முகம்மதின் மரணத் தருவாயில் நடந்த குழப்பங்கள்

ph moh's death

 இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 57

தவறாக அன்றி ஒரு மூஃமின் பிரிதொரு மூஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல .. .. .. எவனேனும் ஒருவன் ஒரு மூஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான் .. .. .. குரான் 4:92, 93

 

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள், நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில் உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும். புஹாரி: 7072

 

ஒருவர் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமலிருப்பது அனுமதிக்கப்பட்டதன்று .. .. .. புஹாரி 6077

 

மேலுள்ள ஹதீஸ்களும் குரான் வசனமும் தெளிவாக கூறுவது என்னவென்றால் முஸ்லீம்கள் தங்களுக்குள் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பது தான். இந்த அறிவுரைகள் முகம்மது வாழ்ந்த அந்தக் காலத்திலிருந்து இன்னும் மனிதன் வாழப்போகும் அத்தனை காலம் வரை உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல். ஆனால் இந்த வழிகாட்டல்களை முகம்மதுடன் வாழ்ந்த, முகம்மதுவுக்கு உற்ற உறவினர்களாக இருந்த, முகம்மதுவுக்கு நெருங்கிய தளபதிகளாக இருந்த, முகம்மது யாரை சொர்க்க வாசிகள் என முன்னறிவிப்பு செய்தாரோ அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டார்கள் என்றால் அதை உங்களால் நம்ப முடியுமா? ஆனால், நடந்தது அது தான். இதை எப்படி புரிந்து கொள்வது? முகம்மது கூறிய கொள்கையை முகம்மதுக்கு நெருக்கமாக உடன் வாழ்ந்தவர்களே செயல்படுத்தாமல் அலட்சியப் படுத்தி விட்டார்கள் என்றா? முகம்மது இறந்த பிறகு அவர்களால் கூட முகம்மதின் கொள்கை செயல்படுத்த முடியாததாக இருந்தது என்றா? அல்லது முகம்மதின் கொள்கை காலத்துக்கு ஒவ்வாததாக இருந்தது என்றா? எப்படியானாலும் முகம்மதின் காலத்திலேயே அவரின் கொள்கைகளுக்கு, அவரின் சொல்லுக்கு மதிப்பில்லாமல் போனது என்பது தான் உண்மை.

 

முகம்மதுக்குப் பிறகு ஆட்சி புறிந்த நான்கு கலீபாக்களில் அபூபக்கர் தவிர ஏனைய மூன்று கலீபக்களான உமர், உஸ்மான், அலி ஆகியோர்கள் கொல்லப்பட்டுத் தான் இறந்திருக்கிறார்கள். அந்த ஆட்சித் தலைவர்களைக் கொன்றவர்கள் மத ரீதியில் எதிரிகளான யூதர்களோ, வணக்க வழிபாட்டு ரீதியில் எதிரிகளான மக்கத்து குரைஷிகளோ அல்லர். எந்த முஸ்லீம்கள் முகம்மதையும் அவரின் கொள்கையையும் தம் உயிரினும் மேலானதாக ஏற்றுக் கொண்டார்களோ அந்த முஸ்லீம்கள். இனி உலகம் அழியும் வரை பிறக்கும் அனைவருக்கும் முகம்மதே அழகிய முன்மாதிரி என்று வியந்து போற்றினார்களோ அந்த முஸ்லீம்கள். அவ்வளவு ஏன்? தனக்குப் பிறகு, தன்னுடைய அரசியல் வாரிசாக முகம்மதால் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்கரிடமே முகம்மதின் இரத்த வாரிசான முகம்மதின் நேசத்துக்குறிய மகள் ஃபாத்திமா பகைமை கொண்டு இறந்து போகும் வரை பேசாமலிருந்தார் என்று ஒரு ஹதீஸ் தெரிவிக்கிறது.

 

ஃபாத்திமாவுக்கு அபூபக்கர், இறைத்தூதர் அவர்கள் எங்கள் சொத்துக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவை எல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். இதனால் பாத்திமா கோபமுற்று அபூபக்கர் அவர்களிடம் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்கர் அவர்களிடம் பேசாமலேயே இருந்துவிட்டார்கள் .. .. .. புஹாரி 3093

 

தனக்குப் பின்னால் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என முகம்மது விரும்பினாரோ அதன்படி அவருக்கு நெருக்கமானவர்களே இருக்கவில்லை. சொத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஒருவர் மீது ஒருவர் போர் தொடுத்துக் கொண்டார்கள். முகம்மது இறந்தவுடன் அன்சாரிகளும் குரைஷிகளும் அதிகாரத்திற்காக மோதிக் கொண்டது புஹாரி 6830 ல் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது.

 

மூன்றாவது கலீபாவான உஸ்மான் கொல்லப்பட்டுவிட அதற்கு காரணமானவர்களை தண்டிப்பேன் என்று கூறி ஆட்சியேறிய நான்காவது கலீபாவான அலீ, உஸ்மானை கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து முகம்மதின் நேசத்திற்குறிய மனைவி ஆய்ஷா ஆட்சித்தலைவரான அலீயின் மீது போர் தொடுத்தார். ஆய்ஷாவின் ஒட்டகத்தை குறிவைத்து நடத்தபட்ட போர் என்பதால் ஒட்டகப் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்தப் போரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் மடிந்து போனதாக குறிப்புகள் கூறுகின்றன.

 

இப்படி இவர்கள் சொத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் சண்டையிட்டுக் கொண்டதற்கு இன்றைய மதவாதிகள் விளக்கத்திற்கு மேல் விளக்கமாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சண்டையிட்டுக் கொண்டதற்கு ஆயிரம் சமாதானங்கள் கூறினாலும் முகம்மதின் போதனைகளை தங்களை முஸ்லீம்களாக அறிவித்து அதிகாரத்தையும் சொத்துகளையும் அனுபவித்துக் கொண்ட அவரின் நெருங்கிய உறவினர்கள் கூட செவிமடுக்கவில்லையே ஏன்? என்பது தான் முதன்மையான கேள்வி.

 

முகம்மது என்பவர் இஸ்லாத்தின் முழுமை. முகம்மது இல்லாமல் இஸ்லாம் எனும் மதம் இல்லை. அவரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் பின்பற்றத்தக்கது, மட்டுமல்லாமல் அவைகளுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குற்றவாளிகள். அதற்கு தண்டனையாக நரகத்தை அடைவார்கள் என்பது தான் மதத்தின் தீர்ப்பு. இதுமட்டுமல்ல முகம்மது வாழும் காலத்தில் அவரை முஸ்லீம்கள் எந்த உயரத்தில் வைத்திருந்தார்கள் என்பதை கீழ்காணும் ஹதீஸ் விளக்கும்.

 

.. .. .. பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி அதில் தம் இரு கைகளையும், தம் முகத்தையும் கழுவி அதில் உமிழ்ந்தார்கள். பிறகு எங்களிடம் இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு உங்கள் முகங்களிலும் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். எனவே நாங்கள் இருவரும் அவ்வாறே செய்தோம். அப்போது உம்மு ஸலமா திரைக்குப் பின்னாலிருந்து எங்களை அழைத்து உங்கள் அன்னைக்காகவும் அதிலிருந்து சிறிது மீதி வையுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம். புஹாரி 4328

 

ஒருபுறம் இப்படி மூடத்தனமான கண்மூடித்தனமான பக்தி, மறுபுறம் முகம்மதின் மருமகன் அலீ முகம்மதை எப்படி கிண்டல் செய்கிறார் என்று பாருங்கள்,

 

நபி அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா அவர்களிடமும் வந்தார்கள். நீங்கள் இருவரும் தொழவில்லையா என்று கேட்டார்கள். அப்போது நான் நபி அவர்களே எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழுப்பும் போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறிய போது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து மனிதன் அதிகமாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான் என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள். புஹார் 1127

 

அதாவது, முகம்மது தம் மகளும் மருமகனான அலியும் வசிக்கும் வீட்டுக்கு ஓர் இரவில் வருகிறார். நீங்கள் இரவுத் தொழுகையை தொழவில்லையா? என்று கேட்கிறார். இதற்கு அலி செய்யும் கிண்டலை புரிந்து கொள்ள இன்னொரு ஹதீஸுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இரவில் தூங்குவது குட்டி மரணம் போன்றது. மரணத்தில் உயிர்களைக் கைப்பற்றுவது போலவே தூக்கத்திலும் கைப்பற்றப்படுகிறது. கைப்பற்றப்பட்ட உயிர் திரும்ப வழங்கப்பட்டால் அது தூக்கமாக கருதப்படுகிறது. மாறாக உயிர் திரும்ப வழங்கப்படாவிட்டால் அது மரணமாகி விடுகிறது. எனும் பொருளில் ஏற்கனவே ஒரு ஹதீஸை அருளியிருக்கிறார் முகம்மது. இந்த ஹதீஸை மனதில் வைத்துக் கொண்டுதான் மேற்கண்ட பதிலை அலி தன் மாமனாருக்கு தெரிவிக்கிறார். தூக்கத்தில் எங்கள் உயிரை இறைவன் கைப்பற்றி வைத்துக் கொண்டு அவன் எழுப்பி விடாத போது நாங்கள் எப்படி விழித்தெழுந்து தொழ முடியும்? என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார். இதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், பதில் சொல்லவும் இயலாமல் தான் முகம்மது தொடையில் அடித்துக் கொண்டே திரும்பச் சென்று விட்டார்.

 

இதை மருமகன் மாமனாருக்கிடையேயான கிண்டல் கேலி என்று எடுத்துக் கொள்ள முடியுமா? அனைத்து முஸ்லீம்களுக்கும் முகம்மது முன்மாதிரி என்றால் அது மருமகனுக்கு பொருந்தாதா? முகம்மதின் கட்டளைக்கு கீழ்ப்படியாதவன் முழுமையான முஸ்லீமாக முடியாது. முகம்மதை தம் உயிரிலும் மேலாக மதித்துப் போற்றாத யாரும் முழுமையான முஸ்லீமாக முடியாது என்று கூறும் கூற்றுகளுக்கெல்லாம் என்ன பொருள்? கீழ்க்காணும் வசனம் எச்சரிப்பதைப் பாருங்கள்.

