 13 வயதாக ஆகும்போது அவள் பூப்படையும் காலத்தை அடைந்திருப்பாள். இந்த சமயத்தில் அவளது ஒப்புதல் தேவை என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். நபி, “முன்பே திருமணம் செய்தவளைக் கேட்காமல் அவளை திருமணம் செய்யக்கூடாது, கன்னிப்பெண்ணாக இருந்தால் அவளது அனுமதி பெற்றிருக்கவேண்டும்” அவர்கள் கேட்டார்கள்.”கன்னிப்பெண்ணின் அனுமதி என்ன?” நபி சொன்னார், “அவளது மௌனம்” இது அல் புகாரி 5136 முஸ்லீம் 1419இல் கூறப்பட்டுள்ளது.
    ஒரு பெண் இன்னும் பூப்படையவில்லை என்றால், அவளது தந்தையே அவளது திருமணத்தை நிர்ணயிக்க முழு உரிமை படைத்தவர். அவர் அவளது சம்மதத்தை கேட்கவேண்டியதில்லை.
    இபின் குதாமா கூறினார்: கன்னிப்பெண்ணாக இருக்கும் மைனர் பெண் சம்பந்தமாக எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. (அதாவது அவள் எதிர்த்தாலும் அவளது தந்தை அந்த பெண்ணை திருமணம் செய்துகொடுக்கலாம்) இபின் அல் முந்திர் கூறினார்: ஒரு தந்தை தன் மகளை அவள் எதிர்த்தாலும் மறுத்தாலும் தந்தை விரும்பும் ஒருவருக்கு திருமணம் செய்துகொடுக்கலாம்.” அல் முக்னி 9/398)
    9 வயதாகிவிட்ட பெண் பூப்படைந்த பெண்ணுக்கு சமானம் என்று இமாம் அஹ்மது கூறியிருக்கிறார். ஆகவே அவள் சம்மதம் பெறவேண்டும். தந்தை அவளது சம்மதத்தை கேட்டு திருமணம் செய்வது நல்லது (அல் முக்னி 8/398-405)
    அல்லாவுக்குத் தெரியும்

    #
    பெண்ணின் திருமண வயது
    End translation
    #
    இதில் கவனிக்க வேண்டியவிஷயம், பெண்ணின் குறைந்த பட்ச திருமணவயது என்று எதுவுமே நிர்ணயிக்கப்படவில்லை என்பதே. அப்போதுதான் பிறந்த பெண் குழந்தையைக் கூட ஒரு 50 வயதுக்கு மேற்பட்ட கிழவனுக்கு திருமணம் செய்து தரலாம். தடையேதுமில்லை.
    இது ஆலோசனை அல்ல. மனிதர்கள் எழுதிய சாஸ்திரங்கள் என்று இந்துக்கள் கூறக்கூடிய சாஸ்திரங்கள் அல்ல. இது கடவுள் சொன்ன சட்டம் என்று ரீல் சுற்றப்படும் சட்டம். இதுதான் இஸ்லாமிய நாடுகளில் சட்டம். இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நிறைந்த ஷாரியா சட்டத்தை அமல்படுத்தினால் பாலும் தேனும் ஓடும் என்று ரீல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். முல்லாக்களிடம் காசு வாங்கிக்கொண்டு, தமிழ்நாட்டிலும் ஒரு கும்பல் இந்த குப்பைக்கு ஆதரவாய் ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறது.
    #
    பெண்ணின் விருப்பத்தோடு திருமணம் செய்வதும், விவாகரத்தானவர்கள் திரும்பவும் திருமணம் செய்வதும் அந்த கால அரேபியாவில் இருந்து வந்த பழக்கங்கள். உதாரணமாக, கதீஜாவின் இரண்டாவது கணவர் இறந்ததும் அவர் முகம்மதை திருமணம் செய்தார். அதுவும் கதீஜாதான் முகம்மதுவை கேட்டார். இது போல ஹதீஸில் ஏராளமான உதாரணங்கள் இவ்வாறு விவாகரத்து மறு திருமணம் ஆகியவை இருக்கின்றன. இவற்றை முதன் முதலில் அரேபியாவில் கொண்டுவந்தது முகம்மது என்று ரீல் சுற்றுவதை தமிழகத்தில் பலர் நம்புகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. சொல்லப்போனால் அந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த பல உரிமைகளை பறித்தது முகம்மதுதான்.
    அது பற்றி சில நாட்களுக்கு முன்னால் இந்த பதிவை எழுதியிருக்கிறேன்.
    #
    ஆனால், முகம்மது குரான் மூலம் கொண்டுவந்த சில சட்டங்கள், பெண்ணின் நிலையை மிகவும் தாழ்த்தின.
    முதலாவது புர்காவை பெண்கள் மீது திணித்தது.
    இரண்டாவது ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று அனுமதித்தது
    மூன்றாவது பெண்கள் தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று விதித்தது
    நான்காவது ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்று குரானில் கூறிவிட்டுச் சென்றது.
    இது மாதிரி நிறைய…
    அத்தோடு இந்த குழந்தை திருமணத்தையும் இணைக்கவேண்டும். அதற்கு முகம்மதின் தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம்.