 

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். குரான் 33:36

 

கேலி செய்வதாவது பரவாயில்லை, மாமனார், மருமகன் விவகாரம் என்று பொறுத்துக் கொள்ளாலாம். ஆனால், உயிரினும் மேலாக மதிக்க வேண்டியவரை கிள்ளுக் கீரையாக நினைத்தால், அதுவும் மரணத் தருவாயில். அதையும் ஒரு ஹதீஸ் பதிவு செய்திருக்கிறது.

 

நபி அவர்களின் மரண வேதனை அதிகமானபோது என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள் எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறி விடாதிருக்க ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித்தருகிறேன் என்று கூறினார்கள். நபி அவர்களுக்கு வேதனை அதிகமாகி விட்டது, நம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறது அது நமக்குப் போதுமானது என்று உமர் கூறினார். உடனே கருத்து வேறுபாடு எழுந்து கூச்சலும் குழப்பமும் மிகுந்து விட்டன. இதைக் கண்ட நபி அவர்கள் என்னை விட்டு எழுந்து செல்லுங்கள், என் முன்னிலையில் இது போன்ற சச்சரவுகள் எதுவும் இருக்கக் கூடாது என்றார்கள். நபி அவர்களுக்கும் அவர்கள் மடலுக்கும் குறுக்கே தடையாக நிகழ்ந்து விட்ட சோதனை பெரும் சோதனைதான் என்று கூறியவராக அங்கிருந்து இப்னு அப்பாஸ் வெளியேறிவிட்டார். புஹாரி 114

 

இந்தச் சூழலை புரிந்து கொள்ள முடிகிறதா? புரிந்து கொள்ள முடியும் என்றால் இன்றைய இஸ்லாமியர்கள் முகம்மதுவுக்கு கொடுக்கும் அத்தனை மரியாதையும், வழிகாட்டி எனும் மதிப்பும், இறைவனுக்கு அடுத்த இடத்தில் வைத்திருக்கும் பாங்கும், ஐயத்துக்கு இடமின்றி முகம்மது உயிருடன் இருக்கும் போதே அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு நிதர்சனம்.

 

முகம்மதுக்கு இஸ்லாமியர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை பில்ட்டப்புகளையும் இந்த ஒற்றை ஹதீஸ் தகர்த்து விட்டது. மரணத் தருவாயில் முகம்மது கூற விரும்பியது என்ன? “எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறிவிடாதிருக்க என்று கூறியிருக்கிறார் என்றால், வழி தவறி விடுவார்கள் என்று முகம்மது எண்ணியிருக்கிறார், அதை சரிப்படுத்த வேண்டும் என்றும் முயன்றிருக்கிறார். என்றால் முகம்மது சரிப்படுத்த விரும்பிய வழி எது? தற்போதைய இஸ்லாத்திற்கும் முகம்மது கூற விரும்பிய கொள்கைக்கும் இடையே வேறுபாடு இருக்கிறதா? தங்களை இஸ்லாமியர்களாக கருதிக் கொள்வோர் எவரேனும் பதிலளிக்க முன்வருவார்களா?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

56. முகம்மது தேன் குடித்த கதை

55. முகம்மதும் ஆய்ஷாவும்

54. முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்

53. முகம்மதின் மக்கா வாழ்வும் அவரின் புலப்பெயர்வும்

52.  தன்னுடன் தானேமுரண்பட்ட முகம்மது

51. முகம்மது நல்லவரா? கெட்டவரா?

50. முகம்மது அனுப்பிய கடிதங்கள் மதமா? ஆட்சியா?

49. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

93 thoughts on “முகம்மதின் மரணத் தருவாயில் நடந்த குழப்பங்கள்

  1. இஸ்லாமே ஒரு குழப்பம்தான், இதுல தனியா முகமது வேறயா?

  2. இஸ்லாம் ஒரு தனி அந்தஸ்து உள்ள மதம் ,மொழி , இனம் ,அதன் சார்ந்த சூழ்நிலை என்பது போன்ற அதன் முக்கியத்துவத்தை அது பெற்று இருக்கிறது .அதை பின்பற்றுபவர்கள் பின்பற்ற அது ஒரு உயிரின் உரிமை ஆனால் அந்த மதத்தைப் பின்பற்றி மற்றவகளை துன்புறுத்தும் அனுமதி இல்லை இது எந்த மதம் சார்ந்தவருக்கும் இல்லை

  3. விவாதம்ன்னு சொன்னால் வாலை காலுக்கிடையில் வச்சுக்கிட்டு ஓடுறதுகள் எல்லாம் வெப்சைட் இருக்குங்கிறதுக்காக கண்டபடி ஆதாரமில்லாமல் எழுதித்தள்ளக் கூடாது. மானஸ்தனாக இருந்தால் விவாதத்துக்கு வா. அங்க உன் எளவெடுத்த கம்யூனிசம் கவைக்குதவாது என்பதை உன் வாயாலே கூற வைக்கிறோம். என்ன ரெடியா?

  4. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார் //இஸ்லாம் ஒரு தனி அந்தஸ்து உள்ள மதம் ,மொழி , இனம் ,// என்று
    அதை marubadiyumpookkum ஆமோதிக்கிறார்.
    மற்றொருவரோ //ஆதாரமில்லாமல் எழுதித்தள்ளக் கூடாது.// என்கிறார். கட்டுரையில் ஆங்காங்கே இரட்டை மேற்கோள்களுக்குள் வழங்கப்பட்டுள்ளதை என்ன என்று கூறுவது?
    இங்கே ஒரு இணைய தளமே உள்ளது:

    http://iraiyillaislam.blogspot.in/
    https://pagaduu.wordpress.com/
    http://alisina.org/

  5. சம்பந்தமில்லாமல் உலரும் செங்கொடியே, விவாதத்துக்கு வர பயமா டவுசர களட்டிடுவாங்களோன்னு பயமா. கோழையைப்போல் ஒளியாதே. ஆம்பளையின்னா விவாதத்துக்கு வா

  6. பாருங்கப்பா எறும்புகள்லாம் பேசுது. ஆயிரம் வெப்சைட் இருக்கலாம். ஆன்லைன்பிஜே வுக்கு பக்கத்துல நிக்க முடியுமா?

  7. //பாருங்கப்பா எறும்புகள்லாம் பேசுது. ஆயிரம் வெப்சைட் இருக்கலாம். ஆன்லைன்பிஜே வுக்கு பக்கத்துல நிக்க முடியுமா// பாறை பேசும் மற்றும் எலும்பு பேசும் சாட்சி சொல்லும் என்பதை நம்புவர்கள் எறும்பு பேசுவதை நம்பிதான் ஆகவேண்டும்.
    //ஆதாரமில்லாமல் எழுதித்தள்ளக் கூடாது.// என்றால் கட்டுரையில் ஆங்காங்கே இரட்டை மேற்கோள்களுக்குள் வழங்கப்பட்டுள்ளதை என்ன என்று கூறுவது?
    //ஆன்லைன்பிஜே வுக்கு பக்கத்துல நிக்க முடியுமா?// அல்லா தெளிவான குரான குடுத்திருக்கான் எனும் போது ஆன்லைன்பிஜே வைச்சி வெளக்கினால் குரான் தெளிவில்லை என்று ஆகிறது. ஆன்லைன்பிஜே ஒரு அத்தாட்சி. சிந்திக்க மாட்டீர்களா?

  8. நூர்தீன் பாய்,

    என்னுடைய உடுப்பை அவிழ்த்துப் பார்ப்பதில் அப்படி என்ன ஆர்வம் உங்களுக்கு? முடிந்தால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைக்கு மறுப்பாக எதையாவது கூறுங்கள். எதற்கு வெட்டி அலட்டல்?

  9. பொட்டை செங்கொடியே விவாதம் என்றதும் தொடை நடுங்குவது ஏன்? ஆம்புளயா இருந்தா வாடா

  10. நியாயஸ்தன் செங்கொடியே, உன்னை ஒரு வார்த்தை சொன்னவுடன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது அல்லவா அது போல் தான் எங்களுக்கும். நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் எங்கள் நாயகம் ஸல் அவர்களை கண்டமானி எழுதும் போது எங்களுக்கு எப்படி வலிக்கும். உனக்கு சந்தேகமிருந்தால் மார்க்க அறிஞர்களிடம் கேள். அவர்கள் போதும் போதும் என அளவுக்கு உனக்கு விளக்கமளிப்பார்கள். இப்படி அறைகுறை அறிவோடுஎழுதுவதை நிருத்திக் கொள்.

  11. //நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் எங்கள் நாயகம் ஸல் அவர்களை கண்டமானி எழுதும் போது எங்களுக்கு எப்படி வலிக்கும். // கண்னுமனி இஸ்லாத்தை ஏற்காதவர்களை என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருக்காரே அப்ப அவரை விமர்சனம் செஞ்சிதானே ஆகனும்.
    // உனக்கு சந்தேகமிருந்தால் மார்க்க அறிஞர்களிடம் கேள். // கட்டுரை ஆதரத்துடன் எழுதப்பட்டுள்ளதால் மார்க்க அறிஞர்களை வந்து பதிலளிக்க சொல்லலாமே!

  12. நூர்தீன் பாய் அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு? உங்கள் நபியைப்பற்றி இங்கு ஆதாரமில்லாமல் தவறாக எழுதப்பட்டுள்ளது எனக் கருதுகிறீர்களா?மீண்டும் படித்துப்பாருங்கள். தேவையான ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.

    மற்றப்படி நீங்கள் கூறும் விவாதம் என்பது என்ன? குறிப்பிட்ட ஒருவரோடு மேடை போட்டு மைக் வைத்து எதிர்த்தரப்பினர் என்ன பேசுகிறார்கள் என்பதை பரிசீலிக்காமல் இரண்டு நாட்கள் சொன்னதையே திரும்பத் திரும்பப்பேசி முடிந்ததும் நாங்க கெலிச்சிட்டோம் என்று புளகமடைந்து கொள்வதை தானா நீங்கள் விவாதம் என்கிறீர்கள்?

    இது பொருத்தமானதில்லை என்பதை ஏற்கனவே ஒரு பதிவின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

    இதனையும் மீறி உங்கள் முடிவில் நீங்கள் உறுதியாக இருந்தால் சொல்லுங்கள். இந்த தளத்திலேயே விவாதித்து விடலாம். நீங்கள் என்றாலும் சரி, உங்கள் உலக மகா அறிஞர் என்றாலும் சரி, அல்லது உங்கள் உலகமகா அறிஞர் துணையுடன் சிலருடன் கூட்டாக நீங்கள் என்றாலும் சரி.

    எப்படி உத்தேசம்?

  13. செங்கொடி அவர்களே உங்களை சும்ம விடுவதாக பிளான் இல்லை. விவாதம் பற்றி அப்படி என்ன எழுதியிருக்குறீர். எனக்கு தெரியாது லிங்க் கொடு படிக்கிறேன். என்ன இருந்தாலும் உங்களை வெப்சைட்டிலிருந்து ஓட வைக்கும் நாள் சீக்கிரம் வரும். கவுண்ட் உவர் டேய்ஸ்

  14. செங்கொடி, உங்களை ஏதோ பெரிய அறிவாளி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறாங்க. பிஜே அவர்களோடு ஏன் விவாதம் செய்யமாட்டேன் எனும் போஸ்டில் எழுதுனத படிக்கும் போது தான் நீ எவ்வளவு மொக்க பீஸுன்னு தெரியுது. பெரிய ஆளுங்கள்ளாம் வேணாம் உங்கள சமாளிக்க நானே போதும். ரெடியா இருப்பா

  15. பிஜே ஜெர்ரி அண்ணாச்சி குஸ்தி இணையத்தில் உள்ளது. கமாலியுடன் மல்யுத்தமும் உள்ளது. பிஜே வெர்ஷனில் இதற்கு பதில் தருகிறோம் தருகிறோம் என்று (அனைத்திற்கும் பதிலாளிக்காமல் விடமாட்டோம் என்ற வாக்குறுதி வேறு) கடைசி வரை வாதம் செய்யாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதலளித்ததாக முடித்துக் கொள்வார். விவாதம் என்றால் கேட்கடும் கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்தால் மட்டுமே அது வாதம். அவரது வீடியோவில் உடனடியாக பதிலளிப்பதாக இருக்காது (இதில் அவர் நேரடி விவாதத்தில் சூரராம்.) ஆலையில்லா ஊரில் இழுப்பை பூ சர்க்கரை கதைதான்.

  16. மறுபடியும் எறும்பா? ஏம்பா உங்களுக்கெல்லாம் ஒன்னுமே கிடையாதா? கண்ணுல விளகென்னை ஊத்திக்கிட்டு பாருங்கோ எல்லாத்துக்கும் அக்குவேறு ஆணிவேரா அலசி காய்ப்போட்டிருக்கு.அம்னீசியாக்களெல்லாம் ஓரமா நில்லுங்க. செங்கொடி லைனுக்கு வாங்க

  17. // ஏம்பா உங்களுக்கெல்லாம் ஒன்னுமே கிடையாதா?//
    மனிதனை முழுமையான படைபப்ப படைச்சதா அல்லா பெருமைபட்டுக் கொண்டு குரானவேறே இறக்கி வைச்சிருக்கான் இப்படி அல்லாவின் படைப்பை குறை கூற உங்களால் எப்படி முடிகிறது.?

    // கண்ணுல விளகென்னை ஊத்திக்கிட்டு பாருங்கோ எல்லாத்துக்கும் அக்குவேறு ஆணிவேரா அலசி காய்ப்போட்டிருக்கு// கண்னையும் காதையும் கொண்டு அறிவால் ஆராய்ந்து பாத்த்துதான் அதன் கூறப்பட்டுள்ளது. அணைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம் என்று கூறுவது வாதத்திற்கு பிரதிவாதமாகது. அது நேரகடத்தல் வேலை இறுதியாக அணைத்திற்கும் பதில் அளித்துவிட்டோம் என்று கூறுவது வாதங்களுக்கு பதிலாளித்தாக ஆகாது. வாதம் என்றால் முன் வைக்கபட்ட கேள்விக்கு உடனே தரப்படும் பதிலாகும். அலசவும் காயப்பபோடவும் வாதம் என்பது துணி துவைக்கும் போட்டியல்ல. அவர்கள் கலந்து கொண்டது துணிதுவைக்கும் போட்டியானால் மட்டுமே தாங்கள் கூறுவது சரி.

  18. இஸ்லாமியர்களே. உங்களை isakoran.blogspot.in உமர்.Faithfreedom.org அலிசினா மற்றும் செங்கொடி போன்றோர் எழுத்து விவாதத்திற்கு அழைத்தால்,நீங்கள் மீண்டும் மீண்டும் பீ,ஜே.யுடன் நேரடி விவாதம் செய்ய வருமாறு அடம்பிடிக்கிறீர்கள்.

  19. நேரடி விவாதம் என்பது எவ்வளவு அன்பும் , மரியாதையும், அழகிய இன்சொற்களும் நிறைந்தது என்பதை அறியாததால் செங்கொடி தயங்குகிறார். செங்கொடி அவர்களே, கீழ்க்கண்ட யு ட்யூப் காணொளியை காணுங்கள்,பின்பு நேரடிவிவாதத்திற்கு நீங்களே ஓடோடி வருவீர்கள். Youtu.be/o_3qUUtENOw

  20. ஹைய்யா, டமாசு டமாசு. எறும்புங்கள்ளாம் ஜோக் அடிக்குதுங்க. எல்லாரும் சிரிச்சுடுங்கோ. இல்லன்னா கடிக்காத இடத்துல கடிச்சு வைச்சுடப் போகுது.

    அதுசரி, செங்கொடிய கூப்பிட்டா, ஏன் எறும்பு, வரதன்னு யாரெல்லாமோ வர்றாங்க, செங்கொடி மட்டும் கானோம். புதுசா இன்னோரு பேர் கண்டுபிடிக்க போயிருக்காரா? சீக்கிரம் வாங்கப்பு.

  21. நானும், ant உம் செங்கொடி என்றால் நீங்கள் p.j.வா அல்லது பாக்கரா ?.அப்புறம் அந்த காணொளி பார்த்தீர்களா ? என்ன அன்பு …என்ன சகோதரத்துவம்.

  22. டமாசு டமாசு .நன்கு சிரியுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும் .உங்கள் சகோதரர்கள் மதத்தின் பெயரால் உலகெங்கும் நிகழ்த்தும் செயல்கள் கூட, உங்களுக்கு சிரிப்பைத் தரக்கூடிய டமாசாக இருக்கலாம் .கீழ்க்கண்ட இணையதளத்தில் ‘beheadings’என்ற பிரிவில் உள்ள புகைப்படம் மற்றும் காணொளியைக் கண்டும், நீங்கள் டமாசு டமாசு என்று சிரிக்கலாம். http://www.barenakedislam.com .

  23. //ஹைய்யா, டமாசு டமாசு…..கடிக்காத இடத்துல கடிச்சு வைச்சுடப் போகுது.// பிசேவின் தொண்டர் பிசேயை அடிபிசகாமல், சொந்தமாக சிந்திக்கமால், அவரைப்போல் தான் நடந்து கொள்ள வேண்டுமா? பதிலளிக்கிறேன் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் விடமாட்டோம் என்று மோடி மஸ்தான் பாணியில் கூறிக்கொண்டு கடைசிவரை நேரத்தை கடத்தி கடைசியில் பதிலளிக்மாமல் பதிலளித்துவிட்டோம் என்று முடித்துக் கொள்வது போலவே (இவர்கள் அறிவாளியாக பில்டப் கொடுக்கும் பீசேவிடமே பதிலில்லாதபோது ) இவரிடம் இருந்தால்தானே பதில்வரும்.
    மற்றொரு ஒற்றுமை இவர்கள் சிந்தனை செல்லும் இடம்தான்(டவுசர் போடும் இடம்).
    மேற்கண்ட வீடியோவில் முழுக்க முழுக்க ஹதீஸ்களை அடிப்படையாக கொண்டுதான் உள்ளது. எதை ஒதுக்குகிறார்களோ அதையே அவர்களுக்குள் ஆதாரமாக பயன்படுத்துகிறார்கள். என்ன கொடுமை சரவணன்.

  24. நண்பர் வர்தன்,

    ஐ.எஸ் போன்ற குழுக்கள் செய்யும் செயல்களை இதுதான் இஸ்லாம் என்றபெயரில் பதிவு செய்ய வேண்டாம். ஏனென்றால் இஸ்லாத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை. அறியவும்.

  25. அன்பின் செங்கொடி ,வணக்கம்.பதில் அளித்ததற்கு நன்றி .ஐ.எஸ்.போன்ற குழுக்களுக்கும், இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லையென்று கூறினீர்கள் பின் எதற்கு , சென்னை மசூதியில் தீவிரவாதி ஒசாமாவின் மரணத்திற்கு தொழுகை நடத்தினர் .ஐ,எஸ், தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டு முஸ்லீம்கள் டீ .சர்ட் அணிந்தது ஏன் ?.பாரதமாதா ஒரு …..யா என்று ஒரு இஸ்லாமிய மதகுரு கூறியது எதன்அடிப்படையில் ? இதுதான் இஸ்லாம் என்று நான் கூறக்காரணம் , படுகொலைகளை செய்யும் அந்த அமைப்பினரே அவ்வாறு தான் கூறுகின்றனர் .ISIS (islamic state of iraq& al-sham).தங்கள் தளத்தில் இனி, இதுதான் இஸ்லாம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்க முயல்கிறேன்.ஆனால் ,அந்த அமைப்பினர் ,தங்கள் பெயர் ( ISIS ) மற்றும் படுகொலைகளின் மூலம் ,உலக மக்களை தினமும் அந்த வார்த்தையைத் தான் அச்சத்துடன் உச்சரிக்க வைக்கின்றனர். ( பின்குறிப்பு ) Innocence of muslims மற்றும் விஸ்வரூபம் படங்களுக்கு எதிராக களமிறங்கி போராடிய முஸ்லிம்களும் ,முஸ்லீம் அமைப்புகளும் , ஐ.எஸ்.ன் கொடூரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தாது ஏன்? கொல்வது சுன்னி முஸ்லிம்கள் .கொல்லப்படுவது ஷியாக்கள்,யஹூதிகள்,கிறிஸ்தவர்கள் என்பதனால் தானே ? நன்றி.