    சில முஸ்லீம்கள் ஏதோ அபு பக்கர்தான் முகம்மதை அணுகி தன் மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக கூறுவார்கள். அதுவும் உண்மையல்ல. இதோ ஆதாரம்
    .”
    6 வயதான தன் மகளை ஐம்பதுக்கு மேல் வயதான முகம்மதுவுக்கு திருமணம் செய்துகொடுக்க அபு பக்கர் தயங்கித்தான் இருக்கிறார். நான் உன் சகோதரன், சகோதரனின் மகளை எப்படி திருமணம் செய்யலாம் என்று சமாளிக்க முனைந்திருக்கிறார். ஆனால் முகம்மது விடுவதாக இல்லை. நான் மதத்தில்தான் சகோதரன். உண்மையில் இல்லை. ஆகவே உன் பெண்ணை எனக்கு திருமணம் செய்துகொடு என்றுதான் கேட்கிறான்.
    அபு பக்கரும் முகம்மதுவும் சகோதரர்கள் என்று உறுதியெடுத்திறார்கள். இருப்பினும் அப்படிப்பட்ட தத்து சகோதரத்துவத்தை அயீஷாவை திருமணம் செய்துகொள்வதற்காக உதாசீனம் செய்கிறான் முகம்மது. ஆனால் இன்னொரு ஹதீஸில் இவன் வண்டவாளம் தெரிகிறது.

    ஹம்சாவின் மகளை நீங்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாதா என்ற கேள்விக்கு, “அவள் என் தத்து சகோதரனின் மகள்” என்று மறுக்கிறான்.
    #
    முகம்மதுவின் மனநிலையை சொல்லும் ஒரு வரி இஷாக்கில் இருக்கிறது.
    இஷாக்:311 “உம்முல் குழந்தையாக அவரது காலடியில் தவழ்ந்து கொண்டிருந்தபோது அவர் சொன்னார்,”இவள் வளர்ந்தால் நான் இவளை திருமணம் செய்துகொள்வேன்” அவர் அவ்வாறு செய்வதற்குள் இறந்துவிட்டார்.
    #
    காலடியில் தவழும் குழந்தையைப் பார்த்ததும் இவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றும் ஒரு அசிங்கமான மனநிலையை பற்றி பேச வேண்டாம்.
    கேள்வி வேறு.
    அப்போதே திருமணம் செய்ய எது தடுத்தது?
    அன்றைய அரபிகளிடம் குழந்தை திருமணம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இந்த வழக்கம் அயீஷாவை திருமணம் செய்ததன் மூலம் முகம்மது புகுத்தியது என்பதைத்தான் காட்டுகிறது.

  59. இப்ராஹீம் :;நான் நாத்திக ,இது எனது கடை ,நானே கடையை நடத்தி வருகிறேன் சி.எஸ்.டி.எனது பெயரில் உள்ளது.கட்டிடமும் எனது பெயரிலே உள்ளது .இதோ ஆதாரம் சான்றிதழை பார்த்துக் கொள்ளுங்கள்.எனது கடையில் நான் பணத்தை எடுக்காமல் நான் நாத்திகனா பணத்தை எடுக்க முடியும்?

    நான் நாத்திகன்;; அய்யய்யோ ,இது வேறொருவர் கடை என்று அந்த கடை ஊழியர் சொன்னனர்.அந்த கடையில் இப்ராகிம் பணம் எடுத்து செல்வது திருட்டா இல்லையா ?அந்த கடை ஊழியர் சொன்னது ஆதாரம் தானே ?

    இப்ராஹீம்;; கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்த அந்த கடை ஊழியருக்கு விவரம் போதாது .மனேஜர் யார் ?உரிமையாளர் யார்?என்பதே தெரியாது.அந்த அரை வேக்காடு ஊழியர் சொல்லை கேட்டு இவர் [நான் நாத்திகன்]உளறுகிறார்.என்னிடம் உள்ள டாக்குமெண்ட்களை பார்த்து விட்டு அவை சரியானவைகள் என்பதை தெரிந்த பிறகும் மனமுரண்டு அந்த கடை ஊழியரின் சொல்லை கேட்டு என்னை திருடன் என்று
    சொல்லுவது அறிவுடையவர்கட்கு ஏற்புடையது அல்ல.

  60. Dear Mr.Naathigan, Where you got all the information from, I guess, from internet which claims to be islamic websites but is hosted by hardcore kaafirs who are bent on twistting and destroying the facts. There are thousands of websites like that and we know about them.
    That is where you learn and become a mulla and trying to teach us, isn’t it? from your writings I can understand instead of promoting your non-existance God theroy, or rather discussing about the topic here, you are interested only in defaming and slandering our prophets and his companions only which I think stemmed from your hatred and envy towards islam.
    so my conclusion is you are not naathigan but rss dog.

  61. நான் நாத்திகனே ,அறிவியலில் மிதக்கும் நீங்கள் அறிபூர்வமான பதில்களை உங்களால் தரமுடியவில்லையே ,நான் குறிப்பிட்ட சுட்டியை படித்துவிட்டு விமர்சனங்கள் செய்யுங்கள் என்றால் கழிசடைகளை படித்துவிட்டு சாக்கடைக்குள் புகுவதுதான் நாத்திகமா?

  62. நான் நாத்திகன், on ஜூன்13, 2011 at 4:15 மாலை said:
    ///மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த நிகழ்ச்சி ஸவ்தா பின்ட் ஜமா என்ற ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகும்.////
    ஸவ்தா கிழவியென்று யார் சொன்னது?
    இஸ்லாமிய இணையதளமான, Albaqvi.com -லிருந்து பெருமானார் மனைவியர் (உம்முஹாத்துல் முஃமினீன்)என்ற கட்டுரையிலிருந்து.…
    மனைவியர் பெயர் :ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)
    வாழ்ந்த ஆண்டுகள் : 68
    இறந்த ஆண்டுகள் :ஹி-54
    ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்தார். அதாவது, 3 + 54 = 57 ஆண்டுகள் முஹம்மது நபியின் மனைவி என்ற தகுதியுடன் ஸவ்தா வாழ்ந்திருக்கிறார். ஸவ்தா 68 வயதில் இறந்ததாக மேற்கண்ட கட்டுரை கூறுகிறது அதாவது, 68 – 57 = 11, முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்யும் பொழுது ஸவ்தாவிற்கு 11 வயதாக இருந்திருக்கலாம். ஒருவேளை 86 வயது என்பதை 68 என்று தட்டச்சுப்பிழை ஏற்பட்டதாகக் கொண்டாலும் முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்யும் பொழுது ஸவ்தாவிற்கு 29 வயதாக இருந்திருக்க முடியும். ஸல்தாவை முஹம்மதுநபி ஒதுக்கி வைக்கும் பொழுது அவருக்கு என்ன வயதிருக்கும் என்பதை நீங்களே யூகிக்கலாம். முஹம்மது நபி, ஸவ்தாவை தள்ளி வைத்ததிற்கான காரணம் மற்ற மனைவியரை விட ஸவ்தா உயரமாக, தடித்து கருத்த பெண்ணாக அழகில்லாமல் இருந்ததுதான்.