  26. ( நபி அவர்களின் மரண வேதனை அதிகமானபோது என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள் எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறி விடாதிருக்க ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித்தருகிறேன்.) முகம்மது படிப்பறிவற்றவர் , அவரால் குரான் போன்ற ஒன்றை சுயமாக கூறமுடியுமா ? இதுவே குரான் இறைவேதம் என்பதற்கு சாட்சி என்று இஸ்லாமியர்கள் கூறுகையில், மேற்கண்ட அதிஸ் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. உண்மையில் முகமது படித்தவரா ? அவர் படித்தவர் என்பதற்கு ,வேறு ஏதேனும் அதீஸ் சான்று உள்ளதா ? கூறினால் அறிந்துகொள்வேன்.நன்றி.

  27. வணக்கம் , தங்கள் தளத்தின் மூலம் ஒத்திசைவு ராமசாமி அய்யா தளத்தினைப் பார்த்தேன்.அங்கு ,துப்பாக்கிகள் குறி பார்க்க ,கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட குழந்தையின் படத்தைப் பார்த்து மிகுந்த மனவேதனை ஏற்பட்டது . இந்த பாவிகளை அழித்தொழிக்காமல் ,ஐ.நா.,சபையும்,வல்லரசு நாடுகளும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று தான் புரியவில்லை . நன்றி.

  28. http://www.faithfreedom.org/Articles/AyeshaAhmed50809.htm ஆயிஷாவின் கட்டுரைகளை படித்து , இஸ்லாமின் அறிவியல் ,மெய்ஞான விடயங்களை அறிந்து கொள்ளவும்.படிக்கையில் உங்களுக்கு சிரிப்பு வந்தால், உங்களை சைத்தான் வழிநடத்துகின்றான் என்பதை அறியவும். சிரிப்பவர்களுக்கு நரக நெருப்பும்,ஜக்கூம் பழமும் தயாராக உள்ளதை தெரிவித்துக் கொள்கிறேன்.சிரிக்காமல் படிக்கும் ஈமான்தாரிகளுக்கு, 72 ஹூரிகளும்,28 கில்மான்களும் ,தலைவலி ,வாந்தி, மயக்கம் ஏற்படுத்தாத சுவன சாராயமும் வழங்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.நன்றி.

  29. ஒரு முக்கிய அறிவிப்பு செங்கொடி எனும் போல்டான திராணியுள்ள மனிதரைக் காணவில்லை. கண்டுபிடித்து தருவோருக்கு செமையா பரிசு தரப்படும். டும் டும் டும்

  30. செங்கொடி எறும்புங்கள்லாம் வந்து பினாத்திக்கிட்டு இருக்குது பாருங்க நசுக்கி போடுங்க இல்லைன்னா எறும்பு சாக்பீஸ் கொண்டு வாங்க

  31. நண்பர் வர்தன்,

    ஐ.எஸ் போன்ற தீவிரவாதக் குழுக்கள் அமெரிக்காவின் தயாரிப்புகள். அதை மத அடிப்படைவாதிகள் மக்களை தம் பக்கம் ஈர்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்லாமிய மீட்டுருவாக்கம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள் செயல் அரசியலை மதவாதமாக மாற்றுகிறது.

  32. P.j. ஸார் , எறும்பு மருந்த அப்புறம் போடலாம், முதல்ல என் சந்தேகத்தை தீர்த்து வைங்க.முகம்மது படிச்சவரா ? படிக்காதவரா ? நன்றி.

  33. அன்பின் செங்கொடி,வணக்கம்.பதிவுகளை எளிய தமிழில் எழுதும் தாங்கள் ,பின்னூட்டங்களுக்கு மட்டும் ,எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத கடினமான தமிழில் பதில் எழுதுவது ஏனோ.? எனக்காக இல்லையென்றாலும்,எறும்பு ,சாக்பீஸ்,போல்டான என்று பதிவையோ, பின்னூட்டத்தையோ புரிந்து கொள்ளாமல் ,புலம்பித் தள்ளும் ( p.j., or jamali ) மனிதர்க்காகவாவது ( எவ்ளோ பெரிய வார்த்த? ) எளிய தமிழில் எழுதும்படி ( அவருக்கு புரிய வேண்டாமா? ) கேட்டுக் கொள்கிறேன் .நன்றி.

  34. அன்பின் செங்கொடி,வணக்கம்./ஐ.எஸ் போன்ற தீவிரவாதக் குழுக்கள் அமெரிக்காவின் தயாரிப்புகள் \ ஆப்கனில் ரஷ்யாவிற்கு எதிராய் ,அமெரிக்கா தாலிபான்களை உருவாக்கியதை ஒப்புக் கொள்கிறேன் .ஆனால் ,தாலிபானும்,ஐ.எஸ்.ஸும் வெவ்வேறு என்பதை அறியவும் ./மத அடிப்படைவாதிகள் மக்களை தம் பக்கம் ஈர்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் .\ உலமாக்களின் பேச்சைக் ( பயான்)கேட்டுத்தான் இஸ்லாமியர்கள் ஆயுதத்தை எடுக்கின்றார்களா? அப்படியென்றால் ,தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் கூடம் தான் ‘மதரஸா’என்ற வாதத்தை ஒப்புக் கொள்கிறீர்களா ? எந்த அடிப்படைவாதியின் பேச்சைக் கேட்டு முஸ்லிமாக்கள் பலர்,தீவிரவாதிகளுக்கு இன்பம் தர (sex jihad )அவர்களை நாடிச் சென்றனர்./உங்கள் செயல் அரசியலை மதவாதமாக மாற்றுகிறது \ இஸ்லாமில் ,அரசியல் வேறு மதம் வேறா? முகம்மது புதிதாய் ஒரு மதத்தை தோற்றுவித்ததே,ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அரசியல் செய்யத்தானே? 1600 வருடங்களாக முஸ்லீம்களின் ஏக்கமும்,கனவும் ஜிகாத் என்ற மனித வேட்டையும் ‘உலகளாவிய கிலாபா ‘ என்னும் இஸ்லாமிய மதவாத அரசியல் தானே? நன்றி.

  35. இஸ்லாமின் சீர்திருத்தம் என்ற கானல்நீர் அன்பின் செங்கொடி,இஸ்லாமின் மீட்டுருவாக்கம் பற்றி அறிந்து கொள்ளுமாறு கூறியுள்ளீர்கள்.இஸ்லாமில் மீட்டுருவாக்கம் ( மாற்றம் அல்லது சீர்திருத்துதல்) சாத்தியமில்லை என்பது தாங்கள் அறியாததா? வஹாபிசம் ,சலாபிசம் என்ற பெயர்களில் இஸ்லாமியர்கள் அடிப்படைவாதத்தை நோக்கி அல்லவா செல்கின்றனர்? தமிழ் அலிசினா தளத்தில் ,இஸ்லாமின் சீர்திருத்தம் என்ற கானல்நீர் கட்டுரையை, தாங்கள் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .நன்றி.

  36. https://othisaivu.wordpress.com/2015/04/21/post-489/ ஐ.எஸ். மற்றும் வஹாபிய அடிப்படைவாதத்தையும். அதற்கு, இங்குள்ள முஸ்லீம்கள் ஆதரவு தருவதையும் ,மேற்கண்ட தளத்தில் ஆதாரப்பூர்வமாய் அறியலாம் .நன்றி.

  37. https://othisaivu.wordpress.com/2015/05/02/post-495/
    போன பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்ட இணைப்பு,வீரமிக்க குர்து மக்களிடம் உதைப்படும் ஐ.எஸ். வெறிநாய்களைப் பற்றியது.போராடும் குர்து இன மக்களுக்கு ,தற்போது அமெரிக்கா ஆயுத உதவி செய்கிறது எனும் தகவலும்,அந்த கட்டுரையில் உள்ளது.ஐ.எஸ்.ஸிற்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து அமெரிக்கா உதவுவதை அறிவதன் மூலம் ,செங்கொடி கூறிய `தீவிரவாத குழுக்கள் அமெரிக்காவின் தயாரிப்புகள் `என்ற வாதத்தை எளிதாக தாண்டிச் செல்லலாம் .நன்றி.

  38. நண்பர் வர்தன்,

    ஐ.எஸ்போன்ற பயங்கரவாத குழுக்ககள் ஏகாதிபத்திய நலனை காப்பதற்காக உருவாக்கப்பட்டவை. ஆப்கானில் மட்டுமல்ல எங்கெங்கெல்லாம் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக அரசு செயல்பட எத்தனிக்கிறதோ அங்கெல்லாம் ஐ.எஸ் போன்ற மதவாதக் குழுக்கள் தோன்றி விடும். அவை தங்களுடைய நோக்கங்களுக்காக மதத்தை பயன்படுத்துகின்றன. அதாவது மதத்தை பயன்படுத்தி தங்களின் ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன.

    இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பது இஸ்லாத்தில் செய்யப்படும் சீர்திருத்தம் அல்ல. அது இஸ்லாமிய கடுங்கோட்பாட்டுவாதத்தில் மக்களை சிக்க வைப்பது. இதுவும் ஏகதிபத்திய சேவை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டதே.