  63. மரணம்

    ஸவ்தா (ரலி) அவர்கள் முஆவியா(ரலி) ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி 21 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.

  64. ஹி ஹி ஹீ குரங்கிலிருந்து மனிதனா
    இப்படியே விட்டால் இன்னும் என்னென்ன சொல்வார்களோ தெரியவில்லை

  65. ஆமா ஆமா
    ஹய்யோ ஹய்யோ..
    குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று உளறுகிறார்களே.. அரேபியாவில் இருந்த களிமண்ணை பிடித்து பொம்மை பண்ணி அதில் ஊ என்று ஊதி அல்லாஹ் மனிதனை செய்தார் என்று கூட தெரியாமல் இப்படி குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்று உளறுகிறார்களே… இப்படியே விட்டால், உலகம் தட்டை அல்ல உருண்டை என்றும் உளறுவார்கள்.
    இப்படியே விட்டால், அல்லாவின் அத்தாட்சிகளாக உலகத்தை சுற்றி தத்தம் பாதையில் பயணிக்கின்றதாக குரானில் சொல்லப்படும் சூரியனும் சந்திரனும் கூட அப்படி சுற்றி வரவில்லை. சூரியனை உலகம்தான் சுற்றி வருகிறது என்று கூட இவர்கள் உளறுவார்கள்.

    நைஜீரியாவில் போகோ ஹராம் இஸ்லாமிய அமைப்பு குரான் படித்தான் சொல்லித்தர வேண்டும் என்று ஆரம்பிக்கப்படு உப்போது உலகமெங்கும் பரவி வருகிறது. வெகுவிரைவில் தமிழ்நாட்டிலும் உலகம் தட்டை என்று தான் சொல்லித்தர வேண்டும், உலகம் சூரியனை சுற்றி வருகிறது என்று சொல்லித்தரகூடாது அது நபிகள் நாயகம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அவர்களை பின்பற்றும் முஸ்லீம்களது மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று போராடி பாடப்புத்தகத்தை மாற்றுவோம்.

    போராடுவோம் வெற்றிபெறுவோம். அல்லாஹ் போதுமானவன்.

  66. பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரியிலிருந்து ஆரம்பித்து இன்று மனிதன் வரை வந்துவிட்டு அதனால் கிடைத்த அறிவியல்ரீதியான நவநாகரீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே அப்படியெல்லாம் இல்லை எல்லாம் ஆண்டவன் போட்ட பிச்சை என்று யூனிகோடில் எழுதும் மேதைகளுக்கு என்று ஒரு காட்டை ஒதுக்கி அங்கே ஆதாம், ஏவாள் போல வாழ ஏற்பாடு செய்தால் போவதற்கு அவர்கள் தயாரா? தினந்தோறும் புதுபுது தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன! அறிவியல் கூட தேவையில்லை, நம் சுற்றுசூழலை கொஞ்சம் ஆர்வத்தோடு கவனித்தால் போதும், ஒவ்வொரு உயிரனத்திற்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்ளலாம்! ஆனால் நம் மதவாதிகளுக்கு “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” என்ற கேள்வியை தவிர வேறு தெரியாது!, டாhttp://naannaathigan.blogspot.com/ர்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம், சமகாலத்தில் கண் முன் இருக்கும் உயிரினங்களை வைத்தே விவாதிப்போம்!

    பரிணாமவளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்ற பொருள் தரும் சொல்!, தன் தேவைகேற்ப ஒரு உயிரினம் சிறப்பாக இருப்பது போல் தோன்றினால் அவைகளுக்கு உருவ மாற்றம் தேவையில்லை, பல லட்சம் ஆண்டுகளாக கரப்பான்பூச்சி ”ஹிமோகுளோபின்” இல்லாமல் வாழ்வது, சுறா உருவத்தில் பெரிய மாற்றம் அடையாமல் இருப்பது இதற்கு சாட்சி! வளர்ச்சி மாற்றத்தில் அனைத்தும் அந்த உயிரினத்திற்கு சாதகமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! சில நேரங்களில் புலன்கள் செயலற்று போகலாம், அதற்கு பதிலாக வேறு புலன்கள் சிறப்பு தகுதி பெறலாம்! கண்பார்வை குறைவான விலங்குகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பது இதற்குச் சான்று!

    ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாக இருப்பது சுயதேவை மற்றும் சுற்றுபுற காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றம், ஆம் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் மரபணு மாற்றம் அல்லது மரபணு குறைபாடு! வம்சாவழியாக பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் ஜீன்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் அப்படியே மாறாமல் இருப்பதால் இந்த மாற்றமும் இல்லாமல் உயிரினங்கள் உள்ளன! தற்பொழுது இருக்கும் சுற்றுசூழல் கூட மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருந்தாலும் அவை நடைபெறும் காலம் மிக மிக மெதுவானது! ஒரு செல் ஒருநாளைக்கு ஆறிலிருந்து எட்டு முறை பிரிந்து அழியலாம், ஆனால் அதில் மாற்றம் ஏற்பட லட்சம் வருடங்கள் கூட ஆகும்!

    குரங்குகளுக்கும், மனிதனுக்கும் முந்தய வம்சாவழியில் வந்த மனிதன் பூமியில் எல்லா இடங்களிலும் கால்வைத்து விட்டான், அவனது தோற்ற வேறுபாட்டிற்ற்கு காரணமே அது தான்! ஒன்றினைத்த கண்டமாக பூமியில் நிலபரப்பு இருந்த போது தோன்றிய உயிரினங்கள் இடபெயர்ச்சி செய்தவை கண்டங்கள் பிரியும் போது ஆங்காங்கே தங்கியது! ஆப்பிரிக்காவில் தங்கிய இனம் மரபுவழியாக மாற்றம் ஏற்படாமல் இருந்ததால் முந்தய தோற்றத்திலிருந்து சிறிதே மாறியது, குறிப்பாக உடல் முழுவது இருந்த ரோமத்தை இழந்ததை கூறிப்பிடலாம்! கிழக்கு ஆசிய பகுதிகளில் பனியுக காலத்திலிருந்தே வாழ்ந்து வரும் மங்கோலிய இனமக்கள் வேர்த்திருக்க அதிக வாய்ப்பு இல்லாததால், ”புருவமேட்டு கண் பாதுகாப்பு” அமைப்பு பெரிதாக தேவைப்படவில்லை!, ஒரு ஆப்பிரிக்க இனமும், ஐரோப்பிய இனமும் இணையும் போது புதிய தோற்றத்துடன் சந்தததி உருவாகுவது மரபணு மாற்றத்திற்கான ஆதாரம், அதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் எனலாம்!