    பயங்கரவாதக் குழுக்களும், மீட்டுருவாக்கக் குழுக்களும் இருவேறு பாதைகளில் பயணித்தாலும் நோக்கம் ஏகாதிபத்திய சேவையே.

    மீட்டுருவாக்கக் குழுக்கள் இஸ்லாமிய மக்களை செய்து கொண்டிருக்கும் மூளைச் சலவையால் சாதாரண மக்கள் பயங்கரவாதக் குழுக்களின் மீது ஈர்ப்பு கொண்டுவிடுகிறார்கள்.

    இது எப்படி அபாயகரமான போக்கோ, அதேபோல இந்த அரசியலை புரிந்து கொள்ளாமல் இதன் தீங்குகளை மதத்தின் மேல் சாட்டுவதும் அதன் வழியே அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் மீது திருப்புவதும் அபாயகரமான போக்கு. உங்களைப் போன்றோர் அரசியலை மதவாதமாக பார்க்கும் கண்ணோட்டத்தை பொதுக்கண்ணோட்டமாக ஆக்க விருப்புகிறீர்கள்.

    இன்னும் விரிவாக கூறவியலும் ஆனால் பின்னூட்டத்தில் போதும் என எண்ணுகிறேன். இன்னும் விரிவாக வேண்டும் எனக் கருதினால், நீங்கள் ஆவலுறும் பட்சத்தில் விவாதமாக நடத்தி விடலாம், ஏனைய வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  39. நூர்தீன் பாய் என்ன வேண்டும்
    உங்களுக்கு ?/ அவருக்கு எறும்பு சாக்பீஸ் வேணுமாம்.

  40. Do not sugarcoat your speeches. Do not tell Muslims that their religion is peaceful but is hijacked by terrorists. This is a blatant lie. Tell them in their face that their religion is evil and they must leave it or leave your lands.
    Islam is an avowed enemy of democracy of freedom of human rights of your constitution of our country and of you. You will not have peace until you fight it and eliminate it. // மேற்கண்ட இரண்டு பாராவும்,இதற்குமுன் நான் கொடுத்த அலிசினா சுட்டியில் இருந்து copy செய்யப்பட்டது.என்னைப் போன்றோர் அரசியலை மதவாதமாக பார்ப்பதாகவும்,அதை பொதுகண்ணோட்டமாக மாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளீர்கள்.இதற்கு முன்பே நான் கூறியதை மீண்டும் கூறுகிறேன்.இஸ்லாமில், மதம் வேறு அரசியல் வேறல்ல.இந்தியாவில் ,இவர்கள் பெருமளவு மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? பெரும்பான்மை மக்களாக மாறி,இந்த தேசத்தின் அரசாங்கத்தை கைப்பற்றி ,இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவித்து ,மனிதகுல விரோதமான இஸ்லாமிய சட்டத்தை ( ஷரியா ) பொது சட்டமாக மாற்றத்தானே? பொதுக்கண்ணோட்டம் என்பது ,என்னைப் போன்றோர் உரைப்பதில் இல்லை …சம்பந்தப்பட்டவர்கள்(இஸ்லாமியர்கள்) நடத்தையில் உள்ளது .நன்றி.

  41. நூர்தீன் பாய் வாதம் என்பது வெங்கயாம் என்பது அவரது இதுவரையுள்ள பின்னூட்டங்களே சான்று (வாதத்தை தொடங்கவே இல்லை). நாம் ஒதுங்கிக் கொள்கிறோம். (அப்ப மட்டும் என்ன வந்துடப்போகுது இருப்பினும் இனி இக்கட்டுரையில் பின்னூட்டமிட மாட்டோம்.)

  42. என்னய்யா நடக்குது இங்கே செங்கொடி திடீர்னு இஸ்லாத்துக்கு ஆதரவா பேசுராறு என்னா நடிப்புடா சாமி. செங்கொடி சார், எனக்காக நீங்க ஒன்னும் நடிக்க வேண்டாம் என்னோட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க கண்டவங்க கண்டமானி எழுதுரத டெலிட் பண்ணுங்க

  43. 1.பயங்கரவாதக் குழுக்களும், மீட்டுருவாக்கக் குழுக்களும் இருவேறு பாதைகளில் பயணித்தாலும் நோக்கம் ஏகாதிபத்திய சேவையே.

    2.மீட்டுருவாக்கக் குழுக்கள் இஸ்லாமிய மக்களை செய்து கொண்டிருக்கும் மூளைச் சலவையால் சாதாரண மக்கள் பயங்கரவாதக் குழுக்களின் மீது ஈர்ப்பு கொண்டுவிடுகிறார்கள்.

    அன்பின் செங்கொடி,வணக்கம் .தங்கள் பின்னூட்டத்தை ,என் வசதிக்காக எண்களிட்டு இரண்டு சிறுபகுதிகளாக பிரித்துள்ளேன். 1.பயங்கர வாத,மீட்டுருவாக்க குழுக்கள் வெவ்வேறு பாதையில் சென்றாலும் ,நோக்கம் ஏகாதிபத்திய சேவையே என்று கூறியுள்ளீர்கள்.ஏகாதிபத்திய என்ற வார்த்தை முதலாளித்துவத்தை சுட்ட பயன்படும் வார்த்தையா? அமரிக்கா,பிரிட்டன் போன்ற வளர்ந்த ( ஏகாதிபத்திய )நாடுகள் ,நீங்கள் கூறிய குழுக்களின் மூலம் பெற்ற சேவை(லாபம் )என்ன ? 2. அந்த அமைப்புகளின் மூளைச்சலவையால் சாதாரண மக்கள் ஈர்க்கபடுவதாக கூறியுள்ளீர்கள். முஸ்லீம்களில் சாதாரண மக்களா? அவர்களை எந்த அமைப்புகளும் மூளைசலவை செய்ய வேண்டாம். முகமது போன்ற ஒருவரை உலகின் அருட்கொடை,இறைத்தூதர் என்றும் ,முழுக்க பிழைகளும் ,வன்முறையும் நிரம்பிய ஓர் புத்தகத்தை இறைவேதம் என்றும் நம்பும்படி சிறுவயதிலிருந்தே மூளைசலவை செய்யப்பட்டவர்கள்.அவர்களின் பயங்கர வாத செயல்களுக்கு ,அவர்களின் மதம்,மதத்தை தோற்றுவித்த முகமது,முகமது கூறிய குரான்,குரானில் இருக்கும் சுவன வர்ணனை போன்றவையே காரணம் . நன்றி.

  44. My Journey to Freedom திரு. m.a.கான் அவர்களால் எழுதப்பட்ட மேற்கண்ட கட்டுரை ,islam-watch.org தளத்தில் உள்ளது .மிக எளிய ஆங்கில நடையில் எழுதப்பட்ட கட்டுரை .அனைவரும் படிக்கவும்.நன்றி.

  45. Who is this Vardan??? Let other Muslims answer on this topic, but Vardan such a evidence birth… why senkodi allow such people? He/She doesn’t wish you get answer from Muslims or on this topic, instead trying to divert… what he is trying to post here? As a Muslim we love Muhamed [SAW] and Allah… we ever allow other comments about this.

    consider, if I talk anything about Vardan or Ant… or anyone about his wife illegal connection? just like imagination? will it be acceptable? As a Muslim… Don’t worry never said such word… just for example… how simple word can hurt you.. however if its fail also… might be because of your family.. same way consider Muamed [SAW] our family member…

    I wont want to hurt other feeling.. Muslims or Hindu my brothers…

  46. நூர்தீன் பாய் வாதம் என்பது வெங்கயாம் என்பது அவரது இதுவரையுள்ள பின்னூட்டங்களே சான்று (வாதத்தை தொடங்கவே இல்லை)//அன்பின் Ant ,அவரிடம் ஏதேனும் வாதம் இருந்தால் வைத்திருக்க மாட்டாரா ?சிந்திக்க மாட்டீர்களா!!! //நாம் ஒதுங்கிக் கொள்கிறோம். (அப்ப மட்டும் என்ன வந்துடப்போகுது // இப்படி அவநம்பிக்கையோடு பேசாதீர்கள்.அவருடைய வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல், செங்கொடி மீண்டும் கலிமா சொல்லி முஸ்லீமாக மாறுவார்.நம்புங்கள்.நம்பிக்கை அதுதானே எல்லாம் .நன்றி.

  47. என்னய்யா நடக்குது இங்கே செங்கொடி திடீர்னு இஸ்லாத்துக்கு ஆதரவா பேசுராறு // ஒரு வேளை,செங்கொடி தலையில அடிபட்டு, பழசெல்லாம் மறந்திருப்பாரோ? //என்னா நடிப்புடா சாமி. செங்கொடி சார், எனக்காக நீங்க ஒன்னும் நடிக்க வேண்டாம்// ஆமாம் செங்கொடி,அவரோட அடுத்த படத்துக்கு ,அஜித்த புக்பண்ணிட்டாரு.அதனால் ,நீங்க நடிக்காதிங்க.// என்னோட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க// முதல்ல நீங்க கேள்விய கேளுங்க. //கண்டவங்க கண்டமானி எழுதுரத டெலிட் பண்ணுங்௧// அது ‘கண்டமானி’ அல்ல,கண்டபடி .எதை வைத்திருப்பது, டெலிட் செய்வது ? என்பது செங்கொடியின் விருப்பம் .உங்கள் கமெண்டின் கடைசி வரிகள் கட்டளை வாக்கியம் .இதற்கு பெயர் பாசிசம்.( facism).நன்றி.

  48. Who is this Vardan??? // உலகில் பெருகி வரும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும்,அவர்களால் கொல்லப்படும் அப்பாவி மக்களையும் நினைத்து கவலைப்படும் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவன் .//Let other Muslims answer on this topic// இன்னும் ஒருவரும் பதில் அளிக்கவில்லை .முடிந்தால் ,நீங்கள் பதில் அளியுங்கள்.
    why senkodi allow such people?// இதுவும் ஃபாசிசம் . As a Muslim we love Muhamed [SAW] and Allah… we ever allow other comments about this.//இணைய தளத்திலும்,உங்கள் மதகூட்டங்களிலும் பிற மதங்களைப் பற்றி கேவலமாய் விமர்சிக்கிறீர்களே? அந்த மக்களிடம் அனுமதி பெற்றுத்தான் விமர்சனம் செய்கிறீர்களா?உங்களுக்கு வந்தா ரத்தம் .எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
    consider, if I talk anything about Vardan or Ant… or anyone about his wife illegal connection? just like imagination? will it be acceptable? As a Muslim… Don’t worry never said such word… just for example… how simple word can hurt you.. however if its fail also… might be because of your family// எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.அப்படியே திருமணமாகி என் மனைவி யாருடனாவது தொடர்பு வைத்திருந்தால் ,என்னை டைவர்ஸ் செய்து விட்டு அவனை மணம் புரிந்து கொள்ளுமாறு கூறுவேன்.1400 வருடங்களுக்கு முன், ஒரு கிழவர் தன் வளர்ப்பு மகனின் மனைவி மேல் மோகம்கொண்டு,அவர்களை மணவிலக்கு செய்ய வைத்து ,பின் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார் ,அந்த பெண்ணின் பெயர் ஜைனப். same way consider Muamed [SAW] our family member…// கொலை,கொள்ளை,கற்பழிப்பு,வழிப்பறி,சிறுமி காமம் ( ஆயிசா) என்று எல்லா தீமைகளும் நிறைந்த ஒரு கீழான மனிதனை,உங்கள் குடும்ப உறுப்பினர் என்றால்…உங்கள் குடும்பத்தை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
    Muslims or Hindu my brothers…// ‘or’ என்றால் அல்லது ,அங்கு ‘and’ போடவேண்டும் .தமிழ் தளத்தில் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவதே தவறு .அதிலும் தப்புத்தப்பான ஆங்கிலத்தில் எழுதுவது ,அதைவிட தவறு.நன்றி.

  49. https://youtu.be/bk5q9TeGo14 பேச்சுப் புயல் ,பிரச்சார பீரங்கி ,போர்குணம் கொண்ட போர்வாள்,உண்மை பேசும் உத்தமர்(!) அண்ணன் ஜாகீரின் அற்புத பயானைக் கேட்க ,அனைவரும் வாரீர்.நன்றி.

  50. ஹலோ மைக் டெஸ்டிங் ஒன் டூ திரி செங்கொடி எங்கிருந்தாலும் ஸ்டேஜுக்கு வரவும். நான் செங்கொடியோட கமாண்டுக்கு மட்டும் தான் பதில் சொல்லுவேன். மத்தவங்க தேவையில்லாம மூக்க நுழைக்க வேண்டாம். அப்புறம் நோஸ் கட்டாகி அழவும் வேண்டாம். செங்கொடி சார், ஏன் ஓடி ஒழியனும். நான் சாதாரனமானவன் தான் என்னை பார்த்து பயப்பட வேண்டாம். தைரியமா வந்து பதில் சொல்லுங்க.

  51. நூர்தீன் பாய் எழுதும் பின்னூட்டங்கள் எனக்கு புரியவில்லையா? அல்லது அவரே குழப்பமாய் தான் எழுதுகிறாரா? . மன்னிக்கவும் நூர்தீன் பாய், நீங்கள் கேள்வி எதும் கேட்டது போல் தெரிவில்லை, கேட்டிருந்தாலும் உங்களுக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் அறிந்தவனில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்

  52. நண்பர் வர்தன்,

    உங்களுக்கு விரிவாக பதிலெழுத வேண்டும். இரண்டு முனைகளிலும் வேலைப்பழு. ஒரு வாரம் காலம் கொடுங்கள். அதன் பிறகு தொடர்ச்சியாக வந்து விடுவேன். தாமதத்துக்கு வருந்துகிறேன்.

  53. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.நன்றி.

  54. செங்கொடி இது ரெம்ம டூ மச். நீங்க ரெம்ப அறிவாளின்னு நெனப்பா. உங்கள மாறி தலக்கனம் பிடிச்சு பொனாத்துனவங்க எல்லோரும் மண்ணோடு மண்ணாயிருக்காங்க. நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு காளான் நீங்க. இஸ்லாம் 1400 வருஷமா எதிர்ப்புலேயே வளர்ந்து வரும் மார்க்கம். ரெம்ப ஆட்டம் போடாதீங்க அழிஞ்சு போயிடுவீங்க

  55. செங்கொடி கமாண்ட் போட்டு ரெண்டு நாளாச்சு.இன்னும் பப்ளிஷ் ஆகல. பூ நிங்க இவ்வளவு தானா போங்கப்பா நீங்களும் உங்க நாஸ்தீகமும்

  56. anbukkuria chenkodikku,
    nan kadantha 4 mathamkalaka enakku vaippu kidaikum pothellam unkal pakkathai parvai iduhiren. erkanave en karuthukalaiyum koori ullen. namakkul oru vivatham nadatha pada vendum entun koori irunrhen, thankal athanai ettu, ennai thamilil eluthadikka koori iruntheerkal. tharpothu athu ennal iyalatha visayam. eninum unkalidam varum karuthu mothalkalai padikkum pothellam unkalai pontor sarpaha sammatti adi pathiilkalai ennal kodukka mudium, aanal unkalai pontor ellam verum chuthiyal adi koduthu kondiriireerkal. eninum ithu oru periya visayamallai.
    aanal unkalai pontavarkal en intha matha visayamkalukku mattum ivvalavu mukkiathuvam kodukkireerkal enpathuthan ennal purinthu kolla mudiyathathaha irukirathu,
    matha visayamkalukku mukkiathuvam koduppathu than intaya unkal valvukku oralavavathu pathu kappu tharuvathaka irunthal. athanai evanum kelvi ketka mudiyathu. enave thankal avvisayathil eedu padu vathodu, kurippaha naveena porulial, arivial, thathuvaviyal,. arasial (ranuvaiyal- padai iyal) ulavial visayamkalilum athiha kavanam chelutha vendum atu mattune unkalai ponta, ennai ponta palar aasai padum perumpalalana makkalukku vehu viraivil munnettathai tharum. illai ental unkalai pontorin nallellemkalum kadumaiyana ulaippum veenahum.athu mattumalla unkalin. unkal iyakathin ilatchiyamkalai neenkal chollum valiyil chentu vettiyadaiyalam entu pala appavikal thankal valkaiyai arpanipparkal, avai ellam veenahum.
    35 varudamkalukku mun nan intha purachihara valiiyil vanthathathu pol, inium palar varuvarkal, thankalin, thankalin uttar uravinarkalin, nanparkaln, tholarhalin valkaiyil pathippukalai erpaduthvarhal. veru entha periya samooka mattamum, munnettamum ippothu avarkalal erpadutha mudiyathu.. unkalai pol, ennai pol palar nallennathodu poradi pathippukalai in mukathodu ettu kollalam avvalavuthan, ithanal samoohathukkum, nammai periya alavil nanmai erpadathu.athe samayam , nammai nesikkum makkalukkum enna payan. ivvisayam sampanthamaha maruthalum maatruvorum enta puthaham vanthulathu. athai vanki padiunkal allathu neengal cholbavarhalukku nan anuppi vaikiren.

    nitchayam antha puthaham puthiya porulathara, arasial, thathuvam pattiya visayamkalai puthiya perathikka arigarhalukku mattaha koorum.
    anbudan CHENGOVAN

  57. Anpukkuriya senkodi,
    unkal nilamai enakku oralavukku purihirathu. ulaikkum makkalidam irunthu surandia panathai vaithu kondo allathu surandalil panku kidaitha palarukku appanathai vaithu kondo allathu allum varkamkalin, mathamkalin thunai kondo cheyal padubavrkalukku, avarhal cheyal pada mudiyatha sool nilai varum pothu avarkalai iyakkubavarkal pala vahaihalil palarukku panam koduthu avarhalin paniyinai thodarvarhal.unkal nilaiyo, en nilaiyo appadi pattathalla. unmaiyana unarchikalin adipadaiyilanathu.oruvelai chenkodikku oru matham udal nalam sariyillamal poirunthal. intha chenkodi ethirppu vathikalukku unmaiyilleye arivu thaham irunthal, avarha marka padiyilana manitha neyam irunthal, chenkodi unkalukku enna piratchinai athai sari panna enkalal mudintha ellavattaiyum cheikirom allatu neenkal nalam pettu varum varai unkal pathilukkaha, vivathathukkaha kathirukirom entu evaravathu koori irukka vendum.
    chenkodi tharcheyalaha ithu varaiyilana unkal panikalai unkalal thodara mudiamal ponal kooda kavalai padatherkal. en pontor palar unkal panikalai thodarvar. puthithaha palar pirapar. bahath sing sahum pothu nan meendum inthiyavil piraka vendum enta than aasaiyai therivithuvittu iranthathaha thahaval undu. eneve unkalai ponta en ponta palar varuvar puthithi pirappar, makkal virotha aalum varkamkalukkum,matha vathikalukkum marana adi koduppar.
    enave nanku ooiveduthuvittu cheyal padunkal.
    en sool nilai idam koduthal unkalidam yar enna kelvi kettalum, pinnuttam moolam nan en pathilai en karuthaha koduppen.
    Ententum anbudan
    Chengovan.

  58. நண்பர் செங்கோவன்,

    உங்கள் புத்தகம் மின்னூலாக இருந்தால் அனுப்பிவைக்கவும் படித்துப் பார்க்கிறேன். குறிப்பாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? விவாதம் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் கருத்தை தெளிவாக முன்வைத்தால் நாம் தொடர்ந்து பேசலாம்.

    தமிழில் எழுதுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அறியத்தாருங்கள் தங்கிலீஸ்ரெம்ப சிரமமாக இருக்கிறது.