    கிழக்கு ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை பெற்றிருப்பது அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு ஆதாரம், சித்திர எழுத்து வழக்கம் கொண்டவர்கள், சூரியன் என்பதை சூ ரி ய ன் என்று பிரித்து எழுத வேண்டியதில்லை, அவர்களது ஒரே ஒரு எழுத்து சூரியன் என்ற அர்த்தத்தை தரும்! உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மான்ட்ரின் என்ற சீனமொழியை போலயே ஜப்பனிஷ், கொரியன் இருந்தாலும் அவைகளுக்குள் மலையளவு வித்தியாசம் இருப்பது நமக்கு தெரியாது!, அவர்களது மொழியின் உருவ ஒற்றுமை அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம்!

    இயற்கை சுற்றுசூழல் மாற்றத்தின் மூலமே பரிணாம மாற்றம் கண்டுகொண்டிருந்த உயிரினங்கள் தற்போதைய நாகரிக உலகின் மூலமும் மாறி கொண்டிருப்பது கண்டறியபட்டுள்ளது!, அலாஸ்கா பகுதியில் குட்டைகளில் வாழும் தவளை இனங்கள் அனைத்தும் கால் வளர்ச்சியில் குறைபாடுடனும், சிலவற்றிற்கு நான்குக்கும் மேற்பட்ட கால்கள் இருப்பதும் கண்டறியபட்டுள்ளது!, பயிர்களுக்கு உபயோகிக்கும் பூச்சிகொல்லிகளால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கண்டறிந்தாலும் மாற்றம் எங்கே ஆரம்பிக்கிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகில் கண்டறிவது பெரிய கடினமல்ல, உயிரினத்தில் பரிணாம வளர்ச்சியின் பாதி கட்டத்தில் இருக்கும் தவளை மீன் போன்று தலைபிரட்டை வாழ்க்கை சிறிது நாட்கள் வாழ்ந்து பின் கால்கள் முளைத்து தவளையாகிறது, அப்பொழுது தான் அவற்றிக்கு வெளிப்புற ஆக்சிசனை சுவாசிக்கும் நுரையீரலும் வளருகிறது என்பதும் முக்கியமானது!, பூச்சிகொல்லிகளால் தலைபிரட்டைகள் முழுமையான தவளையாக முடியாமல் கால்கள் வளருவது தடைபட்டு மாற்று திறனுடன் உருவாகிறது!

    மரபணு மாற்று விதையின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என அதிகாரபூர்வ ஆதாரம் நம்மிடம் இல்லையென்றாலும், அவற்றால் மரபணு குறைபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது! பரிணாம வளர்ச்சியை நம்பமறுக்கும் மதவாதிகள் கண்முன் மாற்றத்தை பார்ப்பார், கை, கால் இல்லாமல் குழந்தைகள் பிறக்கலாம், மீண்டும் ஊர்ந்து பழகி, வால் முளைத்து நாக்கை நீட்டி மனிதனும் ஒரு வகை பாம்பாகலாம்! மரபணு விதைகளை தடை செய்யவில்லை என்றால் எந்த கடவுளும் உயிரின அழிவை தடுக்க முடியாது என்பதே உண்மை!

    முடிந்த அளவு ஆதாரங்கள் கொடுத்திருக்கிறேன்! எதை தேர்தெடுப்பது என்பது உங்கள் பொறுப்பு!

  67. S. இப்ராஹிம் அவர்களின் கவனத்திற்கு,
    ஹிஜ்ரி 39 ற்குப் பிறகுதான் முஆவியா அவர்களின் ஆட்சி(கிபி 661-கிபி 680 ) ஏற்படுகிறது. ///ஸவ்தா (ரலி) அவர்கள் முஆவியா(ரலி) ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி 21 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.//// என்பது தவறான தகவல்.

  68. மக்காவுடைய மண்ணை எடுத்து
    சொர்க்கத்தோட தண்ணியை ஊத்தி
    சேர்த்து சேர்த்து செய்ததிந்த பொம்மை
    அது பொம்மை இல்ல பொம்மை இல்லை
    மனிதன் என்பது உண்மை.”
    களிமண்ணை நீர்கொண்டு பக்குவப்படுத்தி அழகான பொம்மையை செய்து பககுவமா சுட்டு உயிர்கொடுக்கப்பட்டவன் இந்த மனிதன் என்று குர்ஆன் கூறுகிறது.. குர்ஆன் கூறும் சில வசனங்களுக்கான எமது கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா?.http://naannaathigan.blogspot.com/

    அல்லா மனிதனை களிமண்ணிலிருந்து படைக்கப் போவதாக வானவர்களிடம் (மலக்குகளிடம்)அறிவிப்புச் செய்துவிட்டு, உரமான களிமண்ணால் உருவத்தைச் செய்து, அதனை தட்டினால் சத்தம் வரும் பக்குவத்திற்கு சுட்டு, அதன் பிறகு தன்னிடமிருந்து உயிரை அதற்குக் கொடுத்தான் என்று குர்ஆன் கூறுகிறது.
    அ) களிமண்ணிலிருந்து படைக்க இருப்பதை அறிவித்த வசனம் 38;71
    ஆ) களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனங்கள் 6;2, 22;5, 23;12, 30;20, 32;7, 33;11, 38;76
    இ) ஈரக் களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனம் 37;11
    ஈ) அதனை சுட்டால்தான் ஈரமற்று, தட்டினால் ஓசைவரும். அதனால் சுட்டதற்குறிய ஆதாரத்திற்குறிய வசனங்கள் 15;26, 15;28, 15;33
    ஊ) அதன் பிறகே உயிர் கொடுத்தான் என்பதற்குறிய வசனங்கள் 15;29, 38;72
    அறிவியலின் பரிணாமக் கொள்கை இதற்கு எதிராக உள்ளது என்பதை நாம் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். எனவே மனிதனை படைத்துள்ளது தொடர்பாக குர்ஆன் கூறுவது பற்றி தங்களின் கருத்து என்ன?

    ஆதமும், ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட ஹவ்வாளும், சொர்க்கத்தில் தடுக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்ததினால்தான் அவர்களது பாலுறவு உறுப்புகள் வெளிப்படுத்தப்பட்டு இலை தழைகளைக் கொண்டு மூடிக்கொண்டனர்.
    இதற்கான குர்ஆன் வசனங்கள் 20; 118 மற்றும் 121, 70;20, 22, 27
    அதே குர்ஆன் ஆதமுடைய ஆன்மா அமைதியற்று அலைந்ததாகவும், அந்த ஆன்மா சாந்தியடையவே ஹவ்வாள் என்ற பெண்ணை படைத்ததாகவும் கூறுகிறது.
    இதற்கான குர்ஆன் வசனங்கள் 7;189, 30;21
    ஆனால் பாவக் கனியை உண்டபிறகே பிறப்புறுப்புகளை வெளிப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. அப்படி என்றால் ஆதமுடைய ஆன்மா எந்த வகையில் அமைதியற்று இருந்தது? பாவம் செய்வதற்கு முன் ஹவ்வாள் எதற்காகப் படைக்கப்பட்டார்?

    பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.
    ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.
    இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327
    அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?

    கருவில் குழந்தையாக உருவமைத்த பிறகே அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மானித்து, அதற்கான சொத்து சுகம் எவ்வளவு? நன்மை செய்தவனாக இறந்துபோவானா? தீமை செய்தவனாக இறந்துபோவானா? என்று தலைவிதிகளை எல்லாம் லவ்ஹூல் மஹ்ஃபூல் பலகையில் எழுதிவிட்ட பிறகே அக்குழந்தைக்கு உயிர் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.
    இதற்குச் சான்றான குர்ஆன் வசனம் 32;9 மற்றும் நபிமொழி புகாரி; 3208
    அப்படியானால் விந்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இருக்கிறதா? இல்லையா?

    “குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.
    இதற்கானச் சான்று; நபிமொழி புகாரி 3320
    இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்