  59. என்ன சகோ நீண்ட நாட்களாக பதிவுகளை காணவில்லை… வேலை பளுவா…? ஆவலாக இருக்கிறேன்…

  60. Anbukkuria Chenkodikku,
    Marxiame, communisame vellum enbathu unmaithan, Annal athu veru veru peyarhalil, akkala kattathirkerpa vellum, perumpanmaiyana makkalai mellum munnettum. ENTHA PEYARIL AVAI CHEYAL PATTALUM AVAI ELLAM MARXIATHIN, SOSALISATHIN, COMMUNISATHIN ADIPADAI KARUTHUKKALI UL VANKIATHAHAVE IRUKKUM, Ithanai nallennathodu, isamkalin, varkamkalin viruppu veruppu illathu parkum pahutharivu padaitha evaralum, elithil purinthu kolla mudiyum. Athahaya perarigarkal, makkal pottum thalaivarkal elithil uruvaha mattarhal. uruvanalum, intaya aalum varkamkal avarkalai valarthu veliyil theriya vaikkathu. Enave unkalai pontavarkalidam nallennamum, nallarivum irunthalum athanai intaya arigarkalal, makkalal sariyaha purinthu kondu unkalai pontavarhalukku aatharavu avarkalal valanka iyalathu.athanal unkalai pontavarhalukku athika kastamum, ketta peyarume intaya samookathil erpdum. ithanai inmuhathodu ettu kolla mudinthal mattume, thankal thankal panikalai thodara vendum.UNKALAI PONTA MANITHARKAL SAMOOKATHUKKU EKKALAMUM THEVAI. UNKAL KALLATHIL NENKAL THOLVIYUTTALUM, UNKALAI PONTAVARKALIN NALLENNAMUM,NALLARIVUM, ULLAIPPUME ITHU VARAIYILANA SAMOOKA MUNNETTATHAI ERPADUTHI ULLATHU. ENINUM NALLARIVAI EVVAHAIYILAVATHU THEDA VENDIYATHU UNKAL KADAMAI, ATHU PATTI ENAKKU THERINTHATHAI THERIVIKKA VENDIYATHU EN KADAMAI AVVALAVUTHAN. Ini neenkal kurippitta visayamkalukku adutha paravil idaiveli vittu varukiren.
    Anbudan CHENGOVAN.

  61. Anpukuria chenkodikku,
    Nan enna cholla varukiren ental, neenkal ennathan puratchihara chinthanai kondavaraha irunthalum,perumpanmai makkalai vehu viraivaha puratchiyin moolam munneta vendum enta nallennam kondavarhalaha irunthalum, unkalai pontu chinthiporellam palaya marxiarkale,athavathu 2-m ulaka porukku munthaya ulaha nilamaihal pattium, annilamaikalil samookathai puratchi karamaha matta puratchiyalarkalum, makkalum ennena cheiya vendum entu antaya marxiarkal enna koorinarkalo, athanai appadiye ettu kondu chekku madukalai pola athe pathaiyil chelkireerhal. ithanal palaya chinthanai konda puratchiyalarkal thodarnthu tholvi adaikirarhal. Intaya kalakattam ulakil miha siriya pahuthikalil than puratchikara nillaiyil ullathu enpathaium, perumpalalana pahuthikalil padipadiyana allathu seer thiruthathin moolam munnerum thanmai konda samooka amaippaha maari vittathu enpathai purinthu kollamal irukireerkal. ithahaya mattathukku enna karanam enpathaiyum unaramal irukireerkal.
    2-M Ulaha porin mudivodu palaya perathikkathin kathai mudinthu vittathu. palayaya perathikkam (Ehathipathiam) ENTA PULI MOA KOORIA PADIYE KILADU THATTIA PULIYAHI VITTATHU. kiladu thattia puli chethu vittal, athan varisukalum udane chethu viduma?, chethu vidathu, avai evvahaiyilavathu thankalai thahavamaithu kondu puthiya pasu thol porthia pulihalahavo allathu pasu thanmai konda puliahavo maarum. ithu parinama vithi. Ivvaru PALAYA PERAATHIKKAM MARUVTHARKKU AMERICAVIN ANUKUNDU KANDU PIDIPPU MUTHAL KARANAMAHAVUM, ARIVIYAL THOLIL NUTPATHIN APARA VALARCHI 2-VATHU KARANAMAHAVUM, SOSALISA NADUKALIDAIYE KURIPPAHA SOVIETH UNIONUKKUM ANTAYA CHENCHEENAVUKKUM IDAIYE ERPATTA PAHAI MURANPADU 3-VATHU KARANAMAHAVUM, MERKANDA NILAMAIYAI NANKU PURINTHU KONDU MARXIARKALIN THITTAMITTA URPATHI MURAIYAIYUM, MAKKAL NALA THITTAMKALAIUM NANKU UNVNKIATHU 4-VATHU KARANAMAYITTU.
    Merkanda karanamkalal palaya perathikkam, thannai padi pdiyaha mattikondu, marxiathai mudintha varai ul vanki kondu puthia perthikamaha athavathu padi padiyaha sosalisathukku vali vidum oru puthia amaippaha, puthia peraathikkamaha maariyathu. Ivvaru maravidil plalaya perathikkam 2-m ulakaporin pinthaya kala kattathil alinthiorukkum. ULLEHENKUM PRATCHIYIN MOOLAMO, MATTU VALIKALILO SOSALISAM VANTHIRUKKUM, VETTI PETTIRUKKUM.
    Athavathu intiruppathu plalaya perathikkamalla, Marxiarkal thittamitta olunkana ,viraivana sosalisathirkku pathilaha marxiathai ulvankia puthia perathikka vathikal puratchi inti, methuvaha kondu varum oru olunkatta sosalisa samookathai noki munnerum samooka amaippu. itharku peyyar enna vendumanalum vaithu kollalam. Ithanai intu perumpanmaiyana makkal veru vali inti ettu kondullarkal. ITHAHAYA SOOL NILAIYIL MARXIARHAL,PURATCHIHARA UNARVU KONDAVARHAL SAMMOOHATHAI VEHAMAHA MAATTIYAMAIKA PALAYA PATHAIKALODU PUTHIA PATHAIKALILUM CHELLA VENDUM ENTU CHOLKIRATHU PUTHITHAHA VANTHULLA MAARUTHLUM, MAATRUVORUM enta M.R IYERAL ELUTHAPATTA puthaham.
    Antha puthaKAM nOTION PRESSAL VEIYIDAPATTULLATHU, flipcart, amasan ponta online shophalil kidaikirathu. Antha puthahathai onlinel unkalal vanki padikka mudiyathental chollunkal neenkal koorum valiyil unkalukku kidaikka cheikiren.
    Aduthu thamilil eluthuvathil enakku enna piratchinai enbathu. athu patti ippothu unkalidam velipadaiyaha koora mudiyathu, nan thamilil type adikkum nilaikku vantha pirahu kooruven, thankalum purinthu kolveerhal entu nampukiren.
    IRUTHIYANA VISAYAM, Nan unkalidam muthal muthal kooria padi marxiam enum samooha ariviya sampanthamaha unkalidam aalamana vivatham cheiyave virumpukiren athu makkalukkana samooka arivial melum valara uthavum entu nampukiren. IVVISAYAM SAMPANTHAMAHA INNONTUM CHOLLIYAHA VENDUM, Athavathunmattavarkal unkalai karuthukkalai vimarsithathai vida miha karamaha marxiathin adipadaiyil ninthu vivthippen. Athan mudivu perumpalum neengal ennai ehathipathia egnt entu cholveerkal allathu bnan avvaru unkalai kooruven allathu nam iruvarum nammal mudinthavarai, iruthivarai karuthu chandai kolikalakavo allathu makkalukkana porattathil pala visayamkalil otha karuthu udayoraha iruppom
    Ententum anbudan
    CHENGOVAN

  62. நண்பர் செங்கோவன்,

    மன்னிக்கவும், உங்கள் கருத்தை நான் படித்துப் பார்க்கவே இல்லை.தமிழில் எழுதுங்கள் அல்லது தமிழில் எழுதுவதில் என்ன பிரச்சனை என்று கூறுங்கள். இல்லையென்றால் ஆங்கிலத்திலாவது எழுதுங்கள். தவறாக எண்ணவேண்டாம்.

  63. Beloved Chenkodi,
    You may think that you are a genuine revolutionary thinker and Marxist. But in my opinion people like you are struggling genuinely for people in orthodox marxist idiolgy and ways.Revolutinary thinkers like you are unable to understand latest develoments of the society after the second world war.
    After second world war, Imperialists changed them by observing the essense of marxiam in compulssion for their immeadiate survival. That is to avoid their immeadiate disaster. Present Imperialisam is Neo-Imperialism. It is not the Imperialism defined by Com.Lenin before 1915 in his book “Imperialism is the uttermost stage of capitalism”
    The Neo-Imperialism is a progressive one compared to the old Imperialism. It cannot be defeated like as the old reactionary Imperialism.The Neo- Imperialisam gives way to an irregular socialism slowly and without proletoriat’s vast revolution. Neo- Imperialist’s irregular and slow socialism is an alternative to the Marxist’s planned regular,sistematic and fast socialism under the leadership of proletoriat class through armed revolution.
    Neo- Imperialism brought enormous changes in society. Particularly in proletariot class who are the fore running section of people revolution. Most of the developed working class were formed as a new section or class as participants or co partners of exploitation i.e Bourgoist’s partners in sharing surplus value.Because of that, surplus value spreads in all sections of society slowly but without uniformity. people’s struggle will changes this and surplus value spread all sections faster than nowadays.SO MAJORITY OF THE PEOPLE ARE NOT READY TO OVER THROUGH THE PRESENT NEO- IMPERIALISM BY REVOLUTION. Orthdox Maxists are unable to understand the social situation and not capable to find out new ways and sratagy to eradicate the Neo- Imperialism and change society faster.
    A new Tamil book ”MAARUTHALUM, MAATRUVURUM” written by M.R.IYER and publised by Notion press explains the above matter. That book may help you to understand the new social situation. It was the brief concept of my privios writtngs in this page.
    With Regards
    Chengovan.

  64. Beloved Senkodi
    I HAVE WRITTEN IN ENGLISH AS PER YOUR REQUEST. BUT THAT IS DISAPEARED. I DONT UNDERSTAND THE REASON. IF YOU ARE NOT READY TO DO DEBATE ON THE LATEST DEVELOPMENTS IN THE SOCIETY BASED ON MARXIAM. NO PROBLEM, YOU CARRY ON YOUR CAREER. IF YOU THINK THAT THIS PAGE IS NOT A PROPER STAGE FOR SUCH DEBATES, PL. TELL ME, WE WILL ARRANGE ANOTHER PLATFORM IN ONLINE. IF MY POSTING DIS APPEARED IN ANY TECHNICAL ERROR, I WILL POST THAT AGAIN
    Chengovan.

  65. Beloved Senkodi,
    You may think that you are a genuine revolutionary thinker and Marxist. But in my opinion people like you are struggling genuinely for people in orthodox marxist idiolgy and ways.Revolutionary thinkers like you are unable to understand the latest develoments of the society after the second world war.
    After second world war, Imperialists changed them by observing the essense of marxiam for their immeadiate survival by compulsion.That is to avoid their immeadiate disaster, they observed essense of marxiam and changed as Neo- Impearialists. Present Imperialisam is Neo-Imperialism. It is not the Imperialism defined by Com.Lenin before 1915 in his book “Imperialism is the uttermost stage of capitalism”
    The Neo-Imperialism is a progressive one, compared to the old Imperialism. It cannot be defeated like as the old reactionary Imperialism.The Neo- Imperialisam gives or leaves way to an irregular socialism slowly and without proletoriat’s vast revolution. Neo- Imperialist’s irregular and slow socialism is alternative to the Marxist’s planned regular,sistematic and fast socialism under the leadership of proletoriat class through armed revolution.
    Neo- Imperialism brought enormous changes in society. Particularly in proletariot class who are the fore running section of people revolutions. Most of the developed working class were formed as a new section or class. That is develpped, well trained and skilled workers are changed as participants of exploitation. That is the ruling class, the Bourgoist’s sharing the surplus value to the developped and skilled workers.Cause of that, surplus value spreads in all sections of the society slowly but without uniformity. people’s struggle will changes this and surplus value spread all sections faster than nowadays.SO MAJORITY OF THE PEOPLE NOT READY TO OVER THROUGH THE THE PRESENT NEO- IMPERIALISM BY REVOLUTION. Orthodox Maxists are unable to understand the new social situation and capable to find out new ways and strategy to eradicate or change the Neo- Imperialism and change the society faster.
    A new Tamil book ‘MAARUTHALUM,MAATRUVURUM written by M.R.IYER and publised by Notion press explains the above matter. That book may help revolutionary thinkers like you to understand the new social situation and your further social actions. It is the brief concept of my privios writtngs in this, in your page.
    If u have any difficulties to respond me in this time , pl.delite it.
    With Regards
    CHENGOVAN

  66. நண்பர் செங்கோவன்,

    உங்கள் பின்னூட்டக் கருத்துகளைத் தடுத்து வைக்கும் நோக்கமெல்லாம் எனக்கில்லை. நான் இணையத்துக்கு வரும்போது தான் அவை வெளியிடப்படும். நீங்கள் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என நான் கோரிக்கை வைக்கவில்லை. தமிழில் எழுதுங்கள் என்று தான் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் தங்கிலீசில் எழுதியதாலும், ஏன் தமிழில் எழுத முடியாது என்பதை விளக்காததாலும் வேறு வழியில்லாமல் தங்கிலீசில் எழுதுவதற்குப் பதிலாக ஆங்கிலத்திலேயே எழுதலாம் என்றேன். என்னால் ஆங்கிலத்தில் எழுதப்படுவதை ஓரளவுக்கு தான் புரிந்து கொள்ள முடியும். ஓரளவுக்கு புரிந்ததைக் கொண்டு விவாதிக்க முடியாது. எனவே, விவாதம் வேண்டுமென்றால் தமிழில் எழுதுவது குறித்து நீங்கள் ஆலோசிக்க வேண்டும். மாறுதலும் மாற்றுபவரும் நூல் வாசிக்க முயல்கிறேன். உங்களிடம் மின்னூல் கோப்பாக இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் அல்லது முகவரி தொலைபேசி தாருங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன்.

  67. Senkodi,
    Thanks for your propmpt response. When I able to type in Tamil fast wihout vast errors, time and cirkumstances allow we will do a serious debate on Neo- Impearialism and Neo- Marxism.But reading of the book ”Maaruthalum Maatruvorum” will help to do a debate in depth. That book available at
    Notion Press Media Pvt Ltd,
    Old No. 38, New No. 6,
    McNichols Road, Chetpet,
    Chennai, Tamil Nadu 600031.
    Email. publish@notionpress.com
    No.5,Muthu Kalathy street.
    Chennai 600005.
    Also avilable at online book shops like flipcart, amazon etc.
    Phone +91 44 42524252.
    Chengovan

  68. முஹம்மத் (ஸல்) அவர்களின் இறப்பின்போது…… இஸ்லாம் உண்மையின் வழியே….. கட்டுரையாளர் ஒரு ஆலிம் பாகவி என்பதாகத் தலைப்பில் இருந்தால் இவ்வளவு விமர்சனங் களுக்குக் கட்டுரை நிச்சயமாக இலக்காகி இருக்காது. கட்டுரையாளர் இவ்வளவு திட்டு வாங்கியிருக்கவும் மாட்டார். வசவாளர்கள் எதற்குரிய ஆதாரத்தைக் கேட்கிறார் கள் என்றே தெரியவில்லை. ஹதீசுகளுக்கான ஆதாரத்தை என்றால், ஹதீஸ் தொகுக்கப்பட்ட வரலாறு குறித்து அவர் களுக்கு எதுவுமே தெரியவில்லை அல்லது ஹதீசை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் பொருள். அனைத்துமே முஸ்லிம்களுக்கு ஏற்புடைய வரலாறுகளும் ஹதீஸ்களும் அல்லவா? இதில், விமர்சனம் செய்ய வேண்டியது, செங்கொடியின் கருத்துக்களை மட்டும்தானே? இதற்கு ஆதாரங்களின் தேவையில்லையே? செங்கொடி குறிப்பிட்டிருக்கும் குர் ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் தவறென்றால் சரியானதைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள். எவ்வளவு காலம்தான் மிரட்டிக்கொண்டே இருக்கப் போகிறீர் கள்?. விவாதத்திற்கு அழைப்பு விடும் தோரணையே, விவாத லட்சணத்தை முன்கூட்டியே சொல்லி விடுகிறது.

  69. மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்று குரான் கூறுகிறது அதனால் நபி ஸல் க்கு பிறகு நடந்ததும் அப்படித்தான் இந்த சாதாரண விஷயம் விளங்காமல் பக்கம் பக்கமாக விளக்கம் அதுக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டம் நேர விரயம்

  70. அஷாக் பாய் எதுக்கு நீங்க கவலைப் படுறீங்க? மனிதன் தவறு செய்யக் கூடியவன் தான் என்று சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருப்பது தானே. எதற்கு லட்சத்துக்கும் அதிகமான நபிகளை இறக்கி விட வேண்டும்? நேர விரையம் தானே.

  71. தவறு செய்வது மனித இயல்பு, மனிதனை நேர்வழி படுத்துவது இறைவனின் கடமை அதனால் பல இறைத்தூதர்களை அனுப்பினான். அதிலென்ன பிரச்சனை ?

  72. அஷாக் பாய்,

    இந்த கட்டுரை எழுப்பும் கேள்வி என்ன? எந்த இஸ்லாமியர்கள் முகமது தான் தங்கள் ஒட்டுமொத்த வாழ்வின் வழிகாட்டி என்று ஏற்றுக் கொண்டார்களோ அந்த இஸ்லாமியர்கள்; எந்த முகம்மதை தங்களுக்கு அழகிய முன்மாதிரி என்று ஏற்றுக் கொண்டார்களோ அந்த முகம்மதை கொஞ்சமும் பின்பற்றாததுடன் மட்டுமல்லாது அலட்சியப்படுத்தியும் இருக்கிறார்கள். அப்படி என்றால், எது உண்மை? எது பொய்? முகம்மது அழகிய முன்மாதிரி என்பது உண்மையானால் அவரின் இரத்த சொந்தங்களே அவரை பின்பற்றாதது ஏன்? எனும் கேள்வி எழுகிறது. இந்த முரண்பாட்டைத்தான் கட்டுரை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்புகிறது.

    இப்போது மனிதன் தவறு செய்பவனே என்றால், அந்தத் தவற்றின் மீது இறைவனின் நிலை என்ன? நபியின் நிலை என்ன/ மனிதர்களின் நிலை என்ன? எளிமையாகக் கேட்டால் திருந்த வேண்டுமா? திருந்த வேண்டாமா? திருந்த வேண்டும் என்பது தான் முதன்மையானது என்றால், முகம்மது நபி தன்னுடைய கடமையிலிருந்து தவறியிருக்கிறார். மனிதர்கள் தங்களது கடமையிலிருந்து தவறியிருக்கிறார்கள். அப்படித்தானே. கடமையிலிருந்து தவறிய அதே மனிதர்கள் முகம்மது நபி தங்களின் அழகிய முன்மாதிரி என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். யுக முடிவு நாள் வரை கதை விட்டுக் கொண்டே இருப்பார்கள் என்றால், ஒரு முரண்பாடு வருகிறதா இல்லையா?

    அந்த முரண்பட்டைத் தான் இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பியிருக்கிறது. எதாவது ஒன்றைச் சொல்லுங்கப்பா, மாற்றி மாற்றிச் சொல்லி குழப்பாதீர்கள் என்று கோருகிறது. புரிகிறதா? முடிந்தால் பதில் சொல்லுங்கள். மீண்டும் மனிதன் தவறு செய்பவனே என்றால், மன்னிக்கவும் முதலில் போய் இஸ்லாத்தை படித்து உள்வாங்கி விட்டு வரவும்.

    நன்றி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்